போஜன பலி லேவி 2:1-10
கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தும் போஜனபலி யைப்பற்றி லேவி 2ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அ. மெல்லிய மாவு, எண்ணெய், தூபவர்க்கம் ஆகியவை 2:1
ஆ. அடுப்பில்
பாகம்பண்ணப்பட்ட போஜனபலி (லேவி 2:4)
இ. தட்டையான சட்டி
யில் பாகம்பண்ணப்பட்ட
போஜன பலி (லேவி 2:551)
ஈ. பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி (லேவி 2:7)
உ. போஜனபலி நிர்வாகம் பண்ண வேண்டிய விதம் (லேவி 2:2,3),
ஊ. பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியை நிர்வாகம் பண்ண வேண்டிய விதம் (லேவி 2:8-10)
எ. போஜன பலி புளித்த மாவினால் செய்யக்கூடாது. அதில் தேன் சேர்க்கக்கூடாது (லேவி 2:112)
ஏ. போஜனபலி உப்பினால் சாரமாக்கப்படவேண்டும் (லேவி 2:13)
ஐ. போஜன பலி யாக செலுத்தப்படும்
முதற்பலன்களைப்பற்றிய பிரமாணம் (லேவி 2:14-16).
லேவி 2ஆம் அதிகாரத்தில் போஜன பலியைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதியாகமத்தில் முதன் முதலாக போஜனபலி செலுத்தப்பட்டதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. "காயின் நிலத்தின்
கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக்
கொண்டுவந்தான்" (ஆதி 4:3).
கர்த்தரிடத்தில் தான் வைத்திருக்கிற பக்தியை
வெளிப்படுத்திக் காண்பிப்பதற்காக வும், கர்த்தர் தனக்கு கொடுத்திருக்கிற ஏராளமான நன்மைகளுக்கு அவருக்கு நன்றி சொல்லும் வண்மையாகவும் இஸ்ரவேல் புத்திரர்
கர்த்தருக்கு போஜனபலி செலுத்துகிறார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு
போஜன பலியைப்பற்றிய பிரமாணத்தை
சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரரில்
சாதாரண ஏழைகளாகயிருக்கிறவர்கள்
போஜனபலியை செலுத்துகிறார்கள்.
இவர்களால் காளை வெள்ளாட்டுக்கடா
போன்ற மிருகங்களை சர்வாங்க
தகனபலியாக செலுத்த முடியாது
அந்த அளவுக்கு இவர்களிடத்தில் பொருளாதார
வசதி இருக்காது.
இஸ்ரவேல் ஜனத்தாரில் சாதாரண ஏழைகளாகயிருக்கிறவர்கள் தங்கள் அன்றாட
போஜனத்திற்காக அப்பம் பிடிக்கிறார்கள்
இவை மெல்லிய மாவினாலும் எண்ணெயினாலும்
செய்யப்பட்டவை. தாங்கள் அன்றாடம் புசிக்கிற அப்பங்களை, இவர்கள் கர்த்தருக்கு போஜன பலி யாக செலுத்துகிறார்கள். கர்த்தரும் இவர்கள்
செலுத்துகிற போஜன பலி அங்கீகரிக்கிறான்.
கர்த்தர் தம்முடைய கிருபையினாலும்,
இரக்கத்தினாலும் தங்களுக்கு போஜனம்
கொடுத்து, தங்களை பராமரிக்கிறார்
என்பதை இஸ்ரவேல் ஜனத்தார் நன்றியுள்ள
இருதயத்தோடு அங்கிகரிக்கிறார்கள்
தங்களுடைய போஜனத்திற்காக தாங்கள்
கர்த்தரையே நம்பி இருப்பதையும் நம்பியிருப்பதையும் இதன் மூலம் உறுதி பண்ணுகிறார்கள். தங்களுக்கு தேவையான
அன்றாட போஜனத்தை கர்த்தர் தாமே தமது
கிருபையினாலே தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பயபக்தியோடு விண்ணப்பம் பண்ணுகிறார்கள்.
கர்த்தர் தங்களுக்கு போஜனம் கொடுக்கும்போது
இஸ்ரவேல் புத்திரர் அந்தப் போஜனம் கர்த்தருக்கு
ஸ்தோத்திரம் பண்ணி புசிக்கிறார்கள். அதே
வேளையில் புசிப்பதற்கு அப்பமில்லாமல்
பசியோடிருக்கும் தரித்திரரரை நினைவுகூர்ந்து தங்களிடத்திலுள்ள போஜனத்தை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். கர்த்தர் தாம் பட்ட கடனை திருப்பி செலுத்துவார்.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு
போஜன பலி செலுத்தும் போது, கர்த்தர்
அவர்களுடைய பலியை அங்கீகரிக்கிறான்.
தமக்கு செலுத்தப்படும் போஜன பலியானது
எப்படிப்பட்டதாயிருக்கவேண்டும் என்பதையும்
கர்த்தர் தம்முடைய பிரமாணத்தில் சொல்லுகிறார். கானான் தேசத்தில் மெல்லிய மாவும், எண்ணெயும் தாரளமாய்க் கிடைக்கிறது.
"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்க பண்ணுகிறார்;
அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து
புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும்
ஏரிகள் உள்ள தேசம்: அது கோதுமையும்
வாற்கோதுமை யும் திராட்சச்செடி கள்
அத்தி மரங்கள் மாதளஞ்செடிகளுமுள்ள
தேசம்: அது ஒலிவ மரங்கள், எண்ணெயும்
தேனுமுள்ள தேசம். அது தாழ்ச்சியில்லாமல்
அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக்
குறைவு படாததுமான தேசம்; அது கல்லுகள்
இரும்பாயிருக்கிறதும் செம்பு வெட்டி
எடுக்கத்தக்க மலைகள் உள்ள து மான தேசம்"
(உபா 8:7-9).
கர்த்தருக்கு போஜனபலியாகிய காணிக்கையை
செலுத்துகிறார் அதை மெல்லிய மாவு செலுத்த வேண்டும். அந்த அம்மாவின் மேல் எண்ணெய் வார்த்து அதின்மேல் தூபவர்க்கம் போடவேண்டும்.
கர்த்தர் இந்த வசனப்பகுதியில்
நான்குவிதமான போஜனபலிகளைப்பற்றிச்
சொல்லுகிறார். அவையாவன :
1. அடுப்பில் சுடப்படாத மெல்லிய மாவு
2 அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி
3 தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி
4. பொரிக்கும் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலி
தமக்கு காணிக்கையாக செலுத்தப்படும்
போஜன பலியானது, எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். அதன் விவரம் வருமாறு :
"போஜன பலியாகிய காணிக்கை
மெல்லிய மாவாயிருப்பதாக அவன்
அதின் மேல் எண்ணெய் வார்த்து, அதின்
மேல் தூபவர்க்கம் போட்டு அதை ஆரோனின்
குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டு வருவான்; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவில் எண்ணெயில் ஒரு கைப்பிடி
நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து
அதைப் பலிபீடத்தின் மேல்
ஞாபகக்குறியாகத் தகனிக்கக் கடவன்; அது
கர்த்தருக்குச் சுகந்த -வாசனையான
தகனபலி" (லேவி 2:12) என்று கர்த்தர்
சொல்லுகிறார்.
போஜனபலி மிருகஜீவன்களின்
மாம்சத்தைக் குறிக்காது. (லேவி 1:1-17)
அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்
மேல் தூபவர்க்கம் போடப்பட்டிருக்கும்
ஞாபகக்குறியாகப் போஜன பலியின் ஒரு பகுதி
தகனிக்கப்படும். (லேவி 2:2) மீதியாயிருப்பது
ஆசாரியருடைய ஊழியங்களுக்காக
அவர்களைச் சேரும். (லேவி 2:3) மெல்லிய
மாவு என்பது கோதுமை மாவை குறிக்கிறது.
கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தப்படும் போஜனபலிகளைப்பற்றிய விவரம் வருமாறு :
1. மெல்லிய மாவு, எண்ணெய், தூபவர்க்கம் (லேவி 2:1-3)
2. புளிப்பில்லாத அதிரசம் (லேவி 2:4)
3. புளிப்பில்லாத அடை (லேவி 2:5-6)
4. எண்ணெயில் பொறிக்கப்பட்ட அடை
(லேவி 2:7-9)
5. விளைச்சலின் முதற்கனி. (லேவி 2:12-16)
கர்த்தருக்கு செலுத்தப்படும் போஜன பலியானது.
அடுப்பில் பாகம்பண்ணப்பட்டதாகவும், தட்டையான சட்டையில் பாகம்பண்ணப்பட்டதாகவும்
அல்லது பொரிக்குஞ்சட்டியில்
பாகம்பண்ணப்பட்டதாகவும் இருக்கலாம்.
கர்த்தர் வெவ்வேறு விதமான போஜன பலிகளைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லுகிறார்.
"நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட
புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக" (லேவி 2:4)
"நீ படைப்பது தட்டையான சட்டியில்
பாகம்பண்ணப்பட்ட போஜன பலியானால், அது
எண்ணெயில் பிசைந்த புளிப்பில்லா மெல்லிய
மாவினால் செய்யப்பட்ட தாயிருப்பதாக,
அதைத் துண்டு துண்டாக பிட்டு
அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது
ஒரு போஜனபலி" (லேவி 2:5 6)
"நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில்
பாகம்பண்ணப்பட்ட போஜன பலியானால், அது
எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில்
செய்யப்படுவதாக" (லேவி 2:7)
இஸ்ரவேல் புத்திரர் குறைந்த செலவில் கர்த்தருக்கு போஜனபலியை காணிக்கையாக
செலுத்துகிறார்கள். ஆனாலும் இந்த பலி செலுத்தும் போது, கர்த்தர் சொன்ன பிரகாரம் இதை செலுத்த வேண்டும்.
கர்த்தருக்கு போஜனபலியாகிய காணிக்கையை
செலுத்துமாறு கொண்டு வருகிறவனே அதை
ஆசாரியரிடத்திலே கொடுக்க வேண்டும். ஆசாரியன் அந்தப் போஜனபலியை பலிபீடத்தண்டையில் கொண்டு வர வேண்டும்.
அந்தப் போஜனபலியிலிருந்து
ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை
எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்
இது கர்த்தருக்குச் சுகந்தவாசனையான
தகனபலி (லேவி 2:8,9)
போஜனபலிகளெல்லாம் ஆசாரியனிடத்தில்
கொண்டுவரப்பட வேண்டும் அது அவர்களுடைய ஊழியத்திற்குக்
காணிக்கையாகும். போஜனபலி யிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகத் தகனிக்கவேண்டும்
(லேவி 2: 2,3,8,10,14,16) போஜன
பலிகளெல்லாம் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான பலி என்று
அழைக்கப்படுகிறது. மிருகஜீவன்களின்
பலிகளில் சிலவும், கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான பலிகளாகும்.
இஸ்ரவேல் புத்திரர் செலுத்துகிற
போஜன பலி யில் ஒரு பகுதி பலிபீடத்தின் மேல்
த கனிக்கப்படுகிறது. ஆசாரியரே இந்தப் போஜன பலி தகனிக்கிறார் இது ஞாபகக்குறியாக கனிக்கப்படுகிறது. கர்த்தர் தங்களுக்கு போஜனம் கொடுத்து தங்களை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நினைவுகூரும் வண்ணமாக இஸ்ரவேல் புத்திரர் கொண்டு
வரும் போஜனபலியின் ஒரு பகுதி, கர்த்தருடைய
பலிபீடத்தின் மேல் தகனிக்கப்படுகிறது.
அந்தப் போஜன பள்ளியில் மீதியாயிருப்பது
ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்;
கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா
பரிசுத்தமானது (லேவி 2:3,10).
ஆதியாகமம் புஸ்தகத்தில் பரிசுத்தம்
என்னும் வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
பஞ்சாகமத்திலுள்ள மற்ற நான்கு
புஸ்தகங்களில் மோசே "பரிசுத்தம்" என்னும்
வார்த்தையை 187 தடவைகள்
பயன்படுத்தியிருக்கிறார். இது நபர்களையும்,
பொருட்களையும் குறிக்கும். பரிசுத்தப்
பயன்பாட்டிற்காக வேறுபிரிக்கப்பட்டிருப்பவை
பரிசுத்தமானவையாகும். பரிசுத்தத்தில்
இரண்டு விதம் உண்டு. ஒன்று பரிசுத்தம்
மற்றொன்று மகா பரிசுத்தம் (லேவி 21:22)
ஆசிரியர்களும், அவர்களுடைய
குடும்பத்தாரும் பரிசுத்தமானதையும், மகா
பரிசுத்தமானதையும் புசிக்கலாம். மகா
பரிசுத்தமானது என்பது அக்கினியினால்
தினிக்கப்பட்ட புலிகளைக் குறிக்கும்
இவற்றின் ஒரு பகுதி ஞாபகக்குறியாக
அக்கினியினால் திணிக்கப்படும்.
ஆராதனையில், பலி செலுத்துவது
தேவனுக்காகச் செலுத்தப்படுவது படைப்பு
எனப்படுகிறது.
கர்த்தருடைய பலிபீடத்தை ஊழியம் செய்கிற
ஆசாரியரும் கர்த்தர் போஷிக்கிறார். தமக்கு ஊழியம் செய்கிற ஆசாரியரின் நன்மைகளை
கர்த்தர் விசாரிக்கிறார்.
பரிசுத்த வேதாகமத்தில், மகாபரிசுத்தமான காரியங்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நியாயப்பிரமாணத்தின்
பிரகாரம் மகாபரிசுத்தமான காரியங்களாகும். அவற்றின் விவரம் வருமாறு :
1. மகா பரிசுத்த ஸ்தலம் (யாத் 26:33-34)
2. வெண்கல பலிபீடம் யாத் 40:10) (யாத் 29:37
3. பொன் பலிபீடம் (யாத் 30:10)
4. ஆசரிப்புக் கூடாரமும், அதன் பணிமுட்டுகள், பாத்திரங்களும் (யாத் 30:29; யாத் 4:419)
5. தூபவர்க்கம் அல்லது சுகந்தவாசனை (யாத் 30:36
6. எல்லா போஜனபலி களும், அதன் ஒரு
பகுதி அக்கினியினால் திணிக்கப்படும்.
(லேவி 2:3,10; லேவி 6:17; லேவி 10:12; எண் 18:9)
7. பாவ நிவாரணபலிகள் (லேவி 6:1725,29; எண் 18.9) லேவி 10:17)
8. குற்றநிவாரண பலிகள் (லேவி 6:17;
லேவி 7:16; லேவி 14:13; எண் 18:9)
9. சமுகத்தப்பம் (லேவி 24:9)
10. கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட
எல்லாப் பொருட்களும் (லேவி 27:28)
பரிசுத்த வேதாகமத்தில், மகாபரிசுத்தமான நபர்களைப்பற்றியும், மேலும் சில காரியங்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நியாயப்பிரமாணத்தின்
பிரகாரம் மகாபரிசுத்தமானவை
அவற்றின் விவரம் வருமாறு:
1. பரிசுத்த பூமி (யாத் 3:5)
2. சபைகூடுதல் (லேவி 23; யாத் 12:16)
3. தேவனுடைய வாசஸ்தலம் (யாத் 15:13)
4. ஓய்வுநாள் (யாத் 16:23; யாத் 20:8; யாத் 35:2)
5. தேசம் (யாத் 19:6 உபா 7:6; உபா 14:2,21)
6. மனுஷர் (லேவி 11:44; யாத் 22:31; யாத் 29:37 )
7. ஆசரிப்புக்கூடார ஸ்தலம் (யாத் 26:33)
8. வஸ்திரங்கள் (லேவி 16:4 யாத் 28:2-4)
9. பொருட்கள் (லேவி 22:2; யாத் 28:38)
10. வரங்கள் (யாத் 28:38)
11. கிரீடம் (யாத் 29:6; யாத் 39:30)
12. பலிகள் (லேவி 23:20; யாத் 29:33-34)
13. அபிஷேகதைலம் (யாத் 30:25)
14. தூபவர்க்கம் (யாத் 30:37)
15. பரிசுத்த ஸ்தலம் (லேவி 16:33)
16. தேவன் (லேவி 19:2; லேவி 20:726; லேவி 21:8)
17. முதற்கனிகள் (லேவி 19:24)
18. தேவனுடைய நாமம் (லேவி 20:3 லேவி 22:2,32)
19. ஆசாரியர்கள் (லேவி 21:6-8)
20. போஜனபலிகள் (லேவி 22:2-16)
21. தசமபாகங்கள் (லேவி 27:30-32)
22. தண்ணீர் (எண் 5:17)
23. நசரேயர் (எண் 6:5-8)
24. அசைவாட்டப்படும் பலிகள் (எண் 6:20)
25. தலையீற்று (எண் 18:17)
26. ஏறெடுக்கப்படும் பலிகள் (எண் 18:19)
27. கருவிகள் (எண் 31:6)
28. பாளயம் (உபா 23:14).
Pastor. Charles Sathish Kumar
ICA WMM Veppamkuppam
Vellore