வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 7 விளக்கம்
போதகர். சார்லஸ் சதீஷ் குமார் (WMM INDIA)
சுருக்கம்
இந்தப் பிரபஞ்சத்தில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தமாய் உபத்திரவங்களை அனுபவிப்பவர்களுக்கு பரலோகத்திலே விசேஷித்த கிருபைகளும் ஆறுதல்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. காற்று அடியாதபடிக்கு நிறுத்தப்படுகிறது (வெளி 7:1-3). முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கை (வெளி 7:4-8) பரிசுத்தவான்களும் தூதர்களும் கர்த்தரைத் துதித்துப் பாடுகிற பாட்டுக்கள் வெளி 7:9-12 வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிறவர்கள் வெளி 7:13-17),
நான்கு காற்றுகள் வெளி 7:1-3
இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 7:1
ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன், அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: வெளிப்படுத்தின விசேஷம் 7:2
நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். வெளிப்படுத்தின விசேஷம் 7:3
ஆட்டுக்குட்டியானவர் தேவனுடைய வலதுகரத்திலுள்ள புஸ்தகத்தை வாங்குகிறார். அந்தப் புஸ்தகத்தில் ஏழுமுத்திரைகள் போடப்பட்டிருக்கிறது. ஆட்டுக்குட்டியானவர் அந்த முத்திரைகளில் ஆறுமுத்திரைகளை உடைக்கிறார். அதன்பின்பு ஏழாம் முத்திரையை அவர் உடைப்பதற்கு முன்பாக,
அப்போஸ்தலர் யோவான் வேறொரு தரிசனம் காண்கிறார்.
பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் இவர்கள் பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது ஒரு மரத்தின் மேலாவது காற்று அடிக்கவில்லை. இவற்றின்மீது காற்று அடியாதபடிக்கு நான்கு திசைகளிலும், நான்கு தூதர்கள், நான்கு காற்றுகளையும் படித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் காற்றுகள் தேவனுடைய சபைக்கு துன்பங்கள் கொடுக்கக் கூடியவை இவை தேவனுடைய சபைக்கு உபத்திரவங்களும் பிரச்சனைகளையும் கொடுக்கக்கூடியவை. தேவதூதர்கள் இந்தக் காற்றுகளை பிடித்துக்கொண்டார்கள். இதனால் இந்தக் காற்றுகளால் தேவனுடைய சபைகளுக்கு துன்பம் உண்டாக்க முடியவில்லை .
இந்தக் காற்றுகளை வேத பண்டிதர்கள் பிரச்சனைகளின் ஆவிகள் அல்லது தப்பிதங்களின் ஆவிகள் என்று சொல்லுகிறார்கள். இவை பூமியில் நான்கு திசைகளிலும் வீசுகிற நான்கு காற்றுகளோடு ஒப்பிட பட்டிருக்கிறது நான்கு காற்றுகளும் ஒன்றுக்கொன்று எதிர் திசையில் வீசும் இவற்றுக்குள் ஒற்றுமை இராது ஆனால் நான்கு காற்றுகளும் வெவ்வேறு திசைகளிலிருந்து வீசுவதால் இதை தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் மிகுந்த சேதத்தை உண்டுபண்ணும்
உபத்திரவங்கள் காற்றைப்போலவே வரும். காற்று ஓரிடத்தில் நிலையாக நிற்காது அதாவது ஒரு திசையில் வீசிக்கொண்டேயிருக்கும் கள்ளப்போதகர்களுக்கும் இந்தக் காற்றுகள் ஒப்புமையாக சொல்லப்படுகிறது. கள்ளபோதகர்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் நிலையில்லாதவர்கள். சத்தியத்தில் உறுதியாய் நிலைத்திருக்க மாட்டார்கள்
பூமியில் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று பூமியின் நான்கு காற்றுகளையும், காற்று அடியாதபடிக்கு பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் வஞ்சகத்தின் ஆவிகளால் கிரியை நடப்பிக்க முடியவில்லை. நான்கு தூதர்களும் அவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளை தடுத்து நிறுத்துகிறார்கள் கர்த்தருடைய தூதர்கள் சபைக்கு நன்மை செய்கிறார்கள். சபையின் சத்துருக்களை செயல் இழக்கச் செய்கிறார்கள் சத்துருக்களின் கிரியைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே தடை பண்ணப்படுகிறது
இதன்பின்பு வேறொரு தூதன் ஏறி வருகிறான். இவன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறி வருகிறான். இவனிடத்தில் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல் இருக்கிறது. இந்தத் தூதன்
மற்ற நான்கு தூதர்களிடம் மகா சத்தமிட்டு பேசுகிறான். நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கிற நான்கு தூதர்களும் இந்த நான்கு தூதர்களும் ஒரே தூதர்களா அல்லது வெவ்வேறு தூதர்களா என்பதை வேதபண்டிதர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நான்கு தூதர்களும் பூமியையும் -சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் (வெளி 7:2),
வேறொரு தூதன், இந்த நான்கு தூதரையும் நோக்கி, "நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டு தீருமளவும், பூமியையும், சமுத்திரத்தையும், மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள்" என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான் இவர்கள் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்றவர்கள் ஆனால் அவர்களுடைய கிரியைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தடை பண்ணப்பட்டிருக்கிறது அந்தக் காலத்திற்குப் பின்பு இவர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்தினார்கள்
வெளி 7 ஆவது அதிகாரம் இடையில் சேர்க்கப்பட்டிருக்கும் பகுதிகளில் முதலாவதாக வருகிறது. ஆறாம், ஏழாம் முத்திரைகளுக்கு இடையில் இந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆறாவது முத்திரை யைத் தொடர்ந்து வாரத்தின் இறுதி வரையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை இந்த அதிகாரம் விளக்குகிறது.
எக்காள நியாயத்தீர்ப்பு தூதர்கள் 144000 யூதர்களுடைய நெற்றிகளில் முத்திரை போட்டு தீருமளவும் எக்காளங்களை ஊதவேண்டாம் என்று இவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. (வெளி 7:1-3). எழு எக்காள நியாயத்தீர்ப்பிற்கு முன்பாக 144000 பேருடைய நெற்றிகளில் முத்திரை போடப்பட்டது.
தேவனுடைய நாமம் முத்திரையிடப்பட்டது அல்லது தேவனுடைய நாமம் எழுதப்பட்ட நெற்றி என்று பொருள். (வெளி 14:1). இதற்கு ஓய்வுநாளை ஆசரிப்பதற்கும் சம்பந்தம் எதுவுமில்லை
வெளி 41 ஆவது வசனத்தில் சபை எடுத்துக் கொள்ளப்படும் போது 144000 யூதர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாக இல்லை ஏனெனில் சபை எடுத்துக் கொல்லப்படும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் கிறிஸ்துவுக்குள் உயிரோடிருக்கிறவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். (1தெச 4:16 1கொரி 15:23) அப் 2:16-21 ஆகிய வசனங்களில் முன்னறிவிக்கப்பட்ட எழுப்புதலில் சபை எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்திற்குப் பின்பு அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுடைய நெற்றிகளில் முத்திரை இடப்பட்ட போது அவர்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ஊழியக்காரர்களாக இருந்தார்கள். இதனால்தான், இவர்கள் மீது தேவனுடைய நாமங்கள் எழுதப்பட்டன.
முத்திரை போடுதல் ஓர் உண்மைச் சம்பவம் என்பதற்கு ஆதாரங்கள்
1. வெளி 7:3; வெளி 14:1 ஆகிய வசனங்களில் இந்தச் சத்தியம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறப்பட்டிருக்கிறது.
2. அவர்களுடைய நெற்றிகளில் முத்திரையிடுவது எல்லோரும் காணக்கூடிய விதத்தில் இருந்தது. ஆகையினால் முதல் நான்கு எக்காள தூதர்கள் இவர்களுடைய நெற்றிகனில் முத்திரை போட்டுத் திருமளவும் எக்காளம் ஊத வேண்டாம் என்று கூறினார்கள். (வெளி 7:3; வெளி 8:7-12),
3. தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திருக்கும் மனுஷரைச் சேதப்படுத்தவேண்டாம் என்று ஐந்தாம், ஆறாம் எக்காள தூதர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. (வெளி 9:4)
4. மிருகத்தின் முத்திரை ஓர் உண்மை சம்பவம். (வெளி 13:16-18; வெளி 143; வெளி 20:4) அதுபோல தேவனுடைய முத்திரையும் ஓர் உண்மை சம்பவம் (வெளி 14:1)
5. தேவனுடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்தது. (வெளி 7:3; வெளி 14:1).
6. ஜெயங்கொள்ளுகிறவர்கள் மீது நாமங்கள் எழுதப்படும். (வெளி 3:12; வெளி 22:4) அதுபோலவே ஜெயங்கொள்ளுகிற 144000 பேர்மீது தேவனுடைய நாமம் எழுதப்பட்டது
(வெளி 14:1).
முத்திரை போடப்பட்டவர்கள் வெளி 7:4-8
முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன், இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர். வெளிப்படுத்தின விசேஷம் 7:4
யூதா கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். வெளிப்படுத்தின விசேஷம் 7:5
ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். வெளிப்படுத்தின விசேஷம் 7:6
சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். வெளிப்படுத்தின விசேஷம் 7:7
செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். வெளிப்படுத்தின விசேஷம் 7:8
தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசம் காண்பிக்கப்படுகிறது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போடப்படுகிறது கர்த்தருடைய தூதன் முத்திரை போடுகிற ஊழியத்தைச் செய்வதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறான். தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரர்களை கள்ளப்போதர்களிடமிருந்து வேறு பிரித்துக் காண்பிப்பதற்காகவே தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போடுவதற்காகவும் இந்தத் தூதன் அதிகாரம் பெற்றிருக்கிறான்.
தேவனுடைய ஊழியக்காரருக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் இந்தத் தூதன் வித்தியாசம் காண்பிக்கிறான். தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போடுகிறான். தங்கள் நெற்றிகளில் முத்திரை போடப்பட்டவர்கள் தேவனுடைய விசேஷித்த கிருபைகளையும், இரக்கங்களையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வார்கள், உபத்திரவக்காலங்களில் நெற்றிகளில் முத்திரை போடப்பட்டிருக்கிறவர்களுக்கு தேவனுடைய தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும்
இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரத்தார் இருக்கிறார்கள். ஒவ்வொரு கோத்திரத்திலும் பன்னீராயிரம்பேர் முத்திரை போடப்பட்டவர்கள். இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்
இஸ்ரவேல் தேசத்தாரை தவிர, சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக்காரரிலும் இரட்சிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எண்ண முடியவில்லை. அவர்கள் திரளான கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய தொகை ஒருவராலும் எண்ணக்கூடாததாயிருக்கிறது.
தேவனுடைய சபை சிறுமந்தையாகத்தான் இருக்கிறது. இந்த உலகத்திலுள்ள துன்மார்க்கருடைய திரளான எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கர்த்தருடைய பரிசுத்தவான்களின் எண்ணிக்கை சொற்பமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் கர்த்தருடைய பிள்ளைகளின் எண்ணிக்கையும் கொஞ்சமல்ல. திரளான கூட்டமாகிய ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்த வான்களாய் இருக்கிறார்கள் இவர்களுடைய தொகை ஒருவராலும் எண்ணக்கூடாததாயிருக்கிறது.
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் எண்ணிக்கைக்கு முடிவில்லை . இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் யாரெல்லாம் சுத்திகரிக்க படுகிறார்களோ அவர்களெல்லோரும் கர்த்தருடைய பரிசுத்தவான்களுடைய கூட்டத்திலே சேர்க்கப்படுவார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் தன்னுடைய சபையிலே சேர்த்துக்கொண்டு வருகிறார்.
முத்திரை போடப்பட்டவர்கள் எண்ணிக்கையைப்பற்றிச் சொல்லும்போது யூதா கோத்திரம் முதலாவது சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பின்பு ரூபன் கோத்திரம், காத் கோத்திரம், ஆசேர் கோத்திரம், நப்தலி கோத்திரம், மனாசே கோத்திரம், சிமியோன் கோத்திரம், லேவி கோத்திரம், இசக்கார் கோத்திரம், செபுலோன் கோத்திரம், யோசேப்பு கோத்திரம், பென்யமீன் கோத்திரம் என்று இஸ்ரவேலின் கோத்திரத்தார் வரிசைப்படுத்திச் கொல்லப்பட்டிருக்கிறார்கள் ஒவ்வொரு கோத்திரத்திலும் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம் இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்.
எலியாவின் காலத்தில் தேவன் தமக்காக 7000 பேரை மீதியாகத் தெரிந்து கொண்டார்
அதுபோல தானியேலின் எழுபதாவது வாரத்தின் முதல் மூன்றரை வருஷத்தில் தேவன் தமக்காக 144 000 யூதர்களை தெரிந்துகொண்டார். (வெளி 7:1-8)
144,000 பேர் இஸ்ரவேல் புத்திரரின் பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து வந்தவர். இவர்களில் புறஜாதியார் யாருமில்லை . இவர்கள் சபையைச் சேர்ந்தவர்கள் ஏனெனில் இவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகவே சபை எடுத்துக்கொள்ளப்பட்டது இவர்கள் சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பிருந்த யூதர்களோ அல்லது தானியேலின் எழுபதாவது வாரத்தின் முதல் மூன்றரை வருஷத்திற்கு அப்பாற்பட்ட காலத்தில் இருந்தவர்களோ அல்ல.
தாண் கோத்திரத்தார் முத்திரை போடப்பட வில்லை - இதற்குக் காரணம்
இந்த வசனப் பகுதியில் தாண். எப்பிராயீம் ஆகியோருடைய -பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. லேவியும், யோசேப்பும் இவர்களுடைய ஸ்தானங்களை எடுத்துக் கொண்டார்கள் தாணுடைய பெயர் விடுபடுவதற்கு ஒரு சிலர் உபா 29:18-21 ஆகிய வசனங்களைக் காரணமாகக் கூறுகிறார்கள். இந்த வசனங்களில் தாண் கோத்திரத்தார் புறஜாதி தெய்வங்களை ஆராதித்ததாகக் குறிப்பு உள்ளது. தாண் கோத்திரத்தாருடைய பெயர் விடுபட்டதற்கு விக்கிரகாராதனை ஒரு காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் இஸ்ரவேல் கோத்திரத்தார் அனைவருமே தங்களுடைய வரலாற்றின் அதாவது ஒரு காலத்தில் விக்கிரகாராதனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களே. தாண் கோத்திரத்தாரின் பெயர் இங்கு விடுபட்டதற்குக் காரணம் இந்தக் காலத்தில் இந்தக் கோத்திரத்திலிருந்து ஒருவரும் தேவனுடைய ஊழியக்காரராக இல்லை. ஆயிரம் வருஷ அரசாட்சியில் மற்ற கோத்திரங்கள் சேர்ந்து தாண் கோத்திரமும் மீட்கப்படும்.
இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரைப் பற்றிக்கூறும் போது. அதில் லேவியின் கோத்திரம் சேர்க்கப் படுவதில்லை. ஏனெனில் லேவி கோத்திரத்தார் இஸ்ரவேல் தேசம் அனைத்திற்கும் ஊழியக்காரர்களாக இருந்தார்கள். இங்கு தாண் கோத்திரத்தாரின் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டிருக்கிறது. 144000 யூதர்கள் எழுப்புதலில் இரட்சிக்கப்பட்ட போது, தாண் கோத்திரத்தாரில் யாரும் தங்களைத் தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்க வில்லை.
பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் தானியேலின் எழுபதாவது வாரத்தின் முதல் மூன்றரை வருஷங்களில் முத்திரை போடப்பட்ட 144,000 பேர்களும் யூதர்களே இவர்களில் புறஜாதியார் ஒருவருமில்லை . இந்த யூதர்கள் இந்தக் காலத்தில் இரட்சிக்கப்பட்டு, தேவனுடைய ஊழியக்காரரானார்கள் சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு, இந்த யூதர்கள் இரட்சிக்க பட்டிருக்கிறார்கள் எக்காள நியாயத்தீர்ப்புக்களின் போது இவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் (வெளி 7:2-3; வெளி 9:4) வெளி 12:5 ஆவது வசனம் ஆண் பிள்ளை தேவனுடைய சிங்காசனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று கூறுகிறது. சில வேதபண்டிதர்கள் 1,44,000 யூதர்களே இந்த ஆண்பிள்ளை என்று வியாக்கியானம் கூறுகிறார்கள்.
திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெளி 7: 9,10
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 7:9
அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 7:10
கர்த்தருடைய பரிசுத்தவான்களும் தேவதூதர்களும் கர்த்தரைப் புகழ்ந்து பாடுகிறார்கள். அவர்கள் துதிப்பாடல்களை ஏறெடுக்கிறார்கள். பரிசுத்தவான்களின் எண்ணிக்கையை ஒருவராலும் எண்ண முடியவில்லை அவர்கள் திரள்கூட்டமான கூட்டம் ஜனங்கள் இருக்கிறார்கள் இவர்கள் வெள்ளை அங்கி தயாரித்திருக்கிறார்கள் தங்கள் கைகளில் குறுத்தோலைகளைப் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் சகல் ஜாதிகளிலும் கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கிறார்கள். சிருஷ்டிகருக்கு முன்பாகவும் மத்தியஸ்தருக்கு முன்பாகவும் நிற்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவே நம்முடைய மத்தியஸ்தர்
பாவிகளாகிய நம்மால் தேவனுடைய பரிசுத்தம் சிங்காசனத்திற்கு முன்பாக நம்முடைய சுயபக்தியின ாலோ சுயபரிசுத்தத்தினாலோ போய் நிற்க முடியாது நமக்கு ஒரு மத்தியஸ்தர் தேவை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே தேவனுக்கும் நமக்கும் நடுவே மத்தியஸ்தர் இருக்கிறார் தேவனிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இதனிமித்தமாகவே பரிசுத்தவான்கள் கர்த்தருடைய சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கிறார்கள்.
யுத்தங்களில் ஜெயம் பெற்றவர்கள் வெற்றி பவனி வரும்போது வெள்ளை அங்கிகளைத் தரித்திருப்பார்கள். அவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருப்பார்கள். ஜெயம் பெற்றவர்களுக்கு ஒப்புமையாக கர்த்தருடைய பரிசுத்தவான்களும் வெள்ளை அங்கிகளைத் தரித்து தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து வருகிறார்கள். அவர்கள் சத்துருவை ஜெயித்தவர்கள் பாவத்தை ஜெயித்தவர்கள். சாத்தானை ஜெயித்தவர்கள்.
திரளான கூட்டமாகிய ஜனங்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்று மகா சத்தமிட்டு ஆர்ப்பரிக்கிறார்கள். "இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக" என்று மகா சத்தமிட்டு ஆர்ப்பரிக்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஓசன்னா அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரிக்கிறார்கள். இவர்கள் பிதாவாகிய தேவனையும் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும் துதிக்கிறார்கள். இவர்களுடைய துதிகளில் பிதாவும் குமாரனும் இணைந்திருக்கிறார்கள்.
பிதாவானவர் மனுக்குலத்தின் இரட்சிப்பைத் திட்டமிட்டார். குமாரனாகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தை மீட்பின் கிரயமாகச் செலுத்தி மனுக்குலத்திற்கு இரட்சிப்பை கிரயமாகப் பெற்றார்.
யாரெல்லாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களெல்லோரும் இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள் கர்த்தருக்குள் சந்தோஷமாகயிருப்பார்கள் இப்பேற்பட்ட பரிசுத்தவான்கள் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பிதாவாகிய தேவனையும் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும் நன்றியோடு துதிப்பார்கள் இரட்சிப்பின் மகிமை அவர்களுக்கு உண்டாவதாக என்று சொல்லி ஆர்ப்பரிப்பார்கள்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் கடைசியாக மீட்கப்பட்டவர்கள் பற்றிய விவரம் வெளி 7.9-17 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. உபத்திரவக்காலத்தில் 144000 யூதர்கள் மரிக்காமல் உயிரோடு பரலோகத்திற்கு - எடுத்துக் கொள்ளப்பட்டார்கள் இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் திரளான ஜனங்கள் உபத்திரவக்காலத்தில் இரத்த சாட்சியாக மரித்தவர்கள். இவர்கள் வெளி 4:1 ஆவது வசனத்தில் சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு இரத்த சாட்சியாக மரித்தவர்கள். வெளி 6:9-11 ஆகிய வசனங்களில் பலிபீடத்தின்-கீழே இருந்த பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களும் இவர்களில் அடங்குவார்கள். இவர்களுடைய சகோதரர்களில் மீதியானவர்கள் உபத்திரவக்காலத்தில் இரத்தச்சாட்சியாக மரிப்பார்கள்
திரளான கூட்டமாகிய ஜனங்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கிறார்கள் இவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் இல்லையெனில், இவர்களால் பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்க முடியாது. அவர்கள் இரத்தச்சாட்சியாக மரிக்கும் வரையில் அவர்களால் உயிர்த்தெழவோ, பரலோகத்திற்கு எடுத்துக் கொல்லப்படவோ முடியாது தானியேலின் எழுபதாவது வாரத்தின் இறுதியில் இவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆட்டுக் குட்டியானவருடைய கலியாண விருந்து நடைபெறும்போது அதில் கலந்து கொள்ளும் விதத்தில் அக்காலத்தில் அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் முதலாம் உயிர்த்தெழுதல் நிறைவு பெறச்செய்தார்கள்.
தேவனே மனுஷருடைய இரட்சிப்பின் காரண கர்த்தாவாசு இருக்கிறவர். ஆட்டுக்குட்டியானவர் மனுஷருடைய இரட்சிப்பைத் தேவனிடத்திலிருந்து தமது திருஇரத்தத்தை முழுக்கிரயமாகச் செலுத்தி, வாங்கியிருக்கிறார்.
தூதர்கள் வெளி 7:11-12
தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்பற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: வெளிப்படுத்தின விசேஷம் 7:11
ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக, ஆமென், என்றார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 7:12
கர்த்தருடைய பரிசுத்தவான்களாகிய திரளான கூட்டமாகிய ஜனங்கள் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற தேவனையும், ஆட்டுக்குட்டியான வரையும் துதிக்கிறார்கள். பரிசுத்தவான்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்று அவர்களை ஸ்தோத்திரம் செய்து மகா சத்தமிட்டு ஆர்ப்பரிக்கிறார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும், மூப்பர்களும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று கொண்டிருக்கிறார்கள் கர்த்தருடைய பரிசுத்தவான்ள் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவரையும், ஆட்டுக்குட்டியானவரையும் தொழுதுகொள்வதை தூதர்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய மக்கா ஆர்ப்பரிப்பின் சத்தத்தையும் கேட்கிறார்கள்.
அப்போது தூதர்கள் யாவரும் சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து தேவனைத் தொழுது கொள்கிறார்கள் தங்களைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்கள். கர்த்தரை பயபக்தியோடு துதிக்கிறார்கள். கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக வரும்போது நாம் உடைக்கப்பட்ட பாத்திரங்களைப்போல இருக்கிறோம். நம்முடைய இருதயம்
எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பக்கம் வரும்போது அது மென்மையான இருதயமாக மாறும் தூதர்கள் விசேஷித்த சிருஷ்டிகளை இருந்த போதிலும் அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக வரும்போது, முகங்குப்புற விழுந்து தேவனைத் தொழுது கொள்கிறார்கள்
தூதர்கள் யாவரும், "ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்" என்று சொல்லி துதிக்கிறார்கள் தூதர்கள் துதிக்க ஆரம்பிக்கும்போதே "ஆமென் என்று சொல்கிறார்கள் கர்த்தருடைய பரிசுத்தவான்களாகிய திரளான கூட்டமாகிய ஜனங்கள், சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற தேவனையும், ஆட்டுக்குட்டியான வரும் மகா சத்தமிட்டு ஆர்ப்பரித்து துதிப்பதை தூதர்கள் அங்கீகரிக்கும் வண்ணம் "ஆமென்" என்று சொல்கிறார்கள்
இதற்குப் பின்பு தூதர்கள் யாவரும் தாங்களாகவே மேலும் சில பயபக்தியுள்ள வார்த்தைகளைச் சொல்லி தேவனை ஸ்தோத்திரம் பண்ணுகிறார்கள் எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்" என்று சொல்லி துதிக்கிறார்கள்.
இருதயத்தில் சந்தோஷமாக இருக்கிறார்கள் கர்த்தரைத் துதிக்கிறார்கள் பரலோகத்தில் துதியின் சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறது கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவரோடுகூட பரலோகத்திலே நித்திய காலமாக ஜீவிக்கப்போகிறோம். பரலோகத்தில் நாம் எப்போதும் தேவனைத் துதித்து கொண்டிருப்பேன் நாம்
பூமியில் இருக்கும் இந்தக் காலத்தில் பரலோகத்தில் கர்த்தரைத் துதிப்பதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். பரலோகத்தில் நம்முடைய துதிகளும், சந்தோஷமும் பரிபூரணமாய் இருக்கும்
ஆமென் என்னும் வார்த்தைக்கு மெய்யாகவே மெய்யாகவே என்றும் நிச்சயமாக என்றும் பொருள் சொல்லலாம். மெய்யாகவே மெய்யாகவே என்று யோவான் 25 இடங்களில் கூறியிருக்கிறார். இயேசு கிறிஸ்து சத்தியத்தைக் கூறுகிறார். அவரால் மட்டுமே ஒரு காரியத்தை இவ்வாறு வலியுறுத்திக் கூறமுடியும் மற்ற இடங்களிலெல்லாம் மெய்யாகவே" என்று ஒரு தடவை மட்டுமே இந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் 16 தடவைகளும், மத்தேயுவில் 30 தடவைகளும், மாற்குவில் 15 தடவைகளும், லூக்காவில் 8 தடவைகளும் இந்த வாக்கியம் வந்திருக்கிறது சுவிசேஷப் புஸ்தகங்களில் இயேசு கிறிஸ்து மட்டுமே மெய்யாகவே" என்னும் வாக்கியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். சுவிசேஷப் புத்தகங்கள் தவிர புதிய ஏற்பாட்டில் 21 தடவைகள் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுவிசேஷப் புஸ்தகத்தில் இயேசு கிறிஸ்து மெய்யாகவே" என்னும் வாக்கியத்தை 103 தடவைகள் பயன்படுத்தியிருக்கிறார். மற்ற 62 புஸ்தகங்களில் இதர ஆசிரியர்கள் இந்த வாக்கியத்தை 36 தடவைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தேவனுக்குச் சதா காலங்களிலும் உண்டாக வேண்டிய காரியங்கள்
1. துதி (வெளி 5:12)
2. மகிமை வெளி 5:12)
3. ஞானம் (வெளி 5:12)
4. ஸ்தோத்திரம் (எபி 13:15-16)
5. கனம் வெளி 5:12)
6. வல்லமை (வெளி 19:6)
7. பெலன் (வெளி 5:12)
மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் வெளி 7:13,14
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். வெளிப்படுத்தின விசேஷம் 7:13
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 7:14
இந்தப் பூமியில் கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்தவர்கள் பரலோகத்திலே மிகுந்த சந்தோஷத்தோடிருப்பார்கள். அப்போஸ்தலர் யோவானுக்கு பரலோகத்தில் கர்த்தரை ஆர்ப்பரித்து துதிக்கிற பரிசுத்தவான்களை தரிசிக்கிற சிலாக்கியம் கிடைத்திருக்கிறது.
இதன்பின்பு, இருபத்து நான்கு மூப்பர்களில் ஒருவர் யோவானிடம் பேசுகிறார். பரலோகத்தில் நடப்பது எல்லாம் மூப்பர்களுக்கு தெரியும் ஆனால் மூப்பர்களில் ஒருவர் யோவானை நோக்கி, "வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்" என்று கேட்கிறார். தனக்குத் தெரியவேண்டும் என்பதற்காக மூப்பர் யோவானிடம் இந்தக் கேள்வி கேட்கவில்லை. யோ வானுக்கு இதைப்பற்றி விளக்கமாகச் சொல்லவேண்டும் என்பதற்காகவே அவர் இந்தக் கேள்வியை யோவானிடம் கேட்கிறார். இந்தப் பூமியிலே வேத பண்டிதர்கள் ஏராளமானோர் இருக்கும் இருந்தாலும், பரலோகத்தில் உள்ள சாதாரண தூதர்களின் அறிவு, நம்முடைய வேத அறிவை விட, மிகவும் அதிகம்,
அப்போஸ்தலர் யோவான் தன்னிடம் கேள்வி கேட்ட மூப்பரிடம், "ஆண்டவரே அது உமக்கே தெரியும்" என்று சொல்லுகிறார். யோவான் தன்னைத் தாழ்த்துகிறார் தன்னுடைய அறியாமையை அங்கீகரிக்கிறார். தனக்குத் தெரியாததையும் தெரிந்ததாகச் சொல்லி மாய்மாலம் பண்ணவில்லை. உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுகிறார். அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் யோவானுக்கு இருக்கிறது. ஆகையினால் யோவான் மூப்பரிடம், "அது உமக்கே தெரியும்" என்று பணிவோடு மரியாதையோடும் சொல்லுகிறார்.
திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தயாரித்திருக்கிறார்கள் இவர்களைப்பற்றிய விவரத்தை மூப்பர்களில் ஒருவர் யோவானுக்கு விளக்கமாகச் சொல்லுகிறார். அவர்களெல்லோரும் பூமியிலே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் மிகுந்த துன்பங்களை அனுபவித்தவர்கள் அவர்கள் பூமியிலே சாதாரண ஜனங்கள் இருந்தவர்கள். இயேசுகிறிஸ்துவினுடைய வசனத்தினிமித்தமாகவும், அவருக்கு சாட்சியாக ஜீவித்ததினிமித்தமாகவும், அவர்கள் பூமியிலே மிகுந்த உபத்திரவத்தை அனுபவித்தவர்கள் பரலோகத்திற்குச் செல்லும் பாதையில் அநேக பாடுகளும், வேதனைகளும், உபத்திரவங்களும் உண்டு. இவற்றையெல்லாம் கடந்துதான் பரலோகத்தில் பிரவேசிக்க முடியும். உபத்திரவம் தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்காது.
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பூமியிலிருந்து காலத்தில் பரலோகத்தின் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். இப்போதோ அந்தச் சந்தோஷத்தைப் பெற்று அனுபவிக்கிறார்கள் இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள், இயேசுகிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்தவான்களுடைய அங்கிகளை மென்மையாக்குகிறது அவர்களுடைய அங்கிகளைச் சுத்திகரிக்கிறது.
தேவனை இரவும் பகலும் சேவிக்கிறார்கள் வெளி 7 : 15-17
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். வெளிப்படுத்தின விசேஷம் 7:15
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. வெளிப்படுத்தின விசேஷம் 7:16
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார், தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான். வெளிப்படுத்தின விசேஷம் 7:17
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பரலோகத்திலே பிரவேசிக்கிறவர்கள் அவர்கள் தேவனுடைய விசேஷித்த ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள். இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள். சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற தேவன் இவர்களுக்குள்ளே வாசமாயிருக்கிறார்.
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிப்பதினால் மிகுந்த சந்தோஷத்தோடிருக்கிறார்கள். அவர்கள் பூமியிலே இருந்த காலங்களில் கிறிஸ்துவுக்காக அநேக பாடுகள் அனுபவித்தவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விடுதலையோடு ஆராதிக்க முடியாமல் அநேக பாடுகளையும் உபத்திரவங்களையும் அநுபவித்தவர்கள் இப்போது அவர்களுக்கு பரலோகத்திலே கர்த்தரை ஆராதிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. கர்த்தருடைய ஆலயத்திலே அவரை இரவும் பகலும் சேவிக்கிறார்கள். தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும் சிலாக்கியம் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
கர்த்தருடைய பிள்ளைகள் பூமியிலே இருந்த காலத்திலே அவர்களுக்கு பசியுண்டாயிற்று. தாகமுண்டாயிற்று. வெயிலும் உஷ்ணமும் அவர்கள் மேல் பட்டது. இப்போது - இவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள், இவர்கள் இனி பசியடைவதுமில்லை . இனி தாகமடைவதுமில்லை .) வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. இவர்களுடைய தேவைகளெல்லாவற்றையும் கர்த்தர் கிருபையாக சந்திப்பார். இவர்களுக்கு இனிமேல் வியாதிகளும் வேதனைகளும் வராது.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய அன்பிலே இவர்கள் சந்தோஷப்படுவார்கள். கிறிஸ்துவானவரே இவர்களை வழிநடத்துவார். இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார் அவர்களுடைய துக்கங்கள் சந்தோஷமாக மாறியிருக்கும். கிறிஸ்துவானவர் தாமே அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார். இவர்களை மேய்ப்பார் இவர்களைப் போஷிப்பார் கிறிஸ்துவானவர் தம்முடைய கிருபையுள்ள மென்மையான கரத்தினால் தம்முடைய பரிசுத்தவான்கள் கண்ணீர்கள் யாவையும் துடைப்பார். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் பூமியிலே உபத்திரவப்பட்டபோது அவர்களுக்கு அதிகமாக கண்ணீர்கள் உண்டாயிற்று கர்த்தரோ அந்தக் கண்ணீர் யாவையும் இப்போது துடைக்கிறார்.
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து -அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு அன்பான தகப்பனைப்போல இருக்கிறார். தாம் நேசிக்கிற பிள்ளைகள் கண்ணீர்விட்டு அழும் போது, அவர்கள் மீது அன்பாயிருக்கிற தகப்பன் அவர்களுடைய கண்ணீரை துடைப்பது போல் நம்முடைய கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களின் கண்ணீர்களைத் துடைக்கிறார். அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது அவர்களுடைய துக்கங்களை சந்தோஷமாக மாற்றுகிறார். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் -பூமியிலே துயரப்பட்டவர்கள், இப்போது பரலோகத்திலே இயேசுகிறிஸ்துவினாலே போற்றப்படுகிறார்கள் ஆறுதல் படுத்தப்படுகிறார்கள்
இரட்சிக்கப்பட்டவர்களுக்கு ஆசீர்வாதங்கள்
1. தேவனுடைய முன்பாக (வெளி 7:15)| சிங்காசனத்திற்கு இருக்கிறார்கள்.
2. இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள் (வெளி 7:15),
3. சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார் (வெளி 7:15)
4. இவர்கள் இனி பசியடைவதுமில்லை (வெளி 7:16
5. இனி தாகமடைவதுமில்லை (வெளி 7:16)
6. வெயில் இவர்கள் மேல் படுவதுமில்லை (வெளி 7:16).
7. உஷ்ணம் அவர்கள் மேல் படுவதுமில்லை (வெளி 7:16).
8. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்ப்பார். (வெளி 7:17)
9. இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; (வெளி 7:17) |
10. தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி 7:17; வெளி 21:3-7).