இயேசு சீஷர்களுக்கு சொன்ன உபதேசம்
2. ஆவியில் எளிமையுள்ளவர்கள்
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத் 5:3).
ஆவியில் எளிமையாக இருப்பதை இந்த உலகம் கோழைத்தனம் என்றும், பயப்படும் சுபாவம் என்றும் கூறுகிறது. பாவத்தின் விளைவினால் தரித்திரம் உண்டாவதாக சிலர் கூறுகிறார்கள். எளிமை ஒரு கண்ணி. இது ஜனங்களை சிறைப்பிடித்து விடும் என்பது ஒரு சிலருடைய கருத்து. இந்த கருத்துக்களின் மத்தியில்தான் இயேசுகிறிஸ்து ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று அறிவிக்கிறார்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்களுக்கு உள்ளவற்றில் திருப்தியாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் நாம மகிமைக்காக தங்களுடைய உலக ஐசுவரியங்களை வெறுமையாக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். ஒரு சிலர் இந்த பூமியில் தரித்திரராக இருக்கலாம். ஆயினும் அவர்கள் ஆவியில் ஐசுவரியவான்களாக இருப்பார்கள். ஒரு சிலர் தரித்திரராகவும் இருப்பார்கள், அதே சமயத்தில் தங்கள் இருதயத்தில் பெருமையுள்ளவர்களாகவும் இருப்பார்கள். நாம் இந்த உலகத்தில் ஐசுவரியவான்களாக இருந்தாலும், தரித்திரராக இருந்தாலும் நமது இருதயம் எளிமையுள்ளதாக இருக்கவேண்டும். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்,
வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், எவ்விடத்திலும்
வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் பவுல் ஆயத்தமாக இருந்ததுபோல நாமும் ஆயத்தமாக இருக்கவேண்டும். எந்த நிலமையிலிருந்தாலும் மனரம்மியமாக இருக்கும்போது நாம் பாக்கியவான்களாக இருப்போம் (பிலி 4:11,12)
இந்த உலகத்தின் ஐசுவரியங்கள்மீது நமது
அஸ்திபாரத்தை போடக்கூடாது. நமது இருதயம் எப்போதும் ஐசுவரியத்தின்மீதே நோக்கமாக இருக்கக்கூடாது. இந்த பூமிக்குரிய ஐசுவரியம் ஒருவரிடத்தில் இல்லையென்றால் அவர் தரித்திரராக ஆவதில்லை. அதேசமயத்தில் தேவன் அவருக்குக் கொடுக்கும் காரியங்களை பெற்றுக்கொள்ளாவிட்டாலோ அல்லது
தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டதை இழந்துபோனாலோ அவர் தரித்திரராக கருதப்படுவார்.
நாம் இந்த உலகத்தில் ஐசுவரியவான்களாக இருந்தாலும் நமது ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஏழைகளை உதாசினம் செய்யக்கூடாது. அவர்கள்மீது இரக்கம் காண்பிக்கவேண்டும். அவர்களுடைய குறைச்சல்களில் நாம் உதவிபுரியவேண்டும். இந்த உலகத்தில் தரித்திரராவதற்கும் நாம் ஆயத்தத்தோடு இருக்கவேண்டும். தரித்திரராகிவிடுவோமோ என்று நாம் பயப்படக்கூடாது. நமது ஐசுவரியம் நமது சந்தோஷத்தை நிர்ணயம்பண்ணக்கூடாது.
அப்போஸ்தலர் பவுல் கட்டப்பட்டிருக்கையில், அக்காலத்து விசுவாசிகள் அவரைக்குறித்து
பரிதபித்தார்கள். பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் அவர்களுக்கு உண்டென்று அறிந்து, அவர்கள் தங்கள் அக்காலத்து விசுவாசிகள் தங்கள் சந்தோஷத்தை தங்களுடைய ஆஸ்திகள் மீது கட்டியெழுப்பவில்லை. ஆகையினால் அவர்களுடைய ஆஸ்திகளை சந்தோஷமாக கொள்ளையிடக்கொடுத்தார்கள். ஆஸ்தி கொள்ளை போனதினால் அவர்களுடைய சந்தோஷம் கொள்ளை போகவில்லை. யோபு தன் ஆவியில் எளிமையுள்ளவராக இருந்தார். அவர் தரித்திரராக ஆனபோது தேவனை அவர் தூஷிக்கவில்லை.
ஆஸ்திகளையும் சந்தோஷமாய் கொள்ளையிடக்கொடுத்தார்கள் (எபி 10:34).
ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்களுடைய பார்வையில் தங்களை தாழ்மையானவர்களாகவும் எளிமையானவர்களாகவும் காண்பார்கள். தங்களைப்பற்றி சிந்தித்துப்பார்க்கும்போது தங்களை உயர்த்தாமல் தங்களை தாழ்த்துவார்கள். தங்களுடைய கிரியைகளையும், எண்ணங்களையும் உயர்த்தாமல் தாழ்த்துவார்கள். தங்களுடைய பார்வையில் தங்களை சிறு பிள்ளைகளாகவே பாவிப்பார்கள்.
அப்போஸ்தலர் பவுல் ஆவிக்குரிய காரியங்களில் ஐசுவரியவானாக இருந்தார். ஆவியானவருடைய அனைத்து வரங்களையும் பெற்றுக்கொண்டார். தேவனுடைய கிருபை நிறைந்தவராக அவர் வல்லமையாக ஊழியம் செய்தார். ஆயினும் அவர் தன்னுடைய ஆவியில் எளிமையுள்ளவராகவே இருந்தார். தன்னைப்பற்றி சிந்தித்துப்பார்க்கும்போது, தான் எல்லா அப்போஸ்தலர்களிலும் சிறியவன், கடைசியானவன் என்று கருதுகிறார். தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிக்கையிடுகிறார். எல்லோரையும் இரட்சிப்பதற்காக அவர் எல்லோருக்கும் எல்லாமானார். தன்னையே தாழ்த்தினார். தன்னுடைய ஆவியில் தன்னைப்பற்றி எளிமையாகவே சிந்தனைபண்ணினார். தேவனை பெரியவராகவும் தன்னை சிறியவனாகவும் நினைத்தார். இயேசுகிறிஸ்துவை பரிசுத்தமுள்ளவராகவும் தன்னை பாவிகளில் பிரதான பாவியாகவும் அறிக்கையிட்டார். இயேசுகிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் எல்லாமுமானவர் என்று கூறி அவரில்லாமல் தான் ஒன்றுமில்லையென்று தன்னைத்தாழ்த்துகிறார்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் தங்களுடைய சுய நீதியையும், சுய பலத்தையும் பெருமையாக நினைக்கமாட்டார்கள். தேவனுடைய நீதியையும் அவருடைய கிருபையையும் மேன்மைப்படுத்துவார்கள். இவர்களிடத்தில்
பெருமையான இருதயம் இராது. இவர்களுடைய இருதயம் நொறுங்குண்டதாக இருக்கும். ஆயக்காரன் உலகப்பிரகாரமாக ஐசுவரியவான். ஆனாலும் தன் இருதயத்தில் நொறுங்குண்டவனாக இருக்கிறான். இயேசுகிறிஸ்துவிடம் அவருடைய கிருபைக்காக கெஞ்சுகிறான். இதுவே ஆவியில் எளிமையாக இருக்கும் சுபாவமாகும். நமக்கு எப்போதுமே தேவனுடைய கிருபை தேவைப்படுகிறது. ஆகையினால் நம்மைப்பற்றி நினைக்கும்போது நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருப்பதாக நினைக்கவேண்டும். தேவனுடைய சமுகத்தில் நின்று நமது உள்ளத்தில் எந்தவித பெருமையுமில்லாமல், அவருடைய இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் கெஞ்சி மன்றாடவேண்டும்.
விசுவாசிகளிடம் காணப்படவேண்டிய சுபாவங்களில் ஆவியில் எளிமையாக இருப்பதே. முதலாவதாக கூறப்பட்டிருக்கிறது. உலகத்தின் தத்துவ ஞானிகள் ஏழ்மையை மேன்மைப்படுத்துவதில்லை. ஆனால் இயேசுகிறிஸ்துவோ ஆவியில் எளிமையாக இருப்பதையே முதலாவது சுபாவமாக இங்கு குறிப்பிடுகிறார். எல்லா கிருபைகளும் தாழ்மை என்னும் அஸ்திபாரத்தின்மீதே கட்டப்பட்டிருக்கிறது.
உயரமாக கட்ட விரும்புகிறவர்கள் ஆழமாக அஸ்திபாரம் போடவேண்டும். தங்களை உயர்த்துகிறவர்கள் தங்களையே தாழ்த்தவேண்டும். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவனோ உயர்த்தப்படுவான்.
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசுகிறிஸ்து நம்மை அன்போடு அழைக்கிறார். நமது ஆவியில் நாம் எளிமையுள்ளவர்களாக இருந்தால்தான் இயேசுகிறிஸ்துவின் அழைப்பு நமது செவிகளில் கேட்கும். இருதயத்தில் பெருமையிருந்தால் காதுகள் சத்தியத்திற்கு அடைத்துக்கொள்ளும்.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். இந்த பூமியில் அவர்கள் பாக்கியவான்கள். தேவன் இவர்களை தமது கிருபையுள்ள பார்வையினால் பார்க்கிறார். இவர்களுக்கு விரோதமாக எந்தத்தீங்கும் நேரிடாதவாறு தேவன் இவர்களை பாதுகாக்கிறார். ஆவியில் பெருமையுள்ளவர்கள் நிதானமிழந்து அலைவார்கள். ஆவியில் எளிமையுள்ளவர்கள் கர்த்தருடைய சமுகத்தில் அமைதலாக வாசம்பண்ணுவார்கள்.
பரலோக ராஜ்யம் ஆவியில்
எளிமையுள்ளவர்களுடையது. மகிமையின் ராஜ்யம் இவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. கிருபையின் ராஜ்யத்தில் எளிமையுள்ள ஆவிகளுக்கே இடமுள்ளது. பெருமையுள்ள ஆவிகள் இந்த பூமியின் மகிமையினால் சிக்கித் தவிக்கும். உலகத்தின் ஐசுவரியம் பூமியின் ராஜ்ஜியத்திற்குரியது. ஐசுவரியம் பூமிக்குரிய மகிமையைத் தேடும். ஆவியில் எளிமையுள்ளவர்களோ பரலோக ராஜ்யத்தின் மகிமையைப் பெற்றுக்கொள்வார்கள்.
ஐசுவரியவான்களாக இருந்தாலும், தங்களுடைய இருதயங்களில் போதுமென்ற திருப்தியோடிருந்து, இருதயங்களில் எளிமையோடிருக்கிறவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் ஐசுவரியவான்களாக இருந்தாலும் தேவனுடைய ஊழியக்காரியங்களுக்காக மன உற்சாகமாகவும், தாராளமாகவும் செலவு செய்வார்கள்.
பாக்கியவான்கள்
1.ஆவியில் எளிமையுள்ளவர்கள் (மத் 5:3; மத் 11:28-30; சங் 51:17; ஏசா 57:15; ஏசா 66:2)
2. துயரப்படுகிறவர்கள் (மத் 5:4; ஏசா 61:2; யாக் 4:9; 2கொரி 7:9-11)
3. சாந்தகுணமுள்ளவர்கள் (மத் 5:5; மத் 11:29; சங் 37:11; பேதுரு 3:4)
4. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் (மத் 5:6; சங் 34:10; சங் 42:1-3; சங் 63:1; சங் 84:2; யோவான் 7:37-39)
5.இரக்கமுள்ளவர்கள் (மத் 5:7; மத் 18:27; 1பேதுரு 3:8)
6. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் (மத் 5:8; பிலி 4:8; 1தீமோ 1:5; 1தீமோ 3:9; 1தீமோ 5:22; 1பேதுரு 1:22)
7. சமாதானம்பண்ணுகிறவர்கள் (மத் 5:9; ரோமர் 14:19; 1கொரி 13)
8. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள். கர்த்தர் நிமித்தம் பலவித தீமையான மொழிகளையும் அவர்கள்பேரில் பொய்யாய்ச் சொல்லி துன்பப்படுத்தப் படுகிறவர்கள் (மத் 5:10-12; மத் 10:16-28; 1கொரி 13; 1பேதுரு 3:14-17; 1பேதுரு 4:3-19)