வெளிப்படுத்தின விசேஷம் 3ஆம் அதிகாரம் விளக்கம்

சர்தை வெளி 3:1-6

வெளி 3:1. சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் - உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உயிருள்ள வனென்று பெயர் கொண்டிருத்தும் செத்தவனாயிருக்கிறாய்.

அப்போஸ்தலர் யோவான் சர்தை பட்டணத்தில் சுவிசேஷத்தை பிரசங்கம் பண்ணினார். யோவானுடைய ஊழியத்தின் மூலமாய் முதன் முதலாக இரட்சிக்கப்பட்டவர்கள் சர்தை பட்டணத்தார்தான் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். சர்தை பட்டினத்தார் பற்றி மேலும் ஒரு செய்தி உள்ளது. கிறிஸ்துவின் உபதேசத்திற்கு சர்தை பட்டணத்தாரே முதன் முதலாக எதிர்த்து நின்றவர்கள் என்றும் வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பற்றி சொல்லும் போது. "தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழுநட்சத்திரங்களையும்
உடையவர் என்று சொல்லுகிறார் ஏழு ஆவிகள் என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிற வார்த்தை பரிசுத்த ஆவியானவர் வல்லமையுள்ளவர் அவரிடத்தில் வெவ்வேறு விதமான வல்லமைகள் உள்ளது ஏழு என்பது பூரணத்தைக் குறிக்கிற எண். ஏழு ஆவிகள்
என்னும் வார்த்தை பரிசுத்த ஆவியானவருடைய -சர்வவல்லமை குறிக்கிறது.


இயேசுகிறிஸ்துவிடம் தேவனுடைய ஏழு ஆவிகள் இருக்கிறார்கள். பரிசுத்த
ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் மீது அளவில்லாமல் ஊற்றப்பட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவினிடத்தில் பரிபூரணமாக வாசம் பண்ணுகிறார். சர்தை சபையாருக்கு பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் தேவைப்படுகிறது. ஆவியானவரே அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து ஏழு நட்சத்திரங்களை உடையவர். ஏழுநட்சத்திரங்களும் சபைகளின் தூதர்கள். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஊழியத்தின் மூலமாகவே கிரியை நடப்பிக்கிறார் ஆவியானவர் இல்லாமல் ஊழியம் கனிகொடுக்காது பரிசுத்த ஆவியில்லாமல் ஊழியத்தில் ஜீவனோ வல்லமையோ இருக்காது. -கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கரம் பரிசுத்த ஆவியானவரும் சபை களையும் இணைக்கிறது. சபையில் ஆவியானவர் இல்லையென்றால் அந்த சபையில் ஜீவன் இருக்காது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. தம்முடைய ஆவியானவர் மூலமாய், தம்முடைய சபைகளுக்கு ஜீவனைக் கொடுக்கிறார்.

கிறிஸ்துவானவர் சர்தை சபையின் தூதனுக்கு சொல்லும்போது, ஆரம்பத்திலேயே அந்த சபையைக் கடிந்து கொள்கிறான். சர்தை சபையைப்போலவே லவோதிக்கேயா சபையையும் கர்த்தர் ஆரம்பத்திலேயே கடிந்துக் கொள்கிறார். கர்த்தர் கடினமான வார்த்தைகளினால் அவர்களைக் கடிந்துக் கொள்கிறார். அவர்களிடத்தில் மாய்மாலம் இருக்கிறது தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் சர்தை சபை ஆவிக்குரிய வளர்ச்சி பெற்றிருந்தது. நற்சாட்சியுடையதாயிருந்தது. கனிதரும் சபையாகயிருந்தது. இந்த சபையின் மூலமாய் கர்த்தருடைய ஊழியம் அதிகமாய் நடைபெற்றது இவர்கள் மத்தியிலே பிரிவினை எதுவும் காணப்படவில்லை எல்லாமே கிராமமும் ஒழுக்கம் நடைபெற்றது மனுஷருடைய பார்வையில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.

கர்த்தரும் சர்தை சபையைப் பார்க்கிறார். கர்த்தருடைய பார்வையும் மனுஷருடைய பார்வையும் ஒன்றுபோல் இருப்பதில்லை. மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ மனுஷருடைய இருதயத்தைப் பார்க்கிறார். கர்த்தர் சர்தை சபையின் கிரியைகளை அறிந்திருக்கிறார்.
மனுஷர் மத்தியிலே சர்தை சபை உயிருள்ளது என்று பெயர் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த சபை செத்துப்போயிருப்பதை கர்த்தர்
பார்க்கிறார். இந்தச் சபைக்கு மனுஷர் மத்தியிலே நற்பெயரும், பெயரும் புகழும் இருக்கிறது. ஆனால் உண்மையில் அந்த நற்பெயருக்கு சர்தை சபை பாத்திரமா இருக்கவில்லை.

சர்தை சபையார் பக்தியுள்ளவர்களென்று வெளிவேஷம் போடுகிறார்கள். ஆனால் சபைக்குள்ளேயோ தேவனுடைய வல்லமையில்லை. சர்தை சபை உயிருள்ள சபையென்று - பெயர் பெற்றிருக்கிறது. ஆனால் இது செத்துப்போன சபையில் இருக்கிறது. இந்தச் சபையில் ஜீவனில்லை. ஜீவனிருந்தால் அசைவு இருக்கும் சர்தை சபையில் அசைவு எதுவுமில்லை. சர்தை சபை இன்னும் முழுவதுமாக செத்து போக வில்லை. கொஞ்சம் உயிர் இருக்கிறது. செத்துப்போக ஆயத்தமாக இருக்கிறது. கர்த்தர் சர்தை சபையின் உண்மையான நிலமையைப் பார்த்து அவர்களை எச்சரிக்கிறார்.

சர்தை சிமிர்னாவிற்கு கிழக்கே 40 மைல் தூரத்திலுள்ள பட்டணம். பழங்கால லீதியாவின் தலைநகரம்.

சர்தை சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள் (வெளி 3:1)
2. அவர்கள் உயிருள்ள வர்களென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவர்கள் இருக்கிறார்கள் (வெளி 3:1
3. அவர்களுடைய கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக இல்லை.  (வெளி 3:2)
4. தங்கள் வஸ்திரங்களை அச்சிப்படுத்தாத சில பேர் மட்டுமே சர்தை சபையில் இருந்தார்கள் (வெளி 3:4)

சர்தை சபையாருக்குக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்

1. நீ விழித்துக்கொண்டிரு. (வெளி 3:2)
2. சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்தும்.
3. நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூரு. (வெளி 3:3)
4. அதை கைக்கொள். (வெளி 3:3; எபி 3:6)
5. மனந்திரும்பு (வெளி - 3:3,19; வெளி 2: 5,16,21,22)

விழி, ஸ்திரபடுத்து,  மனந்திரும்பு வெளி 3:2,3

இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றியசாட்சியைக்குறித்தும், தான் கண்டயாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:2

இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது.  வெளிப்படுத்தின விசேஷம் 1:3

சர்தை சபையார் உயிருள்ளவர்கள் என்று பெயர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ செத்தவர்களைப்போல இருக்கிறார்கள். அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கிறிஸ்துவானவர் அவர்களுக்கு நல் ஆலோசனை சொல்லுகிறார் நாம் எப்போதெல்லாம்
விழித்துக்கொள்ளாமலிருக்கிறோமோ அப்பொதெல்லாம் நம்முடைய ஸ்தானத்தை இழந்துபோகிறோம். விழித்துக்கொள்ளாத வேளையிலே தூங்குகிறவர்களாகக் காணப்படுவோம். தூங்கும் நிலமையிலிருந்து விழித்துக்கொள்ளும் நிலமைக்கு நாம் திரும்பவேண்டும். ஆபத்துக்கு
விரோதமாகவும், சாத்தானுக்கு விரோதமாகவும் நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாயிருக்கவேண்டும்.

சர்தை - சபையாரிடத்தில் சாகிறதற்குகேதுவானவைகள் ஏராளமாய் உள்ளன இவற்றினால் இவர்கள் செத்தவர்களைப்போல இருக்கிறார்கள். இவர்களிடத்தில் கொஞ்சம் உயிர் இருக்கிறது அந்த உயிரை இவர்கள் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். சாகிறதற்கேதுவாய் இருக்கிறவர்கள் என்பது மரணத்திற்கேதுவான குணங்களைக் குறிக்கும் என்று ஒரு சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். இந்த வாக்கியம் மரணத்திற்கேதுவான வர்களையும் குறிக்கும் என்று வேறு சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மைச் சுற்றிலும் சாவுக்கேதுவாயிருக்கிறவைகள் அதிகமாயிருக்கும்போது நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்மால் உற்சாகமா இருக்க முடியாது நம்மைச் சுற்றிலும் ஆவிக்குரிய சோர்வும், மந்த நிலமையும் காணப்படும் போது, நாம் மாத்திரம் ஆவிக்குரிய காரியங்களில் சுறுசுறுப்பாயிருக்க முடியாது. ஆவிக்குரிய ரீதியாக செத்துப்போனவர்கள் நடுவிலே நாம் ஜீவிக்கும் போது நம்முடைய ஆவிக்குரிய ஜீவனையும், தேவனுடைய வல்லமையையும் நமக்குள்ளே காத்துக்கொள்வது மிகவும் கடினம்.

சர்தை சபையின் விசுவாசிகள் சாகிறதற்கேதுவாயிருக்கிறவர்கள் மத்தியிலே ஜீவிக்கிறார்கள். இதனால் இவர்களுடைய கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாயில்லை. அவர்களிடத்தில் குறை காணப்படுகிறது. இவர்கள் உயிருள்ளவர்கள் என்று பெயர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செத்தவர்களாயிருக்கிறார்கள். ஒரு கடலை நெற்றியில், வெளியே தோலும் உள்ளே கடலைப் பருப்பும் இருக்கும்.இவர்களுக்கோ வெளித்தோல் மாத்திரமே இருக்கிறது. உள்ளே கடலைப் பருப்பு இல்லை. ஓடு இருக்கிறது விதை இல்லை. உள்ளே ஒன்றுமில்லாமல் வெறுமையாய் இருக்கிறது. வெளிப் பார்வைக்கு அழகாக இருக்கிறார்கள்.

சர்தை சபையாரின் உள்ளான ஆவிக்குரிய ஜீவியம் ஒன்றுமில்லாமல் சூனியம் இருக்கிறது. அவர்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணவில்லை. ஆவியானவர் இல்லையென்றால் அவர்களுக்கு ஜீவனும் இல்லை. அவர்களுக்கு தேவகிருபைகளும்
இல்லை. ஆவிக்குரிய வரங்களும் இல்லை. இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நீண்ட நாட்களாய் நிலைத்து நிற்க்கமுடியாது. சீக்கிரமாய் மரித்துப் போவார்கள்.

சர்தை சபையாருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்களோ | சுவிசேஷ வார்த்தைகளை கேட்டும் மறந்து விட்டார்கள். இவர்கள் கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையைப் நினைவுகூர வேண்டும், சுவிசேஷத்தின் வார்த்தைகளைக் கைக்கொண்டு மனந்திரும்ப வேண்டும். சுவிசேஷத்தை இவர்கள் முதன் முதலில் கேட்ட போது தேவனுடைய கிருபை இவர்களுக்குள் பிரவேசித்தது. ஆனால் இவர்களோ தாங்கள் கேட்ட சுவிசேஷத்தை சீக்கிரத்தில் மறந்து போனார்கள். - சுவிசேஷத்தை மறந்துபோன போது இவர்களிடத்திலிருந்த தேவகிருபையும் இவர்களை விட்டு கடந்துபோயிற்று. ஆகையினால் சர்தை சபையார் தாங்கள் கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர வேண்டும். தாங்கள் கேட்ட சுவிசேஷ வார்த்தைகளைக் கைக்கொண்டு மனந்திரும்பவேண்டும் அவர்கள் விழித்திருக்க வேண்டும்

சர்தை சபையார் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்திலே விழித்திருக்க வில்லையென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் மேல் திடீரென்று திருடனைப்போல வருவார். அவர் தங்கள் மேல் வரும் வேலையை அவர்கள் அறியாதிருப்பார்கள். கர்த்தருடைய வார்த்தை சர்தை சபையாருக்கு எச்சரிப்பாகச் சொல்லப்படுகிறது.

நாம் கிறிஸ்துவைப்பற்றி கொண்டு, அவருடைய கிருபையில் நிலைத்திருக்கும்போது, அவருடைய வருகை நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
நாம் அவருடைய வருகையை ஆவலாய் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பேன்,

நம்முடைய விசுவாசத்தில் நாம் கிறிஸ்துவை பற்றி கொள்ளாமல், அவருடைய கிருபையை இழந்திருப்போமென்றால், அவருடைய இரண்டாம் வருகை நமக்கு ஆச்சரியமாக இருக்கும். நமக்கு ஆவிக்குரிய பாதுகாப்பு இருக்காது. அவிசுவாசிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை திகைப்பாகவும், பயங்கரமானதாகவும் இருக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவருடைய கிருபை வெளிப்படாது அவருடைய  நீதிமாத்திரமே வெளிப்படும் அவர் நீதியாய் சகல ஜனங்களையும் நியாயந்தீர்ப்பார்.

சர்தை சபையார் தங்கள் ஆவிக்குரிய தூக்க நிலையிலிருந்து விழித்துக்கொண்டு, தங்களை - ஸ்திரப்படுத்தி வேண்டும், மனந்திரும்ப வேண்டும். இல்லை என்றால் அவிசுவாசிகளுக்கு வரும் நியாயத்தீர்ப்பைப்போல, சர்தை சபையாருக்கும் நீதியான நியாயத்தீர்ப்பு வரும்.

சர்தை சபையாருக்குக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்

1. நீ விழித்துக்கொண்டிரு. (வெளி 3:2)
2. சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்தும்.
3. நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூரு. வெளி 3:3)
4. அதைக் கைக்கொள். (வெளி 3:3 எபி 3:6
5. மனந்திரும்பு (வெளி - 3:3,19; வெளி 2: 5,16,21,22)

திருடனைப்போல் என்னும் வாக்கியம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறிக்கவில்லை சர்தை சபையார் மனந்திரும்ப வில்லையென்றால் அவர்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு திடீரென்று அனுப்பப்படும் என்று இந்த வாக்கியம் பொருள் தருகிறது. கர்த்தருடைய நாளும், "இரவிலே திருடன் வருகிற விதமாய்" வரும் என்று கூறப்பட்டிருக்கிறது தெச 5:2-4; 2 பேதுரு 3:10; வெளி 3:3;
வெளி 16:15 ஆகிய வசனங்களில் கர்த்தருடைய நாள் எப்படி வருமென்று இவ்வாறு விளக்கப் பட்டிருக்கிறது. வெளி 3:3 ஆவது வசனத்தில் சர்தை சபையின் நியாயத் தீர்ப்பைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வருகையும், திருடன் வருகிற விதமாக இருக்கும். (மத் 24:43)

வெண்வஸ்திரம் வெளி 3:4

வெளி 3:4. ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால்
வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சர்தை சபையாரை எச்சரித்துச் சொல்லுகிறார். இவர்கள் உயிருள்ளவர்களென்று பெயர் கொண்டிருந்தாலும், இவர்கள் செத்தவர்களாயிருக்கிறார்களென்று, இவர்களுடைய உண்மையான ஆவிக்குரிய நிலமையை அவர்களுக்கு வெளிப்படுத்திக்
காண்பிக்கிறார். அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று, தங்கள் ஆவிக்குரிய - ஜீவியத்தை ஸ்திரப்படுத்தி வேண்டுமென்றும், மனந்திரும்பவேண்டுமென்றும் கர்த்தர் அவர்களை எச்சரிக்கிறார். விழித்திராவிட்டால், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகுமென்று கிறிஸ்துவானவர் எச்சரித்துச் சொல்லுகிறார்.

இயேசு கிறிஸ்து சர்தை சபையிலுள்ள பாவிகளை குறித்து எச்சரிப்பு வார்த்தைகளைச் சொன்னாலும், அவர்கள் மத்தியிலே இருக்கிற பரிசுத்தவான்கள் நிமித்தம் அவர்களைப் புகழ்ந்து பேசவும் செய்கிறார். கர்த்தருடைய வார்த்தை நமக்கு ஆறுதலாயிருக்கிறது. நம்மை உற்சாக படுத்துகிறது. நம்மை அழிக்கவேண்டுமென்பது கர்த்தருடைய நோக்கமல்ல. நம்மைத் திருத்தி, நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கவேண்டும்
என்பதே கிறிஸ்துவின் சித்தம்.

சர்தை சபையில் சில பேர் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாமல் பரிசுத்தமாய் ஜீவிக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை கொஞ்சம் தான். ஆனாலும் இவர்கள் விசுவாசத்தில் உறுதியுள் ளவர்களாயிருக்கிறார்கள் இப்படிப்பட்ட சில பேர் சர்தை சபையிலிருப்பதை கர்த்தர் கண்ணோக்கிப் பார்க்கிறார். இவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இவர்களும் கர்த்தருடைய பார்வைக்கு பிரத்தியட்சமாய்த் தெரிகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் இருக்கலாம். ஆனாலும் இவர்கள் தேவ கிருபையில் நிறைந்தவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் கர்த்தருக்கு விசேஷித்தவர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சர்தை சபையில் உள்ள ஒரு சில பரிசுத்தவான்களுக்கு தம்முடைய கிருபை நிறைந்த ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார். அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு கூட நடப்பார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அவரோடு கூட நடப்பது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். கர்த்தரோடு கூட நடக்கும்போது விசுவாசிகளுக்கு அவரோடு நெருங்கிய ஐக்கியம் உண்டாகும் ஆவிக்குரிய காரியங்களை கர்த்தரோடு தாராளமாய் சம்பாஷணை செய்ய முடியும்.

சர்தை சபையிலுள்ள பரிசுத்தவான்கள் எண்ணிக்கையில் குறைவான பேரா இருந்தாலும் கர்த்தர் அவர்களை தம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு பாத்திரவான்களாக காண்கிறார். அவர்கள் வெண் வஸ்திரம் தரித்துக்கொள்வார்கள். பரலோகத்திலே வெண்வஸ்திரம் மகிமையையும் கனத்தையும் வெளிப்படுத்துகிறது. கர்த்தரோடு கூட நடக்கிற பரிசுத்தவான்கள், வெண் வஸ்திரம் தரித்து, கர்த்தருடைய பரிசுத்த மகிமையில் பிரவேசிப்பார்கள்.

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குக் கூறப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்

1. வெண்வஸ்திரந்தரித்து தேவனோடே கூட நடப்பார்கள். (வெளி 3:4)
2 அவர்களுக்கு வெண் வஸ்திரம் தரிப்பிக்கப்படும். (வெளி 3:5; வெளி 3:18; வெளி 4:4; வெளி 6:11; வெளி 7:9,13; வெளி 15:6; வெளி 19:8,14)
3. அவர்களுடைய நாமத்தைத் தேவன் கிறுக்கிப்போடமாட்டார். (வெளி 3:5; வெளி 22:18-19; யாத் 32:32-33; சங் 69:28)
4. தம் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவர்கள் நாமத்தைக் கிறிஸ்து அறிக்கையிடுவோர் (வெளி 3:5)

ஜீவபுஸ்தகம் வெளி 3: 5,6

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:5

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.  வெளிப்படுத்தின விசேஷம் 3:6

கர்த்தர் ஜெயங்கொள்கிற விசுவாசிகளுக்கு விசேஷித்த வெகுமதி வாக்குப்பண்ணுகிறார். தேவனுடைய கிருபை பரிசுத்தமானது அவருடைய மகிமையும் பரிசுத்தமானது அவர் கொடுக்கிற வெகுமதியும் பரிசுத்தமானது. பரிசுத்தம் பரிபூரணமடையும்போது கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகிறது கர்த்தரோ தம்முடைய பரிசுத்தவான்களை கனப்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். தம்முடைய தெய்வீக வாக்குத்தத்தங்களை அவர்களுக்குக் கிருபையாகக் கொடுக்கிறார். ஜெயங்கொள்கிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும் என்று கிறிஸ்துவானவர் வாக்கு பண்ணுகிறார்.

இயேசுகிறிஸ்துவினிடத்தில் ஒரு விசேஷித்த புஸ்தகம் இருக்கிறது. இதற்கு ஜீவபுஸ்தகம் என்று பெயர். கிறிஸ்துவானவர் தம்மை விசுவாசித்து ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்களுடைய பெயர்கள் இந்த ஜீவபுஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். கர்த்தர் தம்மிடத்திலுள்ள ஜீவபுஸ்தகத்தை தம்முடைய பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் சமர்ப்பிப்பார்.

ஜெயங்கொள்கிற விசா சிகளுடைய நாமத்தை கிறிஸ்துவானவர் இந்த ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடமாட்டார். அவர்கள் தங்கள் விசுவாசத்தில் ஜெயங்கொண்டவர்களென்று கிறிஸ்துவானவர் பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர் முன்பாகவும் அவர்களுடைய நாமத்தை அறிக்கை செய்வார் இதுவே கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகிற மிகப்பெரிய மேன்மை.

நாம் இப்பிரபஞ்சத்தில் ஜீவிக்கும் காலம் வரையிலும் நமக்கு பாடுகளும், வேதனைகளும், உபத்திரவங்களும் உண்டு. சத்துருவின் போராட்டங்களும் நமக்கு உண்டு. இவையெல்லாவற்றிலும் நாம் விசுவாசத்தோடு கர்த்தரைப் பற்றிக் கொள்ள வேண்டும். சத்துருவை ஜெயிக்க வேண்டும். ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர் இப்படிப்பட்ட மேன்மையான ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார்.

இந்த செய்தி சர்தை சபைக்கு விசேஷமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், இதை எல்லா சபைக்கும் பொதுவான செய்தியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று கிறிஸ்துவானவர்
திருவுளம் பற்றுகிறார்.

வெளி 3:2-3 ஆகிய வசனங்களில் கூறப் பட்டிருக்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோரின் நாமங்களை இயேசு கிறிஸ்து ஜீவ புத்தகத்திலிருந்து கிறுக்கி போடமாட்டார். அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவில்லையென்றால், நமது நாமமும் ஜீவ புத்தகத்திலிருந்து கிறுக்கி போடப்படும். "எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கி போடுவேன்"
(யாத் 32:32-33) என்று தேவன் மோசேயிடம் கூறியிருக்கிறார். "ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக" (சங் 69:25-28= அப் 1:20 என்று சங்கீதக்காரன் பரிசுத்த ஆவியினால் தேவனிடத்தில் ஜெயம் பண்ணுகிறான். "ஒருவன் இந்தத் தீர்க்க தரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்து இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும் அவனுடைய
பங்கை தேவன் எடுத்துப் போடுவார்" (வெளி 22:18-19) என்று இயேசு கிறிஸ்துவும் ஜனங்களை எச்சரித்துக் கூறுகிறார்.

பிலதெல்பியா சபை வெளி 3:7-13

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது,  வெளிப்படுத்தின விசேஷம் 3:7

பிலதெல்பியா என்னும் பெயருக்கு சகோதர சிநேகம் என்று பொருள் இது இந்தப் பட்டணத்தின் பழங்காலத்துப் பெயர். இந்தப் பட்டினத்தார் அன்பிலும், சகோதர சிநேகத்திலும் சிறந்து விளங்கினார்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் அன்புகூர்ந்தார்கள். தங்களுடைய உள்ளத்தில் உள்ள அன்பை கிரியைகளினாலும் வெளிப்படுத்திக் காண்பித்தார்கள். விசுவாசிகள் அன்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அன்பின் ஆவி நம்மிடத்தில் இல்லையென்றால், நம்முடைய ஜீவியத்தில் ஆவியின் கனி வெளிப்படாது.

கர்த்தர் இந்த சபையில் ஒரு குற்றமும் காணவில்லை. இவர்கள் கர்த்தருடைய நாமத்தை மறுதலிக்க வில்லை , கிறிஸ்துவானவர் இந்த சபைக்கு தம்முடைய செய்தியைச் சொல்லும் போது தம்மைப்பற்றி பரிசுத்தமுள்ள வரும், சாத்தியமுள்ள வரும், தாவீதின் திறவுகோலை உடையவரும்,
ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாயிருக்கிறவர்" என்று தம்மைப்பற்றிச் சொல்லுகிறார் இது கிறிஸ்துவின் சுபாவம் கர்த்தர் பரிசுத்தமுள்ளவன். அவர் சத்தியமுள்ளவர் பரிசுத்தம் கர்த்தருடைய சுபாவம். ஆகையினால் அவர் தம்முடைய வார்த்தைகளில் - சத்தியமுள்ள வராகவே இருக்கிறார். பரிசுத்தமுள்ள தேவனால் பொய்சொல்ல முடியாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடம் ஒரு திறவுகோல் உள்ளது. இது தாவீதின் திறவுகோல் என் று அழைக்கப்படுகிறது
கர்த்தருடைய ராஜ்யத்தின் திறவுகோல் அவனிடத்தில் உள்ளது. கர்த்தர் தம்முடைய திறவுகோலினால் திறக்கிறார். தம்முடைய சபைகளுக்கு ஊழியவாய்ப்புக்களைத் திறந்துகொடுக்கிறார். அனுகூலமான வாசல்களைத் திறந்துகொடுக்கிறார். பிரவேசிக்கும் கதவுகளைத் திறக்கிறார்
மனுஷருடைய இருதயங்களைத் திறக்கிறார் சபையின் கதவுகளைத் திறந்து ஆத்துமாக்களை உள்ளே அழைத்து வருகிறார். கர்த்தர் திறக்கும் போது. அவர் திறந்ததை ஒருவராலும் பூட்ட முடியாது.

கர்த்தர் கதவைத் திறப்பது போல தம்முடைய திறவுகோலினால் அவர் கதவைப் பூட்டவும் செய்கிறார். கர்த்தருக்குச் சித்தமான வேளையில் அவர் வாய்ப்புக்கள் வாசல்களை அடைத்து போடுகிறார். பாவிகளுக்கும் துன்மார்க்கரும் விரோதமாக பரலோகத்தின் வாசலை அடைத்துப்போடுகிறார். கர்த்தருடைய கிரியை அவருடைய சர்வவல்லமையினால் நடைபெறுகிறது. அவர் தமக்குச் சித்தமான பிரகாரம் கிரியை செய்கிறார். அவருக்கு எதிராக கிரியை செய்ய யாராலும் கூடாது. கர்த்தர் கதவைப் பூட்டும் போது, பூட்டிய
அந்தக் கதவை ஒருவராலும் திறக்க முடியாது.

பிலதெல்பியா சர்தைக்கு தென்கிழக்கில் 30 மைல் தூரத்தில் உள்ள பட்டணம்.

அறிந்திருக்கிறேன் வெளி 3:8

 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:8

கிறிஸ்துவானவர் பிலதெல்பியா சபையாருடைய கிரியைகளை அறிந்திருக்கிறார். அவர்களுக்காக தாம் செய்வதை கர்த்தர் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். திறந்தவாசலை அவர்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார். ஒருவராலும் அந்த வாசலை பூட்ட முடியாது. பிலதெல்பியா சபையில் கர்த்தரால் திறக்கப்பட்ட திறந்த வாசல், திறந்ததாகவே இருக்கும். கர்த்தர் அந்த வாசலைக் காத்துக்கொள்கிறார். பிலதெல்பியா சபையிலே ஒரு சில துன்மார்க்கர் இருந்தாலும் கர்த்தர் சபையாருக்கு திறந்த வாசலையே அவர்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சுயாதீன விடுதலை உண்டு. நம்முடைய மாம்சத்திற்கு நாம் அடிமைகளல்ல. மாம்சம் நம்மை ஆளுகை செய்யக்கூடாது. நாமே நம்முடைய மாம்சத்தை ஆளுகை செய்ய வேண்டும். கர்த்தர் அநேக திறந்த வாசல்களை நமக்கு முன்பாக வைத்திருக்கிறார். துன்மார்க்கர் இந்த திறந்த வாசல்களைப் பார்த்து கர்த்தருடைய பிள்ளைகள் மேல் பொறாமை படுகிறார்கள். கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாக திறந்தவாசல்களை அடைத்துப்போட்டால் சத்துருக்கள் சந்தோஷப்படுவார்கள். ஆனால் கர்த்தரோ நமக்கு முன்பாக வைத்திருக்கிற திறந்த வாசலை, ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறந்து வைத்திருக்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகள் அவருக்கு கோபம் உண்டாகும்படி நடந்துகொள்ளக்கூடாது கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்யக்கூடாது. நாம் கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல், துன்மார்க்கமாய் ஜீவித்தால், கர்த்தர் நமக்கு முன்பாக வைத்திருந்த திறந்த வாசலைப் பூட்டிப்போடுவார். கர்த்தர் வாசலைப் பூட்டிவிட்டால், அந்தப் பூட்டிய வாசலை வேறு யாராலும் திறக்க முடியாது. கர்த்தருடைய கையில் இருப்பது தாவீதின் திறவுகோல், இந்த வார்த்தை சர்வவல்லமையுள்ள அதிகாரத்தை குறிக்கும் வார்த்தை யாகும். கர்த்தருக்கு அதிகாரமுள்ள
ஆளுகையுள்ளது. கர்த்தருடைய கிரியைக்கு யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. அவருடைய சித்தத்தை யாரும் தடை பண்ண முடியாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிலதெல்பியா சபையாரை அன்பாய்ப் புகழ்ந்து பேசுகிறார். அவர்களிடத்தில் கொஞ்சம் பெலன் தான் இருக்கிறது. தேவகிருபை அவர்களிடத்தில் கொஞ்சம்தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தை
மறுதலிக்க வில்லை . அவர்களுடைய வசனத்தைக் கைக்கொண்டார்கள். நாம் பலவீனமாக இருந்தாலும், நம்மிடத்தில் தேவகிருபை மெய்யாகவே இருக்குமென்றால், அந்தக் கிருபை நம்மைப் பெலப்படுத்தும்,

விசுவாசிகளிடத்தில் கொஞ்சம் கிருபை இருக்கும்போது அது போதும் என்று திருப்தியடைந்துவிடக்கூடாது. கிருபையில் நாம் வளர்ச்சி பெற வேண்டும். தேவ கிருபை நாம் அதிகமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் கேட்கிறவர்களுக்குக் கொடுக்கப்படும் தம்மிடத்தில் அதிகமான கிருபைகளை கேட்கிற தம்முடைய பிள்ளைகளுக்கு, கர்த்தர் அதிகமான கிருபைகளைக் கொடுப்பார் நம்மிடத்தில் தேவ கிருபை பெருகியிருக்கும்போது, நாம் கர்த்தருடைய வசனத்தைக் கொண்டு அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து ஜீவிப்போம்.
அவருடைய நாமத்தை மறுதலிக்க மாட்டோம்.

பிலதெல்பியா சபை பற்றி கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள்
2. கொஞ்சம் பெலன்.
3. தேவனுடைய வசனத்தைக் கைக்
கொண்டார்கள்.
4. தேவனுடைய மறுதலிக்கவில்லை .நாமத்தை சாத்தானுடைய கூட்டத்தார் வெளி 3:9

வெளி 3:9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை -உனக்குக்
கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படி செய்வேன்.

கர்த்தராகிய - இயேசு கிறிஸ்து பிலதெல்பியா சபையாருக்கு ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். சத்துருக்கள் அவர்களுடைய பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து கொள்வார்கள் பிலதெல்பியா சபையாருக்கு விரோதமாக எழும்பியவர்கள் தோற்று போவார்கள். இந்தச் சத்துருக்கள் யூதர்களால் ஆனாலும் இவர்கள் தங்களை யூதரென்று பொய்சொல்லுகிறார்கள். கர்த்தர் இவர்களை சாத்தானுடைய என் று கூட்டத்தார் இப்படிப்பட்ட கூட்டத்தாரில் சிலரை கர்த்தர் பிலதெல்பியா சபையாருக்குக் கொடுப்பார். சபையார் மத்தியிலே இவர்கள் பிரச்சனை  செய்யமாட்டார்கள். அவர்களுடைய பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து கொள்வார்கள்.

சாத்தானுடைய கூட்டத்தார் கர்த்தருடைய சபைக்குக் கீழ்ப்படிவார்கள். தாங்கள் யூதரல்லாததிருந்தும், தங்களை யூதரென்று பொய்சொன்னது தப்பிதமானது என்று உணர்ந்து அறிக்கை செய்வார்கள். அவர்களுக்குள்ளே மிகப்பெரிய மாற்றமுண்டாயிருக்கும். தேவனுடைய வல்லமையினால் இந்த மாற்றம் உண்டாயிற்று கர்த்தர் சத்துருக்களுடைய இருதயங்களிலும் மாற்றங்களை | உண்டு பண்ணுகிறவர். தம்முடைய சபைக்கு அவர் விசேஷித்த கிருபைகளைக் கொடுக்கிறார். தம்முடைய சபையார் மீது அன்பாய் இருக்கிறார்.

சாத்தானுடைய கூட்டத்தார் இதையெல்லாம் பார்ப்பார்கள் கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் மேல் அன்பாயிருப்பதை அறிந்துகொள்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக தங்களால் யுத்தம் பண்ண முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, சபையாருடைய பாதங்களுக்கு முன்பாக வந்து அவர்களைப் பணிந்து கொள்வார்கள்.

கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் மேல் அன்பாயிருக்கிறதை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். சத்துருக்கள் இதை அறியும்போது நாம் இதை அறியாதவர்கள் இருக்கக்கூடாது. கர்த்தருக்கும் அவருடைய பரிசுத்தவான்களுக்கும் விரோதமாக கிரியை நடப்பித்த சத்துருக்கள், கர்த்தருடைய விசேஷித்த அன்பை அறிந்துகொள்கிறார்கள், அவர்கள் அறிந்துகொள்ளும் விதத்தில் கர்த்தர் தம்முடைய விசேஷித்த அன்பை
வெளிப்படுத்துகிறார். இந்த அன்பு அவருடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே உரியது.

சத்துருக்கள் இதைப்பார்த்து மனந்திருந்துவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பது. கர்த்தருக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பதற்குசமமானது என்பதைப் புரிந்துகொள்வார்கள். தங்களுடைய பலவீனத்தையும், தோல்வியையும் ஒத்துக்கொள்வார்கள். சபையாருடைய பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து கொள்வார்கள்.

நிறைவேறியுள்ள முன்னறிவிப்புக்கள்

1. பொய் சொல்லுகிற அனைவரையும் வெளிப்படுத்துவேன். (வெளி 3:9)
2. அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணியும்படி செய்வேன்.‌ 
3. நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
4. சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நான் உன்னைக் காப்பேன். (வெளி 3:10)

சீக்கிரமாய் வருகிறேன் வெளி 3:10-11

என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:10

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.  வெளிப்படுத்தின விசேஷம் 3:11

கர்த்தராகிய - இயேசு கிறிஸ்து பிலதெல்பியா சபையாருக்கு மேலும் சில ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகள் அவருடைய பொறுமையின் வார்த்தைகளும். இந்த உலகம் பாவத்திலும் துன்மார்க்கத்திலும் நிரம்பியிருக்கிறது பாவமான இந்த உலகத்தின் மீது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷம் அவருடைய
பொறுமையின் கனியாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

பொறுமையின் காலத்திற்குப் பின்பு சோதனையின் காலம் வரும். சமாதானம் காலத்தில் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிகிறவர்கள், சோதனையான
காலத்திலும் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சோதனைக்காலத்திலும் தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தர் தம்முடைய பொறுமையைக் குறித்து சொல்லிய வசனத்தை பிலதெல்பியா சபையார் காத்துக்கொண்டார்கள். இவர்களுக்கு சோதனைக்காலம் வரப்போகிறது.

இது இவர்களுக்கு மாத்திரமல்ல கர்த்தருடைய  சோதனைக்காலம் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிறது. பூமியில் குடியிருக்கிறவர்களை
சோதிக்கும்படியாக சோதனைக்காலம் வரப்போகிறது. இந்த சோதனைக்காலத்திற்கு பிலதெல்பியா சபை யார் தப்ப வேண்டும், கர்த்தருடைய கிருபையும், பாதுகாப்பும் இருக்கும்போது விசுவாசிகள் எல்லா சோதனைக்கும் தப்பிக்கலாம். கர்த்தரோ வரப்போகிற சோதனைக்காலத்திற்குத்
தப்பும்படி, பிலதெல்பியா சபையாரை காப்பதாக வாக்குபண்ணுகிறார்.

விசுவாசிகள் தங்களுக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். நம்மிடத்தில் உள்ள நம்முடைய கிரீடத்தை ஒருவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற கிரீடம், இந்தக் கிரீடத்தை நாம் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். இது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற பொக்கிஷம் அசட்டையாயிருப்போமென்றால் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்துபோவோம். விழித்திருக்காவிட்டால் நம்முடைய கிரீடத்தை சத்துரு எடுத்துக்கொள்வான். கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார். தம்முடைய பிள்ளைகளை சோதனைகளிலிருந்து தப்புவிக்கவும், ஆபத்துக்களுக்கு விடுவிக்கவும், அவர்களுடைய மெய்யான விசுவாசத்தினிமித்தம் அவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுக்கவும், துன்மார்க்கருக்குத் தண்டனை கொடுக்கவும் கர்த்தர் சீக்கிரம் வர போகிறார். தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்கிறவர்கள் கர்த்தரிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றுக்கொள்வார்கள் கர்த்தரை விட்டு பின்வாங்கிப்போவார்கள் பிறருக்குள்ள கிரீடத்தை அபகரித்துக்கொள்ள முயற்சி செய்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் எச்சரிப்போடிருக்கவேண்டும். தங்களுக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

நிறைவேற போகிற முன்னறிவிப்புக்கள்

5. சீக்கிரமாய் வருகிறேன். (வெளி 3:11; வெளி 1:7; வெளி 19:11)
6. என் தேவனுடைய ஆலயத்தில் உன்னைத் தூணாக்குவேன். (வெளி 3:12; கலா 2:9).
7. அந்த ஆலயத்திலிருந்து நீ ஒருக்காலும் நீங்குவதில்லை . (வெளி 3:12)
8. என் தேவனுடைய நாமத்தை உன்மேல் எழுதுவேன். (வெளி 3:12)
9. புதிய எருசலேமின் நாமத்தை உன்மேல் எழுதுவேன். (வெளி 3:12; வெளி 21:29-10).
10. என் புதிய நாமத்தை உன்மேல் எழுதுவேன். (வெளி 3:12)

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்திற்குக் கீழ்ப்படிந்ததினால் விசுவாசிகளுக்குப் பலபாடுகள் உண்டாயிற்று அவற்றை அவர்கள் பொறுமையோடு சகித்துக் கொண்டார்கள்.

சோதனைக்காலம் என்னும் வாக்கியம் தானியேல் எழுபதாவது வாரமாகிய வருங்கால உபத்திரவக்காலத்தை குறிக்கவில்லை யோவானின் காலத்தில் சபைகளுக்கு நேரிட்ட சோதனைகளையும், உபத்திரவங்களையும் இந்த வாக்கியம் குறிக்கிறது.

சீக்கிரமாய் வருகிறேன் என்னும் வாக்கியம் சபையை எடுத்துக் கொள்வதற்காக இயேசு கிறிஸ்துவின் வருகையை குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக அவர் தமது சபையை எடுத்துக் கொள்வதற்கு வருவார்.

கிரீடத்தைப் பெற்றிருக்கும் விசுவாசிகள் தங்களுடைய கிரீடங்களை இழந்து போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் தேவனுக்குப் பயந்து மிகுந்த எச்சரிப்போடு ஜீவிக்க வேண்டும்.

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:12

 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.  வெளிப்படுத்தின விசேஷம் 3:13

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிலதெல்பியா சபைக்கு சொல்லுகிற செய்தியின் முடிவுரையில் இந்த வாக்குத்தத்தத்தைச் சொல்லுகிறார். ஜெயங்கொள்கிற விசுவாசிகளுக்கு கர்த்தர் இரண்டு ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாக வாக்கு பண்ணுகிறார். அவையாவன :
1. அவர்களை தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவார் 2. அவர்கள்மேல் புதிய நாமத்தை எழுதுவார்.

ஜெயங்கொள்கிறவர்களை, கர்த்தர் தம்முடைய ஆலயத்திலே தூணாக்குவார். இந்தத் தூண் ஆலயத்திற்கு ஆதாரமாக இருப்பதில்லை. இந்தத் தூண் ஆலயத்தை தாங்கி நிற்பதில்லை. தேவனுடைய கிருபைக்கு இந்தத் தூண் அடையாளமாயிருக்கிறது. இது கர்த்தருடைய கிருபையின்  நினைவுச்சின்னம் நினைவுச்சின்னத்தை கர்த்தருடைய ஆலயத்திலிருந்து யாரும் நீக்கிப்போடக்கூடாது. நினைவுச்சின்னத்தின் மேன்மையை
யாரும் அவமானப்படுத்த கூடாது.

ஆதித்திருச்சபைக் காலத்திலே ரோமப்பேரரசார் இதுபோல பல தூண்களை நிறுத்துவது வழக்கம். யுத்தத்தில் வெற்றி பெற்ற படைத்தளபதிகளை கௌரவிக்கும் விதமாக ரோமப்பேரரசு அவர்களுக்கு வெற்றி தூண்களை நிறுத்திற்று அந்தத் தூண் ஒருவரும் அகற்றி போடக்கூடாது வெற்றிபெற்ற படைத்தளபதிகளுக்கு இது ஒரு நினைவுச் சின்னமாக நிறுவப்பட்டது. இதுபோலவே கர்த்தர் ஆவிக்குரிய ஜீவியத்திலே ஜெயங்கொள்கிறவர்களை, தம்முடைய தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவதாக வாக்கு பண்ணுகிறார்.

அந்தத் தூணிலே கர்த்தர் விசேஷித்த வாக்கியங்களை எழுதுகிறார். தேவனுடைய நாமம், புதிய எருசலேமாகிய தேவனுடைய நகரத்தின் நாமம் ஆகியவற்றை கர்த்தர் ஜெயங்கொள்கிறவன்மேல் எழுதுவார். இந்தப் புதிய நாமங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவார். விசுவாசிகள் ஜெயங்கொண்டாலும் அந்த ஜெயம் கர்த்தராலேயே வந்தது. கர்த்தருடைய கிருபையும், உதவியும், ஒத்தாசையும் இல்லையென்றால் நமக்கு ஜெயமில்லை கர்த்தர் நம்மோடு

யுத்தம் பண்ண வில்லையென்றால் - நாம் தோற்றுப்போவேன். இதை நமக்கு உணர்த்தும் வண்ணமாக, ஜெயங்கொள்கிற நம்மீது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய புதிய நாமத்தை எழுதுகிறார்.

இந்த நிருபம் பிலதெல்பியா சபையாருக்கு விசேஷமாக எழுதப்பட்டாலும், எல்லா சபையாருக்கும் பொதுவான சத்தியம் இதில் எழுதப்பட்டிருக்கிறது ஆகையினால் ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று கர்த்தர் திருவுளம் பற்றுகிறார்.

ஜெயங்கொள்ளுகிறவர்கள் முன் எழுதப்படும் நாமங்கள்

1. பிதாவாகிய தேவனுடைய நாமம்.
2. புதிய எருசலேமாகிய தேவனுடைய புதிய - நகரத்தின் நாமம். (வெளி 21:29)
3. கிறிஸ்துவின் புதிய நாமம்

லவோதிக்கேயா வெளி 3:14-21

வெளி 3:14. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

ஆசியாவில் ஏழு சபைகள் இருக்கிறது. இந்த ஏழு சபைகளில் லவோதிக்கேயா சபை கடைசியாகச் - சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களுடைய நிலமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. கர்த்தர் இவர்களை புகழ்ந்து பேசும்படியாக இவர்களிடத்தில் எந்த ஒரு நற்குணமும் இல்லை அப்போஸ்தலர் கொலோசெயருக்கு எழுதின நிரபத்தை இந்தப் பட்டணத்தில் இருந்துதான் எழுதினார். பவுல் லவோதிக்கேயா பட்டணத்தில் கர்த்தருடைய சபையை ஸ்தாபிப்பதில் பவுல் முக்கிய பங்கு வகித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு தம்மைப்பற்றி, "உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும் தேவனுடைய சிருஷ்டிக்கும் தியானமாயிருக்கிற ஆமென் என்று சொல்லுகிறார் கர்த்தர் தம்முடைய நோக்கங்களும் வாக்குத்தத்தங்களிலும் மாறாதவர், உறுதியாக இருக்கிறார் ஆகையினால் அவர், "ஆமென்" என்று அழைக்கப்படுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியாயிருக்கிறார். தேவனைப்பற்றி இயேசு கிறிஸ்து மனுஷருக்கு வெளிப்படுத்துகிற சாட்சி உண்மையும் சத்தியமானது கர்த்தருடைய சாட்சியை மனுஷர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியும் இருக்கிறார் இயேசுவானவர் உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவருமாயிருக்கிறார். இவரே ஆதியும் அந்தமும் இவர் தேவனுடைய சர்வசிருஷ்டிக்கும் கிறிஸ்துவானவரே ஆதியாக இருக்கிறவர்.

"லவோதிக்கேயா" - கொலோசெ பட்டணத்திற்கு மேற்கில் ஒரு சில மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பட்டணம் பெர்கியாவில் உள்ளது.

குளிருமல்ல அனலுமல்ல வெளி 3: 15,16

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:15

இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:16

லவோதிக்கேயா சபையார் ஆவிக்குரிய ஜீவியத்தில் பின் வாங்கிப்போயிருக்கிறார்கள். அவர்கள் குளிருமில்லாமல் அனலுமில்லாமல் இருக்கிறார்கள். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் வெதுவெதுப்பாயிருப்பது மிகப்பெரிய ஆபத்து. இந்த உலகத்தில்
விசுவாசிகளுக்கு வருகிற சோதனைகளிலெல்லாம் மிகப்பெரிய சோதனை, நாம் குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா இருப்பதுதான்

கர்த்தருடைய உபதேசம் நமக்குத் தேவை என்று நாம் நினைத்தால், அதை உறுதியாய்ப் பற்றிக் கொள்ள வேண்டும் கிறிஸ்துவின் வார்த்தை முக்கியமானது என்று நாம் நினைத்தால், நாம் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவின் உபதேசமே நமக்குப் பிரதானமாயிருக்கவேண்டும் இயேசு கிறிஸ்துவின் உபதேசம் தங்களுக்குத் தேவையில்லையென்று தீர்மானம்பண்ணினால், அவர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்காமல் விலகிப் போய் விடவேண்டும் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவுமில்லை .

ஒன்று நாம் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் பாவிகளா இருப்போம் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலமையில் நாம் இருக்கக்கூடாது. ஒன்று நாம் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களாய் இருக்கவேண்டும் அல்லது நாம் சாத்தானைச் சேர்ந்தவர்களாக இருப்போம் கிறிஸ்துவையும் சாத்தானையும் சேர்ந்தவர்களாக யாரும் இருக்கக்கூடாது. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவராலும் முடியாது. கிறிஸ்துவையும் பற்றிக்கொண்டு, சாத்தானையும் பற்றிக்கொண்டால், நம்முடைய நிலமை பரிதாபமாக இருக்கும் நம்மால் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது. உலகப்பிரகாரமான பாவசந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலமையில் பரிதாபமாயிருப்போம்.

லவோதிக்கேயா சபையாரின் கிரியைகளை கர்த்தர் அறிந்திருக்கிறார். அவர்கள் குளிருமல்ல அனலுமல்ல. கர்த்தர் அவர்களைப் பார்த்து பரிதபிக்கிறார். அவர்கள் குளிராயா வது அனலாயா வது இருந்தால் நலமாயிருக்குமென்று சொல்லுகிறார். ஆனால் அவர்களோ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா இருக்கிறார்கள் கர்த்தர் இப்படிப்பட்டவர்களை தண்டிக்கவேண்டுமென்று சித்தங் கொண்டிருக்கிறார் வெதுவெதுப்பாயிருக்கிறவர்களை கர்த்தர் அங்கீகாரம் பண்ணுவதில்லை அவர்களை தம்முடைய வாயினின்று வாந்திபண்ணிப்போடுவதாக எச்சரித்துச் சொல்லுகிறார்.

வெதுவெதுப்பாயிருக்கிற தண்ணீர் நம்முடைய வயிற்றுக்கு ஒத்துவராது இப்படிப்பட்ட தண்ணீரினால் வயிற்றில் ஏதாவது பிரச்சனை உண்டாகும் பிரச்சனை பெரிதாகும் போது வாந்திவரும் ஒரு சில உபதேசியார்கள் குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா இருப்பார்கள் கர்த்தர் இப்படிப்பட்வர்களைச் சகித்துக் கொள்ள மாட்டார் இவர்களை நீக்கிப்போடுவார்.

லவோதிக்கேயா சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள் (வெளி 3:15)
2. குளிருமல்ல அனலுமல்ல (வெளி 3:15)
3. குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிற நிலைமை (வெளி 3:16)
4. பெருமையும், சுய திருப்தியும்  (வெளி 3:17)
5. உண்மையான நிலைமையை அறியாமலிருப்பது. (வெளி 3:17)

இவர்கள் ஆவிக்குரிய ரீதியாக மரித்தவர்களும் அல்ல, உற்சாகமாய் ஜீவிப்பவர்களும் அல்ல. தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் அசட்டையாகவும் கவனக்குறைவாக வும் வித்தியாசமாகவும் இருக்கிறவர்கள்,

சுயவஞ்சனை வெளி 3:17

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால், 
வெளிப்படுத்தின விசேஷம் 3:17

லவோதிக்கேயா சபையார் தங்களைத் தாங்களே வஞ்சிக்கிறார்கள். கர்த்தர் இவர்களைப்பற்றி நினைப்பது ஒருவிதமாக இருக்கிறது. ஆனால் இவர்கள் தங்களைப்பற்றி எண்ணிக்கொள்வது வேறுவிதமாக இருக்கிறது. இரண்டுபேருடைய எண்ணத்திலும் வித்தியாசம் இருக்கிறது கர்த்தருடைய சிந்தையே நமக்கு இருக்க வேண்டும் லவோதிக்கேயா சபையார் சுயபெருமையுள்ளவர்கள். தங்களைத் தாங்களே பெருமையாக நினைத்து, தங்களை வஞ்சித்துக் கொள்கிறார்கள்.

ஒருவேளை இவர்கள் தங்கள் சரீரத்தைக் குறித்து பெருமைப்படலாம். ஆனால் இவர்களுடைய ஆவியோ அலங்கோலமாய் பரிதாபமாக இருக்கிறது தங்கள் சரீரத்தின் தேவைகளை இவர்கள் நேர்த்தியாய்ச் சந்திக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களின்
தேவைகளை சரிவர கவனிப்பதில்லை தங்கள் ஆத்துமாக்கள் நன்றாகக் கவனிக்க படுவதாகவும் அவை ஆரோக்கியமாக இருப்பதாகவும் இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், இவர்களுடைய ஆத்துமாக்கள் கவனிப்பு இல்லாமல், வியாதி பட்டிருக்கிறது.

ஒரு சிலர் தாங்கள் பரலோகத்திற்குப் போகிறோம் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களில் அநேகர் நரகத்திற்குள் பிரவேசிப்பார்கள். இவர்களிடத்தில் கிறிஸ்துவின் சிந்தையில்லை. கிறிஸ்துவின் வார்த்தை இவர்களை வழிநடத்தவில்லை தங்கள் சுயசிந்தனைகளின்படி இவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

இவர்கள் நிர்ப்பாக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். தரித்திரராயிருக்கிறார்கள். இவர்களிடத்தில் பானம்பண்ணுவதற்கோ, புசிப்பதற்கோ , உடுத்துவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால் இவர்கள் தங்களை ஐசுவரியவான்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இவர்களுடைய ஆத்துமா ஆவிக்குரிய போஜனமில்லாமல் பசியால் வாடுகிறது. இவர்கள் ஒருவேளை தங்கள் சரீரத்திற்குப் போஜனம் கொடுக்கலாம் ஆனால் தங்கள் ஆத்துமாவுக்குப் போஜனம்கொடுக்காமல் அதைப் பட்டினி போட்டுவிடுகிறார்கள்.

இவர்களிடத்தில் ஒன்றுமேயில்லை. ஆனால் இவர்கள் தங்களை திரவியசம்பன்னர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். இவர்கள் மெய்யாகவே நீர் பாக்கியமுள்ளவர்கள் பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரித்திரருமாகயிருக்கிறார்கள் இவர்கள் தங்களுடைய உண்மை ஆனால் நிலையை அறியாமல் தங்களை ஐசுவரியவான்கள் என்றும் திரவியசம்பன்னர் என்றும், தங்களுக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

இவர்கள் குருடராயிருக்கிறார்கள். தங்களுடைய உண்மையான நிலமையை இவர்களால் காணமுடியவில்லை. தாங்கள் போகும் பாதையும் இவர்களுக்குத் தெரியாது தங்களைத் தாங்களே இவர்களால் பார்க்கவும் முடியாது. ஆனாலும் தங்களால் பார்க்க முடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இவர்களால் கிறிஸ்துவைப் பார்க்க முடியாது. தேவனைப் பார்க்க முடியாது. ஆனாலும் தங்களால் தேவனையும் கிறிஸ்துவையும் பார்க்க முடியுமென்று நினைக்கிறார்கள்.

இவர்கள் நிர்வாணிகளாயிருக்கிறார்கள் இவர்களிடத்தில் நீதியின் வஸ்திரம் மோ பரிசுத்தத்தின் வஸ்திரமோ இல்லை. ஆனாலும் தங்களுடைய நிர்வாணத்தை இவர்களால் பார்க்க முடியவில்லை . தங்களைத் தாங்களே முடியாத குருடராயிருக்கிறார்கள். ஆனாலும்

தங்களைப்பற்றிச் சொல்லும்போது, தங்களுக்கு ஒரு குறைவுமில்லை என்று சொல்லுகிறார்கள்.

லவோதிக்கேயா சபையார் தங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் காரியங்கள்

1. நான் ஐசுவரியவான்.
2. நான் திரவியசம்பன்னன்
3. எனக்கு ஒரு குறைவுமில்லை

லவோதிக்கேயா சபையைப் பற்றி கிறிஸ்து கணித்துக்கூறும் காரியங்கள்

1. குளிருமல்ல அனலுமல்ல (வெளி 3:15).
2. குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிற நிலைமை (வெளி 3:16)
3. நிர்ப்பாக்கியமுள்ளவன்
4. பரிதபிக்கப்படத்தக்கவன்
5. தரித்திரன்
6. குருடன்
7. நிர்வானி

ஆலோசனை சொல்லுகிறேன் வெளி 3:18

 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:18

லவோதிக்கேயா சபையார் தங்களைத் தாங்களை வஞ்சித்துக் கொள்கிறார்கள் தங்களைப்பற்றி எப்படி எண்ணவேண்டுமோ
அப்படி எண்ணாமல், தங்களுடைய உண்மை நிலமைக்கு மிஞ்சி எண்ணுகிறார்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட பாவிகளுக்கு நல்ல ஆலோசனைகளைத் தருகிறார். இயேசுகிறிஸ்துவின் நல்ல ஆலோசனைகளை இவர்கள் புறக்கணித்து ஒதுக்கிவிட்டாலும், கர்த்தர் இவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்

லவோதிக்கேயா சபையார் மெய்யாகவே தரித்திரராயிருக்கிறார்கள். கர்த்தரோ அவர்களை ஐசுவரியவான்களாக்க வேண்டும் என்று விரும்புகிறார் விரும்புகிறார். அவர்கள் கர்த்தரிடமிருந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக் கொள்ள வேண்டும் அப்போதுதான்
இவர்கள் ஐசுவரியவான்களாக முடியும். மெய்யான ஐசுவரியம் எது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அந்த ஐசுவரியத்தை எப்படி பெற்றுக்கொள்வது அதை எப்படி தங்களிடத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்

கர்த்தரிடமிருந்து வருகிற ஐசுவரியமே மெய்யான ஐசுவரியம். கர்த்தர் தரும் ஐகவரியம் மாத்திரமே நிலைத்து நிற்கும். இவர்கள் கர்த்தரிடத்திலிருந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை கிரயத்திற்கு வழங்க வேண்டும் இது அவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட மாட்டாது. கிரயம் செலுத்தி வாங்க வேண்டும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதும், நம்முடைய சிலுவையை சுமந்துகொண்டு அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் நாம் செலுத்த வேண்டிய கிரயம்,

நமக்கு எல்லாம் இருக்கிறது என்று நினைக்கக்கூடாது. நம்மிடத்தில் ஒன்றும் இல்லாதபோதும், நம்மிடத்தில் எல்லாம் பரிபூரணமாயிருக்கிறது என்று சொல்லி நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளக்கூடாது கர்த்தருடைய சமுகத்தில் பெருமையோடு வரக்கூடாது. நம்மை வெறுமைப்படுத்தி மனத்தாழ்மையோடு அவருடைய சமுகத்திற்கு வர வேண்டும் நாம் தரித்திரர் என்றும், நம்மிடத்தில் ஒன்றுமில்லையென்றும் கர்த்தரிடத்தில் பயபக்தியோடு மனத்தாழ்மையோடும் அறிக்கை பண்ண வேண்டும் அப்போது கர்த்தர் நமக்கு மறைவான பொக்கிஷங்களை கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். தம்முடைய ஐசுவரியத்தினால் நம்மை நிரப்புவார்.

லவோதிக்கேயா சபையார் நிர்வாணிகளாயிருக்கிறார்கள். அவர்களுடைய நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றக்கூடாது என்று கர்த்தர் சித்தமுள்ளவராயிருக்கிற ஆர் அவர்களுக்கு உடுத்திக்கொள்வதற்கு வஸ்திரங்கள் தேவை அதை அவர்கள் கர்த்தரிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் தங்களுடைய பழைய கந்தலான வஸ்திரங்களையெல்லாம் தங்களைவிட்டு விட்டு கழற்றிப் போட்டு விட வேண்டும் கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்திருக்கிற வெண்மையான வஸ்திரத்தைத் தரித்து கொள்ள வேண்டும் வெண் வஸ்திரம் பரிசுத்தமான வஸ்திரம்

லவோதிக்கேயா சபையார் குருடராயிருக்கிறார்கள். அவர்கள் பார்வையடையவேண்டுமென்று கர்த்த ர் விரும்புகிறார். அவர்கள் பார்வையடையும்படிக்கு தங்கள் கண்களுக்கு கலிக்கம் போட் வேண்டும் என்று கர்த்தர் ஆலோசனை சொல்லுகிறார். தங்களுடைய சுயஞானத்தையும், சுய அறிவையும் அவர்கள் சார்ந்திருக்க கூடாது கர்த்தருடைய வார்த்தையும், கர்த்தருடைய ஆவியான வரும் நம்மை ஆளுகை செய்ய வேண்டும் அப்போதுதான் நம்முடைய கண்கள் திறக்கப்படும்.

லவோதிக்கேயா சபையாருக்குச் சொல்லப்படும் ஆலோசனைகள்

1. நெருப்பிலே புடமிடப்பட்ட பெண்ணை என்னிடத்திலே வாங்கிக்கொள்.  (வெளி 3:18)
2. வெண் வஸ்திரங்களை என்னிடத்திலே வாங்கிக்கொள் (வெளி 3:18)
3. உன் கண்களுக்குக் கலிக்கம்போடு
4. உன் ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ள ஜாக்கிரதையாய் இரு (வெளி 3:19)
5. மனந்திரும்பு. (வெளி 3:19; வெளி 2:5,16; வெளி 3:3).

தேவனுடைய மீட்பின் வார்த்தையும், நிபந்தனையும்

"என்னிடத்தில் வாங்கிக்கொள்" என்பது ஒரு வணிக வாக்கியம் தேவனுடைய நிபந்தனைகளுக்குட்பட்டு, நாம் அவரோடு வணிகம் செய்ய வேண்டும் மனுஷன் பாவத்திற்கும், சாத்தானுக்கும் தன்னை அடிமையாக விற்று விட்டான் மனுஷனை மீட்பதற்கான முழுக்கிரயத்தையும் தேவன் செலுத்தித் தீர்த்துவிட்டார். ஆகையினால் தேவனுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜீவிக்க வேண்டியது மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கும் கடமை இருக்கிறது, விசுவாசம், மனந்திரும்புதல், தேவனை ஆராதித்தல் ஆகிய காரியங்களை மனுஷன் கைக்கொள்ள வேண்டும். "என்னிடத்தில் வாங்கிக் கொள் என்னும் வாக்கியத்தினால் மனுஷன் தேவனிடத்தில் பொன், பொருள் ஆகியவற்றைக் கொடுத்து அவரிடமிருந்து எதையாவது வாங்கிக்கொள்ளலாம் என்பது பொருளல்ல. தன்னுடைய பாவங்களிலிருந்து மனந்திருந்தி, தேவனிடத்தில் விசுவாசத்தோடு வரும்போது தன்னுடைய இரட்சிப்பை தேவனிடத்திலிருந்து இலவசமாக வாங்கிக்
கொள்ளலாம். கிறிஸ்துவிற்காக பாடுகள் அனுபவிக்கும் கிரயம் செலுத்த வேண்டியதிருந்தால் அதை விசுவாசிகள் செலுத்த முன் வரவேண்டும்

வாசற்படியிலே தட்டுகிறேன் வெளி 3: 19,20

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. 
வெளிப்படுத்தின விசேஷம் 3:19

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:20

நாம் பாவிகளாகயிருந்தாலும், கர்த்தர் நம்மீது கிருபையாயிருக்கிறார். நாம் மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, கர்த்தர் நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறார். கர்த்தர் நம்மை நேசிக்கிறார். ஆகையால்தான் அவர் நம்மை கடிந்துகொண்டு சிட்சிக்கிறார். நம்முடைய ஆத்துமா அழிந்து போகக் கூடாது
என்று கர்த்தர் கரிசனையோடிருக்கிறார். கர்த்தர் நம்மைக் கடிந்துகொள்ளும்போது, நம்முடைய நன்மைக்காகவே அவர் நம்மைக்
கடிந்துகொள்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

கர்த்தருடைய கடிந்துகொள்ளும் வார்த்தைகள் நம்முடைய ஆத்துமாவைக் குணப்படுத்துகிற ஒளஷதமாயிருக்கிறது.
சத்துரு புன்சிரிப்போடு வஞ்சக வார்த்தைகளைப் பேசுவதைவிட, நம்முடைய சிநேகிதர் கோபமுகத்தோடு நம்மைக் கடிந்துகொள்வது நமக்கு நல்லது. கர்த்தருடைய சிட்சிக்கும் வார்த்தைகளை நாம் அங்கீகரிக்கும் போது நம்முடைய ஆத்துமாக்களுக்கு நன்மை உண்டாகும்
ஆகையினால் கர்த்தருடைய கடிந்து கொள்ளும் வார்த்தையை நாம் ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும் மனந்திரும்ப வேண்டும்

கர்த்தர் நமக்கு அருகாமையில் வந்து நிற்கிறார். தம்முடைய வார்த்தையினாலும் ஆவியினாலும் கிறிஸ்துவானவர் பாவிகளுடைய இருதயத்தின் கதவுக்கு அருகாமையில் வந்திருக்கிறார். கர்த்தருக்கு விரோதமாக பாவிகளின் இருதயக்கதவு அடைக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தரோ பாவிகளின் இருதயத்தில் பிரவேசிக்க விரும்புகிறார் மனுஷருடைய இயல்பான சுபாவம் கிறிஸ்துவுக்கு விரோதமாகத் திரும்பியிருக்கிறது தமக்கு விரோதமாக கதவு அடைக்கப்பட்டிருப்பதை பார்த்தவுடன், கர்த்தர் அந்த இடத்தைவிட்டு கோபத்தோடு திரும்பிப் போய் விடுவதில்லை அவர் கிருபையுள்ளவர். நம்முடைய கதவை நாம் திறக்கவேண்டுமென்று அவர் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாசற்படியில் நின்று நம்முடைய இருதயத்தின் கதவைத் தட்டுகிறார். நாம் அவருடைய சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், கர்த்தர் நமக்குள் பிரவேசிப்பார். அவர் நம்மோடேகூட போஜனம்பண்ணுவார். நாமும் அவரோடுகூட போஜனம்பண்ணுவோம். நம்முடைய இருதயத்தில் கர்த்தருக்கு இடங்கொடுக்கும்போது அவர் நம்மை சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பி ஆசீர்வதிப்பார். உன்னதமான ஆசீர்வாதங்களை நமக்குக் கொடுப்பார்.

இயேசு கிறிஸ்து மனுஷரை அழைக்கும் அமைப்பின் அம்சங்கள்

1. வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்
2. ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்.
3. அவனோடே போஜனம்பண்ணுவேன்

இயேசு கிறிஸ்துவினுடைய அமைப்பின் நிபந்தனைகள்

1. ஒருவன் என் சத்தத்தைக் கேட்டால்,
2. ஒருவன் கதவைத் திறந்தால்,
3. ஒருவன் என்னோடே போஜனம் பண்ண விரும்பினால்.

என்னுடைய சிங்காசனம் வெளி 3: 21,22

 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:21

 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்  வெளிப்படுத்தின விசேஷம் 3:22

கர்த்தர் நம்மை கடிந்துகொண்டு சிட்சிக்கும்போது, நாம் ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பவேண்டும். கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் நாம் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் கர்த்தருடைய ஆலோசனைகளுக்கும், சிட்சிக்கிற வார்த்தைகளுக்கும் நாம் கீழ்ப்படியும்போது நமக்கு - ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அதிகமாய்க் கிடைக்கும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் புதுப்பிக்கப்படும். நமக்குள் புதிய உற்சாகமும், தெம்பும் பெலனும் உண்டாகும். கர்த்தருடைய கிருபையினால் நாம் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவோம். சத்துருவை ஜெயிப்போம்

ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மிகப்பெரிய ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணுகிறார். ஜெயங்கொள்கிறவர்கள், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய சிங்காசனத்தில் அவரோடுகூட  உட்காருவார்கள் இயேசு கிறிஸ்து ஜெயங்கொண்டு தம்முடைய பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடுகூட உட்கார்ந்திருக்கிறார். அதுபோலவே ஜெயங்கொள்கிற விசுவாசிகள்
இயேசு கிறிஸ்துவின் கூட அவருடைய சிங்காசனத்தில் உட்காருவார்கள்.

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியிலிருந்தபோது அவருக்கு அநேக பாடுகளும் சோதனைகளும் உண்டாயிற்று கிறிஸ்துவானவர் அவையெல்லாவற்றிலும் வெற்றி சிறந்தார். கர்த்தர் நமக்கு தம்முடைய சாயலைக் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவின்
சாலை உடையவர்களாகிய நாம், கிறிஸ்துவானவர் ஜெயங்கொண்டதுபோல, நாமும் ஜெயங்கொள்ளவேண்டும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சத்துருவை ஜெயிக்கவேண்டும்

சோதனைகளில் நாம் கிறிஸ்துவுக்கு அப்பா இருக்கும் போது அவருடைய மகிமையிலும் அவருக்கு ஒப்பாயிருப்போம். கிறிஸ்துவோடுகூட பாடுகளை அநுபவிக்கிறவர்கள் அவரோடுகூட மகிமையிலும் பங்குபெறுவார்கள். நம்முடைய சுயமுயற்சியினால் இயேசுகிறிஸ்துவினுடைய
சிங்காசனத்தில் நம்மால் உட்கார முடியாது. தம்மோடுகூட தம்முடைய சிங்காசனத்தில் உட்கு எாருவதற்கு கிறிஸ்துவான வரே நமக்கு அருள் செய்கிறார்

மற்ற சபைகளுக்கு சொன்ன ஆலோசனைகளைப்போல, லவோதிக்கேயா சபைக்கு சொல்லப்பட்டிருக்கிற ஆவிக்குரிய ஆலோசனைகள் எல்லா சபைகளுக்கும் பொதுவானவை. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று எழுது என்று மற்ற சபைகளுக்குச் சொன்னதுபோல லவோதிக்கேயா சபையினுடைய தூதனுக்கும் சொல்லுகிறார். இத்துடன் கிறிஸ்துவானவர் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு சொல்லுகிற செய்தி நிறைவு பெறுகிறது

ஜெயங்கொள்ளுகிறவனுக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்

1. ஜீவவிருட்சம். வெளி 2:7)
2. ஜீவகிரீடம் (வெளி 2:10; வெளி 3:11)
3. இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை . (வெளி 2:11; வெளி 20:14)
4. மறைவான மன்னா (வெளி 2:17)
5. வெண்மையான குறிக்கல்லும், புதிய நாமமும். (வெளி 2:17)
6. சபை எடுத்துக் கொள்ளப்படும்போது எடுத்துக்கொள்ளப்படுதல் (வெளி 2:25)
7. ஜாதிகளின்மேல் அதிகாரம் (வெளி 2:26-27)
8. கலக்காரர்களை முழுமையாக நொறுக்கிப் போடுதல், (வெளி 2:27)
9. விடிவெள்ளி நட்சத்திரம். (வெளி 2:28)
10. -வெண் வஸ்திரம் தரித்து கிறிஸ்துவோடே கூட நடப்பான் (வெளி 3: 4-5)
11. ஜீவபுஸ்தகத்தில் அவனுடைய நாமம் நித்தியமாக இருக்கும் வெளி 3:5; வெளி 22:18-19)
12. பிதாவிற்கு முன்பாக அவனுடைய நாமத்தை கிறிஸ்து அறிக்கை பண்ணுவார். (வெளி 3:5)
13. தேவனுடைய ஆலயத்தில் தூண் இருப்பான் (வெளி 3:12)
14. தேவனோடு நித்திய காலமாகத் தங்கியிருப்பான். God) (வெளி 3:12)
15. தேவனுடைய நாமம் அவன்மீது எழுதப்படும். (வெளி 3:12)
16. புதிய எருசலேமின் நாமம் அவன்மீது எழுதப்படும். (வெளி 3:12)
17. கிறிஸ்துவின் புதிய நாமம் அவன்மீது எழுதப்படும் வெளி 3:12)
18. கிறிஸ்துவினுடைய சிங்காசனத்தில் அவரோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்யப்படும். (வெளி 3:21)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.