வெளிப்பாடு - REVELATION
தேவன் தம்மைப்பற்றி ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது. தேவன் தம்முடைய சுபாவம்,இரட்சிப்பைக் குறித்த தமது திட்டம் ஆகியவற்றை மனுஷருக்கு வெளிப்படுத்துகிறார்.
தேவன் ஆவியாக இருக்கிறார். அவர் பரிசுத்தமுள்ளவர். மனுஷருடைய கண்களாலும், பாவமுள்ள மனதினாலும் தேவனை தரிசிக்க முடியாது ஆனாலும் தேவன் மனுக்குலத்தின்மீது கிருபையாக இருந்து மனுஷருக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார்.
இயற்கையின் மூலமாகவும், மனுஷருடைய மனசாட்சியின் மூலமாகவும் தேவன் மனுஷருக்கு நன்மை, தீமையை வேறுபிரித்து காண்பிக்கிறார். தேவன் சர்வஞானம் உள்ளவர். அவருடைய மகிமையை எல்லோருக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார் (சங் 19:1-6)
இயேசு கிறிஸ்து மூலம் தேவன் தம்மை மனுஷருக்கு பரிபூரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார் "பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாக வும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரை கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார் (எபி 1:1-2).
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோவா 118). அதற்கு இயேசு: பிலிப்புவே இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்" (யோவா 14:9), “நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்" (யோவா 17.8)
"ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே
கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் (1பேது 3:18).
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களை தெரிந்தெடுத்து தம்முடைய மரணத்தையும், தம்முடைய உயிர்த்தெழுதலும் மனுஷருக்கு உபதேசம் பண்ண பயிற்சிகொடுத்தார். அவர்கள் சபையை ஸ்தாபித்து புதிய ஏற்பாட்டுப் புஸ்தகங்களை எழுதினார்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கண்ணாரக்கண்ட அவர்களுடைய வார்த்தைகளை நாம் விசுவாசிக்கவேண்டும் பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்" (2பேது 3.2).
கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே இரட்சிப்பிற்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறு வயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்" (2 தீமோ 3:15)
வெளிப்படுத்தின விசேஷம்
புதிய ஏற்பாட்டின் வரலாற்று யும், அதன் சட்ட நூல்களையும் வெளிப்படுத்தின விசேஷம் முடித்து வைக்கிறது. எழுதப்பட்ட வரிசையில் அது முந்தினதாகவோ அல்லது இறுதியானதாகவோ எப்படி இருந்தாலும், அதன் சிந்தனைகளைப் பொறுத்தவரை, அது இறுதியானது. ஏனெனில் பூமியில் ஒரு அமைப்பாக நிறுவப்பட்டுள்ளதும், தன் பணி நிறைவுற ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதுமான திருச்சபையின் எதிர்பார்ப்பை அது தன்னகத்தே கொண்டுள்ளது. பல வழிகளில் வெளிப்படுத்தின விசேஷம் தனிச் சிறப்பு வாய்ந்தது. புதிய ஏற்பாட்டில்
தீர்க்கதரிசனத்துக்கென்றே முழுவதுமாய் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே புத்தகம் இதுதான்.
அதில் சொல்லப்பட்டுள்ள உருவகங்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனப் புத்தகங்களில் காணப்படும் உருவங்களை ஒத்துள்ளன. அதன் பொருளடக்கத்தின் பெரும்பகுதி எதிர்காலத்தைப் பற்றி முன்னுரைக்கிறது. தனக்குக் கடைசி தரிசனம் கொண்டு வந்த தூதுவன் "சீக்கிரமாய்ச் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர்" என்று இந்நூலாசிரியர் வெளிப்படையாக அறிவிக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் 22:6 தொடர்ந்து வரும் அடுத்த வசனத்தில் இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்கள் என்று குறிப்பிடுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் உலகத்தின் எதிர்காலம் குறித்து முன்னுரைக்கும் தீர்க்கதரிசன வசனங்களைக் கொண்ட இலக்கியங்களின் வகையைச் சேர்ந்தது. இத்தகைய தீர்க்கதரிசன இலக்கியங்கள் பொதுவாக நெருக்கமும் உபத்திரவமும் நிறைந்த காலத்தில் தங்கள் விசுவாசத்துக்காகத் துன்பம் அனுபவிப்போரை உற்சாகப்படுத்தும் வகையில் எழுதப்பட்டன. அவைகளில் பொதுவாக, பின்வரும் அம்சங்கள் காணப்பட்டன.
- 1. நிகழ் காலத்தில் பயங்கரமான துன்பச் சூழ்நிலையும் அதே அளவுக்கு எதிர் காலத்தில் தெய்வம் அவர்களுக்காக இடைப்படப் போவதற்குரிய நம்பிக்கையும்
- 2. உருவக மொழி நடை, கனவுகள் தரிசனங்கள்.
- 3. தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிற முன்னேற்றப் பணியில் வானுலக சக்திகளும் பிசாசின் சக்திகளும் அறிமுகப்படுத்தப்படுதல்,
- 4. துன்மார்க்கர் களுக்கு அழிவு தரும் நியாயத் தீர்ப்பும் நீதிமான்களுக்கு இயற்கைக்கு மேலான விடுதலையும்
- 5. ஆக்கியோன் புனைபெயர் வேத சரித்திரத்திலிருந்து புகழ் பெற்ற நபரின் பெயரை எடுத்துக்காட்டாக எஸ்றா (2 எஸ்ட்ராஸ் அல்லது ஏனோக்கு ஏனோக்கின் புத்தகம் பயன்படுத்துதல்
வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் இந்த இயல்புகளில் பெரும்பான்மையானவை உள்ளன. ஆனால் நூலாசிரியர் தமது பெயரை அறிவிக்கிறார். கடந்த காலத்தில் ஒரு புகழ் பெற்ற நபராகவும், நிகழ் காலத்தில் அவர் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களின் சுக துக்கங்களில் பங்கு பெற்றவராகத் தம்மை அவர் கருதுகிறார்.
இந்த நூலின் உள்ளடக்கத்தைப் படித்தால், அதிலிருந்து, இந்நூல் எந்தச் சூழ்நிலையில் எழுதப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இது ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதப்பட்டுள்ளது அவை சில காலம் இருந்த. அவைகளில் ஆவிக்குரிய எழுச்சியும், வீழ்ச்சியும் இடம் பெற்றன. உபத்திரவம் சீக்கிரம் வரும் அல்லது ஏற்கனவே வந்து விட்டது என்னும் குறிப்புகள் இந்த திருச்சபைக்கு எழுதப்பட்டுள்ள நிருபங்களில் உள்ளன. சிமிர்னா சபை உபத்திரவ படப் போகிறது" பத்து நாள் உபத்திரவம் இருக்கும்" (வெளிப்படுத்தின விசேஷம் 2:10 பெர்கமுலில் அந்திப்பா இரத்தச் சாட்சியாகக் கொலை செய்யப்பட்டான் (2:13) பிலதெல்பியா "உபத்திரவ காலத்துக்குத் தப்புவிக்கப்படும் ( இந்தப் பகுதிகளெல்லாம் எதிர்காலத்தைக் குறித்தாலும் கூட, வெளிப்படுத்தின விசேஷத்தின் சுற்றுச் சூழ்நிலை எதிர்ப்பையும், நெருக்கத்தையுமே பற்றிப் பேசுகிறது இந்நூலின் முக்கிய பகுதியில் அதன் பின்னணியின் சாதாரண நிலைகளாக பஞ்சம், போர் கொள்ளை நோய், பொருளாதார நெருக்கடி ஆகியவையே கருதப்படுகின்றன.
கிறிஸ்தவத்துக்கு எதிரியாக வெளிப்படுத்தின விசேஷம் கூறும் அரசாட்சிக்கு ரோமே மாதிரியாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும்,
பாஷைக்காரர் 'மேலும், ஜாதிகள் மேலும்" மிருகத்துக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 13.7 அதனுடைய மாதிரி சீசர்களின் கீழ் ஒரே குடையின் கீழாக ஆட்சி செய்த ரோமில் இருந்தது. கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டியதற்காக கட்டாயமாக மனுஷருக்கு அளிக்கப்படும் முத்திரை, 13:16-17), உயில்கள், ஒப்பந்தங்கள், விற்பனை ரசீதுகள் போன்ற மற்றும் பல பத்திரங்கள் சட்ட பூர்வமான அங்கீகராம் பெற்றதாக ஆவதற்கு ரோம ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட ராஜ முத்திரை பெற வேண்டும் மகா பாபிலோன் என்னும் வேசி பரிசுத்தவான்கள், இரத்தச் சாட்சிகள் ஆகியோரிடையே இரத்தத்தினால் வெறி கொண்டவளாக ஏழுமலைகளின் மேல் உட்கார்ந்திருக்கிறாள் (17:19). இந்த எண் ரோமில் உள்ள மலைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இறுதிக் காலத்தில் இந்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள் ரோமைக் குறித்தாலும் குறிக்காவிட்டாலும், முதலில் கிறிஸ்தவர்களால் வாசிக்கப்பட்டபோது அது நிச்சயமாக ரோமுக்குத் தான் பொருத்தமாக இருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் எந்தக் காலத்துக்காக எந்தச் சூழ்நிலைக்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றி இரண்டு வகையான கருத்துகள் உள்ளன ஒரு கூட்டத்தினர், ரோம் பற்றியெரிந்த தினால் கிறிஸ்தவர்களினுடைய உபத்திரவக் காலம் தொடங்கின நீரோவின் காலத்தைக் குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆதரவாக முக்கியமாக இரண்டு கருத்துக்கள் உள்ளன செபதேயுவின் குமாரனான யோவான்தான் வெளிப்படுத்தின விசேஷம் அத்தையும். யோவான் சுவிசேஷம், நிருபங்கள் ஆகியவற்றையும் எழுதினாரெனில், இவைகளுக்கிடையில் திட்டம் தெளிவான வேறுபாடு மொழியில், மொழி நடையிலும் காணப்படுகிறது. இதற்குக் காரணம். யோவான் கிரேக்க மொழியில் புலமை பெறுவதற்கு முன், ஆரம்பக் காலத்தில் வெளிப்படுத்தின சுவிசேஷம் எழுதப்பட்டிருக்க வேண்டும் சுவிசேஷம் நிருபங்களும், பிற்காலத்தில் யோவான் கிரேக்க மொழியில் நல்ல திறமை பெற்ற பின்னர் எழுதப்பட்டிருக்கும். மேலும் அந்த மர்ம எண்ணான அறுநூற்று அறுபத்தாறு (வெளிப்படுத்தின விசேஷம் 13.8) நீரின் கெசார் (Neron Keser) என்னும் பெயரை எபிரெய எழுத்துக்களில் எழுதி அவற்றின் எண் மதிப்புகளை கூட்டும் போது கிடைக்கும் தொகை என்றும் அதனால் அந்த அதிகாரத்தில் விவரிக்கப்படும் நபர் நீரோவாக இருக்கக் கூடுமென்றும் கருதப்படுகிறது. இத்தகைய வலுவற்ற காரணங்கள் குறிப்பாக எந்த விதமான பாரம்பரிய ஆதரவும் புறத்தே இல்லாத போது. இவைகளைக் கொண்டு ஒரு திட்டமான முடிவை அடையப் போதுமானவையல்ல.
இரண்டாவதாக இந்த தீர்க்கதரிசன நூல் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் டொமிடியனின் ஆட்சிக் காளையாகிய கி. 81 முதல் 96 வரையுள்ள காலத்தில் எழுதப்பட்டதெனக் கருதப்படுகிறது. இவ்வாறு காலம் குறிப்பதற்கு வெளிப்படையான புற ஆதாரம் (வேதத்துக்கு வெளியான ஆதாரம் யோவான், ரொம்பக் காலத்துக்கு முன்னர் அல்ல.
ஏறத்தாழ நமது காலத்திலேயே டொமிடியனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் தமது தரிசனம் கண்டேன்" என்றும் கருத்து உள்ளது. டொமிடியனின் ஆட்சியில் உபத்திரவ காலம் தொடர்ந்து நீண்ட காலம் இருக்கவில்லை. ஆனால் அவன் தன்னையே எல்லாரும் தெய்வமாக வணங்க வேண்டுமென்றான். அவனுடைய சர்வாதிகார ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருந்தது. இவையெல்லாம் அவனைக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு எதிரான நிலையில் கொண்டு வைத்தது. மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசனமாக உடைக்கப்பட்டுள்ளது போன்ற சமுதாய பொருளாதார, சமய நிலைகள் வளரக் கூடுமென்பதற்கு முன்னடையாளங்களாகவும் இருந்தது.
எனவே, ரோம ராஜ்யத்துக்கும் திருச்சபைக்குமிடையே வளர்ந்து வந்த பகைக்கு வெளிப்படுத்தின விசேஷம் சாட்சியாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்த வேண்டும் என்னும் ஒரு கொள்கை உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்பட்டது அது கூறவில்லை. ஆனால் தேவனற்ற ஒரு ராஜ்யத்துக்கும், கிறிஸ்தவத் திருச்சபைக்கும் ஒரு போதும் ஒத்துப் போகாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தேவனற்ற தன்மையின் விளைவு சர்வாதிகாரத்தனம். இது எல்லா அரசியல் உறவுகளையும், எல்லாப் பொருளாதார ஆதாரங்களையும், எல்லா சமய அனுசாரங்களையும் எல்லாத் தனிப்பட்ட தொழுகைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆட்சியாளரை வணங்குவதற்கு கட்டாயம் பண்ணும். ஆதித் திருச்சபை இடம் ரோம் காட்டி வந்த சகிப்புத் தன்மை, யூதத் தலைவர்களால் பவுல் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட போது சந்தேகமாக மாறியது.
பின்னர் இந்தச் சந்தேகம் இன்னும் ஆழமாகி எரிச்சல் நிறைந்த வெறுப்பாகியது. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்கள் எங்கும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையிலிருந்தனர். "நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும். நீங்கள் உலகத்தாராயிராத படியினாலும் நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்ட படியினாலும் உலகம் உங்களைப் பகைக்கிறது" (யோவான் 15:19) என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளின் சத்தியத்தை - அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள் அறிய இவ்வாறு வளர்ந்து வரும் பகையை உணர்ந்து கொண்டிருந்த திருச்சபைகள் ஊக்குவிப்பதற்காகவும், உலகத்தோடு எளிதில் ஒத்து வாழவேண்டுமென்று எண்ணி கவலையாகவும் அலட்சியமாகவும் வாழும் சோதனைக்குள் விழுந்து விட்ட கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாகவும் வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்டது. முடிகின்ற நூற்றாண்டின் கடைசிக் குரல் இது.
நூலாசிரியர், அவரே கூறுவது போல், யோவான் என்னும் பெயரை உடையவர். தான்கண்ட காரியங்களுக்கு கண்கண்ட சாட்சியாக இருப்பவர் வெளிப்படுத்தின விசேஷம் 112 அவர் தமது விசுவாசத்துக்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்த பத்மு தீவில் இருந்தார். இது கிரீசின் கடற்கரைக்கு அப்பால் உள்ளதொரு தீவு (1:9 அவர் அங்கு இருக்கும் போது, அவர் விவரிக்கின்றன இந்தத் தரிசனம் அவருக்குக் கொடுக்கப்பட்டு, தமக்கு அறிமுகமான ஆசியாவின் ஏழு திருச்சபைகளுக்கும் அவைகளை அனுப்ப வேண்டுமென்ற கட்டளையும் அவருக்கு அருளப்பட்டது.
இந்த வெளிப்படுத்துதலின் நூலில் கிரேக்க மொழி சில இடங்களில் மோசனமானதாகவும் இலக்கண வரம்புக்கு உட்படாததாகவும் உள்ளது. நூலாசிரியர் சாதாரண மொழியைக் கொண்டு விவரிக்க முடியாத காட்சிகளை மனிதனின் வரம்புக்குட் பட்ட மொழியைக் கொண்டு விவரிக்க முயற்சிக்கிறார் என்பதை மனதில் கொள்ள வேண்டும் அதன் விளைவாகவே அவருடைய இலக்கண அறிவும், சொற்களஞ்சியம் இந்த முயற்சிக்குப் போதுமானதாக இல்லை. மேலும் அவர் அநேகமாக அராமிய மொழி பேசு பாரம்பரிய வழி சேர்ந்தவர் எனவே கிரேக்க மொழியில் விஷயங்களை வெளிப்படுத்துவதில் அவருக்கு சிரமம் இருந்திருக்கக் கூடும். குவிசேஷங்களும் நிருபங்களும் எழுதப்பட்ட போது அவருக்கு ஒரு திறமை வாய்ந்த உதவியாளர் இருந்திருந்தால், வெளிப்படுத்தின விசேஷம் அவர் தாமாகவே எழுதியிருக்க மாட்டார்என்று கூறி, இந்த வித்தியாசங்களை எளிதில் விளக்கு விடலாம்.
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கப்பட வேண்டியது. நேரடியான எந்தக் குறிப்பும் தெரியாவிட்டாலும் பழைய ஏற்பாட்டுக் குறிப்புகள் ஏறத்தாழ நானூறு இந்நூலில் உள்ளன அதனுடைய உவமானங்களும் திட்ட அமைப்பும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களுடன் தொடர்புடையது. அவைகள் அதன் பொருளைப் புதிய சூழ்நிலையுடன் இணைகின்றன. ஆசியாவின் ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்படும். நியாயத் தீர்ப்பின் மூலம் திருச்சபையின் ஆவிக்குரிய நிலைமை பற்றிய ஒரு மதிப்பீட்டைத் வெளிப்படுத்தின விசேஷம் தருகிறது. தொடர்ந்து வரும் தரிசனங்கள் எம்முறையில் அவை விளக்கப்படும்-இந்தத் தரிசனங்களின் தொகுப்பு தேவனுடைய நோக்கத்தின் மொத்த வடிவமாகும். அதன் குறியீடுகள் எவ்வளவு விசித்திரமானவையாக இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றி ஒரு ஒழுங்காக அமைக்கப்பட்ட முன்னறிவிப்பு தரும் நூல் புதிய ஏற்பாடு முழுவதிலும் வெளிப்படுத்தின விசேஷம் மட்டுமேயாகும்.
விளக்கங்கள்
தற்கால விளக்கவுரையாளர்களில் வெளிப்படுத்தின விசேஷ நூலுக்கு நான்கு
வகையில் விளக்கம் தருகின்றனர்.
1. கடந்த காலத்தை பற்றியது என்பவர்கள்
இந்த வகையினர் வெளிப்படுத்தின விசேஷத்தின் குறியீடுகள் அது எழுதப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளையே குறிக்கும் என்று கருதுகின்றனர். முத்திரை, எக்காளம் கலசம் போன்ற எல்லா உருவகங்களுக்கும் எதிர்காலத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதவை. எதிர்காலத்தில் வரும் நியாயத் தீர்ப்பைப் பற்றிக் கூறும்போது, தமது காலத்தில் ஏற்பட்ட துன்பங்களினால் தமக்கு உண்டான நியாயமான கோபத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சுதந்திர நோக்குடைய கல்விமான்களில் பெரும்பான்மையோர் இவ்வாறு கருதுகின்றனர். இதன்படி பார்த்தால் வெளிப்படுத்தின விசேஷத்தை அது எழுதப்பட்ட காலத்தின் வரலாற்று நிகழ்ச்சிகளுடன் தொடர்புபடுத்திக் காணக்கூடும் ஆனால் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனத்துக்கு இடமேது மில்லை.
2. உயர்ந்த கருத்துடையோர்
இந்த வகையினரின் கருத்து கடந்த காலத்தைப் பற்றியது என்பவர்களுடைய கருத்துடன் நெருங்கிய தொடர்புடையது. நன்மைக்கும், தீமைக்கும். கிறிஸ்தவத்துக்கும் வேறு மதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு போராட்டத்தை குறிக்கும் படம் வெளிப்படுத்தின விசேஷம். வெளிப்படுத்தின விசேஷத்தின் குறியீடுகள் எல்லாம் கடந்த காலத்திலோ அல்லது வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறிப்பவை அல்ல அவை வெறுமனே நிலைகள், அல்லது கருத்துக்களே. இப்பிரிவினரின் பொதுவான விளக்கமாவது:
இப்போது வெளிப்படுத்தல்" என்ற சொல்லின் பொருள் என்னவென்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இது உலகத்தின் இறுதியில் வரப்போகும் எதிர்கால மர்மங்கள் அல்ல ஆயிரம் வருஷ அரசாட்சி யோ, அல்லது நியாயத்தீர்ப்பையோ குறிப்பதல்ல. பரலோகத்தின் மகிமைகளையும் இரட்சிக்கப்பட்டவர்களின் ஆசீர்வாத நிலையையும் குறிப்பதுமல்ல. இது ஆதி அந்த மற்ற இரட்சிப்பதற்கு வல்லமையுள்ள தேவனின் வெளிப்படுத்துதல் தேவனுடைய பிள்ளைகள் ஆறுதலும் உற்சாகமும் அடையத்தக்கதாக சர்வ வல்லமை கொண்ட தேவனின் எல்லாவற்றையும் ஜெயிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவது என்பதாகும்.
இவ்வாறாக இந்த வகையினர் தரும் விளக்கத்தினால் வாசகருடைய கவனம்
விவாதத்துக்குரிய குறியீடுகளின் புறமாகத் திரும்பாமல் வெளிப்படுத்தின விசேஷத்தின் பூமிக்குரிய ஆவிக்குரிய சத்தியங்கள் மீது ஒருங்க வைக்கப்படுகிறது. அதே சமயம் இவ்வாறு உருவகப்படுத்திக் கூறும் முறை, தீர்க்கதரிசன முன்னறிவித்தலுக்கு ஒரு வாகனம் போன்றது என்ற உண்மையைக் குறைவாக மதிப்பிட்டு விடுகிறது. இந்தக் கருத்து வெளிப்படுத்தின விசேஷத்தை முற்றும் ஆவிக்குரிய கருத்துடையதாகவே செய்து விடுவதால் அதனுடைய முன்னறிவிக்கும் மதிப்பு அனைத்தையும் எடுத்து போடுகிறது. மேலும் வரலாற்றுத் தொகுப்பிலிருந்து வெளிப்படுத்தின விசேஷத்துக்கு எந்தக் சம்பந்தமுமின்றி அதைத் தனியே பிரித்து விடுகிறது. நியாயத் தீர்ப்பு நாள் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டவராக கிறிஸ்து நாம் கண்ணால் காணக்கூடிய சிங்காசனத்திலேறும் நாள் அல்லவென்பதும் ஒரு பெரிய நன்னெறிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் நாள் என்பதும் இவர்களின் கொள்கை.
3. வரலாற்று விளக்கம் தருவோர்
வெளிப்படுத்தின விசேஷம் பெந்தெகோஸ்தே நாள் முதல் கிறிஸ்துவின் வருகை வரை திருச்சபையின் சரித்திரத்தை குறியீடுகளால் வடிவமைத்துக் காட்டுகிறது என்று, அதற்கு வரலாற்று விளக்கம் தருபவர்கள் கூறுகின்றனர். குறியீடுகள் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளை வரிசையாகக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, முத்திரைகள், ரோம சாம்ராஜ்யம் ஆழம் தெரியாத குழியிலிருந்து வெட்டுக்கிளிகள் வருவது முகமதியப் படையெடுப்பு என்பதைப் போல கிறிஸ்தவ வரலாற்றில் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் இவ்வாறு முன் நிழலாய்க் குறித்து வைக்கப்பட்டிருப்பதனால், வெளிப்படுத்தின விசேஷம், நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் முன்னரே குறித்து வைக்கப்பட்டிருக்கும் நாட்காட்டியாகிறது. வெளிப்படுத்தின விசேஷத்தை ஆராயும் போது பல சீர்திருத்தவாதிகளும் பண்டைய விமர்சினங்களில் பெரும்பகுதியும், ஏ.ஜெ. கோர்டன், ஏ.பி. சிம்சன் போன்ற தற்காலப் பிரசங்களும் கூட இதே கருத்தைக் கூறுகின்றனர். இதற்கு முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரமாக, வெளிப்படுத்தின விசேஷம் 4:1 ல்------"இங்கே ஏறி வா. இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்கு காண்பிப்பேன்-"என்னும் வசனம் உள்ளது உயர் கருத்துடையோர் விளக்கத்தை விட, வரலாற்று விளக்கம் தருவோரின் கருத்து சரியானதாகவே உள்ளது. ஆனால் ஒவ்வொரு குறியீடும் எதனைக் குறிக்கிறது என்பதில் இதன் ஆதரவாளர்களுக்கிடையே ஒரு ஒருமைப்பாடு இல்லை. வரலாற்று விளக்கம் தருவோரிடையே எத்தனை விமர்சகர் உண்டோ அத்தனை விளக்கங்களும் உண்டு, எல்லாமே சரியானதாக இருக்க முடியாது. அவைகளுக்கிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுவதால் அவர்கள் பயன்படுத்தும் முறைகளிலேனும் தவறு இருக்கும்.
4. எதிர்கால விளக்கம் தருவோர்
வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் அந்த நூல் எழுதப்பட்ட காலத்துக்குப் பொருத்தமானவை அல்ல. ஆசியாவின் ஏழு சபைகள் என்பன அப்போஸ்தலர் காலத்தையும் கிறிஸ்துவின் வருகையையும் இணைக்கும் பாலமாக இவற்றுக்கிடையே உள்ள திருச்சபை வரலாற்றின் ஏழு காலக்கட்டங்களைக் குறிக்கின்றன என்று வெளிப்படுத்தின விசேஷத்துக்கு எதிர்கால விளக்கம் தருவோர் கூறுகின்றனர். இந்த அளவில் நோக்கும் போது எதிர்கால விளக்கம் தருவோரும் ஒரு வகையில், வரலாற்று விளக்கம் தருபவர்களே "இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை என்னும் (4:1) சொற்றொடரில் ஆரம்பித்து, அதன் பின் இந்நூலில் வரும் விஷயங்களெல்லாம் "மகா உபத்திரவ காலம்" என்னும் காலக் கட்டத்தில் நடைபெறுபவை என்று இவர்கள் கூறுகின்றனர். இந்தக் கால கட்டம் கிறிஸ்துவின் வருகைக்குச் சற்று முந்தின காலம். இது மூன்றரை முதல்
ஏழாண்டுகள் வரை இருக்கலாமென்று பல்வேறாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு அவற்றில் உள்ளபடியே விளக்கம் தரப்பட்டுள்ளது. மேற்கூறிய கால கட்டத்தில் அதாவது எதிர் காலத்தில்தான் அவை நடைபெற இருக்கின்றன. ஜே.ஏ. செசிஸ், சிஐ. ஸ்காஃபில்டு, ஏ.சி காப்லெய்ன் எச்ஏ. அயர்ண்சைட் போன்ற பல விளக்கவுரையாளர்களும் எதிர்கால விளக்கம் தருவார்.
5. ஆயிர வருஷ அரசாட்சி பற்றிய கருத்துக்கள்
வரலாற்று நோக்கை விட்டு, மரணத்துக்குப்பின் வாழ்க்கை என்னும் நோக்கில் அணுகும் போது வெளிப்படுத்தின விசேஷம் மூன்று வகைப்பட்ட கருத்துக்களைத் தருகிறது. இவை இருபதாம் அதிகாரத்தைக் குறித்து பல்வேறு வகைப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் உண்டானவை. இந்த விளக்கங்களின் சுருக்கம் ஆயிரம் வருஷம் என்பது நிஜமாகவே எண் வழக்குப்படி ஆயிரம் வருஷம் தானா? அல்லது உருவகமாகச் சொல்லப்பட்டதொரு சொல்லா? மேலும் இந்த ஆயிரம் வருடங்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முந்தினவையா அல்லது பிந்தைய?
ஆயிர வருஷத்துக்கு அப்பால் உள்ள நோக்கு இது உண்மையில் ஆயிரம் ஆண்டு அல்ல கிறிஸ்துவின் வருகைக்கு முன்வரும் ஒரு நீண்ட காலக் கட்டம் மட்டுமே என்று கூறுகிறது. இந்தக் காலக் கட்டத்தின் ஆரம்பத்தில் சுவிசேஷத்தின் வெற்றி ஒரு சமாதானமான ஆட்சியை அறிமுகப்படுத்தும் இந்த ஆட்சி கிறிஸ்து இறுதியில் நியாயந்தீர்க்க வருமளவும் நிலைத்திருக்கும்.
ஆயிர வருஷ அரசாட்சி இல்லை என்று ஒரு கருத்துக் கூறப்படுகிறது. அப்படி ஒரு
காலக்கட்டம் கிடையாது. ஒரு வேளை இறந்த பின் ஆன்மாக்கள் தாம் சேர வேண்டிய இடத்துக்குச் செல்லும் வரை உள்ள இடைப்பட்ட காலமெனலாம். கிறிஸ்து எந்த நேரமும் திரும்ப வரலாம். அவர் உலகத்தை நியாயந்தீர்த்து நீதிமான்களைப் புதிய வானமும் புதிய பூமியும் நித்திய மகிழ்ச்சிக்குள் நடத்துவார்.
முந்தின ஆயிர வருஷ அரசாட்சி என்னும் கருத்துப்படி கிறிஸ்து தாமே தமது
ராஜ்யத்தை ஏற்படுத்தத் திரும்ப வருவார். மரித்த நீதிமான்கள் எழுப்பப்படுவார்கள். அவர்கள் அவரோடு சேர்ந்து பூமியில் ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். அவருடைய ஆட்சியை அடுத்து ஒரு எதிர்ப்பு எழும். ஆனால் அது அடக்கப்பட்டுவிடும். துன்மார்க்கர் நியாயத்
தீர்ப்படைவர். நித்தியம் தொடங்கும்.
இந்த கருத்துகளுக்கும். முன்பு கொடுக்கப்பட்ட வரிசை கிரகம் விளக்கங்களுக்கும் தொடர்பு இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலத்தைப் பற்றியது என்பவர்களும், உயர்ந்த கருத்துடையோரும் இந்த ஆயிரம் வருஷம் என்பதை ஒரு குறியீடாக மட்டுமே கருதுகின்றனர். வரலாற்று விளக்கம் தருவோரும், எதிர்கால விளக்கம் தருவோரும் மட்டும் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர்.
இந்தக் கொள்கைகளில் நன்மை எவ்வளவு பெரிதாயிருப்பினும், வெளிப்படுத்தின
விசேஷத்தை விளக்குவதற்குரிய உண்மையான திறவுகோல் அவற்றில் இல்லை. இந்நூல்
கிறிஸ்துவை-கிறிஸ்து என்னும் நபரை முன் வைக்கும் விதத்தில், அதன் அமைப்பில் அந்தத் திறவுகோல் உள்ளது. இந்த நூலின் தலைப்பாகிய சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தமது ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்" என்னும் வசனம், இந்நூலின் மையப் பொருள். எதிர்காலத்தை வெளிப்படுத்துகிற இயேசு கிறிஸ்து என்னும் நபர்தான் என்று சுட்டிக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்துதல்" என்று
சொல்லும்போது அது இயேசு கிறிஸ்து வாகிய நபரை வெளிப் படுத்துவதா, அல்லது அவர்
வெளிப்படுத்தி அவரிடமிருந்து வந்த வெளிப்படுத்தலா என்பது குறித்துச் சில கேள்விகள் எழுகின்றன. இவ்விரண்டில் முந்தியது இந்த நூலின் தலைப்பானால் வெளிப்படுத்தின விசேஷம் எதிர் காலத்துடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் உறவுடன் கிறிஸ்து
என்னும் நபர் வெளிப்படுத்துவதாகிறது. பின்னதை எடுத்துக் கொண்டால் இதன் முக்கிய தலைப்பு கிறிஸ்துவின் மூலமாக எதிர்காலத்தைப் பற்றிய திட்டத்தை அறிவிக்கும். இலக்கணப்படி இரண்டுமே கூடிய காரியம் தான். இரண்டுமே கிறிஸ்துவை இந்நூலின் மையமாகக் கொள்ளுகின்றன. மரணத்துக்குபின் ஜீவனைப் பற்றிய தங்கள் கொள்கையை கிறிஸ்துவைப் பற்றிய தங்கள் கொள்கை மீது சார்ந்து கொள்ளும்படி செய்து இந்நூலின் இலக்கிய அமைப்பின் நடுநிலையில் நின்று விளக்கம் தருவோர் வெளிப்படுத்தின விசேஷத்தை அணுகியிருப்பார்களெனில் பல முரண்பாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்நூலின் பொருளடக்கம் பற்றிய மற்றொரு குறிப்பு நூலாசிரியரின் சொந்த அனுபவம் தந்த வடிவத்தில் தோன்றுகிறது. இந்நூலில் பல தரிசனங்கள் உள்ளன. ஒவ்வொன்றுமே ஒரு தனிப்பட்ட தொகுப்பு போன்றது. பின்னும் நான் பார்த்த போது" என்ற சொற்றொடருடன் அறிமுகமாகிற பல சிறிய தொகுப்புகள் உள்ளன. (5:1,11;6:1,9) "ஆவிக்குள்ளானேன்" என்னும் சொற்றொடருடன் அறிமுகமாகிற நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன (1:10; 4:2; 17:1-3; 21:9-10) இந்த பகுதிகள் எல்லாம் பொருளடக்கத்திலும் அளவிலும் வேறுபட்டது. ஆனால் இவை அனைத்தும் நூலுக்கு ஒன்றான ஒருங்கிணைந்த அமைப்பைத் தருகின்றன. ஆரம்ப முன்னுரையையும், இறுதி முடிவுரையும் சேர்த்து அவை வெளிப்படுத்தின விசேஷத்தை ஆறு பகுதிகளாகப் பிரிக்கின்றன.
ஏழு ஏழாகப் பல தொகுப்புகள் இந்நூல் முழுவதிலும் காணப்படுகின்றன. ஏழு
திருச்சபைகள் 2:1,8,12,18; 3:1,7,14 தேவனுடைய ஏழு ஆவிகள் (4:5) ஏழு முத்திரைகள்
6:1,3,5,7,9,12; 8:1 ஏழு எக்காளங்கள் (8:6,7,8,10,12; 9:1,13,14,15) ஏழு இடி முழக்கங்கள் 10:3 ஏழு கலசங்கள் 16:1,2,4,8,10,12,17 ஏழு முக்கிய நபர்கள் 12:1,3,5,7; 13:1,11; 14 :1) எழு
பாக்கியங்கள் (1:3,14:13; 16:15, 19:9; 20:5; 22:7,14) இவற்றில் சில, இந்நூலின் இலக்கிய அமைப்பின் பகுதியாக தொடர்ந்து வரிசையாக அமைந்துள்ளன. மற்றவை அவ்வாறு அமையவில்லை. வெளிப்படுத்தின விசேஷம் ஏதோ ஆவி சம்பந்தமான குறியீடுகளின் மொத்தமான குழப்பமல்ல ஒரு தெளிவான சிந்தனை வடிவமே என்பதனை இந்த எழு என்னும் எண்ணைப் பயன்படுத்திருப்பது காட்டுகிறது.
மற்றும் சில எண் இணைப்புகள் அல்லது
தொகுப்புகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. இருபத்தி நான்கு மூப்பர்கள் (4:4) நான்கு ஜீவன்கள் (4:5) நான்கு குதிரை வீரர் (6:1-87) நான்கு தூதர்கள் (19:14) இரட்சிக்கப்பட்ட ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் (7:41;4:1) தேவனுடைய நகரத்தின் பன்னிரெண்டு வாசல்கள் (21:12) பன்னிரு அஸ்திபாரங்கள் (21:14) ஜீவ விருட்சத்தின் பன்னிரு கனிகள் இன்னும் பல
மற்றொரு சொற்றொடர் குறிப்பிடத்தக்கது. 4:5; 8:5; 11:9; 16 :18 ஆகிய வசனங்களில்
"மின்னல்கள் இடி முழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன என்று காணப்படுகிறது. இவற்றில் இறுதி மூன்று அடுத்தடுத்து வரும் நியாயத் தீர்ப்புகளின் இறுதியில் காணப்படுகின்றன. இவைகள் சாதாரணமாக திரும்பக் கூறப்படுகின்றனவா? அல்லது இந்த
நியாயத் தீர்ப்புகளின் முடிவுகளுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றனவா? அதாவது
ஒவ்வொரு நியாயத் தீர்ப்பும் முன்னதின் பன்மடங்கு என்பதைக் காட்டுகின்றனவா?
வடிவமைப்பு
இந்நூலில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டே இந்நூல் பின்வருமாறு வடிவமைக்கபடுகிறது.
சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய காரியங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தல்
I.முன்னுரை: கிறிஸ்து தொடர்பு கொள்ளுதல் 1:1-8
1). தலைப்பு 1:1
2). பிரதிநிதி 1:2
3). சிபாரிசு 1:3
4). விதி 1:4-5
5). அர்ப்பணிப்பு 1:5-6
6). சட்ட வாக்கியம் 1:7
7). அனுமதி 1:8
II.தரிசனம்:1 திருச்சபையில் கிறிஸ்து
ஜீவிக்கிறவர் 1:5-3:22
இடம் : பத்மு
1). உருவச் சித்திரம் 1:9-20
2). செய்திகள் எபேசுவுக்கு 2:1-7
3). சிமிர்னாவுக்கு 2:8-11
4). பெர்கமுவுக்கு 2:12-17
5). தீயத்தீராவுக்கு 2:18-29
6). சர்தைக்கு 3:1-6
7). பிலதெல்பியாவுக்கு 3:7-13
8). லவோதிக்கேயாவுக்கு 3:14-22
III.தரிசனம்:2 அண்ட சராசரங்களில் கிறிஸ்து
இரட்சகர் 4:1-16:21
இடம்: பரலோகம்
1). பரலோகத்தின் காட்சி 4:3-5:14
2). ஏழு முத்திரைகள் 6:1-8:5
3). வெள்ளைக் குதிரை 6:1-2
4). சிவப்புக் குதிரை 6:3-4
5). கறுப்புக் குதிரை 6:5-6
6). மங்கின நிறமுள் குதிரை 6:7-8
7). இரத்தச் சாட்சிகளின் ஆத்துமாக்கள் 6:9-11
8). பரலோகத்தின் அடையாளங்கள் 6:12-17
9). (இடைச் செருகல் விளக்கம்: முத்திரிக்கப்படுதல் 1,44,000 பேர் 7:1-17
10). பரலோகத்தின் அமைதி 8:4-5
11). எழு எக்காளங்கள் 8:6-11:39
12). கல் மழை, அக்கினி, இரத்தம் 8:7
13). சமுத்திரம் இரத்தமாக மாறுதல் 8:8-9
14). நட்சத்திரம் தண்ணீர்களின் மேல் விழுதல் 8.10-11
15). சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் இருளடைதல் 8:12-13
16). ஆழம் காண முடியாத பாதாளம் திறக்கப்படுதல் 9:4-12
17). நான்கு தூதர்களை இழத்தல் 9:13-21
18). இடைச் செருகல் விளக்கம்: சிறிய புத்தகம் தேவாலயத்தை அளத்தல்
19). இரண்டு சாட்சிகள் 10:1-11:14
20). மொத்த அறிக்கையை அறிவித்தல் 11:15-19
21). அடையாளங்கள் 12:1-16:21
22). முக்கியமான நபர்கள் 12:1-14:20
23). ஸ்திரி 12:12
24). வலுசர்ப்பம் 12:3-4
25). ஆண் குழந்தை 12:5-6
26). பிரதான தூதனான மிகாவேல் 12:7-17
27). சமுத்திரத்திலிருந்து வரும் மிருகம் 13:1-10
28). பூமியிலிருந்து வரும் மிருகம் 13:11-18
29). சீயோன் மலை மீது ஆட்டுக்குட்டியானவர் 14:1-5
(இடைச் செருகல் விளக்கம்
தூதரின் செய்திகள்)
30). நியாயத்தீர்ப்புக்கு அழைப்பு 14:6-7
30). பாபிலோனின் வீழ்ச்சி 14:8
31). கோபத்தைப் பற்றி எச்சரிக்கை 14:9-12
32). மரித்தோரின் ஆசீர்வாதம் 14:13
33). அறுவடைக்கு அழைப்பு 14:14-16
34). கோபாக்கினையின் திராட்சைகளை அறுவடை செய்தல் 14:17-20
35). எழு கலசங்கள் 15:1-16:21
36). பரலோகத்தின் காட்சி 15:1-18
37). நியாயத் தீர்ப்புகள் 16:1-20
38). மனுஷர் மேல் கொடிய புண் 16:2
39). சமுத்திரம் இரத்தமாக மாற்றப்படுதல் 16:3
40). நீரூற்றுக்கள் இரத்தமாக மாற்றப்படுதல் 16:4-7
41). சூரியனின் வெப்பம் அதிகரித்தல் 16:8-9
42). இருள் 16:10 -11
43). அகத்த ஆவிகள் 16:12-15
44). நிறைவுறுதல் 16:17-21
IV.தரிசனம்:3 வெற்றியில் கிறிஸ்து
போர் வீரர் 17:1-21:8
இடம்: வனாந்திரம்
1). பாபிலோனின் அழிவு 17:1-18:24
2). பரலோகத்தில் மகிழ்ச்சி 19:1-10
3). மிருகம் வெற்றி கொள்ளப்படுதல் 19:11-21
4). சாத்தானைக் கட்டுதல் 20:1-3
5). ஆயிர வருஷ அரசாட்சி 20:4-6
6). இறுதி எதிர்ப்பு 20:7-10
7). மரித்தோரின் நியாயத் தீர்ப்பு 20:11-15
8). புதிய வானம், புதிய பூமி 21:1-8
V.தரிசனம்:4 நிறைவில் கிறிஸ்து
ஆட்டுக் குட்டியானவர் 21:9-22:5
இடம்: ஒரு மலை
1). தேவனுடைய நகரம் 21:9-21
2). தேவனைத் தொழுது கொள்ளுதல் 21:21-27
3). தேவனுடைய ஆசீர்வாதம் 22:1-5
VI.முடிவுரை
1). கிறிஸ்து சவால் விடுகிறார் 22:5-21
2). கீழ்ப்படிவதற்கு - விருப்பம் 22:6-9
3). பரிசளிக்க - அறிவு 22:10-15
4). ஐக்கியப்பட - உணர்வுகள் 22:16-20
5). ஆசீர்வாதம் 22:21
வியாக்கியானம்
வெளிப்படுத்தின விசேஷம் புதிய ஏற்பாட்டின் இறுதி நூல்களாகிய இலக்கியங்களின் மொழி நடையில் அமைந்துள்ளது. இந்நூலுக்கு ஒரு திட்டவட்டமான நூலாசிரியர் உண்டு. அவரே தமது பெயரைக் குறிப்பிடுகிறார். ஒரு திட்டவட்டமான நோக்கமும் இந்த நூலுக்கு உண்டு எனவே இந்த வரிசையைத் சேர்ந்த மற்ற நூல்களிலிருந்து இந்த விஷயங்களில் இந்நூல் குறிப்பாக மாறுபடுகிறது. திருச்சபை சரித்திரத்தின் எல்லா விஷயங்களையும் முன்னறிவிப்பது அவருடைய முக்கிய நோக்கமாக இல்லை. தற்காலத்தில் பொதுவான போக்குகளையும், அவை ஆண்டவராகிய இயேசுவின் வருகையில் அடையும் இறுதி முடிவையும் காட்டுவதே அவர் நோக்கம். இறுதி முடிவுரையில் உள்ள "இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்" 22:7,12,20 என்று மூன்று முறை கூறப்பட்டுள்ள சவாலான
அறிவிப்பு தமது திருச்சபைகளுக்கு அவரளித்த வாக்குத்தத்தை 2:16; 3:11 உறுதிப்படுத்தி, இந்த நூல் முழுவதையும் உலகுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு ஊக்குவித்தலாகவும் செய்கிறது.
சில ஒருமைப்பாடுகள் இந்த நூல் முழுவதிலும் விரவிக் காணப்படுகின்றன. கிறிஸ்து - ஒரு நபராக ஓங்கி நிற்கிறார். முதலாவது பிரகாசமான முகத்துடன், வெள்ளுடை தரித்தவராய் திருச்சபையைக் கண்காணிப்பு. கண்டித்து ஆலோசனை கூறுபவராக மகிமை நிறைந்த உருவில் அவர் தோன்றுகிறார். அவர் முத்திரையிடப்பட்ட தோல் சுருளின் அதிகாரத்தின் கீழ் நியாயத் தீர்ப்புச் செய்ய உரிமை கோருபவர் ஆட்டுக் குட்டியானவர் அவரே. அவர்தான் தமது இரட்சிப்பின் பணியினிமித்தம் அந்த உரிமையைப் பெற்றுக் கொண்டவர் (5:4-7 ) நியாயத் தீர்ப்புச் செய்யும் போது, ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" (1916) என்னும் பட்டத்துடன் வெள்ளைக் குதிரையின் மேல், வெற்றி கொண்ட ரோமத்
தளபதி போல் (19:11), வருகிறவர் அவரே எல்லாம் நிறைவுறும் வேளையில் தமது ஜனங்களின் மணவாளனாக வருகிற அவர், தமது இரட்சிப்பின் காரணமாக மறுபடியும் ஆட்டுக்குட்டியானவர் என்றழைக்கப்படுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் வரிசைக் கிரமம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. வரலாற்று விளக்கம் தருவோர். அது எழுதப் பட்ட காலத்திலிருந்து கிறிஸ்துவின் வருகை வரை உள்ள முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் குறிக்கப்பட்டுள்ள நாள்காட்டியாக வெளிப்படுத்தின விசேஷத்தைக் காண்கின்றனர். எதிர்கால விளக்கம் தருவோர் கிறிஸ்துவின் வருகைக்கு முந்தின எழு வருடங்களின் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன என்று கருதுகின்றனர். கடந்த காலத்தைப் பற்றியது என்போரும், உயர்ந்த கருத்துடையோர் இவற்றில் வரலாற்று நிகழ்ச்சிகளில் வரிசை இருப்பதாக கருதவில்லை. இருப்பினும் சில உண்மைகள் தெளிவாக உள்ளன. முதல் மூன்று அதிகாரங்களில் உள்ள நிருபங்கள் இந் நூல் 'எழுதப்பட்ட காலத்தில் அதாவது நூலாசிரியரின் காலத்திலேயே ஆசியாவின் நகரங்களில் இருந்த திருச்சபைகளுக்கு எழுதப்பட்டுள்ளது நான்காவது அதிகாரத்தில் தொடக்கத்தில் "இனிச் சம்பவிக்க வேண்டியவைகள் (4:1) தரிசனம் என்று இந்ததொடங்குகிறது தரிசனங்கள் நூலாசிரியரின் காலம் தொடங்கி முடிவுறும் காலம் கொடுக்கப்படாமல் தொடர்கின்றன. இந்நூலின் இறுதி இரு தரிசனங்களும் இன்னும் நிறைவேறவில்லை. அவை வரவிருக்கும் கடைசி காலத்துக்குரியது. இவ்வாறாக வெளிப்படுத்தின விசேஷத்தின் ஒரு பகுதி இறந்த காலத்துக்கும், ஒரு பகுதி நிகழ் காலத்துக்கும், ஒரு பகுதி எதிர் காலத்துக்கும் உரியது.
இறுதி இரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன. வெளிப்படுத்தின விசேஷம் 17:1 முதல் 21:8 வரை முன்பகுதி, பாபிலோன் என்னும் வேசியைக் கொண்டு குறிக்கப் படுகிற தீமையான உலக அமைப்பின் அழிவைக் குறித்துக் கூறுகிறது. 21:9 முதல் 22:5 வரையுள்ள இரண்டாம் பகுதி கிறிஸ்துவின் மணவாட்டி இறுதியாகத் தோன்றுவதையும் புதிய எருசலேமையும் விவரிக்கிறது. இந்த இரு பகுதிகளிலும் உள்ள இணை அமைப்பில் ஒற்றுமைகளும் உள்ளன. வேற்றுமைகளும் உள்ளன. இரண்டுமே எழு கலசங்களை உடைய ஏழு தூதரில் ஒருவரால் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்தக் காட்சியைக் காணும் நபரை, பரலோக தூதன் "இங்கே ஏறிவா" என்னும் சொற்களை கொண்டு அழைக்கிறான். இரண்டும் ஒவ்வொரு நோக்கத்தின் முடிவைக் குறிக்கின்றன. ஒன்று தேவனை விட்டு விலகிச் செல்லும் வழியின் முடிவு, அடுத்தது மீட்பின் முடிவு.
இந்த இணை அமைப்பில் உள்ள வேற்றுமைகளும் தெளிவாக உள்ளன. முதல் பகுதி ஒரு வேசியை அறிமுகப்படுத்துகிறது. பிந்தின பகுதி ஒரு மணப்பெண்னை அறிமுகப்படுத்துகிறது. முதல் நிகழ்ச்சி வனாந்தரத்தில் நடைபெறும் காட்சி (17:3) அடுத்தது ஒரு மலையில் நடைபெறும் நிகழ்ச்சியின் காட்சி (20:10) அந்த வேசியின் மேல் தூஷணமான நாமங்கள் காணப்பட்டன. (17:3) பன்னிரு கோத்திரத்தாரின் பெயர்களும், பன்னிரு அப்போஸ்தலர் பெயர்களும் பரிசுத்த நகரத்தில் பொறிக்கப்பட்டன (21:12,14) முன்னது ஊழல் நிறைந்ததும், நியாயத் தீர்ப்புக்குப் பாத்திரமானதுமான பாபிலோன் நகரத்தை முன் வைக்கிறது (17:5) பின்னது பரிசுத்தம் கற்பமுள்ளதாக பரலோகத்திலிருந்து இறங்கி வரும் புதிய எருசலேமை வருணிக்கிறது. (21:40) முன்னது நியாயத் தீர்ப்பில் அழிகின்றது பின்னது நித்திய ஒளியில் வாழ்கின்றது. முன்னது சபிக்கப்பட்டது. பின்னது ஆசீர்வதிக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷமாகிய புத்தகம் வரலாற்றுக்கு ஒரு தெய்வீக நோக்கைக் கொடுக்கிறது. அதனுடைய குறியீடுகளுக்கு எப்படி விளக்கம் தந்தாலும் அதன் திட்டு மொத்த நோக்கம், திருச்சபைகளின் நிறைவுகளையும் குறைவுகளையும் உலகின் அழிவையும் நம்பிக்கையும் காணுகின்ற தெய்வீகப் பரிசுத்த நோக்கமேயாகும். திருச்சபைகளுக்கு அனுப்பப்படுகிறது. நியாயத் தீர்ப்பு செய்யப்படும் காட்சி தேவனுடைய சிங்காசனத்தை மையமாகக் கொண்டு நடக்கிறது (4:2-19:5) அதே சிங்காசனத்திலிருந்து தான் இறுதி நியாயத் தீர்ப்பும் அறிவிக்கப்படுகிறது. புதிய வானத்தையும் புதிய பூமியையும் விவரிக்கும் போது. ஜீவ நதியின் ஊற்று அந்தச் சிங்காசனம் இன்னும் மையமாகவே உள்ளது. (22:1) இவ்வாறு சிங்காசனத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவனுடைய ராஜரீகத்தைத் தெளிவாக்குகிறது. மேலும் மனிதருடைய காரியங்களில் நித்தியமாக அவருடைய ஆளுகையையும் தெளிவு படுத்துகிறது.
இந்நூலில் ஓங்கி நிற்கிற மகிழ்ச்சிக்கு எதிராக தீங்கைக் குறித்து அது தரும் சித்திரமும் உள்ளது. காலம் செல்லச் செல்ல உலகம் பெருமளவில் சரியாகிவிடும் என்பதற்கேதுவான குறிப்பெதையும் இது தரவில்லை. அல்லது இறுதியில் எல்லா மனிதர்களும் விசுவாசித்து மனந்திரும்பி தேவனிடம் வருவார்களென்றும் சொல்லவில்லை. இறுதிக் கலாச்சாரம் வளமுள்ளதாகவும் பண்பாட்டில் முன்னேறினதாகவும் முழுக்க முழுக்க தேவனற்றதாகவும் இருக்குமென்று இது குறிப்பிடுகிறது (18:4-5) ஒருங்கிணைந்த மனித இனத்தின் இறுதிச் செயல் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் எதிராக ஆயுதமெடுத்துப் போராடுவதாக இருக்கும் (20:7-10 ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளைத் தவிர வேதத்தின் வேறு எந்த நூலிலும் பாவத்தின் இறுதி அழிவு இவ்வளவு பயங்கரமாகச் சித்தரிக்கப்படவில்லை (20:15)
இறுதிக் காலத்தை வெளிப்படுத்தும் இந்த நூல் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த மனிதனுக்கு, அவனுடைய தந்தை, தாத்தா ஆகியோருக்குத் தோன்றிய அளவுக்கு இறுதி காலத்தின் வெளிப்படுத்தலாகத் தோன்றவில்லை. பேசுகின்ற பிம்பங்கள் (13:15) வானத்திலிருந்து அக்கினி விழுவது. 13:13) பெரும் ஜனத்தொகையான மக்கள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடு (13:6,17) செயற்கையான ஒரு மதத்துக்குத் கட்டாயமாகக் கீழ்ப்படிவது (13:14) கடலில் சில வேறுபாடுகளாலும் சூரிய வெப்பத்தில் உண்டாகும் ஒட்டு மொத்த அழிவு (16:38) பூமியின் ராஜாக்கள் எல்லாரையும் யுத்தத்துக்கு அழைத்தல் (16:4) ஒரிருவர் மட்டும் தலைவராக இருந்து தேசங்களை நடத்துதல், ஒரு மணி நேரத்தில் நாகரிகத்தின் மையத்தின் வீழ்ச்சி ஆகியவை இன்று நடக்க முடியாத காரியங்களல்ல. இன்னும் பலவகைகளில் பார்க்கப் போனால் உலகில் இருக்கிற புத்தகம் களிலெல்லாம் தற்காலத்துக்குரிய நூல் வெளிப்படுத்தின விசேஷமே.
"இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்னும் இறுதி வாக்குத் தத்தத்துடன் புதிய ஏற்பாடு முடிகிறது. தேவன் நியாயப் பிரமாணத்தின் மூலமும் தீர்க்கதரிசிகள் மூலமும் பேசினார். மறுபடியும் அவர் தமது குமாரனின் மூலம் பேசினார். அவர் தம்மைத் தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசி காலத்தில் ஒரே தரம் வெளிப்பட்டார். (9:26) அவர் தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாகும் போது (எபிரெயர் 9:28) பெரியதொரு வெளிப்படுத்தல் வரவிருக்கிறது. அந்த வெளிப்படுத்தலையும் அந்த வெற்றியையும்தான் வெளிப்படுத்தின விசேஷம் சுட்டிக் காட்டுகிறது.
காலமும் இடமும்
கிவி. 96 ஆம் ஆண்டில் பத்மு தீவிலிருந்து இந்த நிருபம் எழுதப்பட்டது. (வெளி 1:9)
ஆசிரியர்: அப்போஸ்தலர் யோவான். (வெளி 1:4)
மையக்கருத்து
இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவிற்கு ஒப்புவித்து அவர் வெளிப்படுத்திக் காண்பித்தார், (வெளி 1:1) சம்பவிக்க - வேண்டியவைகள்" என்பது யோவானுடைய நாளிலிருந்து புதிய வானம், புதிய பூமி உண்டாகும் நிகழ்ச்சி வரையிலும் சம்பவிக்கும் காரியங்களுக்கும்.
இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக தொடர்ந்து நடைபெறும் இந்த முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இடையில் வேறுசில இணை நிகழ்ச்சிகளும் கோர்க்கப்பட்டுள்ளன. இவை முக்கிய நிகழ்ச்சிகளோடு நடைபெறும் துணை நிகழ்ச்சிகளாகும் - வெளிப்படுத்தின விசேஷம் மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். (வெளி 1:19) ஒவ்வொரு பிரிவிலும் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:
1. நீ கண்டவைகள் "The things which thou
hast seen, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே காணப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தரிசனம். (வெளி 1:12- 20) இந்தத் தரிசனம் இந்தப் புஸ்தகத்தின் முன்னுரையும் சேர்ந்து முதலாவது பிரிவாகும்.
2. "இருக்கிறவைகள்" “The things which are". ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டிருக்கும் எழு நிருபங்கள் இந்தப் புத்தகம் முழுவதும் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது. (வெளி 2:1-3:22). இந்தச் சபைகளுக்குக் கூறப்பட்டிருக்கும் செய்திகள் சபைக் காலத்திலுள்ள எல்லாச் சபைகளுக்கும் பொருந்தும் எடுத்துக் கொள்ளப் படும் காலம் வரையிலும் இந்தச் செய்திகளை எல்லாச் சபைகளுக்கும் கூறலாம். வருங்கால உபத்திரவ காலம், அந்திக்கிறிஸ்துவின் வருகை ஆகியவற்றிற்கு முன்பு வரையிலும் எழு சபைகளுக்கும் கூறப்பட்டிருக்கும் செய்திகளை எல்லாச் சபைகளுக்கும் கூறலாம். இக்காலத்தின் கடைசி ஏழு வருஷங்களில் அந்திக்கிறிஸ்து பூமியில் இருப்பான். (தானி 9:27; 2தெச 2:7-12; வெளி 6:1-19:21)
3. "இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகள்" "The things which shall be hereafter" சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு நடைபெறும் நிகழ்ச்சிகள் (வெளி 4:1-22:5) பரலோகத்தில் காணும் காட்சிகள் வெளி 4-5), எழு முத்திரைகளும் அவற்றோடு தொடர்புடைய வாக்கியங்களும் (வெளி 14:1-19:21),
ஆயிரம் வருஷ அரசாட்சி (வெளி 20), புதிய வானமும், புதிய பூமியும் (வெளி 21:1-22:15), முடிவில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகள் (வெளி 22: 6-21) ஆகியவை இந்தப் பிரிவில் அடங்கும்.
வெளி 4:1 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் சபை காலத்திற்குப்பின்பு நடைபெறும். அதாவது வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு நிறைவேறும். தற்பொழுது நடைபெறும் காரியங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளோ வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்படவில்லை.
புள்ளிவிவரங்கள்
a). அதிகாரங்கள் - 22
b). வசனங்கள் - 404
c). கேள்விகள் - 9
d). புதிய தீர்க்க தரிசனங்கள் - 15
e). வரலாற்றைக் குறிக்கும் வசனங்கள் - 53
பொருளடக்கம்
1. தலைப்பும் ஆசிரியரும் (1:1)
2. யோவான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான் (1:2)
3). பாக்கியவான்கள் (1:3)
4). ஏழு சபைகளுக்கும் வாழ்த்துக்கள் (1:4-6)
5). வெளிப்படுத்தின விசேஷத்தின் மையக்கருத்து (1:7 )
6). ஆதியும் அந்தமுமாக இருக்கிற இயேசு கிறிஸ்து (1:8)
7). தீர்க்கதரிசி - யோவான் (1:9-10)
8). யோவான் காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதவேண்டும் என்னும் கட்டளை (1.11)
I. கண்ட காரியங்கள்
1. கிறிஸ்துவின் தரிசனம்
- i) கிறிஸ்துவின் எட்டு குணங்கள் (1:12-16)
- ii) தரிசனத்தால் யோவான்மீது ஏற்பட்ட விளைவு (1.17-18)
- iii) வியாக்கியானம் திறவுகோல் (1:19 )
- iv) அடையாளங்களின் வியாக்கியானம் (1:20)
II. இருக்கிறவைகள் - சபை எடுத்துக் கொள்ளப்படும் வரையிலும் சபைகளைக் குறித்த காரியங்கள்
- i). . எபேசு சபைக்கு எழுதின நிருபம் (2:4-7) ii). சிமிர்னா சபைக்கு எழுதின நிருபம் (2:8-11)
- iii).. பெர்கமு சபைக்கு எழுதின நிருபம் (2:12-17
- iv). தியத்தீரா சபைக்கு எழுதின நிருபம் (2:18-29)
- v). சர்தை சபைக்கு எழுதின நிருபம் (3:1-6
- vi).. பிலதெல்பியா சபைக்கு எழுதின நிருபம் (3:7-13)
- vii). லவோதிக்கேயா சபைக்கு எழுதின நிருபம் (3:14-22)
III. இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகள் - சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு
A. பரலோகத்தின் தேவாலயம் - எடுத்துக் கொள்ளப்பட்ட விசுவாசிகள் தேவனோடு
இருக்கிறார்கள்
(1) பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசல் (4:1)
(2) பரலோகத்தில் ஒரு சிங்காசனம் (4:2-3)
(3) இருபத்துநான்கு மூப்பர்கள் (4:4)
(4) ஏழு ஆவிகள் (4.5)
(5) கண்ணாடிக் கடல் (4:6-8)
(6) பரலோகத்தில் ஆராதனை (4:9-11)
(7) பரலோகத்தில் ஒரு புஸ்தகம் (5:1-4
(8) பரலோகத்தின் ஆட்டுக்குட்டி (5:5-7)
(9) ஜீவன்களும் மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவரே ஆராதிக்கிறார்கள் (5:8-10)
(10) தேவனையும் ஆட்டுக் குட்டி யாவரையும் எல்லோரும் ஆராதிக்கிறார்கள் (5:11-14)
B. தானியேலின் எழுபதாவது வாரமும் உபத்திரவக்காலமும்
(1) முதலாம் முத்திரை - அந்திக்கிறிஸ்து புறப்பட்டான் (6:1-2)
(2) இரண்டாம் முத்திரை - அந்திக்கிறிஸ்து புறப்பட்டதினால் ஏற்பட்ட யுத்தம் (6:3-4)
(3) மூன்றாம் முத்திரை - முதலாவது முத்திரைகளினால் ஏற்பட்ட பஞ்சம் (6:5-6)
(4) நான்காம் முத்திரை - முதல் மூன்று முத்திரைகளினால் ஏற்பட்ட மரணமும் பாதாளமும் (6:7-8)
(5) ஐந்தாம் முத்திரை - தானியேல் எழுபதாவது வாரத்தின் உபத்திரவக் காலத்தில் இரத்தச்சாட்சியாக மரித்தவர்கள் (6.9-11)
(6). ஆறாம் முத்திரை - தேவனுடைய கோபாக்கினை ஆரம்பமாகிறது (6:12-17)
மீட்கப்பட்டவர்கள்
- a. முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் (7:4-8)
- b. மகா உபத்திரவக்காலம் (7:9-17)
(7) ஏழாம் முத்திரை - பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று (8.1-6)
(8) முதலாம் எக்காளம் - பரலோகத்திலிருந்து இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி பூமியிலே கொட்டப் பட்டது (8:7)
(9) இரண்டாம் எக்காளம் - பரலோகத்திலிருந்து அக்கினியால் எரிகிற பெரிய மலை போன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது (8:8-9)
(10) மூன்றாம் எக்காளம் - பெரிய நட்சத்திரம் தண்ணீரை எட்டியைப்போல கசப்பாக்கிற்று (8:10-11)
(11) நான்காம் எக்காளம் - கிரகங்களில் மூன்றில் ஒரு பங்கு இருளடைந்தது (8:12)
மனுக்குலத்தின் மீது மூன்று ஐயோக்கள் (8:13)
(12) ஐந்தாம் எக்காளம் - பாதாளத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டது
- (அ) பாதாளக்குழியை திறந்தான் - புகை எழும்பிற்று (9:1-3)
- (ஆ) தங்கள் நெற்றிகளில் தேவனுடைய
- முத்திரையைத் தரித்திராத மனுஷரை சேதப்படுத்த அவர்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது (9:4-6)
- (இ) பிசாசுகளின் விளக்கம் (9:7-10)
- (ஈ) பிசாசுகளின் இராஜா (9:7-10)
மேலும் இரண்டு ஐயோக்கள் (9:11-12)
(13) ஆறாம் எக்காளம்
- (அ கட்டப்பட்டிருக்கும் நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்படுகிறார்கள் (9:13-15)
- (ஆ) அவர்களுடைய தொகை - இருபது கோடி (9:16-19)
- (இ) மனுஷரின் கடின இருதயம் (9:20-21)
1. பலமுள்ள தூதன்
- (a) அவனுடைய வர்ணனையும் அவன் கையிலிருந்த திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகமும் (10:1-2)
- (b) அவனுடைய ஆர்ப்பரிப்பும் எழு இடிகளின் சத்தமும் 10:3-4)
- (c) அவனுடைய ஆணையும் ஏழாம் எக்காளமும் (10:5-7)
- (d) சிறு புஸ்தகம் புசிக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் (10:8-10)
- (e) சிறிய புஸ்தகத்தில் உள்ள காரியங்கள் (10:11-12)
2. தேவனுடைய ஆலயத்தையும் எருசலேமையும் அந்திக்கிறிஸ்து கைப்பற்றுகிறான் (11:1-2) 3. இரண்டு சாட்சிகள்
- (1) அவர்களுடைய தீர்க்கதரிசனத்தின் காலம் (11:3)
- (2) அவர்களுடைய அடையாளம் (11:4)
- (3) அவர்களுடைய அதிகாரம் (11:5-6)
- (4) அவர்களுடைய மரணம் (11:7-8)
- (5) அவர்களுடைய மரணத்தின் நிமித்தம் உண்டாகும் சந்தோஷம் (11:9-10)
- (6) மரணத்தின் மீது அவர்களுடைய வெற்றி (11:11-12 )
4. பூமி அதிர்ச்சி (11:13) 5. மூன்றாம் ஆபத்து சிக்கிரமாய் வருகிறது (11:14)
(14) ஏழாம் எக்காளம்
- (அ)வானத்தில் உண்டான கெம்பீர சத்தங்கள் (11:15 )
- (ஆ) இருபத்தினான்கு மூப்பர்களின் அறிக்கை (11:16-18)
- (இ) பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது (11:19)
- (ஈ) சூரியனை அணிந்திருந்த ஒரு ஸ்திரீ (12:1)
- (உ)இஸ்ரவேலின் வேதனை (12:2)
- (ஊ) சிவப்பான பெரிய வலுசர்ப்பம் (12:3)
- (எ) பிள்ளையின் மீது வலுசர்ப்பத்தின் யுத்தம் (12:4)
- (ஏ) சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளை (12:5)
- (ஐ) ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள் (12:5)
- (ஒ) வானத்திலே யுத்தம் உண்டாயிற்று (12:7-9)
- (ஓ) மூன்றாவது ஐயோ 12:10-12)
- (ஔ) ஸ்திரீயின் துன்பம் (12:13-14)
- (ஃ) சாத்தானின் அழிவு (12:15-16)
- (க) வலுசர்ப்பம் ஸ்திரீயின் சந்ததியுடன் யுத்தம் பண்ணப்போயிற்று (12:17)
- (ங) சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வந்தது (13:1)
- (ச) மிருகத்தின் இராஜ்ஜியம் (13:2-3)
- (ஞ) மிருகத்தின் அதிகாரம் (13:4)
- (ட) பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் மிருகத்தின் வாய் அதன் காலம் (13:5-6)
- (ண) பரிசுத்தவான்களுடைய மிருகத்தின் யுத்தம் (13:7)
- (த) மிருகத்தின் இராஜ்ஜியத்தின் விஸ்தாரம் (13:8-10)
- (ந) வேறோரு மிருகம் பூமியிலிருந்து எழும்பியது (13:11-13)
- (ப) மிருகத்தின் சொரூபம் (13:14-15)
- (ம) மிருகத்தின் முத்திரை, அதின் நாமம், அதின் நாமத்தின் இலக்கம்
- 13:16-17)
- (ய) மிருகமும் மிருகத்தின் இலக்கமும் (13.18)
- (a). ஆட்டுக்குட்டியானவர் தங்கள் நெற்றிகளில் பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்களும் (14:1-5)
- (b). முதலாம் தூதனின் பிரசங்கம் (14:5-7)
- (c). இரண்டாம் தூதனின் பிரசங்கம் (14:8)
- (d) மூன்றாம் தூதனின் பிரசங்கம் (14:9-11
- (e). கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் (14:12-13)
- (f). அறுவடைக்காலம் (14:14-16)
- (g). திராட்சைப் பழங்கள் அறுவடை (14:17-20)
- (h). ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்கள் (15:1)
- (I). கண்ணாடிக்கடல் (15:2-4)
- (j). பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது (15:5-8)
(15) முதலாவது கோபக்கலசம் - மனுஷர்களுக்கு பொல்லாத கொடிய புண் உண்டாயிற்று (16:2)
(16) இரண்டாம் கோபக்கலசம் சமுத்திரம் செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று (16:3)
(17) மூன்றாம் கோபக்கலசம் - ஆறுகளும் நீரூற்றுகள் இரத்தமாயின (16:4-7)
(18) நான்காம் கோபக்கலசம் - சூரியன் தீயினால் மனுஷரை தகித்தது (16:8-9)
(19) ஐந்தாம் கோபக்கலசம் - மிருகத்தின் இராஜ்ஜியம் இருளடைந்தது (16:10-11)
(20) ஆறாம் கோபக்கலசம் - ஐபிராத்து நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று (16:12)
மூன்று அசுத்த ஆவிகள் (16:13-16)
(21) ஏழாம் கோபக்கலசம் - சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின (16:17-21)
மகாவேசியும் மிருகமும்
1. மகா வேசி
- (1) மகா வேசியின் ஆக்கினை (17:1)
- (2) மகா வேசியின் பாவங்களும் அவளோடு வேசித்தனம் பண்ணினவர்களும் (17:2)
- (3) மகா வேசியின் ஆளுகை (17:3)
- (4) மகா வேசியின் சிங்காரமும் பாவங்களும் (17:4)
- (5) மகா வேசியின் நாமம் (17:5)
- (6). மகா வேசியின் குடிவெறி (17:6)
2. மகா வேசியின் இரகசியமும் மிருகத்தின் இரகசியமும் (17:7)
3. மிருகம்
- (1) மிருகம் பாதாளத்திலிருந்து ஏறிவந்து நாசமடையப்போகிறது (17:4-8)
- (2) மிருகத்தின் எழு தலைகளும் ஏழு இராஜாக்களாம் (17:9-10)
- (3) மிருகம் - எட்டாவதானவன் (17:11)
- (4) பத்துக் கொம்புகளும் பத்து இராஜாக்களாம் (17:12)
- (5) ஏழு ராஜாக்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள் (17:13-14)
- (6) தண்ணீர்கள் - ஜனக்கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரரும் (17:15)
- (7) மிருகத்தின் மீது இருக்கும் பத்து கொம்புகளானவர்கள் (17:16-17)
4. ஸ்திரீ - மகா நகரம் (17:18)
ஏழாம் கோபக்கலசம்
- (1). மகா பாபிலோன் விழுந்தது (18:1-3)
- (2). பாபிலோன் மீது நியாயத்தீர்ப்பு (18:4-8)
- (3). பாபிலோனுக்கு அழுது புலம்புதல்
- (a) பூமியின் இராஜாக்கள் (18.9-10
- (b) பூமியின் வர்த்தகர்கள் (18.11-16)
- (c) மாலுமிகள், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள், கப்பல்கள், சமுத்திரத்திலே தொழில் செய்கிறவர்கள் (18:17-19)
- ((4). பாபிலோனின் அழிவுக்காக களிகூருதல் (18:20)
- (5). பபிலோனின் அழிவும் அதன் காரணமும் (18:21-24)
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக பரலோகத்தின் காட்சிகள்
1. பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் கர்த்தரைத் துதிக்கிறார்கள் (19:1-3)
2. இருபத்துநான்கு மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் தேவனைத் தொழுதுகொண்டார்கள் (19:4)
3. கர்த்தரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது (19:5)
4. திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் (19:6)
5. ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் (19:7-9)
6. யோவான் தூதனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தான் (19:10)
தெய்வீக ஆளுகை - ஆயிர வருஷ அரசாட்சி
- (1) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை (19.11-14)
- (2) தேவன் ஆலையை மிதிக்கிறார் - அர்மகெதோன் யுத்தம்
- (அ) உருவகம் - மதுவுள்ள ஆலை (19:15)
- (ஆ) இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா (19:16)
- (இ) மகா தேவன் கொடுக்கும் விருந்து (19:17)
- (ஈ) விருந்துக்கு கூடிவாருங்கள் (19:18)
- உ விருந்துக்கு கூடி வருகிறார்கள் (19.19)
- (ஊ) பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன (19:20-21)
- (3) சாத்தானை ஒரு தூதன் பாதாளத்திலே தள்ளி அடைத்தான் (20:1-3)
- (4) பூமியில் ஆயிர வருஷ அரசாட்சி (20:4-6)
- (5) ஆயிரம் வருஷம் முடிந்தபின்பு சாத்தானுடைய கிரியைகள் (20:7-9)
- (6) சாத்தான் அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான் (20:10)
- (7) இறுதி நியாயத்தீர்ப்பு (20:11-15)
9. வரப்போகிற காலங்கள்
- (1) புதிய வானமும் புதிய பூமியும் (21:3)
- (2) புதிய எருசலேம் (21:2-3)
- (3) முந்தினவைகளை ஒழிந்து போகும் - கர்த்தர் சகலத்தையும் புதிதாக்குவார்
- (21:4-7)
- (4) இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் - எரிகிற கடலிலே
- பங்கடைவோர்கள் (21:8)
- (5) ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி
- அ) மணவாட்டியின் அடையாளம் (21:9-10)
- (ஆ) புதிய எருசலேமின் வெளித்தோற்றம் (21:11)
- (இ) மதில், வாசல்கள் அஸ்திபாரக்கற்கள் (21:12-15)
- (ஈ) நகரம் சதுரமாயிருந்தது 21:16-17)
- (உ புதிய எருசலேமில் பயன்படுத்தப் பட்டுள்ள பொருட்கள் (21:18-21)
- (ஊ) தேவாலயம் (21:22)
- (எ) புதிய எருசலேமின் வெளிச்சம் (21:23)
- (ஏ) புதிய எருசலேமில் நடைபெறும் காரியங்கள் (21:24-27)
- (ஐ) புதிய எருசலேமின் நதி, வீதி, கனி (22:1-2)
- (ஓ) புதிய எருசலேமில் அரசாளுகிறவர்கள் (22:3-5)
முடிவுரை
1. வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம் உண்மையும் சத்தியமுமானது (22:6)
2. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்கிறவன் பாக்கியவான் (22:7)
3. தூதனை தொழுதுகொள்ளக்கூடாது - தேவனை மட்டுமே தொழுதுகொள்ள வேண்டும் (22:8-9)
4. இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம் (22:10)
5. அநியாயம் செய்கிறவர்கள், நீதியுள்ளவர்கள் ஆகியோரின் நித்திய முடிவு (22:11)
6. இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் (22:12-13)
7. இயேசு கிறிஸ்துவினுடைய கற்பனைகளின் படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் (22:13-14)
8. பாவத்தையும், நித்திய ஆக்கினையையும் குறித்த கடைசி எச்சரிப்பு (22:15)
9. வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தின் உறுதி பண்ணப்பட்ட சாட்சி (22:16)
10. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்னும் அழைப்பு (22:17)
11. எல்லா மனுஷருக்கும் ஓர் எச்சரிப்பு (22:18-19)
12. முடிவுரையும் ஆசீர்வாதமும் (22:20-21)
புத்தகத் தலைப்பின் முக்கியத்துவம்
புத்தகத் தலைப்பின் முக்கியத்துவம்
இயேசு கிறிஸ்துவினால் போவானுக்கு திறந்து வெளிக்குக் கொண்டுவரப்பட்ட அல்லது திரையை நீக்கிக் காட்டப்பட்ட காரியங்கள்
மிகச் சிறிய அதிகாரம்:- அதிகாரம் 15 (8 வசனங்கள்)
மிக நீண்ட அதிகாரம்:- அதிகாரம் 2 (29 வசனங்கள் )
மொத்த அதிகாரங்கள்: 22
முக்கிய வேத வசனம்:-
வெளிப்படுத்தின விசேஷம் 1:19 "நீ கண்டவை களையும், இருக்கிறது களையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது"
முன்னுரை:-
புதிய ஏற்பாட்டு புத்தகங்களில் இந்த ஒரு புத்தகம் மாத்திரம், தீர்க்கத் தரிசனங்களுக்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய வசனம் , அதிகாரம் 1:19 வசனத்தில், பொதுவான சுருக்க வருணனையைக் காணலாம். இருக்கிறவைகளையும் அதிகாரம்( 2.3) மற்றும் "இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவை களையும்" அதிகாரம் (4-22). இந்தப் புத்தகத்தில் எண்களுக்கு சிறப்பான கவனம் கொடுக்கப்படுகிறது உதாரணமாக "எழு" என்ற எண் புத்தகம் முழுவதிலும் காணப்படுகிறது. எழு (உண்மையாகவே சபைகள், 2:1,8,12,18 ; 3:1.7,14) தேவனுடைய ஏழு ஆவிகள் (4:5), ஏழு முத்திரைகள் 6:1,3,5,7,9,12 ;8:1), ஏழு எக்காளங்கள் (8:6,7,8,10,12; 9:1,13; 11:15), ஏழு இடி முழக்கங்கள் (10:3) எழு கலசங்கள் (16:1,2,4,8,10,12,17), மற்றும் ஏழு ஆசீர்வாதங்கள் அல்லது பாக்கியங்கள். (1:3; 14:13; 16:15; 19:9 20:5; 22:7,14), ஆகிய இவைகளெல்லாம் அதில் அடங்கும். மேலும், எண்கள், 24 (24 மூப்பர்கள் 4:4), நான்கு (4:6 வசனத்திலுள்ள நான்கு ஜீவன்கள்) மற்றும் 12 (12 வாசல்கள்) 21:12; 21:14 வசனத்தில் உள்ள 12 அஸ்திபாரங்கள்; 22:2 வசனத்திலுள்ள ஜீவ விருட்சத்தின் 12 விதமான கனிகள் ஆகிய இவைகளும் குறிப்பிடத்தக்கது. இதில் அடங்கிய காரியங்கள் மற்றும் இதன் கருத்துக்களின் தன்மையின் காரணமாக, இந்தப் புத்தகம், வேதாகமம் முழுவதற்கும், இயல்பான ஒரு முடிவுரையைக் கொடுக்கிறது. அத்துடன் இதனை வாசிப்பவர்கள் வருங்காலத்தைச் சந்திக்க ஆயத்தப்படுத்துகிறது.
புத்தகத்தின் பொதுவான சுருக்க வருணனை:-
- 1. முன்னுரையும், புத்தகத்தைப் பற்றிய
விளக்கமும் அதிகாரம் (1)
- 2. ஏழு சபைகளுக்கு செய்திகள் (அதிகாரம் (2-3)
- அ. எபேசு சிமிர்னா, பெர்கமு
தியத்தீரா. (அதிகாரம் 2)
- ஆ. சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா (அதிகாரம் 3)
- 3. தேவனுடைய சிங்காசனம் (அதிகாரம் 4-5)
- அ தேவனுடைய சிங்காசனத்தின் தரிசனம் (அதிகாரம் 4)
- 4. எழு முத்திரைகள் திறக்கப்படுகின்றன (அதிகாரம் 6)
- 5. பரிசுத்தவான்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் : 144000 மற்றும் எல்லாக்
காலங்களிலும் மீட்கப்பட்டவர்கள் (அதிகாரம் 7)
- 6. எக்காள நியாயத் தீர்ப்புகள் -
மூன்றில் ஒரு நியாயத்தீர்ப்புகள் (அதிகாரம் 8-9)
- அ. சுல் மழையும் அக்கினியும், சமுத்திரத்தில் மலை நட்சத்திரம் சூரியன் சந்திரன் முதலியன இருளடைந்தது. (அதிகாரம் 8)
- ஆ. பாதாளக் குழியிலிருந்து தேள்அவிழ்த்துவிடப்பட்டது மூன்றிலொரு பங்கு மனிதர்கள் மரித்தார்கள்
(அதிகாரம் 9)
- 7. புத்தகத்துடன் ஒரு பலமுள்ள தூதன். போவான் அந்தப் புத்தகத்தைப் புசித்தான் (அதிகாரம் 10)
- 8. இரண்டு சாட்சிகள். (அதிகாரம் 11)
- 9. ஸ்தீரீயும் வலுசர்ப்பமும் (அதிகாரம் 12)
- 10. இரண்டு மிருகங்கள் (அந்திக்
கிறிஸ்துவும் கள்ளத் தீர்க்கத்தரிசியும்) (அதிகாரம் 13)
- 11. ஆட்டுக்குட்டியானவரும், 144000 பேர்களும் (அதிகாரம் 14)
- 12. கலச நியாயத்தீர்ப்பு (அதிகாரம் 15-16)
- அ. எழு வாதைகளையுடைய
ஏழு தூதர்கள், (அதிகாரம் 15)
- ஆ. ஏழு நியாயத்தீர்ப்புகள்
ஊற்றப்பட்டது. (அதிகாரம் 16)
- 13. மிருகத்தின்மீது உட்கார்ந்திருக்கும் ஸ்திரி (அதிகாரம் 17)
- 14. பாபிலோனின் வீழ்ச்சி (அதிகாரம் 18)
- 15. இரண்டு விருந்துகள்: கலியாண
விருந்து மற்றும் பறவைகளின் விருந்து (அதிகாரம் 19)
- 16.ஆயிர வருட அரசாட்சி (அதிகாரம் 20)
- 17. நித்தியம் (அதிகாரம் 21-22)
- அ. புதிய வானம், புதிய பூமி, மற்றும்
புதிய எருசலேம் (அதிகாரம் 21)
- ஆ. தேவனுடைய சிங்காசனத்தில் இருந்து புறப்பட்டு ஓடுகிற நதி.
வெளிப்படுத்தின விசேஷம் - அதிகாரம் சுருக்க விளக்கம்:-
அதிகாரம் 1
முன்னுரையும், புத்தகத்தில் அடங்கிய காரியங்களைப் பற்றி விளக்கமும்
- ஆசீர்வதிக்கப்பட்டவன்: (வசனம் 3)
- அ. வாசிக்கிறான்
- ஆ. கேட்கிறான்
- இ. இப்புத்தகத்தில் எழுதப்பட்டவற்றைக் கைக்கொள்ளுகிறான்
- மேகங்கள் மீது கிறிஸ்து வருவார்
எல்லோருடைய கண்கள் அவரைக் காணும் (வசனம் 7)
- போவான் பத்மு தீவில் இருந்தான் (வசனம் 9)
- கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானான் (வசனம் 10)
- கிறிஸ்துவின் வருணனை (வசனம் 13-16)
- அ. அவருடைய பாதங்கள் வரை
நீண்ட அங்கி தரித்திருந்தார். (வசனம் 13)
- ஆ. பொற்கச்சைக் கட்டியிருந்தார் (வசனம் 13)
- இ. அவருடைய முடி உறைந்த மழையைப்போல் வென்மையாக இருந்தது. (வசனம் 13)
- ஈ. அவருடைய கண்கள் அக்கினி
ஜூவாலை யை போலிருந்தது. (வசனம் 14)
- உ. பாதங்கள் உலைக்களத்தில்
காய்ந்த பிரகாசமான வெண்கலம் போல் இருந்தது (வசனம் 15)
- ஊ. பெரும் வெள்ளத்தின் சத்தத்தைப் போல் அவருடைய சத்தம் இருந்தது. (வசனம் 15)
- எ. அவருடைய வாயிலிருந்து
கருக்கான பட்டயம் புறப்பட்டது (வசனம் 16)
- ஏ. அவருடைய முகம் வல்லமையாகப் பிரகாசிக்கிற சூரியனைப் போல் இருந்தது (வசனம் 16)
- ஆமென் (அப்படியே ஆக கடவது.
(வசனம் 6,7,18)
- 1. கல்வாரியில், அவருடைய சுத்திகரிக்கும் கிரியை (வசனம் 6)
- 2. அவருடைய இரண்டாம் வருகை (வசனம் 7)
- 3. அவர் தாமாகவே தம்மைப்பற்றி
கூறியது (வசனம் 18)
- அ. ஆதியும் அந்தமும்
- ஆ. அவருடைய உயிர்த்தெழுதல்
- இ. அவர் நித்திய காலமாக உயிரோடிருக்கிறார்.
- ஈ. அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை
உடையவரா இருக்கிறார்.
- யோவான் கீழ்க்கண்டவற்றைக் கண்டார்:
- 1. எழு குத்துவிளக்குகள் (வசனம் 12) - இது 7 சபைகளாயிருந்தது. (வசனம் 20)
- 2. கிறிஸ்துவின் வலது கரத்தில் 7
நட்சத்திரங்கள் (வசனம் 16) இது ஏழு சபைகளின் 7 தூதர்கள் (வசனம் 20)
குறிப்பு: கிறிஸ்து எழு சபைகளின் மத்தியில் இருந்தார்
- எழு சபைகளின் அட்டவணை: (வசனம் 11)
- 1. எபேசு
- 2. சிமிர்னா
- 3. பெர்கமு
- 4. தியத்தீரா
- 5. சர்தை
- 6. பிலதெல்பியா
- 7. லவோதிக்கேயா
- வேத வசனங்கள்
- "நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும்
அந்தமுமாய் இருக்கிறேன்". (வசனம் 8 மற்றும் 4,11,17)
This comment has been removed by the author.
ReplyDeleteவெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை!
ReplyDeleteபரிசுத்த வேதாகமத்தின் கடைசி புத்தகமாகிய அப். யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷமானது, புதிய ஏற்பாட்டு சபையின் அநேக ஆழ்ந்த உபதேச ரீதியான சத்தியங்களுக்கு முதன்மையான ஓன்றாயிருக்கிறது. இப்புத்தகத்தை ஒருவர் எந்த அளவிற்கு சரியாக விளங்கிக்கொள்ளுகிறாரோ அந்த அளவிற்கே அவரின் மோட்ச பிராயணத்திற்கான உபதேச தெளிவு உண்டாக முடியும். ஆகவே தான் இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்களும், கேட்கிறவர்களும், கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் (வெளி 1:3; 22:7) என கூறப்பட்டிருக்கிறது. சபையின் காலம் முழுவதும் இப்புத்தகத்தின் தீர்க்கதரிசன சத்தியங்களானது, தங்கள் நெற்றிகளில் பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்களாகிய தேவ ஊழியர்களுக்கு (வெளி 14:1; 22:4) காண்பிக்கப்பட்டு (வெளி 1:1; 22:6) அவர்கள் மூலமாக சபைக்கு சாட்சியாக அறிவிக்கப்பட்டு வருகிறது (வெளி 22:16). அவ்விதமாக சபைக்கு சாட்சியாக அறிவிக்கப்பட்ட சத்தியங்கள் சேகரிக்கப்பட்டு ஆக்கியோனின் கிருபையின் அளவுக்குத்தக்க விதத்தில் விளக்கவுரை புத்தகமாக தொகுக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் இணைப்பின் மூலம் அதை பதிவிறக்கம் செய்து வாசித்து பயனடையுங்கள்.
https://cutt.ly/zv8WZAM
...காலம் சமீபமாயிருக்கிறது (வெளி 22:10).