வெளி 9ஆம் அதிகாரம் விளக்கம்

வெளி 9ஆம் அதிகாரம் விளக்கம்

ஐந்தாம் தூதனும், ஆறாம் தூதனும் எக்காளம் ஊதுகிறார்கள். அதைத் தொடர்ந்து நடைபெறுகிற சம்பவங்கள் இந்த அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதுகிறான் (வெளி 9:1-12). ஆறாம் தூதன் எக்காளம் ஊதுகிறான் (வெளி 9:13-21).

ஐந்தாம் எக்காளம் வெளி 9:1-4)

வெளி 9:1. ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலி ருத்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

வெளி 9:2. அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அத்தக் குழியிலி ருந்து புகை எழும்பிற்று அத்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது

வெளி 9:3. அத்தப் புகையிலிருத்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை
கொடுக்கப்பட்டது.

வெளி 9:4. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

பரலோகத்திலே தேவனுக்கு முன்பாக ஏழுதூதர்கள் நிற்கிறார்கள், அவர்களுக்கு எழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக ஒவ்வொரு தூதனும் உங்களுடைய எக்காளத்தை ஊத்துகிறார்கள் இதுவரையிலும் நான்கு தூதர்கள் எக்காளம் ஊதி விட்டார்கள். இன்னும் மூன்று தூதர்கள் எக்காளம் ஊத போகிறார்கள் இப்போது ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதுகிறான்.

ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினபோது வானத்திலிருந்து பூமியின் மேல் ஒரு நட்சத்திரம் விழுகிறது. அந்த நட்சத்திரம் ஒரு ஆள்தத்துவ பண்புள்ள நபராக இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவனுக்கு பாதாளக்குழியின் திற
வுகோல் கொடுக்கப்படுகிறது. இந்தத் திறவுகோல் சாத்தானுடைய திறவுகோலாயிற்று. இந்தத் திறவுகோலால் பாதாளக்குழியைத் திறக்கமுடியும் திறக்கப்பட்ட பாதாளக்குழியிலிருந்து அந்தகார சக்திகள் கிறிஸ்துவின் சபைக்கு விரோதமாக எழும்பி வருகிறார்கள்.

பாதாளத்தின் திறவுகோலைப் பெற்றுக்கொண்டவன் பாதாளக்குழியைத் திறக்கிறான் உடனே பெருஞ்சூலையினால் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. இது சாத்தானுடைய கிரியை. மனுஷர் மத்தியிலே வெளிச்சமும், தேவனைப்பற்றிய ஞானமும் இருப்பதை சாத்தான் தடை பண்ணி போடுகிறான் வெளிச்சத்தை நீக்கி அங்கு இருளைக் கொண்டுவருகிறான் இருள் வரும்போது அந்தகாரமுண்டாகும். இருளில் நம் போகும் பாதை இன்னதென்று தெரியாமல் தடுமாறும் தடுமாறுகிற ஆத்துமாக்களை சாத்தான் வஞ்சகமாகப் பிடித்து, அவர்களை தன்னுடைய பாதையிலே வழிநடத்திச் செல்லுவான். வஞ்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் தாங்கள் யாரை பின்பற்றுகிறோம் என்பது தெரியாமல், சாத்தானைப் பின்பற்றுவார்கள்.

பாதாளக்குழி திறக்கப்பட்டபோது, அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று. சூரியனும் ஆகாயமும் அந்தப் புகையினால் அந்தகாரப்பட்டது. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் வந்தது தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை சேதப்படுத்துகிறது அதிகாரம் இந்த வெட்டுக்கிளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவன் தாமே இவற்றிற்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். தேவன் எந்த அளவுக்கு அனுமதிக்கிறார் அந்த அளவுக்கு மாத்திரமே அவைகளால் மனுஷரை வேதனைப்படுத்த முடியும்.

புகையிலிருந்து புறப்பட்டு வருகிற வெட்டுக்கிளிகளுக்கு பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வல்லமையினால் இவை மனிதரைச் சேதப்படுத்தும், இராணுவத்திலுள்ள சேனைகளைப்போல இசை பட்டயத்தாலும் அக்கினியினாலும் எல்லாவற்றையும்

அழித்துப்போடாது எல்லாவற்றையும் அழிக்கும் உத்தரவு இவற்றிற்குக் கொடுக்கப்படவில்லை. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும், எந்த மரத்தையும் இந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தாது. ஏனெனில் இவற்றை சேதப்படுத்துகிற உத்தரவு இவற்றிற்குக் கொடுக்கப்படவில்லை.

கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுடைய நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தயாரித்திருக்கிறார்கள் துன்மார்க்கரோ தேவனுடைய முத்திரையைத் தரித்திருப்பதில்லை . தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை மாத்திரம் சேதப்படுத்த இந்த வெட்டுக்கிளிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. மனுஷரைச் சேதப்படுத்தும்போது வெட்டுக்கிளிகள் அவர்களுடைய நெற்றிகளைப் பார்க்கும் நெற்றிகளில் தேவனுடைய முத்திரை தரிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஒரு சேதமும் இல்லை.

தேவனுடைய முத்திரை தரிக்கப்படாதிருந்தால் அவர்களுக்கு வெட்டுக்கிளிகளினால் சாதமுண்டு தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை இந்த வெட்டுக்கிளிகள், சேதப்படுத்தும், அவர்களை சேதப்படுத்துகிற உத்தரவு மாத்திரமே வெட்டுக்கிளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களை கொலைசெய்யும்படிக்கு இந்த வெட்டுக்கிளிகளுக்கு உத்தரவு கொடுக்கப்படவில்லை.

ஐந்துமாதமளவும் வெளி 9:15,6

வெளி 3:5 மூலம் அவர்களைக் கொலை செய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்கள் வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவர்கள் செய்யும் வேதளை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப் போலிருக்கும்.

வெளி 9:6. அந்நாட்களில் மனிதர்கள் சாவைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.

பாதாளக்குழி திறக்கப்பட்டவுடன் அதிலிருந்து புகை எழும்பிற்று. அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் வருகிறது. இவற்றிற்கு சர்வ அதிகாரம் கொடுக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு மாத்திரமே இவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவற்றிற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரமும் நித்திய காலத்திற்குரிய அதிகாரமல்ல. ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்குமே இவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெட்டுக்கிளிகள் ஐந்து மாதமளவும் தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரை வேதனைப்படுத்தும் உத்தரவு பெற்றிருக்கிறது மிகவும் குறுகிய காலம்தான் ஐந்து மாதத்திற்கு பின்பு இந்த வெட்டுக்கிளிகளுக்கு மனுஷரைச்
சேதப்படுத்துகிற அதிகாரமில்லை.

வெட்டுக்கிளிகளினால் உண்டாகும் வேதனை ஐந்து மாதம் மாத்திரம் உண்டாகும். குறுகிய காலம்தான். ஆனாலும் வெட்டுக்கிளியின் உண்டாகும் வேதனை மிகவும் கொடிய வேதனையாக இருக்கும். அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையை போலிருக்கும் ஐந்துமாத காலத்திற்கு வெட்டுக்கிளிகள் தேளைப்போல மனுஷரைக் கொட்டினால், அந்த வேதனையை மனுஷரால் தாங்கிக்கொள்ள முடியாது.

வெட்டுக்கிளிகளின் உருவம் வெளி 9:7-10

வெளி 9:7. அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய மலைகளின் மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளில் இருந்தன அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள் போலிருந்தன

வெளி 9:8. அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள் போலிருந்தன

வெளி 9:9. இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.

வெளி 9:10. அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அத்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐத்து மாதமளவும் மனிதரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன.

வெட்டுக்கிளிகள் அளவில் பெரியவையாகயிருக்கிறது. இவற்றின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கொப்பாயிருக்கிறது.

அவைகளுடைய தலைகளின் மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகள் இருக்கின்றன. இது மெய்யான கிரீடம் இது கிரீடம் போன்ற ஒன்று மாய்மாலமான கிரீடம் கிரீடம் அதிகாரத்திற்கு அடையாளம். வெட்டுக்கிளிகளிடம் மெய்யான அதிகாரமில்லை . ஆனால் தங்களிடம் அதிகாரம் இருப்பதுபோல இவை மாய்மாலம் பண்ணுகிறது.

வெட்டுக்கிளிகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள் போலிருக்கிறது. இசை பிசாசுகளின் ஆவிகள். ஆனாலும் மனுஷரிடத்தில் காணப்படுகிற புத்தியும், ஞானமும் தங்களிடத்தில் இருப்பதுபோல மாய்மாலம் பண்ணுகின்றன.

வெட்டுக்கிளிகள் பார்ப்பதற்கு அழகாகயிருக்கிறது. தங்களை அழகாகக் காண்பிப்பதற்காக இவை உங்களை அலங்கரித்துக்கொள்கின்றன. இவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல் போலிருக்கிறது

ஸ்திரீகள் மென்மையான சுபாவம் உள்ளவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும் ஸ்திரீகளுடைய கூந்தல் போல இருப்பதால் இவை தங்களை மென்மையான பாவமுள்ளவைபோல காண்பிக்கின்றன. ஆனால் மெய்யாகவே இந்த வெட்டுக்கிளிகள் கொடூர சுபாவமுள்ளவை. இவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போல் இருக்கின்றன

வெட்டுக்கிளிகளுக்கு இருப்பு கவசங்களைப்போல மார்க்கவசங்கள் இருக்கின்றன. பூமியிலுள்ள வல்லமைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள் எழுவதற்கு இசை இருப்பு கவசங்களை அமைந்திருக்கின்றன இவை யுத்தத்திற்கு ஆயத்தமாய்ப் புறப்படுகின்றன.

வெட்டுக்கிளிகள் சாத்தானுடைய கருவிகள். இசை இந்த உலகத்திலே மகா இரைச்சலாய் ஒலமிடுகின்றன. இவைகளுடைய சிறகுகளின் இரைச்சல், யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங்குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கொப்பாயிருக்கின்றது. உங்களுடைய இரைச்சலினால் இவை மனுஷரைப் பயமுறுத்தும்

வெட்டுக்கிளிகளுக்கு ஸ்திரீகளுடைய கூந்தலைப் போல கூந்தல் இருக்கிறது பார்ப்பதற்குத் உங்களை மென்மையானவர்களைப்போல காண்பித்துக்கொள்கின்றன. ஆனால் இது மாய்மாலமான தோற்றம் ஸ்திரீகளைப்போல இவை மென்மையாய் பேசுவதில்லை கம்பீரமாய்ப் பேசுகிறது. இவற்றின் சிறகுகள் பேரிரைச்சலாக கத்துகிறது. இரதங்கள் இரைச்சலுக்கொப்பாக இவை ஒலமிடுகிறது. வெட்டுக்கிளிகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல் போல் இருந்தாலும் இவற்றிற்கு தேள்களின் வால்களுக்கொப்பான வால்கள் இருக்கிறது. அந்த வால்களில் கொடுக்குகளும் இருக்கிறது. ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு இந்த வெட்டுக்கிளிகள் அதிகாரம் பெற்றிருக்கிறது. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை ஏராளம் இவற்றிற்கு ஒரு ராஜா இருக்கிறார்.

அபெத்தோன், அப்பொல்லியோன் வெளி 9:11,12

வெளி 9:11. அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

வெளி 9:12. முதலாம் - ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.

பாதாளத்திலிருந்து ஏராளமான வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வருகிறது. இவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, இந்த ராஜா ஒரு தூதனாக இங்கு விவரிக்கப்பட்டிருக்கிறது இவன்

பரலோகத்தின் தூதன் இவன் பாதாளத்தின் தூதன் பாதாளத்திலே விழுந்துபோன தூதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆழம் காணமுடியாத பாதாளத்தில் விழுந்துவிட்டார்கள். இவனுடைய பெயர் அபெத்தோன். இது எபிரெய பாஷை பெயர் கிரேக்கு பாஷையிலே இவனுடைய பெயர் அப்பொல்லியோன். இந்தப் பெயருக்கு அழிக்கிறான்” என்பது பொருள். இதுதான் இவனுடைய வேலை. மனுஷரை இவன் அழித்துப்போடுவான். தன்னுடைய அழிக்கும் வேலையை இவன் சுறுசுறுப்பாய்ச் செய்கிறார்

ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதியபோது இந்த ஆபத்து உண்டாயிற்று. ஆபத்து கடந்து போயிட்டு இது முதலாம் ஆபத்து, இன்னும் இரண்டு எக்காளங்கள் ஊத வேண்டியதாயிருக்கிறது ஆகையினால் இந்த முதலாம் ஆபத்துக்குப் பின்பு, இன்னும் இரண்டு ஆபத்துக்கள் வரப்போகிறது ஆறாம் எக்காளம் ஊதப்படும்போது ஒரு ஆபத்தும் ஏழாம் எக்காளம் ஊதப்படும்போது மற்றும் ஒரு ஆபத்தும் வரும்.

ஆறாம் எக்காளம் வெளி 9 : 13,14

வெளி 9:13. ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; | அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்படத்தின் நான்கு காம்புகளிலிருந்து ஒரு சத்தந்தோன்றி,

வெளி 9:14. எக்காளத்தைப் பிடித்திருத்த ஆறாம் தூதனை நோக்கி ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.

ஆறாம் தூதன் எக்காளம் ஊதுகிறான். தேசங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தமாயிருக்கிறது. அவருடைய கோபாக்கினையை அனுபவிப்பதற்கு தேசங்கள் பாத்திரமுள்ளவைகளாயிருக்கிறது. தேவன் தம்முடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிலரைத் தம்முடைய கருவிகளாகப் பயன்படுத்துகிறார். தேவனுடைய திட்டத்தின் பிரகாரம் அந்தக் சுருவிகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது

ஆறாம் தூதன் எக்காளம் ஊதின போது, தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் தோன்றிற்று. அந்தச் சத்தம் ஆறாம் தூதனை நோக்கிப் பேசிற்று. அந்தச் சத்தம் அவனிடம் "ஐபிராத் என்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு" என்று சொல்லிற்று நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்படும் வரையிலும் அவர்கள் யாருக்கும் சேதம் பண்ண மாட்டார்கள் கர்த்த ர் அனுமதி கொடுக்கும்போது மாத்திரமே அவர்கள் அவிழ்த்து விடப்படுவார்கள் கர்த்த ர் இப்போது இந்த நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடுவதற்கு சித்த கொண்டிருக்கிறார்.

நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள் வெளி 9:15

வெளி 9:15. அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும் படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள்.

தேவனுக்கு முன்பாகயிருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து தோன்றின சத்தத்தின் பிரகாரம், இந்த நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்படுகிறார்கள் மனுஷரில் மூன்றிலொருபங்கை கொல்லும்படி இவர்களுக்கு | அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகார வரம்புக்குட்பட்டுத்தான் இவர்கள் மனுஷரைக் கொல்லமுடியும். எல்லா மனுஷரையும் கொன்றுபோடுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை மனுஷரில் மூன்றிலொருபங்கை மாத்திரமே இந்த நான்கு தூதர்களால் கொல்ல முடியும்.

நான்கு தூதர்களுக்கும் நித்தியகால அதிகாரம் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் ஒரு காலவரம்புக்குட்பட்டிருக்கிறது ஒரு மணி நேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் மாத்திரமே இவர்களுக்கு | அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காலத்திற்கு மாத்திரமே இந்த நான்கு தூதர்களும் ஆயத்தமாக்க பட்டிருக்கிறார்கள்.

குதிரைச் சேனைகள் வெளி 9:16-19

வெளி 9:16. குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடி இருந்தால் அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.

வெளி 9:17. குதிரைகளையும் அவைகளின் மேல், ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்ட விதமாவது அவர்கள் அக்கினி நீலதிறமும் கந்தக திறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந் நாங்கள் குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலி ருந்தன; அவைகளுடைய வாய்களிலி ருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.

வெளி 9:18. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கத்தகம் என்னும் இம்மூன்றிலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

வெளி 9:19. அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.

மனுஷரில் மூன்றிலொருபங்கை கொல்லும்படிக்கு நான்கு தூதர்களும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். மனுஷரைக் கொல்லுகிற தங்கள் வேலையிலே இவர்கள் குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களைப் பயன்படுத்துகிறார்கள். கொல்லப்படவேண்டும் ஜனங்கள் ஏராளமாயிருக்கிறார்கள். மொத்த மனுஷஜனத்தொகையில் மூன்றிலொருபங்கு கொல்லப்படவேண்டும் வேண்டும் அதற்கு நான்கு தூதர்களும் -குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களை பயன்படுத்துகிறார்கள். இவர்களுடைய தொகை இருபது கோடியாகும். குதிரைகளின் எண்ணிக்கை இருபது கோடியாக இருக்கும்போது குதிரை வீரர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் இருக்கும் என்பதை நாமே நிதானித்து அறிந்து கொள்ள வேண்டும் இந்தச் சேனையின் எண்ணிக்கை மிகவும் அதிகம் இவர்கள் திரள்கூட்டமான சேனையாக இருக்கிறார்கள்.

குதிரைகளின் மேல் குதிரை வீரர்கள் ஏறி இருக்கிறார்கள் அவர்கள் அக்கினி நிறம் நீலநிறமுடையவர்கள். அவர்களுக்கு கந்தக நிறம் மார்க்கவசங்கள் இருக்கிறது. குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களுடைய தலைகளை போலிருக்கிறது

குதிரைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும், புகையும், கந்தகமும் புறப்படுகிறது. அவைகளுடைய வாயிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில்
மூன்றிலொருபங்கு கொல்லப்படுகிறார்கள்.

இருபதுகோடி குதிரைகளுக்கும் வல்லமை இருக்கிறது குதிரைகளின் வல்லமை அவர்களுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது. அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கொப்பானவைகளாயிருக்கிறது. வால்களில் தலைகளும் இருக்கிறது. குதிரைகள் தங்களுடைய வால்களாலே மனுஷரைச் சேதப்படுத்துகிறது.

மனந்திரும்பவில்லை வெளி 9 : 20,21

வெளி 9:20. அப்படியிருந்தும், அத்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனிதர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனத்திரும்பவுமில்லை;

தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும்விட்டு மனந்திரும்பவுமில்லை. வெளிப்படுத்தின விசேஷம் 9:21

தேவனுடைய நியாயத்தீர்ப்பு மனுஷர்மீ து வருகிறது மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்படுகிறார்கள். மீதமுள்ளோர் மாத்திரமே உயிரோடிருக்கிறார் கள் உயிரோடிருக்கிறவர்கள் தேவனுடைய கோபாக்கினையைப் பார்க்கிறார்கள். மனுஷர்மீ து ஆக்கினை வருவதையும் பார்க்கிறார்கள். மனிதர்கள் கொல்லப்படுவதைப் பார்க்கிறார்கள். ஆனாலும் உயிரோடிருக்கிறவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்ப மறுத்து விடுகிறார்கள் அவர்கள் தங்கள் பொல்லாத கிரியைகளை விட்டு மனம் திருந்தவில்லை தங்கள் கொலை பாதகங்களையும் தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனம் திரும்பவில்லை

மனுஷரில் மூன்றிலொருபங்கு தேவனுடைய வாதையினால் கொல்லப்படுவதை, கொல்லப்படாத மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள் பார்த்தும் அவர்கள் கர்த்தரை விசுவாசிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராகவும், ஆண்டவராகவும் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் ஒன்றான மெய் தேவனை ஆராதிக்கவும் இல்லை உண்மையான
தேவனை வணங்குவதற்குப் பதிலாக அவர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால்

செய்யப்பட்ட | -விய விக்கிரங்களையும் வணங்குகிறார்கள் இந்த விக்கிரகங்கள் காணவும் கேட்கவும் நடக்கவும் மாட்டாதவைகள். அப்படியிருந்தும் கொல்லப்படாத மற்ற மனிதர்கள் ஜீவனுள்ள தேவனை வணங்குவதற்குப் பதிலாக, ஜீவனில்லாத விக்கிரகங்களை வணங்குகிறார்கள்.

மனுஷருடைய பாவத்தினிமித்தமாகவே கர்த்தர் அவர்களைத் தண்டிக்கிறார். அவர்களுடைய துன்மார்க்க தினிமித்தமாய்
மனுஷரில் மூன்றிலொருபங்கை கொன்றுபோட அனுமதி கொடுக்கிறார் உங்களுக்கு கடுமையான தண்டனை வந்தாலும், மனிதர்கள் தங்கள் பழைய பாவஜீவியத்தில் தொடர்ந்து நினைத்திருக்கிறார்கள் பரலோகத்திலிருந்து தேவகோபாக்கினை அவர்களுக்கு விரோதமாக வந்திருக்கிறது ஆனால் பூமியிலுள்ள மனுஷரோ அதைப்பற்றி அக்கரை காண்பிக்கவில்லை. தங்கள் பாவங்களிலிருந்து அவர்கள்
மனந்திரும்பும் இல்லை.

தேவனுடைய நியாயத்தீர்ப்பு நம்மீது வரும்போது நாம் உடனே மனந்திரும்பி விட வேண்டும் நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்தக்கூடாது இருதயத்தைக் கடினப்படுத்தி, மனந்திரும்பாத பாவிகள் உங்களுக்கு அழிவை வருவித்துக் கொள்வார்கள் கர்த்தராகிய தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. அவர் நமக்கு கிருபையைக் காண்பிக்கும்போது, நாம் தேவகிருபையைப் பற்றிக்கொள்ள வேண்டும் மனந்திரும்ப வேண்டும் இரட்சிக்கப்படவேண்டும் தேவகோபாக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் துணிகரமாகப் பாவம் செய்யக்கூடாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.