Type Here to Get Search Results !

உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

 



உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்


1) கர்த்தர் பாதுகாக்கிறார் - சங் 31:23

23 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள், உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். 


2) பூரண ஆசிர்வாதம் கிடைக்கும் - நீதி 28:20

20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். 


3) அநேகத்தின் மேல் அதிகாரி - மத் 25:23

23 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 


4) பலன் அளிப்பார் - 1 சாமு 26:23

23 கர்த்தர் அவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக. இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன். 


5) கர்த்தர் சமீபம் - சங் 145:18

18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். 


6) பிழைக்கவே பிழைப்பான் - எசேக் 18:9

9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான், அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 

எசேக்கியேல் 18:9


7) ஊழியத்துக்கு அழைப்பு கிடைக்கும் - 1 தீமோ 1:12

12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 

1 தீமோத்தேயு 1:12



Post a Comment

0 Comments