பிலதெல்பியா சபை வெளி 3:7-13

பிலதெல்பியா சபை வெளி 3:7-13

_Revelation Whatsapp group post :22_

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது, 
வெளிப்படுத்தின விசேஷம் 3:7

பிலதெல்பியா என்னும் பெயருக்கு சகோதர சிநேகம் என்று பொருள் இது இந்தப் பட்டணத்தின் பழங்காலத்துப் பெயர். இந்தப் பட்டினத்தார் அன்பிலும், சகோதர சிநேகத்திலும் சிறந்து விளங்கினார்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் அன்புகூர்ந்தார்கள். தங்களுடைய உள்ளத்தில் உள்ள அன்பை கிரியைகளினாலும் வெளிப்படுத்திக் காண்பித்தார்கள். விசுவாசிகள் அன்பு உள்ளவர்களாக
இருக்க வேண்டும். அன்பின் ஆவி நம்மிடத்தில் இல்லையென்றால், நம்முடைய ஜீவியத்தில் ஆவியின் கனி வெளிப்படாது.

கர்த்தர் இந்த சபையில் ஒரு குற்றமும்
காணவில்லை. இவர்கள் கர்த்தருடைய
நாமத்தை மறுதலிக்க வில்லை ,
கிறிஸ்துவானவர் இந்த சபைக்கு தம்முடைய
செய்தியைச் சொல்லும் போது தம்மைப்பற்றி
பரிசுத்தமுள்ள வரும், சாத்தியமுள்ள வரும்,
தாவீதின் திறவுகோலை உடையவரும்,
ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு
பூட்டுகிறவருமாயிருக்கிறவர்" என்று
தம்மைப்பற்றிச் சொல்லுகிறார் இது
கிறிஸ்துவின் சுபாவம் கர்த்தர்
பரிசுத்தமுள்ளவன். அவர் சத்தியமுள்ளவர்
பரிசுத்தம் கர்த்தருடைய சுபாவம்.
ஆகையினால் அவர் தம்முடைய
வார்த்தைகளில் - சத்தியமுள்ள வராகவே
இருக்கிறார். பரிசுத்தமுள்ள தேவனால்
பொய்சொல்ல முடியாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடம் ஒரு
திறவுகோல் உள்ளது. இது தாவீதின் திறவுகோல் என் று அழைக்கப்படுகிறது
கர்த்தருடைய ராஜ்யத்தின் திறவுகோல்
அவனிடத்தில் உள்ளது. கர்த்தர் தம்முடைய
திறவுகோலினால் திறக்கிறார். தம்முடைய
சபைகளுக்கு ஊழியவாய்ப்புக்களைத்
திறந்துகொடுக்கிறார். அனுகூலமான
வாசல்களைத் திறந்துகொடுக்கிறார்.
பிரவேசிக்கும் கதவுகளைத் திறக்கிறார்
மனுஷருடைய இருதயங்களைத் திறக்கிறார்
சபையின் கதவுகளைத் திறந்து
ஆத்துமாக்களை உள்ளே அழைத்து
வருகிறார். கர்த்தர் திறக்கும் போது. அவர்
திறந்ததை ஒருவராலும் பூட்ட முடியாது.

கர்த்தர் கதவைத் திறப்பது போல
தம்முடைய திறவுகோலினால் அவர் கதவைப் பூட்டவும் செய்கிறார். கர்த்தருக்குச் சித்தமான வேளையில் அவர் வாய்ப்புக்கள்
வாசல்களை அடைத்து போடுகிறார்.
பாவிகளுக்கும் துன்மார்க்கரும் விரோதமாக
பரலோகத்தின் வாசலை அடைத்துப்போடுகிறார். கர்த்தருடைய கிரியை அவருடைய சர்வவல்லமையினால் நடைபெறுகிறது. அவர் தமக்குச் சித்தமான பிரகாரம் கிரியை செய்கிறார். அவருக்கு எதிராக கிரியை செய்ய யாராலும் கூடாது. கர்த்தர் கதவைப் பூட்டும் போது, பூட்டிய
அந்தக் கதவை ஒருவராலும் திறக்க முடியாது.

பிலதெல்பியா சர்தைக்கு தென்கிழக்கில்
30 மைல் தூரத்தில் உள்ள பட்டணம்.

அறிந்திருக்கிறேன் வெளி 3:8

 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:8

கிறிஸ்துவானவர் பிலதெல்பியா சபையாருடைய கிரியைகளை அறிந்திருக்கிறார். அவர்களுக்காக தாம் செய்வதை கர்த்தர் அவர்களுக்கு
நினைவுபடுத்துகிறேன். திறந்தவாசலை
அவர்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார்.
ஒருவராலும் அந்த வாசலை பூட்ட முடியாது.
பிலதெல்பியா சபையில் கர்த்தரால்
திறக்கப்பட்ட திறந்த வாசல், திறந்ததாகவே
இருக்கும். கர்த்தர் அந்த வாசலைக்
காத்துக்கொள்கிறார். பிலதெல்பியா
சபையிலே ஒரு சில துன்மார்க்கர்
இருந்தாலும் கர்த்தர் சபையாருக்கு திறந்த
வாசலையே அவர்களுக்கு முன்பாக
வைத்திருக்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சுயாதீன விடுதலை உண்டு. நம்முடைய மாம்சத்திற்கு நாம் அடிமைகளல்ல. மாம்சம் நம்மை ஆளுகை செய்யக்கூடாது. நாமே நம்முடைய மாம்சத்தை ஆளுகை செய்ய வேண்டும். கர்த்தர் அநேக திறந்த வாசல்களை நமக்கு முன்பாக
வைத்திருக்கிறார். துன்மார்க்கர் இந்த திறந்த
வாசல்களைப் பார்த்து கர்த்தருடைய
பிள்ளைகள் மேல் பொறாமை படுகிறார்கள்.
கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு
விரோதமாக திறந்தவாசல்களை அடைத்துப்போட்டால் சத்துருக்கள்
சந்தோஷப்படுவார்கள். ஆனால் கர்த்தரோ
நமக்கு முன்பாக வைத்திருக்கிற திறந்த
வாசலை, ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு
திறந்து வைத்திருக்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகள் அவருக்கு
கோபம் உண்டாகும்படி நடந்துகொள்ளக்கூடாது கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்யக்கூடாது. நாம் கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல்,
துன்மார்க்கமாய் ஜீவித்தால், கர்த்தர் நமக்கு
முன்பாக வைத்திருந்த திறந்த வாசலைப்
பூட்டிப்போடுவார். கர்த்தர் வாசலைப்
பூட்டிவிட்டால், அந்தப் பூட்டிய வாசலை வேறு யாராலும் திறக்க முடியாது. கர்த்தருடைய கையில் இருப்பது தாவீதின் திறவுகோல், இந்த வார்த்தை சர்வவல்லமையுள்ள அதிகாரத்தை குறிக்கும் வார்த்தை யாகும். கர்த்தருக்கு அதிகாரமுள்ள
ஆளுகையுள்ளது. கர்த்தருடைய கிரியைக்கு யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. அவருடைய சித்தத்தை யாரும் தடை பண்ண முடியாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிலதெல்பியா சபையாரை அன்பாய்ப் புகழ்ந்து பேசுகிறார். அவர்களிடத்தில் கொஞ்சம் பெலன் தான் இருக்கிறது. தேவகிருபை அவர்களிடத்தில் கொஞ்சம்தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தை
மறுதலிக்க வில்லை . அவர்களுடைய
வசனத்தைக் கைக்கொண்டார்கள். நாம்
பலவீனமாக இருந்தாலும், நம்மிடத்தில்
தேவகிருபை மெய்யாகவே இருக்குமென்றால், அந்தக் கிருபை நம்மைப் பெலப்படுத்தும்,

விசுவாசிகளிடத்தில் கொஞ்சம் கிருபை
இருக்கும்போது அது போதும் என்று
திருப்தியடைந்துவிடக்கூடாது. கிருபையில்
நாம் வளர்ச்சி பெற வேண்டும்.
தேவ கிருபை நாம் அதிகமாகப்
பெற்றுக்கொள்ள வேண்டும்
கேட்கிறவர்களுக்குக் கொடுக்கப்படும்
தம்மிடத்தில் அதிகமான கிருபைகளை
கேட்கிற தம்முடைய பிள்ளைகளுக்கு, கர்த்தர் அதிகமான கிருபைகளைக் கொடுப்பார் நம்மிடத்தில் தேவ கிருபை
பெருகியிருக்கும்போது, நாம் கர்த்தருடைய
வசனத்தைக் கொண்டு அவருடைய
சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து ஜீவிப்போம்.
அவருடைய நாமத்தை மறுதலிக்க மாட்டோம்.

பிலதெல்பியா சபை பற்றி கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள்
2. கொஞ்சம் பெலன்.
3. தேவனுடைய வசனத்தைக் கைக்
கொண்டார்கள்.
4. தேவனுடைய
மறுதலிக்கவில்லை .நாமத்தை
சாத்தானுடைய கூட்டத்தார் வெளி 3:9

வெளி 3:9. இதோ, யூதரல்லாதிருந்தும்
தங்களை யூதரென்று பொய்
சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய
கூட்டத்தாரில் சிலரை -உனக்குக்
கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன்
பாதங்களுக்கு முன்பாக வந்து
பணிந்து, நான் உன் மேல்
அன்பாயிருக்கிறதை
அறிந்து கொள்ளும்படி செய்வேன்.

கர்த்தராகிய - இயேசு கிறிஸ்து பிலதெல்பியா சபையாருக்கு ஒரு விசேஷித்த ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். சத்துருக்கள் அவர்களுடைய பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து கொள்வார்கள் பிலதெல்பியா சபையாருக்கு விரோதமாக எழும்பியவர்கள் தோற்று போவார்கள். இந்தச் சத்துருக்கள் யூதர்களால் ஆனாலும் இவர்கள் தங்களை யூதரென்று
பொய்சொல்லுகிறார்கள். கர்த்தர் இவர்களை
சாத்தானுடைய என் று கூட்டத்தார் இப்படிப்பட்ட கூட்டத்தாரில் சிலரை கர்த்தர் பிலதெல்பியா சபையாருக்குக் கொடுப்பார். சபையார் மத்தியிலே இவர்கள் பிரச்சனை  செய்யமாட்டார்கள். அவர்களுடைய பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து கொள்வார்கள்.

சாத்தானுடைய கூட்டத்தார் கர்த்தருடைய சபைக்குக் கீழ்ப்படிவார்கள். தாங்கள் யூதரல்லாததிருந்தும், தங்களை யூதரென்று பொய்சொன்னது தப்பிதமானது என்று உணர்ந்து அறிக்கை செய்வார்கள். அவர்களுக்குள்ளே மிகப்பெரிய மாற்றமுண்டாயிருக்கும். தேவனுடைய வல்லமையினால் இந்த மாற்றம் உண்டாயிற்று கர்த்தர் சத்துருக்களுடைய இருதயங்களிலும் மாற்றங்களை | உண்டு பண்ணுகிறவர். தம்முடைய சபைக்கு அவர் விசேஷித்த கிருபைகளைக் கொடுக்கிறார். தம்முடைய சபையார் மீது அன்பாய் இருக்கிறார்.

சாத்தானுடைய கூட்டத்தார் இதையெல்லாம்
பார்ப்பார்கள் கர்த்தர் தம்முடைய
பிள்ளைகள் மேல் அன்பாயிருப்பதை அறிந்துகொள்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக தங்களால் யுத்தம் பண்ண முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, சபையாருடைய பாதங்களுக்கு முன்பாக வந்து அவர்களைப் பணிந்து கொள்வார்கள்.

கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் மேல்
அன்பாயிருக்கிறதை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். சத்துருக்கள்
இதை அறியும்போது நாம் இதை
அறியாதவர்கள் இருக்கக்கூடாது. கர்த்தருக்கும் அவருடைய பரிசுத்தவான்களுக்கும் விரோதமாக கிரியை நடப்பித்த சத்துருக்கள், கர்த்தருடைய
விசேஷித்த அன்பை அறிந்துகொள்கிறார்கள்,
அவர்கள் அறிந்துகொள்ளும் விதத்தில்
கர்த்தர் தம்முடைய விசேஷித்த அன்பை
வெளிப்படுத்துகிறார். இந்த அன்பு அவருடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே உரியது.

சத்துருக்கள் இதைப்பார்த்து மனந்திருந்துவார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு
விரோதமாய் எதிர்த்து நிற்பது. கர்த்தருக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பதற்குசமமானது
என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
தங்களுடைய பலவீனத்தையும்,
தோல்வியையும் ஒத்துக்கொள்வார்கள். சபையாருடைய பாதங்களுக்கு முன்பாக
வந்து பணிந்து கொள்வார்கள்.

நிறைவேறியுள்ள முன்னறிவிப்புக்கள்

1. பொய் சொல்லுகிற அனைவரையும்
வெளிப்படுத்துவேன். (வெளி 3:9)

2. அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக
வந்து பணியும்படி செய்வேன்.‌ 

3. நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை
அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

4. சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி
நான் உன்னைக் காப்பேன்.
(வெளி 3:10)

சீக்கிரமாய் வருகிறேன் வெளி 3:10-11

என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:10

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. 
வெளிப்படுத்தின விசேஷம் 3:11

கர்த்தராகிய - இயேசு கிறிஸ்து பிலதெல்பியா சபையாருக்கு மேலும் சில
ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகள் அவருடைய பொறுமையின் வார்த்தைகளும். இந்த உலகம் பாவத்திலும் துன்மார்க்கத்திலும் நிரம்பியிருக்கிறது பாவமான இந்த உலகத்தின் மீது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
கிறிஸ்துவின் சுவிசேஷம் அவருடைய
பொறுமையின் கனியாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

பொறுமையின் காலத்திற்குப் பின்பு
சோதனையின் காலம் வரும். சமாதானம்
காலத்தில் சுவிசேஷத்திற்குக்
கீழ்ப்படிகிறவர்கள், சோதனையான
காலத்திலும் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சோதனைக்காலத்திலும்
தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் கர்த்தர் தம்முடைய பொறுமையைக் குறித்து சொல்லிய வசனத்தை பிலதெல்பியா சபையார் காத்துக்கொண்டார்கள். இவர்களுக்கு சோதனைக்காலம் வரப்போகிறது.

இது இவர்களுக்கு மாத்திரமல்ல
கர்த்தருடைய  சோதனைக்காலம்
பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிறது.
பூமியில் குடியிருக்கிறவர்களை
சோதிக்கும்படியாக சோதனைக்காலம்
வரப்போகிறது. இந்த சோதனைக்காலத்திற்கு
பிலதெல்பியா சபை யார் தப்ப வேண்டும்,
கர்த்தருடைய கிருபையும், பாதுகாப்பும்
இருக்கும்போது விசுவாசிகள் எல்லா
சோதனைக்கும் தப்பிக்கலாம். கர்த்தரோ
வரப்போகிற சோதனைக்காலத்திற்குத்
தப்பும்படி, பிலதெல்பியா சபையாரை
காப்பதாக வாக்குபண்ணுகிறார்.

விசுவாசிகள் தங்களுக்குள்ளதைப்
பற்றிக்கொண்டிருக்க வேண்டும். நம்மிடத்தில் உள்ள நம்முடைய கிரீடத்தை ஒருவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற கிரீடம், இந்தக் கிரீடத்தை நாம் பற்றிக்கொண்டிருக்க வேண்டும். இது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற பொக்கிஷம்
அசட்டையாயிருப்போமென்றால் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்துபோவோம். விழித்திருக்காவிட்டால் நம்முடைய கிரீடத்தை சத்துரு எடுத்துக்கொள்வான். கர்த்தருடைய
பிள்ளைகள் தங்களுக்குள்ளதைப்
பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று
கர்த்தர் சொல்லுகிறார். தம்முடைய
பிள்ளைகளை சோதனைகளிலிருந்து
தப்புவிக்கவும், ஆபத்துக்களுக்கு
விடுவிக்கவும், அவர்களுடைய மெய்யான
விசுவாசத்தினிமித்தம் அவர்களுக்கு
வெகுமதிகளைக் கொடுக்கவும்,
துன்மார்க்கருக்குத் தண்டனை கொடுக்கவும்
கர்த்தர் சீக்கிரம் வர போகிறார்.
தங்களுடைய விசுவாசத்தைக்
காத்துக்கொள்கிறவர்கள் கர்த்தரிடமிருந்து
வெகுமதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்
கர்த்தரை விட்டு பின்வாங்கிப்போவார்கள்
பிறருக்குள்ள கிரீடத்தை அபகரித்துக்கொள்ள
முயற்சி செய்வார்கள். கர்த்தருடைய
பிள்ளைகள் எச்சரிப்போடிருக்கவேண்டும்.
தங்களுக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

நிறைவேற போகிற முன்னறிவிப்புக்கள்

5. சீக்கிரமாய் வருகிறேன். (வெளி 3:11;
வெளி 1:7; வெளி 19:11)

6. என் தேவனுடைய ஆலயத்தில்
உன்னைத் தூணாக்குவேன்.
(வெளி 3:12; கலா 2:9).

7. அந்த ஆலயத்திலிருந்து நீ ஒருக்காலும்
நீங்குவதில்லை . (வெளி 3:12)

8. என் தேவனுடைய நாமத்தை உன்மேல்
எழுதுவேன். (வெளி 3:12)

9. புதிய எருசலேமின் நாமத்தை உன்மேல்
எழுதுவேன். (வெளி 3:12; வெளி 21:29-10).

10. என் புதிய நாமத்தை உன்மேல்
எழுதுவேன். (வெளி 3:12)

இயேசு கிறிஸ்துவின் உபதேசத்திற்குக்
கீழ்ப்படிந்ததினால் விசுவாசிகளுக்குப்
பலபாடுகள் உண்டாயிற்று அவற்றை
அவர்கள் பொறுமையோடு சகித்துக்
கொண்டார்கள்.

சோதனைக்காலம் என்னும் வாக்கியம்
தானியேல் எழுபதாவது வாரமாகிய
வருங்கால உபத்திரவக்காலத்தை
குறிக்கவில்லை யோவானின் காலத்தில்
சபைகளுக்கு நேரிட்ட சோதனைகளையும்,
உபத்திரவங்களையும் இந்த வாக்கியம்
குறிக்கிறது.

சீக்கிரமாய் வருகிறேன் என்னும்
வாக்கியம் சபையை எடுத்துக்
கொள்வதற்காக இயேசு கிறிஸ்துவின்
வருகையை குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக அவர் தமது சபையை எடுத்துக் கொள்வதற்கு வருவார்.

கிரீடத்தைப் பெற்றிருக்கும் விசுவாசிகள்
தங்களுடைய கிரீடங்களை இழந்து போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால் விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் தேவனுக்குப் பயந்து மிகுந்த எச்சரிப்போடு ஜீவிக்க வேண்டும்.

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை, என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:12

 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. 
வெளிப்படுத்தின விசேஷம் 3:13

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிலதெல்பியா
சபைக்கு சொல்லுகிற செய்தியின்
முடிவுரையில் இந்த வாக்குத்தத்தத்தைச்
சொல்லுகிறார். ஜெயங்கொள்கிற விசுவாசிகளுக்கு கர்த்தர் இரண்டு ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாக வாக்கு பண்ணுகிறார். அவையாவன :
1. அவர்களை தேவனுடைய ஆலயத்திலே
தூணாக்குவார் 2. அவர்கள்மேல் புதிய
நாமத்தை எழுதுவார்.

ஜெயங்கொள்கிறவர்களை, கர்த்தர்
தம்முடைய ஆலயத்திலே தூணாக்குவார். இந்தத் தூண் ஆலயத்திற்கு ஆதாரமாக இருப்பதில்லை. இந்தத் தூண் ஆலயத்தை தாங்கி நிற்பதில்லை. தேவனுடைய கிருபைக்கு இந்தத் தூண் அடையாளமாயிருக்கிறது.
இது கர்த்தருடைய கிருபையின் 
நினைவுச்சின்னம் நினைவுச்சின்னத்தை
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து
யாரும் நீக்கிப்போடக்கூடாது. நினைவுச்சின்னத்தின் மேன்மையை
யாரும் அவமானப்படுத்த கூடாது.

ஆதித்திருச்சபைக் காலத்திலே
ரோமப்பேரரசார் இதுபோல பல தூண்களை
நிறுத்துவது வழக்கம். யுத்தத்தில் வெற்றி
பெற்ற படைத்தளபதிகளை கௌரவிக்கும்
விதமாக ரோமப்பேரரசு அவர்களுக்கு வெற்றி தூண்களை நிறுத்திற்று அந்தத் தூண்
ஒருவரும் அகற்றி போடக்கூடாது
வெற்றிபெற்ற படைத்தளபதிகளுக்கு இது
ஒரு நினைவுச் சின்னமாக நிறுவப்பட்டது.
இதுபோலவே கர்த்தர் ஆவிக்குரிய
ஜீவியத்திலே ஜெயங்கொள்கிறவர்களை,
தம்முடைய தேவனுடைய ஆலயத்திலே
தூணாக்குவதாக வாக்கு பண்ணுகிறார்.

அந்தத் தூணிலே கர்த்தர் விசேஷித்த
வாக்கியங்களை எழுதுகிறார். தேவனுடைய
நாமம், புதிய எருசலேமாகிய தேவனுடைய
நகரத்தின் நாமம் ஆகியவற்றை கர்த்தர்
ஜெயங்கொள்கிறவன்மேல் எழுதுவார். இந்தப் புதிய நாமங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவார். விசுவாசிகள் ஜெயங்கொண்டாலும்
அந்த ஜெயம் கர்த்தராலேயே வந்தது. கர்த்தருடைய கிருபையும், உதவியும், ஒத்தாசையும் இல்லையென்றால் நமக்கு
ஜெயமில்லை கர்த்தர் நம்மோடு

யுத்தம் பண்ண வில்லையென்றால்
- நாம் தோற்றுப்போவேன். இதை நமக்கு
உணர்த்தும் வண்ணமாக, ஜெயங்கொள்கிற
நம்மீது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
தம்முடைய புதிய நாமத்தை எழுதுகிறார்.

இந்த நிருபம் பிலதெல்பியா சபையாருக்கு விசேஷமாக எழுதப்பட்டாலும், எல்லா சபையாருக்கும் பொதுவான சத்தியம்
இதில் எழுதப்பட்டிருக்கிறது ஆகையினால்
ஆவியானவர் சபைகளுக்குச்
சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று கர்த்தர் திருவுளம் பற்றுகிறார்.

ஜெயங்கொள்ளுகிறவர்கள் முன்
எழுதப்படும் நாமங்கள்

1. பிதாவாகிய தேவனுடைய நாமம்.

2. புதிய எருசலேமாகிய தேவனுடைய
புதிய - நகரத்தின் நாமம். (வெளி 21:29)

3. கிறிஸ்துவின் புதிய நாமம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.