பொன்மொழிகள் 7



301

எந்த இடத்திற்கு

தான் சென்று கொண்டிருக்கிறோம்

என்பதே தெரியாமல்

ஒரு மனிதன் இருக்கும்போது,

எந்த காற்றுமே

சரியான காற்றாக இருக்காது.



***

302

எப்போதும் சாப்பிட்டால்

பலசாலியாக ஆகலாம்

என்பதை எதிர் பார்.

அதேபோல

எப்போதும் படிப்பதன் மூலம்

அறிவாளியாக ஆகலாம்

என்பதையும் எதிர் பார்.

***

303

தன்னுடைய இதயத்தில்

ஒரு புழுவை

வைத்திருக்கக் கூடிய ஆப்பிள்,

மிகவும் அழகானதாகவே இருந்தாலும்,

அதைப் பற்றி சிறப்பித்துக்

கூறுவதற்கு என்ன இருக்கிறது?

***

304

ஒரு பெண்ணின்

காதலை நோக்கிச் செல்லும்

அனைத்துப் பாதைகளிலும்

பரிதாபத்திற்குரியது

நேராக செல்லும் பாதைதான்.

***

305

திருமணம் என்பது

ஒரு லாட்டரியைப் போன்றது.

அதில் ஆண்கள் தங்களின்

சுதந்திரத்தை இழக்கிறார்கள்.

பெண்கள் தங்களின்

சந்தோஷத்தை இழக்கிறார்கள்.

***

306

ஒரு மனிதன் தன் தந்தையையும்,

தாயையும் விட்டு நீங்களாம்.

தொடர்ந்து அவன் தன் மனைவியிடம்

அடைக்கலம் ஆகிறான்.

***

307

கடவுளின் பெருமையை

சொர்க்கங்கள் கூறுகின்றன.

எல்லா செயல்களும்

வனின் கை வேலைகளே.

***

308

உறையில் ஒரு அம்பு இருப்பதை விட,

இரண்டு அம்புகள் இருப்பது நல்லதுதான்.

மூன்று அம்புகள் இருப்பது அதை விட நல்லது.

***

309

உடல் நலம், சந்தோஷம் -

இரண்டும் ஒன்றையொன்று

சார்ந்திருக்கிறது.

***

310

ஒரு சோம்பேறி மனிதன்

மூச்சை விடலாம்.

ஆனால், அவன் வாழவில்லை.

***

311

சந்தோஷம் என்பது

கொண்டாட்டத்திற்கு நிகரானது.

இரண்டு மோசமான நாட்களுக்கு

நடுவில் வரும் ஒரு நல்ல நாள்.

***

312

மிகவும் மென்மையான சட்டங்கள்

எந்தச் சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை.

மிகவும் கடுமையான சட்டங்கள்

எந்த காலத்திலும்

நிறைவேற்றப்படுவதில்லை.

***

313

அவன் மிகவும் கடுமையான

இதயத்தைக் கொண்டவன்.

அது 'மே' மாதத்தில் காதலிக்காது.

***

314

வானம் நீல நிறத்தில் இல்லை

என்பதை ஞாபகத்தில்

வைத்துக் கொள்.

ஏனென்றால்,

கண் பார்வை இல்லாதவர்கள்

அதை பார்க்க முடியாது.

***

315

அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம்

ஒரு மனிதனின் நேரத்தை

முற்றிலும் எடுத்துக் கொள்கிறது.

எந்தவித வேலையையும் விட,

அது அவனை அவனுடைய

முதலாளிக்கு முன்னால் கேவலமாக

நிற்க வைக்கிறது.

***

316

வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான்.

அது புறப்பட்ட இடத்திற்கே பயணிக்கிறது.

***

317

உண்மையிலேயே

வெளிச்சம் என்பது

மிகவும் இனிமையானது.

கண்களால்

சூரியனைப் பார்ப்பது

என்பது எவ்வளவு அருமையான

ஒரு விஷயம்!

***

318

நாம் கவலையில் இருக்கும்போது,

முன்பு சந்தோஷமாக

இருந்த நாட்களை

அசைபோட்டுப் பார்ப்பதை விட

துயரங்கள் தரக் கூடிய

விஷயம் வேறொன்றில்லை.

***

319

எந்தச் சமயத்திலும்

நாம் சந்தித்திராத

மோசமான சம்பவங்கள்தான்

தாங்கிக் கொள்வதற்கு

மிகவும் கஷ்டமானவையாக

இருக்கும்.

***

320

அன்பான சொற்கள்

நாக்கைக் களைப்படையச்

செய்யாது.

***

321

கிரேக்க கடவுள்களைப் போல,

கலைஞர்கள் ஒருவரோடொருவர்

வெறுமனே வெளிப்படுத்திக்

கொள்கிறார்கள்.

***

322

நாம் யாரை காயப்படுத்தினோமோ,

அவர்களை வெறுக்கிறோம்.

***

323

நீங்கள் கேட்கப்படுவதற்கு முன்னால்,

அறிவுரை கூறவோ உப்பைப் போடவோ

செய்யாதீர்கள்.

***

324

தன்னுடைய மோகங்களை

கவனிப்பதன் மூலம்

அவன் கண்காணிப்பாளராக இருக்கிறான்.

அவற்றிற்கு சேவை செய்வதன் மூலம்,

அவன் பணியாளனாக இருக்கிறான்.

***

325

ஒரு நாள் முழுமையான

உயிர்ப்புடன் இருப்பதற்காக,

ஒரு நாள் முழுமையான

ஓய்வில் இரு.

***

326

மக்கள் எந்த அளவிற்குத்

தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்களோ,

அதைவிட அவர்கள் மீது

அன்பு செலுத்துவதற்குப்

பெயர்தான் கருணை.

***

327

நிறைய பணம் சம்பாதிப்பதை விட,

ஒரு நல்ல பெயரைப் பெறுவது மேலானது.

***

328

எந்த தடைகளும் இல்லாமல்,

அறிவாளிகளின் இதயம் எல்லாவற்றையும்

பிரதிபலிக்க வேண்டும்.

***

329

நட்சத்திரங்களையே

வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்

ஒரு மனிதன்,

சாலையில் உள்ள ஒவ்வொரு

பள்ளத்தின் கருணையையும்

நம்பியிருக்கிறான்.

***

330

சிறிது காலம் தரிசாகக்

கிடப்பது கூட நல்லதுதான்.

***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.