லவோதிக்கேயா வெளி 3:14-21

லவோதிக்கேயா வெளி 3:14-21

_Revelation Whatsapp group post :23_

வெளி 3:14. லவோதிக்கேயா சபையின்
தூதனுக்கு நீ எழுதவேண்டியது
என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

ஆசியாவில் ஏழு சபைகள் இருக்கிறது.
இந்த ஏழு சபைகளில் லவோதிக்கேயா சபை
கடைசியாகச் - சொல்லப்பட்டிருக்கிறது.
இவர்களுடைய நிலமை மிகவும் பரிதாபமாக
இருக்கிறது. கர்த்தர் இவர்களை புகழ்ந்து
பேசும்படியாக இவர்களிடத்தில் எந்த ஒரு
நற்குணமும் இல்லை அப்போஸ்தலர்
கொலோசெயருக்கு எழுதின
நிரபத்தை இந்தப் பட்டணத்தில் இருந்துதான் எழுதினார். பவுல் லவோதிக்கேயா பட்டணத்தில்
கர்த்தருடைய சபையை ஸ்தா
பிப்பதில் பவுல்
முக்கிய பங்கு வகித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு தம்மைப்பற்றி, "உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும் தேவனுடைய
சிருஷ்டிக்கும் தியானமாயிருக்கிற
ஆமென் என்று சொல்லுகிறார் கர்த்தர்
தம்முடைய நோக்கங்களும் வாக்குத்தத்தங்களிலும் மாறாதவர்,
உறுதியாக இருக்கிறார் ஆகையினால் அவர், "ஆமென்" என்று அழைக்கப்படுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உண்மையும்
சத்தியமுமுள்ள சாட்சியாயிருக்கிறார். தேவனைப்பற்றி இயேசு கிறிஸ்து மனுஷருக்கு வெளிப்படுத்துகிற சாட்சி உண்மையும் சத்தியமானது கர்த்தருடைய சாட்சியை மனுஷர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய
சிருஷ்டிக்கு ஆதியும் இருக்கிறார் இயேசுவானவர் உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவருமாயிருக்கிறார். இவரே
ஆதியும் அந்தமும் இவர் தேவனுடைய
சர்வசிருஷ்டிக்கும் கிறிஸ்துவானவரே
ஆதியாக இருக்கிறவர்.

"லவோதிக்கேயா" - கொலோசெ பட்டணத்திற்கு மேற்கில் ஒரு சில மைல்கள்
தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பட்டணம் பெர்கியாவில் உள்ளது.

குளிருமல்ல அனலுமல்ல வெளி 3: 15,16

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:15

இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:16

லவோதிக்கேயா சபையார் ஆவிக்குரிய
ஜீவியத்தில் பின் வாங்கிப்போயிருக்கிறார்கள். அவர்கள் குளிருமில்லாமல் அனலுமில்லாமல்
இருக்கிறார்கள். நம்முடைய ஆவிக்குரிய
ஜீவியத்தில் நாம் வெதுவெதுப்பாயிருப்பது
மிகப்பெரிய ஆபத்து. இந்த உலகத்தில்
விசுவாசிகளுக்கு வருகிற சோதனைகளிலெல்லாம் மிகப்பெரிய சோதனை, நாம் குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா இருப்பதுதான்

கர்த்தருடைய உபதேசம் நமக்குத்
தேவை என்று நாம் நினைத்தால், அதை
உறுதியாய்ப் பற்றிக் கொள்ள வேண்டும்
கிறிஸ்துவின் வார்த்தை முக்கியமானது
என்று நாம் நினைத்தால், நாம் அதற்குரிய
முக்கியத்துவத்தைக் கொடுக்கவேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் உபதேசமே நமக்குப்
பிரதானமாயிருக்கவேண்டும் இயேசு கிறிஸ்துவின் உபதேசம் தங்களுக்குத் தேவையில்லையென்று தீர்மானம்பண்ணினால், அவர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்காமல் விலகிப் போய் விடவேண்டும் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவுமில்லை .

ஒன்று நாம் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் பாவிகளா இருப்போம் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலமையில் நாம் இருக்கக்கூடாது. ஒன்று நாம்
கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களாய் இருக்கவேண்டும் அல்லது நாம் சாத்தானைச் சேர்ந்தவர்களாக இருப்போம் கிறிஸ்துவையும் சாத்தானையும் சேர்ந்தவர்களாக யாரும் இருக்கக்கூடாது. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவராலும் முடியாது. கிறிஸ்துவையும் பற்றிக்கொண்டு, சாத்தானையும் பற்றிக்கொண்டால், நம்முடைய
நிலமை பரிதாபமாக இருக்கும் நம்மால்
இரட்சிப்பின் சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது. உலகப்பிரகாரமான பாவசந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலமையில் பரிதாபமாயிருப்போம்.

லவோதிக்கேயா சபையாரின் கிரியைகளை கர்த்தர் அறிந்திருக்கிறார். அவர்கள் குளிருமல்ல அனலுமல்ல. கர்த்தர் அவர்களைப் பார்த்து பரிதபிக்கிறார். அவர்கள் குளிராயா வது அனலாயா வது இருந்தால் நலமாயிருக்குமென்று சொல்லுகிறார். ஆனால் அவர்களோ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பா இருக்கிறார்கள் கர்த்தர் இப்படிப்பட்டவர்களை தண்டிக்கவேண்டுமென்று சித்தங் கொண்டிருக்கிறார் வெதுவெதுப்பாயிருக்கிறவர்களை கர்த்தர்
அங்கீகாரம் பண்ணுவதில்லை அவர்களை
தம்முடைய வாயினின்று வாந்திபண்ணிப்போடுவதாக எச்சரித்துச்
சொல்லுகிறார்.

வெதுவெதுப்பாயிருக்கிற தண்ணீர்
நம்முடைய வயிற்றுக்கு ஒத்துவராது
இப்படிப்பட்ட தண்ணீரினால் வயிற்றில்
ஏதாவது பிரச்சனை உண்டாகும் பிரச்சனை
பெரிதாகும் போது வாந்திவரும் ஒரு சில
உபதேசியார்கள் குளிருமின்றி அனலுமின்றி
வெதுவெதுப்பா இருப்பார்கள் கர்த்தர்
இப்படிப்பட்வர்களைச் சகித்துக் கொள்ள மாட்டார் இவர்களை நீக்கிப்போடுவார்.

லவோதிக்கேயா சபையைப் பற்றிக்
கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள் (வெளி 3:15)

2. குளிருமல்ல அனலுமல்ல (வெளி 3:15)

3. குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிற நிலைமை
(வெளி 3:16)

4. பெருமையும், சுய திருப்தியும் 
(வெளி 3:17)

5. உண்மையான நிலைமையை
அறியாமலிருப்பது. (வெளி 3:17)

இவர்கள் ஆவிக்குரிய ரீதியாக மரித்தவர்களும் அல்ல, உற்சாகமாய்
ஜீவிப்பவர்களும் அல்ல. தங்களுடைய
ஆவிக்குரிய ஜீவியத்தில் அசட்டையாகவும்
கவனக்குறைவாக வும் வித்தியாசமாகவும்
இருக்கிறவர்கள்,

சுயவஞ்சனை வெளி 3:17

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால், 
வெளிப்படுத்தின விசேஷம் 3:17

லவோதிக்கேயா சபையார் தங்களைத்
தாங்களே வஞ்சிக்கிறார்கள். கர்த்தர்
இவர்களைப்பற்றி நினைப்பது ஒருவிதமாக
இருக்கிறது. ஆனால் இவர்கள்
தங்களைப்பற்றி எண்ணிக்கொள்வது
வேறுவிதமாக இருக்கிறது. இரண்டுபேருடைய எண்ணத்திலும் வித்தியாசம் இருக்கிறது கர்த்தருடைய சிந்தையே நமக்கு இருக்க வேண்டும்
லவோதிக்கேயா சபையார் சுயபெருமையுள்ளவர்கள். தங்களைத்
தாங்களே பெருமையாக நினைத்து, தங்களை வஞ்சித்துக் கொள்கிறார்கள்.

ஒருவேளை இவர்கள் தங்கள் சரீரத்தைக் குறித்து பெருமைப்படலாம். ஆனால் இவர்களுடைய ஆவியோ அலங்கோலமாய் பரிதாபமாக இருக்கிறது தங்கள் சரீரத்தின் தேவைகளை இவர்கள் நேர்த்தியாய்ச் சந்திக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுடைய ஆத்துமாக்களின்
தேவைகளை சரிவர கவனிப்பதில்லை
தங்கள் ஆத்துமாக்கள் நன்றாகக் கவனிக்க படுவதாகவும் அவை ஆரோக்கியமாக இருப்பதாகவும் இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், இவர்களுடைய
ஆத்துமாக்கள் கவனிப்பு இல்லாமல், வியாதி பட்டிருக்கிறது.

ஒரு சிலர் தாங்கள் பரலோகத்திற்குப்
போகிறோம் என்று நினைப்பார்கள். ஆனால்
அவர்களில் அநேகர் நரகத்திற்குள்
பிரவேசிப்பார்கள். இவர்களிடத்தில்
கிறிஸ்துவின் சிந்தையில்லை. கிறிஸ்துவின்
வார்த்தை இவர்களை வழிநடத்தவில்லை
தங்கள் சுயசிந்தனைகளின்படி இவர்கள்
நடந்து கொள்கிறார்கள்.

இவர்கள் நிர்ப்பாக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
தரித்திரராயிருக்கிறார்கள். இவர்களிடத்தில்
பானம்பண்ணுவதற்கோ, புசிப்பதற்கோ ,
உடுத்துவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால்
இவர்கள் தங்களை ஐசுவரியவான்கள் என்று
சொல்லிக்கொள்கிறார்கள். இவர்களுடைய
ஆத்துமா ஆவிக்குரிய போஜனமில்லாமல்
பசியால் வாடுகிறது. இவர்கள் ஒருவேளை
தங்கள் சரீரத்திற்குப் போஜனம் கொடுக்கலாம் ஆனால் தங்கள் ஆத்துமாவுக்குப் போஜனம்கொடுக்காமல் அதைப் பட்டினி போட்டுவிடுகிறார்கள்.

இவர்களிடத்தில் ஒன்றுமேயில்லை. ஆனால் இவர்கள் தங்களை திரவியசம்பன்னர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். இவர்கள் மெய்யாகவே நீர் பாக்கியமுள்ளவர்கள்
பரிதபிக்கப்படத்தக்கவர்களும்,
தரித்திரருமாகயிருக்கிறார்கள்
இவர்கள் தங்களுடைய உண்மை
ஆனால் நிலையை அறியாமல் தங்களை
ஐசுவரியவான்கள் என்றும் திரவியசம்பன்னர் என்றும், தங்களுக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

இவர்கள் குருடராயிருக்கிறார்கள்.
தங்களுடைய உண்மையான நிலமையை
இவர்களால் காணமுடியவில்லை. தாங்கள்
போகும் பாதையும் இவர்களுக்குத் தெரியாது தங்களைத் தாங்களே இவர்களால் பார்க்கவும் முடியாது. ஆனாலும் தங்களால் பார்க்க முடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இவர்களால் கிறிஸ்துவைப் பார்க்க முடியாது.
தேவனைப் பார்க்க முடியாது. ஆனாலும்
தங்களால் தேவனையும் கிறிஸ்துவையும்
பார்க்க முடியுமென்று நினைக்கிறார்கள்.

இவர்கள் நிர்வாணிகளாயிருக்கிறார்கள்
இவர்களிடத்தில் நீதியின் வஸ்திரம் மோ
பரிசுத்தத்தின் வஸ்திரமோ இல்லை.
ஆனாலும் தங்களுடைய நிர்வாணத்தை
இவர்களால் பார்க்க முடியவில்லை .
தங்களைத் தாங்களே முடியாத
குருடராயிருக்கிறார்கள். ஆனாலும்

தங்களைப்பற்றிச் சொல்லும்போது,
தங்களுக்கு ஒரு குறைவுமில்லை என்று
சொல்லுகிறார்கள்.

லவோதிக்கேயா சபையார் தங்களைப்
பற்றிச் சொல்லிக் கொள்ளும் காரியங்கள்

1. நான் ஐசுவரியவான்.
2. நான் திரவியசம்பன்னன்
3. எனக்கு ஒரு குறைவுமில்லை

லவோதிக்கேயா சபையைப் பற்றி
கிறிஸ்து கணித்துக்கூறும் காரியங்கள்

1. குளிருமல்ல அனலுமல்ல (வெளி 3:15).

2. குளிருமின்றி அனலுமின்றி
வெதுவெதுப்பாயிருக்கிற நிலைமை
(வெளி 3:16)

3. நிர்ப்பாக்கியமுள்ளவன்

4. பரிதபிக்கப்படத்தக்கவன்

5. தரித்திரன்

6. குருடன்

7. நிர்வானி

ஆலோசனை சொல்லுகிறேன் வெளி 3:18

 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:18

லவோதிக்கேயா சபையார் தங்களைத்
தாங்களை வஞ்சித்துக் கொள்கிறார்கள்
தங்களைப்பற்றி எப்படி எண்ணவேண்டுமோ
அப்படி எண்ணாமல், தங்களுடைய உண்மை நிலமைக்கு மிஞ்சி எண்ணுகிறார்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட பாவிகளுக்கு நல்ல ஆலோசனைகளைத் தருகிறார். இயேசுகிறிஸ்துவின் நல்ல ஆலோசனைகளை இவர்கள் புறக்கணித்து ஒதுக்கிவிட்டாலும், கர்த்தர் இவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்

லவோதிக்கேயா சபையார் மெய்யாகவே
தரித்திரராயிருக்கிறார்கள். கர்த்தரோ
அவர்களை ஐசுவரியவான்களாக்க
வேண்டும் என்று விரும்புகிறார்
விரும்புகிறார். அவர்கள் கர்த்தரிடமிருந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக் கொள்ள வேண்டும் அப்போதுதான்
இவர்கள் ஐசுவரியவான்களாக முடியும். மெய்யான ஐசுவரியம் எது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அந்த
ஐசுவரியத்தை எப்படி பெற்றுக்கொள்வது
அதை எப்படி தங்களிடத்தில் பாதுகாப்பாக
வைத்துக்கொள்வது என்பது இவர்களுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்

கர்த்தரிடமிருந்து வருகிற ஐசுவரியமே
மெய்யான ஐசுவரியம். கர்த்தர் தரும்
ஐகவரியம் மாத்திரமே நிலைத்து நிற்கும்.
இவர்கள் கர்த்தரிடத்திலிருந்து நெருப்பிலே
புடமிடப்பட்ட பொன்னை கிரயத்திற்கு
வழங்க வேண்டும் இது அவர்களுக்கு
இலவசமாகக் கொடுக்கப்பட மாட்டாது. கிரயம் செலுத்தி வாங்க வேண்டும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதும், நம்முடைய சிலுவையை சுமந்துகொண்டு அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் நாம் செலுத்த வேண்டிய கிரயம்,

நமக்கு எல்லாம் இருக்கிறது என்று
நினைக்கக்கூடாது. நம்மிடத்தில் ஒன்றும்
இல்லாதபோதும், நம்மிடத்தில் எல்லாம்
பரிபூரணமாயிருக்கிறது என்று சொல்லி
நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளக்கூடாது
கர்த்தருடைய சமுகத்தில் பெருமையோடு
வரக்கூடாது. நம்மை வெறுமைப்படுத்தி
மனத்தாழ்மையோடு அவருடைய சமுகத்திற்கு வர வேண்டும் நாம் தரித்திரர் என்றும், நம்மிடத்தில் ஒன்றுமில்லையென்றும் கர்த்தரிடத்தில் பயபக்தியோடு மனத்தாழ்மையோடும் அறிக்கை பண்ண வேண்டும் அப்போது கர்த்தர் நமக்கு மறைவான பொக்கிஷங்களை கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். தம்முடைய ஐசுவரியத்தினால்
நம்மை நிரப்புவார்.

லவோதிக்கேயா சபையார் நிர்வாணிகளாயிருக்கிறார்கள். அவர்களுடைய நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றக்கூடாது என்று கர்த்தர் சித்தமுள்ளவராயிருக்கிற ஆர் அவர்களுக்கு உடுத்திக்கொள்வதற்கு வஸ்திரங்கள் தேவை அதை அவர்கள்
கர்த்தரிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் தங்களுடைய பழைய கந்தலான வஸ்திரங்களையெல்லாம் தங்களைவிட்டு விட்டு கழற்றிப் போட்டு விட வேண்டும்
கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்திருக்கிற
வெண்மையான வஸ்திரத்தைத் தரித்து கொள்ள வேண்டும் வெண் வஸ்திரம்
பரிசுத்தமான வஸ்திரம்

லவோதிக்கேயா சபையார்
குருடராயிருக்கிறார்கள். அவர்கள்
பார்வையடையவேண்டுமென்று கர்த்த ர்
விரும்புகிறார். அவர்கள் பார்வையடையும்படிக்கு தங்கள் கண்களுக்கு கலிக்கம் போட் வேண்டும் என்று கர்த்தர் ஆலோசனை சொல்லுகிறார். தங்களுடைய சுயஞானத்தையும், சுய அறிவையும் அவர்கள் சார்ந்திருக்க கூடாது
கர்த்தருடைய வார்த்தையும், கர்த்தருடைய ஆவியான வரும் நம்மை ஆளுகை செய்ய வேண்டும் அப்போதுதான் நம்முடைய
கண்கள் திறக்கப்படும்.

லவோதிக்கேயா சபையாருக்குச்
சொல்லப்படும் ஆலோசனைகள்

1. நெருப்பிலே புடமிடப்பட்ட பெண்ணை
என்னிடத்திலே வாங்கிக்கொள். 
(வெளி 3:18)

2. வெண் வஸ்திரங்களை என்னிடத்திலே
வாங்கிக்கொள் (வெளி 3:18)

3. உன் கண்களுக்குக் கலிக்கம்போடு

4. உன் ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ள
ஜாக்கிரதையாய் இரு (வெளி 3:19)

5. மனந்திரும்பு. (வெளி 3:19; வெளி 2:5,16;
வெளி 3:3).

தேவனுடைய மீட்பின் வார்த்தையும், நிபந்தனையும்

"என்னிடத்தில் வாங்கிக்கொள்" என்பது
ஒரு வணிக வாக்கியம் தேவனுடைய
நிபந்தனைகளுக்குட்பட்டு, நாம் அவரோடு
வணிகம் செய்ய வேண்டும் மனுஷன்
பாவத்திற்கும், சாத்தானுக்கும் தன்னை
அடிமையாக விற்று விட்டான் மனுஷனை
மீட்பதற்கான முழுக்கிரயத்தையும் தேவன்
செலுத்தித் தீர்த்துவிட்டார். ஆகையினால்
தேவனுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு
ஜீவிக்க வேண்டியது மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கும் கடமை இருக்கிறது, விசுவாசம், மனந்திரும்புதல், தேவனை ஆராதித்தல் ஆகிய காரியங்களை மனுஷன் கைக்கொள்ள வேண்டும். "என்னிடத்தில் வாங்கிக் கொள்
என்னும் வாக்கியத்தினால் மனுஷன்
தேவனிடத்தில் பொன், பொருள்
ஆகியவற்றைக் கொடுத்து அவரிடமிருந்து
எதையாவது வாங்கிக்கொள்ளலாம் என்பது
பொருளல்ல. தன்னுடைய பாவங்களிலிருந்து மனந்திருந்தி, தேவனிடத்தில் விசுவாசத்தோடு வரும்போது தன்னுடைய இரட்சிப்பை தேவனிடத்திலிருந்து இலவசமாக வாங்கிக்
கொள்ளலாம். கிறிஸ்துவிற்காக பாடுகள்
அனுபவிக்கும் கிரயம் செலுத்த
வேண்டியதிருந்தால் அதை விசுவாசிகள்
செலுத்த முன் வரவேண்டும்

வாசற்படியிலே தட்டுகிறேன் வெளி 3: 19,20

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. 
வெளிப்படுத்தின விசேஷம் 3:19

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:20

நாம் பாவிகளாகயிருந்தாலும், கர்த்தர்
நம்மீது கிருபையாயிருக்கிறார். நாம்
மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும் ஆண்டவராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, கர்த்தர்
நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத்
தருகிறார். கர்த்தர் நம்மை நேசிக்கிறார்.
ஆகையால்தான் அவர் நம்மை
கடிந்துகொண்டு சிட்சிக்கிறார். நம்முடைய
ஆத்துமா அழிந்து போகக் கூடாது
என்று கர்த்தர் கரிசனையோடிருக்கிறார். கர்த்தர் நம்மைக் கடிந்துகொள்ளும்போது, நம்முடைய நன்மைக்காகவே அவர் நம்மைக்
கடிந்துகொள்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

கர்த்தருடைய கடிந்துகொள்ளும் வார்த்தைகள் நம்முடைய ஆத்துமாவைக்
குணப்படுத்துகிற ஒளஷதமாயிருக்கிறது.
சத்துரு புன்சிரிப்போடு வஞ்சக
வார்த்தைகளைப் பேசுவதைவிட, நம்முடைய சிநேகிதர் கோபமுகத்தோடு நம்மைக் கடிந்துகொள்வது நமக்கு நல்லது.
கர்த்தருடைய சிட்சிக்கும் வார்த்தைகளை
நாம் அங்கீகரிக்கும் போது நம்முடைய ஆத்துமாக்களுக்கு நன்மை உண்டாகும்
ஆகையினால் கர்த்தருடைய கடிந்து கொள்ளும் வார்த்தையை நாம் ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும் மனந்திரும்ப வேண்டும்

கர்த்தர் நமக்கு அருகாமையில் வந்து
நிற்கிறார். தம்முடைய வார்த்தையினாலும்
ஆவியினாலும் கிறிஸ்துவானவர்
பாவிகளுடைய இருதயத்தின் கதவுக்கு
அருகாமையில் வந்திருக்கிறார். கர்த்தருக்கு
விரோதமாக பாவிகளின் இருதயக்கதவு
அடைக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தரோ பாவிகளின் இருதயத்தில்
பிரவேசிக்க விரும்புகிறார் மனுஷருடைய
இயல்பான சுபாவம் கிறிஸ்துவுக்கு விரோதமாகத் திரும்பியிருக்கிறது தமக்கு விரோதமாக கதவு அடைக்கப்பட்டிருப்பதை பார்த்தவுடன், கர்த்தர் அந்த இடத்தைவிட்டு கோபத்தோடு திரும்பிப் போய் விடுவதில்லை அவர் கிருபையுள்ளவர். நம்முடைய கதவை நாம் திறக்கவேண்டுமென்று அவர் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
வாசற்படியில் நின்று நம்முடைய
இருதயத்தின் கதவைத் தட்டுகிறார். நாம்
அவருடைய சத்தத்தைக் கேட்டு, கதவைத்
திறந்தால், கர்த்தர் நமக்குள் பிரவேசிப்பார்.
அவர் நம்மோடேகூட போஜனம்பண்ணுவார். நாமும் அவரோடுகூட போஜனம்பண்ணுவோம்.
நம்முடைய இருதயத்தில் கர்த்தருக்கு
இடங்கொடுக்கும்போது அவர் நம்மை
சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும்
நிரப்பி ஆசீர்வதிப்பார். உன்னதமான
ஆசீர்வாதங்களை நமக்குக் கொடுப்பார்.

இயேசு கிறிஸ்து மனுஷரை அழைக்கும்
அமைப்பின் அம்சங்கள்

1. வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்

2. ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு
கதவைத் திறந்தால், அவனிடத்தில்
நான் பிரவேசிப்பேன்.

3. அவனோடே போஜனம்பண்ணுவேன்

இயேசு கிறிஸ்துவினுடைய அமைப்பின்
நிபந்தனைகள்

1. ஒருவன் என் சத்தத்தைக் கேட்டால்,

2. ஒருவன் கதவைத் திறந்தால்,

3. ஒருவன் என்னோடே போஜனம் பண்ண
விரும்பினால்.

என்னுடைய சிங்காசனம் வெளி 3: 21,22

 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். 
வெளிப்படுத்தின விசேஷம் 3:21

 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார் 
வெளிப்படுத்தின விசேஷம் 3:22

கர்த்தர் நம்மை கடிந்துகொண்டு
சிட்சிக்கும்போது, நாம் ஜாக்கிரதையாயிருந்து
மனந்திரும்பவேண்டும். கர்த்தரைப்பற்றும்
விசுவாசத்தில் நாம் உறுதியாக
நிலைத்திருக்க வேண்டும் கர்த்தருடைய
ஆலோசனைகளுக்கும், சிட்சிக்கிற
வார்த்தைகளுக்கும் நாம் கீழ்ப்படியும்போது
நமக்கு - ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
அதிகமாய்க் கிடைக்கும். நம்முடைய
ஆவிக்குரிய ஜீவியம் புதுப்பிக்கப்படும்.
நமக்குள் புதிய உற்சாகமும், தெம்பும்
பெலனும் உண்டாகும். கர்த்தருடைய
கிருபையினால் நாம் விசுவாசத்தின் நல்ல
போராட்டத்தைப் போராடுவோம். சத்துருவை ஜெயிப்போம்

ஜெயங்கொள்கிறவர்களுக்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மிகப்பெரிய
ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணுகிறார்.
ஜெயங்கொள்கிறவர்கள், கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினுடைய சிங்காசனத்தில்
அவரோடுகூட  உட்காருவார்கள்
இயேசு கிறிஸ்து ஜெயங்கொண்டு தம்முடைய பிதாவினுடைய  சிங்காசனத்திலே அவரோடுகூட உட்கார்ந்திருக்கிறார். அதுபோலவே ஜெயங்கொள்கிற விசுவாசிகள்
இயேசு கிறிஸ்துவின் கூட அவருடைய
சிங்காசனத்தில் உட்காருவார்கள்.

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியிலிருந்தபோது
அவருக்கு அநேக பாடுகளும் சோதனைகளும் உண்டாயிற்று கிறிஸ்துவானவர் அவையெல்லாவற்றிலும்
வெற்றி சிறந்தார். கர்த்தர் நமக்கு தம்முடைய
சாயலைக் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவின்
சாலை உடையவர்களாகிய நாம், கிறிஸ்துவானவர் ஜெயங்கொண்டதுபோல, நாமும் ஜெயங்கொள்ளவேண்டும்
சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சத்துருவை ஜெயிக்கவேண்டும்

சோதனைகளில் நாம் கிறிஸ்துவுக்கு அப்பா இருக்கும் போது அவருடைய மகிமையிலும் அவருக்கு ஒப்பாயிருப்போம். கிறிஸ்துவோடுகூட
பாடுகளை அநுபவிக்கிறவர்கள்
அவரோடுகூட மகிமையிலும் பங்குபெறுவார்கள். நம்முடைய சுயமுயற்சியினால் இயேசுகிறிஸ்துவினுடைய
சிங்காசனத்தில் நம்மால் உட்கார முடியாது.
தம்மோடுகூட தம்முடைய சிங்காசனத்தில்
உட்கு எாருவதற்கு கிறிஸ்துவான வரே
நமக்கு அருள் செய்கிறார்

மற்ற சபைகளுக்கு சொன்ன
ஆலோசனைகளைப்போல, லவோதிக்கேயா
சபைக்கு சொல்லப்பட்டிருக்கிற ஆவிக்குரிய ஆலோசனைகள் எல்லா சபைகளுக்கும் பொதுவானவை. ஆவியானவர் சபைகளுக்குச்
சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று எழுது என்று மற்ற சபைகளுக்குச் சொன்னதுபோல லவோதிக்கேயா சபையினுடைய தூதனுக்கும் சொல்லுகிறார். இத்துடன் கிறிஸ்துவானவர் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு சொல்லுகிற செய்தி நிறைவு பெறுகிறது

ஜெயங்கொள்ளுகிறவனுக்கு
வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்கள்

1. ஜீவவிருட்சம். வெளி 2:7)

2. ஜீவகிரீடம் (வெளி 2:10; வெளி 3:11)

3. இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை .
(வெளி 2:11; வெளி 20:14)

4. மறைவான மன்னா (வெளி 2:17)

5. வெண்மையான குறிக்கல்லும், புதிய
நாமமும். (வெளி 2:17)

6. சபை எடுத்துக் கொள்ளப்படும்போது
எடுத்துக்கொள்ளப்படுதல் (வெளி 2:25)

7. ஜாதிகளின்மேல் அதிகாரம்
(வெளி 2:26-27)

8. கலக்காரர்களை முழுமையாக
நொறுக்கிப் போடுதல், (வெளி 2:27)

9. விடிவெள்ளி நட்சத்திரம். (வெளி 2:28)

10. -வெண் வஸ்திரம் தரித்து கிறிஸ்துவோடே கூட நடப்பான்
(வெளி 3: 4-5)

11. ஜீவபுஸ்தகத்தில் அவனுடைய நாமம்
நித்தியமாக இருக்கும் வெளி 3:5;
வெளி 22:18-19)

12. பிதாவிற்கு முன்பாக அவனுடைய
நாமத்தை கிறிஸ்து அறிக்கை
பண்ணுவார். (வெளி 3:5)

13. தேவனுடைய ஆலயத்தில் தூண்
இருப்பான் (வெளி 3:12)

14. தேவனோடு நித்திய காலமாகத்
தங்கியிருப்பான். God) (வெளி 3:12)

15. தேவனுடைய நாமம் அவன்மீது
எழுதப்படும். (வெளி 3:12)

16. புதிய எருசலேமின் நாமம் அவன்மீது
எழுதப்படும். (வெளி 3:12)

17. கிறிஸ்துவின் புதிய நாமம் அவன்மீது
எழுதப்படும் வெளி 3:12)

18. கிறிஸ்துவினுடைய சிங்காசனத்தில்
அவரோடேகூட உட்காரும்படிக்கு அருள்
செய்யப்படும். (வெளி 3:21)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.