சர்தை வெளி 3:1-6
வெளி 3:1. சர்தை சபையின் தூதனுக்கு
நீ எழுதவேண்டியது என்னவெனில்:
தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு
நட்சத்திரங்களையும் - உடையவர்
சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை
அறிந்திருக்கிறேன், உயிருள்ள வனென்று
பெயர் கொண்டிருத்தும் செத்தவனாயிருக்கிறாய்.
அப்போஸ்தலர் யோவான் சர்தை
பட்டணத்தில் சுவிசேஷத்தை பிரசங்கம்
பண்ணினார். யோவானுடைய ஊழியத்தின்
மூலமாய் முதன் முதலாக இரட்சிக்கப்பட்டவர்கள் சர்தை
பட்டணத்தார்தான் என்று வேதபண்டிதர்கள்
சொல்லுகிறார்கள். சர்தை பட்டினத்தார் பற்றி மேலும் ஒரு செய்தி உள்ளது. கிறிஸ்துவின் உபதேசத்திற்கு சர்தை பட்டணத்தாரே முதன் முதலாக எதிர்த்து நின்றவர்கள் என்றும்
வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பற்றி சொல்லும் போது. "தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழுநட்சத்திரங்களையும்
உடையவர் என்று சொல்லுகிறார் ஏழு ஆவிகள் என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிற வார்த்தை பரிசுத்த ஆவியானவர் வல்லமையுள்ளவர் அவரிடத்தில் வெவ்வேறு விதமான வல்லமைகள் உள்ளது ஏழு என்பது
பூரணத்தைக் குறிக்கிற எண். ஏழு ஆவிகள்
என்னும் வார்த்தை பரிசுத்த ஆவியானவருடைய -சர்வவல்லமை குறிக்கிறது.
இயேசுகிறிஸ்துவிடம் தேவனுடைய
ஏழு ஆவிகள் இருக்கிறார்கள். பரிசுத்த
ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின் மீது
அளவில்லாமல் ஊற்றப்பட்டிருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவினிடத்தில்
பரிபூரணமாக வாசம் பண்ணுகிறார். சர்தை
சபையாருக்கு பரிசுத்த ஆவியானவரின்
ஊழியம் தேவைப்படுகிறது. ஆவியானவரே
அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தைப்
புதுப்பிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்து ஏழு நட்சத்திரங்களை
உடையவர். ஏழுநட்சத்திரங்களும் சபைகளின் தூதர்கள். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஊழியத்தின் மூலமாகவே கிரியை நடப்பிக்கிறார்
ஆவியானவர் இல்லாமல் ஊழியம்
கனிகொடுக்காது பரிசுத்த ஆவியில்லாமல் ஊழியத்தில் ஜீவனோ வல்லமையோ இருக்காது. -கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கரம் பரிசுத்த ஆவியானவரும் சபை களையும்
இணைக்கிறது. சபையில் ஆவியானவர்
இல்லையென்றால் அந்த சபையில் ஜீவன்
இருக்காது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
தம்முடைய ஆவியானவர் மூலமாய்,
தம்முடைய சபைகளுக்கு ஜீவனைக்
கொடுக்கிறார்.
கிறிஸ்துவானவர் சர்தை சபையின்
தூதனுக்கு சொல்லும்போது, ஆரம்பத்திலேயே அந்த சபையைக் கடிந்து கொள்கிறான். சர்தை சபையைப்போலவே லவோதிக்கேயா சபையையும் கர்த்தர் ஆரம்பத்திலேயே கடிந்துக் கொள்கிறார். கர்த்தர் கடினமான வார்த்தைகளினால்
அவர்களைக் கடிந்துக் கொள்கிறார். அவர்களிடத்தில் மாய்மாலம் இருக்கிறது
தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில்
வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் சர்தை சபை
ஆவிக்குரிய வளர்ச்சி பெற்றிருந்தது.
நற்சாட்சியுடையதாயிருந்தது. கனிதரும்
சபையாகயிருந்தது. இந்த சபையின் மூலமாய் கர்த்தருடைய ஊழியம் அதிகமாய்
நடைபெற்றது இவர்கள் மத்தியிலே
பிரிவினை எதுவும் காணப்படவில்லை
எல்லாமே கிராமமும் ஒழுக்கம் நடைபெற்றது
மனுஷருடைய பார்வையில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.
கர்த்தரும் சர்தை சபையைப்
பார்க்கிறார். கர்த்தருடைய பார்வையும்
மனுஷருடைய பார்வையும் ஒன்றுபோல்
இருப்பதில்லை. மனுஷன் முகத்தைப்
பார்க்கிறான். கர்த்தரோ மனுஷருடைய
இருதயத்தைப் பார்க்கிறார். கர்த்தர் சர்தை
சபையின் கிரியைகளை அறிந்திருக்கிறார்.
மனுஷர் மத்தியிலே சர்தை சபை உயிருள்ளது என்று பெயர் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த சபை செத்துப்போயிருப்பதை கர்த்தர்
பார்க்கிறார். இந்தச் சபைக்கு மனுஷர்
மத்தியிலே நற்பெயரும், பெயரும் புகழும்
இருக்கிறது. ஆனால் உண்மையில் அந்த
நற்பெயருக்கு சர்தை சபை பாத்திரமா இருக்கவில்லை.
சர்தை சபையார் பக்தியுள்ளவர்களென்று வெளிவேஷம் போடுகிறார்கள். ஆனால் சபைக்குள்ளேயோ தேவனுடைய வல்லமையில்லை. சர்தை சபை உயிருள்ள சபையென்று - பெயர் பெற்றிருக்கிறது. ஆனால் இது செத்துப்போன சபையில் இருக்கிறது. இந்தச் சபையில் ஜீவனில்லை. ஜீவனிருந்தால் அசைவு இருக்கும் சர்தை சபையில் அசைவு எதுவுமில்லை. சர்தை சபை இன்னும் முழுவதுமாக செத்து போக வில்லை. கொஞ்சம் உயிர் இருக்கிறது. செத்துப்போக ஆயத்தமாக இருக்கிறது. கர்த்தர் சர்தை சபையின் உண்மையான
நிலமையைப் பார்த்து அவர்களை எச்சரிக்கிறார்.
சர்தை சிமிர்னாவிற்கு கிழக்கே 40 மைல் தூரத்திலுள்ள பட்டணம். பழங்கால
லீதியாவின் தலைநகரம்.
சர்தை சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்
1. கிரியைகள் (வெளி 3:1)
2. அவர்கள் உயிருள்ள வர்களென்று
பெயர்கொண்டிருந்தும் செத்தவர்கள் இருக்கிறார்கள் (வெளி 3:1
3. அவர்களுடைய கிரியைகள் தேவனுக்கு
முன் நிறைவுள்ளவைகளாக இல்லை.
(வெளி 3:2)
4. தங்கள் வஸ்திரங்களை அச்சிப்படுத்தாத
சில பேர் மட்டுமே சர்தை சபையில் இருந்தார்கள் (வெளி 3:4)
சர்தை சபையாருக்குக் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்
1. நீ விழித்துக்கொண்டிரு. (வெளி 3:2)
2. சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை
ஸ்திரப்படுத்தும்.
3. நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை
நினைவுகூரு. (வெளி 3:3)
4. அதை கைக்கொள். (வெளி 3:3; எபி 3:6)
5. மனந்திரும்பு (வெளி - 3:3,19;
வெளி 2: 5,16,21,22)
விழி, ஸ்திரபடுத்து, மனந்திரும்பு
வெளி 3:2,3
இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றியசாட்சியைக்குறித்தும், தான் கண்டயாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:2
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 1:3
சர்தை சபையார் உயிருள்ளவர்கள் என்று பெயர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ செத்தவர்களைப்போல இருக்கிறார்கள். அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கிறிஸ்துவானவர் அவர்களுக்கு நல் ஆலோசனை சொல்லுகிறார் நாம் எப்போதெல்லாம்
விழித்துக்கொள்ளாமலிருக்கிறோமோ
அப்பொதெல்லாம் நம்முடைய ஸ்தானத்தை
இழந்துபோகிறோம். விழித்துக்கொள்ளாத
வேளையிலே தூங்குகிறவர்களாகக்
காணப்படுவோம். தூங்கும் நிலமையிலிருந்து
விழித்துக்கொள்ளும் நிலமைக்கு நாம்
திரும்பவேண்டும். ஆபத்துக்கு
விரோதமாகவும், சாத்தானுக்கு விரோதமாகவும் நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாயிருக்கவேண்டும்.
சர்தை - சபையாரிடத்தில் சாகிறதற்குகேதுவானவைகள் ஏராளமாய்
உள்ளன இவற்றினால் இவர்கள்
செத்தவர்களைப்போல இருக்கிறார்கள்.
இவர்களிடத்தில் கொஞ்சம் உயிர் இருக்கிறது அந்த உயிரை இவர்கள் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். சாகிறதற்கேதுவாய் இருக்கிறவர்கள் என்பது மரணத்திற்கேதுவான குணங்களைக்
குறிக்கும் என்று ஒரு சிலர் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். இந்த வாக்கியம் மரணத்திற்கேதுவான வர்களையும்
குறிக்கும் என்று வேறு சிலர் வியாக்கியானம்
சொல்லுகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்மைச்
சுற்றிலும் சாவுக்கேதுவாயிருக்கிறவைகள்
அதிகமாயிருக்கும்போது நம்முடைய
ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்மால்
உற்சாகமா இருக்க முடியாது நம்மைச்
சுற்றிலும் ஆவிக்குரிய சோர்வும், மந்த
நிலமையும் காணப்படும் போது, நாம்
மாத்திரம் ஆவிக்குரிய காரியங்களில்
சுறுசுறுப்பாயிருக்க முடியாது. ஆவிக்குரிய
ரீதியாக செத்துப்போனவர்கள் நடுவிலே
நாம் ஜீவிக்கும் போது நம்முடைய ஆவிக்குரிய ஜீவனையும், தேவனுடைய வல்லமையையும் நமக்குள்ளே காத்துக்கொள்வது மிகவும் கடினம்.
சர்தை சபையின் விசுவாசிகள்
சாகிறதற்கேதுவாயிருக்கிறவர்கள் மத்தியிலே ஜீவிக்கிறார்கள். இதனால் இவர்களுடைய கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாயில்லை. அவர்களிடத்தில் குறை காணப்படுகிறது. இவர்கள் உயிருள்ளவர்கள் என்று பெயர்
கொண்டிருக்கிறார்கள். ஆனால்
செத்தவர்களாயிருக்கிறார்கள். ஒரு கடலை
நெற்றியில், வெளியே தோலும் உள்ளே
கடலைப் பருப்பும் இருக்கும்.இவர்களுக்கோ
வெளித்தோல் மாத்திரமே இருக்கிறது.
உள்ளே கடலைப் பருப்பு இல்லை. ஓடு
இருக்கிறது விதை இல்லை. உள்ளே
ஒன்றுமில்லாமல் வெறுமையாய் இருக்கிறது.
வெளிப் பார்வைக்கு அழகாக இருக்கிறார்கள்.
சர்தை சபையாரின் உள்ளான
ஆவிக்குரிய ஜீவியம் ஒன்றுமில்லாமல்
சூனியம் இருக்கிறது. அவர்களுடைய
இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர்
வாசம் பண்ணவில்லை. ஆவியானவர்
இல்லையென்றால் அவர்களுக்கு ஜீவனும்
இல்லை. அவர்களுக்கு தேவகிருபைகளும்
இல்லை. ஆவிக்குரிய வரங்களும் இல்லை.
இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நீண்ட நாட்களாய் நிலைத்து நிற்க்கமுடியாது. சீக்கிரமாய்
மரித்துப் போவார்கள்.
சர்தை சபையாருக்கு சுவிசேஷம்
அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்
இவர்களோ | சுவிசேஷ வார்த்தைகளை
கேட்டும் மறந்து விட்டார்கள். இவர்கள்
கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையைப்
நினைவுகூர வேண்டும், சுவிசேஷத்தின்
வார்த்தைகளைக் கைக்கொண்டு
மனந்திரும்ப வேண்டும். சுவிசேஷத்தை
இவர்கள் முதன் முதலில் கேட்ட போது
தேவனுடைய கிருபை இவர்களுக்குள்
பிரவேசித்தது. ஆனால் இவர்களோ
தாங்கள் கேட்ட சுவிசேஷத்தை சீக்கிரத்தில்
மறந்து போனார்கள். - சுவிசேஷத்தை
மறந்துபோன போது இவர்களிடத்திலிருந்த
தேவகிருபையும் இவர்களை விட்டு
கடந்துபோயிற்று. ஆகையினால் சர்தை
சபையார் தாங்கள் கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர வேண்டும். தாங்கள் கேட்ட சுவிசேஷ வார்த்தைகளைக் கைக்கொண்டு
மனந்திரும்பவேண்டும் அவர்கள்
விழித்திருக்க வேண்டும்
சர்தை சபையார் தங்கள் ஆவிக்குரிய
ஜீவியத்திலே விழித்திருக்க வில்லையென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்கள் மேல் திடீரென்று திருடனைப்போல வருவார். அவர்
தங்கள் மேல் வரும் வேலையை அவர்கள்
அறியாதிருப்பார்கள். கர்த்தருடைய வார்த்தை சர்தை சபையாருக்கு எச்சரிப்பாகச் சொல்லப்படுகிறது.
நாம் கிறிஸ்துவைப்பற்றி கொண்டு,
அவருடைய கிருபையில்
நிலைத்திருக்கும்போது, அவருடைய வருகை நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
நாம் அவருடைய வருகையை ஆவலாய்
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பேன்,
நம்முடைய விசுவாசத்தில் நாம்
கிறிஸ்துவை பற்றி கொள்ளாமல், அவருடைய கிருபையை இழந்திருப்போமென்றால்,
அவருடைய இரண்டாம் வருகை நமக்கு
ஆச்சரியமாக இருக்கும். நமக்கு ஆவிக்குரிய பாதுகாப்பு இருக்காது. அவிசுவாசிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை திகைப்பாகவும்,
பயங்கரமானதாகவும் இருக்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில்
அவருடைய கிருபை வெளிப்படாது அவருடைய நீதிமாத்திரமே வெளிப்படும் அவர் நீதியாய் சகல ஜனங்களையும் நியாயந்தீர்ப்பார்.
சர்தை சபையார் தங்கள் ஆவிக்குரிய
தூக்க நிலையிலிருந்து விழித்துக்கொண்டு,
தங்களை - ஸ்திரப்படுத்தி வேண்டும்,
மனந்திரும்ப வேண்டும். இல்லை என்றால்
அவிசுவாசிகளுக்கு வரும் நியாயத்தீர்ப்பைப்போல, சர்தை சபையாருக்கும் நீதியான நியாயத்தீர்ப்பு வரும்.
சர்தை சபையாருக்குக்
கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்
1. நீ விழித்துக்கொண்டிரு. (வெளி 3:2)
2. சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை
ஸ்திரப்படுத்தும்.
3. நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை
நினைவுகூரு. வெளி 3:3)
4. அதைக் கைக்கொள். (வெளி 3:3
எபி 3:6
5. மனந்திரும்பு (வெளி - 3:3,19; வெளி 2: 5,16,21,22)
திருடனைப்போல் என்னும் வாக்கியம்
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறிக்கவில்லை சர்தை சபையார் மனந்திரும்ப வில்லையென்றால் அவர்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு திடீரென்று அனுப்பப்படும் என்று இந்த வாக்கியம் பொருள் தருகிறது. கர்த்தருடைய
நாளும், "இரவிலே திருடன் வருகிற விதமாய்" வரும் என்று கூறப்பட்டிருக்கிறது
தெச 5:2-4; 2 பேதுரு 3:10; வெளி 3:3;
வெளி 16:15 ஆகிய வசனங்களில்
கர்த்தருடைய நாள் எப்படி வருமென்று
இவ்வாறு விளக்கப் பட்டிருக்கிறது. வெளி 3:3 ஆவது வசனத்தில் சர்தை சபையின் நியாயத் தீர்ப்பைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. இயேசு
கிறிஸ்துவின் வருகையும், திருடன் வருகிற
விதமாக இருக்கும். (மத் 24:43)
வெண்வஸ்திரம் வெளி 3:4
வெளி 3:4. ஆனாலும் தங்கள்
வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத
சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு;
அவர்கள் பாத்திரவான்களானபடியால்
வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட
நடப்பார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சர்தை
சபையாரை எச்சரித்துச் சொல்லுகிறார்.
இவர்கள் உயிருள்ளவர்களென்று பெயர்
கொண்டிருந்தாலும், இவர்கள்
செத்தவர்களாயிருக்கிறார்களென்று,
இவர்களுடைய உண்மையான ஆவிக்குரிய
நிலமையை அவர்களுக்கு வெளிப்படுத்திக்
காண்பிக்கிறார். அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று, தங்கள்
ஆவிக்குரிய - ஜீவியத்தை
ஸ்திரப்படுத்தி வேண்டுமென்றும்,
மனந்திரும்பவேண்டுமென்றும் கர்த்தர்
அவர்களை எச்சரிக்கிறார். விழித்திராவிட்டால், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது
அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு
உண்டாகுமென்று கிறிஸ்துவானவர் எச்சரித்துச் சொல்லுகிறார்.
இயேசு கிறிஸ்து சர்தை சபையிலுள்ள
பாவிகளை குறித்து எச்சரிப்பு
வார்த்தைகளைச் சொன்னாலும், அவர்கள்
மத்தியிலே இருக்கிற பரிசுத்தவான்கள்
நிமித்தம் அவர்களைப் புகழ்ந்து பேசவும்
செய்கிறார். கர்த்தருடைய வார்த்தை நமக்கு
ஆறுதலாயிருக்கிறது. நம்மை உற்சாக படுத்துகிறது. நம்மை அழிக்கவேண்டுமென்பது கர்த்தருடைய நோக்கமல்ல. நம்மைத் திருத்தி, நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கவேண்டும்
என்பதே கிறிஸ்துவின் சித்தம்.
சர்தை சபையில் சில பேர் தங்கள்
வஸ்திரங்களை அசுசிப்படுத்தாமல்
பரிசுத்தமாய் ஜீவிக்கிறார்கள். இவர்களுடைய எண்ணிக்கை கொஞ்சம் தான். ஆனாலும் இவர்கள் விசுவாசத்தில் உறுதியுள் ளவர்களாயிருக்கிறார்கள் இப்படிப்பட்ட சில பேர் சர்தை சபையிலிருப்பதை கர்த்தர் கண்ணோக்கிப்
பார்க்கிறார். இவர்களுடைய எண்ணிக்கை
குறைவாக இருந்தாலும், இவர்களும்
கர்த்தருடைய பார்வைக்கு பிரத்தியட்சமாய்த் தெரிகிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் இருக்கலாம். ஆனாலும் இவர்கள்
தேவ கிருபையில் நிறைந்தவர்களாயிருக்கிறார்கள். இவர்கள்
கர்த்தருக்கு விசேஷித்தவர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சர்தை
சபையில் உள்ள ஒரு சில பரிசுத்தவான்களுக்கு தம்முடைய கிருபை நிறைந்த ஆசீர்வாதங்களை வாக்குப்பண்ணுகிறார். அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு கூட நடப்பார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அவரோடு கூட நடப்பது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். கர்த்தரோடு கூட நடக்கும்போது விசுவாசிகளுக்கு
அவரோடு நெருங்கிய ஐக்கியம்
உண்டாகும் ஆவிக்குரிய காரியங்களை
கர்த்தரோடு தாராளமாய் சம்பாஷணை செய்ய முடியும்.
சர்தை சபையிலுள்ள பரிசுத்தவான்கள்
எண்ணிக்கையில் குறைவான பேரா இருந்தாலும் கர்த்தர் அவர்களை தம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு பாத்திரவான்களாக காண்கிறார். அவர்கள் வெண் வஸ்திரம் தரித்துக்கொள்வார்கள். பரலோகத்திலே
வெண்வஸ்திரம் மகிமையையும் கனத்தையும் வெளிப்படுத்துகிறது. கர்த்தரோடு கூட நடக்கிற பரிசுத்தவான்கள், வெண் வஸ்திரம் தரித்து, கர்த்தருடைய பரிசுத்த மகிமையில் பிரவேசிப்பார்கள்.
ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குக்
கூறப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்
1. வெண்வஸ்திரந்தரித்து தேவனோடே கூட
நடப்பார்கள். (வெளி 3:4)
2 அவர்களுக்கு வெண் வஸ்திரம்
தரிப்பிக்கப்படும். (வெளி 3:5; வெளி 3:18; வெளி 4:4; வெளி 6:11; வெளி 7:9,13;
வெளி 15:6; வெளி 19:8,14)
3. அவர்களுடைய நாமத்தைத் தேவன்
கிறுக்கிப்போடமாட்டார். (வெளி 3:5;
வெளி 22:18-19; யாத் 32:32-33; சங் 69:28)
4. தம் பிதா முன்பாகவும் அவருடைய
தூதர் முன்பாகவும் அவர்கள் நாமத்தைக் கிறிஸ்து அறிக்கையிடுவோர் (வெளி 3:5)
ஜீவபுஸ்தகம் வெளி 3: 5,6
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:5
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 3:6
கர்த்தர் ஜெயங்கொள்கிற விசுவாசிகளுக்கு விசேஷித்த வெகுமதி வாக்குப்பண்ணுகிறார். தேவனுடைய கிருபை பரிசுத்தமானது அவருடைய மகிமையும் பரிசுத்தமானது அவர் கொடுக்கிற வெகுமதியும் பரிசுத்தமானது. பரிசுத்தம் பரிபூரணமடையும்போது கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகிறது கர்த்தரோ தம்முடைய பரிசுத்தவான்களை கனப்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். தம்முடைய தெய்வீக வாக்குத்தத்தங்களை அவர்களுக்குக் கிருபையாகக் கொடுக்கிறார். ஜெயங்கொள்கிறவனெவனோ அவனுக்கு
வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும் என்று
கிறிஸ்துவானவர் வாக்கு பண்ணுகிறார்.
இயேசுகிறிஸ்துவினிடத்தில் ஒரு விசேஷித்த புஸ்தகம் இருக்கிறது. இதற்கு ஜீவபுஸ்தகம் என்று பெயர். கிறிஸ்துவானவர் தம்மை விசுவாசித்து ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்களுடைய பெயர்கள்
இந்த ஜீவபுஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். கர்த்தர் தம்மிடத்திலுள்ள ஜீவபுஸ்தகத்தை தம்முடைய பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் சமர்ப்பிப்பார்.
ஜெயங்கொள்கிற விசா சிகளுடைய
நாமத்தை கிறிஸ்துவானவர் இந்த
ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடமாட்டார். அவர்கள் தங்கள் விசுவாசத்தில் ஜெயங்கொண்டவர்களென்று
கிறிஸ்துவானவர் பிதாவுக்கு முன்பாகவும்,
அவருடைய தூதர் முன்பாகவும்
அவர்களுடைய நாமத்தை அறிக்கை
செய்வார் இதுவே கர்த்தருடைய
பரிசுத்தவான்களுக்கு கிடைக்கப்போகிற
மிகப்பெரிய மேன்மை.
நாம் இப்பிரபஞ்சத்தில் ஜீவிக்கும் காலம்
வரையிலும் நமக்கு பாடுகளும்,
வேதனைகளும், உபத்திரவங்களும் உண்டு.
சத்துருவின் போராட்டங்களும் நமக்கு
உண்டு. இவையெல்லாவற்றிலும் நாம்
விசுவாசத்தோடு கர்த்தரைப் பற்றிக் கொள்ள வேண்டும். சத்துருவை ஜெயிக்க வேண்டும்.
ஜெயங்கொள்கிறவர்களுக்கு கர்த்தர்
இப்படிப்பட்ட மேன்மையான ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார்.
இந்த செய்தி சர்தை சபைக்கு
விசேஷமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், இதை எல்லா சபைக்கும் பொதுவான செய்தியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன்
கேட்கக்கடவன் என்று கிறிஸ்துவானவர்
திருவுளம் பற்றுகிறார்.
வெளி 3:2-3 ஆகிய வசனங்களில் கூறப்
பட்டிருக்கும் கட்டளைகளுக்குக்
கீழ்ப்படிவோரின் நாமங்களை இயேசு கிறிஸ்து ஜீவ புத்தகத்திலிருந்து கிறுக்கி போடமாட்டார். அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவில்லையென்றால், நமது நாமமும்
ஜீவ புத்தகத்திலிருந்து கிறுக்கி போடப்படும்.
"எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன்
எவனோ, அவன் பேரை என்
புஸ்தகத்திலிருந்து கிறுக்கி போடுவேன்"
(யாத் 32:32-33) என்று தேவன் மோசேயிடம்
கூறியிருக்கிறார். "ஜீவபுஸ்தகத்திலிருந்து
அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக
நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர்
எழுதப்படாதிருப்பதாக" (சங் 69:25-28=
அப் 1:20 என்று சங்கீதக்காரன் பரிசுத்த
ஆவியினால் தேவனிடத்தில் ஜெயம்
பண்ணுகிறான். "ஒருவன் இந்தத் தீர்க்க தரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்து இந்தப் புஸ்தகத்தில்
எழுதப்பட்டவைகளிலிருந்தும் அவனுடைய
பங்கை தேவன் எடுத்துப் போடுவார்"
(வெளி 22:18-19) என்று இயேசு கிறிஸ்துவும் ஜனங்களை எச்சரித்துக் கூறுகிறார்.