ஆடு, பறவைகள் - சர்வாங்க தகனபலி (லேவி 1:10-17)
சர்வாங்க தகனபலியாக செலுத்தப்படும்
ஆடு அல்லது ஒரு பறவையைப்பற்றி இந்த
வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக ஒரு
காளையை செலுத்த ஒருவனுக்கு
திராணி இல்லாத போது அவன் ஒரு ஆட்டுக்கடா
சர்வாங்க தகனபலியாக செலுத்தலாம்.
அவன் செலுத்துவது செம்மறியாட்டு
மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு
மந்தையிலுள்ள ஆடுகளி
லாவது எடுக்கப்பட்ட
சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு
கடாவைக் கொண்டுவரவேண்டும் (லேவி 1:10)
பலிபீடத்தின் மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கப்படும் மிருகஜீவன் பழுதற்ற தாகவும், ஆணாகவும் இருக்க வேண்டும். ஒருசில
இடங்களில் மிருகஜீவன்களில் பெண்களும்
பலியிட பட்டிருக்கின்றன. ஆனாலும்,
இங்கு பழுதற்ற ஆண் மிருக ஜீவனே
அங்கீகரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின்
பதிலீட்டிற்கு இது அடையாளமாக
இருக்கிறது (எபி 25-18; ஏசா 53).
கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக
காளையையோ அல்லது ஆட்டுக்கடாவையோ
செலுத்துவதற்கு திராணி இல்லை யென்றால்,
அவன் ஒரு புறாக் குஞ்சை கர்த்தருக்கு
சர்வாங்க தகனபலியாக செலுத்தலாம்.
அவன் கர்த்தருக்குச் செலுத்துவது
பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க
தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது
புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச்
செலுத்த வேண்டும் (லேவி 1:14).
கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக
செலுத்தப்படும் ஆட்டுக்கடா அமைதியான
மிருகம். அது பிறருக்கு தீங்கு செய்யாது
அதுபோலவே காட்டுப்புறாவும் அமைதியான
பறவை நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து ஆட்டுக்குட்டியை போல
கிறிஸ்துவானவர் கல்வாரி சிலுவையில்
தம்மை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தபோது
ஒரு ஆட்டுக்குட்டியைப்போல
அமைதியாக இருந்தார். நம்முடைய
ஆவிக்குரிய ஜீவியத்தில் நாமும்
சாந்தகுணமுள்ள வர்களா இருக்க வேண்டும்,
கர்த்தருக்கு ஆட்டுக்கடாவை
சர்வாங்க தகனபலியாக செலுத்தும்போது
காளையை பலி செலுத்துவது போலவே
செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில்
பலிபீடத்தின் -வடபுறத்தில் அந்த
ஆட்டுக்கடாவை கொல்ல வேண்டும்.
அப்பொழுது ஆரோனின் குமாரனாகிய
ஆசாரியர்கள் அதன் இரத்தத்தைப்
பலிபீடத்தின் மேல் சுற்றிலும்
தெளிக்கக்கவேண்டும் (லேவி 1:11).
பலி செலுத்துகிறான், கடாவை
கர்த்தருடைய சந்நிதியில், பலிபீடத்தின்
வடபுறத்தில் கொல்லவேண்டும். தேவனுடைய
சிங்காசனம் உலகத்தின் வடபகுதியில்
இருக்கிறது (ஏசா 14:12-14; சங் 75:6-7)
அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து
அதன் தலையையும் கொழுப்பையும்
கூட வைக்க வேண்டும்.
அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள
அக்கினியில் இருக்கிற கட்டங்களின் மேல்
அடுக்கி வைக்கக்வேண்டும் (லேவி 1:12).
பலி செலுத்துகிறவரே அந்தக்
கடாவை சந்துசந்தாகத் துண்டிக்க வேண்டும்.
(லேவி 1:2-610-13,14-17)
குடல்களையும் தொடைகளையும் அவன்
தண்ணீரினால் கழுவவேண்டும்
அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டு
வந்து பலிபீடத்தின்மேல் கனிக்க வேண்டும்
இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச்
சுகந்த வாசனையான தகன பலி (லேவி 1:13)
கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக
காளையையோ அல்லது ஆட்டுக்கடாவையோ
செலுத்த திராணியில்லாதவர்கள், காட்டுப்
புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது
எடுத்துச் செலுத்தவேண்டும் (லேவி 1:14).
இதுவும் கர்த்தருக்கு சுகந்த வாசனையான
தகனபலி என்று அழைக்கப்படுகிறது.
சர்வாங்க தகனபலியாக காளையும்,
ஆட்டுக்கடாவையும் செலுத்துவது போல,
காட்டுபுறாவையும் சர்வாங்க தகனபலியாக
செலுத்த வேண்டும்.
அவன் கர்த்தருக்குச் செலுத்துவது
பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க
தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது
புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்த
வேண்டும் (லேவி 1:14)
அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில்
கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி,
பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப்
பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு, அதின்
இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட
எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில்
கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே
எறிந்துவிட்டு, பின்பு அதின் செட்டைகளுடன்
அதை இரண்டாக்காமல் பிளப்பான்;
பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள
அக்கினியில் இருக்கிற கட்டங்களின் மேல்
தகனிக்க வேண்டும்; இது சர்வாங்க
தகனபலி இது கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலி (லேவி 1:15-17)
சர்வாங்க தகனபலியாக செலுத்தப்படும்
பறவையை ஆசாரியன் பலிபீடத்தண்டையில்
கொண்டு வந்து, அதன் தலையை
கிள்ள வேண்டும் அதன் பின்பு அதை
பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப்
பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிடவேண்டும்.
ஆசாரியனே பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட
சர்வாங்க தகன பலிகள் எல்லாக்
காரியங்களையும் செய்கிறான். (லேவி 1:15-17)
பெரிய மிருக ஜீவன்களைப் பலியிடும்போது
பலியிடுகிறவர் ஆசாரியருக்குப் பல
உதவிகளைச் செய்கிறார் (லேவி 1:5-610-13)
பறவைகளின் சிறகுகள், சாம்பல்கள்,
மீதமுள்ள பகுதிகள் ஆகியவை
பலிசெலுத்தப்பட்டு முடிந்த பின்பு,
பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோகப்படும்.
இதுவே சாம்பல் இருக்கிற இடம் (லேவி 4:12 21)
காளைக்கும் ஆட்டுக்கடாவுக்கும்
இருப்பதுபோல காட்டுபுறாவுக்கு கொம்புகள்
இல்லை. கால்களில் குளம்புகளில் இல்லை.
ஆனாலும் கர்த்தர் தகனபலியாக
செலுத்தப்படும் காட்டுபுறாவையும்
அங்கீகரிக்கிறார். இதுவும் கர்த்தருக்கு சுகந்த
வாசனையான தகன பலி இருக்கிறது.
நாம் கர்த்தருக்கு எதை பலியாக செலுத்துகிறோம்
என்பது முக்கியமல்ல அதை எப்படி செலுத்துகிறோம் என்பதே முக்கியம். நம்முடைய இருதயத்தில் கர்த்தர் மீது அன்பும் மனுஷர்மீது பிரியமும் இருக்க வேண்டும்.
"முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப்பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில்
அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில்
அன்புகூருகிறதுமே சர்வாங்க தகனம் முதலிய
பலிகள் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது" (மாற் 12:33).
கர்த்தர் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து
மோசேயைக் கூப்பிட்டு, அவரை நோக்கி,
சர்வாங்க தகனபலி சம்பந்தமான
கட்டளைகளை சொல்லுகிறார். அதன்
விவரம் வருமாறு :
1. தகனபலி செலுத்துமாறு
இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லு
(லேவி 1:2)
2. அவன் பழுதற்ற ஒரு காளையைச்
செலுத்துவானாக (லேவி 1:3)
3. பலிசெலுத்துகிறவன்
அதைமனோற்சகாமாகச் செலுத்த வேண்டும்.
4. அது தன் பாவ நிவர்த்தி கொண்
அங்கீகரிக்கப்படும்படி தன் கையை
அதின் தலையின் மேல் வைக்க
வேண்டும் (லேவி 1:4)
5. கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்
காளையைக் கொள்ளக்கடவன். (லேவி 1:5)
6. ஆசாரியர்கள் - அதன் இரத்தத்தை
எடுத்து அதை ஆசரிப்புக் கூடாரவாசலில்
இருக்கிற பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
7. பலி செலுத்துகிறவன் அந்தச் சர்வாங்க
தகனபலியைத் தோலுரித்து, அதைச்
சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.
(லேவி 1:6)
8. ஆசாரியர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப்
போட்டு, அக்கினியின் மேல் கட்டைகளை
அடுக்கி, துண்டங்களையும் தலையையும்
கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டங்களின் மேல்
அடுக்கி வைக்கக்கடவர்கள். அதின்
குடல்களையும் தொடைகளையும் அவன்
தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன்
பலிபீடத்தின் மேல் சர்வாங்க
தகனபலியாகத் தகனிக்கக்கடவன்.
9. பழுதற்ற - செம்மறியாடையாவது
வெள்ளாடையாவது பலி செலுத்தக்
கொண்டுவர வேண்டும் (லேவி 1:10).
10. கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின்
வடபுறத்தில் பலிசெலுத்துகிறவன் கொல்லக்கடவன் (லேவி 1:11)
11. ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலி
பீடத்தின் மேல் சுற்றிலும் தெளிக்கக் கடவர்கள்.
12. பலியிடுகிறவன் அதைச் சந்துசந்தாகத்
துண்டிக்க வேண்டும் (லேவி 1:12)
13. அவைகளை ஆசாரியன்
பலிபீடத்திலுள்ள அக்கினியில்
இருக்கிற கட்டங்களின் மேல் அடுக்கி
வைக்கக்கடவன். - குடல்களையும்
தொடைகளையும் அவன்
தண்ணீரினால் கழுவுவேன்;
அவைகளையெல்லாம் ஆசாரியன்
கொண்டுவந்து பலிபீடத்தின் மேல்
தகனிக்கக்கடவன்; (லேவி 1:12-13)
14. பலிசெலுத்துகிறவன் காட்டுப்புறாக்களிலாவதுபுறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன் (லேவி 1:14)
15. அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில்
கொண்டு வந்து, அதன் தலையை
கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின்
இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில்
சிந்தவிட்டு அதன் இரைப்பை
அதின் மலத்தோடுங்கூட எடுத்து
அதைப் பலிபீடத்தண்டையில்
கீழ்ப்புறமாக சாம்பல் இருக்கிற
இடத்திலே எறிந்துவிட்டு
பின்பு அதின் செட்டைகளுடன் அதை
இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு
ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள
அக்கினியில் இருக்கிற கட்டங்களின் மேல் தகனிக்கக்கடவன் (லேவி 1:15-17; லேவி 15:10).
சர்வாங்க தகனபலி கிறிஸ்துவிற்கு
அடையாளமாகும். கிறிஸ்துவானவர் தம்மை
ஒரு பாவமும் அற்றவராகப் பழுதற்றவராகத்
தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்தார்.
மனுஷருடைய பாவங்களுக்கு பரிகாரமாக
இயேசு கிறிஸ்து மரித்தார். மனுஷனுடைய
பாவங்களுக்காக மனுஷன் மரிக்கவேண்டிய
ஸ்தானத்தில் இயேசு கிறிஸ்து மரித்தார்.
(யோவான் 3.16 எபி 2:9-18 எபி 9:11-14; எபி 10:1-18; 1 பேதுரு 1:18-23;
1பேதுரு 2:24).
சர்வாங்க தகனபலியாக தோலைத்
தவிர, மற்ற எல்லாமே கனிக்கப்படுகிறது.
மற்ற பள்ளிகளில் ஆசாரியருக்காக ஒரு பகுதி
ஒதுக்கப்படும். ஆனால் சர்வாங்க தகன பலி யில்
ஆசாரியருக்கு ஒன்றும் ஒதுக்கப்படாமல்
எல்லாமே கனிக்கப்படுகிறது.
சர்வாங்க தகனபலி கர்த்தருக்குச்
சுகந்த வாசனையான தகன பலி இருக்கிறது.
கர்த்தர் இதில் பிரியமாக இருக்கிறார்.
ஆகையினால், சர்வாங்க தகனபலிக்குக்
"கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகன பலி"
என்னும் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
(ஆதி 8:21). இவையெல்லாம் கிறிஸ்துவிற்கு
அடையாளமாகும். கிறிஸ்துவானவர்
தேவனுக்கு தம்மை மரணபரியந்தம் ஒப்புக்கொடுத்தார் தம்மையே பலியாக
அர்ப்பணித்தார். இயேசு கிறிஸ்து பாவத்தை
சமந்தா என்பதற்கு சுகந்த வாசனையல்லாத
பலிகள் அடையாளமாகும் (எபே 5:21.
Pastor. Charles Sathish Kumar
ICA WMM Veppamkuppam
Vellore