வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 6 சுருக்கம்:
கர்த்தர் தம்முடைய சித்தத்தை எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறார் அந்த அளவுக்கு அதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்யலாம். கர்த்தர் வெளிப்படுத்துகிற ரகசியங்களை மாத்திரமே நாம் தெரிந்துகொள்ளவேண்டுமென்று விருப்பப்பட வேண்டும் அதற்கு மிஞ்சி ஆழமாகப்போவோமென்றால், ஆழத்தில் இருள்தான் இருக்கும்.
சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்தில் ஒரு புஸ்தகம் இருக்கிறது. அது ஏழுமுத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டுக்குட்டியானவர் தேவனிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்குகிறார் கிறிஸ்துவானவரே அந்தப் புஸ்தகத்தை வாங்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராய் இருக்கிறார் இயேசு கிறிஸ்து ஏழுமுத்திரைகளில் ஆறுமுத்திரைகளை ஒவ்வொன்றாக உடைக்கிறார் ஒவ்வொரு முத்திரை உடைக்கப்படும்போதும் யோவான் அங்கு பார்த்த சம்பவம் இந்த அதிகாரத்தில் விவரமாக எழுதப்பட்டிருக்கிறது.
முதலாம் முத்திரை (வெளி 6:12) இரண்டாம் முத்திரை (வெளி 6:3-4). மூன்றாம் முத்திரை (வெளி 6:5-6), நாலாம் முத்திரை (வெளி 6:7-8). ஐந்தாம் முத்திரை (வெளி - 6:9-11).ஆறாம் முத்திரை (வெளி 6:12-17).
முதலாம் முத்திரை வெளி 6:1,2
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 6:1
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது, அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். வெளிப்படுத்தின விசேஷம் 6:2
கிறிஸ்துவானவர் ஆட்டுக்குட்டியானவராகவும் இருக்கிறார். அவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கிறார். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானை நோக்கி, "நீ வந்து பார்" என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லிற்று யோவானும் அந்த ஜீவன் சொன்ன பிரகாரமாக முதலாம் முத்திரை உடைக்கப்பட்ட போது, அங்கு பார்க்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருகிறார் அவர் தம்முடைய கரத்தில் ஒரு வில்லைப் பிடித்திருக்கிறார். தேவனுடைய வார்த்தை கூர்மையான அம்புகளைப்போல இருக்கிறது. கர்த்தருடைய கரத்திலிருந்து புறப்படும் அம்பு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சீறிப்பாயும் இது கடினமான எந்த இருதயத்தையும் ஊடுருவிப்பாயும் ஆற்றலுள்ளது
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது. யுத்தத்திற்குப் போகிறவர்களுக்கு -பொதுவாக தலைச்சீராவைத்தான் கொடுப்பார்கள். அதுதான் யுத்தவீரருடைய தலைக்கு பாதுகாப்பாகயிருக்கும் யுத்தத்திற்குப்
போகும்போது யுத்தவீரருக்கு கிரீடம் கொடுக்கப்படுவதில்லை. இயேசு கிறிஸ்துவுக்கு ஆனால் அவர் வெள்ளைக்குதிரையில் குதிரையில் ஏறி இருக்கும்போது அவருக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது. யுத்தத்தில் அவருக்கு ஜெயம் கிடைக்கும் என்னும் நிச்சயம் இருக்கிறது அந்த ஜெயாவிற்கு அச்சாரமாக
அவருக்கு யுத்தம் பண்ணு வதற்கு முன்பாகவே கிரீடம் கொடுக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்து ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவராகவும் புறப்பட்டுப் போகிறான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடைய சபையை பாதுகாக்கிறார் சத்துருவுக்கு விரோதமாக ஒரு மாவீரராக யுத்தம் பண்ணுகிறார் கிறிஸ்துவானவர் சத்துருவை ஜெயிக்கும் வரையிலும் யுத்தம் பண்ணுகிறார்
கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுடைய சத்துருக்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார்கள். நம்முடைய கர்த்தரும் தம்முடைய பிள்ளைகள் சேர்ந்துகொண்டு, சத்துருவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார் சில சமயங்களில் கிறிஸ்துவின் யுத்தம் விசுவாசிகளுக்குள்ளேயே நடைபெறுகிறது. நமக்குள் பாவம் இருக்கும்போது அந்தப் பாவம் நமக்கு சத்துருவாக இருக்கிறது நம்முடைய பாவங்கள் கிறிஸ்துவுக்கும் சத்துருவாக இருக்கிறது
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய ஆத்துமாவிற்குள், தம்முடைய சர்வவல்லமையோடு பிரவேசிக்கும்போது, நமக்குள் காணப்படுகிற பாவமான சபாவங்கள், பாவமான பேச்சுக்கள், பாவமான கிரியைகள், துன்மார்க்கமான குணங்கள் ஆகிய எல்லாவற்றிற்கும்
விரோதமாக யுத்தம்பண்ணுகிறார். இவையெல்லாவற்றையும் ஜெயிக்கும் வரையிலும் கர்த்தர் நமக்குள்யே யுத்தம் பண்ணுகிறார்
கிறிஸ்துவானவர் நமக்குள்ளே ஒவ்வொரு சத்துருவையும் ஜெயிக்கும் போது
நாம் நம்முடைய பரிசுத்த நிலமையில் வளர்ந்து முன்னேறிச் செல்கிறோம். கிறிஸ்துவானவர் நமக்குள்ளே நடத்துகிற தம்முடைய யுத்தத்தை பூரண ஜெயம் பெறும் வரையில் தொடர்ந்து நடத்துகிறார். கிறிஸ்துவானவர் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவராகவும் இருக்கிறார் நமக்குள்
நடைபெறுகிற யுத்தத்தில், கிறிஸ்துவானவர் ஜெயிக்கும்போது, நாம் கிறிஸ்துவினுடைய வல்லமையினால் நம்முடைய பாவங்களை ஜெயித்து பரிசுத்தமாக்க படுகிறோம்
இந்தப் பிரபஞ்சத்தில் தேவனுக்கு விரோதமான சத்துருக்கள் இருக்கிறார்கள்.
அவர்களெல்லோரும் துன்மார்க்கர் கள் கர்த்தர் உலகத்திலுள்ள துன்மார்க்கருக்கு விரோதமாகவும் யுத்தம் பண்ணுகிறார் அவர்கள் மீது ஜெயங்கொள்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு தடையாகயிருக்கிற எல்லா தடைகளையும் கிறிஸ்துவானவர் உடைத்து நீக்கிப்போடுகிறார். சுவிசேஷ பிரபல்யத்திற்கு தடைகள் நீங்கும்போது கிறிஸ்து ஜெயம் பெறுகிறார்
கிறிஸ்து கொடுக்கிற ஜெயத்தை அவருடைய பிள்ளைகளாகிய நாம் விசுவாசத்தோடு பெற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும்ஊகிறிஸ்துவானவர் என்னுடைய சுவிசேஷ பிரபலம் ஒரே நாளில் ஒரே நேரத்தில் செய்து முடிந்துவிடுவதில்லை சுவிசேஷ ஊழியம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது ஆதித்திருச்சபைக் காலத்திலிருந்து. இப்போதுள்ள காலம் வரையிலும், திருச்சபகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து வருகிறது.
கிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த உலகத்தார் மத்தியில்தான் பிரசங்கிக்கப்படுகிறது. கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை மனுக்குலத்தார் எல்லோரும் தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தரை தங்கள் ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசிக்க வேண்டும்
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும் இதுவே கிறிஸ்துவின் சித்தம். மனுஷர் மத்தியிலே கிறிஸ்துவானவர் யுத்தம் பண்ணுவதற்குநோக்கமும் அதுதான் ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு ஏராளமான தடைகள் உண்டாயிருக்கிறது.
மனிதர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உங்கள் இருதயத்தில் விசுவாசித்து, -ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் சுவிசேஷத்திற்கு எதிர்த்து நிற்கிறீர்கள் கர்த்தரோ தம்முடைய சத்துருக்களுக்கு விரோதமான யுத்தத்தை இன்னும் நிறுத்திவிடவில்லை. ஜெயம்கிடைக்கிறவரையிலும் கர்த்தர் யுத்தம் பண்ணுகிறார் கர்த்தர் தம்முடைய யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துவார். கிறிஸ்துவின் சித்தம்க்ஷ அவருக்கேற்ற வேளையில், அவருக்கேற்ற வழியில் அவர்
விரும்பிய பிரகாரம் நிறைவேறும் கிறிஸ்து எப்போதும் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவராகவும் இருக்கிறவர்.
இயேசு கிறிஸ்து -பிதாவின் வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கி ஏழு முத்திரைகளையும் ஒவ்வொன்றாக உடைத்தார். ஒவ்வொரு முத்திரையிலுமுள்ள காரியங்கள் வெளிப்பட்டன. அதன்பின்பு
தேவன் திறந்த புஸ்தகத்தை யோவானுக்குப் புசிக்கக் கொடுத்தார்.
வெள்ளைக்குதிரையின்மேல்
ஏறியிருந்தவன்
இவன் அந்திக்கிறிஸ்து. வெளி 19:11-21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும்
வெள்ளைக் குதிரையின் மீது ஏறியிருக்கிறவரும், இவனும் ஒன்றல்ல. இந்த வசனங்களில் கூறப்பட்டிருக்கும் நபர் இயேசு கிறிஸ்து அந்திக்கிறிஸ்து பூமியில் பயங்கரமான காரியங்களை ஆரம்பிக்கிறான். வெளி 19:11-21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்து அந்த நிகழ்ச்சிகளை முடிவுக்குக் கொண்டு வருகிறார். ஒருசிலர் ஆப 3:8-9 ஆகிய வசனங்களை வியாக்கியானமாகக் கூறி, வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருகிறவர் தேவனுடைய வார்த்தையின் மிகப்பெரிய எழுப்புதலுக்கு அடையாளம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஆபகூக்கில்
கூறப்பட்டிருப்பது கடந்த கால நிகழ்ச்சியாகும் . எகிப்திலிருந்து தேவன் இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்திச் சென்றதை ஆபகூக் கூறுகிறார்.
வெள்ளைக்குதிரையின்மேல் ஏறி இருந்தவன் அத்திக்கிறிஸ்து என்பதற்குச் சான்றுகள்
1. இவன் ஒரு தனி நபர். (வெளி 6:2)
2. கிறிஸ்துவைப்போல வேஷம் தரித்து, தன்னைக் கிறிஸ்து என்று கூறிக் கொண்டு,
அவரைப்போலவே வெள்ளைக் குதிரையின் மீது ஏறி வருகிறான். (வெளி 6:2)
3. இவன் வில்லைப் பிடித்திருந்தான். தீமையான எண்ணங்களுக்கும், தீமையான வெற்றிகளுக்கும் வில் ஒரு அடையாளமாகும். (சங் 7:2) கிறிஸ்து எப்பொழுதும் பட்டயம் ஏந்தியவராகவே இருக்கிறார். அவர் வில்லை ஏந்தியிருப்பவர் அல்ல. (வெளி 1:16)
4. சாத்தான் அந்திக்கிறிஸ்துவிற்குக் கிரீடத்தைக் கொடுத்திருக்கிறான் என்று
வேதவாக்கியம் தெளிவுபடுத்துகிறது. (தானி 8:24)
5. தானியேலின் 70 ஆவது வாரத்தின்
ஆரம்பத்தில் ) அந்திக்கிறிஸ்து ஜெயிக்கிறவனாகவும், ஜெயிப்பவனாகவும் இருந்தான். (தானி 7: 7-8,20-21,23-24) எழுபதாவது வாரத்தின் முதல் மூன்றரை வருஷங்களில் வருங்கால பத்து ராஜ்ஜியங்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டான். முதலாவதாக அந்திக்கிறிஸ்து மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப் போட்டான். (தானி 7:23-24) அதன்பின்பு, வாரத்தின் மத்தியில் பத்து ராஜாக்களும் யுத்தம் இல்லாமல் தங்களை அந்திக் கிறிஸ்துவிடம் ஒப்புக் கொடுப்பார்கள். இதன்பின்பு மூன்றரை வருஷங்களுக்கு அந்திக்கிறிஸ்து பத்து ராஜ்ஜியங்களின் மீது ஆளுமை
செய்வார் அர்மகெதோனில் கிறிஸ்துவோடு யுத்தம் பண்ணுவார் (வெளி 13:1-5)
6. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் மூன்று முத்திரைகளுக்குப் பின்பு, யுத்தங்களையும் பஞ்சங்களும் கொள்ளைநோயையும், மரணத்தையும், நரகத்தையும் உண்டாக்குவான். (வெளி 6:3-8).
7. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் அந்திக்கிறிஸ்து அல்லவென்றால், வாரத்தின் மத்திக்கு முன்பாக வெளிப்படுத்தின விசேஷத்தில் இவனைப் பற்றி கூறப்பட்டிருப்பதற்கு
வாய்ப்பில்லை. வெளி 13) தானி 7:23-24: தானி 8: 23-25; தானி 9:27; தானி 11:36-45 ஆகிய வசனங்களில் மூர்க்க முகமும், சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான் என்று கூறப்பட்டிருக்கிறது.
இரண்டாம் முத்திரை வெளி 6:3-4
அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 6:3
அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது: ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 6:4
கிறிஸ்துவானவர் இரண்டாம் முத்திரை உடைக்கிறார். அடுத்த மூன்று முத்திரைகள்
உடைக்கப்படும்போது, தேவனுடைய கோபாக்கினை வெளிப்படுகிறது. தேவனுடைய நித்திய சுவிசேஷத்திற்கு எதிர்த்து நின்றவர் களையும் அவருடைய வார்த்தைகளைத் தூஷித்தவர்களையும் வேதன் தண்டிக்கிறார் கிறிஸ்துவானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது,
இரண்டாம் ஜீவனானது யோவானிடம், "நீ வந்து பார்" என்று சொல்லிற்று இரண்டாம்
ஜீவன் சொன்ன பிரகாரம், யோவானும் அதை வந்து பார்க்கிறார்.
அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்படுவதை யோவான் காண்கிறார். இந்தக் குதிரை சிவப்பு நிறத்தில் இருக்கிறது முதலாவது குதிரை வெள்ளை நிறத்திலிருந்து. சிவப்பு நிறம் யுத்தத்தின் நியாயத்தீர்ப்புக்கு அடையாளம் சிவப்பு குதிரையின் மேல் ஏறியிருந்தவருக்கு ஒரு பெரிய பட்டயம் கொடுக்கப்படுகிறது. இது யுத்தத்தின் பட்டயம். இரத்தம் சிந்துகிற பட்டயம். யுத்தத்தின் பட்டயம் ஈவு இரக்கம் பார்க்காமல் கடினமாய் நியாயத்தீர்ப்பு செய்யும்,
யுத்தத்தின் பட்டயம் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும் சமாதானமான காலத்தில் பூமியிலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாய் இருப்பார்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள் யுத்தக்காலம் வரும்போதோ பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்வார்கள். சிவப்பு குதிரையின் மேல் ஏறியிருந்தவருக்கு பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்படுகிறது. சமாதானம் வந்தால் நீங்கிப்போனால் அங்கு யுத்தம் வரும் யுத்தம் பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்வார்கள்,
சிவப்பு குதிரை யுத்தத்திற்கு அடையாளமாகும். இது பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும். பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாக இவனுடைய பட்டயம் கிரியை செய்யும் வெள்ளைக் குதிரையின் மீது ஏறியிருக்கிறவனும், ஜனங்கள் மீது இவ்வாறு தான் வெற்றி பெறுவான். இந்த யுத்தம் மூன்று கண்டங்களுக்கு இடையே நடைபெறும் இரண்டாம் யுத்தம் என்று ஒருசில வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். பத்துராஜ்ஜியங்களிலிருந்து அந்திக்கிறிஸ்து எழும்பி வருவான் என்றும், அப்பொழுது மூன்று கண்டங்களுக்கு இடையே முதலாம் யுத்தம் நடைபெறும் என்றும் ஒருசிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள்.
மூன்றாம் முத்திரை
அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். வெளிப்படுத்தின விசேஷம் 6:5
அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 6:6
ஆட்டுக்குட்டியானவர் மூன்றாம் முத்திரையை உடைக்கிறார். அப்போது மூன்றாம் ஜீவன் யோவானிடம், "நீ வந்து பார்" என்று சொல்லிற்று. யோவானும் தனக்குச் சொல்லப்பட்ட பிரகாரம், அங்கு வந்து பார்க்கிறார். அப்போது அங்கு அவர் ஒரு கறுப்புக் குதிரையைக் காண்கிறார். கறுப்புக் குதிரை கொடிய பஞ்சத்திற்கு அடையாளம். பொதுவாக நியாயத்தீர்ப்பு தனியாக வருவதில்லை. ஒரு நியாயத்தீர்ப்பு வந்தால், அதைத் தொடர்ந்து மற்றொரு நியாயத்தீர்ப்பு வரும் நியாயத்தீர்ப்புக்கள் தொடர் கதையைப்போல தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்
யுத்தத்தின் முடிவினால் வருகிற நியாயத்தீர்ப்புக்கள் மிகவும் கொடுமை நிறைந்ததாய் இருக்கும் யுத்தம் முடிந்தால் உடனே பஞ்சம் வந்துவிடும். யுத்தக்காலத்தில் ஜனங்கள் விவசாய வேலைகளை செய்யமாட்டார்கள். களஞ்சியங்களில் தானியம் இருக்காது. பஞ்சம் வரும்போது யுத்தம் முடிந்துபோகும். யுத்தம் முடியும்போது பஞ்சம் கொடிய பஞ்சமாக மாறிவிடும் கொடிதான நியாயத்தீர்ப்புகளில் பஞ்சமும் ஒன்று இந்த உலகத்தில் போஜனத்திற்கு பஞ்சம் வரும்போது ஜனங்கள் மிகுந்த துன்பங்களை அனுபவிப்பார்கள். இதைவிட ஒரு கொடிய பஞ்சம் இனிமேல் வரப்போகிறது.
அது போஜனபதார்த்த பஞ்சமல்ல. கர்த்தருடைய வார்த்தைக்குப் பஞ்சமுண்டாகும் கர்த்தருடைய வார்த்தையைத் தேடினாலும் அக்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட பஞ்சம் எல்லா பஞ்சங்களும் விட கொடியது.
கறுப்புக்குதிரையில் குதிரையும் ஏறியிருக்கிறார் தன் கையில் ஒரு தராசைப் பிடித்திருக்கிறார். அவர் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்று சொல்லுகிறார் பஞ்சக்காலத்தில் எதையும் சேதப்படுத்த கூடாது எல்லாவற்றையும் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும். நம்முடைய இஷ்டம்போல எதையும் தாராளமாகப் பயன்படுத்த முடியாது அளவாய்ப் பயன்படுத்த வேண்டும் இதை உறுதி பண்ணும் விதமாக கறுப்புக்குதிரையில் ஏறியிருக்கிறவர் தன் கையிலே ஒரு தராசைப் பிடித்திருக்கிறார். அவர் எதையும் அளந்துதான் கொடுப்பார்.
பஞ்ச காலத்தில் இலவசமாக எதுவும் கொடுக்கப்படாது எல்லவாற்றையும் கிரயம் செலுத்திதான் பெற்றுக்கொள்ள வேண்டும் கிரயம் செலுத்தும்போது சேதாரம் குறையும் பஞ்சம் அதிகரிக்கும்போது கிரயம் செலுத்தினாலும் ஒன்றும் கிடைக்காது. அது கொடிய பஞ்சம்
கறுப்புக்குதிரையில் குதிரையும் ஏறியிருக்கிறார் "ஒரு பணத்திற்கு ஒரு படி கோதுமை என்றும், ஒரு பணத்திற்கு மூன்று படி வாற்கோதுமை என்றும் சொல்லுகிறார். எண்ணெயையும் - திராட்சரசத்தையும் சேதப்படுத்தக்கூடாது என்றும் சொல்லுகிறார். பஞ்சகாலம் சேதப்படுத்துகிற காலமல்ல. நம்மிடத்திலுள்ளதை சிக்கனமாகப் பயன்படுத்துகிற காலம்.
யோவான் ஒரு கறுப்புக் குதிரை கண்டார். அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். இரண்டு முத்திரைகளின் விளைவினால் யுத்தங்கள் நடைபெற்ற யுத்தங்களின் விளைவினால் தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டாகும் தராசு
பஞ்சத்திற்கு அடையாளமாகும்
கோதுமையையும், வாற்கோதுமை யையும் நிறுத்து எண்ணி, விற்கும்காலம் பஞ்சகாலம். உணவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் ஜனங்களுக்குத் தாராளமாக உணவு கிடைக்கவில்லை. ஆகையால் வாற்கோதுமை எண்ணி நிறுத்து விற்கும்காலம் வருகிறது.
வரலாற்று ஆசிரியர்கள் இதைப் பற்றிக் கூறும்போது இக்காலத்தில் விலைவாசி சாதாரண காலத்தைவிட எட்டு மடங்கு அதிகரித்திருக்கும் என்று கூறுகிறார்கள் பஞ்சகாலத்தில் ஒலிவ மரம், திராட்சைக் கொடிகளும் சரியாகப் பலன் தராது. ஆகையினால் அவற்றைச் சேதப்படுத்துவது தடை பண்ணப்பட்டிருக்கிறது
நாலாம் முத்திரை வெளி 6:7,8
அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 6:7
நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசொய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 6:8
ஆட்டுக்குட்டியானவர் நாலாம் முத்திரை உடைக்கிறார். அப்போது நாலாம் ஜீவனானது யோவானிடம் "நீ வந்து பார்" என்று சொல்லிற்று. யோவான் அந்தச் சத்தத்தைக் கேட்டபோது அங்கு வந்து பார்க்கிறார். அங்கு மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் காண்கிறார் அதின்மேல் ஒருவன் ஏறியிருக்கிறார் அவனுக்கு மரணம் என்று பெயர் அவன் மகாபயங்கரங்களுக்கு ராஜாவாக இருக்கிறார் பாதாளம் அவன் பின்னால் செல்லுகிறது. அதிபயங்கரமான ராஜாவுக்கு அவர்கள் வேலைக்காரன் இருக்கிறார்கள்
பொதுவாக ஒரு நியாயத்தீர்ப்புக்கு அடுத்த நியாயத்தீர்ப்புக்கும் இயல்பாகவே ஒரு தொடர்பு இருக்கும். யுத்தம் வரும்போது பேரழிவு வரும். பஞ்சம் உண்டாகும் ஜனங்கள் புசிப்பதற்கு போஜனம் இருக்கு பஞ்சம் கொடிதாகும்போது கொள்ளைநோய், சாவும் வரும், கர்த்தர் துன்மார்க்கருக்கு விரோதமாக எச்சரிப்பின் வார்த்தைகளைச் சொல்லுகிறார். அதே கர்த்தர் நீதிமான்களுக்கு ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களையும் சொல்லுகிறார். மனு புத்திரராகிய நாம் கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைகளையும் கேட்க வேண்டும் அவருடைய
ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களின் வார்த்தைகளையும் கேட்கவேண்டும்
ஆட்டுக்குட்டியானவர் இதுவரையிலும் நான்கு முத்திரைகளை உடைத்திருக்கிறார். யுத்தம் பஞ்சம் சாவு ஆகிய நியாயத்தீர்ப்புக்கள் இதுவரையிலும்
உண்டாயிற்று. இப்போது தேவனுடைய புதிய நியாயத்தீர்ப்பாக பூமியின் துஷ்டமிருகங்கள் வந்திருக்கிறது உலகத்தில் பட்டயமும்
பஞ்சமும், சாவும் தாராளமாய் வரும்போது, ஏராளமான ஜனங்கள் இவற்றில் சிக்கி
செத்துப் போவார்கள் இவற்றிற்குத் தப்பி உயிரோடிருக்கிறவர்கள் கொஞ்சம் பேராகவே இருப்பார்கள். எண்ணிக்கையில் குறைவானவர்களை அழித்துப்போடுவது மிகவும் எளிது.
இவர்களை அழிக்கக்கூடிய அதிகாரம் பூமியின் துஷ்டமிருகங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பூமியின் காற்பங்கில் உள்ளவர்களை கொலைசெய்யும்படியான அதிகாரம் இந்த துஷ்டமிருகங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பூமியின் துஷ்ட மிருகங்கள் என்னும் வார்த்தை மிருககுணமுள்ள மனுஷரையும், துன்மார்க்க குணமுள்ள மனுஷரையும், கொடூரகுணமுள்ள
மனுஷரையும் குறிக்கும் என்று வேதபண்டிதர்களில் சிலர் கருத்து சொல்கிறார்கள்
யோவான் மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டார் அதன் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அதன்பின் சென்றது இந்த வசனத்தில் மரணத்திற்கும், பாதாளத்திற்கும் ஆள்தத்துவப் பண்பு கொடுக்கப்படுகிறது. முதல் மூன்று முத்திரைகள் உடைக்கப்பட்ட போது குதிரைகள் மீது ஏறி வந்தவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் நாலாம் முத்திரை உடைக்கப்பட்ட பின்பு வருகிறவர்கள் பெயர்கள் மரணம் என்று பாதாளம்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மகா உபத்திரவம் உலகம் முழுவதிலும் ஏற்படாமல் பூமியின் காற்பங்கில் மட்டும் உண்டாயிற்று
1. முதல் நான்கு முத்திரைகளும் பூமியின் காற்பங்கிலுள்ளவர்களுக்கே உரியது. (வெளி 6:8)
2. வெளி 6:9-11 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் இரத்தச்சாட்சியாக மரித்த பரிசுத்தவான்கள் ரோமப் பேரரசிற்கு உட்பட்டவர்கள். அங்கு வெளி 17 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் மகா வேசியானவள் பத்து ராஜாக்களை ஆளுகை செய்தாள்.
3. வெளி 7:1-8 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் 144000 யூதர்கள் பாலஸ்தீனாவிலுள்ள இஸ்ரவேலிலிருந்து முத்திரையிடப்பட்ட வரிகள் ஸ்திரீயானவள் என்பது இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கும் இவள் ஆண் பிள்ளையைப் பெற்றாள். (வெளி 12).
இந்தத் தீர்க்கதரிசனம் பாலஸ்தீன தேசத்தை மையமாகக் கொண்டிருக்கிறது
4. வெனி 79-17 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் உபத்திரவம் காலத்து பரிசுத்தவான்களின் இரத்தம் சாட்சி மரணம் மகா
உபத்திரவம் உண்டாகும் தேசத்தில் மட்டுமே நடைபெறும் வெளி 13 ஆவது அதிகாரத்தை ஒருசில வேதபண்டிதர்கள் ஆராய்ந்து பார்த்து பழைய ரோமப்பேரரசின் பகுதியில் மகா உபத்திரவக்காலம் உண்டாகும் என்று வியாக்கியானம் கூறுகிறார்கள்.
5. 1,2,3,4 ஆகிய எக்காளங்கள் பூமியின் மூன்றிலொரு பங்கிற்கு உரியவை (வெளி 8:7-12)
6. மூன்றாவது எக்காளத்தினால் மனுஷரில்
மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். (வெளி 9:18).
7. வெளி 11:1-13; வெளி 12:1-17 ஆகிய
வசனங்களில் கூறப்பட்டிருக்கும் உபத்திரவங்களில் எருசலேமும், இஸ்ரவேலும் பாதிக்கப்பட்டிருந்தன.
8. அந்திக்கிறிஸ்துவின் ஆளுகை பத்து ராஜ்ஜியங்களின் மீது மட்டுமே இருக்கும். இது பழைய ரோமப்பேரரசின் ஒரு பகுதியின் று ஒருசில வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். (வெளி 13)
9. வெளி 14:8-20 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள்
பாபிலோன், மிருகத்தையும், அதன் சொருபத்தையும் வணங்குகிறார்கள் இரத்தச்சாட்சியாக மரித்தவர்கள், பாலஸ்தீனத்திலுள்ள அர்மகெதோன் ஆகியவற்றோடு தொடர்புடையவை.
10. கலசத்தின் நியாயத்தீர்ப்புக்கள் அந்திக்கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்கு
மட்டுமே உரியது. (வெளி 16:2,10,12; வெளி 18:1-24) இயேசு கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்திற்கே தமது இரண்டாவது வருகையின் போது முதலாவது வருவார். (சக 14:1-5;
வெளி 19:11-21) இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கிறார் என்பதை உலகத்தின் ஜாதிகள் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர்
எருசலேமில் ஆட்சி செய்து கொண்டிருப்பார். ஏசா 2:2-4; ஏசா ஏசா 66:19-21; சக 8:23).
பட்டயத்திலும் பஞ்சத்தினாலும், சாவினாலும்
பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும் படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப் பட்டது முதல் இரண்டு முத்திரையில் யுத்தங்களும் மூன்றாவது முத்திரையில் பஞ்சமும் நான்காவது முத்திரையில் மரணமும் பாதாளமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் நான்கு முத்திரைகளினால் பூமியில் யுத்தங்களும், பஞ்சங்களும், கொள்ளை நோய்கள் உண்டாகும் போது ஏராளமானோர் மடிந்து போனார்கள் அவர்களுடைய சரீரங்களைப் புசிப்பதற்காக துஷ்டமிருகங்கள் அங்கு கூடிவரும்.
ஐந்தாம் முத்திரை வெளி 6:9-11
அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 6:9
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 6:10
அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது, அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 6:11
ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்திலுள்ள ஐந்தாம் முத்திரையை உடைக்கிறார். அப்போது புதிய வெளிப்பாடு எதுவும் காணப்படவில்லை புதிய தீர்க்கதரிசனம் எதுவும் சொல்லப்படவில்லை. அங்கு ஆறுதலான வார்த்தைகள் உண்டாயிற்று மகா உபத்திரவத்தில் சிக்குண்டிருக்கிறவர்களுக்கு தேவனுடைய சமூகத்தில் ஆறுதலான வார்த்தைகள் சொல்லப்படுகிறது.
ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டது யோவான் இரத்த சாட்சிகளுடைய ஆத்துமாக்களைப் பார்க்கிறார். மகாபரிசுத்த ஸ்தலத்திலே அவற்றைப் பார்க்கிறார். பரலோகத்திலே கிறிஸ்துவானவருடைய பாதபடியில் அந்த ஆத்துமாக்களைப் பார்க்கிறார். அவர்கள் பலிபீடத்தின் கீழே இருக்கிறார்கள். இந்த உலகத்தில் கர்த்தருக்காக ஊழியம் செய்து பாடுகள் அனுபவித்த ஊழியக்காரர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களில் அநேகர் தேவவசனத்தினிமித்தமும், தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டார்கள்.
இந்த உலகம் இவர்களுக்கு பாத்திரமா இருக்கவில்லை இப்பிரபஞ்சம் அவர்கள் வெறுத்தது உலகத்தால் வெறுத்து துன்புறுத்தப்பட்ட என்னுடைய பிள்ளைகளை கர்த்தரோ என்னுடைய பரலோகத்தில் ஒரு மகிமையான ஸ்தலத்திலே கொண்டு வந்து நிறுத்துகிறார். அவர்களுக்குப் பூமியில் இடமில்லை. பூமியிலே அவர்கள் பூரண ஆயுசு வாழ முடியவில்லை உலகத்தார் அவர்களை தேவவசனத்தை னிமித்தமும் அவர்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொன்றுவிட்டார்கள் உன்னதமான நோக்கத்திற்காக இவர்கள் இரத்த சாட்சியாக மரித்துப் போனார்கள் இவர்களுடைய
ஆத்துமாக்கள் பலிபீடத்தின் கீழே இருப்பதை யோவான் காண்கிறார்.
இரத்தசாட்சியாக மரித்தவர்கள் கர்த்தரோடு பேசுகிறார்கள். அவர்கள் மகா சத்தமிட்டு கூப்பிடுவதை யோவான் தன் செவிகளினால் கேட்கிறார். இந்த ஆத்துமாக்கள் நீதிமான்களின் ஆவிகள். இவர்கள் பரிபூரணம் உள்ளவர்கள் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தமாய் அவர்கள் பூமியிலே இரத்த சாட்சியாக மரித்தார்கள் இவர்கள் பரிசுத்தவான் களாகவும் பரிபூரணமானவர்களாகவும் இருந்தாலும், பூமியிலே தங்களை உபத்திரவத்திற்குட்படுத்தின சத்துருக்களை கர்த்த ர் நியாயத்தீர்ப்பு செய்ய வேண்டுமென்றும் பழிவாங்க வேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவினுடைய நியாயத்தீர்ப்பில் -தாமதமுண்டாவதாக அவர்கள் நினைக்கிறார்கள்
அவர் தங்களுடைய சத்துருக்களை பழிவாங்குவதில் தாமதப்படுத்துகிறார் என்று நினைத்து, எதுவரைக்கு அவர்களைப் பழிவாங்காமலிருப்பீர் என்று மகாசத்தமிட்டுக் கூப்பிடுகிறார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் தங்களுடைய சத்துருக்களை பழி வாங்க வில்லை பழிவாங்குதல் கர்த்தருக்கே உரியது ஆகையினால் அவர்கள் நியாயத்தீர்ப்பு செய்யவும் பழிவாங்கவும் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள்
பரிசுத்தவான்கள் கர்த்தரை கூப்பிடும்போது. "பரிகத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே" என்று சொல்லிக் கூப்பிடுகிறார்கள். மேலும், "தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எது வரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்" என்று மகாசத்தமிட்டுக் கூப்பிடுகிறார்கள்.
தம்முடைய பரிசுத்தவான்கள் தம்மிடத்தில் மகாசத்தமிட்டுக் கூப்பிடுவதை கர்த்தர் செவிகொடுத்துக் கேட்கிறார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் நன்மைகளை விசாரிக்கிறவர். நியாயத்தீர்ப்பு செய்வதையும், பழிவாங்குவதையும் குறித்து தம்மிடத்தில் மகாசத்தமிட்டு கூப்பிடுகிறவர்களிடத்தில், கர்த்தர் மிகுந்த அன்போடும், கரிசனையோடும் பிரதியுத்தரம் சொல்லுகிறார்.
தேவனானவர் முதலாவதாக, இரத்த சாட்சியாக மரித்துப்போன ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகளைக் கொடுக்கிறார். வெள்ளை அங்கிகள் ஜெயத்திற்கும் மகிமைக்கும், கனத்திற்கும் அடையாளம்.
தங்கள் இரத்தத்தைக்குறித்து பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் தேவன் நியாயத்தீர்ப்பு செய்யவேண்டுமென்றும், அவர் அவர்களை சீக்கிரமாய் பழிவாங்கவேண்டுமென்றும் பரிசுத்தவான்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கர்த்தரோ அவர்களை இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாயிருக்குமாறு சொல்லுகிறார்.
இரத்தசாட்சியாக மரித்துப்போனவர்கள் இன்னும் கொஞ்ச காலம் இளைப்பாறவேண்டுமென்று கர்த்தர் அவர்களுக்குச் சொல்லுகிறார். அவர்களுடைய இரத்தத்தைக்குறித்து பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் அப்போது நிச்சயமாகவே நியாயத்தீர்ப்பு செய்யப்படும். கர்த்தர் அவர்களை அப்போது மெய்யாகவே பழிவாங்குவார்.
இரத்த சாட்சியாக மரித்துப் போனார்கள் எவ்வளவு காலம் பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்பதையும் தேவன் தெளிவுபடுத்துகிறார். ஏற்கெனவே இரத்த சாட்சியாக மரித்துப்போன இவர்களைப் போல இன்னும் கொலை செய்யப்பட போகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே
இரத்தசாட்சியாக மரித்துப்போனவர்களுடைய
உடன் பணிவிடைக்காரராகவும், சகோதரருமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இப்போது பூமியிலே கர்த்தருக்காக ஊழியம் செய்து வருகிறார்கள். இவர்களைப் போலவே அவர்களும் தேவவசனத்தினிமித்தமும், தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்படுவார்கள்.
எத்தனை பேர் இரத்தசாட்சியாக மரிக்கவேண்டுமென்று கர்த்தர் ஒரு தொகையை
நிர்ணயம் செய்திருக்கிறார் இரத்தசாட்சியாக மரிக்கவேண்டியவர்களின் தொகை நிறைவேறும்போது கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் இரத்தத்தைக் குறித்து பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் நியாயத்தீர்ப்பு செய்வார். அவர்களைப் பழிவாங்குவேன்
அதுவரையிலும், ஏற்கனவே இரத்தசாட்சியாக மரித்தவர்கள் பொறுமையாய் இருக்க வேண்டும் இன்னும் கொஞ்சகாலத்தில் கர்த்தர் நியாயத்தீர்ப்பு செய்வார். அந்தக் கொஞ்சகாலம் மட்டும் இரத்தசாட்சியாய் மரித்தவர்கள் இளைப்பாற வேண்டும் தம்முடைய பிள்ளைகளை உபத்திரவப்படுத்தியவர்களை கர்த்தர் பழிவாங்குவார். அவர்களுக்கு நித்திய ஆக்கினையைக் கொடுப்பார். தம்முடைய வசனத்தினிமித்தமும், தம்மைக்குறித்தும், சாட்சி கொடுத்து உபத்திரம் பட்டவர்களுக்கு கர்த்தர் நித்திய இளைப்பாறுதலைத் தருவார்.
கிறிஸ்துவில் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்த பின்பு இந்த ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள். ஆபேலின் காலத்திலிருந்து வெளி 41 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் சபை எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரையிலும் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இவர்கள் இந்த
நிகழ்ச்சிக்குப் பின்பு இரட்சிக்கப்பட்டவர்கள். சபை எடுத்துக் கொள்ளப்படும் காலம்,
தானியேலின் எழுபதாவது வாரத்தின் முதல் மூன்றரை வருஷத்தில் முத்திரை திறக்கப்பட்ட
காலம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலத்தில் இவர்கள் இரத்தச்சாட்சியாக மரித்தார்கள்.
எல்லா முத்திரைகளின் நிகழ்ச்சிகளும் முதல் ஆறு எக்காளங்களின் நிகழ்ச்சிகளும்,
இக்காலத்தில் நடைபெறும். வெளி 17:1-7 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் மகா
வேசியினால் இவர்கள் இரத்தச்சாட்சியாக மரிப்பார்கள். இக்காலத்தில் இவள் பத்து
ராஜாக்களை ஆளுகை செய்வாள் இவர்கள் மீது அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையும் வரும்
கொல்லப்பட்டவர்கள் மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். மரணத்திற்கும், உயிர்த்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆத்துமா உணர்வுடையதாக இருக்கும் என்பதும், ஆத்துமா மரிப்பதில்லை என்பதும் இதன் மூலமாக நிரூபணமாகிறது
அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. உள்ளான
மனுஷனான ஆவி, ஆத்துமாவிற்கு ஒரு ரூபமும், சாயலும் உண்டு . புறம்பான மனுஷன்
தன்னுடைய சரீர ரூபத்தில் இருப்பதுபோல உள்ளான மனுஷனாகிய ஆவியும்
ஆத்துமாவும் ஒரு ரூபத்தில் இருக்கும். ஆத்துமா உணர்கிறது ஆவி வருகிறது
உள்ளான மனுஷன் புசிக்கும் குடிக்கிறான், ஓய்வெடுக்கிறான், மேலும் பல காரியங்களைச் செய்கிறான். அதுபோலவே இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் வெள்ளை அங்கிகளை அணிந்து கொள்கிறான்.
இவர்கள் தங்களைப் போலக் கொலைசெய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக் காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் -தொகை நிறைவேறுமளவும் இளைப்பாற வேண்டும்.
உபத்திரவக்காலத்து பரிசுத்தவான்கள் இரத்தச்சாட்சியாக மரிக்கும் வரையிலும் இவர்கள் இளைப்பாற வேண்டும். இதன்பின்பு,
இவர்கள் அனைவரும் ஒன்றாக உயிர்த்தெழுவார்கள். இவர்களைக் கொலை செய்தவர்கள் மீது நியாயத்தீர்ப்பு அனுப்பப்படும்.
ஆறாம் முத்திரை வெளி 6 : 12-17
அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன், இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது, சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று. வெளிப்படுத்தின விசேஷம் 6:12
அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 6:13
வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று, மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. வெளிப்படுத்தின விசேஷம் 6:14
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, வெளிப்படுத்தின விசேஷம் 6:15
பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 6:16
அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள வெளிப்படுத்தின விசேஷம் 6:17
ஆட்டுக்குட்டியானவர் ஆறாம் முத்திரை உடைத்தார். அப்போது மிகவும் பயங்கரமான சம்பவங்களை யோவான் தரிசிக்கிறார். பூமி மிகவும் அதிர்ந்தது. கறுப்புக் கம்பளியைப் போலக் சூரியன் கறுத்தது. சந்திரன் இரத்தம் போலாயிற்று. தேவனுடைய நியாயத்தீர்ப்பு இந்த உலகத்தில் அதிபயங்கரமாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவங்களெல்லாம் அடையாளம் மனுஷர்
எதிர்பாராத பயங்கரமான காரியங்களெல்லாம் அப்போது நடைபெறும்.
கிறிஸ்துவானவர் ஆறாம் முத்திரை உடைத்தபோது வானத்தின் நட்சத்திரங்கள்
பூமியிலே விழுந்து அத்திமரமான து பெருங்காற்றினால் அதன் காய்கள் உதிருகிறதுபோல வானத்தின் நட்சத்திரங்கள் பூமியிலே விழுந்தது இப்பிரபஞ்சம் முழுவதும் அப்போது சம்பவங்கள் நடைபெற்றது. பூமி மிகவும் அதிர்ந்தது. வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று. இந்தப் பயங்கரத்திற்கு எதுவுமே தப்பவில்லை. இந்தப் பயங்கரத்தை எதிர்த்து எதுவும் நிலைத்து நிற்கவில்லை பூமி மிகவும் அதிர்ந்தது, மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு
அகன்றுபோயின.
இது கர்த்தருடைய கோபாக்கினையின் மகா நாள் இந்த நாளில் நிலைநிற்க யாராலும் முடியவில்லை . பூமியிலுள்ள எல்லோரும் பூமி அதிருவதையும், மலைகள் தீவுகள் யாவும் அகன்று போவதையும்பார்த்து நடுங்குகிறார்கள் தங்கள் இடங்களை விட்டு மகாபயங்கரத்திலிருந்து
தப்பித்துக்கொள்வதற்கு, கொள்வதற்கு, மனிதர்கள் தங்கள் சுப பலத்தையும் சுயபுத்தியையும்,
சுயயோசனையையும் சார்ந்திருக்கிறார்கள்.
சூரியன் கருப்பு கம்பளியைப் போலக் கறுப்பதையும் சந்திரன் இரத்தம்போலாவதையும் பார்த்து பயப்படுகிறார்கள். வானம் சுருட்டப்பட்ட புஸ்தகம்போல விலகிப்போவதைப் பார்த்து திகைக்கிறார்கள். இந்த மகாபயங்கரத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு, கொள்வதற்கு, மனிதர்கள் தங்கள் சுப பலத்தையும் சுயபுத்தியையும், சுயயோசனையையும் சார்ந்திருக்கிறார்கள்.
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், களும், சேனைத்தலைவர் களும் பலவான்களும் அடிமைகள் யாவரும் சுயாதீனர் யாவரும் பூமியிலும் வானத்திலும் நடைபெறுகிற பயங்கரமான சம்பவங்களைப் பார்த்து பயந்து நடுங்குகிறார்கள். அவர்கள்
யாவரும் பர்வதங்களிலும், குகைகளிலும் கண் மலைகளில் ஒளிந்து கொள்கிறார்கள்
பூமியிலும் வானத்திலும் பிரளயம் உண்டானதற்கு ஆட்டுக்குட்டியானவருடைய கோபமே காரணம் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்கிறார்கள் ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கு தாங்கள் மறைவாகயிருக்கவேண்டுமென்றும், யாராவது தங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த ஜனங்களுக்கு இதுவரையிலும் சிருஷ்டிகரிடம் விண்ணப்பம்பண்ணி பழக்கமில்லை. இவர்கள் சிருஷ்டிகளையே தொழுது சிருஷ்டிகளிடத்திலேயே தங்களுடைய விண்ணப்பங்களை ஏறெடுத்தவர்கள். தங்களுடைய வழக்கத்தின் பிரகாரமாக, இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய கோபாக்கினையின் மகாநாள் சிருஷ்டிகளிடத்தில் முறையிடுகிறார்கள்.
இவர்கள் இதுவரையிலும் பர்வதங்களையும் கன்மலைகளையும் தொழுது வந்தார்கள், இப்பொழுது தாங்கள் தொழுதுவந்த பர்வதங்களும் கன்மலைகளையும் நோக்கி, "நீங்கள் எங்கள் மேல் விழுந்து சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்கிறார்கள் காதுகளில்லாத, கேட்கமுடியாத பர்வதங்களிடத்திலும் கன்மலைகளிடத்திலும் விண்ணப்பம் பண்ணுகிறார்கள்
தேவனுடைய கோபாக்கினை இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நடைபெறுகிற சம்பவங்களைப்
பார்த்து ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்தை இவர்கள் புரிந்துகொள்கிறார்கள். பர்வதங்களையும், கன் மலைகளையும் நோக்கிப் பேசியவர்கள், அவைகளிடம் தொடர்ந்து, "ஆட்டுக்குட்டியானவருடைய கோபாக்கினையின் நாள் வந்துவிட்டது. யார் நிலைநிற்கக்கூடும்" என்று சொல்கிறார்கள்
தேவன் சர்வ வல்லமையுள்ள வர். அவர் அதரிசனமானவரை. மனுஷரால் தேவனைப் பார்க்க முடியாது ஆனாலும் அவருடைய கோபாக்கினையை மனுஷரால் உணர முடிகிறது தேவனுடைய கோபாக்கினையின் மகாநாளில் சம்பவிக்கிற பயங்கரமான காரியங்களை மனுஷரால் காணமுடிகிறது.
கிறிஸ்துவானவர் ஆட்டுக்குட்டியானவராகவே இருக்கிறார். ஆட்டுக்குட்டி மிகவும் சாதுவானது. அது ஒருபோதும் கோபப்படாது. ஆனால் இங்கோ ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்தைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவானவர் ஆட்டுக்குட்டியானவராக இருந்தாலும், அவருடைய கோபம் மகாப்யங்கரமாக இருக்கிறது
தேவன் நமக்கு கிருபையின் காலத்தைக் கொடுத்திருக்கிறார். மனந்திரும்புவதற்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். கிருபையின் காலத்தில் நாம் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் கிருபையின் காலத்தை அசட்டை செய்துவிடக்கூடாது.
கிருபையின் காலத்தைத் தொடர்ந்து தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பின் காலம் வரப்போகிறது. அப்போது தேவன் என்னுடைய நீதியை மாத்திரம் வெளிப்படுத்துவார். தம்முடைய கிருபையைக்
காண்பிக்க மாட்டேன் தேவனுடைய நியாயத்தீர்ப்பு | நாள், அவருடைய கோபாக்கினையின் மகா நாளாக இருக்கும் அந்த நாளில் அவருடைய கோபத்திற்கு முன்பாக யாராலும் நிலைநிற்க முடியாது
கிருபையின் காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்கிறவர்கள் பாக்கியவான்கள். கிருபையின் காலத்தை அசட்டை செய்து விட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் தண்டிக்கப்படுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பு நீயாகவே இருக்கும் அவருடைய கோபாக்கினையும் நீதியாகவே இருக்கும்.
பெரிய காரியங்கள்
1. சத்தம் வெளி 1:10)
2. உபத்திரவம் (வெளி 2:22)
3. பட்டயம் (வெளி 6:4)
4. பூமியதிர்ச்சி (வெளி 6:12)
5. ஜனங்கள் (வெளி 6:15)
6. நாள் (வெளி 5:17)
7. திரளான கூட்டமாகிய ஜனங்கள் (வெளி 7:9)
8. பர்வதம் (வெளி 8:8)
9. நட்சத்திரம் (வெளி 8:10)
10, சூளை (வெளி 9:2)
11. நதி (வெளி 9:14)
12. நகரம் (வெளி 11:8)
13. பயம் (வெளி 11:11)
14. சத்தங்கள் (வெளி 11:15)
15. வல்லமை வெளி 11:17)
16. கல்மழை (வெளி 11:19)
17. அடையாளம் (வெளி 12:1)
18. சிவப்பான வலுசர்ப்பம் (வெளி 12:3,9)
19. கோபம் (வெளி 12:12)
20. கழுகு (வெளி 12:14)
21. அதிகாரம் (வெளி 13:2
22. காரியங்கள் (வெளி 13:5)
23. அற்புதங்கள் (வெளி 13:13)
24. இடிமுழக்கம் (வெளி 14:2)
25. ஆலை (வெளி 14:19)
26. அடையாளம் (வெளி 15:1)
27. கிரியைகள் (வெளி 15:3)
28. உஷ்ணம் (வெளி 16:9
29. தேவனுடைய நாள் (வெளி 16:14)
30). பாபிலோன் (வெளி 16:19)
31. வாதை (வெளி 16:21)
32. வேசி (வெளி 17:1)
33. ஆச்சரியப்படுதல் (வெளி 17:6)
34. ஐசுவரியங்கள் (வெளி 18:16)
35. ஏந்திரக்கல் (வெளி 18:21)
36. தேவன் (வெளி 19:15)
37. சங்கிலி (வெளி 20:1)
38. வெள்ளை சிங்காசனம் (வெளி 20:11)
39. வாசல் (வெளி 21:12)
தானியேலின் எழுபதாவது வாரத்தில் கூறப்பட்டிருக்கும் நான்கு பூமியதிர்ச்சிகள்
- ஆறாவது முத்திரையின்போது தானியேலின் எழுபதாவது வாரத்தில் முதல் மூன்றரை வருஷத்தில் வெளி 6:12)
- ஏழாவது முத்திரைக்கும், முதலாவது எக்காளத்திற்கும் இடைப்பட்ட காலம் - முதல் மூன்றரை வருஷத்தில், (வெளி 8:5)
- ஏழாவது எக்காளத்தின் போது எழுபதாவது வாரத்தின் நடுவில் (வெளி 11:19)
- ஏழாவது கலசத்தின் போது - வாரத்தின் இறுதியில், (வெளி 11:13; வெளி 16:19; சசு 14:4-81
தம்முடைய இரண்டாம் வருகைக்கு அடையாளமாக இயேசு கிறிஸ்து கடைசி நாட்களில் பல பூமியதிர்ச்சிகள் உண்டாகும் என்று முன்ன அறிவித்திருக்கிறார் வேதாகம் வரலாற்றில் பல பூமியதிர்ச்சி களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. ஆயிரம் வருஷ அரசாட்சியின் இறுதியில் மிகப்பெரிய
பூமியதிர்ச்சி உண்டாகும். இதன் பின்பு புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும்.
தானியேலின் எழுபதாவது வாரத்தில் சூரியன் கருப்பாக மாறிய ஐந்து நிகழ்ச்சிகள்
1. ஆறாவது முத்திரையின் போது - வாரத்தின் ஆரம்பத்தில் (வெளி 6:12)
2. நான்காவது எக்காளத்தின் போது (வெளி 8:12
3. ஐந்தாவது எக்காளத்தின்போது (வெளி 9:2)
4. நான்காவது கலசத்தின் போது வாரத்தின் இறுதியில் (வெளி 16:10)
5. உபத்திரவக்காலம் முடிந்தவுடன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது (மத் 24:29)
சூரியன் கருப்பாக மாறியதுபோன்று சந்திரனும் ஐந்து தடவை இரத்தம் போலாயிற்று சூரியனைப் போலவே நட்சத்திரங்களும் ஐந்து முறைபாதிக்கப்பட்டன. இரண்டு முறை மட்டுமே பாதிக்கப்பட்டனிழுந்ததாக வாசிக்கிறோம். அவையாவன:
1. ஆறாவது முத்திரையின் போது (வெளி 6:13)
2. உபத்திரவ காலத்திற்கு பின்பு இயேசு
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது (மத் 24:29-31).
இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையில் பல வருஷங்கள் இடைவெளி உள்ளன.
வெளி 20:11, 21:1 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது போன்று பூமியும், வானமும் அகன்று போகவுமில்லை ஒழிந்து போகவுமில்லை ஏனெனில் வெளி 6:14 ஆவது வசனத்திற்குப் பின்பு பலதடவை வானத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.
மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களை விட்டு அகன்றுபோயின. இவைகள் முழுவதுமாக ஒழிந்துபோகவில்லை. ஏனெனில் பல வருஷங்களுக்குப் பின்பு மிகப்பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று தீவுகள் அகன்றுபோயின என்றும் பர்வதங்கள் காணப்படாமல் போன என்றும் வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
தேவனுடைய கோபாக்கினை வெளிப் பட்டதை உணர்ந்த ஏழு பிரிவினர்
1. ராஜாக்கள்
2. பெரியோர்கள்
3. ஐசுவரியவான்கள்
4. சேனைத்தலைவர்கள்
5. பலவான்கள்
6. அடிமைகள்
7. சுயாதீனர்
தேவனுடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது இந்த கோபாக்கினை - ரோமர் 2:514-15; வெளி 20:11-15 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் கோபாக்கினை அல்ல. வாரத்தின் முதல் மூன்றரை வருஷத்தில் ஆறாவது முத்திரை திறக்கப்பட்ட போது இந்தக் கோபாக்கினை ஆரம்பமாகிறது. ஆகிய நியாயத்தீர்ப்புகள் நடைபெறும் வாரத்தின் இறுதியில் எக்காளம், கலசம் வரையிலும் இந்தக் கோபாக்கினை தொடர்கிறது. ஆறாம் முத்திரையும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் ஒரே நிகழ்ச்சிகள் அல்ல இவ்விரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையில் வெளி 7:1-19:10 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெறும்.