வெளிப்படுத்தின விசேஷம் 1ஆம் அதிகாரம் விளக்கம்

வெளி 1:1-2 விளக்கம்

வார்த்தை விளக்கம்

1. தலைப்பும் ஆசிரியரும் - (1:1-11)

வெளி 1:1 சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) - கிரேக்க வார்த்தை - apokalypsis - (602)

பொருள்: 

 ஒளி, வெளிப்படுதல், காண்பித்தல், தெளிவு (to unveil, uncover) - எல்லோரும் காணும்விதமாகதிரையை விலக்குதல், மறைபொருளாக இருக்கும் இரகசியத்தை வெளிப்படுத்துதல். (எபே 3:3; கலா 1:12 ) அதரிசனமான நபரைத் தரிசிக்கக் கூடியவராக வெளிப்படுத்திக் காண்பித்தல் (வெளி :1;  2 தெச 1:7; 1 பேதுரு 1:7,13.)


"தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்தல்" - 

சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய காரியங்களைத் தேவன் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புவித்தார். இயேசு கிறிஸ்து மனுஷ அவதாரத்தில் இருந்தபோது மனுஷத்துவத்தின் வரையறைக்குட்பட்டிருந்தபடியினால், தேவன் இவருக்கு இந்தக் காரியங்களை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. (ஏசா 50:4; மத் 28:18; மாற்கு 13:32; லூக்கா 1:40,52)

"காண்பிக்கும் பொருட்டு - 

யோவானின் நாளிலிருந்து நித்திய காலம்வரைக்கும் தேவன் தம்முடைய ஊழியக்காரருக்கு எதையும் மறைக்காமல், காண்பிக்க வேண்டும் என்று சித்தம் கொண்டிருந்தார். (வெளி 21-22)

ஊழியக்காரர் (servants)  - கிரேக்க வார்த்தை doulos - (1401)

பொருள்:- 

வேலைக்காரனாகிய, ஊழியக்காரனாகிய, அடிமையாயிருக்கிற   புதிய ஏற்பாட்டில் ஊழியக்காரர் என்னும் வாக்கியம் 111 தடவை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில் மட்டும் இந்த வார்த்தை 14 தடவை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

"சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள்" - 

வெளிப்படுத்தின விசேஷத்தின் மையக்கருத்தே சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குத் தேவன் வெளிப்படுத்துவதுதான். இந்தப் புஸ்தகத்தில் தேவன் பல நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவையாவன:-
  • 1. சபை காலம் முழுவதற்கும் உரிய நிகழ்ச்சிகள், (வெளி 1-3)
  • 2. பரலோகத்தின் நிகழ்ச்சிகள் (வெளி 4-5)
  • 3. தானியேல் எழுபதாவது வாரமாகிய வருங்கால உபத்திரவத்தைக்குறித்த நிகழ்ச்சிகள் (வெளி 6-19)
  • 4. ஆயிரம் வருஷ அரசாட்சியின் நிகழ்ச்சிகள். (வெளி 20)
  • 5. புதிய வானம் புதிய பூமி ஆகியவற்றின் நிகழ்ச்சிகள். (வெளி 21-22)

சீக்கிரம் (shortly) -  கிரேக்க வார்த்தை tachos -(5034)

சீக்கிரத்தில் (சீக்கிரம்) (swiftness; speed; quickly) "shortly" (வெளி 11; வெளி 22:6; அப் 25:4;  ரோமர 16:20- "quickly" (அப் 12:7: அப் 22:18- வெளி 2:5); "speedily" (லூக்கா 18:8)

"தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு" - 

வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம் தேவனிடமிருந்து கிறிஸ்துவிற்கும், தேவதூதருக்கும், யோவானுக்கும், சபைகளுக்கும் , நமக்கும் கடந்து வந்திருக்கிறது. (வெளி 1:1,11).

வசனம் 2

வெளி 1.2 இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறது.

அறிவி (signified) -  கிரேக்க வார்த்தை seemainoo - 4591 

பொருள் - 

குறி, அறிவி எடுத்துக்காட்டு, வெளிப்படுத்து (to show, point out; announce; to make a note of) - 

எல்லாக் காரியங்களையும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆகையினால், அவற்றை அறிவிக்க வேண்டியது அவசியமா இருக்கிறது. வெளி 1:1; யோவான் 12:33;
யோவான் 18:32; யோவான் 21:19 அப் 11:28; அப் 25:27)

வெளி 1:1-2 வசன விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடு ஆகும். அப்போஸ்தலர் யோவான் ஆதித்திருச்சபையிலே தீர்க்கதரிசியாக ஊழியம் செய்கிறார் சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளை யோவான் விசுவாசிகளுக்கு வெளிப்படுத்துகிறார். இந்தப் புஸ்தகத்தில் - எழுதப்பட்டிருக்கிற வெளிப்பாடுகளை தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்தார். தேவனுடைய தெய்வீக வெளிப்பாடு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்துவானவரே பிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.

தேவனிடமிருந்து நாம் எதிர்பார்க்கிற எல்லா சத்தியங்களையும் இயேசு கிறிஸ்து மூலமாகவே பெற்றுக்கொள்கிறோம். தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற எல்லா காரியங்களையும் இயேசு கிறிஸ்து மூலமாக எதிர்பார்க்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராக ஊழியம் செய்கிறார். கிறிஸ்துவானவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனா யோவானுக்கு தம்மைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார். தூதர்கள் தேவனுடைய தூதுவர்களாக இருக்கிறார்கள்.

கிறிஸ்துவினுடைய தூதனானவர் தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட செய்தியை யோவானுக்கு வெளிப்படுத்தின ார். இந்த ஊழியத்தை செய்வதற்கு தேவன் அப்போஸ்தலராகிய யோவானை தெரிந்துகொண்டார். அப்போஸ்தலர்களில் யோவான் மாத்திரமே இக்காலத்தில் உயிரோடிருந்தார் என்று வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மற்ற சீஷர்களெல்லாம் இதற்கு முன்பாகவே இரத்த சாட்சிகளாக மரித்துப் போனார்கள்.

- யோவான் இயேசு கிறிஸ்துவை பற்றி வெளிப்பாட்டை சபைக்கு வெளிப்படுத்துகிறார். தேவனைப்பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்ளக்கூடிய உரிமை அவருடைய பிள்ளைகளுக்கு உண்டு. இந்தப் புஸ்தகத்தில் சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாட்டின் மூலம் தேவனுடைய தெய்வீக பராமரிப்பு பற்றி நாம் ஓரளவு புரிந்துகொள்ளலாம் இந்தச் சம்பவங்களெல்லாம் சீக்கிரத்தில் நிறைவேறும். நிச்சயமாகவே நிறைவேறும்.

யோவான் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவை பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நடப்பித்த அற்புதங்களுக்கு யோவான் கண்ணாரக் கண்ட சாட்சியாயிருக்கிறார். அவருடைய உபதேசங்களுக்கு காதாரக் கேட்ட சாட்சியாகவும் இருக்கிறார். யோவான் தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக
அறிவிக்கிறார். தான் கண்டவற்றில் எதையும்  சாட்சியாக அறிவிக்காமல் விட்டு விடவுமில்லை. தாள் காணாததை கண்டதாகவும் அறிவிக்கவில்லை . தேவனுடைய ஆலோசனைகளை கூட்டாமல் குறைக்காமல் அப்படியே சொல்லுகிறார்.

வெளிப்படுத்தல் என்னும் வார்த்தைக்கு எல்லோரும் காணும் விதமாக திரையை விலக்குதல் , மறைபொருளாக இருக்கும் இரகசியத்தை வெளிப்படுத்துதல் என்று பொருள். அதரிசனமான நபரைத் தரிசிக்கக் கூடியவராக வெளிப்படுத்திக் காண்பித்தல் என்றும் இந்த வார்த்தைக்கு பொருள் சொல்லலாம்.

சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய காரியங்களைத் தேவன் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புவித்தார். இயேசு கிறிஸ்து மனுஷ அவதாரத்தில் இருந்தபோது மனுஷத்துவத்தின் வரையறைக்குட்பட்டிருந்தபடியினால், தேவன் இவருக்கு இந்தக் காரியங்களை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. யோவானின் நாளிலிருந்து நித்திய காலம் வரைக்கும் தேவன் தம்முடைய ஊழியக்காரருக்கு எதையும் மறைக்காமல், காண்பிக்க வேண்டுமென்று சித்தம் கொண்டிருந்தார்.

வெளிப்படுத்தின விசேஷத்தின் மையக்கருத்து சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குத் தேவன் வெளிப்படுத்துவதுதான். இந்தப் புஸ்தகத்தில் தேவன் பல நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தியிருக்கிறார். அவையாவன:

1. சபைக்காலம் முழுவதற்கும் உரிய நிகழ்ச்சிகள், (வெளி 1-3)
2. பரலோகத்தின் நிகழ்ச்சிகள், (வெளி 4-5)
3. தானியேல் எழுபதாவது வாரமாகிய வருங்கால உபத்திரவத்தைக்குறித்த நிகழ்ச்சிகள். (வெளி 6-19)
4. ஆயிரம் வருஷ அரசாட்சியின் நிகழ்ச்சிகள். (வெளி 20)
5. புதிய வானம், புதிய பூமி ஆகியவற்றின் நிகழ்ச்சிகள். (வெளி 21-22)

வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம் தேவனிடமிருந்து கிறிஸ்துவுக்கும், தேவதூதருக்கும். யோவானுக்கு, சபைகளுக்கும் நமக்கும் கடந்து வந்திருக்கிறது. எல்லாக் காரியங்களையும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ள முடியாது ஆகையினால் அவற்றை அறிவிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது.


வெளி 1:3-4 விளக்கம்

வசனம் 3 இல் உள்ள முக்கிய வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தைகள்
  • 1.  Makarios 3107 - Blessed பாக்கியவான்கள்
  • 2.  anaginooskoon 314 readed வாசிக்கிறவன்
  • 3.  akouontes 191 hear கேட்கிறவர்கள்
  • 4. logos 3056 words வசனங்கள்
  • 5.  profeeteias 4394 prophecy தீர்க்க தரிசனம்
  • 6. teerountes 5083 keep கைக்கொள்ளுகிறவர்கள்
  • 7. gegrammena 1125 which are written எழுதியிருக் கிறவைகள்
  • 8. kairos 2540 time காலம்
  • 9. engus1451at hand சமீபமாயிருக்கிறது


வசனம் 4 இல் உள்ள முக்கிய வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தைகள்

  • 1. Iooánnees 2491 John யோவான்
  • 2. heptá 2033 seven ஏழு
  • 3. ekkleesiais 1577 churches சபைகள்
  • 4. Asia 773 Asia ஆசியா
  • 5. charis 5485 Grace கிருபை
  • 6. humin 5213 unto you உங்களுக்கு
  • 7. eireenee 1515 peace சமாதானம்
  • 8. oon 5607 is இருக்கிறவர்
  • 9. erchomenos 2064 is to come வருகிறவருமானவர்
  • 10.Pneumátoon 4151 Spirits ஆவிகள்
  • 11.enoópion 1799 before முன்பாக
  • 12. thrónou 2362 throne சிங்காரம்
  • 13. autoú 846 his அவருடைய

வசனங்களுக்கான விளக்கம்:-

அப்போஸ்தலர் யோவான் சபையாருக்கு தன்னுடைய அப்போஸ்தல ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறார். தேவனுடைய வெளிப்பாட்டோடு அப்போஸ்தல ஆசீர்வாதமும் சேர்ந்திருக்கிறது இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்களும், கேட்கிறார்கள், இவற்றைக் கைக்கொள்கிறவர்கள் எல்லோரும் பாக்கியவான்கள். தேவனுடைய தீர்க்கதரிசனங்களை அறிந்திருப்பது நமக்கு ஆசீர்வாதம் தேவனுடைய தீர்க்கதரிசன வசனங்களுக்கு பங்குள்ளவர்களாகயிருப்பது நமக்குக் கிடைத்திருக்கிற சிலாக்கியம். தேவனுடைய வசனங்களை வாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். தேவனுடைய வசனங்களை நாம் வாசிப்பது மாத்திரமல்ல, மற்றவர்கள் இந்த வசனங்களை வாசிக்கும் போது, நாம் அவற்றைக் கேட்டு ஆசீர்வாதம் பெறவேண்டும். கர்த்தருடைய தீர்க்க தரிசன வசனங்களை வாசித்தால் மாத்திரம் போதாது. அவற்றைக் கேட்டால் மாத்திரம் போதாது. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை நாம் கைக்கொள்ளவும் வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆசீர்வாதம் உண்டாகும். இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களெல்லாம் நிறைவேறும் காலம் சமீபமாயிருக்கிறது.

அப்போஸ்தலர் யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு அப்போஸ்தல ஆசீர்வாதம் சொல்லுகிறார். எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுகிறார். இந்த சபை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விசேஷித்த செய்திகளையும் சொல்லுகிறார். இந்த ஏழு சபையாருக்கும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்ற வாழ்த்துகிறார். தேவன் நமக்குக் கொடுக்கிற நன்மையே அவருடைய கிருபை அவர் நமக்குள் நடப்பிக்கிற நற்கிரியைகளெல்லாம் அவருடைய கிருபையாயிருக்கிறது. தேவனுடைய கிருபை நமக்குள் இருக்கிறது என்பதற்கு சமாதானமே அத்தாட்சியாக இருக்கிறது. தெய்வீக ஆசீர்வாதங்களெல்லாம் தேவனிடமிருந்தே வருகிறது. பிதாவாகிய தேவன் திரித்துவ தேவன். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரில் யோவான் முதலாவதாக பிதாவானவர் பற்றிச் சொல்லுகிறார் அவரை, "இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர்" என்று சொல்லுகிறார். அவர் நித்தியமானவர். நேற்றும் இன்றும், என்றும் மாறாதவர்.

யோவான் பரிசுத்த ஆவியானவரை பற்றி சொல்லும்போது "ஏழு ஆவிகள்" என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். தேவனுடைய ஆவியானவர் பரிபூரணம் உள்ளவர். ஏழு ஆவிகள் என்னும் வார்த்தை தேவ ஆவியானவருடைய பரிபூரணத்தைக் குறிப்பிடுகிற வார்த்தையாகிய. தேவ ஆவியானவருக்குள் ஏராளமான வரங்களும் ஏராளமான கிருபைகளும் கிரியைகளும் உள்ளன. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பு இருக்கிறார். தேவன் தம்முடைய ஆவியான வராலே சகலவற்றையும் சிருஷ்டித்தார். தம்முடைய சர்வசிருஷ்டிகளையும் தம்முடைய ஆவியானவராலே ஆளுகை செய்கிறார்.

வெளி 1:5-6 விளக்கம்

அப்போஸ்தலர் யோவான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக்குறித்து விசேஷித்த வெளிப்பாடுகளைச் சொல்லுகிறார். இயேசு கிறிஸ்து உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறவர். அவருடைய சாட்சியின் மீது நாம் பாதுகாப்பாக சார்ந்திருக்கிறோம் அவருடைய உண்மையுள்ள சாட்சிகளில் நமக்குப் பூரண பாதுகாப்பு உண்டு. அவர் நம்மை ஒருபோதும் வஞ்சிக்கமாட்டார். இயேசுகிறிஸ்துவையும் எக்காலத்திலும் யாரும் வஞ்சிக்க முடியாது

இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவராயிருக்கிறார். இவரே பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியாக இருக்கிறவர். ராஜாக்களுடைய அதிகாரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டது. ராஜாதி ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவோ சர்வ அதிகாரம் உள்ளவர். அவர் சர்வவல்லமையுள்ள லவர் பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைபடி, பூமியின் ராஜாக்கள் -ஜனங்களை ஆளுகை செய்கிறார்கள். ராஜாக்களின் ஆலோசனைகளை விட இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைகளே மகத்துவமுள்ளது கிறிஸ்துவின் ஆலோசனைகள் மாத்திரமே நிலைத்துநிற்கும் பூமியின் ராஜாக்களெல்லோரும் தங்களுடைய ஆளுகையைக் குறித்து இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்கவேண்டும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு கிருபையும் சமாதானமும் உண்டாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் அன்புகூருகிறார். தம்முடைய இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற
நம்மைக் கழுவுகிறார். பாவம் ஆத்துமாவை கறைபடியச் செய்துவிடும். பாவத்தின் கறைகளெல்லாம் கழுவப்படவேண்டும்
அப்போதுதான் நம்முடைய ஆத்துமா சுத்தமாகும். பாவத்தின் கறையை சாதாரண ஜலத்தினால் கழுவி சுத்தப்படுத்த முடியாது
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே பாவக்கறைகளை கழுவ முடியும். நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவுவதற்கு இயேசுகிறிஸ்துவின் இரத்தமேயல்லாமல் வேறு எந்த இரத்தத்திற்கும் பலனில்லை. நம்முடைய பாவங்களைக் கழுவுவதற்கு
கிறிஸ்துவானவர் தம்முடைய சொந்த இரத்தம் சிந்தினார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார். கிறிஸ்துவானவரே நம்மை நீதிமான்களாக்கி இருக்கிறார். அவரே நம்மை பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். அவரே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களாக்கியிருக்கிறார். ராஜாக்கள்
இந்த உலகத்தை ஜெயிக்கிறவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் இந்த உலகத்தை ஜெயிக்கிற ராஜாக்கள்.

அவர் நம்மை பிதாவாகிய தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாக்கினார். ஆசாரியர்கள் தேவனுடைய சமூகத்திற்கு
கிட்டிச்சேரும் சிலாக்கியம் பெற்றவர்கள். அப்படிப்பட்ட பெரிய சிலாக்கியம் கிறிஸ்துவின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய், பிதாவாகிய தேவனுடைய சமூகத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியம் நாம் பெற்றிருக்கிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையான ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக ஆமென்.

இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்கள்
  • 1. உண்மையுள்ள சாட்சி
  • 2. மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர். (வெளி 1:5; 1கொரி 15:20-23)
  • 3. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி (வெளி 1:5)
  • 4. நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். (வெளி 1:5; யோவான் 3:16).
  • 5. தமது இரத்தத்தினாலே நம்முடைய  பாவங்களற நம்மைக் கழுவினவர் (வெளி 1:5; மத் 26:28; 1யோவான் 1:7),
  • 6. தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினவர். (வெளி 1:6; வெளி 5:10; வெளி 20:4-6)
  • 7. அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருக்கும் (வெளி 1:6; ஏசா 9:6-7; தானி 7:1314)
  • 8. மேகங்களுடனே வரப்போகிறவர். மனுஷருடைய கண்கள் யாவும் அவரைக் காணும் (வெளி 1:7; தானி 7:13-14).


வெளி 1:7-8 விளக்கம்

இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:7

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:8

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை நியாயந்தீர்க்கிற நியாயாதிபதியாக வருவார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை முன்னறிவித்து வெளிப்படுத்தின விசேஷம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதே சத்தியம் மறுபடியும் சொல்லி இந்தப் புஸ்தகம் முடிவு பெறுகிறது. யோவான் அந்த நாளில் தான் கண்டதை அப்படியே எழுதுகிறார். "இதோ, மேகங்களுடனே வருகிறார் என்று அவருடைய வருகையைத் தரிசித்து எழுதுகிறார். நம்முடைய மனக்கண்களும் பிரகாசமுள்ள தாக இருக்க வேண்டும். அப்போதுதான் கர்த்தர் மேகங்களுடனே வருவதை நம்மால் காண முடியும் மேகங்கள் என்பது அவருடைய ரதங்களையும் சேவைகளையும் குறிக்கிற வார்த்தை இயேசு கிறிஸ்து மேகங்களுடனே வரும்போது கண்கள் யாவும் அவரைக் காணும், எல்லா ஜனங்களுடைய கண்களும் அவரைக் காணும் அவருடைய சிநேகிதன் கண்களும் சத்துருக்களின் கண்களும் இயேசு கிறிஸ்து மேகங்களுடனே வருவதைக் காணும்.

இயேசு கிறிஸ்து மேகங்களுடனே வரும்போது அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்கள் அவரை வாரினால் அடித்தவர்கள், அவருடைய அரசின் மீது முள் முடி சூட்டியவர்கள், அவருடைய விலாவிலே ஈட்டியால்
குத்தினவர்கள் ஆகிய எல்லோரும் அவரைக் காண்பார்கள் அவருடைய வருகைக்கு முன்பாக இவர்களெல்லாம் மனந்திரும்பி இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக தூஷண வார்த்தைகளைப் பேசியவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை செய்து மனந்திரும்பி இருக்க வேண்டும். மனம் திரும்பாத பூமியின் கோத்திரத்தார் எல்லாரும், இயேசு கிறிஸ்து மேகங்களுடனே வரும்போது அவரைப் பார்த்து புலம்புவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைப்பற்றி இங்கு வெளிப்படுத்துகிறார். தம்மை இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்" என்று சொல்லுகிறார். மேலும், "நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" என்று தம்மைப்பற்றி திருவுளம் பற்றுகிறார் இயேசுகிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறவர் எல்லா காரியங்களும் அவரிடமிருந்தே வந்திருக்கிறது. எல்லா காரியங்களும் அவருக்காகவே நடை பெறுகிறது. அவரே சர்வவல்லமையுள்ள தேவன். அவர் நித்தியமானவரே. அவர் என்றும் மாறாதவர்.

இயேசு கிறிஸ்து எருசலேமில் வந்து இறங்கும் போது அங்குள்ள யாவருடைய கண்கள் அவரைக் காணும் (சக 14:1-5 பூமியின் மற்ற பகுதியிலுள்ளவர்கள் சிறிது காலத்திற்குப் பின்பு அவரைக் காண்பார்கள். (ஏசா 2:2-4) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த போது அவரைக் குத்திய யூதருடைய சந்ததியார். (சக 12:10), இயேசு கிறிஸ்து இந்தப் பூமிக்கு வரும்போது எருசலேமைச் சுற்றியிருக்கும் எல்லாத் தேசங்களின் சேனைகளும் அவரைக் காண்பார்கள். (சக 14:1-5; மத் 24:29-31).

அல்பாவும் ஓமெகாவும் என்னும் வாக்கியம் கிரேக்க மொழியின் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஆகும். இந்த வாக்கியம் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் நான்கு முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது (வெளி- 1:8, 11: வெளி 21:5; வெளி 22:13; வெளி 1:17 வெளி 2:8), வெளி 21:6 மற்ற வசனங்களில் எல்லாம் இந்த வாக்கியம் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும். வெளி 1:8 ஆவது வசனத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதற்கு "சர்வவல்லமையுள்ள கர்த்தர்" என்னும் வாக்கியம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

வெளி 1:9-10

உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:9

 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன், அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 1:10

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை தரிசிக்கும் சிலாக்கியம் யோவானுக்கு கிடைத்திருக்கிறது. கிறிஸ்துவைத் தரிசித்தபோது தன்னுடைய நிலைமை எப்படியிருந்தது என்பதை யோவான் விவரிக்கிறார். யோவான் உபத்திரவ படுத்தப்பட்டார். தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், யோவான் பத்மு என்னும் தீவிலே சிறையில் வைக்கப்பட்டிருந்தார். சபையாருக்குத் தன்னைப்பற்றி எழுதும்போது தன்னை அவர்களுடைய சகோதரன் என்று சொல்லுகிறார். யோவான் ஒரு அப்போஸ்தலர் இருந்தாலும் தன்னை அவர்களுடைய சகோதரன் என்று சொல்லி, தன்னையே தாழ்த்துகிறார்.

யோவான் இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கு உடன் பங்காளியாக  இருக்கிறார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் உபத்திரவங்களை அனுபவிக்கும் போது, அவற்றை தனியாக அநுபவிப்பதில்லை . மற்ற விசுவாசிகள் உபத்திரவங்களை அனுபவிப்பது போல யோவானும் உபத்திரவங்களை அனுபவிக்கிறார். இயேசுகிறிஸ்துவினுடைய ராஜ்யத்திற்கும், அவருடைய பொறுமைக்கும், அப்போஸ்தலர் யோவான் மற்ற விசுவாசிகளுக்கு உடன் பங்காளனாக இருக்கிறார்.

மற்ற விசுவாசிகள் உபத்திரவங்களை அனுபவிக்கும் போது யோவான் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறார். அவர்களுடைய உபத்திரவத்தில் அவர்களுக்கு ஆறுதலையும் ஆலோசனையையும் சொல்லுகிறார் யோவான் தரிசனம் கண்டபோது அவர் பத்மு என்னும் தீவிலே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தம் யோவான் இந்தத் தீவிலே சிறைவைக்கப்பட்டிருக்கிறார். சிறைவாசமாகயிருந்தாலும் அப்போஸ்தலர் யோவான் கிறிஸ்துவுக்குள் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்.

யோவான் தீமைகளைச் செய்து பாடுகளை அனுபவிக்கவில்லை . தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமுமாகவே அவர் இந்தத் தீவிலே - சிறைவைக்கப்பட்டிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் தீமை செய்து பாடநுபவிக்கக்கூடாது. நன்மை செய்து பாடநுபவிப்பதே நமக்கு ஆசீர்வாதம்.

அப்போஸ்தலர் யோவான் பத்மு தீவில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது ஆவியானவருடைய மகிமையும் தேவனுடைய கிருபையும் அவர்மீது வந்து அமர்ந்து. யோவான் உபத்திரவங்களை அநுபவித்தாலும் தேவனுடைய தெய்வீக பிரசன்னம் அவருக்கு மிகுந்த ஆறுதலாகவும், சந்தோஷமாகவும், சமாதானமாகவும் இருந்தது.

யோவான் தான் தரிசனங்கண்ட நாளைப்பற்றித் தெளிவாகச் சொல்லுகிறார். கர்த்தருடைய நாளில் யோவான் தரிசனங்கண்டார். அந்தநாளில் யோவான் ஆவிக்குள்ளானார். யோவான் தரிசனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பாகவே அவர் ஆவியிலே - வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். கர்த்தர் தம்மைக்குறித்த விசேஷித்த வெளிப்பாடுகளை நமக்குக் கொடுப்பதற்கு முன்பு, அந்த வெளிப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் நம்மை ஆயத்தம் பண்ணுகிறார் இயேசுகிறிஸ்துவினுடைய தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக, கர்த்தருடைய நாளிலே, யோவான் ஆவிக்குள்ளானார்.

யோவான் ஆவிக்குள்ளான போது. அவருக்குப் பின்னாலே எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டார். இந்தச் சத்தம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சத்தமாகும். பத்மு சாமோசிற்குத் தென்மேற்கே 30 மைல் தூரத்தில் அமைந்துள்ள ஒரு தீவு
இந்தத் தீவு 6 மைல் நீளமும், 10 மைல் அகலமும் கொண்டது. இந்தத் தீவில் மரங்கள் இல்லை. இங்கு பாறைகளும், எரிமலைகள் அதிகம். மிகவும் கொடிய குற்றவாளிகளை ரோமப்பேரரசினர் இந்தத் தீவிற்கு நாடுகடத்தி தண்டனை கொடுப்பது வழக்கம்.

யோவான் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணங்கள்
  • 1. தேவவசனத்தைப் பிரசங்கம் பண்ணினார்.
  • 2. இயேசு கிறிஸ்துவிற்குச் சாட்சி பகிர்ந்தார்.

ஆவிக்குள்ளானேன் என்னும் வாக்கியம் ஒருவர் தன்னை பரிசுத்த ஆவியானவருக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, அவரோடு
பூரணமான ஐக்கியத்தில் இருப்பதை விளக்குகிறது -

ஆதித்திருச்சபையில் விசுவாசிகள் வாரத்தின் முதல் நாளைக் கர்த்தருடைய நாள் என்று அறிவித்தார்கள். இந்நாள் கர்த்தர் உயிர்த்தெழுந்த நாள். ரோமப்பேரரசாரும் தங்களுடைய பேரரசரை வணங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட நாளை நியமித்து அதற்கு "அகஸ்துவினுடைய நாள்" என்று அறிவித்தார்கள். ஞாயிற்றுக் கிழமையே கர்த்தரை ஆராதிக்கும் கர்த்தருடைய நாளாகும்.

கர்த்தர் சீனாய் மலையின் மேல் இறங்கியபோது எக்காள சத்தம் தொனித்தது. மோசே தேவனிடத்தில் பேசினார். தேவனும்
தம்முடைய வாக்கினால் அவருக்கு மறுமொழி கொடுத்தார். (யாத் 19:16-19)

ஏழு சபைகள் (யோவான் 1:11-16)

அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில்எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. வெளிப்படுத்தின விசேஷம் 1:11

அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
வெளிப்படுத்தின விசேஷம் 1:12

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:13

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தது, வெளிப்படுத்தின விசேஷம் 1:14

அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது, அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 1:15

தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 1:16

யோவான் ஆவிக்குள்ளானபோது எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டார். "நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்திலே எழுது" என்று அந்தச் சத்தம் விளம்பினதை. மேலும் எக்காள சத்தம் போன்ற பெரிதான இந்தச் சத்தத்தை பேசுவது யார் என்பதையும் அந்தச் சத்தம்
தெளிவுபடுத்திற்று, "நான் அல்பாவும் ஓமெகாவும் முந்தினவரும ்பிந்தினவருமாயிருக்கிறேன்" என்று அந்தச் சத்தம் விளம்பின து யோவான் தான் காண்கிறதை ஒரு புஸ்தகத்திலே எழுதி, ஆசியாவிலே இருக்கிற ஏழு சபைகளுக்கும் அனுப்ப வேண்டும்.

யோவான் அந்தச் சத்தத்தைக் கேட்டபோது, தன்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினார். திரும்பியபோது அவர் ஒரு மகிமையான தரிசனத்தை கண்டார். ஏழு பொன்குத்துவிளக்குகளையும், அந்தக் குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி
தரித்து மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரை யோவான் கண்டார் (வெளி 1:12,13). ஏழு பொன் குத்து விளக்குகள் ஏழு சபைகளுக்கு அடையாளம் சபைகள் குத்துவிளக்குகளுக்கு ஒப்புமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.குத்துவிளக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும். அதைப்போன்று சபைகள் சுவிசேஷத்தின் வெளிச்சம் உலகத்திற்கு பிரகாசமாகக் கொடுக்கவேண்டும்.

யோவான் ஏழு பொன் குத்து விளக்குகள் நடுவிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கண்டார். இயேசு கிறிஸ்துவின் மகிமையான தரிசனத்தை யோவான் இவ்வாறு விரிவாக எழுதுகிறார்.
  • 1. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மலையைப் போலவும் வெண்மையாக இருந்தது;
  • 2. அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது
  • 3. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது
  • 4. அவருடைய சத்தம் பெருவெள்ளத்தில் இரைச்சல் போலிருந்தது.
  • 5. தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்தி கொண்டிருந்தார்;
  • 6. அவர்  வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது
  • 7. அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனை போலிருந்தது.

கிறிஸ்துவைக் குறித்த வர்ணனை
  • 1. நிலையங்கி தரித்து மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்தவர் (வெளி 1:13; தானி 10:6)
  • 2. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது. (வெளி 1:14: தானி 7:9)
  • 3. அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையை போலிருந்தது. வெளி 1:14: வெளி 19:12; தானி 10:6 எபி 4:12),
  • 4. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது. (வெளி 1:15; வெளி 10:1;
தானி 10:6)
  • 5. அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. (வெளி 1:15; வெளி 8:5; வெளி 10:2-4; வெளி 11:15;
வெளி 14:2; வெளி 16:17-18; வெளி 19:5; சங் 29; எபி 12:26; தானி 10:6)
  • 6. அவர் தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார் அந்த எழு நட்சத்திரங்களும் எழு சபைகளின் தூதர்களாம். (வெளி 1:16, 20).
  • 7. அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது. (வெளி -1:16; வெளி 2:12, 16; வெளி 19:15,21; எபே 6:17; எபி 4:12).
  • 8.அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது (வெளி 1:16; வெளி 10:1; தானி 10:6)

ஏழு குத்து விளக்குகள் (வெளி 1:17-20)

நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்,  வெளிப்படுத்தின விசேஷம் 1:17

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:18

நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது,  வெளிப்படுத்தின விசேஷம் 1:19

என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது, அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:20

இயேசு கிறிஸ்து தம்முடைய மகிமையிலே யோவானுக்குத் தரிசனங்கொடுத்தார். இதுவரையிலும் யோவான் இப்படிப்பட்ட மகிமையான தரிசனத்தைக் கண்டதில்லை. அவர் இயேசுவை கண்ட போது செத்தவனைப்போல அவருடைய பதத்தில் விழுந்தார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மகிமையுள்ள வராக இருந்தாலும், அவர் கிருபையுள்ளவராகவும் இருக்கிறார். தம்முடைய சீஷரிடத்தில் அன்புள்ளவராய் இருக்கிறார்.

தம்முடைய பாதத்தில் செத்தவனைப்போல விழுந்துகிடக்கிற யோவான்மேல் தம்முடைய வலதுகரத்தை வைத்து, யோவானை நோக்கி, "பயப்படாதே, நான் முந்தின வரும் பிந்தின வரும், உயிருள்ள வருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும்
உயிரோடிருக்கிறேன் ஆமென் என் று சொன்னார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவானிடம் அன்போடு "பயப்படாதே" என்று சொல்லுகிறார் தம்மைப்பற்றி வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்து யோவானுக்குச் சொல்லுகிறார். தாம் யார் என்பதையும் தம்முடைய தெய்வீகம் சுபாவத்தையும் கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து யோவானுக்கு ஆறுகாரியங்களை வெளிப்படுத்துகிறார். 

அவையாவன :
  • 1. 'நான் முந்தினவரும் பிந்தி வரும், உயிருள்ள வருமாய் இருக்கிறேன்" இந்த வாக்கியம் இயேசுகிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தைக் குறிப்பிடுகிறது.
  • 2. "மரித்தேன்". இயேசு கிறிஸ்து ஏற்கெனவே தம்முடைய மாம்சத்தில் பாடுகள் அநுபவித்திருக்கிறார். நம்முடைய பாவத்தினிமித்தமாய் கிறிஸ்துவானவர் சிலுவையில் மரித்தார்.
  • 3. "ஆனாலும், இதோ , சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்" இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறார். அவர் மரணத்தை வென்றவர். நித்திய ஜீவனுள்ளவர்.
  • 4. "நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன்" இயேசு கிறிஸ்து வுக்கு மரணத்தின் மீது சர்வ அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் மரணத்தை ஜெயித்தவர். சர்வலோகத்திற்கும் கிறிஸ்துவானவரே அதிபதியாக இருக்கிறவர்.
  • 5. "நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது" கிறிஸ்துவானவர் தம்முடைய சந்தோஷத்தையும் தம்முடைய சித்தத்தையும் வெளிப்படுத்தி, அதை எழுதுமாறு சொல்லுகிறார்.
  • 6. "என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது: அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள்" ஏழு நட்சத்திரங்கள் ஏழு குத்து விளக்குகள் ஆகியவற்றின் இரகசியங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவானுக்குச் சொல்லுகிறார்.

கிறிஸ்துவின் தரிசனத்திற்குப் பின்பு உடனடியாக ஏழு சபைகளுக்கு செய்திகள் கொடுக்கப் படுகிறது. வெளி 2-3 ஆகிய
அதிகாரங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தின் இரண்டாம் பகுதியாகும். தற்போதுள்ள சபைகளின் காரியங்களை இந்தப் பகுதி விளக்குகிறது. சபை எடுத்துக் கொள்ளப்படும் வரையிலும் சபைகளுக்கு இந்தச் செய்தி பொருந்தும்.

"ஏழு சபைகள்" என்பதன் வியாக்கியானங்கள்

  • 1. யோவானின் நாளில் இருந்த ஏழு ஸ்தல சபைகள். துருக்கி தேசத்தின் மேற்குக் கரைப்பகுதியில் சின்ன ஆசியா
அமைந்துள்ளது. அதிலுள்ள ஏழு ஸ்தல சபைகளின் நிலைமைகள் இங்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. (வெளி 1:4,11,20)
  • 2. தற்காலத்திலிருந்து சபை எடுத்துக் கொள்ளப்படும் காலம்வரையிலுமுள்ள எல்லா சபைகளுக்கும் கூறப்படும் தீர்க்கதரிசன செய்தி. ஸ்தல சபைகளின் ஆவிக்குரிய நிலைமைகளை ஏழு சபைகளுக்கும் கூறப்பட்டிருக்கும் செய்திகள் விவரித்துக் காண்பிக்கிறது.
  • 3. ஒவ்வொரு சபையிலுமுள்ள தனி நபர்களை இந்த வாக்கியம் குறிக்கிறது. ஒவ்வொரு தனி நபருடைய ஆவிக்குரிய
நிலைமை விளக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிப்பு கூறப்படுகிறது. (வெளி 1:3 வெளி 2: 7,1117,26 ; வெளி 3:5,12 ,21)

"ஏழு சபைகள்" என்னும் வார்த்தை எல்லாச் சபைகளையும் குறிக்கும் தீர்க்கதரிசன வார்த்தை என்பதற்கு ஆதாரங்கள்

  • 1. வெளிப்படுத்தின விசேஷம் முழுவதுமே தீர்க்க தரிசன பண்புடையது. (வெளி - 1:3,19; வெளி 4:1; வெளி 22:18-19)
  • 2. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி என்னும் வாக்கியமும் (வெளி 1:9; வெளி 12:17) இயேசு கிறிஸ்துவைப்
பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது (வெளி 19:10) என்னும் வாக்கியமும், ஏழு சபைகள் என்னும் வார்த்தை தீர்க்கதரிசன வார்த்தை என்பதை உறுதிப் பண்ணுகிறது
  • 3. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் இது தீர்க்கதரிசன வார்த்தை என்பதை உறுதி பண்ணுகிறது (வெளி - 1:19; வெளி 4:1)
  • 4. தேவனுடைய வார்த்தை என்னும் வார்த்தை இது ஒரு தீர்க்கதரிசன சம்பாஷணை என்பதை நிரூபிக்கிறது (வெளி 1:39)
  • 5.  "சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள் (வெளி 1:1; வெளி 22:6-10) என்னும் வாக்கியமும் இது ஒரு தீர்க்கதரிசனம் என்பதை உறுதி பண்ணுகிறது.
  • 6. வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிற நிருபங்கள் மற்ற நிருபங்களுக்கும் புதிய ஏற்பாட்டின் எல்லாப் புஸ்தகங்களுக்கும் பொருந்தும், இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தை என்பதை இந்தக் காரியமும் நிரூபிக்கிறது. (2 தீமோ 3:16-17)
  • 7. ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குக் கூறப் பட்டிருக்கும் வாக்குத்தத்தங்களும், இனிமேல் நடைபெறப்போகும்
காரியங்களும் இக்காலத்தில் உள்ள விசுவாசிகளுக்கும் பொருந்தும். (வெளி 1-3)

ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டிருக்கும் திருப்பங்களில் காணப்படும் ஒற்றுமைகள்

  • 1. எல்லா நிருபங்களிலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விளக்கம் உள்ள து. (வெளி 1:12-16)
  • 2 ஒவ்வொரு நிருபமும் தூதனுக்கு அதாவது மேய்ப்பருக்கு எழுதப்பட்டது கும்.
  • 3. ஏழாவது சபையைத் தவிர மற்ற சபைகளின் கிரியைகள் போற்றப்பட்டுள்ளன.
  • 4. இரண்டாவது ஆறாவது சபைகளைத் தவிர மற்ற சபைகள் அனைத்தும் கடிந்து கொள்ளப்பட்டும் உள்ளன.
  • 5. இரண்டு, நான்கு ஆறு ஆவது சபைகளைத் தவிர மற்ற சபைகளுக்கு மனந்திருந்த வேண்டும் என்னும் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. நான்காவது சபையிலும் மனந்திருந்த வேண்டிய பாவமுள்ள து ஆயினும் மனந்திருந்த வேண்டுமென்று அதற்கு கட்டளை கொடுக்கப்படவில்லை.
  • 6. இரண்டு, ஆறு ஆகிய சபைகளைத் தவிர மற்ற சபைகளுக்கு நியாயத்தீர்ப்பின் எச்சரிப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • 7. ஒன்று இரண்டு, ஆறு ஆகிய சபைகளைத் தவிர மற்ற சபைகள் ஒன்றுக்கொன்று முந்திய சபையைவிட மோசமானதா இருக்கிறது
  • 8. ஜெயங் கொள்ளுகிறவர்களுக்கு எல்லா நிருபங்களிலும் வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • 9. காதுள்ளவன் கேட்கக்கடவன் என்னும் புத்திமதி எல்லா நிருபங்களில் கூற பட்டிருக்கிறது
  • 10. இந்த நிருபத்தை எழுதவேண்டுமாறு தேவன் யோவானுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நிருபத்தையும் எழுதி முடித்த பின்பு, இதை யாருக்கு எழுத வேண்டும், இதில் என்ன எழுத வேண்டும் என்பனவற்றை அடுத்த அடுத்த நிருபத்தை முடிக்கும் முன்பு தேவன் யோவானுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அதன்பின்பு "இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளைச் சபைகளுக்கு எழுது" என்னும் கட்டளையைத் தேவன் யோவானுக்குக் கொடுத்தார்.  (வெளி 1:19; வெளி 4:1)

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. கிறிஸ்துவுக்குள் சகோதரரே
    அருமையான செய்திகள். 👍👍

    ReplyDelete