வெளிப்படுத்தின விசேஷம் 4ஆம் அதிகாரம் விளக்கம்

திறக்கப்பட்டிருந்த ஒரு வாசல் வெளி 4:1

வெளி 4:1. இவைகளுக்குப்பின்பு இதோ , பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன் முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருத்த சத்தமானது: இங்கே ஏறி வா இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பியது

அப்போஸ்தலர் யோவானுக்கு இந்த தரிசனத்தை காணும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது யோவான் தரிசனம் காண்பதற்கு முன்பாக பரலோகத்திலே திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் காண்கிறார். வருங்காலத்தில் நமக்கு என்ன நடைபெறும் என்பது நமக்குத் தெரியாது கர்த்தர் நமக்கு எதை வெளிப்படுத்துகிறாரோ அதை மாத்திரமே நம்மால் காண முடியும் வருங்காலத்தில் நடைபெறப்போகிற சம்பவங்களெல்லாம் ஒரு திரைக்குள் மறைவாயிருக்கிறது கர்த்தர் வாசலைத் திறந்தால் மாத்திரமே இனிமேல் நடைபெறப்போகிற சம்பவங்களை நம்மால் தரிசிக்கமுடியும்

யோவானுக்கு பரலோகத்தில் தரிசனம் கிடைக்கிறது. ஒவ்வொரு காரியத்தையும் அவர் தெளிவாகப் பார்க்கவேண்டுமென்பதற்காக, கர்த்தர் தாமே பரலோகத்திலுள்ள வாசலை அவருக்குத் திறந்துகொடுக்கிறார். ஏற்கெனவே எக்காள சத்தம் போல தன்னுடனே பேசின சத்தத்தை யோவான் கேட்டிருக்கிறார். இப்போது அதே சத்தம் யோவானோடு மறுபடியும் பேசுகிறது. "இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று அந்தச் சத்தம்
யோவானுக்கு விளம்பியது

"இவைகளுக்குப்பின்பு" என்னும் வாக்கியத்திற்கு வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில் சபைகளை பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்களுக்குப் பின்பு என்று பொருள் இந்த வசனத்தில் இவைகளுக்குப்பின்பு என்று இரண்டு முறை குறிப்பிடப் ரபட்டிருக்கிறது. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சபைகளின் காலத்திற்குப் பின்பு நிகழப்போகிறவைகளாகும். அதாவது இந்த நிகழ்ச்சிகள் சபை எடுத்துக் கொள்ளப்பட்டபின்பு நடை பெறும்.

வெளி 4:1 ஆவது வசனத்தில் சபை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்குச் சான்றுகள்

1. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப் பட்டிருக்கும் காரியங்கள் "இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகள்" என்று இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தி யிருக்கிறார். இவைகளுக்குப்பின்பு என்பது சபைகளுக்கு பின்பு என்று பொருள் படும். (வெனி 1:19) வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில்  கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்பு சபை எடுத்துக் கொள்ளப்படும். வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில் கூறப் பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது சபை இந்த உலகத்தில் இருந்தது. அதன்பின்பு சபை எடுத்துக் கொள்ளப் பட்டு, வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் நடைபெறும். அப்போது சபை இந்த உலகத்தில் இராது
2. "சபை" என்னும் வார்த்தை வெளி 1-3 ஆகிய அதிகாரங்களில் 19 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தின் மூன்றாவது பகுதியான வெளி 4:1-22:5 ஆகிய வசனப்பகுதிகளில் "சபை" என்னும் வார்த்தை ஒரு தடவை கூட பயன்படுத்தப்படவில்லை. ஆகையினால் "இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகள்" என்பது சபைக் காலத்திற்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளாகும். வெளிப்படுத்தின விசேஷத்தின் முடிவுரையில் சபையைப் பற்றி மறுபடியும் கூறப்பட்டிருக்கிறது. (வெளி- 22:6-21) நிறைவேற வேண்டியவைகள் பூரணமாக வெளிப்படுத்தப்பட்ட பின்பே சபையைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் காணப்படும் நிகழ்ச்சிகள் நிறைவேறும் போது சபை பூமியில் இருந்திருக்கு மென்றால் இந்த அதிகாரங்களில் சபையைப் பற்றிய குறிப்பு நிச்சயமாகவே காணப்பட்டிருக்கும்.
3. சிங்காசனங்களில் வீற்றிருக்கும் மூப்பர்கள் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களின் பிரதிநிதிகளாவார்கள். வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு அவர்கள் பரலோகத்தில் காணப்படுகிறார்கள். (வெளி 4:4) 
4. தானியேலின் - எழுபதாவது வாரம் இக்காலத்தின் கடைசி ஏழு வருஷமாக இருக்கும். இக்காலத்தில் வெளி 4-19; மத் 24-25 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாரம் என்பது இஸ்ரவேலைக் குறிக்கும். சபையைக் குறித்து, ஆகையினால் வாரத்திற்கு முன்பாகவே சபை எடுத்துக் கொள்ளப்படும்.
5. வெளி 4: ஆவது வசனத்தைத் தவிர, சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்கும், பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுவதற்கும் வேறு வசன ஆதாரம் எதுவுமில்லை . தானியேலின் எழுபதாவது வாரத்தில் உபத்திரக்காலத்தின் பரிசுத்தவான்களும், ஆண்பிள்ளையும் மட்டுமே இரட்சிக்கப்பட்டு, எடுத்துக் கொள்ளப் பட்டார்கள். இவர்கள் வேறு, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் சபையும் வேறு (வெளி-4:4) ஆகையினால் சபையானது வெளி 4:1 ஆவது வசனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும். வெளி 2-3 ஆகிய  அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நிறைவேறிய பின்பும், வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நிறைவேறுவதற்கு முன்பும் சபை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். சபை என்பது ஆண்பிள்ளையோ, அல்லது உபத்திரவக்காலத்து பரிசுத்தவான்கள் அல்ல. (வெளி 7; வெளி 12; வெளி 14)
6. லூக்கா 21:34-36 ஆகிய வசனங்களில் இயேசு கிறிஸ்து "இனி சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்" என்று கூறியிருக்கிறார். மத் 24:4-26; லூக்கா 21:4-19, வெளி 6-19 ஆகிய வசனங்களிலும், அதிகாரங்களிலும் கூறப்பட்டிருக்கும் காரியங்களிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.
7. தேவனுடைய கோபாக்கினையிலிருந்து பரிசுத்தவான்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்று 1தெச 5:1-11 ஆகிய வசனங்களில் நமக்கு வேறொரு வாக்குத்தத்தம் உள்ளது. (வெளி -6-19) தேவன் -நம்மைக் கோபாக்கினைக் கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், நம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும் படி அவர் நமக்காக மரித்தாரே ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்" 1தெச 5:9-11). தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமித்திருப்பார் என்றால் ஒருவரையொருவர் நம்மால் தேற்ற முடியாது. (1தெச 4:16-17; தீத்து 2:13)
8. 2தெச 2:6-8 ஆவது வசனத்தில் தானியேலின் எழுபதாவது வாரத்திற்கு முன்பும், அந்திக்கிறிஸ்து வெளிப் படுவதற்கு முன்பும் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்று வாசிக்கிறோம். வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் இந்த வாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும். ஆகையினால் வெளி 4:1 ஆவது வசனத்தில் சபை எடுத்துக் கொள்ளப்படும் என்பது தெளிவாகிறது.
9. வெளி 1-3 ஆகிய அதிகாரங்களில் மனுக்குலத்தின் மீது தேவனுடைய மனப்பாங்கு கிருபையும் இரக்கமும் நிறைந்ததாய் உள்ளது. வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் மனுக்குலத்தின் மீது தேவனுடைய மனப்பாங்கு நியாயத் தீர்ப்பு வருவிக்கக்கூடியதாக இருக்கிறது. தானியேலின் எழுபதாவது வாரத்தில் நாம் வாசிக்கும் முத்திரைகள், எக்காளங்கள், திரைகள் ஆகியவை - தேவனுடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்துகின்றன. சபை இவற்றின் மூலமாகச் செல்ல வில்லையென்றால், வெளி 4:1 ஆவது வசனத்தில் சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
10. வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு இஸ்ரவேலை பற்றி விசேஷமாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வசனத்திற்கு முன்பு வரையிலும் சபையைப் பற்றியே விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் பூமியில் சபை இருந்திருக்கும் என்றால் அந்தச் சபையைப் பற்றி விசேஷமாகக் கூறப்பட்டிருக்கும் ஆனால் இந்த அதிகாரங்களில் சபையைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை . வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன முதலாவது பகுதி வெளி 41 ஆவது வசனத்திற்கு முற்பட்ட பகுதியாகும். இந்த அதிகாரங்களிலும், வசனங்களிலும் சபை எடுத்துக் கொள்ளப் படுவதற்கு முன்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளை வாசிக்கிறோம். இந்தப் புஸ்தகத்தின் இரண்டாவது பகுதி வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு வெளி 19 ஆவது அதிகாரம் வரையிலுள்ள பகுதியாகும். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாகவும், சபை எடுத்துக் கொள்ளப்படுவதற்குப் பின்பாகவும் நடைபெறும் நிகழ்ச்சியை இந்த அதிகாரங்களும், வசனங்களும் விளக்குகின்றன.

வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு இஸ்ரவேலைப் பற்றி விசேஷமாகக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. மத்தேயு எழுதின கவிசேஷத்தில் பழைய ஏற்பாட்டைக் குறித்து 92 வசனங்கள் எபிரேய நிருபத்தில் 102 வசனங்களும் உள்ளன வெளிப்படுத்தின விசேஷத்திலோ 285 வசனங்கள் பழைய ஏற்பாட்டைக் குறிப்பிடுகிறது. ஆகையினால் வெளி 4:1 ஆவது வசனத்திற்குப் பின்பு இந்தப் புஸ்தகத்தின் யூத அம்சம் நிரூபணமாகிறது
2. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் "ஆட்டுக்குட்டி" என்னும் வார்த்தை 27 தடவைகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் வெளி 1-3 ஆகிய அதிகாரங்களிலும் ஆட்டுக்குட்டி என்னும் வார்த்தை ஒருதடவை கூடப் பயன்படுத்தப் படவில்லை . பவுலின் நிருபங்களில் சபைகளைக் குறிப்பதற்கு ஆட்டுக்குட்டி என்னும் வார்த்தை பயன்படுத்தப் படவேயில்லை. புதிய ஏற்பாட்டில் மொத்தம் 4 தடவைகள் மட்டுமே ஆட்டுக்குட்டி என்னும் வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த நான்கு இடங்களிலும் இந்த வார்த்தை இஸ்ரவேலோடு தொடர்புபடுத்தியே பயன் படுத்தப்பட்டுள்ளது. (யோவான் 1:29,36; அப் 8:32; 1பேதுரு 1:19).
3. யூதா கோத்திரத்து சிங்கம் "தாவீதின் வேருமானவர்" ஆகிய வாக்கியங்கள் யூத அம்சத்தை வெளிப்படுத்துகின்றன. (வெளி 5:5)
4. வெளி 7:1-8; வெளி 14:1-5 ஆகிய வசனங்களில் காணப்படும் 144000 என்னும் எண்ணிக்கை யூத அம்சத்தை வெளிப் படுத்துகிறது. சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் இரட்சிக்கப்படுவீர்கள்
5. முத்திரைகள், எக்காளங்கள், பொற்கலசங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் எகிப்தின் மீது வருவிக்கப்பட்ட வாதைகளை மறுபடியும் நினைவூட்டுகிறது. எகிப்தின்மீது அனுப்பப்பட்ட வாதைகள் புறஜாதியார் இஸ்ரவேலைத் துன்புறுத்தியதற்காக அனுப்பப் பட்டதாகும். முத்திரைகள், எக்காளங்கள், பொற்கலசங்கள் ஆகியவையும் இதே காரணத்திற்காகவே நடைபெறும் நிகழ்ச்சிகளாகும் புறஜாதியார்
இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்கி துன்புறுத்தியதற்காக அவர்கள் மீது ஆக்கினைத் தீர்ப்பு வரும் என்னும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை இவை நிறைவேற்றுகின்றன. ஏசா 24:21 ஏசா 26:20-21; ஏசா 29:6-8; எரே 30:6-9; எசே 38-39; தானி 12:1) இந்த த் தீர்க்கதரிசனங்களில் எதுவும் சபையைக் குறித்துக் கூறப்படவில்லை
6. வெளி 6-19 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் உபத்திரவக்காலம் இஸ்ரவேலுக்குரியது (எரே 30:6-9; தானி 12:1; மத் 24:15-22).
7. தானியேலின் - எழுபதாவது வாரம் இஸ்ரவேலுக்கும், எருசலேமுக்கும் மட்டுமே உரியது. (தானி 9:24 27).
8. தானியேலின் அறுபத்திதொன்பதாவது வாரத்திற்கும், எழுபதாவது வாரத்திற்கும் இடையில் சபையின் காலம் வருகிறது. ஆகையினால் தானியேலின் எழுபதாவது வாரத்தில் இஸ்ரவேலைக் குறித்த காரியங்களே நடைபெறுகின்றன.  (தானி 9:24-27)
9. வெளி 4-19 ஆகிய அதிகாரங்களில் இரட்சிக்கப்பட்டிருக்கும் புறஜாதியார்கள் உபத்திரவக்காலத்து பரிசுத்தவான்கள் ஆவார்கள். அவர்கள் சபையார் அல்ல. (வெளி 6:9-11; வெளி 7.9-17; வெளி 15:2-4; வெளி 20:4-5). இந்த நிகழ்ச்சி வெளி 4-19 ஆகிய அதிகாரங்களின் யூத அம்சத்தை உறுதி பண்ணுகிறது
10. பலிபீடத்தைச் சுற்றிலும் நடைபெறும் தூதர்களுடைய ஊழியம் இஸ்ரவேலுக்கே உரியது. வெளி 8:2-5)
11. தீர்க்கதரிசிகளால் வாக்குப்பண்ணப் பட்டிருக்கிற தேவ ரகசியம் யூத அம்சமுடையது. (வெளி 10:7),
12. வெளி 11 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் தேவாலயம், பலிபீடம், தேவாலய ஆராதனை, தேவாலயத்தின் பிரகாரம் பரிசுத்த நகரம் ஒலிவ மரங்கள், உடன்படிக்கைப் பெட்டி ஆகியவை யனைத்தும் யூத அம்சமுடையவையே
13. உலகத்தின் ராஜ்ஜியங்கள் கிறிஸ்துவுக்குரிய ராஜ்ஜியங்களாயின என்னும் சத்தியம் யூதருடைய
தீர்க்கதரிசிகள் கூறியவற்றின் நிறைவேற்றமாகும். (வெளி 11:15; ஏசா 9: தானி 7:13-14 சக 14:1-2; லூக்கா 1:32-33).
14. வெளி 12 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் ஸ்திரீ, ஆண்பினை ஆகியவை யூத அம்சமுடையவை
15. எழு -தலைகளையும், 10 கொம்புகளையும் உடைய வலுசர்ப்பம், புறஜாதியாரின் காலங்களில் இஸ்ரவேலைத் துன்புறுத்திய சாதிகளின் ஆளுகை ஆகியவை இவற்றின் யூதமார்க்கத்துத் தொடர்பை உறுதி பண்ணுகிறது. (வெளி 12). இந்த அடையாளங்கள் சபையுடன் தொடர்புடையதல்ல.
16. மிகாவேல் (வெளி 12:7) எப்பொழுதும் இஸ்ரவேலோடு தொடர்புடையவன் (தானி 10:13-21; தானி 12:1).

17. "மற்றவர்கள்" (வெளி2:17) என்னும் வார்த்தையும் கொஞ்சம் மீதி (ஏசா 19) என்னும் வார்த்தையும் யூத அம்சமுடையவை.
18. பாபிலோன் பற்றிய நிகழ்ச்சிகள் (வெளி 16:17-21: வெளி 18:1-24) யூதரோடு | தொடர்புடையவை. (ஏசா 13-14; எரே 50-51) சபைக்கும், பாபிலோனுக்கும் தொடர்பில்லை.
19. அர்மகெதோன், இரண்டாம் வருகை (வெளி 16:13-16; வெளி 19:11-21) ஆகிய வார்த்தைகள் யூதருடைய தொடர்பை உறுதி பண்ணுகிறது.
20. ஆயிரம் வருஷ அரசாட்சி புதிய பூமி ஆகியவை இஸ்ரவேலோடு தொடர்புபடுத்தி பலதடவை முன்னறிவிக்க பட்டிருக்கிறது. (வெளி 20-22; ஏசா 2 ஏசா 65; ஏசா 66)

மனுஷர் ஆவிக்குள்ளானதற்கு எடுத்துக் காட்டுக்கள்

1. ஏனோக்கு (ஆதி 5:24; சக 4:14 எபி 11:5; வெளி 11 )
2. எலியா (2இராஜா 2:11; சக 4:14; மல் 4:5-5; வெளி 11
3. இயேசு உயிர்த்தெழுந்த சரீரத்தில்) மாற்கு 16:19; லூக்கா 24:39.51; அப் 1)
4. பவுல் (2கொரி 12:1-8)
5. யோவான் (வெளி 4:1-5:14)
6. பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் அநேகருடைய சரீரங்கள் (மத் 27:52-53; எபே 4:8-10)
7. உயிர்த்தெழுந்த சரீரம் கொடுக்கப்படாத இரட்சிக்கப்பட்ட எல்லா ஆத்துமாக்கள் ஆவிகளை (எபே 4:8-10; 2கொரி 5:8; பிலி 1:21-24; எபி 12:23)

சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு நடைபெறப்போகும் நிகழ்ச்சிகள்

1. முதலாம் முத்திரை அந்திக்கிறிஸ்துவின் எழுச்சி (வெளி 6:1)
2. இரண்டாம் முத்திரை - யுத்தம் வெளி 6:3-4)
3. மூன்றாம் முத்திரை - பஞ்சம்  (வெளி 6.5-5)
4. நான்காம் முத்திரை - மரணமும், பாதாளமும் வெளி 6:7-8)
5. ஐந்தாம் முத்திரை - இரத்தச்சாட்சியாக மரித்தோருடைய ஆத்துமாக்கள் (வெளி 6:9-11)
6. ஆறாம் முத்திரை - தேவனுடைய கோபம் (வெளி 6:12-17)
7. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் முத்திரை போடப்பட்டவர்கள் வெளி 7:1-8)
8. மிகுந்த உபத்திரவத்தில் இரத்தச்சாட்சியாக மரித்தவர்களின் ஆராதனை. (வெளி 7-9-17)
9. ஏழாம் முத்திரை - பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று. (வெளி 8:10)
10. ஏழு தூதர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. (வெளி 8:2)
11. ஆசாரிய தூதனுடைய ஆராதனை. வெளி 8:3-5)
12..ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்கு ஆயத்தப்படுத்தினார்கள். (வெளி 8:6)
13. முதலாம் எக்காளம் - இரத்தங்கலந்த கல்மழையும், அக்கினியும் உண்டாயிற்று.(வெளி 8.7
14. இரண்டாம் எக்காளம் - சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. (வெளி 8:8-9)
15. மூன்றாம் எக்காளம் - தண்ணீ ரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போல கசப்பாயிற்று (வெளி 8:10-11)
16. நான்காம் எக்காளம் - சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் மூன்றிலொரு பங்கு இருளடைந்தது. (வெளி 8:12)
17. ஒரு தூதன் ஐயோ ஐயோ, ஐயோ (ஆபத்துவரும் என்று சொன்னான். வெளி 8:13)
18. ஐந்தாம் எக்காளம் - முதலாம் ஐயோ - ஜனங்களைச் சேதப்படுத்துவதற்குப் பிசாசுகள் விடுவிக்கப்பட்டன (வெளி 9:1-12)
19. ஆறாம் எக்காளம் - இரண்டாம் ஐயோ - மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு நான்கு தூதர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள் அவர்களுடைய இராணுவங்களின் தொகை 20 கோடியாய் இருந்தது. (வெளி 9:13-21)
20. தேவனுடைய ஆலயத்தையும், பரிசுத்த நகரத்தையும் அசிங்கப்படுத்துவது (வெளி 11:1-2)
21. பூமியில் இரண்டு சாட்சிகள் தோன்றுதல். (வெளி 11:3-12)
22. எருசலேமில் மகாப்பெரிய பூமியதிர்ச்சி. (வெளி 11:13)
23. ஏழாம் எக்காளம் - அறிவிப்புக்கள். (வெளி 11:15-18)
24. பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. (வெளி :19)
25. சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ வருத்தப்பட்டு அலறினாள். (வெளி 12:1-2)
26. வலுசர்ப்பம் ஆண்பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு எதிர்த்து நின்றது. (வெளி 12:3-4)
27. ஆண்பிள்ளை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது (வெளி 12:5)
28. ஸ்திரீயானவள் மூன்றரை வருஷங்களுக்கு (ஆயிரத்திருநூற்றறுபது நாள்) வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள். (வெளி 12:6)
29. வானத்திலே யுத்தம் உண்டாயிற்று. (வெளி 12:7-12}
30. வலுசர்ப்பம் ஸ்திரீயைத் துன்பப் படுத்தினது. (வெளி 12:13-16)
31. வலுசர்ப்பம் (சாத்தான் ஸ்திரீ யின் சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம் பண்ண ப் போயிற்று. (வெளி 12:17)
32. சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வந்தது - அந்திக்கிறிஸ்துவிற்கு ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுக்கப் பட்டது.) (வெளி 13:1-10,18)

33. வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பி வந்தது - கள்ளத்தீர்க்கதரிசி மிருகத்தை வணங்கும் ஆராதனையை ஆரம்பித்தான். வெளி 13:11-17)
34. 144000 யூதர்கள், ஆண்பிள்ளை ஆகியோர் தேவனுக்கு முன்பாக நின்றார்கள். (வெளி 4:1-5)
35. வேறொரு தூதன் நித்திய சுவிசேஷத்தை அறிவித்தான் (வெளி 14:6-7)
36. பாபிலோன் மகா நகரம் விழுந்தது என்று வேறொரு தூதன் அறிவித்தான். (வெளி 14:8)
37. மிருகத்தை வணங்குகிறவர்கள் அக்கினியினாலும், சுந்தகத்தினாலும் பாதிக்கப்படுவார்கள் என்று வேறொரு தூதன் அறிவித்தான். (வெளி 14:9-12)
38. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இரத்தசாட்சிகள் இதுமுதல் பாக்கியவான்கள் என்று எழுதப்பட்டவர்கள், (வெளி 14:13)
39. அறுவடை - அர்மகெதோன் (வெளி 14:14-16)
40. பழுத்த குலைகளின் அறுவடை அர்மகெதோன் (வெளி 14:17-20)
41. தேவனுடைய கோபாக்கினையினால் நிறைந்த ஏழு பொற்கலசங்கள் (வெளி 15:16-7)
42. உபத்திரவக்காலத்தில் இரத்தச் சாட்சிகளாக மரித்தவர்களுடைய ஆராதனை. (வெளி 15:2-4)
43. பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது. (வெளி 15:5-16:11)
44. முதலாம் கலசம் - மனுஷர்களுக்கு பொல்லாத கொடிய புண் உண்டாயிற்று (வெளி 16:2)
45. இரண்டாம் கலசம் - சமுத்திரம் செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று (வெளி5:3)
46. மூன்றாம் கலசம் - ஆறுகளும், நீரூற்றுகளும் இரத்தம் (வெளி 16:4-7)
47. நான்காம் கலசம் - மிகுந்த உஷ்ணத்தினால் மனுஷர்கள் தகிக்கப் பட்டார்கள். (வெளி 16:8-9)
48. ஐந்தாம் கலசம் - இருள். (வெளி 16:10-11 |
49. ஆறாம் கலசம் - ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று (வெளி 16:12)
50. மூன்று அசுத்த ஆவிகள் - ஜாதிகளை அர்மகெதோன் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்த்தல். { வெளி 16:13-16)
51. ஏழாம் கலசம் - பூமியதிர்ச்சி - பாபிலோனும், மற்ற நகரங்களும் அழிந்தன. (வெளி 16:17-21; வெளி 18:1-24)
52. பூமியின் ராஜாக்கள் மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினார்கள். (வெளி 17:1-5)
53. மகா வேசி பரிசுத்தவான்களை இரத்தச்சாட்சிகளாக மரிக்கச் செய்தாள். (வெளி 17:6-7)
54. எட்டாவது ராஜ்யம் உண்டாயிற்று (வெளி 17:8-13)
55. ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம். (வெளி 17:141
56. மகாவேசியோடு யுத்தம், (வெளி 17:15-18)
57. ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் (வெளி 19:1-10)
58. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. | வெளி 19:11-16)
59. ஒரு தூதன் பறவைகளை மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். (வெளி 19:17-18)
60, அர்மகெதோனில் யுத்தம். (வெளி 19:19-21)
61. சாத்தான் கட்டி வைக்கப்பட்டான். (வெளி 20:1-3)
62. முதலாம் உயிர்த்தெழுதல் நிறைவு பெறுகிறது - கிறிஸ்துவின் ஆயிரம் வருஷ அரசாட்சி ஆரம்பமாகிறது. (வெளி 20:4-5) 
63. சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகிறான். (வெளி 20:7)
64. பூமியின் மி து நடைபெறும் கடைசிக் கலகம். (வெளி 20:8-9)
65. சாத்தான் நரகத்தில் தள்ளப்பட்டான் (வெளி 20:101)
66. இரண்டாம் உயிர்த்தெழுதல் மரித்துப்போன துன்மார்க்கருடைய நியாயத்தீர்ப்பு: (வெளி 20:11-15)
67. புதிய வானமும், புதிய பூமியும் (வெளி 21:1-22:5)
68. தேவனுடைய நகரம் - புதிய எருசலேம் பரலோகத்தை விட்டு இறங்கிவருகிறது (வெளி 21:29-23)

ஒரு சிங்காசனம் வெளி 4: 2,3

உடனே ஆவிக்குள்ளானேன், அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.  வெளிப்படுத்தின விசேஷம் 4:2

வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார், அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது, அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.  வெளிப்படுத்தின விசேஷம் 4:3

எக்காள சத்தம்போல தன்னுடனே பேசின சத்தத்தை கேட்டவுடனே யோவான் ஆவிக்குள்ளானேன் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தீர்க்கதரிசனத்தின் ஆவி யோவானை நிரப்பிற்று பரிசுத்த ஆவியானவர் யோவானை பூரணமாக ஆளுகை செய்கிறார் ஆவியானவரே அவரை வழிநடத்துகிறார் முதலாவதாக யோவான் பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் காண்கிறார். அதன்பின்பு, அவர் வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்.

இந்தச் சிங்காசனம் மகிமையின் சிங்காசனம் இது அதிகாரத்தின் சிங்காசனம் சர்வஆளுகையின் சிங்காசனம், நீதியாய்த் தீர்ப்பு செய்கிற நியாயாதிபதியின் சிங்காசனம் இந்த சிங்காசனம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பூமியிலுள்ள எல்லா சிங்காசனங்களை பரலோகத்திலுள்ள மகிமையான இந்த சிங்காசனத்தின்  ஆளுகைக்குட்பட்ட இருக்கிறது

வானத்தில் வைக்கப்பட்டிருக்கிற சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருப்பதை யோவான் காண்கிறார். சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் மகிமை நிறைந்தவர். பரலோகத்தின் சிங்காசனத்தில் வீற்றிருப்பதற்கு இவரே பாத்திரர். இவர் ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தவாகவும் இருக்கிறவர். இவரே சர்வவல்லமையுள்ள தேவன்.

சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய விவரம் இங்கு எழுதப்பட்டிருக்கிறது. மனுஷருடைய சாயலைச் சொல்லி மகத்துவமானவர் விளக்கப்படவில்லை. அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்திற்கும் ஒப்பாகயிருக்கிறார். மனுஷருடைய சுபாவம் எதுவும் அவரிடத்தில் காணப்படவில்லை. தேவன் ஆவியாயிருக்கிறார். இங்கு தேவனுடைய பிரகாசமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பரலோகத்திலுள்ள தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருக்கிறது. அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று. தேவன் நோவாவோடு உடன்படிக்கை பண்ணியபோது, தம்முடைய உடன்படிக்கையை உறுதி பண்ணும் விதமாக வான வில்லின் அதை முத்திரையிட்டு அது பூமியில் காணப்பட்ட வானவில். இந்த வான வில்லோ பரலோகத்தில், தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் காணப்படுகிற வானவில் இது பார்வைக்கு மரகதம் போல் தோன்றுகிறது. மரகதம் பசுமை நிரம்பியது. பார்வைக்குக் குளிர்ச்சியாக இருக்கும் விருட்சங்களில் புதிய இலைகள் துளிர்க்கும் போது இது பார்ப்பதற்கு பசுமையாக இருக்கும் இது இயற்கைப் புத்துணர்ச்சி பெற்றிருக்கும். அதுபோலவே தேவனுடைய புதிய உடன்பாடு நம்முடைய ஆத்துமாவைப் புதுப்பிக்கிறது. நமக்குப் புதிய ஜீவனை தருகிறது.

வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப் பட்டிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம புஸ்தகத்தில் காணப்படும் நிகழ்ச்சிகளின்
மையப்பகுதி இந்தச் சிங்காசனமே. இந்தப் புஸ்தகத்தில் 40 தடவைகள் இந்தச் சிங்காசனத்தைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.

அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார். தேவன் ஒரு ஆள்தத்துவப் பண்புடையவர் ஆகையினால் அவர் சிங்காசனத்தின்மீது வீற்றிருக்கிறார். தேவன் ஆவியாக இருக்கிறார். ஆனாலும் அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். ஆவியில் இருக்கும் மனிதர்கள் பாதாளத்திலும் பரலோகத்தின் பலிபீடத்திலும் வஸ்திரம் தரித்திருக்கும்போது ஆவியாக இருக்கும் தேவனால் சிங்காசனத்தில் வீற்றிருக்க முடியும் ஆவிகள் நரகத்திலும் பாதாளத்திலும் இருக்கிறது நாம் நம்பும்பொழுது ஆவியாக இருக்கும் தேவன் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பதையும் நம்பலாம்.

இருபத்து நான்கு சிங்காசனங்கள் வெளி 4:4,5

 அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன, இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 4:4

அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன, தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.  வெளிப்படுத்தின விசேஷம் 4:5

தேவனுடைய மகிமையான சிங்காசனத்தைச் சூழ இருபத்து நான்கு சிங்காசனங்கள் இருக்கின்றன. இந்த சிங்காசனங்களின் மேல் இருபத்து நான்கு மூப்பர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் வெண் வஸ்திரம் தயாரித்திருக்கிறார்கள் தங்கள் சிரசுகளில் பொன்முடி சூட்டியிருக்கிறார்கள் கர்த்தர் இவர்களைக் கனப்படுத்தி இருக்கிறார் இவர்களுக்கு ஆளுகையையும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார்.
கர்த்தர் என்னுடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் மகிமையுள்ளவனாய் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய மகிமையின் பிரகாசம் இருபத்து நான்கு மூப்பர்கள் மீதும் பிரதிபலிக்கிறது.

கர்த்தருடைய சிங்காசனத்திலிருந்து மின்னல்களும், இடிமுழக்கங்களும், சத்தங்களும் புறப்படுகின்றன. சீனாய் மலையிலே தேவன் பத்து கற்பனைகளைக் கொடுக்கும்போது அங்கும் மின்னல்களும், இடிமுழக்கங்களும், சத்தங்களும் உண்டாயிற்று. அதுபோலவே பரலோகத்திலும் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து சத்தங்கள் புறப்படுகின்றன. பழைய ஏற்பாட்டுக்காலத்து நியாயப்பிரமாணத்தைவிட புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சுவிசேஷம் எந்த விதத்திலும் மகிமை குறைந்ததல்ல சுவிசேஷம் அதிகாரத்திலும் குறைந்ததல்ல.

தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக, தேவனுடைய ஏழு ஆவிகளாகிய எழு அக்கினி தீபங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன தேவ ஆவியானவர் வெவ்வேறு விதமான வரங்களையும், கிருபைகளையும், ஊழியர்களையும் இந்த ஏழு அக்கினி நீங்களும் பிரத்தியட்சமாய் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றன.

மூப்பர்கள்" என்னும் வார்த்தை உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களைக் குறிக்கும் என்பதற்குச் சான்றுகள்

1. மூப்பர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை பிரஸ்பிட்டிரோஸ்" என்பதாகும். இது மூப்பர்களை மட்டுமே குறிக்கும். தேவதூதர்களைக் குறிக்காது. (அப் 14:23)
2. மூப்பர்கள் வேறு தேவதூதர்கள் வேறு வெளி 5:11-14)
3. மீட்கப்பட்டவர்கள் ஜீவகிரீடம் தரித்து சிங்காசனங்களில் அமர்ந்திருப்பார்கள் என்று வாக்கு பண்ணப்பட்டிருக்கிறது வெளிப்படுத்தின விசேஷத்தில் தூதர்கள் கிரீடம் தரித்து சிங்காசனத்தில் வீற்றிருப்பதாக வசன ஆதாரம் எதுவுமில்லை . ஏசா 14:12-14; கொலோ 1:16 ஆகிய வசனங்களில் மட்டும் தூதர்கள் கிரீடங்களைத் தரித்திருப்பதற்கான குறிப்புக்கள் உள்ளன.
4. மூப்பர்கள் வெண்வஸ்திரம் தரித்திருந்தார்கள். வெளிப்படுத்தின் விசேஷத்தில் கிறிஸ்துவும், பரிசுத்தவான்களும் மட்டுமே வெண்வஸ்திரம் தரித்திருந்தார்கள்.
5. யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தைக் காண்பித்தவன் மூப்பர்களில் ஒருவன் இவன் மீட்கப்பட்டவர் ஆகையினால் 24 மூப்பர்களும் | மீட்கப்பட்ட மனுஷர்களாகவே இருக்க வேண்டும். ஆகிய அவர்கள் பரலோகத்தில் வெளி 4-22 அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நிறைவேறும்  வரையிலும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதினால் அவர்கள் அதற்கு முன்பாகவே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மீட்கப்பட்டவர்களின் கூட்டத்தில் இருப்பவர்கள்

1. பழைய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்கள். (அப் 7:38; எபி 11:1-40; எபி 12:1)
2. புதிய ஏற்பாட்டுக்கால சபையிலுள்ள பரிசுத்தவான்கள். கிறிஸ்து சபையில் ஸ்தாபகர். அவர் சபையை எடுத்துக் கொள்வதற்காக வருவார். (எபே 5:27; 1தெச 27; தெச 4:16)
3. 144000 யூதர்கள். (வெளி 7:1-3; வெளி 14:1-511
4. உபத்திரவக்காலத்து பரிசுத்தவான்கள், இவர்கள் சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு இரட்சிக்கப்பட்டவர்கள். 24 மூப்பர்களும் பழைய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்களாக வானம் புதிய ஏற்பாட்டுக் கால சபையின் பரிசுத்தவான்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மூப்பர்கள் பரலோகத்திற்கு வந்த பின்பு அல்லது வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் நிறைவேறும்போது 144,000 யூதர்களும் உபத்திரவக்காலத்து பரிசுத்தவான்களும் மீட்கப்படுகிறவர்கள்

இருபத்தி நான்கு மூப்பர்களைப் பற்றிய குறிப்புக்கள்

1. பழைய ஏற்பாட்டுக்கால ஆசாரியத்துவம் முழுவதற்கும் 24 மூப்பர்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். (1நாளா 24: 1-9)
2. இஸ்ரவேலின் பன்னிரண்டு எனிரவ் கோத்திரத்தாரின் நாமங்களும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய நாமங்களும் பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமின்மீது எழுதப்பட்டிருந்தன. (வெளி 21:10-14)

இருபத்தி நான்கு மூப்பர்களின் கிரியைகள்

1. சிங்காசனங்களின் மீது உட்கார்ந்திருந்தார்கள். (வெளி 4:4 வெளி 19:7-8)
2. தேவளை ஆராதித்தார்கள். (வெளி 4:9-11; வெளி 5:8-10).
3. உங்கள் கிரீடங்களைத் தேவனுக்கு முன்பாக வைத்தார்கள். (வெளி 4:10),
4. தேவனுக்கு முன்பாக வணக்கமாய் விழுந்தார்கள். வெளி 4:10; வெளி5:8, 14; வெளி- II:16; வெளி 19:4)
5. புதிய பாட்டைப்பாடி சுரமண்டலங்களை இசைத்தார்கள். (வெளி 5:8-10).
6. ஆசாரியர்களாக ஆராதனை செய்தார்கள். (வெளி S8)
7. யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தைக் கொடுத்தார்கள் (வெளி 5:5; வெளி 7:13-14),

நான்கு ஜீவன்கள் 4:6-7

அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.  வெளிப்படுத்தின விசேஷம் 4:6

முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.  வெளிப்படுத்தின விசேஷம் 4:7

கர்த்தருடைய சிங்காசனத்திற்கு முன்பாக பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடல் இருக்கிறது கழுவப்பட்டவர்கள் மாத்திரமே தேவனுடைய மகிமையுள்ள பிரசன்னாவிற்கு முன்பாக பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டிருக்கவேண்டும் கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய பாவக்கறைகளைக் கழுவி நம்மை
சுத்திகரித்திருக்கவேண்டும். நம்முடைய சரீரம் ஜலத்தினாலும் சுத்திகரிக்கப் பட்டிருக்க வேண்டும் சுத்திகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாக பிரவேசிக்க முடியும்.

தேவனுடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மத்தியிலும் அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருக்கின்றன. இவை ஜீவனுள்ள சிருஷ்டிகள். இந்த சிருஷ்டிகள் தேவனுடைய சிங்காசனத்திற்கு நடுவில் இருபத்து நான்கு மூப்பர்களுடைய சிங்காசனத்திற்கு நடுவிலும் இருக்கிறார் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக இந்த நான்கு ஜீவன்களும் நின்று கொண்டிருக்கின்றன

இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்து ஊழியம் செய்கிறார்கள். இந்த நான்கு ஜீவன்களும் நின்றுகொண்டு ஊழியம் செய்கின்றன. இந்த நான்கு ஜீவன்களுக்கும் ஓய்வு இல்லை. இரவும் பகலும், கர்த்த ர் பரிசுத்தர் பரிசுத்தர், பரிசுத்தர் என்று ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன இந்த நான்கு ஜீவன்களும், முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஜீவனுடைய உருவமும் எதற்கு ஒப்பாயிருக்கிறது என்பதையும் யோவான் தரிசிக்கிறார். முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாயிருக்கிறது. இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாயிருக்கிறது. மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாயிருக்கிறது. நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கொப்பாயிருக்கிறது.

ஜீவன்களுடைய கிரியைகள்

1. கர்த்தருடைய பரிசுத்தத்தை இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. (வெளி 4:4-8).
2. ஆராதனையின்போது தேவனுக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து (வெளி 5:8-10).|
3. சுரமண்டலங்களை மீட்டி புதிய பாட்டு பாடினார்கள். (வெளி 5:8-101.
4. பரிசுத்தவான்களின் ஜெபங்களைத் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்கள். (வெளி 5:8-10)
5. குதிரைகள் மீது ஏறியிருந்தவர்களைக் காண்பித்தார்கள். வெளி 6:1-8)
6. தூதர்களுக்குப் பொற்கலசங்களைக் கொடுத்தார்கள். (வெளி 15:7)
7. மற்றவர்களுடைய ஆராதனையைக் கவனித்துக் கேட்டனர். (வெளி 14:3)

கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் வெளி 4 : 8,9

அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.  வெளிப்படுத்தின விசேஷம் 4:8

மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,  வெளிப்படுத்தின விசேஷம் 4:9

அப்போஸ்தலர் யோவான் நான்கு ஜீவன்களையும் தெளிவாகத் தரிசிக்கிறார். அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளுக்கு சுற்றிலும் உள்ளேயும் கண்கள் நிறைந்திருக்கிறது. யோவான் நான்கு ஜீவன்களை தரிசித்தபின் அவை கர்த்தரைத் துதித்துப் பாடுவதை தன் செவிகளால் கேட்கிறார். இந்தத் தரிசனம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் கொப்பாய் இருக்கிறது

உசியா - ராஜா மரண மடைந்த வருடத்தில் ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன் ; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபின்கள் அவருக்கு மேலாகு நின்றார்கள் அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து: ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் பூமி அனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அகத்த உதடுகளுள்ள மனுஷன், அகத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் மாசமா இருக்கிறவன் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்" (ஏசா 6:1-5).

மொத்தம் நான்கு ஜீவன்கள் இருக்கின்றன. இந்த நான்கு ஜீவன்களும் ஒரே தேவனையே துதிக்கின்றன. அவர் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். நான்கு ஜீவன்களும் கர்த்தரைத் துதிக்கும்போது, "இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய
கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன திரித்துவ தேவனை நான்கு ஜீவன்களும் துதிக்கின்றன. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்றுபேரையும், இந்த நான்கு ஜீவன்களும் இடைவிடாமல் துடித்துக் கொண்டிருக்கின்றன

சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவன் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் அவர் சர்வ வல்லமை உள்ளவர் நித்திய
ஜீவனுள்ளவர் அவர் ஒருவரே சாவாமை உள்ளவர் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு
நான்கு ஜீவன்களும் மகிமையையும், கனத்தையும், ஸ்தோத்திரத்தையும் செலுத்தி, இரவும் பகலும் ஓய்வில்லாமல் துதிக்கின்றன.

இருபத்து நான்கு மூப்பர்கள் வெளி 4 : 10,11

இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:  வெளிப்படுத்தின விசேஷம் 4:10

கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.  ன வெளிப்படுத்தின விசேஷம் 4:11

சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற சர்வவல்லமையுள்ள தேவனை நான்கு ஜீவன்களும் இரவும் பகலும் ஓய்வில்லாமல் துதிப்பதை யோவான் தன் செவிகளால் கேட்கிறார் அப்போது தேவனுடைய சிங்காசனத்தைச் சூழ்ந்து இருக்குற இருபத்துநான்கு -சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கிற இருபத்து நான்கு மூப்பர்களும், சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுகிறார்கள். மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் சதாகாலங்களிலவீற்றிருக்கிறார்ும் உயிரோடிருக்கிற தேவன் . இருபத்து நான்கு மூப்பர்களும் அவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து, அவரைத் தொழுது கொள்கிறார்கள் இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி இருக்கிறார்கள் இவர்கள் கர்த்தருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, அவரைத் தொழுதுகொள்ளும் போது, தங்கள் கிரீடங்களை கழற்றி, கர்த்தருடையசிங்காசனத்திற்கு முன்பாக வைக்கிறார்கள் பரிசுத்தமுள்ள தேவனைக் கனப்படுத்துகிறார்கள். அவரை நன்றியோடு துதிக்கிறார்கள் இந்தப் பூமியிலே சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷருடைய ஆத்துமாக்களை இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார். பரலோகத்திலே, தம்முடைய பரிசுத்தவான்களுக்கு, மகிமையின் கிரீடத்தைச் சூட்டுகிறார். இருபத்து நான்கு மூப்பர்களுக்கும் கர்த்தருடைய கிருபையினால்தான் கிரீடம்
கிடைத்திருக்கிறது. மகிமையுள்ள கர்த்தரால் இவர்கள் மகிமையடைந்திருக்கிறாகள்

இருபத்து நான்கு மூப்பர்களும் தங்களுடைய சிங்காசனங்களில் உட்கார்ந்திருந்தாலும், அவர்கள் கர்த்தருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து அவரைத் தொழுது கொள்கிறார்கள் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரே சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவன். அவர் மாத்திரமே
தேவன். அவர் ஒருவரே தேவன். பூமியிலுள்ள சபையாரும், பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்களும் ஒன்றான மெய்த்தேவனாகிய
கர்த்தரை மாத்திரம் தொழுது கொள்கிறார்கள் அவரே நம்முடைய துதிக்குப் பாத்திரர்.

இருபத்து நான்கு மூப்பர்களும் கர்த்தரைத் துதிக்கும் போது, "கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்கு பாத்திரராயிருக்கிறீர் என்று சொல்லி அவரைத் துதிக்கிறார்கள் கர்த்தரே சகலத்தையும் சிருஷ்டித்தவர். சர்வ சிருஷ்டிகர் மாத்திரமே நம்முடைய துதிகளுக்குப் பாத்திரராயிருக்கிறார். சர்வசிருஷ்டிகரும் தங்களை சிருஷ்டித்த சிருஷ்டிகரை மாத்திரமே தொழுதுகொள்ளவேண்டும். சிருஷ்டிகரைத் தொழுது கொள்ளாமல் சிருஷ்டியைத் தொழுதுகொள்வது பாவம்.

சர்வவல்லமையுள்ள தேவனே சகலத்தையும் பாதுகாக்கிறவர். எல்லாவற்றையும் அவரே பராமரிக்கிறார் சர்வசிருஷ்டிகளும் தேவனுடைய தெய்வீக சித்தத்தையும் வல்லமையையும் சார்ந்திருக்கிறது. தேவனைச் சார்ந்திருக்கிற சிருஷ்டிகள் தங்களை தேவனுக்கு மேலாக உயர்த்தக்கூடாது. தேவனுடைய சித்தத்தினாலேயே சகலமும் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அவருடைய தெய்வீக வல்லமையினால் சகலமும் சிருஷ்டி கப்பட்டிருக்கிறது தேவன் தம்முடைய சந்தோஷத்திற்காக சகலத்தையும் சிருஷ்டித்திருக்கிறார். சகலவற்றையும் என்னுடைய சித்தத்தின் பிரகாரமாக சிருஷ்டித்திருக்கிறார். எல்லா சிருஷ்டிகளுக்கும் கர்த்தரே காரண கர்த்தா. கர்த்தருடைய சித்தமில்லாமல் ஒன்றும் சிருஷ்டிக்கப்படவில்லை. சர்வசிருஷ்டிகராகிய கர்த்தரே சர்வவல்லமையுள்ள தேவன் இருக்கிறார் அவர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குப் பாத்திரராய் இருக்கிறார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.