வெளி 8ஆம் அதிகாரம் விளக்கம்

வெளி 8ஆம் அதிகாரம் விளக்கம்

ஆட்டுக்குட்டியானவர் ஏழாம் முத்திரை உடைக்கிறார் (வெளி 8:1). தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்கள் (வெளி 8:2) பொற்கலசத்தை பிடித்து பலிபீடத்தின்மேல் நிற்கிற வேறொரு தூதன் (வெளி 8:3-5). எழு எக்காளங்கள் (வெளி 8:6-13)

ஏழாம் முத்திரை வெளி 8:1

வெளி 8:1. அவர் ஏழாம் முத்திரை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

ஆட்டுக்குட்டியானவர் ஏழாம் முத்திரையை உடைக்கிறார். இப்போது யோவான் அநேக புதிய சம்பவங்களைத் தரிசிக்கிறார். ஆட்டுக்குட்டியானவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது. பரலோகத்தில் அமைதலுண்டாயிற்று. இந்த அமைதல்
ஏறக்குறைய அரை மணி நேரமளவும் இருந்தது எல்லோரும் எதிர்பார்ப்போடு அமைதியாக இருக்கிறார்கள் கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை அற்புதமாகப் பராமரிக்கிறார். தேவனுடைய சபையார் பரலோகத்திலும் பூமியிலும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். தேவன் இனிமேல் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காண்பதற்கு பரிசுத்தவான்களெல்லோரும் அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைதி எதிர்பார்ப்பின் அமைதி.

ஏழு தூதர்கள் வெளி 8:2

வெளி 8:2. பின்பு தேவனுக்குமுன்பாக திற்கிற ஏழு தூதர்களையும் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

ஆட்டுக்குட்டியானவர் ஏழாம் முத்திரை உடைக்கிறார். அப்போது என்ன நடைபெறும் என்று பார்ப்பதற்கு யோவான் மிகுந்த ஆவலாயிருக்கிறார். ஆனால் அங்கு உடனே ஒன்றும் நடைபெறவில்லை பரலோகத்தில் அமைதலுண்டாயிற்று யாரும் ஆர்ப்பரிக்கவுமில்லை. யாரும் ஒரு கிரியையும் நடப்பிக்கவில்லை . எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள் ஏறக்குறைய அரைமணி நேரம் வும் இந்த அமைதல் அங்கு உண்டாயிற்று

அரைமணி நேர அமைதிக்குப் பின்பு தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்கள் யோவான் காண்கிறார். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த எக்காளங்களை - எழுதூதர்களும் தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாக ஊதவேண்டும்.

வேறொரு தூதன் வெளி 8:3-5

 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 8:3

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.  வெளிப்படுத்தின விசேஷம் 8:4

 பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான், உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின. வெளிப்படுத்தின விசேஷம் 8:5

ஏழுதூதர்கள் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது அங்கு வேறொரு தூதன் வருகிறான். அவன் பலிபீடத்தின் படியிலே நிற்கிறான். தன்னுடைய கையில் அவன் தூபங்காட்டும் கொற்கலசத்தைப் பிடித்திருக்கிறான். எக்காளம் ஊதப்படுவதற்கு முன்பாக தூப்பலி செலுத்தப்படுகிறது சிங்காசனத்திற்கு முன்பாக பொற்பீடம் இருக்கிறது இந்தப் பொற்பீடத்தில் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் இந்தத் தூதனுக்குக் கொடுக்கப்படுகிறது.

கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோருமே ஜெபிக்கிற ஜனங்களாகவே இருக்கிறார்கள். தேவனுடைய பிள்ளைகள் அவருடைய சமூகத்தில் ஊமையாய் இருப்பதில்லை ஒருவேளை கர்த்தரோடு நம்முடைய வாய் பேசவில்லை என்றாலும் நம்முடைய இருதயம் அவரோடு பேசும் நம்முடைய இருதயத்தில் கர்த்தர் வாசம் பண்ணுகிறார்

நம்முடைய ஆபத்து வேளைகள் நமக்கு ஜெபிக்கிற வேலைகளாக இருக்க வேண்டும் சோதனைகளும், வேதனைகளும், உபத்திரவங்களும் வரும்போது நாம் ஜெபம் பண்ணவேண்டும் ஜெபிக்கிற வேளை எப்போதும் நம்முடைய ஜெபத்திற்கு கர்த்தரிடத்திலிருந்து பதிலை எதிர்பார்க்கிற வேளையாகயிருக்கும். நம்முடைய ஜீவியத்தில் பயம் இருந்தாலும், நம்பிக்கை இருந்தாலும் அதை கர்த்தருடைய சமூகத்தில் சமர்ப்பிக்கவேண்டும் ஜெயம் இல்லையேல் நமக்கு ஜயமில்லை

நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய சமூகத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேச வேண்டும் அத்துடன் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற பொற்பீடத்தின் மேல் தூபவர்க்கம் செலுத்தப்பட வேண்டும் நம்முடைய துதிகளும் ஸ்தோத்திரங்களும் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களும் பொற்பீடத்தின்மேல் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தேவனுக்கு முன்பாக எழும்பவேண்டும். கர்த்தருக்குச் சித்தமான வழியில் நாம் ஜெபிக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே நம்முடைய ஜெபத்தைக் கேட்டார் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கொடுப்பார்.

பரலோகத்திலுள்ள தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு பூமியிலே கிரியை செய்கிறார். இதன் மூலமாய் இப்பிரபஞ்சத்தில் அநேக மாற்றங்கள் உண்டாகிறது. தூதனுடைய கையிலிருந்து தூபவர்க்கத்தின் புகையானது தேவனுக்கு முன்பாக எழும்புகிறது. அதன்பின்பு அந்தத் தூதன், தூபகலசத்தை எடுத்து அதை பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டுக்கிறான். உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சிகளும் உண்டாயின.

பரலோகத்திலே ஏழாம் முத்திரை உடைக்கப்பட்டபோது, ஏறக்குறைய அரை மணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று இப்போதோ சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சிகளும் உண்டாகிறது. தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்கள், தங்கள் எக்காளங்களை ஊதுவதற்கு முன்பாக, பரலோகத்திலே மிகப்பெரிய ஆயத்தம் நடைபெறுகிறது.

ஏழு எக்காளங்களையுடைய ஏழுதூதர்கள் வெளி 8:6

வெளி 8:6. அப்பொழுது ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.

பரலோகத்தில் நிலவிய அமைதி அரைமணி நேரத்தில் முடிந்துபோயிற்று இதன்பின்பு சத்தங்களும் இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சிகளும் உண்டாயிற்று இதுவரையிலும் தங்கள் கரங்களிலே ஏழுஎக்காளங்களைப் பிடித்திருந்தவர்கள், இப்போது அவற்றை ஊதுகிறதற்கு தங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள்.

எக்காளம் தூதர்களுடைய கைகளில் இருந்தாலும் அவர்கள் அதை உங்கள் சுயஇஷ்டத்தின் பிரகாரம் ஊதக்கூடாது கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக அவர் நமக்கு கொடுத்திருக்கிற கருவிகளைப் பயன்படுத்தவேண்டும். தூதர்கள் எக்காளங்களை ஊதுவதற்கு முன்பாக தங்களை ஆயத்தப்படுத்துகிறார்கள். ஆயத்தமில்லாமல் எந்த வேலையையும் அவசரம் அவசரமாகச் செய்யக்கூடாது கர்த்தருடைய பரிசுத்தவான்களாகிய நமக்கு ஜெட் ஆயத்தம் வேண்டும். வேதவாசிப்பு ஆயத்தம் வேண்டும். ஊழிய ஆயத்தம் வேண்டும்.

முதலாம் எக்காளம் வெளி 8:7

வெளி 8:7. முதலாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது இரத்தங்கலத்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்து போயிற்று.

முதலாம் தூதன் எக்காளம் ஊதுகிறான். அப்போது மிகவும் பயங்கரமான புயல்காற்றுபோல ஒன்று உண்டாயிற்று. இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி அவை பூமியிலே கொட்டப்படுகிறது. கல்மழையும் அக்கினியும் ஒரு விநோதமான கலவை இது பூமியின் மேல் கொட்டப்பட்டதினால் பூமியில் பேரழிவு உண்டாயிற்று ஆனால் அந்த அழிவு ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது பூமியிலுள்ள மரங்களில் மூன்றிலொரு பங்கு மாத்திரம் வெந்துபோயிற்று -பசும்புல் எல்லாம் எரிந்துபோயிற்று

கர்த்தருடைய கோபாக்கினை பூமியின் மீது வந்தாலும், கர்த்தர் தம்முடைய கிருபையினால் பூமியை முழுவதுமாக எடுத்துப் போடவில்லை ஆனாலும் தேவனுடைய கோபம் பற்றியெரிகிறது பூமியில் உள்ள மரங்களில் மூன்றிலொருபங்கு மாத்திரம் வெந்து போவதற்கு கர்த்தர் அனுமதி கொடுக்கிறார்.

இரண்டாம் எக்காளம் வெளி 8:8,9

வெளி 8:8. இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொரு பங்கு இரத்தமாயிற்று.

வெளி 8:9. சமுத்திரத்திலிருந்து ஜீவனுள்ள | சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப் போயிற்று கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

இரண்டாம் தூதன் இரண்டாம் எக்காளம் ஊதுகிறான். அப்போது அக்கினியால் எரிகிற பெரிய மலை போன்றது ஒன்று சமுத்திரத்தின் மேல் போடப்படுகிறது இதனால் சமுத்திரத்திற்கு பேரழிவு உண்டாயிற்று | சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. முதலாம் எக்காளம் ஊதப்பட்ட போலவே, இப்போதும் தேவனுடைய கிருபையினால் இந்த அழிவு மூன்றிலொரு பங்கு மாத்திரம் என்று ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது.

அக்கினியால் எரிகிற மழை சமுத்திரத்தில் போடப்பட்டவன் சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொரு பங்கு செத்துப்போயிற்று கப்பல்களில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்புக்கு மத்தியிலும், தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நினைவுகூருகிறார்.

மூன்றாம் எக்காளம் வெளி 8:10,11

வெளி 8:10. மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கு மேலும் தீகுற்றுகளின் மேலும் விழுந்தது.

வெளி 8:11. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப் போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதுகிறான் அப்போது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து வானத்திலிருந்து விழுகிறது இந்த நட்சத்திரத்தினால் பூமியிலுள்ள தண்ணீரில் மிகப்பெரிய சேதமுண்டாயிற்று. இந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர். இது பெரிய நட்சத்திரம். இது தீவட்டியைப்போல எரிந்து வானத்திலிருந்து விழுகிறது. அது பூமியில் விழும்போது, பூமியிலுள்ள ஆறுகளில் மூன்றிலொரு பங்கின் மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுகிறது.

எட்டி என்னும் பெயருக்கு கசப்பு என்று பொருள். வானத்திலிருந்து விழுகிற பெரிய நட்சத்திரம் பூமியிலுள்ள தண்ணீரை கசப்பாக்குகிறது. இதனால் அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர். இந்த நட்சத்திரம் தண்ணீரின்மேல் விழுந்ததினால், தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போல கசப்பாயிற்று. இந்தத் தண்ணீர் ஆரோக்கியமான தண்ணீர் பருகுவதற்கு உகந்ததல்ல. இந்தக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்துப்போனார்கள்.

வானத்திலிருந்து விழுந்த பெரிய நட்சத்திரம் ஆறுகளையும், நீரூற்றுகளையும் விஷத்தன்மையுள்ளதாக மாற்றிவிடுகிறது. கசப்பான இந்த நீரைப் பருகியவர்கள் எல்லோரும் செத்துப்போனார்கள். நம்முடைய ஆத்துமாவுக்குத் தாகமுண்டாகும் போது ஜீவ தண்ணீரை மாத்திரம் பருகவேண்டும். கள்ளப் போதகர்கள் கொடுக்கிற விஷ தண்ணீரைப் பருகினால், நம்முடைய ஆத்துமாவும் செத்துப் போகும்.

நான்காம் எக்காளம் வெளி 8:12

வெளி 8:12. நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியன் மூன்றிலொரு பங்கும் சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியாயிற்று.

நான்காம் தூதன் எக்காளம் ஊதுகிறான். அப்போது இயற்கையில் பேரழிவு உண்டாயிற்று. பகலிலும் இரவிலும் இருள் உண்டாயிற்று. நான்காம் தூதன் எக்காளம் ஊதும்போது சூரியனில் மூன்றிலொருபங்கு சேதப்பட்டது. சந்திரனிலும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கு சேதப்பட்டது. இவையெல்லாம் உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடியவை இவை பிரகாசமாக எரியக்கூடிய ஆனால் இவற்றில் மூன்றிலொருபங்கு இப்போது சேது பட்டுப்போயிற்று ஆகையினால் அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை நமக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியவை. கர்த்தருடைய கோபாக்கினையினால் இவற்றிற்குச் சேதமுண்டாயிற்று கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பில், தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நினைவுகூர்ந்து சூரியனையும் சந்திரனையும், நட்சத்திரங்களையும் பொத்தமாக சேதப்படுத்தவில்லை. அவற்றில் மூன்றிலொருபங்கு மாத்திரம் சேதமாவதற்கு அனுமதிக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில் மொத்தம் இருளடைவதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை. மூன்றிலொருபங்கு மாத்திரம் | இருளடைவதற்கு அனுமதிக்கிறார். இருளின் பாதிப்பு பகலிலும் இருக்கிறது. இரவிலும் இருக்கிறது. பகலில் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமல் போயிற்று இரவிலும் அப்படியே மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமல் போயிற்று.

சுவிசேஷம் ஜனங்கள் மத்தியிலே பிரசங்கிக்கப்படுகிறது. -கர்த்தருடைய வார்த்தை நம்முடைய ஆத்துமாவுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும். சுவிசேஷத்தின்

வசனங்களை ஏற்று கொள்ளவில்லையென்றால் நம்மீது நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும். தேவனோ கிருபையுள்ளவர் நம்மை நீதியாய் நியாயந்தீர்ப்பதற்கு முன்பாக நமக்கு எச்சரிப்புக்களைக் கொடுக்கிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பு மனுஷருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடாது அதற்காகவே தேவன் முன்னெச்சரிப்புகளைக் கொடுக்கிறார். ஒருவேளை தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கள் மனுஷருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்குமென்றால் அதற்கு மனுஷருடைய தப்பிதங்களே காரணம். மனுஷருடைய ஆச்சரியத்திற்கு தேவன் காரணரல்ல.

தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் போது நீதியான கோபாக்கினையை வெளிப்படுத்துகிறார். மனுஷர் தங்கள் பாவத்தினால் பூரணமாய் அழிந்துபோக வேண்டும் தேவனோ நீதியுள்ளவராகவும், அதே வேளையில் கிருபை மிகுந்தவராகவும் இருக்கிறார். தம்முடைய முழு கோபத்தையும் இந்தப் பூமியின் மீது அவர் கொட்டிவிடுவதில்லை தேவன் தம்முடைய கோபத்தைக் கட்டுப்படுத்துகிறார். கோபத்தினால் உண்டாகும் அழிவையும் கட்டுப்படுத்துகிறார். இதனால்தான் தூதர்கள் எக்காளம் ஊதியபோது வானத்திலும் பூமியிலும் பூரண அழிவு உண்டாகாமல், மூன்றிலொருபங்கு மாத்திரமே அழிந்து போகிறது

மற்ற மூன்று எக்காள சத்தங்கள் வெளி 8:13

வெளி 8:13. பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவர கண்டேன் அவன் மகா சத்தமிட்டு இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிற அவர்களுக்கு ஐயோ ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

தேவனுக்கு முன்பாக ஏழு தூதர்கள்
நிற்கிறார்கள். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய எக்காளங்களை ஊத்துகிறார்கள் இதுவரையிலும் நான்கு எக்காளங்கள் ஊதப்பட்டிருக்கிறது. இன்னும் மூன்று எக்காளங்கள் உள்ளது அந்த மூன்று எக்காளங்களும் ஊதப்படும் போது, பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்து வரும் என்று முன்னெச்சரிப்பாகச் சொல்லப்படுகிறது.

ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்து வருகிறான். இவன் விரைவாக வருகிறான் இவனுடைய வேகத்தைக் காண்பிப்பதற்காகவே, இவன் பறந்து வருகிறான் என்று எழுதப்பட்டிருக்கிறது. இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்து வரும் என்று அந்தத் தூதன் சொல்லுகிறான். அவன் மகாசத்தமிட்டு பூமியில் குடியிருக்கிற அவர்களுக்கு ஐயோ ஐயோ, ஐயோ" என்று சொல்லுகிறான்.

இதற்கு முன்பு உண்டான அழிவையும், சேதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இனிமேல் உண்டாகப்போகிற அழிவும் சேதமும் மிகவும் அதிகமாக இருக்கும் இந்த பேரழிவை வலியுறுத்திச் செல்வதற்காக தூதன் மூன்று முறை "ஐயோ" என்று சொல்லுகிறான். பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு மூன்று மடங்கு ஐயோக்கள் உண்டாகும்.

தேவனுடைய கோபம் நம்மீது கொஞ்சமாக வரும்போது, உடனே நாம் மனந்திரும்பி விட வேண்டும் நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, மனந்திரும்பாமல் இருப்போமென்றால், நம்மீது தேவனுடைய கோபம் அதிகமாய் வரும். கர்த்தர் நம்மை சிட்சிக்கும்போது, உடனே மனந்திரும்பிவிடுவது நமக்கு நல்லது மனந்திரும்பாதவர்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு பாவத்தின் சம்பளம் மரணம் கிருபையின் காலத்தில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் நியாயத்தீர்ப்பின் காலத்தில் தேவனுடைய நீதி மாத்திரமே வெளிப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.