வெளிப்படுத்தின விசேஷம் 2ஆம் அதிகாரம் விளக்கம்

எபேசு சபை வெளி 2:1-7

வெளி 2:1. எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில் ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழுபொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது.

ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் -மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர், முதலாவதாக எபேசு சபையின் தூதனுக்கு இந்தச் செய்தியைச் சொல்லுகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திரங்கள் இயேசுகிறிஸ்துவின் ஊழியர்களைக் குறிக்கிறது கர்த்தர் தம்முடைய ஊழியக்காரரின் நன்மைகளை விசாரிக்கிறவர். கர்த்தருடைய உழியக்காரர்கள் அவருடைய விசேஷித்த பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் இருக்கிறார்கள்.

கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அவருடைய பலத்த கரத்தில் இறங்கியிருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஊழியக்காரர்களைத் தாங்குகிறார். ஊழியக்காரர்களுக்கு இயேசு கிறிஸ்துவே பாதுகாப்பாக இருக்கிறார். கர்த்தர் ஊழியக்கார்களைத் தூங்கவில்லையென்றால், அவர்கள் சீக்கிரத்தில் கீழே விழுந்துவிடும் நட்சத்திரங்களாக இருப்பார்கள். நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கும்
வரையில்தான் நம்மால் நன்மையான ஊழியங்களைச் செய்யமுடியும். கர்த்தருடைய கரம் நம்மோடு கூட கிரியை நடப்பிக்கிறது. நாம் கர்த்தருடைய கரத்திலுள்ள கருவிகளாக பயன்படுத்த படுகிறோம்.


நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏழுபொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவி கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய சபைகளுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தை இந்த வாக்கியம் தெளிவு படுத்துகிறது. கிறிஸ்துவானவர் இப்போது பரலோகத்திலிருந்தாலும், பூமியிலுள்ள தம்முடைய சபைகள் மத்தியிலே அவர் எப்போதும் உலாவிக்கொண்டிருக்கிறவர்.

எபேசு ஆசியா மைனரில் உள்ள முக்கியமான வணிக மையம். காய்ஸ்டர் நதி ஆகியான் கடலில் கலக்கும் இடத்தில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் முக்கியமான வியாபார மையம் சிமிர்னாவிலிருந்து தெற்கே 50 மைல் தூரத்தில் இப்பட்டிணம் அமைந்திருக்கிறது. இங்கு தியானாளின் கோவில் உள்ளது. ஆதி காலத்து அற்புதங்கள் தியானாள் கோவிலையும், ஒரு முக்கியமான அற்புதமாகக் கருதினார்கள். (அப் 19:7) தற்பொழுது இப்பட்டிணம் இடிந்து சிதைந்து காணப்படுகிறது.(வெளி 2:5 ஆவது வசனம் இப்பட்டணத்திற்கு நிறைவேறிற்று.

அறிந்திருக்கிறேன் வெளி 2 : 2,3

 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும், வெளிப்படுத்தின விசேஷம் 2:2

நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:3

கர்த்தர் எபேசு சபையைப்பற்றி நல்ல வார்த்தைகளினால் புகழ்ந்து பேசுகிறார். எபேசு சபையின் கிரியைகளை கர்த்தர் அறிந்திருக்கிறார். கர்த்தருக்கு மறைவான காரியம் எதுவுமில்லை. நம்மிடத்தில் தப்பிதம் இருக்கும்போது கர்த்தர் நம்மைக் கடிந்துகொள்வார். நாம் நன்மையானவைகளைச் செய்யும்போது கர்த்தர் நம்மைப் புகழ்ந்து பேசுவார். கர்த்தர் நமக்குச் சொல்லுகிற எல்லா வார்த்தைகளையும் கவனமாய்க் கேட்கவேண்டும். அவர் நம்மைப் புகழ்ந்து பேசும் போதும் அவர் நம்மைக் கடிந்துகொள்ளும்போதும் நாம் அவருக்குச் செவிக்கொடுக்க வேண்டும். தாம் என்ன சொல்லவேண்டுமென்பது கர்த்தருக்குத் தெரியும். அவர் தேவையில்லாமல் ஒரு வார்த்தையும் பேசுகிறவர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எபேசு சபையை புகழ்ந்து பேசுகிறார். அவர்கள் நற்கிரியைகளைச் செய்கிறார்கள். பிரயாசத்தோடு ஊழியம் செய்கிறார்கள் அவர்களுக்குப் பாடுகள் வரும்போது அவற்றைப் பொறுமையோடு சகித்துக் கொள் கிறார்கள், கர்த்தருடைய
ஊழியக்காரர்கள் பிரயாசப்பட்டு நற்கிரியைகளை செய்தால் மாத்திரம் போதாது. அவர்கள் பொறுமையுள்ள வர்களாகவும் இருக்க வேண்டும். நம்மிடத்தில் பொறுமை இல்லை யென்றால் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்மால் வளர்ச்சி பெறமுடியாது. பொறுமையில்லாதவர்களால் இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லவும் முடியாது.

கர்த்தருடைய பிள்ளைகள் சோதனைகளையும், வேதனைகளையும், பாடுகளையும், உபத்திரவங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு மத்தியில் நாம் பொறுமையோடிருக்கவேண்டும் எபேசு சபையார் பொல்லாதவர்கள் சகிக்கக்கூடாமல் இருக்கிறார்கள். எபேசு
சபை பொல்லாப்புக்கு விரோதமாக பக்தி விருத்தியில் வைராக்கியமாக இருக்கிறது. நாம் மனுஷரிடத்தில் அன்புகூரவேண்டும் அதே வேளையில் அவர்களுடைய பொல்லாத பாவங்களுக்கு விரோதமாக நாம் எதிர்த்து நிற்கவும் வேண்டும். அவர்களுடைய பாவங்களுக்கு நாம் பங்காளிகளாகி விடக்கூடாது.

அப்போஸ்தலர் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லுகிறார்கள். எல்லா காரியங்களையும் நாம் சோதித்து அறியவேண்டும். ஆவிகளைப் பகுத்தறியும் வரத்தை கர்த்தர் நமக்குக் கிருபையாகக் கொடுத்திருக்கிறார். பொய்சொல்லுகிற அப்போஸ்தலர்கள் எபேசு சபையார்
சோதித்துப் பார்த்து அவர்களை பொய்யன் என்று கண்டறிந்தார்கள். நாம் சோதித்துப் பார்க்காமல் யாரையும் நம்முடைய சுய இஷ்டம் போல நியாயந்தீர்த்து விடக்கூடாது. நீதியாய் விசாரியாமல் யாரையும் ஒதுக்கி வைத்துவிடவும் கூடாது.

எபேசு சபையார் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்படு, நற்கிரியைகளைச் செய்கிறார்கள் எபேசு சபையாருடைய கிரியைகளையும், அவர்களுடைய பிரயாசத்தையும், அவர்களுடைய பொறுமையையும், அவர்கள் வார்த்தைகளைச் சோதித்துப் பார்ப்பதையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார்.

எபேசு சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. குறைவின் பத்து அம்சங்கள் (வெளி 2:2-6)
2. குறைவின் ஒரு அம்சம். (வெளி 2:4-5)
3. ஆதியில் கொண்டிருந்த அன்பை அவர்கள் விட்டு விட்டார்கள். (வெளி 2:4)
4. அவர்கள் இன்ன நிலைமையிலிருந்து விழுந்தார்கள் என்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்ய வேண்டும். (வெளி 2:5)
5. இல்லாவிட்டால் தேவன் சீக்கிரமாய் அவர்களிடத்தில் வந்து, அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில், அவர்கள் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவார். (வெளி 2:5)
6.. தேவன் கூறியிருக்கும் நிபந்தனைகளுக்கு எபேசு சபை கீழ்ப்படியவில்லையென்றால் அந்தச் சபை முழுவதும் அழிக்கப்படும் (வெளி 2:5)
7. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைத் தேவன் புசிக்க கொடுப்பார். (வெளி 2:7)

குறை உண்டு வெளி 2 : 4-6

வெளி 2:4. ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

வெளி 2:5. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை தினைத்து மனத்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகள் செய்வாயாக
இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

வெளி 2:6. நான் வெறுக்கிற திக்குவாய் மதஸ்தரின் கிரியைகளை தீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எபேசு சபையை புகழ்ந்து பேசினாலும் அவர்களிடத்தில் காணப்படுகிற ஒரு சில துர்க்கிரியைகளினிமித்தம், கர்த்தர் அவர்களைக் கடிந்துகொள்ளவும் செய்கிறார். நமக்குள் எவ்வளவு நன்மையான காரியங்கள் இருந்தாலும் ஒரு சில தீமையான காரியங்கள் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது நற்பாவங்களுக்கு நடுவே தீயாக பாவங்களும் வாசம் பண்ண வாய்ப்பு இருக்கிறது.

எபேசு சபையார் ஆதியிலே கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள். அந்த அன்பை அவர்கள் முற்றிலுமாக விட்டு விலகிப் போக விடவில்லை. அன்பை மொத்தமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட வில்லை அன்பின் அளவில் குறைவு உண்டாயிற்று. ஆதியிலே அவர்கள் அதிக அன்புள்ளவர்களாயிருந்தார்கள். அதன்பின்பு அவர்களுடைய அன்பு குறைந்து போயிற்று.

விசுவாசிகள் ஆரம்பத்தில் இயேசுகிறிஸ்துவிடம் அதிகமாய் அன்பு கூறுவார்கள், அவர்களுடைய அன்பில் ஜீவனும், வேகமும் இருக்கும். அன்பில் உற்சாகமாயிருப்பார்கள். இந்த அன்பை நாம் காத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அன்பு அணைந்து போகும். பிரகாசமாயிருந்த அன்பு மக்கிப்போகும் உற்சாகமாயிருந்த அன்பு சோர்ந்து போகும். ஜீவனோடும் ஆரோக்கியத்தோடும் இருந்த
அன்பு நோய்வாய்ப்பட்டு பலவினமா இருக்கும். எபேசு சபையார் ஆதியிலே தம்மேல் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் மீது குற்றம் சொல்லுகிறார்.

அன்பு குறைந்து போனவர்கள் மறுபடியும் அந்த அன்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டுமென்று
கிறிஸ்துவானவர் தாமே தம்முடைய தெய்வீக ஆலோசனைகளை சொல்லுகிறார். முதலாவதாக நாம் இன்ன நிலைமையிலிருந்து விழுந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நம்முடைய முந்திய நிலமையையும், தற்போதைய நிலையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் இப்போது இயேசுகிறிஸ்துவிடத்தில் அன்புகூருவதைவிட, ஆதியிலே அவரிடத்தில் எவ்வளவு அதிகமாய் அன்புகூர்ந்தோம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு குறைந்து போனது நமக்கு தெரிய வரும்.

நாம் கர்த்தரிடத்தில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டதை நினைத்து, மனந்திரும்ப வேண்டும். இதைத் தொடர்ந்து  ஆதியில் செய்த கிரியைகளை செய்ய வேண்டும் நாம் செய்தவற்றை திரும்பவும் உற்சாகமாகச் செய்ய வேண்டும். நம்முடைய ஆதி அன்பை மறுபடியும் பெற்றுக்கொள்ளும் வரையிலும், மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்ய வேண்டும். அப்போது நம்மிடத்தில் சோர்ந்துபோயிருக்கும் அன்பு புதுப்பிக்கப்படும். குறைந்துபோயிருக்கிற அன்பு நிறைவாயிருக்கும்.

கர்த்தருடைய ஆலோசனையை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து கிரியை நடப்பிக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளை நாம் புறக்கணித்தால் நமக்கு தண்டனை நிச்சயம் உண்டு, கர்த்தர் மனந்திரும்பு என்று சொல்லும்போது, நாம் மெய்யாகவே மனந்திரும்ப வேண்டும். நாம் மனந்திரும்ப மறுத்துவிட்டால் கர்த்தருடைய கோபாக்கினை நம்மீது வரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையும்
இரக்கமுமுள்ளவர். அவருடைய கிருபையும் இரக்கத்தையும் நாம் புறக்கணித்து விட்டால், நம்மால் கர்த்தருக்குப் பிரியமான பிள்ளைகளாக ஜீவிக்க முடியாது. கர்த்தர் நம்பிடத்தில் என்று குறைவு உண்டு சொல்லுவார் நம்முடைய குறைவை திருத்திக்கொள்ள நாம் முன்வரவில்லையென்றால் நம்மைத் தண்டிப்பார்.

நாம் தேவனிடத்தில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டால், நாம் உடனே மனந்திரும்ப வேண்டும். ஆதியில் செய்த கிரியைகளை மறுபடியும் செய்யவேண்டும். இல்லாவிட்டால், நம்முடைய கர்த்தர் சீக்கிரமாய் நம்மிடத்தில் வந்து, நாம் மனந்திரும்பாத பட்சத்தில், நம்முடைய விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிப்போடுவார். நமக்கு இயேசுகிறிஸ்துவின் வெளிச்சம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகும்
நம்மால் வெளிச்சத்தில் இருக்கமுடியாது இருளில் இருப்போம் நாம் போகும் இடம் எது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்போம்.

எபேசு சபையாரிடத்தில் ஒரு சில குறைகள் காணப்பட்டாலும், அவர்களிடத்தில் ஒரு சில நற்காரியங்களும் காணப்படுகிறது. அதினிமித்தமாய் கர்த்தர் அவர்களைப் புகழ்ந்து பேசுகிறார். கர்த்தர் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கிறார். எபேசு சபையார் அன்பில் குறைவு உள்ளவர்களா இருக்கிறார்கள். ஆனாலும் கர்த்தர் வெறுக்கிற கிரியைகளை எபேசு சபையாரும் வெறுக்கிறார்கள்.

நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசமுண்டு மெய்க்கும் பொய்க்கும் வித்தியாசமுண்டு, கர்த்தர் நன்மையானவர். அவர் மெய்யாண்டவர். அவரைப் பின்பற்றுகிற நாம் நன்மை செய்யவேண்டும். மெய்யைப் பற்றிக் கொள்ள வேண்டும் நிக்கொலாய் மதஸ்தரிடம் மெய்யான கிரியைகள் எதுவுமில்லை. கர்த்தருக்குப் பிரியமான கிரியைகள் எதையும் அவர்கள் செய்யவில்லை. கர்த்தர் அவர்களை வெறுக்கிறார். எபேசு சபையாரும் அவர்களை வெறுக்கிறார்கள். இதனால் கர்த்தர் எபேசு சபையார்மீது புரியப்படுகிறார்.

ஆனாலும் எபேசு சபையார் தேவனிடத்தில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள். அதினிமித்தமாய் கர்த்தர் அவர்கள் மீது கோப்படுகிறார் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கிரியை செய்யும் போது நாம் கர்த்தருக்குப் பிரியமுள்ள பிரயோஜனமுள்ள
பிள்ளைகளாக இருப்போம் நம்மிடத்தில் நற்கிரியைகள் இருக்க வேண்டும். பொறுமை இருக்க வேண்டும். இவையெல்லாற்றையும்விட நம்முடைய கிரியைகள் தேவனுக்குப் பிரியமுள்ள தாயிருக்க வேண்டும். தேவன் வெறுக்கிற கிரியைகளை நாம் மிகுந்த செய்துவிடாதவாறு எச்சரிப்போடிருக்கவேண்டும்.

நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள் நிக்கொலாயைப் பின்பற்றுகிறவர்கள். இவன் ஒரு தேவப்புரட்டன். ஞானமார்க்கத்தில் காணப்படும் அசுசியான பழக்கவழக்கங்களை இவர்களும் கடைப்பிடித்து வந்தார்கள் விபச்சாரம், வேசித்தனம். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதைப் புசிப்பது ஆகியவற்றை இவர்கள் பாவமாகக் கருதவில்லை. பிலேயாம் தியத்தீராவின் யேசபேல் ஆகியோருடைய கொள்கைகளைப்போல நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கையும் அமைந்திருந்தது.

ஜீவவிருட்சத்தின் கனி வெளி 2:7

வெளி 2:7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எபேசு சபையின் தூதனுக்குச் சொன்ன செய்தியின் முடிவுரையில் இந்த வாக்கியம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி எபேசு சபைக்குச் சொல்லப்பட்டால், எல்லா சபைக்கும் பொருந்துகிற பொதுவான செய்தியாகும். ஜெயங்கொள்கிறவர்களுக்கு
கர்த்தர் தம்முடைய பெரிதான கிருபையையும் இரக்கத்தையும் வாக்குப்பண்ணுகிறார்.

நமக்கு ஆவிக்குரிய சத்துருக்கள் உண்டு. அவர்கள் நம்மை மேற்கொள்ள இடங் கொடுக்க கூடாது. நம்முடைய சத்துருக்களோடு நாம் நல்ல போராட்டத்தைப் போராட வேண்டும். ஜெயங்கிடைக்கும் வரையிலும் சோர்ந்துபோகாமல் தொடர்ந்து போராட வேண்டும் ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் ஜெயம்பெறும்போது நமக்கு மேன்மையும் வெகுமதியும் உண்டாகும்.

ஜெயங்கொள்கிறவர்கள் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பார்கள். இந்த விருட்சம் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிறது. ஜீவவிருட்சம் பூமிக்குரிய விருட்ச மெல்ல. இதன் கனியும் பூமிக்குரிய கனியல்ல. ஜீவவிருட்சத்தின் கனி பரலோகத்திற்கு உரியது. ஜெயங்கொள்கிறவன் எவனோ அவனுக்கு கர்த்தர் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்கக் கொடுப்பார்.

சிமிர்னா வெளி 2:8-11

வெளி 2:8.சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருத்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிமிர்னா சபையின் தூதனுக்கு இந்த நிருபத்தை எழுதுகிறார். கிறிஸ்துவானர் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார் நாம் இந்த உலகத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மாத்திரமே ஜீவிக்கிறேன். ஒரு தரம் பிறப்பதும், பின்பு மரிப்பதும் மனுஷருக்கு நியமிக்க பட்டிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய" இயேசு கிறிஸ்துவே நித்திய ஜீவன் உள்ளவராயிருக்கிறார் அவரே முந்தின வரும் பிந்தினவருமாய் இருக்கிறார்.

இயேசு கிறிஸ்து மரித்திருந்து பிழைத்தவருமானவர். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். ஆனாலும் அவர் உயிரோடிருக்கிறார். அவர் நித்திய காலமாக உயிரோடிருக்கிறவர். நித்திய ஜீவனுள்ள இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார்.

சிமிர்னா துருக்கியில் உள்ள ஐசுவரியம் மிகுந்த பட்டணம். இதன் தற்காலத்து பெயர் இஸ்மீர் என்பதாகும். ஆகியான் கடலில் எபேசுவிற்கு 50 மைல் வடமேற்காக இந்தப் பட்டணம் அமைந்திருக்கிறது.

அறிந்திருக்கிறேன் வெளி 2:9

வெளி 2:9. உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,
தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

சிமிர்னா சபையின் விசுவாசிகள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஐசுவரியம் உள்ளவர்கள், ஆனாலும் அவர்களில் சிலர் உலகப்பிரகாரமான தரித்திரராய் இருக்கிறார்கள். அவர்கள் தரித்திரராயிருந்தாலும், தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்திலே ஐசுவரியவான்களாய் இருக்கிறார்கள். அவர்கள் விசுவாசத்திலும், நற்கிரியைகளைச் செய்வதிலும் ஐஸ்வர்யம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். நம்மிடத்தில் ஆவிக்குரிய ஐசுவரியம் இருக்க வேண்டும். ஆவிக்குரிய ஐசுவரியம் உள்ளவர்கள் உலகப்பிரகாரமான தரித்திரத்தை பொறுமையோடு சகித்துக் கொள்வார்கள். தங்கள் தரித்திரத்திலும் கர்த்தருக்குள் சந்தோஷமாக இருப்பார்கள்.

சிமிர்னா சபையாரின் கிரியைகளையும், அவர்களுடைய உபத்திரவத்தையும், அவர்களுக்கு இருக்கிற தரித்திரத்தையும் கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார். அவர்களுடைய உபத்திரவத்தின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். நாம் கர்த்தருடைய பலத்த கரத்தில் அடங்கியிருக்கிறோம் கர்த்தருக்கு மறைவான காரியம் ஒன்றுமேயில்லை. எல்லாம் அவருக்கு வெளிச்சமாகும், தெளிவாகவும் தெரியும். அவர் நம்முடைய கண்ணீர்களையும் உபத்திரவங்களையும் அறிந்திருக்கிறார். அவரே நம்முடைய ஆறுதலின் தேவன்.

சிமிர்னா சபையாருக்கு ஆவிக்குரிய சத்துருக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தூஷணமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். தூஷணமான கிரியைகளைச் செய்கிறார்கள் அவர்கள் தங்களை யூதர்களென்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமா இருக்கிறார்கள். கர்த்தர் அந்தத் தூஷணக்காரையும் அறிந்திருக்கிறார்.

யூதர்கள் தேவனுடைய விசேஷித்த உடன்படிக்கையின் ஜனங்கள். இவர்களுடைய சத்துருக்களோ சாத்தானுடைய கூட்டத்தார். ஆனால் அவர்கள் தங்களை யூதர் என்று சொல்லுகிறார்கள். தாங்களும் தேவனுடைய விசேஷித்த உடன்படிக்கையின் ஜனங்கள் என்று தூஷணமான வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள். இவர்கள் சாத்தானுக்கும், அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்காளிகள்.

கர்த்தருடைய சுதந்தரத்தில் சாத்தானுடைய கூட்டத்தாருக்கு பங்குமில்லை. பாத்தியமுமில்லை. தேவனுடைய சபையை விட்டு சாத்தானுடைய கூட்டத்தார் விலகி வெளியேறி போய்விட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலின் தேவன். அவரை விசுவாசிக்கிறவர்களெல்லோரும் இஸ்ரவேலின் காணியாட்சிக்குட்பட்ட வர்கள். சாத்தானுடைய கூட்டத்தாரோ தேவனுடைய காணியாட்சிக்குப் புறம்பாக்கப்பட்டவர்கள்.

சிமிர்னா சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள்
2. உபத்திரவம்
3, ஐசுவரியமுள்ளவர்களாயிருந்தும் அவர்களுக்கு இருக்கும் தரித்திரம்.

சிமிர்னா விலுள்ள ஒரு பிரிவினர் யூதமார்க்கத்தைப் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் தேவனைத் தூஷித்து சாத்தானைச் சேவித்தார்கள்.

ஜீவகிரீடம் வெளி 2:10

வெளி 2:10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே இதோ தீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாக பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவ படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

நம்முடைய கர்த்தர் நம்மைப்பற்றிய எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறார். நமக்கு இதுவரையிலும் நடந்தது இப்போது நடைபெறுவது, இனிமேல் நடைபெறப்போவது எல்லாவற்றையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். சிமிர்னா சபையாருக்கு இனிமேல் பாடுகள் வரும். அவர்கள் படப்போகிற பாடுகள் குறித்து எவ்வளவும் பயப்படவேண்டாம் என்று கர்த்தர் அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். வரப்போகிற பாடுகளைக் குறித்து தம்முடைய பிள்ளைகளுக்கு முன்னெச்சரிப்பு சொல்லுகிறார்.

சிமிர்னா சபையார் ஏற்கெனவே உபத்திரவத்தை அனுபவித்தார்கள். அந்த உபத்திரவத்தில் இனிமேல் காவலில் வைக்கப்படப்போகிறார்கள். சிறைச்சாலையில் பாடுகளை அனுபவிக்க போகிறார்கள். இதைக்குறித்து அவர்கள் பயப்பட வேண்டியதில்லை இனிமேல் அவர்கள் படப்போகிற பாடுகளுக்கு கர்த்தர் அவர்களைப் பலப்படுத்துகிறார். பாடுகளை சகித்துக்கொள்வதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் கர்த்தர் அவர்களுக்குக் கிருபை கொடுத்திருக்கிறார். இதினிமித்தமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள் சொல்கிறார்.

முதலாவதாக அவர்கள் படப்போகிற பாடுகளை குறித்து எவ்வளவும் பாட வேண்டியதில்லை. கர்த்தர் அவர்களை, "பயப்படாதே" என்று கட்டளையிடுகிறான். இது கட்டளையின் வார்த்தை மாத்திரமல்ல. இந்தக் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படியும்போது கர்த்தர் அவர்களை
பாதுகாத்துக்கொள்வார் என்னும் நிச்சயமும் இந்த வார்த்தையில் இடம்பெற்றுள்ளது.

கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு பாடுகள் வந்தாலும் அது ஒரு வரம்புக்குட்பட்டதாகவே இருக்கும். நமக்கு நீண்டகாலமாக பாடுகள் இருக்காது. ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலுமே பாடுகள் இருக்கும். பாடுகளும் நாம் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில்தான்
இருக்கும். சிமிர்னா சபையின் விசுவாசிகள் பத்துநாள் மாத்திரமே உபத்திரவ படுவார்கள். சோதிக்கப்படும் பொருட்டாகவே இவர்களுக்கு பாடுகள் உண்டாயிற்று தம்முடைய பிள்ளைகளை அழிப்பதற்கு கர்த்தர் ஒருபோதும் பாடுகளை அனுமதிக்க மாட்டார்.

பிசாசானவன் எல்லா விசுவாசிகளையும் சோதிக்க மாட்டான் அவன் ஒரு சிலரை மாத்திரமே காவலில் போடுவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றுகிறார். அவனால் நம்மை நித்தியகாலத்திற்கு காவலில் போட முடியாது, சாத்தான் மூலமாய் நமக்கு காவல் உண்டானாலும், அது பத்து நாள் மாத்திரமே அதாவது, குறுகிய காலம் மாத்திரமே இருக்கும்.

நமக்கு எப்படிப்பட்ட பாடுகள் வந்தாலும், எவ்வளவு பெரிய உபத்திரவங்கள் வந்தாலும், நாம் மரணபரியந்தம் கர்த்தருக்கு உண்மையாக இருக்க வேண்டும். அப்போது கர்த்தர் நமக்கு ஜீவகிரீடத்தைத் தருவார். கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை, அவர் செய்கிறதை மாத்திரமே
சொல்கிறவர். அவர் சொல்லுகிறதை நிச்சயமாகவே செய்கிறவர். நம்முடைய பாடுகளில் நாம் மரணபரியந்தம் உண்மையாயிருக்கும்போது, கர்த்தர் தாம் சொன்ன பிரகாரம், நிச்சயமாகவே நமக்கு ஜீவகிரீடத்தைத் தருவார். கர்த்தருடைய பிள்ளைகள் உலகப்பிரகாரமாக தரித்திரராயிருக்கலாம். நாம் மரணபரியந்தம் உண்மையுள்ளவராய் இருக்கும் போது, நமக்கு கர்த்தர் ஜீவகிரீடத்தை தருகிறார் நம்முடைய
உண்மையினிமித்தமும் விசுவாசத்தினிமித்தமும் பாடுகளைக் குறித்து பயப்படாததினிமித்தமும் கர்த்தர் நமக்கு ஜீவகிரீடத்தைத் தருகிறார். நாம்
கர்த்தருக்கு சிறிதுகாலம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் போதாது. நம்முடைய மரணபரியந்தம் நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இரண்டாம் மரணம் வெளி 2:11

வெளி 2:11. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

கர்த்தர் சிமிர்னா சபைக்கு எழுதும் நிருபத்தின் முடிவுரையில் இந்த வார்த்தையை சொல்லுகிறார் இந்த உபதேசம் எல்லா சபைகளுக்கும் பொதுவானது. கர்த்தர் தம்முடைய ஜனத்தை எப்படி பாதுகாக்கிறார், எப்படி பராமரிக்கிறார் என்பதை முழுஉலகத்தாரும் கவனித்துப் பார்க்க வேண்டும். ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் வெகுமதி கொடுக்கிறார். தம்முடைய கிருபையுள்ள வாக்குத்தத்தங்களை கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்து அவர்களை மேன்மை படுத்துகிறார்.

மனுஷருக்கு இரண்டு மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய முதலாம் மரணம் நமக்கு சரீரப்பிரகாரமான மரணம் நம்முடைய இரண்டாம் மரணமோ நித்திய மரணம். முதலாம் மரணத்தைவிட இரண்டாம் மரணம் மிகவும் கொடியது. இது நம்முடைய ஆத்துமாவின் மரணம். ஜெயங்கொள்கிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இரண்டாம்
மரணமாகிய நித்திய மரணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வார். இரண்டாம் மரணத்தினால் நமக்கு ஒரு சேதமும்
உண்டாகாது. முதலாம் மரணமும் நம்மைச் சேதப்படுத்தாது. இரண்டாம் மரணம் நம்மைச் சேதப்படுத்துவதற்குப் பெலனற்றது.

பெர்கமு வெளி 2:12-17

வெளி 2:12. பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியதை சொல்லும்போது தம்மை இருபுறமும் கருக்குள்ள பட்டயம் உடையவர் என்று சொல்லுகிறார் பெர்கமு சபையில் வஞ்சிக்கிற மனமுள்ளவர்கள் உட்பிரவேசித்திருக்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தினாலே யுத்தம் பண்ணுகிறார். தேவனுடைய வார்த்தையே கர்த்தருடைய பட்டயம். இது இருபுறமும் கருக்குள்ளது. இந்தப் பட்டயம் நம்மைப் பாதுகாக்கவும் செய்யவும். சத்துருவை அழிக்கவும் செய்யும்.

கர்த்தருடைய பட்டயம் கருக்குள்ளது. மிகவும் கூர்மையானது. மனுஷருடைய இருதயம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அந்த இருதயத்தை கர்த்தருடைய கருக்குள்ள பட்டயத்தால் வெட்டிக் காயப்படுத்த முடியும் இந்தப் பட்டயம் இருபுறமும் கருக்கானது. ஒருபுறத்தில் கர்த்தருடைய நியாயப்பிரமாணம் இருக்கிறது. மற்றொரு புறத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷம் இருக்கிறது. கர்த்தருடைய பிரமாணத்தை மீறுகிறவர்களுக்கு விரோதமாக நியாயப்பிரமாணம் தீர்ப்பு செய்யும் சுவிசேஷத்திற்காக விரோதமாக வஞ்சிக்கிறவர்களை கர்த்தருடைய வார்த்தை
நியாயந்தீர்க்கும்.

பெர்கமு மீசியாவிலுள்ள ஒரு பட்டணம். காய்கஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. சிமிர்னாவிற்கு வடக்கில் 50 மைல் தூரத்தில் அமைந்துள்ள பட்டணம்.

அறிந்திருக்கிறேன் வெளி 2:13

வெளி 2:13. உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், தீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடி கொண்டிருக்கும் இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அத்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசம் நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

கிறிஸ்துவானவர் தம்முடைய சபைக்கு வரும் பிரச்சனைகளை அறிந்திருக்கிறார். அவர்களுக்கு வருகிற சோதனைகள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். தம்முடைய பிள்ளைகளை யார் வஞ்சிப்பார்கள் என்பதும் கர்த்தருக்குத் தெரியும் பெர்கமு சபையார் இருக்கிற இடத்திலே சாத்தானும் குடிகொண்டிருக்கிறான். சபையாரைச் சுற்றிலும் பாவிகளும் துன்மார்க்கரும் குடியிருக்கிறார்கள்.

சாத்தானுடைய சிங்காசனம் இருக்கும் இடத்தில் பெர்கமு சபையார் குடியிருக்கிறார்கள். ஆனாலும் பெர்கமு சடையார் கர்த்தருடைய நாமத்தை
பற்றிக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தரைப்பற்றும் விசுவாசம் பெர்கமு சபையார் மறுதலிக்கவில்லை. இவர்களைச் சுற்றிலும் சாத்தானுடைய சிங்காசனம் இருந்தாலும் பெர்கமு சபையார் நற்கிரியைகளைச் செய்கிறார்கள். இந்த உலகம் முழுவதிலும் சாத்தானுடைய சிங்சாசனம் ஸ்தாபிக்க பட்டிருக்கிறது. எங்கெல்லாம் துன்மார்க்கம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சாத்தான் தன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருந்து துன்மார்க்கரை ஆளுகை செய்கிறார்.

பெர்கமு சபையாரைப்பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்ல வார்த்தைகளை சொல்லி புகழ்கிறார். அவர்கள் தம்முடைய நாமத்தை பற்றிக்கொண்டிருப்பதை கர்த்தர் சாட்சியாய் அறிவிக்கிறார். அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வெட்கப்படவில்லை. கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றிக்கொண்டால் தங்களுக்கு அவமானம் வருமோ என்றோ , உபத்திரவம் வருமோ என்றோ பெர்கமு சபையார் யோசிக்கவில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் கர்த்தருடைய நாமத்தை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தேவனுடைய கிருபை பெர்கமு சபையாருக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் உண்மையுள்ளவர்களாக உறுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைவிட்டு அவர்கள் விலகிப் போக வில்லை விசுவாசத்தை மறுதலிக்கவுமில்லை.

பெர்கமு சபையார் சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் குடியிருக்கும் போது அந்திப்பா என்பவர் கர்த்தருக்கு உண்மையுள்ள சாட்சியாகயிருந்தார். ஆனால் சத்துருக்களோ அந்திப்பாவை கொன்று போட்டார்கள், கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தினிமித்தமாய்
அந்திப்பா இரத்த சாட்சியாக மரித்தார். இந்த இடத்தில் சாத்தான் குடி கொண்டிருந்தாலும், அந்திப்பாவின் இருதயத்திலோ கர்த்தர் குடி கொண்டிருந்தார். அந்திப்பா இரத்தசாட்சியாக மரித்ததைப் பார்த்து பெர்கமு சபை யார் பயந்து போய் விடவில்லை. அவர்கள் 
இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய விசுவாசத்தை கர்த்தர் அறிந்திருக்கிறார்.

பெர்கமு -சபை பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள்
2. கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றிக் பற்றிக்கொண்டிருக்கிறது.
3. விசுவாசத்தை மறுதலியாமலிருக்கிறது.

பழங்கால பாபிலோனியாவின் மார்க்கப் பிரிவினர் தங்களுடைய செயல்பாடுகளைப் பாபிலோனிலிருந்து பெர்கமுவிற்கு மாற்றிக் கொண்டார்கள். ஆகையினால் இந்தப் பட்டணம் சாத்தான் குடிகொண்டிருக்கும் இடம் என்று அழைக்கப்படுகிறது.

விசுவாசிகள் தங்களுடைய ஜீவியகால முழுவதும் கர்த்தரையே நம்பி ஜீவிக்க வேண்டும். விசுவாசத்தை ஏராளமானோர் மறுதலித்திருக்கிறார்கள்.

அந்திப்பாவைப் பற்றி அதிகமாக எந்த நிகழ்ச்சியும் தெரியவில்லை . இவன் கிறிஸ்துவிற்காக இரத்தச்சாட்சியாக
மரித்தான். ஆதித்திருச்சபையில் அந்திப்பாவின் நடபடிகள் என்றொரு புத்தகம் இருந்தது இவன் பெர்கமு சபையின் மூப்பனாக இருந்திருக்கலாம். வெண்கலத்தினால் ஒரு காளையைச் செய்து அதன் வயிற்றுக்குள் அந்திப்பாவை வைத்து அவளை உயிரோடு எரித்து
பொசுக்கி விட்டார்கள் என்று திருச்சபை வரலாறு கூறுகிறது.

வெறுக்கிறேன் வெளி 2:14-16

வெளி 2:14. ஆகிலும், சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு ; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு.

வெளி 2:15. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு அதை நான் வெறுக்கிறேன்.

வெளி 2:16. நீ மனந்திரும்பு இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவேன்.

பெர்கமு சபையார் கர்த்தருடைய நாமத்தை பற்றி கொண்டிருந்தாலும், கர்த்தரை பற்றும் விசுவாசம் அவர்கள் மறுதலியாமலிருந்தாலும், அவர்களிடத்திலும் சில குறைகள் காணப்படுகிறது ஆவியின் அகத்தமும் மாம்சத்தின் அசுத்தமும் ஐக்கியமாயிருக்கும். இவ்விரண்டும் எப்போதும் சேர்ந்தே காணப்படும். நாம் துன்மார்க்கரோடு ஐக்கியம் வைத்திருந்தால், நமக்குள்ளும் துன்மார்க்கமான சிந்தனைகள் பிரவேசிக்கும். நாமும் துன்மார்க்க கிரியைகளை செய்ய ஆரம்பித்து விடுவோம். ஒருவரிடத்தில் துன்மார்க்கம் இருக்கும்போது அது மற்றவர்களிடத்திலும் பரவும், முடிவில் அது முழுசபையையும் அசுத்தப்படுத்திவிடும்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிலேயாம் பணத்திற்காக துர்ப்போதனை செய்தான். இஸ்ரவேல் புத்திரரை கர்த்தருடைய
சமூகத்தில் இடறப்பண் ணுவதற்கு ஏற்ற போதகத்தை பாலாக் என்பவனுக்கு பிலேயாம் சொன்னான். பிலேயாம் பாலாக்குக்கு இரண்டு ஆலோசனைகளைச் சொன்னான். அவையாவன: 1. விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பது. 2. வேசித்தனம் பண்ணுவது இஸ்ரவேல் புத்திரர்கள் இவ்விரண்டு காரியங்களையும் செய்து கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக இடறிப்போனார்கள். பிலேயாமுடைய
இப்படிப்பட்ட போதகத்தைக் கைக்கொள்கிறவர்கள் பெர்கமு சபையில் இருக்கிறார்கள் இவர்கள் மனந்திரும்ப வேண்டும். இல்லை என்றால்
இவர்களுடைய பாவம் பெர்கமு சபையிலுள்ள மற்ற சபையாருக்கும் பரவும்.

பெர்கமு சபையிலே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தை கைக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய போதகம் இயேசுகிறிஸ்துவினுடைய போதத்திற்கு விரோதமானது. இவர்களுடைய போதகத்தில் சத்தியம், ஜீவனோ இல்லை . இயேசுகிறிஸ்துவின் போதகமோ சத்தியமும் ஜீவனும் உள்ளது. பெர்கமு சபையிலுள்ள சிலர் கிறிஸ்துவின் போதகத்தைக் கைக்கொள்வதற்குப் பதிலாக, நிக்கொலாய்
மதஸ்தருடைய போதகத்தைக் கை கொள்கிறார்கள் இவர்கள் உடனே மனந்திரும்ப வேண்டும். இல்லை என்றால் நிக்கொலாய் மதஸ்தருடைய போதகம் பெர்கமு சபையில் அநேகருக்குப் பரவிவிடும். அந்தக் கள்ள போதகத்தை சபையிலுள்ள அநேகர் கைக்கொள்ள
ஆரம்பித்துவிடுவார்கள். நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தை கர்த்தர் வெறுக்கிறார்.

தவறு செய்கிறவர்கள் காலதாமதம்பண்ணாமல் மனந்திரும்ப வேண்டும். சபையாரும் மனந்திரும்ப வேண்டும். பாவம் செய்கிற தனிநபர்களும் மனந்திரும்பவேண்டும் ஒரு முழு சமுதாயமும் பாவம் செய்யும்போது, அந்த சமுதாயம் முழுவதும் மனந்திரும்ப வேண்டும். பாவத்தை கூட்டாகச் செய்கிறவர்கள் கூட்டாக மனந்திரும்ப வேண்டும். பாவத்திற்குப் பங்காளிகளாகயிருக்கிறவர்கள் மனந்திரும்புவதிலும் பங்காளிகளாகயிருக்க வேண்டும்

கர்த்தர் சபையிலுள்ள துன்மார்க்கரை கண்டிக்கிறார். அவர்களைத் தண்டிக்கிறார். துன்மார்க்கரைத் தண்டிக்கும்போது முழுசபையாரையும் எச்சரிக்கிறார். சபையிலுள்ளவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும். சபைக்குள்ளே கிறிஸ்துவின் சுத்த கவிசேஷம் தெரிவிக்கப்பட வேண்டும். பிலேயாமுடைய போதகத்திற்கு சபையில் இடமில்லை கர்த்தருடைய வார்த்தைகளை கைக்கொள்கிறவர்கள்தான் சபையிலிருக்கவேண்டும்

பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்கிறவர்களை சபையிலிருந்து வெளியேற்றி விட வேண்டும். பரிசுத்தத்திற்கும் அசத்தியத்திற்கும் சம்பந்தமில்லை. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமில்லை. கொஞ்சம் புளித்த மாவு து எல்லா மாவையும் புளிக்க வைத்துவிடும் சபையில் ஒரு சிலர் பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொண்டாலும், அநேகர் அந்தப் போதகத்தைக் கைக்கொள்வதற்கு வாய்ப்புண்டாகும்.

பாவம் செய்கிறவர்களை கர்த்தர் நியாயந்தீர்க்கிறார். தேவனுடைய வார்த்தை கர்த்தருடைய வாயிலுள்ள பட்டயம் இருக்கிறது. தம்முடைய பட்டயத்தினால் கர்த்தர் பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்கிறவர்களோடே யுத்தம் பண்ணுகிறார். பாவிகள் மனந்திரும்ப வேண்டும். தவறான உபதேசத்தைப் பின்பற்றுகிறவர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கர்த்தர் அவர்களிடத்தில் வந்து, தம்முடைய வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம் பண்ணுவார். யுத்தத்தில் எப்போதும் கர்த்தரே ஜெயிக்கிறவர். கர்த்தர் வெறுக்கிற காரியம் எதுவும் அவருடைய சபையில் இருக்கக்கூடாது

பெர்கமு சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. பிலேயாமுடைய போதகத்தைக் கொள்ளுகிறவர்கள்.
2. விக்கிரகங்களுக்கு படைத்தவைகளைப் பிடிக்கிறவர்கள்,
3. வேசித்தனம் பண்ணுகிறவர்கள்
4. நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிற வர்கள்.

பிலேயாமின் மூன்று பாவங்கள்

1. பிலேயாமின் வழி (2பேதுரு 2:15) - அநீதத்தின் கூலியை விரும்பினான்.
2. பிலேயாமின் வஞ்சம் (யூதா 11 - அநீதத்தின் கூலியைப் பெற்றுக் கொண்டான்
3. பிலேயாமுடைய போதகம். (வெளி 2:14) - பாலாக் என்பவனுக்குப் பிலேயாம் தவறாகப் போதகம் பண்ணினான்

மறைவான மன்னா , வெண்மையான குறிக்கல், புதிய நாமம் வெளி 2:17

வெளி 2417. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டது அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் மூன்றுவிதமான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். அவையாவன : 1. மறைவான மன்னா 2. வெண்மையான குறிக்கல் 3. புதிய நாமம்.

மறைவான மன்னா என்பது கிறிஸ்துவின் ஆவியானவருடைய ஆறுதலையும் ஊழியங்களையும் குறிக்கிற வார்த்தை மன்னா வானத்திலிருந்து பூமிக்கு வந்தது மறைவான மன்னாவோ வானத்திலிருந்து நம்முடைய ஆத்துமாவுக்கு இறங்கி வந்திருக்கிறது. உலகத்தாருக்கு இந்த மன்னா மறைவாயிருக்கிறது. இந்த மன்னாவை கிறிஸ்துவில் மாத்திரமே காணமுடியும் ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் இந்த மறைவான மன்னாவை புசிக்க கொடுக்கிறார்.

ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் வெண்மையான குறிக்கல்லைக் கொடுக்கிறார். வெண்மை நிறம் பரிசுத்தத்தைக் குறிக்கிற வார்த்தை வெண்மையான குறிக்கல்லில் பாவத்தின் கரை எதுவுமில்லை பழைய ஏற்பாட்டுக் காலத்தில், நீதிபதிகள் நிரபராதிகளை விடுவித்து, குற்றவாளிகளைத் தண்டிப்பார்கள். ஒருவர் நிரபராதி என்பதை உறுதிசெய்யும் விதமாக, நீதிபதி அவருக்கு வெண்மையான குறிக்கல்லைக் கொடுப்பார். குற்றவாளிக்கோ கருப்பான குறிக்கல்லைக் கொடுத்துவிடுவார்.

கர்த்தர் ஜெயங்கொள்கிறவர்களுக்கு மாசற்ற தூய்மையான வெண்மையான குறிக்கல்லைக் கொடுக்கிறார். அந்தக் கல்லின்மேல் நமக்கு ஒரு புதிய நாமத்தை எழுதுகிறார். இந்தப் புதிய நாமம் நம்முடைய புத்திர சுவிகாரத்தின் நாமமாகும். நாம் மாத்திரமே நம்முடைய நாமத்தை அறியமுடியும் கர்த்தர் வெண்மையான கல்லின் மேல் எழுதியிருக்கிற நம்முடைய புதிய நாமத்தை வேறொருவராலும் அறியமுடியாது. நம்முடைய சுவிகாரத்தின் அடையாளங்களை நம்மால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும் நம்முடைய சுவிகாரம் மற்றவர்களுக்குத் தெரியாது.

வெண்மையான குறிக்கல் பழங்காலத்தில் வெற்றிக்கு அடையாளமான கற்களாக இருந்தது. அத்துடன் மன்னிப்பு, அதற்கான உறுதிமொழி ஆகியவற்றையும் வெண்மையான குறிக்கல் விளக்கிற்று நியாயாதிபதிகளிடம் வெள்ளை நிறக் கற்கள், கருப்பு நிற கற்களும் இருந்தன குற்றவாளியிடம் கருப்புக்கல் கொடுக்கப்பட்டால், அவன் தண்டிக்கப்படுவார். வெள்ளைக்கல் கொடுக்கப்பட்டால் அவன் விடுவிக்கப்படுவாரா. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வெள்ளைக்கற்களில் அவர்களுடைய பெயர்களைப் பதித்து, பரிசாகக் கொடுப்பது வழக்கம். இப்படிப்பட்ட பரிசுகளைப் பெறுகிறவர்களை அரசாங்கமே தன்னுடைய சொந்த செலவில் பாதுகாத்து பராமரிக்கும்.
ஜெயம் பெறுகிறவனுக்கு வெண்மையான குறிக்கல் கொடுக்கப்படும் என்பதற்கு இந்தப் பகுதியில் கூறப்பட்டிருக்கும் அனைத்து வியாக்கியானங்களும் பொருந்தும்.

தியத்தீரா வெளி 2:18-29

வெளி 2:18. தியத்தீரா சபையின் தூதனுக்கு தீ எழுதவேண்டியது என்னவெனில் அக்கினிஜுவாலை போன்ற கண்களும் பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியதை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவானவர் தம்மைப்பற்றிச் சொல்லும்போது, "அக்கினிஜுவாலை போன்ற கண்கள், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் என்று சொல்லுகிறார். இயேசு கிறிஸ்துவின் கண்கள் அக்கினிஜுவாலைபோல பிரகாசமாகயிருக்கிறது. எல்லா நபர்களும், எல்லா காரியங்களையும் கிறிஸ்துவின் பிரகாசமான கண்கள் ஊடுருவி பார்க்கும்.

அவருடைய பாதங்கள் பிரகாசமான வெண்கலம் போல இருக்கிறது. கிறிஸ்துவானவர் பரிபூரண ஞானத்தின் பிரகாரமாக நியாயந்தீர்க்க றவர். பரிபூரணபலத்தினால் கிரியை செய்கிறவர். கிறிஸ்து தம்முடைய நீதியில் நிலைத்து நிற்கிறவர்.

தியத்தீரா துருக்கியின் மேற்கு பகுதியில் பெர்கமுவிற்கும், சர்தையுவிற்கும் இடையில் அமைந்துள்ள பட்டணம்

அறிந்திருக்கிறேன் வெளி 2:19

வெளி 2:19. உன் கிரியைகளையும், உன் -அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.

தியத்தீரா சபை யாரை இயேசு கிறிஸ்து புகழ்ந்து பேசுகிறார். அவர்களைக்குறித்து நற்சாட்சி சொல்லுகிறார். அவர்கள்
நற்கிரியைகளைச் செய்கிறார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவர்கள், தங்கள் விசுவாசத்தை நற்கிரியைகள் மூலமாய் வெளிப்படுத்தவேண்டும். அன்போடு நற்கிரியைகளைச் செய்ய வேண்டும்.

தியத்தீரா சபையார் இயேசு கிறிஸ்துவுக்கு உற்சாகமாய் ஊழியம் செய்கிறார்கள். அவர்களிடத்தில் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் உறுதியாயிருக்கிறது. தேவனுடைய கிருபையை பெற்றிருக்கிறார்கள் நீடிய பொறுமையுள்ளவர்களாயிருக்கிறார்கள். ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெற்று கனிதருகிறார்கள். அவர்கள் முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாக இருக்கிறது. எல்லா
விசுவாசிகளிடத்திலும் இப்படிப்பட்ட வாஞ்சை இருக்க வேண்டும். நாம் ஏற்கெனவே செய்த நற்கிரியைகளை விட, இன்னும் அதிகமாய் நற்கிரியைகளைச் செய்ய வேண்டும்.

தியத்தீரா சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள்
2. அன்பு
3. ஊழியம்
4. விசுவாசம்
5. பொறுமை
6. அதிகமான கிரியைகள்

குறை உண்டு வெளி 2:20-23

ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:20

அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன், தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. 
வெளிப்படுத்தின விசேஷம் 2:21

இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,  வெளிப்படுத்தின விசேஷம் 2:22

அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன், அப்பொழுது நானே உள்ளந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும், அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:23

தியத்தீரா சபையார் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நற்கிரியைகளை அதிகமாய்ச் செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பேரில் கர்த்தருக்கு குறை இருக்கிறது சபையார் மத்தியிலே கள்ளத்தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள் அவர்கள் விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள். வஞ்சிக்கிற கள்ளத்தீர்க்கதரிசிகளை கிறிஸ்துவானவர் யேசபேல் என்னும் ஸ்திரீயானவளோடு ஒப்பிட்டுச் சொல்லுகிறான். அவளை பெயரிட்டு அழைக்கிறார்.

யேசபேல் கர்த்தருடைய ஊழியக்காரர்களை வஞ்சித்தால். அவர்கள் வேசித்தனம்பண்ணவும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்தல். வஞ்சிக்கிற கள்ளத்தீர்க்கதரிசிகள், யேசபேலை போலவே, விசுவாசிகளை வஞ்சித்து பாவத்தின் பாதையிலே வழி நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வஞ்சகர்களை தியத்தீரா சபையார் தங்களுடைய சபையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இடங்கொடுக்கிறார்கள்.

யேசபேல் மனந்திரும்பவேண்டுமென்று கர்த்தர் அவளுக்கு தவணை கொடுத்தார். ஆனால் அவளுக்கோ தன் வேசிமார்க்கத்தைவிட்டு மனந்திரும்ப விருப்பமில்லை. தேவனுடைய பொறுமையை யேசபேல், விசுவாசிகளை வஞ்சிக்கிறவர்களும் அசட்டை பண்ணுகிறார்கள் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி துன்மார்க்கம் பண்ணுகிறார்கள். அவர்கள் மனந்திரும்பும்படியாய் கர்த்தர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர்களோ கர்த்தர் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் அசட்டை பன்னிவிட்டார்கள். இன்னும் மனந்திரும்பாமலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்னும் விருப்பம் இல்லை .

கர்த்தர் நல்லோரையும் பொல்லோரையும் நேசிக்கிறவர் அவருடைய அன்பில் பட்சபாதமில்லை அவர் நீதிமான்களை
நேசிப்பதுபோல பாவிகளையும் நேசிக்கிறார். கர்த்தர் பாவிகளை நேசித்தாலும் அவர்களுடைய பாவங்களை வெறுக்கிறார். யேசபேல் தன்
வேசிமார்க்கத்தைவிட்டு மனந்திரும்புதல் போனபடியால் கர்த்தர் அவளை தண்டிக்கிறார். அவளைக் கட்டில் கிடையாக்குகிறார்.

யேசபேலோடு விபச்சாரம் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பவேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். மனந்திரும்பும்படியாய் அவர்களுக்கும் தவணை கொடுக்கிறார் அவர்கள் மனந்திரும்பாவிட்டால் கர்த்தர் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளுவார்.

கர்த்தர் யேசபேலைத் தண்டிப்பதோடு அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன் என்று சபிக்கிறார். இந்த மரணம் அவர்களுடைய இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது. அவர்கள் நித்திய மரணமடைவார்கள்

கர்த்தர் துன்மார்க்கரைத் தண்டிக்கும் போது, அதைப் பார்த்து. உணர்ந்து நாம் மனந்திரும்பி விட வேண்டும், நமக்கு நல்ல புத்திவர வேண்டுமென்பதற்காக கர்த்தர் துன்மார்க்கரை அழிக்கிறார். அவர்களைத் தண்டிக்கிறார். யேசபேலையும், அவளுடைய பிள்ளைகளையும், யேசபேலோடு விபசாரம் செய்தவர்களையும் கர்த்தர் உபத்திரவத்திலே தள்ளுகிறார். அவர்களைத் தண்டிக்கிறார். அப்பொழுது கர்த்தர் உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும் கர்த்தர் நீதியின் படி தீர்ப்பு செய்யும் போது, அவருடைய சுபாவம் வெளிப்படும்.

கர்த்தர் நம் எல்லோரையும் நோக்கிப் பார்க்கிறார். நம்முடைய கிரியைகளை அவர் ஆராய்ந்து அறிகிறார். ஒவ்வொருவருக்கும்
அவரவருடைய கிரியைகளின்படி கர்த்தர் பலனளிப்பார். துர்க்கிரியைகளைச் செய்கிறவர்களை கர்த்தர் தண்டிப்பார்.
நற்கிரியைகளைச் செய்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

தியத்தீரா சபையில் காணப்படும் குறைபாடுகள்

1. யேசபேலைப் போதிக்கும்படி இடம் கொடுத்திருக்கிறார்கள்.
2. தேவனுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணை அவளுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.
3. விக்கிரகங்களுக்கு படைத்தவைகளைப் புசித்து தேவனுடைய ஊழியக்காரர்களை வஞ்சிக்க அவளுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.
4. தேவனுடைய ஊழியக்காரர்களை வஞ்சிக்கும்படி அவளுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள்.

1இராஜா 18-19 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் யேசபேல், இந்த யேசபேலும் ஒரே நபரல்ல. இவள் தியத்தீரா
சபையிலுள்ள ஒரு ஸ்திரீ தியத்தீரா சபையிலுள்ள ஸ்திரீக்கு மனந்திரும்புவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவள் மனந்திருந்தவில்லை.

வேதாகமத்தில் வேசித்தனம் என்பது பல பொருளுடையது. அவையாவன:

1. திருமணமானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள் செய்யும் விபச்சாரம் (மத் 5:32)
2. விக்கிரகாராதனை யும், விக்கிரகாராதனை யின் ஒரு பகுதியாக விபச்சாரம் பண்ணுவதும் (2 நாள் 21:11)
3. சரீரப்பிரகாரமான வேசித்தனம் யோவான் (8:41) 
4. ஆவிக்குரிய வேசித்தனம் (எசே 16:15,26 29)
5. சுயபுணர்ச்சியும், ஆண்புணர்ச்சியும் (1கொரி 6:9-11)
6. ஒரு சிலர் வேசித்தனம் என்பது திருமணமாகாதவர்கள் செய்யும் உடலுறவு பாவம் என்று கூறுகிறார்கள்.

யேசபேலின் நிமித்தம் கொடுக்கப்படும் நியாயத்தீர்ப்பின் மூன்று அம்சங்கள்

1. நான் அவளைக் கட்டில் கிடையாக்குவேன். (யோபு 33:19)
2. அவளுடன் விபச்சாரம் செய்பவர்களை மிகுந்த உபத்திரவத்திலே தள்ளுவேன்.
3. அவளுடைய பிள்ளைகளைக் கொல்லவே கொல்லுவேன் (வெளி 2:23)


சாத்தானுடைய ஆழங்கள் வெளி 2: 24.25

தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:24

உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். 
வெளிப்படுத்தின விசேஷம் 2:25

சபையார் மத்தியிலே யேசபேலைப்போல வஞ்சிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய துர்உபதேசத்திற்குச் செவி கொடுக்காமல், தங்களைத் தீட்டுப்படுத்தாமல், தங்களை பரிசுத்தமாய்க் காத்துக்கொள்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார். வஞ்சிக்கிறவர்கள் தங்கள் வார்த்தைகளினால், கிரியைகளினாலும் விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள். வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் இவர்கள் விசுவாசிகளுக்குப் போதித்து அவர்களை வஞ்சிக்கிறார்கள்.

தங்களுடைய வஞ்சகமான போதகத்தை "சாத்தானுடைய ஆழங்கள்" என்று பேரிட்டு அழைக்கிறார்கள். இவர்களுடைய உபதேசம்
துன்மார்க்கமாய் இருக்கிறது. தங்களுடைய போதகத்தை இவர்கள் இரகசியமான ஆழங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்
ஆழத்தில் இருள் தான் இருக்கும். வெளிச்சம் இருக்காது.

கர்த்தரோ வஞ்சிக்கிறவர்களின் உபதேசத்தை, ஆழமான இரகசியம் என்று சொல்லவில்லை அதற்குப் பதிலாக அவர்களுடைய போதகத்தை சாத்தானுடைய ஆழங்கள் என்று சொல்லுகிறார். இதற்கு சாத்தானுடைய ஏமாற்றுத்தனம் சாத்தானுடைய வஞ்சகம் என்று பொருள் சொல்லலாம்.

கர்த்தருடைய விசுவாசிகள் வஞ்சிக்கிற உபதேசங்களுக்கு செவி கொடுக்க மாட்டார்கள். அவர்கள் ஆழங்கள் என்று சொல்லுவதை விசுவாசிகள் அறிந்துகொள்ளாமலிருக்கிறார்கள். சாத்தானுடைய ஆழங்களுக்கு பங்காளிகளாகயிராதவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். அவர்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன் என்று வாக்குப்பண்ணுகிறார். விசுவாசிகளிடத்தில் கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம் இருக்கிறதா. கர்த்தர் வருமளவும் அவர்கள் தங்களிடத்திலுள்ள விசுவாசத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும் விசுவாசத்தோடு தங்களுடைய நல்மனச்சாட்சியையும் அவர்கள் உறுதியாய்ப் பற்றிக் கொள்ள வேண்டும். கர்த்தர் வரும்போது நம்முடைய எல்லா ஆபத்துக்களும், எல்லா வேதனைகளும், எல்லா கஷ்டங்களும் நம்மை விட்டு நீங்கிப்போகும்.

ஞான மார்க்கத்தார் தங்களுடைய உபதேசங்களைத் தேவனுடைய ஆழங்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். இயேசு
கிறிஸ்து அந்த உபதேசத்தைச் சாத்தானுடைய ஆழங்கள் என்று அழைக்கிறார்.

எல்லா விசுவாசிகளும் செய்ய வேண்டிய காரியங்கள்

1. நமக்குள்ளதை கிறிஸ்து வருமளவும் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். (வெளி 2:25; எபி 3:6)
2. ஜெயங்கொள்ள வேண்டும். (வெளி 2:26; வெளி 2:7,11 17 ; வெளி 3:5).
3. முடிவுபரியந்தம் கிறிஸ்துவின் கிரியைகளைக் கைக்கொள்ள வேண்டும். (வெளி 2:26)

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு வாக்குப் பண்ணப்பட்டிருக்கிறவைகள்

1. ஜாதிகளின்மேல் அதிகாரம் (வெளி 2:26)
2. இருப்புக்கோலால் ஜாதிகளை ஆளுதல். (வெளி 2:27)
3. எதிர்க்கும் மண்பாண்டங்களைப் ஜாதிகளை போல நொறுக்குதல் (வெளி 2:27)
4. விடிவெள்ளி நட்சத்திரம். (வெளி 2:28)

எல்லாப் பரிசுத்தவான்களும் கிறிஸ்துவின் கீழ் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் இருந்து பூமியை நித்திய காலமாக ஆளுகை செய்வார்கள்.

சாதிகள் மேல் அதிகாரம் விடிவெள்ளி நட்சத்திரம் வெளி 2:26-29 

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:26

அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:27

விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:28

 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.  வெளிப்படுத்தின விசேஷம் 2:29

ஜெயங்கொள்கிறவனுக்கு கர்த்தர் ஆசீர்வாதம் சொல்லுகிறார். ஜெயங்கொள்கிறவர்கள் முடிவுபரியந்தம் கர்த்தருடைய கிரியைகளை கைக்கொள்ளவேண்டும். கர்த்தர் ஜெயங்கொள்கிறவர்களுக்கு சாதிகள் மேல் அதிகாரங்கொடுப்பார். கர்த்தர் கொடுக்கிற வல்லமையும் அதிகாரமும் மிகவும் உன்னதமானது இந்த உலகத்தின் மீது ஜெயங்கொள்கிற விசுவாசிகளுக்கு கர்த்தர் ஆளுகை செய்கிற அதிகாரத்தைக் கொடுப்பார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடமிருந்து அதிகாரம் பெற்றிருக்கிறார். தாம் பிதாவிடத்திலிருந்து
அதிகாரம் பெற்றதுபோலவே, கிறிஸ்துவானவர் ஜெயங்கொள்கிறவர்களுக்கு சாதிகள் மேல் அதிகாரங்கொடுப்பார்.

-ஜெயங்கொள்கிறவர்கள் ஜாதிகளை இருப்புக்கோலால் ஆளுகை செய்வார்கள். இவர்கள் ஜாதிகளை மண்பாண்டங்களைப்போல நொறுக்கி போடுவார்கள். மண்பாண்டங்களால் இருப்புக்கோலை எதிர்க்க முடியாது இருப்புக்கோல் மண்பாண்டத்தில் பட்டாலும், மண்பாண்டம் இருப்புக்கோல்மீது பட்டாலும், மண்பாண்டமே நொறுங்கிப்போகும். ஜெயங்கொள்கிறவர்கள் ஜாதிகளை இருப்புக்கோலால் ஆளுகை செய்யும்போது, அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் அறிவையும், ஞானத்தையும், வல்லமையையும் கொடுப்பார்.

ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பார். கிறிஸ்துவானவரே விடிவெள்ளி நட்சத்திரம், அவர் வரும்போது பொழுதுவிடியும். இருள் நீங்கும் பகல் பொழுது ஆரம்பமாகும் கிறிஸ்துவானவர் நம்முடைய ஆத்துமாவிற்குள் பிரவேசிக்கும்போது, நம்முடைய ஆத்துமாவின் இருள் நம்மைவிட்டு நீங்கிப்போகும். தேவனுடைய தெய்வீக பிரசன்னம் நம்முடைய
ஆத்துமாவில் பிரகாசமாக இருக்கும். விடிவெள்ளியின் வெளிச்சம் தேவனுடைய கிருபையையும் அவருடைய மகிமையையும் நமக்குக் கொடுக்கும்.

கர்த்தர் -சொல்லுவதை நாம் செவிகொடுத்து கேட்கவேண்டும். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை எல்லா விசுவாசிகள் கேட்க வேண்டும். காதுள்ளவன் என்னும் வார்த்தை கேட்கும் ஆற்றலுடைய எல்லா விசுவாசிகளையும்
குறிக்கிற வார்த்தை. கர்த்தருடைய வார்த்தையை எல்லோரும் கேட்க வேண்டும். கேட்கிறவர் எல்லோரும் கீழ்ப்படியவேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.