ஒரு புத்தகம் வெளி 5:1

ஒரு புத்தகம் வெளி 5:1

வெளி 5:1. அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

அப்போஸ்தலர் யோவான் இதுவரையிலும் தேவனுடைய மகிமையை தரிசித்தார். இப்போது அவருடைய மகிமையான ஆளுகையை தரிசிக்கிற சிலாக்கியம் யோவானுக்குக் கிடைத்திருக்கிறது. தேவன் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார். அவருடைய வலதுகரத்திலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. இந்தப் புத்தகம் ஏழுமுத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்கத்தில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருக்கிற
து.

தேவன் சர்வ வல்லமை உள்ளவர். அவர் தம்முடைய வலதுகரத்தில் இந்தப் புஸ்தகத்தை வைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்தின் மீது சர்வ தேவனுக்கு அதிகாரம் உள்ளது என்ன இதில் எழுதியிருக்கிறது என்பது தேவனுக்கு மாத்திரமே தெரியும், இந்தப் புஸ்தகத்தை தேவன் அனுமதித்தால் மாத்திரமே திறக்க முடியும். திறக்கப்பட்டால் தான், அதில் எழுதப்பட்டிருப்பதை மற்றவர்களால் பார்க்கமுடியும்

இந்தப் புத்தகம் ஏழுமுத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் ஏழு பகுதிகள் உள்ளன ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விசேஷித்த முத்திரையினால் முத்திரையிடப்பட்டிருக்கும் ஏழு முத்திரைகளையும் ஒரே நேரத்தில் திறந்து. புஸ்தகத்தின் ஏழுபகுதிகளையும் மொத்தமாகப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு முத்திரையாகத் திறக்கவேண்டும் தேவனுடைய பராமரிப்பு ஒவ்வொன்றாக வரும் தேவனுடைய ஆசீர்வாதம் ஒன்றன்பின் ஒன்றாகவே வரும். தேவனைப்பற்றிய வெளிப்பாடுகளும் நமக்கு ஒவ்வொன்றாக கொடுக்கப்படுகிறது.

பலமுள்ள ஒரு தூதன் வெளி 5:2,3

 புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 5:2

 வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.  வெளிப்படுத்தின விசேஷம் 5:3

அப்போஸ்தலர் யோவான் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்தில்
ஒரு புத்தகத்தைக் காண்கிறார். அப்போது பலமுள்ள ஒரு தூதன் மிகுந்த சத்தமிட்டு சொல்லுகிற சத்தத்தையும் கேட்கிறான் அந்தத் தூதனையும் பார்க்கிறார். அந்தத் தூதன் புத்தகத்தைத் திறக்கும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிறான். இவன் சாதாரண தூதன் மிகவும் பலமுள்ளவன். சர்வசிருஷ்டிகளுடைய பெலத்தையும், அவர்களுடைய ஞானத்தையும் சோதித்துப் பார்க்கக்கூடியவன். தேவனுடைய ஆலோசனைகளை திறக்க வேண்டும் என்றால் அதைத் திறக்கிறவருக்கு பலமும் ஞானமும் இருக்க வேண்டும்.

புஸ்தகத்தின் முத்திரை எளிதாகத் திறக்க முடியாது. புஸ்தகத்தைத் திறக்கவும் அதைப் பார்க்கவும் வானத்திலாவது, பூமியின் கீழாவது ஒருவராலும் முடியவில்லை விழுந்துபோன தூதர்களெல்லாம் பூமியின்
கீழே பாதாளத்தில் இருக்கிறார்கள் அவர்களுடைய எஜமானாகிய சாத்தானும் அவர்களோடுகூட பாதாளத்தில்தான் இருக்கிறார் அவர்களாலும் இந்தப் புஸ்தகத்தை திறக்க முடியவில்லை. சாத்தான் மாத்திரமல்ல, வேறு எந்த சிருஷ்டியாலும் அந்தப் புஸ்தகத்தை திறக்க முடியவில்லை. அதில் எழுதப்பட்டிருப்பது பார்த்து வாசிக்கவும் முடியவில்லை தேவனுடைய வலது கரத்திலுள்ள புஸ்தகத்தை, அவரால் மாத்திரம் திறக்க முடியும்

வெளிப்படுத்தின விசேஷத்தில் பெயர் தெரியாத 26 தூதர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இவைகளைத்தவிர 15 தூதர்கள்  மனுஷராகக் குறிப்பிட பட்டிருக்கிறார்கள் ஏராளமான தூதர்களும், கிறிஸ்துவும் லூசிபர் மிகாவேலும் இந்தப் புஸ்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கிறார்கள்

மனுஷர் உணர்வோடு இருக்கும் மூன்று லோகங்கள்

1. வானம்
2. பூமி
3. பூமியின் கீழ்

யூதா கோத்திரத்து சிங்கம் வெளி 5:4,5

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:4

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம், இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். வெளிப்படுத்தின விசேஷம் 5:5

அப்போஸ்தலர் யோவான் பலமுள்ள அந்தத் தூதனைக் காண்கிறார். அந்தத் தூதன் சத்தமிட்டு சொல்லுவதையும் கேட்கிறார் அவருடைய வார்த்தையைக் கேட்டு ஒருவராலும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், பார்க்கவும் கூடியிருக்கிறது அந்தப் புஸ்கத்தைத் திறந்து வாசிக்கவும், அதைப் பார்க்கவும் பாத்திர வானக ஒருவரும் காணப்படவில்லை. இதனால் யோவான் மிகவும் அழுகிறார். அவருக்குள் மிகுந்த ஏமாற்றமுண்டாயிற்று.

சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற சர்வவல்லமையுள்ள தேவனை யோவான் தரிசிக்கிறார். அவருடைய வலதுகரத்தில் இந்தப் புத்தகம் இருக்கிறது. தேவனுடைய சிந்தையும் சித்தமும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது தேவனுடைய சித்தத்தை எப்படியாவது தெரிந்துகொள்ளவேண்டுமென்று யோவான் விரும்புகிறார். தேவனுடைய மகிமையைக் காண்கிறவர்கள் அவருடைய சித்தத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புவார்கள்.

தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் உள்ளன. அவற்றின் மேல் இருபத்து நான்கு மூப்பர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த மூப்பர்களில் ஒருவர் யோவானுக்கு ஆதரவாகப் பேசுகிறார். யோவானைத் தேற்றுகிறார். அவரை உற்சாகப்படுத்துகிறது யோவான் மிகவும் அழுது கொண்டிருக்கிறார் மூப்பர்களில் ஒருவர் யோவானை நோக்கி, "நீ அழ வேண்டாம்
என்று ஆறுதலாகச் சொல்லுகிறார். மேலும், "இதோ, யூதா கோத்திரத்து சிங்கமும் தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழுமுத்திரைகளையும் உடைக்கவும் ஜெயம் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறார்.

இயேசு கிறிஸ்து தம்முடைய மாம்சசுபாவத்தில் யூதாகோத்திரத்து சிங்கம் இருக்கிறார் அவர் தம்முடைய தெய்வீக சுபாவத்தில் தாவீதின் வேராக இருக்கிறது தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மத்தியஸ்த ஊழியம் செய்கிறார். தேவனுடைய ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, அவற்றை மனுஷருக்கு வெளிப்படுத்த கிறிஸ்துவானவர் பாத்திரராகயிருக்கிறவர். இருக்கிறவர். கிறிஸ்தவ விரல் மாத்திரமே தேவனுடைய வலதுகரத்திலுள்ள புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்ளவும்,
அதிலுள்ள முத்திரைகளை உடைத்து. அந்தப் புஸ்தகத்தை திறக்கவும் முடியும்.

கிறிஸ்துவிற்கு வழங்கப்பட்டிருக்கிற நாமங்கள்

1. யூதா கோத்திரத்துச் சிங்கம்
2. தாவீதின் வேருமானவர் (ஏசா II:1)

ஆட்டுக்குட்டியானவர் வெளி 5:6,7

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன், அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது, அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். வெளிப்படுத்தின விசேஷம் 5:6

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:7

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆட்டுக்குட்டியானவராகயிருக்கிறார். அவரே அங்கு வந்து சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்குகிறார். குமாரனாகிய
இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனோடு அதே சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்கிற சிலாக்கியத்தையும் மகிமையையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்து பெற்றிருக்கிறார். கிறிஸ்துவானவர் தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்த ராய் இருக்கிறார் சர்வசிருஷ்டிகளைவிட கிறிஸ்துவானவரே பிதாவாகிய தேவனுக்கு மிகவும் சமீபமாயிருக்கிறார்.

இருபத்து நான்கு மூப்பர்களில் ஒருவர் இயேசுகிறிஸ்துவைப்பற்றி சொல்லும்போது, அவர் யூதா கோத்திரத்து சிங்கம் என்று சொன்னார். ஆனால் கிறிஸ்துவானவரோ இங்கே அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியாக நிற்கிறார். கிறிஸ்துவானவர் சாத்தானை ஜெயிப்பதற்கு ஒரு சிங்கம் இருக்கிறார், அதே வேளையில் இயேசு கிறிஸ்து தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்கு ஒரு ஆட்டுக்குட்டியாகவே இருக்கிறார்.

அந்த ஆட்டுக்குட்டி எழு கொம்புகளையும் எழுகண்களையும் உடையதாயிருக்கிறது
தேவனுடைய சித்தத்தை  நிறைவேற்றுவதற்கு ஆட்டுக்குட்டியானவரிடம் பரிபூரணமான
வல்லமையுள்ள தேவனுடைய மனதைப் புரிந்துகொள்வதற்கு ஆட்டுக்குட்டியாக வருடம் பரிபூரணமான ஞானமுள்ளது.
ஆட்டுக்குட்டியானவரிடம் இருக்கிற கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய எழு ஆவிகளாகும். கிறிஸ்துவானவர் தேவனுடைய - ஏழு ஆவிகளையும் உடையவராயிருக்கிறார். கிறிஸ்துவானவர்மீது பரிசுத்த ஆவியானவர் அளவில்லாமல் ஊற்றப்பட்டிருக்கிறார்.

தேவனுடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கவும், அதைத் திறக்கவும், அதின் ஏழுமுத்திரைகளை உடைக்கவும் இயேசுகிறிஸ்து ஜெயங்கொண்டிருக்கிறார். கிறிஸ்துவானவர் பலவந்தம் செய்தோ அல்லது ஏமாற்று வேலைசெய்து தேவனுடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கவில்லை. கிறிஸ்து ஜெயங்கொண்டிருக்கிறவர். அந்தப் புத்தகத்தை வாங்குவதற்குப் பாத்திரராயிருக்கிறவர். இயேசுகிறிஸ்து தேவனுடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்குகிறார். உடனே சர்வசிருஷ்டிகளும் கர்த்தரைத் துதித்துப் புதிய பாட்டு பாடுகிறார்கள்.

ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் இருந்தன. ஆட்டுக்குட்டியானவர் இயேசு கிறிஸ்துவிற்கு அடையாளமாக இருக்கிறது ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவையும், வல்லமையையும் குறிக்கும் அடையாளங்களாகும். ஆவியானவர் ஒருவரே.

புதிய பாட்டு பாடினார்கள் வெளி 5:8-10

 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:  வெளிப்படுத்தின விசேஷம் 5:8

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, வெளிப்படுத்தின விசேஷம் 5:9

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 5:10

இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய வலதுகரத்திலிருந்த புத்தகத்தை வாங்கின உடனே நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் கர்த்தரைத் துதித்து புதிய பாட்டைப் பாடுகிறார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து அவரைப் பணிந்துகொண்டு துதிக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய
தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் படித்துக்கொண்டிருக்கிறார்கள் சுரமண்டலங்கள் -துதிக்கும் இசைக்கருவிகளும் பொற்கலசங்களோ தூபவர்க்கத்தால் நிறைந்திருக்கிறது. பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள் அதில் நிரம்பியிருக்கிறது.

நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும், ஆட்டுக்குட்டியானவரை துதித்துப் பாடும்போது, "தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறார்" என்று சொல்லி போற்றிப் புகழுகிறார்கள்.

இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே இவர்கள் மீட்க பட்டிருக்கிறார்கள் கிறிஸ்துவானவர் இவர்களை தேவனுக்கு முன்பாக ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார். கிறிஸ்துவினிமித்தமாய் இவர்கள் பூமியிலே அரசாளுவார்கள். இயேசுகிறிஸ்துவின் பாடுகளினிமித்தமாய் மனுஷருக்கு மீட்பு உண்டாயிருக்கிறது. மீட்கப்பட்டவர்கள் தேவனுக்கு முன்பாக ராஜாக்களாகவும் ஆசாரியர்களாவும் உயர்த்த பட்டிருக்கிறார்கள் இதற்காக நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, அவருக்குப் புதிய பாட்டைப்பாடி அவரை நன்றியோடு துதிக்கிறார்கள்.

பரலோகத்தில் இசைக்கப்படும் வாத்தியங்கள்

1. 28 சுரமண்ட லங்கள்
2. வெளி 14:2 ஆவது வசனத்தில் 144000 சுரமண்டலங்கள்
3. வெளி 15:2 ஆவது வசனத்தில்
ஏராளமான சுர மண்டலங்கள்

பரலோகத்தில் -இசைக்கருவிகளை இசைத்து தம்மை ஆராதிக்கும் முறைமையைத் தேவன் அங்கீகரித்திருக்கிறார் ஆகையினால் தற்காலத்து திருச்சபைகளில் இசைக்கருவிகளை இசைத்து தேவனை ஆராதிப்பதில் தவறொன்றும் இல்லை.

இந்த வசனப்பகுதிகளில் வரும் நான்கு ஜீவன்கள் இரட்சிக்கப்பட்டவையென்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஏனெனில் இவை "எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர்" என்று கூறுகின்றன வெளி 45-8 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் விளக்கத்தின் மூலமாக இந்த நான்கு ஜீவன்களும் தூதர்கள் என்பதும், இவர்கள் தேவனுடைய பரிசுத்தத்தை அறிவிக்கிறவர்கள் என்பதும்
தெரிய வருகிறது. ஆகையினால் இந்த வசனத்தில் எங்களை என்னும் பிரதிப்பெயர்ச்சொல்லை "அவர்களை" என்னும் பிரதிப்பெயர்ச் சொல் வழங்கி வாசிக்க வேண்டும். "அவர்கள்" என்பது வெளி 5:8 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் பரிசுத்தவான்களைக் குறிக்கும்

கிரேக்க வேதபண்டிதரான லக்மான் திச்சன் டோர்ப், அல்போர்டு, வோர்ட்ஸ்வொர்த் ஆகியோர் வெளி 59 ஆவது வசனத்திலுள்ள "எங்களை" என்னும் பிரதிப்பெயர்ச்சொல் நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக "அவர்களை" என்னும் பிரதிப்பெயர்ச்சொல்லைச் சேர்த்திருக்கிறார்கள்.

மூப்பர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே - மீட்கப்பட்டவர்கள், ஜீவன்கள், தூதர்கள் இவர்கள் அளை வருமே பரிசுத்தவான்களின் ஜெபத்தை ஜெபிக்கிறார்கள் ஆயினும் அவர்கள் மூப்பர்கள் மட்டுமே மீட்கப்பட்டவர்கள்.

கிறிஸ்துவும், உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களும் ஆயிரம் வருஷ அரசாட்சியில் இந்தப் பூமியில் ஆயிரம் வருஷங்களும் புதிய பூமியில் நித்திய காலமாகவும் ஆளுகை செய்வார்கள்.

அநேக தூதர்கள் வெளி 5:11,12

பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன், அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 5:11

 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:12

நான்கு ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு புதுப் பாட்டைப் பாடுகிறார்கள். அப்போது அநேகம் தூதர்களும் அவர்களோடு சேர்ந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதித்துப் பாடுகிறார்கள். இந்தத் தூதர்கள் தேவனுடைய சிங்காசனத்தையும், நான்கு ஜீவன்களையும், இருபத்து நான்கு மூப்பர்களையும் சூழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களுடைய எண்ணிக்கை அநேகம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இவர்களுடைய இலக்கம் பதினாயிராமாகவும், ஆயிரமாயிரமாகவும்
இருக்கிறது. எண்ணமுடியாத அளவுக்கு தூதர்களுடைய எண்ணிக்கை அதிகமாயிருக்கிறது.

தூதர்களை இரட்சிப்பதற்கு இரட்சகர் தேவையில்லை. ஆனாலும் பாவிகளுடைய இரட்சிப்பின் அவர்களுடைய மீட்பின் தூதர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகிறார்கள் சபையார் கிறிஸ்துவைத் துதிப்பதுபோல தூதர்களும் துதிக்கிறார்கள். மகா சத்தமிட்டு துதிக்கிறார்கள். "அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும்
கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராய் இருக்கிறார் என்று சொல்லி தூதர்கள் மகா சத்தமிட்டு துதித்துப் பாடுகிறார்கள்,

வெளி 5:11 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் மூன்று பிரிவினர்

1. தூதர்கள்
2. ஜீவன்கள்.
3. இருபத்தி நான்கு மூப்பர்கள்

அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது" என்பது எபிரெய வழக்குச் சொல்லாகும் இதற்கு எண்ணிலடங்காத, திரளாக ஏராளமான என்று பொருள்.

ஆட்டுக்குட்டியானவர் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கும் காரியங்கள்

1. வல்லமை (வெளி 5:12)
2. ஐசுவரியம் (வெளி 5:12; யோவான் 17:5)
3. ஞானம் (வெளி 5:12)
4. பெலம் (வெளி 5:12; எபி 7:25)
5. கனம் (வெளி 5:12; எபி 1:4)
6. மகிமை (வெளி 5:12; பிலி 2: 9-11)
7. ஸ்தோத்திரம் (வெளி 5:12-13; வெளி 7:12

சிருஷ்கள் யாவும் வெளி 5:13,14

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 5:13

 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:14

ஆட்டுக்குட்டியை வராகிய இயேசு கிறிஸ்துவை நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் துதித்துப் பாடுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து அநேக தூதர்களும் மகா சத்தமிட்டு கிறிஸ்துவானவரைத் துதிக்கிறார்கள். அப்பொழுது சர்வசிருஷ்டிகளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதித்து ஸ்தோத்திரிக்கிறார்கள். வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழும் இருக்குற
சிருஷ்டிகள் யாவும் மீட்பரைத் துதித்துப் பாடுகிறார்கள். சமுத்திரத்தில் உள்ளவைகளும் அவற்றுள் அடங்கிய வஸ்துக்கள் யாவும் ஆட்டுக்குட்டியானவரை துதித்துப் பாடுகிறார்கள்.

சர்வசிருஷ்டிகளும் சேர்ந்து "சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டி அனைவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும்
உண்டாவதாக என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதித்துப் பாடுகிறார்கள் பிதாவாகிய தேவன் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார். சர்வசிருஷ்களும் அவரைத் துதிக்கிறார்கள்,
ஆட்டுக்குட்டியானவர் புதிய உடன்படிக்கையின் மத்திய தாரா இருக்கிறார் அவரையும் அவர்கள் துதிக்கிறார்கள். சர்வசிருஷ்டிகளும் துதிக்கிற மெய் தேவனை நாமும் துதிக்கிறோம் ஆராதிக்கிறோம் அவரை மகிமைப்படுத்துகிறான் அவரே நம்முடைய சிருஷ்டிகர். அவரே நம்முடைய ஆத்தும் மீட்பர் ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருக்கிற பிதாவாகிய தேவனுடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கின போது, பரலோகத்திலே புதிய பாடல்களும்
துதிகளும் ஸ்தோத்திரங்களும் ஏறெடுக்கப்படுகிறது.

புஸ்தகம் சிருஷ்டிகருடைய காற்றிலிருந்து மீட்பரின் கரத்திற்கு வந்திருக்கிறது மீட்பராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராக இருக்கிறார், கிறிஸ்துவானவர் தேவனுடைய சித்தத்தையும், சிந்தையையும், விருப்பத்தையும் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார் அவர் புத்தகத்தை வாங்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராய் இருக்கிறார் இதனால் வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள சர்வசிருஷ்டிகளும் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தரைத் துதித்து புதுப்பாட்டைப் பாடுகிறார்கள்.

தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் சதா காலங்களிலும் உண்டாக வேண்டிய காரியங்கள்

1. ஸ்தோத்திரம் (வெளி 5:13; வெளி 7:10)
2. கனம் வெளி 5:13; 1கொரி 10:13)
3. மகிமை (வெளி 5:13; எபி 13:15)
4. வல்லமை (வெளி 5:13; வெளி 19:6)


வெளி 5:1. அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

அப்போஸ்தலர் யோவான் இதுவரையிலும் தேவனுடைய மகிமையை தரிசித்தார். இப்போது அவருடைய மகிமையான ஆளுகையை தரிசிக்கிற சிலாக்கியம் யோவானுக்குக் கிடைத்திருக்கிறது. தேவன் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார். அவருடைய வலதுகரத்திலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. இந்தப் புத்தகம் ஏழுமுத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்கத்தில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருக்கிறது.

தேவன் சர்வ வல்லமை உள்ளவர். அவர் தம்முடைய வலதுகரத்தில் இந்தப் புஸ்தகத்தை வைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்தின் மீது சர்வ தேவனுக்கு அதிகாரம் உள்ளது என்ன இதில் எழுதியிருக்கிறது என்பது தேவனுக்கு மாத்திரமே தெரியும், இந்தப் புஸ்தகத்தை தேவன் அனுமதித்தால் மாத்திரமே திறக்க முடியும். திறக்கப்பட்டால் தான், அதில் எழுதப்பட்டிருப்பதை மற்றவர்களால் பார்க்கமுடியும்

இந்தப் புத்தகம் ஏழுமுத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் ஏழு பகுதிகள் உள்ளன ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விசேஷித்த முத்திரையினால் முத்திரையிடப்பட்டிருக்கும் ஏழு முத்திரைகளையும் ஒரே நேரத்தில் திறந்து. புஸ்தகத்தின் ஏழுபகுதிகளையும் மொத்தமாகப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. ஒவ்வொரு முத்திரையாகத் திறக்கவேண்டும் தேவனுடைய பராமரிப்பு ஒவ்வொன்றாக வரும் தேவனுடைய ஆசீர்வாதம் ஒன்றன்பின் ஒன்றாகவே வரும். தேவனைப்பற்றிய வெளிப்பாடுகளும் நமக்கு ஒவ்வொன்றாக கொடுக்கப்படுகிறது.

பலமுள்ள ஒரு தூதன் வெளி 5:2,3

 புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 5:2

 வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.  வெளிப்படுத்தின விசேஷம் 5:3

அப்போஸ்தலர் யோவான் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்தில்
ஒரு புத்தகத்தைக் காண்கிறார். அப்போது பலமுள்ள ஒரு தூதன் மிகுந்த சத்தமிட்டு சொல்லுகிற சத்தத்தையும் கேட்கிறான் அந்தத் தூதனையும் பார்க்கிறார். அந்தத் தூதன் புத்தகத்தைத் திறக்கும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிறான். இவன் சாதாரண தூதன் மிகவும் பலமுள்ளவன். சர்வசிருஷ்டிகளுடைய பெலத்தையும், அவர்களுடைய ஞானத்தையும் சோதித்துப் பார்க்கக்கூடியவன். தேவனுடைய ஆலோசனைகளை திறக்க வேண்டும் என்றால் அதைத் திறக்கிறவருக்கு பலமும் ஞானமும் இருக்க வேண்டும்.

புஸ்தகத்தின் முத்திரை எளிதாகத் திறக்க முடியாது. புஸ்தகத்தைத் திறக்கவும் அதைப் பார்க்கவும் வானத்திலாவது, பூமியின் கீழாவது ஒருவராலும் முடியவில்லை விழுந்துபோன தூதர்களெல்லாம் பூமியின்
கீழே பாதாளத்தில் இருக்கிறார்கள் அவர்களுடைய எஜமானாகிய சாத்தானும் அவர்களோடுகூட பாதாளத்தில்தான் இருக்கிறார் அவர்களாலும் இந்தப் புஸ்தகத்தை திறக்க முடியவில்லை. சாத்தான் மாத்திரமல்ல, வேறு எந்த சிருஷ்டியாலும் அந்தப் புஸ்தகத்தை திறக்க முடியவில்லை. அதில் எழுதப்பட்டிருப்பது பார்த்து வாசிக்கவும் முடியவில்லை தேவனுடைய வலது கரத்திலுள்ள புஸ்தகத்தை, அவரால் மாத்திரம் திறக்க முடியும்

வெளிப்படுத்தின விசேஷத்தில் பெயர் தெரியாத 26 தூதர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இவைகளைத்தவிர 15 தூதர்கள்  மனுஷராகக் குறிப்பிட பட்டிருக்கிறார்கள் ஏராளமான தூதர்களும், கிறிஸ்துவும் லூசிபர் மிகாவேலும் இந்தப் புஸ்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கிறார்கள்

மனுஷர் உணர்வோடு இருக்கும் மூன்று லோகங்கள்

1. வானம்
2. பூமி
3. பூமியின் கீழ்

யூதா கோத்திரத்து சிங்கம் வெளி 5:4,5

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:4

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம், இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். வெளிப்படுத்தின விசேஷம் 5:5

அப்போஸ்தலர் யோவான் பலமுள்ள அந்தத் தூதனைக் காண்கிறார். அந்தத் தூதன் சத்தமிட்டு சொல்லுவதையும் கேட்கிறார் அவருடைய வார்த்தையைக் கேட்டு ஒருவராலும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், பார்க்கவும் கூடியிருக்கிறது அந்தப் புஸ்கத்தைத் திறந்து வாசிக்கவும், அதைப் பார்க்கவும் பாத்திர வானக ஒருவரும் காணப்படவில்லை. இதனால் யோவான் மிகவும் அழுகிறார். அவருக்குள் மிகுந்த ஏமாற்றமுண்டாயிற்று.

சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற சர்வவல்லமையுள்ள தேவனை யோவான் தரிசிக்கிறார். அவருடைய வலதுகரத்தில் இந்தப் புத்தகம் இருக்கிறது. தேவனுடைய சிந்தையும் சித்தமும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது தேவனுடைய சித்தத்தை எப்படியாவது தெரிந்துகொள்ளவேண்டுமென்று யோவான் விரும்புகிறார். தேவனுடைய மகிமையைக் காண்கிறவர்கள் அவருடைய சித்தத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று விரும்புவார்கள்.

தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் உள்ளன. அவற்றின் மேல் இருபத்து நான்கு மூப்பர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த மூப்பர்களில் ஒருவர் யோவானுக்கு ஆதரவாகப் பேசுகிறார். யோவானைத் தேற்றுகிறார். அவரை உற்சாகப்படுத்துகிறது யோவான் மிகவும் அழுது கொண்டிருக்கிறார் மூப்பர்களில் ஒருவர் யோவானை நோக்கி, "நீ அழ வேண்டாம்
என்று ஆறுதலாகச் சொல்லுகிறார். மேலும், "இதோ, யூதா கோத்திரத்து சிங்கமும் தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழுமுத்திரைகளையும் உடைக்கவும் ஜெயம் கொண்டிருக்கிறார் என்று சொல்லுகிறார்.

இயேசு கிறிஸ்து தம்முடைய மாம்சசுபாவத்தில் யூதாகோத்திரத்து சிங்கம் இருக்கிறார் அவர் தம்முடைய தெய்வீக சுபாவத்தில் தாவீதின் வேராக இருக்கிறது தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மத்தியஸ்த ஊழியம் செய்கிறார். தேவனுடைய ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, அவற்றை மனுஷருக்கு வெளிப்படுத்த கிறிஸ்துவானவர் பாத்திரராகயிருக்கிறவர். இருக்கிறவர். கிறிஸ்தவ விரல் மாத்திரமே தேவனுடைய வலதுகரத்திலுள்ள புஸ்தகத்தைப் பெற்றுக்கொள்ளவும்,
அதிலுள்ள முத்திரைகளை உடைத்து. அந்தப் புஸ்தகத்தை திறக்கவும் முடியும்.

கிறிஸ்துவிற்கு வழங்கப்பட்டிருக்கிற நாமங்கள்

1. யூதா கோத்திரத்துச் சிங்கம்
2. தாவீதின் வேருமானவர் (ஏசா II:1)

ஆட்டுக்குட்டியானவர் வெளி 5:6,7

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன், அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது, அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். வெளிப்படுத்தின விசேஷம் 5:6

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:7

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆட்டுக்குட்டியானவராகயிருக்கிறார். அவரே அங்கு வந்து சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்குகிறார். குமாரனாகிய
இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனோடு அதே சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்கிற சிலாக்கியத்தையும் மகிமையையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்து பெற்றிருக்கிறார். கிறிஸ்துவானவர் தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்த ராய் இருக்கிறார் சர்வசிருஷ்டிகளைவிட கிறிஸ்துவானவரே பிதாவாகிய தேவனுக்கு மிகவும் சமீபமாயிருக்கிறார்.

இருபத்து நான்கு மூப்பர்களில் ஒருவர் இயேசுகிறிஸ்துவைப்பற்றி சொல்லும்போது, அவர் யூதா கோத்திரத்து சிங்கம் என்று சொன்னார். ஆனால் கிறிஸ்துவானவரோ இங்கே அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியாக நிற்கிறார். கிறிஸ்துவானவர் சாத்தானை ஜெயிப்பதற்கு ஒரு சிங்கம் இருக்கிறார், அதே வேளையில் இயேசு கிறிஸ்து தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்கு ஒரு ஆட்டுக்குட்டியாகவே இருக்கிறார்.

அந்த ஆட்டுக்குட்டி எழு கொம்புகளையும் எழுகண்களையும் உடையதாயிருக்கிறது
தேவனுடைய சித்தத்தை  நிறைவேற்றுவதற்கு ஆட்டுக்குட்டியானவரிடம் பரிபூரணமான
வல்லமையுள்ள தேவனுடைய மனதைப் புரிந்துகொள்வதற்கு ஆட்டுக்குட்டியாக வருடம் பரிபூரணமான ஞானமுள்ளது.
ஆட்டுக்குட்டியானவரிடம் இருக்கிற கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய எழு ஆவிகளாகும். கிறிஸ்துவானவர் தேவனுடைய - ஏழு ஆவிகளையும் உடையவராயிருக்கிறார். கிறிஸ்துவானவர்மீது பரிசுத்த ஆவியானவர் அளவில்லாமல் ஊற்றப்பட்டிருக்கிறார்.

தேவனுடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கவும், அதைத் திறக்கவும், அதின் ஏழுமுத்திரைகளை உடைக்கவும் இயேசுகிறிஸ்து ஜெயங்கொண்டிருக்கிறார். கிறிஸ்துவானவர் பலவந்தம் செய்தோ அல்லது ஏமாற்று வேலைசெய்து தேவனுடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கவில்லை. கிறிஸ்து ஜெயங்கொண்டிருக்கிறவர். அந்தப் புத்தகத்தை வாங்குவதற்குப் பாத்திரராயிருக்கிறவர். இயேசுகிறிஸ்து தேவனுடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்குகிறார். உடனே சர்வசிருஷ்டிகளும் கர்த்தரைத் துதித்துப் புதிய பாட்டு பாடுகிறார்கள்.

ஆட்டுக்குட்டியானவருக்கு ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் இருந்தன. ஆட்டுக்குட்டியானவர் இயேசு கிறிஸ்துவிற்கு அடையாளமாக இருக்கிறது ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவையும், வல்லமையையும் குறிக்கும் அடையாளங்களாகும். ஆவியானவர் ஒருவரே.

புதிய பாட்டு பாடினார்கள் வெளி 5:8-10

 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:  வெளிப்படுத்தின விசேஷம் 5:8

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, வெளிப்படுத்தின விசேஷம் 5:9

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 5:10

இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய வலதுகரத்திலிருந்த புத்தகத்தை வாங்கின உடனே நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் கர்த்தரைத் துதித்து புதிய பாட்டைப் பாடுகிறார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து அவரைப் பணிந்துகொண்டு துதிக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய
தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் படித்துக்கொண்டிருக்கிறார்கள் சுரமண்டலங்கள் -துதிக்கும் இசைக்கருவிகளும் பொற்கலசங்களோ தூபவர்க்கத்தால் நிறைந்திருக்கிறது. பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள் அதில் நிரம்பியிருக்கிறது.

நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும், ஆட்டுக்குட்டியானவரை துதித்துப் பாடும்போது, "தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறார்" என்று சொல்லி போற்றிப் புகழுகிறார்கள்.

இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே இவர்கள் மீட்க பட்டிருக்கிறார்கள் கிறிஸ்துவானவர் இவர்களை தேவனுக்கு முன்பாக ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார். கிறிஸ்துவினிமித்தமாய் இவர்கள் பூமியிலே அரசாளுவார்கள். இயேசுகிறிஸ்துவின் பாடுகளினிமித்தமாய் மனுஷருக்கு மீட்பு உண்டாயிருக்கிறது. மீட்கப்பட்டவர்கள் தேவனுக்கு முன்பாக ராஜாக்களாகவும் ஆசாரியர்களாவும் உயர்த்த பட்டிருக்கிறார்கள் இதற்காக நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, அவருக்குப் புதிய பாட்டைப்பாடி அவரை நன்றியோடு துதிக்கிறார்கள்.

பரலோகத்தில் இசைக்கப்படும் வாத்தியங்கள்

1. 28 சுரமண்ட லங்கள்
2. வெளி 14:2 ஆவது வசனத்தில் 144000 சுரமண்டலங்கள்
3. வெளி 15:2 ஆவது வசனத்தில்
ஏராளமான சுர மண்டலங்கள்

பரலோகத்தில் -இசைக்கருவிகளை இசைத்து தம்மை ஆராதிக்கும் முறைமையைத் தேவன் அங்கீகரித்திருக்கிறார் ஆகையினால் தற்காலத்து திருச்சபைகளில் இசைக்கருவிகளை இசைத்து தேவனை ஆராதிப்பதில் தவறொன்றும் இல்லை.

இந்த வசனப்பகுதிகளில் வரும் நான்கு ஜீவன்கள் இரட்சிக்கப்பட்டவையென்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஏனெனில் இவை "எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர்" என்று கூறுகின்றன வெளி 45-8 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் விளக்கத்தின் மூலமாக இந்த நான்கு ஜீவன்களும் தூதர்கள் என்பதும், இவர்கள் தேவனுடைய பரிசுத்தத்தை அறிவிக்கிறவர்கள் என்பதும்
தெரிய வருகிறது. ஆகையினால் இந்த வசனத்தில் எங்களை என்னும் பிரதிப்பெயர்ச்சொல்லை "அவர்களை" என்னும் பிரதிப்பெயர்ச் சொல் வழங்கி வாசிக்க வேண்டும். "அவர்கள்" என்பது வெளி 5:8 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் பரிசுத்தவான்களைக் குறிக்கும்

கிரேக்க வேதபண்டிதரான லக்மான் திச்சன் டோர்ப், அல்போர்டு, வோர்ட்ஸ்வொர்த் ஆகியோர் வெளி 59 ஆவது வசனத்திலுள்ள "எங்களை" என்னும் பிரதிப்பெயர்ச்சொல் நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக "அவர்களை" என்னும் பிரதிப்பெயர்ச்சொல்லைச் சேர்த்திருக்கிறார்கள்.

மூப்பர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே - மீட்கப்பட்டவர்கள், ஜீவன்கள், தூதர்கள் இவர்கள் அளை வருமே பரிசுத்தவான்களின் ஜெபத்தை ஜெபிக்கிறார்கள் ஆயினும் அவர்கள் மூப்பர்கள் மட்டுமே மீட்கப்பட்டவர்கள்.

கிறிஸ்துவும், உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களும் ஆயிரம் வருஷ அரசாட்சியில் இந்தப் பூமியில் ஆயிரம் வருஷங்களும் புதிய பூமியில் நித்திய காலமாகவும் ஆளுகை செய்வார்கள்.

அநேக தூதர்கள் வெளி 5:11,12

பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன், அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 5:11

 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:12

நான்கு ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு புதுப் பாட்டைப் பாடுகிறார்கள். அப்போது அநேகம் தூதர்களும் அவர்களோடு சேர்ந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதித்துப் பாடுகிறார்கள். இந்தத் தூதர்கள் தேவனுடைய சிங்காசனத்தையும், நான்கு ஜீவன்களையும், இருபத்து நான்கு மூப்பர்களையும் சூழ்ந்திருக்கிறார்கள்.
இவர்களுடைய எண்ணிக்கை அநேகம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இவர்களுடைய இலக்கம் பதினாயிராமாகவும், ஆயிரமாயிரமாகவும்
இருக்கிறது. எண்ணமுடியாத அளவுக்கு தூதர்களுடைய எண்ணிக்கை அதிகமாயிருக்கிறது.

தூதர்களை இரட்சிப்பதற்கு இரட்சகர் தேவையில்லை. ஆனாலும் பாவிகளுடைய இரட்சிப்பின் அவர்களுடைய மீட்பின் தூதர்கள் மிகுந்த சந்தோஷம் அடைகிறார்கள் சபையார் கிறிஸ்துவைத் துதிப்பதுபோல தூதர்களும் துதிக்கிறார்கள். மகா சத்தமிட்டு துதிக்கிறார்கள். "அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும்
கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராய் இருக்கிறார் என்று சொல்லி தூதர்கள் மகா சத்தமிட்டு துதித்துப் பாடுகிறார்கள்,

வெளி 5:11 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் மூன்று பிரிவினர்

1. தூதர்கள்
2. ஜீவன்கள்.
3. இருபத்தி நான்கு மூப்பர்கள்

அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது" என்பது எபிரெய வழக்குச் சொல்லாகும் இதற்கு எண்ணிலடங்காத, திரளாக ஏராளமான என்று பொருள்.

ஆட்டுக்குட்டியானவர் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கும் காரியங்கள்

1. வல்லமை (வெளி 5:12)
2. ஐசுவரியம் (வெளி 5:12; யோவான் 17:5)
3. ஞானம் (வெளி 5:12)
4. பெலம் (வெளி 5:12; எபி 7:25)
5. கனம் (வெளி 5:12; எபி 1:4)
6. மகிமை (வெளி 5:12; பிலி 2: 9-11)
7. ஸ்தோத்திரம் (வெளி 5:12-13; வெளி 7:12

சிருஷ்கள் யாவும் வெளி 5:13,14

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 5:13

 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:14

ஆட்டுக்குட்டியை வராகிய இயேசு கிறிஸ்துவை நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் துதித்துப் பாடுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து அநேக தூதர்களும் மகா சத்தமிட்டு கிறிஸ்துவானவரைத் துதிக்கிறார்கள். அப்பொழுது சர்வசிருஷ்டிகளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதித்து ஸ்தோத்திரிக்கிறார்கள். வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழும் இருக்குற
சிருஷ்டிகள் யாவும் மீட்பரைத் துதித்துப் பாடுகிறார்கள். சமுத்திரத்தில் உள்ளவைகளும் அவற்றுள் அடங்கிய வஸ்துக்கள் யாவும் ஆட்டுக்குட்டியானவரை துதித்துப் பாடுகிறார்கள்.

சர்வசிருஷ்டிகளும் சேர்ந்து "சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டி அனைவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும்
உண்டாவதாக என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் துதித்துப் பாடுகிறார்கள் பிதாவாகிய தேவன் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார். சர்வசிருஷ்களும் அவரைத் துதிக்கிறார்கள்,
ஆட்டுக்குட்டியானவர் புதிய உடன்படிக்கையின் மத்திய தாரா இருக்கிறார் அவரையும் அவர்கள் துதிக்கிறார்கள். சர்வசிருஷ்டிகளும் துதிக்கிற மெய் தேவனை நாமும் துதிக்கிறோம் ஆராதிக்கிறோம் அவரை மகிமைப்படுத்துகிறான் அவரே நம்முடைய சிருஷ்டிகர். அவரே நம்முடைய ஆத்தும் மீட்பர் ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருக்கிற பிதாவாகிய தேவனுடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கின போது, பரலோகத்திலே புதிய பாடல்களும்
துதிகளும் ஸ்தோத்திரங்களும் ஏறெடுக்கப்படுகிறது.

புஸ்தகம் சிருஷ்டிகருடைய காற்றிலிருந்து மீட்பரின் கரத்திற்கு வந்திருக்கிறது மீட்பராகிய இயேசு கிறிஸ்து தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராக இருக்கிறார், கிறிஸ்துவானவர் தேவனுடைய சித்தத்தையும், சிந்தையையும், விருப்பத்தையும் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார் அவர் புத்தகத்தை வாங்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராய் இருக்கிறார் இதனால் வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள சர்வசிருஷ்டிகளும் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தரைத் துதித்து புதுப்பாட்டைப் பாடுகிறார்கள்.

தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் சதா காலங்களிலும் உண்டாக வேண்டிய காரியங்கள்

1. ஸ்தோத்திரம் (வெளி 5:13; வெளி 7:10)
2. கனம் வெளி 5:13; 1கொரி 10:13)
3. மகிமை (வெளி 5:13; எபி 13:15)
4. வல்லமை (வெளி 5:13; வெளி 19:6)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.