ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)
1. ஐயாயிரம் பேரைப் போஷித்தல் (யோவான் 6:1-13)
ஓய்வு நாளில் சுகப்படுத்தி, அதன் மூலம் இறைவனுடைய அன்புக்கும் சட்டவாதிகளுடைய வீணான சிந்தனைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் காண்பித்து இயேசு தன்னுடைய தெய்வீகத்தை எருசலேமில் வெளிப்படுத்தினார். அவர்கள் அவரை வெறுத்து, அவரைத் தொலைத்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வடக்கேயுள்ள கலிலேயாவுக்குக் கொண்டுபோனார். அங்கு அவருக்கும் அவருடைய எதிரிகளுக்குமிடையிலான மோதல் உச்சத்தை அடைந்தது. வடக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டம் இன்னும் அவர் செல்லுமிடமெங்கும் அவரைப் பின்தொடர்ந்தது.
யோவான் 6:1-4
1 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். 2 அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். 3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். 4 அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.
1 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். 2 அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். 3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். 4 அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.
எருசலேமிலிருந்த நியாயப்பிரமாணவாதிகளை கிறிஸ்து கடிந்துகொண்டதால், அவர்கள் அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, அவரை வேவு பார்த்தார்கள். அவருடைய தருணம் இன்னும் வராத காரணத்தினால் அவர் சனகதரின் நியாய விசாரணையிலிருந்து பின்வாங்கி கலிலேயாவைச் சென்றடைந்தார். முந்திய மூன்று நற்செய்திகளில் அங்கு அவர் பல அடையாளங்களை நிகழ்த்தியதாக நாம் வாசிக்கிறோம். அவருடைய வருகையைப் பற்றி கேள்விப்பட்ட மக்கள் நடுவில் பெரிய ஆரவாரம் காணப்பட்டது. ஆனால் இயேசு அதனால் தொந்தரவடையாமலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் இருந்தார், காரணம் அவர் தலைநகரத்தில் சந்தித்த நயவஞ்சக மனநிலை கிராமங்களிலும் பரவி அவரைத் தாக்கும் என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் யோர்தானுக்கு கிழக்கிலுள்ள கிலோனுக்கு தன் சீடர்களுடன் தனித்திருக்கும்படி சென்றுவிட்டார். ஆயினும் அவருடைய வார்த்தையைக் கேட்பதில் அதிக ஆர்வமுள்ள மக்கள் கூட்டம், அவருடைய அற்புதங்களை அனுபவிக்கும்படி அவரைப் பின்தொடர்ந்தது. அவருடைய மரணத்தின் நேரம் இன்னும் வராத காரணத்தினால் அந்த வருடம் அவர் பஸ்காவை அனுசரிக்க எருசலேமுக்குப் போகவில்லை. அவரைச் சுற்றியுள்ள மக்களுடன் அவர் அந்த விருந்தைக் கொண்டாடினார், அது பஸ்காவுக்கு பதிலாகக் காணப்பட்டது. அதன் மூலம் பெருமகிழ்ச்சியோடு இரட்சகர் பரலோக விருந்தில் தன்னுடைய பரிசுத்தவான்களுடன் கலந்துகொள்வார் என்பதைக் காண்பித்தார்.
யோவான் 6:5-13
5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். 6 தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 7 பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். 8 அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: 9 இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். 10 இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். 12 அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். 13 அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். 6 தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 7 பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். 8 அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: 9 இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். 10 இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். 12 அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். 13 அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
மக்கள் கூட்டம் வருதைப் பார்த்த இயேசு, தன்னுடைய பரலோக பிதாவை நோக்கி தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அவருக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்தி, பசியாயிருக்கிறவர்களை அவருடைய கவனத்தில் விட்டுவிடுகிறார். இத்துடன் அற்புதம் ஆரம்பமாகியது. குமாரன் மனிதர்களுடைய இருதயத்தை வெளிப்படுத்தும் பணியை பிதா அவரிடம் கொடுத்தார்.
முதலாவது, பிலிப்புவை நோக்கி வருகிற மக்களுக்கு உணவளிக்கும்படி கேட்டுக் கொண்டதின் மூலம், சீடர்களுடைய விசுவாசம் வளர்ச்சியடைகிறதா அல்லது பொருளாதார ரீதியாகவும் உலகப்பிரகாரமாகவுமே இன்னும் சிந்திக்கிறார்களா என்று அவர்களைப் பரிசோதித்தார். நாம் உணவு தயாரிக்கும் இடத்தைப் பற்றியே சிந்திப்போம், இயேசுவோ தன்னுடைய பிதாவைக் குறித்துச் சிந்தித்தார். பண விஷயங்களையும் அதிக செலவுள்ள வாழ்க்கையையும் நாம் சிந்திப்போம், ஆனால் இயேசுவோ பரலோக உதவியாளரைப் பற்றி சிந்தித்தார். விசுவாசத்திற்கு திரும்பாமல் பிலிப்பு உடனடியாக எவ்வளவு செலவாகும் என்று சிந்திக்க ஆரம்பித்தார். பணத்தை மட்டுமே பார்ப்பவர்கள் தெய்வீக வாய்ப்புகளைக் காணத் தவறுகிறார்கள். சீடர்களுடைய கணக்குகள் நியாயமானவையே: அந்த இடத்தில் அப்பங்களைத் தயாரிக்கும் இடமோ, மாவரைக்கும் இடமோ, அவற்றைச் செய்வதற்குரிய நேரமோ அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் மக்கள் நீண்ட நேரம் கர்த்தருக்கு செவிகொடுத்து பசியடைந்தவர்களாக அங்கிருந்தார்கள்.
திடீரென பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலினால் அந்திரேயா ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் வைத்திருந்த ஒரு சிறுவனைக் கவனிக்கிறார். அவர் அச்சிறுவனைப் பார்த்து, “உன்னிடத்திலிருக்கும் மீன்களையும் அப்பங்களையும் தருவாயா” என்று கேட்டார். இந்த உணவு முற்றிலும் போதாது என்று அவர் அறிந்திருந்த காரணத்தினால் அவருக்கும் சந்தேகங்கள் இருந்தது. சீடர்கள் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்றும் இறைவனுடைய சித்தம் என்ன என்றும் இயேசு என்ன செய்யப் போகிறார் என்றும் அறியாதபடியால்,அவர்கள் தங்களுடைய இயலாமையை அறிக்கையிடும்படி இயேசு அவர்களை நடத்தினார்.
ஒரு பெரிய விருந்தில் இருப்பதைப்போல வரிசையாக மக்களைப் பந்தியிருக்கச் செய்யும்படி இயேசு சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
நிலத்தை மூடியிருந்த பசுமையான புற்தரை மக்களிடையே துளிர்த்த விசுவாசத்திற்கு அடையாளமாயிருந்தது. ஐயாயிரம் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் மிகப்பெரிய மக்கள் கூட்டம்தான். அவர்களில் பலர் இதற்கு முதல் இயேசுவையோ அவருடைய அற்புதங்களையோ கண்டதில்லை. இருப்பினும் இயேசுவின் வார்த்தையின்படி பந்தியிருந்தார்கள்.
இயேசு அமைதியாக அப்பத்தை எடுத்து அதன் மூலம் அத்தருணத்தில் தன்னுடைய படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்தச் சித்தமானார். ஐந்து அப்பங்களுக்காக நன்றி சொல்லி அவற்றை பிதாவுக்கு முன்பாக வைத்தார். இறைவன் சிறியதை ஆசீர்வதித்து பெருகச் செய்வார் என்று அவர் விசுவாசித்தார். இருக்கும் கொஞ்சத்திற்காக நன்றி கூறுதலும் அவருடைய பிதாவை கனப்படுத்தியதுமே அந்த அற்புதத்தின் இரகசியம். இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற கொஞ்சத்திற்கு நீங்கள் நன்றியுள்ளவராயிருக்கிறீர்களா, அல்லது அதை எடுத்துக்கொண்டு முறையிடுகிறீர்களா? உங்களுக்கு இருக்கும் கொஞ்சத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களா? இயேசு சுயநலமற்றவராயிருந்தார். இறைவனுடைய அன்பு அவரில் நிறைந்திருந்தது. அவர் தன்னுடைய பிதாவைக் கனப்படுத்தி இறைவனுடைய ஆசீர்வாதங்களை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டிருக்கும் இந்த அற்புதம் எந்தவித ஆரவாரமுமின்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. இயேசுவுக்கு அருகில் இருந்தவர்கள் மட்டுமே அவர் அப்பங்களைப் பிட்டபோது மேலும் அப்பங்கள் உருவானதையும் அது முடிவற்றுப் பெருகியதையும் நேரடியாகக் கண்டிருப்பார்கள். அவர்கள் போய் தேவையான ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு, திரும்ப வந்து மற்றவர்களுக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். இது கிருபையின் அடையாளம். கடவுள் பாவமன்னிப்பையும் பரிசுத்த ஆவியானவரையும் அளவில்லாமல் கொடுக்கிறார். உங்களுக்கு விருப்பமான அளவு எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு கூடிய மட்டும் அவரை விசுவாசியுங்கள். ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்குக் கொடுங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல அவர்களையும் ஆசீர்வதியுங்கள், இவ்வாறு நீங்கள் மற்றவர்களின் ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாறலாம்.
கானாவில் இயேசு தண்ணீரை இரசமாக மாற்றினார், கோலனில் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் போதியளவு அதிகரித்துக் கொடுத்தார். இந்த அற்புதம் செய்யப்படுவதற்கு முன்பிருந்ததைவிட இறுதியில் அதிகமான அப்பங்களும் மீன்களும் மீந்திருந்தது ஆச்சரியமானது. மீதியாக பன்னிரெண்டு கூடைகள் அளவுக்கு உணவிருந்தது, அவற்றை வீணாக்கக்கூடாது என்று இயேசு கட்டளையிட்டார். இன்று ஆயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினியால் சாகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் பலர் மீதியான தங்கள் உணவுகளை குப்பைத் தொட்டியில் போடுவது எத்தனை வெட்கக் கேடானது. உங்கள் கவனமின்மையினால் எதையும் வீணாக்காதீர்கள், கிருபையின் துணிக்கைகளைச் சேகரியுங்கள். இறைவனுடைய அருளின் திரட்சியை நீங்கள் நாடி நின்றால் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.
தன்னுடைய கரத்திலிருந்து பெற்றுக்கொண்ட உணவை இயேசு அதிகரிக்கச் செய்தபோது அந்த சிறுவனுடைய மனநிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவனுடைய கண்கள் ஆச்சரியத்தினால் விரிவடைந்திருக்கும். அவனால் அந்த அற்புதத்தை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
2. இயேசு தன்னை அரசனாக்கும் ஆரவாரத்திலிருந்து ஒதுங்குகிறார் (யோவான் 6:14-15)
யோவான் 6:14-15
14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். 15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். 15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
மனுக்குலத்தை வென்றெடுக்க இயேசு உலகத்திற்கு வந்தார். அவர் ஐயாயிரம்பேருக்கு உணவளித்த பிறகு மக்கள் ஆவலோடு அவரைச் சுற்றி கூட்டம் கூடினார்கள். அரசராக அவரைக் கருதி அவருக்கு முன்பாக கைகளைத் தட்டி ஆரவாரித்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்தக் கலிலேயன் இறைவனுடைய மனிதன் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இறைவனுடைய வார்த்தை அவர் மூலமாக பேசியது என்றும் உன்னதமானவருடைய வல்லமை அவரில் வெளிப்பட்டது என்றும் அவர்கள் அறிந்தார்கள். இயற்கை அவருக்குக் கீழ்ப்படிந்தது. மோசே வனாந்தரத்தில் செய்ததுபோல அவர் மக்களுக்கு உணவளித்தார். வெறுக்கப்பட்ட இனத்தை சத்தியத்திற்குள் நடத்தும் தீர்க்கதரிசியாக வாக்குப்பண்ணப்பட்டவர் அவரே (உபா. 18:15). இயேசு அவர்களுடைய அரசனாக வந்தால் அவர்கள் எதிர்காலத்தில் வேலைசெய்து களைப்படையத் தேவையில்லை என்றும் அவர்கள் கருதினார்கள். “வேதாகமத்தைப் படிக்கவும் விண்ணப்பம் செய்யவும் நம்முடைய நேரத்தை செலவு செய்யலாம், அவர் நமக்கு இலவசமாக உணவளிப்பார். இப்படிப்பட்ட அரசன் ரோமர்களை நிச்சயம் தோற்கடிப்பார். தங்கள் எதிரிகளை அழித்துப்போடும் நெருப்பை அவர் வானத்திலிருந்துகூட வருவிப்பார். நாம் அவருக்கு முடிசூட்டி, அவரை அரசராக அறிவிப்போம்” என்றார்கள். அவர்கள் அனைவரும் அவரை நெருங்கி அவரைத் தங்களுடைய தோள்களில் சுமக்கப் போனார்கள். அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
மக்களின் இந்த ஆரவாரத்தைக் கண்டு இயேசு என்ன செய்தார்? அவரும் மகிழ்ச்சியுற்று, தன்மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்காக அவர்களுக்கு நன்றி சொன்னாரா? அவர் சோதனையில் இழுப்புண்டு அவிசுவாசிகளுடைய உதவியுடன் தன்னுடைய அரசை கட்ட முனைந்தாரா? இல்லை. அவர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை, வனந்தரத்திற்குப் போய்விட்டார். அவர் மனிதர்களால் சுமக்கப்பட விரும்பாமல், இறைவன் தன்னைத் தாங்கினாலே போதும் என்று கருதினார். ஆர்வக்கோளாறினால் நிறைந்த இந்த மக்களைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும், மனக்கிளர்ச்சியில் மூழ்கிப் போயிருக்கும் இந்த மக்கள் அவருடைய ஆலோசனையைக் கேட்க மாட்டார்கள். ஒரு கருத்தினால் உண்டான அரசியல் ஐக்கியம் இது.
இவ்வுலகத்திற்குரிய ஒரு அரசாங்கத்தைக் கட்டுவது இயேசுவின் விருப்பம் அல்ல. அவர் ஒவ்வொருவராக மனந்திரும்புதலுக்குள்ளும் விசுவாசத்திற்குள்ளும் நடத்த விரும்பினார். இரண்டாவது பிறப்பினாலன்றி ஒருவரும் இறையரசுக்குள் நுழைய முடியாது. அற்புத அடையாளங்களின் நோக்கத்தை அந்த மக்கள் கூட்டம் அறிந்துகொள்ளத் தவறியது. அவர்கள் இவ்வுலகத்தின் உணவைப் பற்றி சிந்தித்தார்கள், அவரோ மனித மனதின் ஆழ்ந்த பசியைத் தீர்க்கும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்துப் பேசினார். அவர்கள் இவ்வுலக ஆளுகையையும் வாடிப்போகிற மகிமையையும் குறித்து சிந்தித்தார்கள், அவரோ தன்னுடைய அரசின் அடிப்படையாக சிலுவையைத் தெரிந்துகொண்டார். மனந்திரும்புதலும் மறுபிறப்பும் இல்லாமல் நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவினால் வரவேற்கப்பட மாட்டீர்கள்.
திரள் கூட்டத்தின் மரியாதை இயேசுவுக்குத் தேவைப்படவில்லை. அவர் மனிதரால் வரும் மகிமையை ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தார். சாத்தானுடைய சோதனைகளுக்கு தன்னுடைய மனக்கதவை அவர் அடைத்துவிட்டார். அவர் அவர்களைவிட்டு விலகி விண்ணப்பம் செய்யச் சென்றார். பிதா தம்முடைய ஆவியின் மூலம் குருடாயிருக்கும் கண்களைத் திறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மனிதரால் மட்டும் முடிசூடப்படுவது போதும் என்று அவர் கருதவில்லை. மனிதர்கள் ஒரு நாளில் “ஓசன்னா” என்றும் மறுநாளில் “சிலுவையில் அறையும்” என்றும் கத்துவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். கிறிஸ்துவுக்கு நம்முடைய இருதயங்களைப் பற்றி நன்கு தெரியும், அவர் ஏமாற மாட்டார்.
3. சீடர்களின் துன்பத்தில் இயேசு அவர்களிடம் வருகிறார் (யோவான் 6:16-21)
யோவான் 6:16-21
16 சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17 படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப் போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. 19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். 20 அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 21 அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
16 சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17 படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப் போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. 19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். 20 அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 21 அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
கோலனில் இயேசு தனிமையாயிருக்கும்போது, தூரத்தில் தன்னுடைய சீடர்கள் புயல் காற்றில் தத்தளிக்கிறார்கள் என்பதை அவர் கண்டார். இரவானபோது அவர் தன்னுடைய கால்களினாலேயே ஏரியின் அலைகளின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். தனிமையில் ஆபத்தைச் சந்திக்கும்படி அவர் அவர்களை விட்டுவிடவில்லை. ஆனால் அவர்கள் அவரை ஆவி என்று கருதி பயந்தார்கள். மீனவர்கள் அதிக நேரத்தை கடலிலே செலவிடுவதால் சில வேளைகளில் தாங்கள் ஆவிகளைக் காண்பதாக கற்பனை செய்வார்கள். இயேசு வந்து அவர்களிடம் தனிப்பட்ட முறையில் இரக்கத்துடன் “நான்தான்” என்றார். இந்த கூற்று அப்போஸ்தலருடைய விசுவாசத்தின் அடிப்படையானது. விசுவாசிகளுடன் இருக்கும் கர்த்தருடைய பிரசன்னத்தைக் குறிக்க பழைய ஏற்பாட்டில் “இருக்கிறேன்” என்பது இதற்கு இணையாகச் சொல்லப்பட்டது. இயேசு இவ்வுலகத்திலுள்ள காரியங்கள் அனைத்தின் மீதும் முழு அதிகாரம் உடையவர் என்பதை சீடர்கள் புரிந்துகொண்டார்கள்: அப்பங்கள் அவருடைய கரத்தில் பலுகிப் பெருகின, அவரை அலைகள் சுமந்து வந்தன, அவருடைய சத்தத்திற்கு புயலும் கீழ்ப்படிகிறது. இவற்றை அவர்கள் அறிந்துகொண்டபோது அவர்கள் இன்னும் பயந்தார்கள். ஆகவே அவர் அவர்களைப் பார்த்து பயப்படாதிருங்கள் என்று சொன்னார். எல்லாக் காலத்திலும் அவரைப் பின்பற்றுபவர்களைப் பார்த்து அவர் “பயப்படாதிருங்கள்” என்று கூறுகிறார். பயப்படாதிருங்கள் என்பது வேதாகமத்தில் 365 முறை வருகிறது, வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒருமுறை வருகிறது. கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம்புதல் நம்முடைய பயத்தை மேற்கொள்ளும். உங்கள் நிலை எதுவாயிருந்தாலும், உங்கள் பிரச்சனை எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும், “நான்தான், பயப்படாதிருங்கள்” என்று இயேசு சொல்லுகிறார்.
இயேசுதான் அவர் என்பதை அவருடைய சீடர்கள் அறிந்துகொண்ட போது அவரை தங்கள் படகிற்குள் அழைத்தார்கள். உடனடியாக அவர்கள் கரையை அடைந்தார்கள். இது ஒரே நாளில் நடைபெற்ற மூன்றாவது அற்புதமாகும். காலத்திற்கும் இடத்திற்கும் இயேசுவே ஆண்டவர். அவர் தன்னுடைய சபையாகிய கப்பலை அலைகளையும் புயலையும் கடந்து அது சேருமிடத்திற்கு வழிநடத்தக் கூடியவர். அவர் தம்முடைய சீடர்களை நேசித்து அவர்களிடம் வருகிறார், ஆனால் அவர்கள் அவரை முழுமையாக நம்ப வேண்டும். இருளும் சோதனையும் நிறைந்த இடங்களில் அவர் அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்துகிறார். அப்போது அவர்களுடைய பயங்கள் நீங்கி எப்போதும் அவரை அண்டிக்கொள்கிறார்கள்.
4. ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்ற விருப்பத் தேர்வை இயேசு மக்களுக்குக் கொடுக்கிறார் (யோவான் 6:22-59)
யோவான் 6:22-25
22 மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள். 23 கர்த்தர் ஸ்தோத்திரஞ் செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது. 24 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். 25 கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். 26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
22 மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள். 23 கர்த்தர் ஸ்தோத்திரஞ் செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது. 24 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். 25 கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். 26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இயேசு படகில் செல்லவில்லை என்றும் அவர்களைவிட்டு அவர் எப்படியோ சென்றுவிட்டார் என்றும் மக்கள் உணர்ந்துகொண்டார்கள். இரவில் அவர்களுக்குத் தெரியாமல் இயேசு மறைவாக சென்றிருந்தார்
இலசவமாக கொடுக்கப்பட்ட உணவைப் பற்றிய செய்தியை சுமந்துகொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் கப்பர்நகூமுக்குத் திரும்பினார்கள். மக்கள் ஆச்சரியப்பட்டு தங்களுக்கும் கிடைக்காமல் போய்விட்டதே என்று பொறாமைப் பட்டார்கள். மக்கள் கூட்டம் இயேசுவை அவருடைய சீடர்களின் வீடுகள்தோறும் தேடித்திரிந்து இறுதியில் அவர்கள் நடுவில் அவரைக் கண்டது. “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என்னுடைய நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ அவர்கள் நடுவில் நான் இருப்பேன்” என்ற கிறிஸ்தவ சத்தியத்தை அவர்கள் உணரத் தொடங்கினார்கள்.
அற்புதங்களைக் காண ஆர்வமுள்ளவர்கள் புதிய அற்புதங்களைப் பற்றி அறிந்தார்கள். அவர்கள் “எப்பொழுது இவ்விடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்?” இயேசு அவர்களுடைய கேள்விக்கு பதில் தரவில்லை. மாறாக ஆவிக்குரிய கரிசனையுடன் விசுவாசத்தின் பொருளை அவர்களுக்குக் தெரியப்படுத்தினார். அவர்களில் உண்மையாக அவரைத் தேடியவர்களைத் தன்னுடைய அன்பினால் இழுத்துக்கொண்டு, எதிரிகளின் வஞ்சனையை அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் குளிரும் அற்ற நிலையை இயேசு விரும்பவில்லை, உண்மையான விசுவாசிகளின் வட்டத்தை மேலோட்டமான பக்தர்களின் கூட்டத்திலிருந்து அவர் பிரித்தெடுத்தார்.
யோவான் 6:26-27
26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
இயேசு மக்கள் கூட்டத்தை தெளிவாக எச்சரித்தார். அவர்கள் இயேசுவுக்காக அவரைப் பின்பற்றாமலும் இறைவனைப் பற்றிய சரியான சிந்தனையற்றவர்களாகவும் தங்கள் வயிற்றைப் பற்றியும் உணவைப் பற்றியும் மட்டுமே சிந்தித்தார்கள் என்று கூறினார். நான் அற்புதத்தைச் செய்தபோது உங்களுடைய பசியை தீர்ப்பது மட்டும் என்னுடைய நோக்கமல்ல,என்னுடைய வல்லமையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். நீங்கள் கொடைகளையே தேடுகிறீர்கள் கொடுப்பவரை விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் உலகத்திற்கு ஏற்ற காரியங்களைச் சிந்திக்கிறீர்கள்,என்னுடைய தெய்வீகத்தை நீங்கள் விசுவாசிப்பதில்லை
நாள் முழுவதும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் மட்டும் உழைக்காதீர்கள், இறைவனுடைய வல்லமைக்கும் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள். உண்பதற்காகவே வாழும் மிருகங்களைப் போல் இல்லாமல், ஆவியாயிருக்கிற இறைவனிடத்தில் சேருங்கள். அவர் தன்னுடைய முடிவற்ற வாழ்வைக் கொடுப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.
இயேசு மேலும் அவர்களுக்கு விளக்கப்படுத்தினார்: இறைவனுடைய மாபெரும் கொடையைக் கொடுப்பதற்காகவே நான் உலகத்திற்கு வந்தேன். நான் வெறும் மாம்சமும் இரத்தமுமுள்ள மனிதன் மட்டுமல்ல. உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக நானே அந்தக் கொடையை என்னில் சுமக்கிறேன். உங்களுக்கு ஆவிக்குரிய வாழ்வைக் கொடுக்கவும் பரலோக வல்லமையினால் உங்களை உயிர்ப்பிக்கவும் இறைவன் என்னைப் பரிசுத்த ஆவியினால் முத்தரித்திருக்கிறார்.
இந்தக் கூற்றின் மூலம் இறைவன் எல்லார் மீதும் கரிசனையுள்ளவராக, முழு மனுக்குலத்தையும் போஷித்து அவர்களை நேசிக்கிறார் என்ற மாபெரும் இரகசியத்தை அறிவித்தார். ஆசீர்வதிப்பதற்கு முன்பாக நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிற கோபமுள்ள தெய்வமல்ல அவர். அவர் நீதிமானையும் துன்மார்க்கனையும் ஆசீர்வதிக்கிறார், வேறுபாடின்றி அனைவரின் மீதும் தன்னுடைய சூரியனை உதிக்கப்பண்ணுகிறார். நாத்திகர்களுக்கும் இறைவனைத் தூஷிக்கிறவர்களுக்கும்கூட அவர் அப்படியே செய்கிறார். இறைவன் அன்பாயிருக்கிறார், அந்த திரளான மக்களை அவர்களுடைய உலக சிந்தையிலிருந்து விடுவித்து பிதாவாகிய இறைவனிடம் திரும்பக் கொண்டுவரும்படி இயேசு முயற்சித்தார். அதனால் அவர் தன்னுடைய அரசு உணவு, செல்வம் மற்றும் ஆளுகை ஆகியவற்றைச் சார்ந்த இவ்வுலகத்திற்குரிய அரசு அல்ல என்றும் தம்மிடத்தில் கேட்கிறவர்களுக்கு ஆவியானவரைக் கொடுக்கிற கிறிஸ்துவிடம் வரும் மக்களுக்கு அவர் அருளும் ஆன்மீக வாழ்வின் அரசாகும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
யோவான் 6:28-29
28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
அந்த மக்கள் கூட்டம் இயேசு என்ன சொல்லுகிறார் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் இறைவனிடமிருந்து ஒரு பெரிய கொடையைக் கொடுக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டார்கள். அனைவரும் அந்த முடிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். அந்தக் கொடைக்காக அவர்கள் எதையும் செய்வதற்குக் கூட ஆயத்தமாயிருந்தார்கள். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல், பலி செலுத்துதல், உபவாசித்தல், விண்ணப்பித்தல் மற்றும் புனிதப் பயணங்கள் மேற்கொள்ளுதல் போன்ற மனித செயல்களினால் இறைவனுடைய கொடையை சம்பாதிக்கலாம் என்று நினைத்தார்கள். இங்கே நாம் அவர்களுடைய குருட்டுத்தனத்தைக் காண்கிறோம். அவர்கள் நியாயப்பிரமாணவாதிகளாக சட்டத்தைக் கைக்கொள்வதினால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இழந்து போனவர்களாகவும் இருப்பதால் அவ்வாறு அவர்களால் இறைவனுடைய கொடையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் உணரத் தவறினார்கள். அவர்கள் இறைவனுடைய செயலைச் செய்வதாகவும், தங்களிடம் பரிசுத்தம் இருப்பதாகவும், அவற்றைச் செய்வதற்கு தங்களுக்கு வல்லமை இருப்பதாகவும் கருதிக்கொண்டார்கள். மனிதன் தன்னுடைய இருதயத்தின் மெய்யான நிலையை அறியமுடியாத அளவுக்கு குருடனாக இருக்கிறான். ஆனால் தன்னை ஒரு சிறிய இறைவனாக கருதிக்கொண்டு, தன்னைப் பார்த்து இறைவன் பிரியம்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
அவர்கள் அப்படிப்பட்ட காரியங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை என்றும் தன்னை விசுவாசித்தால் மட்டும் போதும் என்றும் அழைக்கப்பட்டார்கள். இறைவன் நம்முடைய முயற்சியையோ அல்லது பெலத்தையோ கேட்காமல், நாம் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இந்த வார்த்தை அந்த மக்களுக்கு இடறலை உண்டுபண்ணியது. இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையில் பிரிவினை ஆரம்பமானது. அவர்கள் அவரை விசுவாசிக்க வேண்டும் என்றுதான் இறைவன் செயல்படுகிறார் என்பதை அவர்களுக்கு அவர் மேலும் விளக்கினார். “நீங்கள் உங்கள் ஆத்துமாக்களை பரிசுத்த ஆவிக்கு திறந்துகொடுத்தால், என்னுடைய அதிகாரத்தையும், நோக்கங்களையும், அன்பையும் அறிந்துகொள்வீர்கள். அப்பொழுது நான் ஒரு தீர்க்கதரிசி மட்டுமல்ல என்றும், பிதாவினால் உங்களிடத்தில் அனுப்பப்பட்ட குமாரன் என்றும் உணர்ந்துகொள்வீர்கள்.”
இயேசுவை விசுவாசித்தல் என்பது அவரைப் பற்றிக்கொண்டு, அவர் உங்கள் வாழ்வில் செயல்படும்படி அனுமதித்து, அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருடைய வல்லமையினால் முடிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்வதாகும். விசுவாசம் என்பது இவ்வுலகிலும் மறுமையிலும் கிறிஸ்துவோடு இணைந்துகொள்வது. விசுவாசிகளை தன்னுடைய குமாரனுடன் இணைப்பது இறைவனுடைய செயல். அப்பொழுது அவர்களுடைய வாழ்வில் இருந்து பாவம் மறைந்து, அவர்கள் எப்போதும் அவரில் நிலைத்திருப்பார்கள்.
யோவான் 6:30-33
30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? 31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். 32 இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 33 வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? 31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். 32 இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 33 வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
அவரிடம் வந்த மக்கள் கூட்டத்திடம் முழுமையான ஒப்புக்கொடுத்தலை இயேசு கோரியது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இறைவனுக்கு மட்டுமே தாங்கள் செலுத்த வேண்டியதை இயேசு அவர்களிடம் கேட்டுவிட்டார் என்று அவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே அவருடைய கோரிக்கையை நியாயப்படுத்தும் ஒரு ஆதாரத்தை அவரிடம் அவர்கள் கேட்டார்கள். “நீர் உம்முடைய தெய்வீகத்திற்கான ஆதாரத்தைக் காண்பியும். மோசே வானந்தரத்தில் மக்களுக்கு மன்னாவை அனுதினமும் புதுமையாகக் கொடுத்தார். ஆனால் நீர் ஒருமுறை மட்டுமே எங்களுக்கு அப்பத்தைக் கொடுத்தீர். இலட்சக் கணக்கான மக்களுக்கு மோசே உணவளித்தார். நீரோ ஐயாயிரம் பேருக்கு மட்டுமே உணவளித்தீர். நாங்கள் நம்பும்படி இன்னும் ஒரு அற்புதத்தை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டார்கள். இதுதான் மனிதனுடைய பிரச்சனை. அவன் இயேசுவின் நிபந்தனையற்ற அன்புக்குத் தன்னை ஒப்புக்கொடாமல் முதலில் தனக்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறான். ஆனால் இயேசு, “காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களே தங்களுடைய நம்பிக்கையினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்” என்று கூறுகிறார்.
நியாயப்பிரமாணத்தின் மூலம் இரட்சிப்பு என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களை படிப்படியாக தன்மீது விசுவாசம்கொள்ளும்படி நடத்தும் இயேசுவைப் போல் மேலான போதகர் யாரும் இல்லை. உணவுக்காக அலைந்தவர்களை விடுவித்து அவர்களை ஒளிர்வித்தார்; அவரே இறைவனுடைய மாபெரும் கொடையாக இருக்கிறார்.
இயேசு அவர்களுக்கு மெதுவாக விளக்கம் கொடுக்கும்போது, வேதாகமத்தைக் குறித்த அவர்களுடைய தவறான நம்பிக்கைகளைக் களைந்தார். மோசேதான் மன்னாவைக் கொடுத்தார் என்று அவர்கள் கருதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இறைவனே அனைத்தையும் கொடுக்கும் செழிப்புள்ள கொடையாளன். இறைவன் அதிலும் சிறப்பான என்றும் அழியாத பரலோக உணவைக் கொடுப்பவர் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அவர்கள் கவனித்தபோது இயேசு தன்னை இறைமகன் என்று அழைத்ததை அவர்கள் கவனித்தார்கள், ஏனெனில் அவர் இறைவனைப் பிதா என்று அழைத்தார். ஆனாலும் அந்த மக்கள் கூட்டம் இன்னும் மோசேயின் கரத்தினால் பரலோகத்திலிருந்து வரும் இவ்வுலகத்திற்குரிய உணவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
இறைவன் அருளும் உணவு அவர்களுடைய வயிற்றுப் பசியை நீக்குவதற்குரியதல்ல என்றும் சத்தியத்திற்கும் முடிவற்ற வாழ்வுக்கும் ஏங்கும் மனிதனுடைய அகப்பசியை ஆற்றும் கிறிஸ்து என்னும் நபரே அந்த உணவு என்றும் அவர்களுக்கு உணர்த்தினார். அதைக் கொடுப்பதற்காக பரலோகத்திலிருந்து வல்லமையோடும் ஆசீர்வாதங்களோடும் அவர் வந்திருக்கிறார். இறைவன் தரும் உணவு அழிந்துபோகக்கூடிய இவ்வுலகத்திற்குரிய உணவல்ல, அது என்றென்றைக்கும் இருக்கும் ஆவிக்குரிய உணவாகும். மன்னாவைப் போல அவர்கள் அதை மண்ணிலிருந்து பொறுக்க வேண்டியதில்லை, அது அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலத்திற்கும் இறைவனிடமிருந்து வரும் உணவாகும். அது ஆபிரகாமுடைய வித்துக்கு மட்டுமுரியதல்ல, ஏனெனில் அவர் முழு உலகத்தையும் குறித்து கரிசனையுள்ளவராயிருக்கிறார்.
யோவான் 6:34-35
34 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். 35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
34 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். 35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
தனக்கு செவிகொடுத்த மக்களை இறைவனுடைய உணவுக்கான பசியைத் தூண்டிவிட்டு, இவ்வுலக சிந்தையிலிருந்து அவர்களை விடுவித்தார். இரட்சிப்பைக் குறித்த கரிசனையை அவர்களில் உண்டுபண்ணி, இறைவனுடைய கொடையைப் பெற்றுக்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தினார்; தன்னை விசுவாசிப்பதன் அவசியத்தை அவர்களுக்கு அவர் உணர்த்தினார்.
ஆர்வமடைந்த மக்கள் கூட்டம், “தெய்வீக அப்பத்தைத் தருபவரே, நாங்கள் கஷ்டப்பட்டு உழைக்காமல் இருப்பதற்கு, இந்தத் தனிச்சிறப்பான கொடையை நீர் எப்போதும் எங்களுக்குத் தரவேண்டும். நாங்கள் உம்மைச் சார்ந்திருக்கிறோம், முடிவற்ற வாழ்வினால் நிரப்பும், உம்முடைய வல்லமையைத் தாரும்!” என்று கோரினார்கள். அவர்கள் இன்னும் இவ்வுலகத்திற்குரிய உணவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இறைவன் அருளும் கொடை தனிச்சிறப்பானது என்பதையாகிலும் அறிந்துகொண்டார்கள்.
இயேசு தன்னிடம் வரும் எவரையும் புறக்கணிப்பதில்லை. அவர் முதன்மையாக முழு உலகத்திற்கும் இறைவனுடைய உணவைக் கொடுப்பவர்தான், இவ்வுலகத்திற்குரிய உணவைக்கொடுப்பதற்காக அவர் முதன்மையாக வரவில்லை. அவர் மனிதனுக்கு நித்திய வாழ்விற்குரிய அனைத்தையும் கொடுப்பதற்காக மனிதனாக வந்தவர். “என்னையல்லாமல் நீங்கள் முடிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. இறைவனிடமிருந்து உங்களுக்குத் தரப்படும் கொடை நானே. நானின்றி நீங்கள் மரணத்தில்தான் நிலைத்திருப்பீர்கள்.”
“உணவு எவ்வாறு உங்களுக்குள் சென்று வாழ்விற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறதோ, அது போல நானும் உங்களுக்குள் வந்து, உங்கள் மனதையும் மனசாட்சியையும் புதுப்பித்து, ஆவியின் மூலமாக உங்களுக்குள் வாசமாயிருக்க விரும்புகிறேன். நானின்றி உங்களால் எதுவும் செய்ய முடியாது. அனுதினமும் நான் உங்களுக்குத் தேவை, நான் இலவசமாக என்னை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு எந்த விலையும் கொடுக்கத் தேவையில்லை. நான் உங்கள் இதயத்தில் நுழைய மட்டும் இடம் கொடுங்கள்.” சகோதரனே உங்களுக்கு கிறிஸ்து தேவை. அவருடைய வார்த்தைகளை வாசிப்பதும் அவருடைய சிந்தனைகளைப் புரிந்துகொள்வதும் மட்டும் போதாது. அவர் தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தேவை. அனுதினமும் உங்களுக்கு உணவும் தண்ணீரும் தேவைப்படுவதுபோல அவரும் உங்களுக்கு அத்தியாவசிய தேவையாயிருக்கிறார். அவரை பெற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்களைப் பொறுத்தது.
என்னுடைய ஆள்த்தன்மையின் மையத்தில் அவர் எப்படி நுழைய முடியும் என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். அதற்கு அவர் கூறும்பதில்: உங்கள் இருதயம் எனக்காக ஏங்கட்டும், என் அருகில் வாருங்கள், என்னை நன்றியோடு பெற்றுக்கொள்ளுங்கள், என்னை நம்புங்கள். இயேசு நம்முடைய இருதயத்திற்குள் வருவது விசுவாசத்தினால் நடைபெறுகிறது. இறைவனுடைய கொடையாக அவரையே உங்களுக்கு இலவசமாகத் தருவதற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். அவர் உங்களில் வாழ ஆயத்தமாயிருப்பதற்காக அவரை மகிழ்ச்சியோடு துதியுங்கள். நீங்கள் கேட்டால் உங்களில் நிரந்தரமாக வாழும்படி அவர் வருவார்.
“நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டபடியால், நான் உங்களில் நிலைத்திருப்பேன், வாழ்வின் மீதான உங்கள் பசியைத் தீர்ப்பேன். இந்த உலகத்தின் மதங்களா அல்லது தத்துவங்களா எது சரியென்று இனிமேல் நீங்கள் விவாதிக்க வேண்டாம். ஒவ்வொரு சேற்று நீரையும் பருக விளையாதீர். நான் உங்களுக்கு வல்லமையையும், அர்த்தத்தையும், சமாதானத்தையும் தருவேன்” என்று இயேசு உங்களுக்கு உறுதியளிப்பார்.
யோவான் 6:36-40
36 நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். 37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. 38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். 39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. 40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
36 நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். 37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. 38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். 39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. 40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
இரக்கத்தின் அப்பத்தை இயேசு ஏற்கனவே கலிலேயர்களுக்குக் கொடுத்திருந்தார். சகல அதிகாரமுமுடையவராக அவரை அவர்கள் கண்டிருந்தார்கள். அந்தப் புரிந்துகொள்ளுதல் அவர்கள் உள்ளத்தில் பதியவில்லை, அதனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும் நிலைக்கு முன்னேறிச் செல்லவுமில்லை. அவர்கள் இன்னும் நிச்சயமற்றவர்களாகவே தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அப்பமாக இயேசுவை விசுவாசிக்க ஆயத்தமாயிருந்த அவர்கள், அவரை ஒரு நபராக நம்பத் தயங்கினார்கள். அவர்கள் அவரை நன்றியோடு ஏற்றுக்கொள்ளவில்லை.
இயேசு எருசலேமில் சொன்னதைப் போலவே அவர்களைவிட்டுத் தான் விலகிச் செல்வதற்கான காரணத்தை இங்கும் வலியுறுத்திக் கூறினார். ஏன் அநேகர் இயேசுவை நம்புவதில்லை? ஆச்சரியப்படத்தக்க முறையில் “அது உங்களுடைய தவறு” என்று இயேசு சொல்லாமல், பிதாவைக் காரணம் காட்டினார். விசுவாசம் எவ்வாறு ஒரு தெய்வீக செயலாகக் கட்டி எழுப்பப்படுகிறது என்று அவர்களுக்குக் காண்பித்தார்.
வெறும் வாதத்தினாலோ அல்லது தந்திரத்தினாலோ யாரையும் வென்றெடுக்க இயேசு விரும்பவில்லை; பாவிகளைப் பற்றி இறைவன் அறிந்திருக்கிற காரணத்தினால் அவரே விசுவாசத்தை அவர்களுக்குக் கொடுத்து மனந்திரும்புவதற்கும் மனமாற்றம் அடைவதற்கும் தேவையான ஆயத்தத்தைக் கொடுக்கிறார். ஆவியானவரினால் இழுத்துக்கொள்ளப்படுபவர்கள் மட்டுமே கிறிஸ்துவிடம் சேருவார்கள். பொய்யர்கள், விபச்சாரக்காரர், திருடர்கள் போன்ற யார் மனந்திரும்பி அவரிடம் வந்தாலும் அவர்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு அருகில் வரும் எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை, அவருடைய எதிரிகளைக் கூட. அவர்கள் மீது அவர் இரக்கம் வைத்து அவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறார்.
கிறிஸ்து தனக்காக வாழவில்லை, அவர் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்றவாறு தன்னுடைய வாழ்க்கையைத் திட்டமிடவுமில்லை. அவர் தன்னுடைய பிதாவின் சித்தத்தைச் செய்யவும், அவருடைய அன்பின் நோக்கங்களை பரிபூரணமாக நிறைவேற்றவும், இழந்துபோன பாவிகளை இரட்சிக்கவும், அவரில் நிலைத்திருக்க விரும்பும் விசுவாசிகளைக் காத்துக்கொள்ளவுமே இறங்கி வந்தார். அவருடைய இரக்கமும் வல்லமையும் மாபெரியவைகள். அவருடைய கரத்திலிருப்பவர்களை மரணமோ, சாத்தானோ, பாவமோ எதுவும் பறித்துவிட முடியாது. அவருடைய இரக்கத்தினால் நியாயத்தீர்ப்பு நாளில் அவர் தன்னைப் பின்பற்றியவர்களை உயிரோடு எழுப்புவார்.
நீங்கள் இறைவனுடைய சித்தத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர் தன்னுடைய குமாரனை நீங்கள் காணவும், அவரை அறியவும், அவரை நம்பவும் வேண்டும் என்று விரும்புகிறார். அவர் ஆவியினால் பிறந்து கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்திருக்கிறார். ஒரு நித்தியமான உடன்படிக்கையில் அனைத்து விசுவாசிகளுடனும், நீங்களும் இரட்சகருடன் இணைந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதன்மூலம் உங்களைப் பற்றிய இறைவனுடைய திட்டம் நிறைவேறும். பரிசுத்த ஆவியானவர் ஒருவருடைய பெலவீனமான சரீரத்தினுள் வருவதன் மூலமாக அவர் உடனடியாக நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார். இயேசுவில் விசுவாசம் வைக்கும்போது இந்த நித்திய வாழ்வு உங்களில் காப்புறுதி செய்யப்படுகிறது. அந்த நித்திய வாழ்வு அன்பிலும், சந்தோஷத்திலும், சமாதானத்திலும், தாழ்மையிலும் வெளிப்படுத்தப்படுகிறது. உங்களிலிருக்கும் இறைவனுடைய வாழ்விற்கு முடிவிராது. இறைவனுடைய சித்தத்தின் இறுதித் திட்டம் இயேசு உங்களை மரித்தோரிலிருந்து எழுப்புவதாகும். இதுதான் விசுவாசிகளுடைய நம்பிக்கை. இறைமகனுடைய மகிமையும் அவருடைய அன்பின் பிரகாசமுமாகிய வாழ்வின் உச்சநிலை இறைமகனாலேயே உங்களுக்கு அளிக்கப்படும்.
யோவான் 6:41-42
41 நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: 42 இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
41 நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: 42 இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
கலிலேயர்கள் யூதர்களுடைய இனக்குழுவைச் சேராதவர்களாயிருந்தபோதிலும், நற்செய்தியாளனாகிய யோவான் அவர்களை யூதர்கள் என்றே அழைக்கிறார். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் ஆவியைப் புறக்கணித்தபடியால் அவர்கள் தெற்கில் வாழ்ந்த யூதர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் அல்ல.
வேதபாரகர் இயேசுவைப் புறக்கணிப்பதற்கு இன்னொரு காரணத்தை உருவாக்கினார்கள். ஏனெனில் அவர்களுடைய சட்டரீதியான சிந்தனையும் அவர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள நினைத்ததும் இயேசுவின் அன்புடன் முரண்பட்டு நின்றது. ஆனால் கலிலேயர்கள் இயேசுவின் சமூகத்தின் அடிப்படையில் அவரை நிராகரித்தார்கள். அவருடைய தகப்பன் (தச்சனாகிய யோசேப்பு) அவர்கள் நடுவில் வாழ்ந்தவர், எளிமையானவர், தீர்க்கதரிசனம் அல்லது சிறப்பான வரங்கள் எதுவும் இல்லாதவர். அவருடைய தாயார் எந்தவகையிலும் மற்றப் பெண்களைவிட சிறந்தவர் அல்ல. அவர் விதவையாக இருந்தார். அது அந்நாட்களில் இறைவனுடைய கோபத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இக்காரணங்களால் கலிலேயர்கள் இயேசுவே பரலோக உணவு என்பதை விசுவாசிக்கவில்லை.
யோவான் 6:43-46
43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். 44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். 46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். 44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். 46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
இயேசு தன்னுடைய பிறப்பின் அதிசயத்தை அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதால் அதை அவர்களுக்கு விளக்க முற்படவில்லை. மனிதனாகிய இயேசுவின் தெய்வீகத் தன்மையை பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி நம்மாலும் புரிந்துகொள்ள முடியாது. யாரெல்லாம் விசுவாசத்தோடு அவரிடத்தில் வருகிறார்களோ அவர்கள் இந்த மாபெரும் உண்மையை அறிந்துகொள்வார்கள்.
இயேசு தன்னுடைய பிறப்பின் அதிசயத்தை அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதால் அதை அவர்களுக்கு விளக்க முற்படவில்லை. மனிதனாகிய இயேசுவின் தெய்வீகத் தன்மையை பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி நம்மாலும் புரிந்துகொள்ள முடியாது. யாரெல்லாம் விசுவாசத்தோடு அவரிடத்தில் வருகிறார்களோ அவர்கள் இந்த மாபெரும் உண்மையை அறிந்துகொள்வார்கள்.
இறைவன் தன்னுடைய அன்பினால் மக்களை இயேசுவாகிய இரட்சகரிடம் இழுக்கிறார். எரேமியா 31:3ல் வாசிக்கிறபடி அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்குப் போதிக்கிறார். புதிய ஏற்பாட்டில் மனிதனுடைய சித்தமோ அல்லது சிந்தையோ விசுவாசத்தைக் கொண்டுவருவதில்லை. மாறாக பரிசுத்த ஆவியானவர்தான் நமக்குள் ஒளிவீசி, நமக்குள் தெய்வீக வாழ்வை உண்டுபண்ணி, வல்லமையுள்ள இறைவனே உண்மையான இறைவனும் நம்முடைய பிதாவுமானவர் என்று நம்மை உணரச் செய்கிறார். அவர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பித்து, அவர்களுடன் நேரடியான உறவை வைத்திருக்கிறார். ஆவியானவருடைய அழைப்பின் மூலமாக அவர் விசுவாசத்தை நம்முடைய இருதயத்திலே படைக்கிறார். அவருடைய அழைப்பை உங்கள் மனசாட்சியில் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? இறைவனுடைய அன்பின் அசைவாடுதலுக்கு நீங்கள் உங்களைத் திறந்துகொடுக்கிறீர்களா?
பிதாவின் ஆவியானவர் இயேசுவிடம் நம்மை நடத்தி, அவரை நோக்கி நம்மை நகர்த்துகிறார். நாம் இயேசுவைச் சந்தித்து அவரை நேசிக்குமளவும் அவரைக் குறித்த விருப்பத்தை நம்மில் தூண்டி விடுகிறார். நாம் இருக்கும் வண்ணமாகவே அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறார். அவர் நம்மைப் புறம்பே தள்ளுவதில்லை. அவருடைய பிதாவின் மகிமையில் நாம் நுழையும்படி அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கடைவதற்காக அவர் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கிறார்.
இருப்பினும் இயேசுவுக்கும் மறுபிறப்படைந்த விசுவாசிக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இன்னும் இருக்கிறது. குமாரனைத் தவிர இறைவனைக் கண்டவர் எவரும் இல்லை. அவர் ஆதிமுதல் பிதாவுடன் இருந்து அவரைக் கண்டிருக்கிறார். பிதாவும் குமாரனும் பிரிக்க முடியாதவர்கள். இயேசு பரலோக சமாதானத்திலும் அனைத்து தெய்வீக குணாதிசயங்களிலும் பங்கடைகிறார்.
யோவான் 6:47-50
47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 ஜீவ அப்பம் நானே. 49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 ஜீவ அப்பம் நானே. 49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
இயேசு தனக்கும் பிதாவுக்கும் இருக்கின்ற ஐக்கியத்தையும் அவருடைய வார்த்தைகளைக் கேட்கிறவர்களில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதையும் பற்றி விளக்கிவிட்டு, அவர்கள் தன்னை விசுவாசிக்கும்படி அவர் தன்னுடைய அடிப்படைத் தன்மையைக் குறித்த சத்தியத்தை அவர்களுக்கு முன்வைத்தார். கிறிஸ்தவ கொள்கையை அவர் சுருக்கமாக விளக்கினார்: இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் என்றும் வாழ்வார்கள். இந்த சத்தியத்தின் நிச்சயத்தை மரணத்தாலும் மறுக்க முடியாது.
இயேசு பரலோகத்திலிருந்து உலகத்திற்கு இறைவனால் அனுப்பப்பட்ட உணவைப் போல இருக்கிறார். ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்தில் இயேசுவின் கரங்களில் வந்த உணவு எப்படி முடிவின்றி மனிதர்களுடைய பசியைத் தீர்த்ததோ அப்படியே, தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருக்கிற காரணத்தினால் எல்லாக் காலத்திற்கும் இயேசு முழு உலகத்தின் தேவைக்கும் போதுமானவராயிருக்கிறார். அவரிடமிருந்து நீங்கள் நம்பிக்கை, சந்தோஷம் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஒரே வரியில் சொன்னால், உலகத்திற்கான இறைவனுடைய வாழ்வு அவர்தான், ஆனால் உலகமோ அவரை நிராகரித்தது.
வனாந்தரத்தில் மன்னா வானத்திலிருந்து இறைவனுடைய கொடையாக கொடுக்கப்பட்டது; ஆனால் இந்த ஏற்பாடு கொஞ்ச காலம்தான் நிலைத்தது. அதை உண்டவர்கள் அனைவரும் இறந்து போனார்கள். அவ்விதமாகவே இன்று நாம் காணும் நற்பணிகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் சில காலம், அதுவும் அரைகுறையாகவே நமக்கு உதவக்கூடியவை. இந்த தொழிற்சாலைகளில் மரணத்திற்கு மருந்தோ பாவத்திற்குத் தீர்வோ கிடையாது. ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் இறப்பதில்லை. உங்களில் வந்து வாழ்வதில் கிறிஸ்துவின் நோக்கம் இதுதான். மற்ற எந்த ஆவியும் உங்களை ஆளக்கூடாது என்பதற்காக அவர் தனிப்பட்ட முறையில் உங்களில் வந்து வாழ விரும்புகிறார். அவர் உங்களிலுள்ள எல்லா தீய விருப்பங்களையும் அணைத்துப் போட்டு, உங்கள் பயங்களை நீக்கி, உங்கள் பெலவீனத்தில் உங்களை பெலப்படுத்துவார். உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இறைவனுடைய உணவு அவரே. மற்ற பாவிகளைப்போல நீங்களும் சாகாமல் இருக்க வேண்டுமாயின் அவரை உட்கொண்டு வாழ்வடையுங்கள்.
யோவான் 6:51
51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
உணவு எங்காவது அசைவதையும் பேசுவதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இயேசு தன்னை வாழ்வுதரும் உணவு – ஜீவ அப்பம் – என்கிறார். அவர் இவ்வுலகின் உணவைப் பற்றி பேசாமல், பரத்திலிருந்து வரும் ஆவிக்குரிய, தெய்வீக உணவைக் குறித்துப் பேசுகிறார். நாம் அவருடைய மாம்சத்தை அப்படியே உண்ண வேண்டும் என்று அவர் கூறவில்லை. நாம் மனித மாம்சத்தை உண்பவர்கள் அல்ல.
சீக்கிரமாகவே இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றி பேசத் தொடங்கினார். அவருடைய ஆவிக்குரிய தன்மை அல்ல, அவருடைய மனுவுருவாதலே மனுக்குலத்தை மீட்டுக்கொண்டது. அவர் தன்னையே நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுப்பதற்காக மனிதனானார். அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இடறலடைந்தார்கள். அவர் ஒரு சாதாரண மனிதனைப்போல காணப்படுகிறார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். ஒரு தேவதூதனைப் போல பரலோகத்திலிருந்து வந்து தோன்றியிருந்தால் அவர்கள் பாராட்டி அவரை வரவேற்றிருப்பார்கள். அவருடைய மகிமையும் ஆவியும் அவர்களை விடுவிக்காது, மனுக்குலத்திற்காக ஒப்புக்கொடுக்கப்படும் அவருடைய உடலே அவர்களை விடுவிக்கும் என்று இயேசு விளக்கப்படுத்தினார்.
யோவான் 6:52-56
52அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். 53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
52அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். 53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
யூதர்கள் நடுவில் இயேசுவை விசுவாசித்தவர்களும் இருந்தார்கள் அவரைப் புறக்கணித்தவர்களும் இருந்தார்கள். அந்த இரண்டு குழுக்களும் தங்களுக்குள் தீவிரமாக வாதிட்டுக்கொண்டன. இயேசுவின் சரீரத்தை உண்பது அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்ற சிந்தனையை அவருடைய எதிரிகள் வெறுத்தார்கள். இயேசு யார் தன்னை நம்புகிறார்கள் என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அந்த இரண்டு குழுக்களுக்கிடையிலான பிரிவினையை ஆரம்பித்து வைக்கிறார். அவர் ஒரு குழுவினுடைய அன்பைப் பரிசோதிக்கிறார். மற்ற குழுவினுடைய குருட்டுத்தனத்தை வெளிப்படுத்துகிறார். “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னில் பங்கடையாதவர்கள் மரணத்திலும் பாவத்திலும் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்” என்று சொன்னார். இந்த வார்த்தைகள் அவர்களுடைய காதுகளில் தேவதூஷணம்போல தொனித்தது. அவர்கள் “என்னைக் கொன்று சாப்பிடுங்கள், நான் அற்புதமாக இருக்கிறேன். என்னுடைய உடல் உங்களுக்குக் கொடுக்கப்படும் தெய்வீக வாழ்வாகிய உணவு” என்று இயேசு சொன்னதைப் போல அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்களுடைய இரத்தம் கொதிக்க அவர்களுக்கு கடும் கோபம் மூண்டது. ஆயினும் அவரை நம்பியவர்கள் பரிசுத்த ஆவியினால் இழுக்கப்பட்டு, இந்த உன்னதமான சத்தியத்தை விசுவாசித்து, அவருடைய வார்த்தைகளின் பொருளைப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் பஸ்காவைப் பற்றி சற்று சிந்தித்திருந்தால், யோவான் ஸ்நானகன் இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டியதை நினைவுகூர்ந்திருப்பார்கள். அனைத்து யூதர்களுமே பஸ்காப் பண்டிகையில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியை உண்டார்களே. தங்களை பலிகளோடு அடையாளப்படுத்திக் கொள்வதால் இறைவனுடைய கோபத்திலிருந்து தப்பிக்கத்தானே அவர்கள் அவ்வித பண்டிகையைக் கொண்டாடினார்கள். உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி நானே என்பதை இயேசு அவர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டினார்.
இன்று கர்த்தருடைய பந்தி அவருடைய சரீரத்தை நாம் உட்கொள்கிறோம் என்பதற்கும் அவருடைய இரத்தம் நம்முடைய பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது என்பதற்கும் அடையாளமாயிருக்கிறது. அவருடைய கிருபைக்காக நாம் அவருக்கு நன்றி சொல்லுகிறோம். கலிலேயர்கள் அத்தருணத்தில் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ளவில்லை, அவருடைய வார்த்தைகள் அவர்களுடைய சிந்தையைக் குழப்பியது. இயேசு அவர்களுடைய விசுவாசத்தைப் பரிசோதித்தார். அவர்களுடைய பிடிவாதம் அவர்களுடைய கோபத்தில் வெளிப்பட்டது.
கர்த்தருடைய பந்தியில் கிறிஸ்து, தாம் எவ்வாறு பரிசுத்த ஆவியின் மூலம் நம்மிடம் வருகிறார் என்பதை அடையாளத்தின் மூலம் நமக்கு விளக்குகிற காரணத்தினால் நாம் அவரை மகிழ்வோடும் நன்றியோடும் தொழுதுகொள்கிறோம். அவருடைய பலியின்றி நாம் இறைவனிடம் சேரவோ அவரில் வாழவோ முடியாது. நம்முடைய பாவங்களுக்கான பரிபூரண மன்னிப்பு அவர் நம்மிடத்தில் வருவதை அனுமதிக்கிறது. அவரில் நாம் வைக்கும் விசுவாசம் இந்த அற்புதத்தை நடப்பித்து, அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலில் நம்மைப் பங்குள்ளவர்களாக்குகிறது. நம்மை மீட்டுக் கொண்டதற்காக நாம் ஆட்டுக்குட்டியானவரைத் தொழுதுகொள்கிறோம். கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்ததோடு திருப்தியடையாமல், நாம் என்றும் பரிசுத்தவான்களாக வாழும்படி நம்மை நிரப்பவும் விரும்புகிறார்.
யோவான் 6:57-59
57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
உயிருள்ள பிதாவாகிய வல்லமையுள்ள இறைவனில் வாழ்வதைப் பற்றி கிறிஸ்து நமக்குச் சொல்லுகிறார். அவர் ஆதியும் அந்தமும் அனைத்து அன்பின் பிதாவுமானவர். கிறிஸ்து பிதாவில் வாழ்கிறார். ஆனால் அவர் தனக்காக வாழாமல் பிதாவுக்காக வாழ்கிறார். அவர் தன்னுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலமாக அல்ல தன்னைப் பெற்றெடுத்த பிதாவின் விருப்பத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிவதன் மூலமாக தன் வாழ்விற்கான பொருளைக் கண்டுகொள்கிறார். குமாரன் பிதாவைச் சேவிக்கிறார். பிதா குமாரனை நேசித்து, குமாரன் மூலமாக தன்னுடைய முழுமையில் பணிசெய்கிறார்.
தனக்கு எதிராக வெகுண்டெழும் மக்களிடம் தனக்கும் பிதாவுக்குமிடையிலான உறவின் இரகசியத்தை இயேசு வெளிப்படுத்தினார். ஒரு மிகப் பெரிய வெளிப்பாட்டை அவர்களுக்குக் கொடுத்தார்: “நான் எவ்வாறு பிதாவுக்காக அவரில் வாழ்கிறோனோ அப்படியே நீங்களும் எனக்காக என்னில் வாழும்படி, நான் உங்களுக்காக உங்களில் வாழ விரும்புகிறேன்.” என் அன்பு சகோதரனே, கிறிஸ்துவுடனான இத்தனை நெருக்கமான பிணைப்புக்கு நீங்கள் ஆயத்தமா? உங்கள் அனைத்து நோக்கங்கள் மற்றும் சக்திகளுடன் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா மாட்டீர்களா? கர்த்தர் உங்களில் வாழும்படி நீங்கள் உங்கள் சுயத்திற்கு மரிக்க விரும்புகிறீர்களா?
நடைமுறை மாற்றங்களுக்காக கிறிஸ்து வரவில்லை. அல்லது நமக்கு நாமே உதவி செய்யும்படி செல்வத்தைக் கொடுப்பதற்காகவும் அவர் வரவில்லை. அவர் கிராமப்புற மேம்பாட்டைத் திட்டமிடவில்லை. மக்கள் தெய்வபக்தியுள்ள வாழ்க்கையை என்றும் வாழும்படி அவர்களுடைய இருதயத்தை அவர் மாற்றுகிறார். தன்னுடைய தெய்வீகத்தில் விசுவாசிகளுக்கு அவர் பங்கு கொடுக்கிறார். அவ்விதம் வாழ்ந்து, நேசித்து, சேவைசெய்யும் புதிய மரணமற்ற மனிதனை அவர் படைக்கிறார். அவனுடைய நோக்கம் இறைவனே.
ஆறாம் அதிகாரத்தைத் திரும்ப வாசித்து அதில் “பிதா”, “ஜீவன்” மற்றும் “உயிர்த்தெழுதல்” ஆகிய வார்த்தைகளும் அவற்றிலிருந்து பெறப்படும் மற்ற வார்த்தைகளும் எத்தனை முறை கிறிஸ்துவினால் பயன்படுத்தப்படுகிறது என்று எண்ணிப் பாருங்கள். அப்பொழுது நீங்கள் யோவான் நற்செய்தி நூலின் கருப்பொருளைப் புரிந்துகொள்வீர்கள். கிறிஸ்துவில் விசுவாசியாயிருப்பவன், பரிசுத்த ஆவியில் வாழ்ந்து, உயிர்த்தெழுதலின் மகிமையை நோக்கிச் செல்கிறான்.
5. சீடர்கள் சலித்தெடுக்கப்படல் (யோவான் 6:59-71)
யோவான் 6:59-60
59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். 60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். 60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
இறைவனுடைய உணவு மற்றும் இயேசுவை உட்கொள்ளுதல் ஆகிய இந்தப் போதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்டது. சில கருத்துக்களை அவர் திரும்பக்கூறி, அதன் பொருளை மெதுவாக ஆழப்படுத்தினார். ஆகிலும் யோவான் இதை ஒரே கோர்வையாக சேர்த்து எழுதியுள்ளார். கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்தில் அவர் இதை மறைமுகமாகப் போதித்து, தான் மோசேயைக் காட்டிலும் பெரியவர் என்றும் விசுவாசிகள் அவருடைய இரத்தத்திலும் சரீரத்திலும் பங்கடைய வேண்டும் என்று போதித்திருந்தார்.
அவரை உண்மையாகவே பின்பற்றியவர்களுக்குக்கூட அப்படிப்பட்ட வெளிப்பாடு புரிந்துகொள்ளக் கடினமாயிருந்தது. அவர்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியவும் அவருக்குச் சேவை செய்யவும் ஆயத்தமாயிருந்தார்கள், ஆனால் அவருடைய இரத்தத்தைக் குடித்து மாம்சத்தைப் புசிக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான காரியத்தைக் கேட்டு குழப்பமடைந்தார்கள். அவர்கள் தங்கள் குழப்பத்தின் உச்சத்திலிருக்கும்போது கர்த்தர் கிருபையாக ஜீவ அப்பம் என்ற உவமையின் பொருளை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய கண்களைத் திறந்தார்.
யோவான் 6:61-63
61 சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? 62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? 63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
61 சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? 62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? 63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
இயேசு தம்முடைய சீடர்களுடைய சிந்தனையை அறிந்தார், அவர்களுடைய கேள்விகளுக்காக அவர்களை அவர் கடிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய முறைப்பாடு அவிசுவாசிகளுடையதைப்போல அவர்களுடைய முரண்பாட்டினால் வரவில்லை. இயேசுவின் இரகசியமான உதாரணத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமையினால் வந்தது. அவர்களுக்கு அவர் விளக்கம் கொடுப்பதற்கு முன்பாக அந்த உவமையின் தெளிவற்ற தன்மையை விளக்குகிறார். முழு உலகத்தையும் இரட்சிக்கும் திட்டத்தைக் குறித்து விளக்குகிறார்.
அவர் தன்னுடைய சரீரத்தை அவர்கள் ஆவிக்குரிய நிலையில் உட்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் அவர் மரிக்க மாட்டார். அவர் எங்கிருந்து இறங்கி வந்தாரோ அங்கு தன்னுடைய பிதாவினிடத்தில் ஏறிச்செல்வார். அவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்திருந்தாலும் அவர் பூமியிலேயே தங்கியிருக்க மாட்டார். அவர் ஏரியில் நடந்ததை அவர்கள் கண்டு அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்பதை உணர்ந்துகொண்டார்கள். தன்னைப் பின்பற்றுபவர்களுக்குப் பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளுவதற்காக அவர் தமது பிதாவினிடத்தில் ஏறிச் செல்வார். இது தான் அவருடைய மரணத்தின் நோக்கம், அவருடைய வருகையின் திட்டம். அவர் தன்னுடைய மாம்சத்தை அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதில்லை, ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களின் உள்ளத்தில் அவர் வந்து தங்குகிறார். அதுவும் அவருடைய சரீரத்தினால் அல்ல, அவருடைய பரிசுத்த ஆவியினால்.
மாம்சம் ஒன்றுக்கும் உதவாது என்பதை இயேசு காண்பித்தார். ஆரம்பத்தில் நாம் முழுமையாகவும் சிறப்பாகவுமே உருவாக்கப்பட்டோம், ஆனால் நம்முடைய தன்மையும் சிந்தனைகளும் கெட்டுப்போனது. நம்முடைய உடலில் சரியான வாழ்வுக்கான சக்தியை நம்மால் காணமுடிவதில்லை. பாவம் செய்வதற்கான சக்திதான் இருக்கிறது. அவருடைய சொந்த உடலே பெலவீனமுடையதாயிருந்தது. அதனால்தான் “நீங்கள் சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து விண்ணப்பம் செய்யுங்கள், ஏனெனில் ஆவி உற்சாகமுள்ளதுதான் ஆனால் மாம்சமோ பெலவீனமுள்ளது என்று” கூறினார்.
இயேசு தன்னுடைய சரீரத்தில் எப்போதும் பரிசுத்த ஆவியானவரைச் சுமந்து திரிந்தார் என்பதற்காக இறைவனுக்கு துதியுண்டாகட்டும். அவருடைய ஆளத்துவத்தின் இரகசியமே ஆவியானவரின் பிரசன்னம்தான். அவ்விதமாகவே நம்முடைய சரீரத்தையும் பரிசுத்த ஆவியுடன் ஐக்கியப்படுத்த விரும்பி தன்னுடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலினால் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை பெலவீனமான நம்முடைய உடலில் வாழும்படி அனுப்பினார். முன்பு ஆவியினாலும் தண்ணீரினாலும் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் இறைவனுடைய அரசைக் காணமாட்டான் என்று குறிப்பிட்டார். இதில் தண்ணீர் என்பது யோவானுடைய திருமுழுக்கையும் ஆவி என்பது பெந்தகொஸ்தே நாளில் அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கும். ஜீவ அப்பத்தைக் குறித்த இயேசுவின் பிரசங்கத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, அவர்கள் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுத்தபோது அவர் அவர்களிடம், அவர்கள் மீது வருவார் என்பதை விளக்கப்படுத்தினார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வராவிட்டால் கர்த்தருடைய பந்தியில் இருக்கிற அடையாளங்களினால் எந்தப் பயனுமில்லை. பரிசுத்த ஆவியானவர்தான் உயிர்ப்பிக்கிறவர், சரீரம் ஒன்றுக்கும் உதவாது. கிறிஸ்துவின் ஆவி விசுவாசிகளில் வாசமாயிருப்பது கிறிஸ்துவின் பிரசன்னத்தை உறுதிசெய்கிறது.
பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு நம்மீது வருகிறார்? கிறிஸ்துவின் சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கடைந்து அவருடன் முழுமையான ஐக்கியத்தில் வாழ விரும்புகிறவர்களுக்கு இது மிகவும் முக்கியமான கேள்வியாகும். இயேசு எளிமையாக பதிலளிக்கிறார்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள், நற்செய்தியின் பொக்கிஷங்களுக்கு உங்களைத் திறந்துகொடுங்கள்.” கிறிஸ்து இறைவார்த்தையாக இருக்கிறார்; அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அவரை நம்புகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். பல வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலமாக உங்கள் உணர்வுகளை இறைவனுடைய வல்லமையினால் நிரப்புங்கள். இறைவனுடைய வாக்குத்தத்தத்தில் நிலைத்திருங்கள், அவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள், நீங்கள் பெரிய கண்டுபிடிப்பாளர்களைக் காட்டிலும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் நீங்கள் சக்தியுள்ளவராவீர்கள். கிறிஸ்துவினுடைய விடுவிக்கும் வார்த்தைகளினால் அண்ட சராசரத்தின் படைப்பாளி உங்கள் மீது வந்து, உங்களுக்கு வாழ்வையும் அதிகாரத்தையும் தருவார்.
யோவான் 6:64-65
64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
இயேசுவைப் பின்பற்றியவர்கள் அவருடைய முக்கிய போதனையின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரை விட்டு விலகிச் சென்றார்கள். அவருடைய உடலை உட்கொண்டு அவருடைய இரத்தத்தைப் பருக வேண்டும் என்ற போதனை அவருடைய கலிலேய ஊழியத்தில் முக்கியமான ஒன்றாகவும் பலர் அவரைவிட்டு விலகிச் சென்றமைக்கான காரணமாகவும் விளங்குகிறது. ஆகவே இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு அவருடைய சீடர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. அவரை விட்டு விலகிச் சென்றவர்கள் நிபந்தனையற்ற முறையில் இயேசுவைச் சார்ந்திருந்து, மனிதனுடைய தர்க்கரீதியான அறிவின் எல்லைகளைக் கடக்க ஆயத்தமாயிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத் தன்மை என்ற சத்தியத்தை அவர்கள் கவனிக்கத் தவறி, அவருடைய பலியின் அடிப்படையில் அவருடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ள அவர்கள் துணியவில்லை.
அவர்களில் சிலர் அவருடைய ஆவிக்கு எதிர்த்து நின்று விலகிச் செல்வார்கள் என்று அவர் தன்னுடைய சீடர்களிடம் சொன்னார். கர்த்தர் அங்கிருந்த ஒவ்வொருவருடைய இருதயத்திலும் இருக்கும் உணர்வுகளோடு அவர்களைப் பார்க்கக்கூடியவராக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய சீடர்கள் நடுவில் இருக்கும் துரோகியாகிய யூதாஸ் ஸ்காரியோத்தின் மனநிலையையும் அவர் அறிந்திருந்தார். கிறிஸ்துவினுடைய அன்பின் ஆவிக்கு யூதாஸ் முழுவதுமாக தன்னைத் திறந்துகொடுக்க விருப்பமில்லாதிருந்தான். இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றிப் பேசும்போது உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று கூறியபோது அவர் அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்.
அவர்களில் சிலர் அவருடைய ஆவிக்கு எதிர்த்து நின்று விலகிச் செல்வார்கள் என்று அவர் தன்னுடைய சீடர்களிடம் சொன்னார். கர்த்தர் அங்கிருந்த ஒவ்வொருவருடைய இருதயத்திலும் இருக்கும் உணர்வுகளோடு அவர்களைப் பார்க்கக்கூடியவராக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய சீடர்கள் நடுவில் இருக்கும் துரோகியாகிய யூதாஸ் ஸ்காரியோத்தின் மனநிலையையும் அவர் அறிந்திருந்தார். கிறிஸ்துவினுடைய அன்பின் ஆவிக்கு யூதாஸ் முழுவதுமாக தன்னைத் திறந்துகொடுக்க விருப்பமில்லாதிருந்தான். இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றிப் பேசும்போது உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று கூறியபோது அவர் அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்.
யோவான் 6:66-67
66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். 67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். 67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவளித்ததால் மக்கள்கூட்டத்தில் அவரைக் குறித்த ஆர்வம் அதிகரித்தது. இந்த ஆர்வத்தின் வஞ்சனையை இயேசு காண்பித்தார்: அது பலரை அவரைவிட்டு விலகிச் செல்ல வைத்தது. ஒரு உறுதியற்ற நோக்கத்திற்காக மோலோட்டமான ஆர்வத்தையோ, பக்தியையோ அல்லது நம்பிக்கையையோ அவர் விரும்புவதில்லை. அவர் இரண்டாவது பிறப்பை, அதாவது எந்தத் தயக்கமுமில்லாமல் மெய்யான விசுவாசத்துடன் அவருக்கு ஒப்புக்கொடுப்பதையே விரும்புகிறார். அதேவேளையில் எருசலேம் ஆலோசனைச் சங்கத்திலிருந்து உளவாளிகளும் அவரைப் பின்பற்றியவர்களின் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் ஏமாற்றுக்காரன் என்று அழைத்த இயேசுவை யாரும் தொடர்ந்து பின்பற்றினால் ஜெப ஆலயத்திலிருந்து புறம்பாக்கப்படுவார்கள் என்று விசுவாசத்துடன் அவரைப் பின்பற்றியவர்களை பயமுறுத்தினார்கள். கப்பர்நகூமைச் சேர்ந்த பலரும் அவ்வாறு பின்வாங்கியதால் பொதுமக்களும் அவருக்கு எதிராகத் திரும்பினார்கள். உண்மையாக அவரைப் பின்பற்றியவர்கள்கூட ஆலோசனைச் சங்கத்திற்குப் பயந்தார்கள். இயேசுவினுடைய போதனைகள் கடுமையானவைகள் என்று அவர்கள் கருதியதால் ஒரு சிறுபான்மைக் கூட்டம் மட்டுமே அவரைப் பின்பற்றியது. கர்த்தர் கோதுமையிலிருந்து களையைச் சலித்து அகற்றிக்கொண்டிருந்தார்.
இதற்கு முன்பாக கிறிஸ்து தன்னுடைய மக்களின் பன்னிரெண்டு கோத்திரங்ளை பிரதிபலிக்குமாறு தன்னைப் பின்பற்றியவர்களிலிருந்து பன்னிரெண்டு அப்போஸ்தலர்களைத் தெரிவு செய்திருந்தார். இந்த எண் 3 ல 4 என்று கணக்கிடப்படுவதால் அது வானத்தையும் பூமியையும் குறித்தது, அதிலும் குறிப்பாக பரிசுத்த திரித்துவத்தையும் பூமியின் நான்கு மூலைகளையும் குறித்தது. மூன்றையும் நான்கையும் பெருக்கும்போது நமக்குப் பன்னிரெண்டு கிடைக்கிறது. இவ்வாறு அவருடைய சீடர்கள் வட்டத்தில் பூமியும் வனமும் இணைந்திருப்பதுடன் பரிசுத்த திரித்துவமும் பூமியின் நான்கு மூலைகளும் இணைந்திருக்கிறது.
சிலர் அவரைவிட்டு விலகிச் சென்ற பிறகு தெரிந்துகொள்ளப்பட்டவர்களை அவர் மேலும் பரிசோதிக்க விரும்பி, “நீங்களும் என்னைவிட்டுப் போக மனதாயிருக்கிறீர்களா?” என்று கேட்டார். இந்தக் கேள்வியின் மூலம் சீடர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கும்படி வற்புறுத்தினார். இவ்விதமாகத்தான் உங்களையும், உங்கள் நண்பர்களையும் பார்த்து உங்கள் துயரமான, உபத்திரப்படும் வேளைகளில் என்னோடு இருக்கப் போகிறீர்களா அல்லது போகப்போகிறீர்களா என்று அவர் கேட்கிறார். எது முக்கியமானது உங்களுடைய பாரம்பரியம், உணர்வுகள், தர்க்கங்கள், பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவையா அல்லது இயேசுவுடனான உங்கள் உறவா?
யோவான் 6:68-69
68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. 69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. 69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
“உறுதியான பாறை” என்று தன்னைப் பற்றி கிறிஸ்து கூறிய தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவத்தை பேதுரு விளக்கப்படுத்திக் காண்பித்தார். மற்றவர்களின் சார்பாகப் பேசிய பேதுரு, “கர்த்தரே நாங்கள் யாரிடத்தில் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடத்தில்தானே இருக்கிறது” என்று பதிலளித்தார். அவர் இயேசுவின் நோக்கங்களை முழுமையாக அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நசரேயனாகிய இயேசு என்னும் மனிதர் பரலோகத்திலிருந்து வந்த கர்த்தர் என்றும் அவரிடத்திலிருந்து வரும் வார்த்தைகள் வெறும் மனித வார்த்தைகள் அல்ல என்றும் அவை படைக்கும் ஆற்றலுள்ள உயிர்ப்பிக்கும் வார்த்தைகள் என்றும் ஆழமாக அறிந்திருந்தார். கர்த்தர் அங்கிருந்தார் என்பதை பேதுரு விசுவாசித்தார். அவர் அந்த அப்பங்களை மக்களுக்குப் பகிர்ந்தளித்தவர்களில் ஒருவராக இருந்தார். பேதுரு தண்ணீரில் மூழ்கிய போது இயேசுவின் கரம் அவரைத் தூக்கிவிட்டது. பேதுருவின் இருதயம் இயேசுவின் இருதயத்தோடு இணைந்திருந்தது; மற்ற எதையும்விட அவர் கர்த்தரை அதிகமாக நேசித்தார் அதனால் அவர் இயேசுவை விட்டுப் போக மறுத்தார். இயேசு முதலாவது பேதுருவைத் தெரிந்துகொண்டிருந்த காரணத்தினால் பேதுரு இயேசுவைத் தெரிந்துகொண்டார்.
அப்போஸ்தலர்களுடைய தலைவன் தன்னுடைய சாட்சியை இவ்வாறு முடித்தார்: “நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.” “நாங்கள் அறிந்தும் விசுவாசித்தும் இருக்கிறோம்” என்று அவர் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். இருதயத்தின் தரிசனத்தைத் திறந்து காண்பிப்பது விசுவாசம்தான். பேதுருவும் அவருடைய சக சீடர்களும் அவர்களைச் சத்தியத்தை அறியச் செய்து கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படி தங்களை நடத்திய பரிசுத்த ஆவிக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருந்தார்கள். அவருடைய மறைக்கப்பட்ட மகிமையை அறிந்துகொள்வதில் அவர்கள் வளர்ந்தார்கள். இயேசுவினிடமிருந்து வரும் அனைத்து மெய்யான அறிவும் இறைவனிடமிருந்து நேரடியாக வரும் கிருபையின் கொடையாகும்.
இயேசுவின் மீதான சீடர்களுடைய விசுவாசத்தின் தன்மை யாது? அவர்களுடைய விசுவாசத்தின் பொருள் யாது? ஆவியானவரின் நிறைவு வாசமாயிருக்கும் தெய்வீக மேசியாவுடன் அவர்கள் இணைக்கப்பட்டிருந்தார்கள். அவர் தன்னில் ஆசாரியத்துவம், அரசாளுகை மற்றும் தீர்க்கதரிசனப் பணி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த நபராகக் காணப்பட்டார். பழைய ஏற்பாட்டில் அரசர்களும் பிரதான ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள். பரலோகத்தின் அனைத்து சக்திகளும் ஆசீர்வாதங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவர் சர்வவல்லமையுள்ள தெய்வீக அரசன்; அதேவேளையில் மனுக்குலத்தை அவர்களுடைய படைப்பாளியுடன் ஒப்புரவாக்கும் பிரதான ஆசாரியன். அவர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும் இவ்வுலகத்தை நியாயம் தீர்க்கவும் கூடியவராயிருக்கிறார். பேதுரு விசுவாசத்தினால் கிறிஸ்துவின் மகிமையைக் கண்டார்.
பேதுருவின் இந்த முக்கிய சாட்சி அனைத்து சீடர்களுடைய அறிக்கையாகக் காணப்பட்டது: இந்த இயேசு இறைவனுடைய பரிசுத்தர், சாதாரண மனிதனல்ல, மெய்யான இறைவனாகவும் இருக்கிறார். இறைவனுடைய மகனாகிய அவருக்குள் இறைவனுடைய தன்மைகள் அனைத்தும் காணப்பட்டது. யோவான் ஸ்நானகன் முன்னுரைத்தபடி அவர் பாவமற்றவராக நிலைத்திருந்து, இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக தன்னுடைய பணியை நிறைவேற்றினார். அவருடைய பிரசன்னம் இறைவனுடைய பிரசன்னம் என்பதை அறிந்தபடியால் சீடர்கள் அவரை நேசித்து கனப்படுத்தினார்கள். குமாரனில் அவர்கள் பிதாவைக் கண்டு, இறைவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டார்கள்.
யோவான் 6:70-71
70 இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். 71 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.
70 இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். 71 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.
சீடர்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சியைக் காண்பிக்கும் சாட்சியை இயேசு மகிழ்ச்சியோடு வரவேற்றார். ஆயினும் அவர்களில் ஒருவன் பல சந்தர்ப்பங்களில் தன்னை எதிர்ப்பதை அறிந்திருந்தார். அந்த மனிதனுடைய இருதயம் மிகவும் கடினப்பட்ட காரணத்தினால் இயேசு அவனை “சாத்தான்” என்றே அழைத்தார். அனைத்து அப்போஸ்தலர்களும் இயேசுவினால் தெரிந்துகொள்ளப்பட்டு, குமாரனிடத்தில் பிதாவினால் இழுத்துக்கொள்ளப்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் இறைவனுடைய கரங்களில் பொம்மைகளாயிருக்கவில்லை. அவர்கள் ஆவியின் சத்தத்திற்கு செவிகொடுக்கவோ அல்லது அதைப் புறக்கணிக்கவோ சுதந்திரமுடையவராயிருந்தார்கள். யூதாஸ் மனப்பூர்வமாக இறைவனுடைய சத்தத்திற்கு தன் மனதை அடைத்துக்கொண்டு தன் மனதோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சத்தானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான். மற்ற சீடர்கள் இயேசுவைவிட்டு ஓடியபோது, மாய்மாலமாக ஒரு விசுவாசியைப்போல அவரோடு நிலைத்திருந்தான். அவன் பொய்க்குப் பிதாவாகிய சாத்தானுடைய பிள்ளையாகி தன்னுடைய நம்பிக்கைத் துரோகத்தில் தொடர்ந்து முன்னேறினான். மேசியாவாகிய இயேசுவின் பணியை பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசுவை ஆலோசனைச் சங்கத்திற்குக் காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ் திட்டம்பண்ணிக் கொண்டிருந்தான். வெறுப்பினால் தூண்டப்பட்டு, தன்னுடைய துரோகத் திட்டத்தை அவன் இரகசியமாக தீட்டிக்கொண்டிருந்தான்.
நற்செய்தியாளனாகிய யோவான் இந்த முக்கியமான அத்தியாயத்தை சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பற்றி பேசி முடிக்கவில்லை. ஆனால் விசுவாசமுள்ள மக்கள் நடுவிலும் ஒரு துரோகி இருக்கிறான் என்ற உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இயேசு யூதாûஸத் துரத்திவிடவோ அல்லது அவனுடைய பெயரை மற்ற சீடர்களிடம் சொல்லவோ முன்வரவில்லை. யூதாஸ் தன்னுடைய இருதயத்திலுள்ள தீமையிலிருந்து மனந்திரும்புவான் என்று பொறுமையோடு அவனைக் கையாண்டார்.
சகோரனே, உங்களை நீங்கள் தாழ்மையுடன் சோதித்துப் பாருங்கள். நீங்கள் இறைவனுடைய பிள்ளையா அல்லது சாத்தானுடைய பிள்ளையா? பரிசுத்த ஆவியனால் நீங்கள் கவரப்படுகிறீர்களா அல்லது சாத்தானுடன் உடன்படிக்கை செய்துகொள்கிறீர்களா? உங்கள் வாழ்வின் நோக்கத்தை இழந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருங்கள். உங்கள் கர்த்தர் உங்களை நேசித்து, உங்களை இரட்சித்திருக்கிறார். இருப்பினும் நீங்கள் அவருடைய இரட்சிப்பை நிராகரித்தால் நீங்கள் தீமையின் பாதையில் விழுந்து, சாத்தானுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பீர்கள். கிறிஸ்துவிடம் திரும்புங்கள் அவர் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
By: Waters of life