காளை - சர்வாங்க தகனபலி (லேவி 1:3-9)

காளை - சர்வாங்க தகனபலி (லேவி 1:3-9)


ஒருவன் ஐசுவரியம் உள்ளவனாகவும்,
கர்த்தருக்கு பெரிய காணிக்கை செலுத்த
திராணியுமுள்ளவனாகவுமிருப்பானென்றால்,
அவன் மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட
ஒரு காளையை கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக செலுத்த வேண்டும். கர்த்தருடைய
சந்நிதியில் தான் அங்கீகரிக்கப்படும் படி அவன்
அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரவாசலில்
கொண்டுவரவேண்டும் (லேவி 1:3).

"அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து"  என்னும் வாக்கியம்,
மூலஎபிரெய பாஷையில்  "அவன் அதை
மனோற்சகாமாக கொண்டு வந்து"
என்றிருக்கிறது. தேவனை ஆராதிப்பது,
தன்னுடைய பாவங்களுக்காகத் தேவனிடத்தில் பிராயச்சித்தம் பண்ணுவது
அவரவர் மனோற்சாகமாகவும் தன்னுடைய
சொந்த தீர்மானத்தின் பிரகாரமாகவும் செய்ய
வேண்டிய காரியம். (லேவி 1:2 )

அவன் செலுத்துகிற சர்வாங்க தகனபலி பழுதற்ற தாகவும், அது காளையாகவும் இருக்க வேண்டும். அந்தக் காளையை அவன் தன்னுடைய மாட்டு
மந்தையிலிருந்து எடுக்க வேண்டும். காளைக்கு சொந்தக்காரன் அதை கர்த்தருக்கு மனப்பபூர்வமான காணிக்கையாக கொண்டு வர வேண்டும்.

கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தப்படும்
காணிக்கையை கர்த்தர் அங்கீகரிக்க வேண்டும்.
காணிக்கை கொண்டு வருகிறவனும் கர்த்தர் அங்கீகரிக்க வேண்டும் கர்த்தர் தமக்கு பிரியமான
காணிக்கையை மாத்திரமே அங்கீகரித்தார்.
மனவிசனத்தோடும், மனப்பூர்வமாக அல்லாமல் கட்டாயத்தோடும் கொண்டு வரும் காணிக்கையை கர்த்தர் அங்கீகரிக்க மாட்டார். அன்பினால்
செலுத்தப்படும் காணிக்கையே கர்த்தருக்கு பிரியமானது

கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக செலுத்துகிறான், அந்த காளையை ஆசரிப்புக்கூடார வாசலிலே கொண்டு
வரவேண்டும் அங்கே சர்வாங்க தகனபலி காளை
செலுத்தும் வெண்கல பலிபீடம் இருக்கிறது
அது பலியை சுத்தப்படுத்தும் பலிபீடம்.


கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியை
செலுத்துகிறவன் தன் பாவ நிவர்த்தி கொன்று
தன் கையை அந்தக் காளையின் தலையின் மேல் வைத்து கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லவேண்டும் (லேவி 1:4,5)

பலி செலுத்துகிறவரை தன் கையைப் பலிசெலுத்தப்படும் மிருகஜீவனின் தலையின் மீது வைக்கவேண்டும். அந்த மிருகத்தை கொள்ளும்போது பலிசெலுத்துகிறவர் தன்னுடைய பாவங்களை அறிக்கை பண்ண வேண்டும் (லேவி 3:28,13;
லேவி 4: 4,15,24,29,33 ; லேவி 16:21)
இது ஒரு அடையாளம். இதன் விவரம் வருமாறு

=> தன்னுடைய சொந்த பலியாக இது
செலுத்தப்படுகிறது.

=> தன்னுடைய பாவங்களின் நிவாரணமாக
இந்தப் பலி செலுத்தப்படுகிறது.

=> தன்னுடைய பாவத்தினால் பாவம் செய்தவன்
மரணத்திற்குப் பாத்திரவானாக இருக்கிறான்.

=> நியாயப்பிரமாணத்தை மீறியதினால் இவன்
மரிக்க வேண்டியவனாக இருக்கிறான்.

=> தன்னுடைய பாவங்களை மன்னிக்குமாறு இவன் தேவனிடம் விண்ணப்பம் பண்ணுகிறான்.

=> அவனுடைய பாவத்திற்குப் பரிகாரமாக அவனுக்குப் பதிலாக ஒரு பாவமும் அறியாத ஒரு மிருகஜீவன் பதிலீடாக மரிப்பதைக் கர்த்தர் அங்கீகரிக்கிறார்.

=> வரப்போகிற இரட்சகரில் அவன் நம்பிக்கை வைக்கிறான். இரட்சகர் பாவியினுடைய
ஸ்தானத்தில் பாவிக்காக மரித்தார். (யோவான் 3:16 எபி 2:9-18; 1பேதுரு 2:24)

பலிசெலுத்துகிறவனே காளையைக்
கொல்லுகிறான். ஆசிரியர் இரத்தத்தைப்
பெற்றுக் கொண்டு அதைப் பலிபீடத்தின்மீது
சுற்றிலும் தெளிக்கிறார்.

பலி செலுத்துகிறான் காளையை ஆசரிப்புக்கூடார வாசலிலே அதை பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னத்திற்குள் பிரவேசிப்பதற்கு தான் தகுதியற்றவன் என்பதையும், தன்னுடைய பாவங்கள் நிவிர்த்தி
பண்ணப்பட வேண்டியதாயிருக்கிறது என்பதையும் அவன் இதன் மூலம் அங்கீகரிக்கிறான்.

பலிசெலுத்துகிறவன் தன்னுடைய பாவ நிவர்த்தி கென்று காளையை சர்வாங்க தகனபலியாக செலுத்துகிறான். பலி செலுத்தாமல் தன்னால்
தேவனோடு உடன்படிக்கை பண்ண முடியாது
என்பதையும் அவரோடு ஐக்கியமாகயிருக்க
முடியாது என்பதையும் அவன் அங்கீகரிக்கிறான்.

பலிசெலுத்துகிறவன் தன் கையை அந்தக் காளையின் தலையின் மேல் வைக்கிறான். இதன் மூலம் அவன் தனக்குள்ளது எல்லாவற்றையும் அந்தக் காளையின்மீது வைத்து, அதை கர்த்தருடைய சமூகத்திலே ஒப்புக் கொடுக்கிறேன்.

தன்னுடைய பாவத்தின் நிமித்தம், தான் மரணத்திற்கு பாத்திரவான் என்பதை பலி செலுத்துகிறான் அங்கீகரிக்கிறான். கர்த்தர் விரும்புவாரென்றால், தன்னுடைய பாவத்திற்காக
தான் மரித்துப்போகவும் ஆயத்தமாயிருப்பதை
அவன் அங்கீகரிக்கிறான்.

கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக செலுத்தப்படும் இந்தப் பாலியல் மாத்திரமே தன்னுடைய பாவம் நிவிர்த்தி பண்ணப்படும் என்பதையும் பலிசெலுத்துகிறவன் அங்கீகரிக்கிறான். கர்த்தரே பாவநிவிர்த்திக்கென்று சர்வாங்க தகனபலியை நியமனம் செய்திருக்கிறார். இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகா பிரதான பலிக்கு அடையாளமாயிருக்கிறது. முழுஉலகத்தின் பாவத்தையும் சுமந்த தீர்க்க, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கல்வாரி
சிலுவையிலே தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.

ஒரு மனுஷனுடைய குறிப்பிட்ட பாவம்
மன்னிக்கப்படுவதற்காக சர்வாங்க தகனபலி
செலுத்தப்படவில்லை. பாவம் நிவர்த்தி
பண்ணப்படவேண்டுமென்றால், கர்த்தருடைய
சமூகத்திலே பாவநிவாரண பலியை
செலுத்த வேண்டும். ஒவ்வொரு விதமான
பாவத்திற்கும், ஒவ்வொரு விதமான
பாவநிவாரண பலி நியமிக்க பட்டிருக்கிறது.
சர்வாங்க தகனபலியானது மனுஷருடைய
பாவத்தை பொதுவாக நிவிர்த்தி பண்ணும்
பலியாகும்.

ஆரோனின் குமாரனாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின் மேல்
சுற்றிலும் தெளிக்கக்கவேண்டும் (லேவி 1:5)
அந்த மிருகத்திற்கு அதன் இரத்தமே ஜீவன் இருக்கிறது. காளையின் இரத்தம், பலி செலுத்துகிற ஆத்துமாவின் பாவநிவர்த்திக்கென்று நியமிக்க பட்டிருக்கிறது.

அந்தச் சர்வாங்க தகனபலி தோலுரித்து
அதைச் சந்துசந்தாகத் துண்டிக்க வேண்டும்.
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமார்
பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி அவன் குமாரனாகிய ஆசாரியர்கள் துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டங்களின் மேல் அடுக்கி வைக்க வேண்டும். அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவவேண்டும் அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின் மேல் சர்வாங்க தகனபலியாகத்
கனிக்க வேண்டும் (லேவி 1:6-9)
பலிசெலுத்துகிறவனே அந்த சர்வாங்க தகனபலியை கர்த்தருடைய சந்நிதியில்
கொன்று அதை தோல் உரிக்க வேண்டும்
அவனே அதை சந்து சந்தாக துண்டிக்கவும்
வேண்டும்.

ஆசாரியன் சந்துசந்தாகத் துண்டிக்கப்பட்ட
மாம்சத்தைப் பலி செலுத்துகிறவனிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். (லேவி 1:6-9: லேவி 7:8;
2 நாள் 29:34).

இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி ஒரு மிருகத்தின் மாம்சத்தை அக்கினியில் போட்டு
தகனிக்கும்போது, அதன் வாசனை சுகந்த வாசனையாக இருக்காது. ஆனாலும்
இதுவே கர்த்தருக்கு சுகந்த வாசனையான
தகன பலி இருக்கிறது. ஆசாரியர்கள்
கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து
அவருக்கு சர்வாங்க தகனபலி செலுத்துகிறார்
இந்தப் பலியானது கிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறது.

சர்வாங்க தகன பலியானது கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாக இருக்கிறது. அது போலவே இயேசுகிறிஸ்துவின் பலி மரணமானது
பிதாவுக்கு பிரியமாயிருக்கிறது. கர்த்தருக்கு
சர்வாங்க தகனபலியாக செலுத்துகிறான்,
கர்த்தருடைய சந்நிதியில் அங்கீகரிக்கப்படும் படி
தான் அதை ஆசரிப்புக்கூடார வாசலிலே செலுத்துகிறான்.

அவன் சர்வாங்க தகனபலி தன் பாவநிவர்த்திக்கென்று செலுத்துகிறான்.
இதன் மூலம் கர்த்தரோடு ஒப்புரவாகும்
சிலாக்கியம் தனக்கு கிடைக்கும் என்று
எதிர்பார்க்கிறேன்.

கிறிஸ்துவானவர் தம்மையே கல்வாரி
சிலுவையிலே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். "கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும்
ஒப்புக்கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்து போல
நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்''
(எபே 5:2)

விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்கு ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தவேண்டும். இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவன் நம்மை அங்கீகரிக்கும் படியாக நாம் ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தவேண்டும்.

"ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு
வருகிறீர்கள்" (1பேது 2:5).

Pastor. Charles Sathish Kumar
ICA WMM Veppamkuppam
Vellore

Vethagama kalanchiyam app link:
https://play.google.com/store/apps/details?id=ap262547.tfo

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.