301
எந்த இடத்திற்கு
தான் சென்று கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாமல்
ஒரு மனிதன் இருக்கும்போது,
எந்த காற்றுமே
சரியான காற்றாக இருக்காது.
***
302
எப்போதும் சாப்பிட்டால்
பலசாலியாக ஆகலாம்
என்பதை எதிர் பார்.
அதேபோல
எப்போதும் படிப்பதன் மூலம்
அறிவாளியாக ஆகலாம்
என்பதையும் எதிர் பார்.
***
303
தன்னுடைய இதயத்தில்
ஒரு புழுவை
வைத்திருக்கக் கூடிய ஆப்பிள்,
மிகவும் அழகானதாகவே இருந்தாலும்,
அதைப் பற்றி சிறப்பித்துக்
கூறுவதற்கு என்ன இருக்கிறது?
***
304
ஒரு பெண்ணின்
காதலை நோக்கிச் செல்லும்
அனைத்துப் பாதைகளிலும்
பரிதாபத்திற்குரியது
நேராக செல்லும் பாதைதான்.
***
305
திருமணம் என்பது
ஒரு லாட்டரியைப் போன்றது.
அதில் ஆண்கள் தங்களின்
சுதந்திரத்தை இழக்கிறார்கள்.
பெண்கள் தங்களின்
சந்தோஷத்தை இழக்கிறார்கள்.
***
306
ஒரு மனிதன் தன் தந்தையையும்,
தாயையும் விட்டு நீங்களாம்.
தொடர்ந்து அவன் தன் மனைவியிடம்
அடைக்கலம் ஆகிறான்.
***
307
கடவுளின் பெருமையை
சொர்க்கங்கள் கூறுகின்றன.
எல்லா செயல்களும்
வனின் கை வேலைகளே.
***
308
உறையில் ஒரு அம்பு இருப்பதை விட,
இரண்டு அம்புகள் இருப்பது நல்லதுதான்.
மூன்று அம்புகள் இருப்பது அதை விட நல்லது.
***
309
உடல் நலம், சந்தோஷம் -
இரண்டும் ஒன்றையொன்று
சார்ந்திருக்கிறது.
***
310
ஒரு சோம்பேறி மனிதன்
மூச்சை விடலாம்.
ஆனால், அவன் வாழவில்லை.
***
311
சந்தோஷம் என்பது
கொண்டாட்டத்திற்கு நிகரானது.
இரண்டு மோசமான நாட்களுக்கு
நடுவில் வரும் ஒரு நல்ல நாள்.
***
312
மிகவும் மென்மையான சட்டங்கள்
எந்தச் சமயத்திலும் மதிக்கப்படுவதில்லை.
மிகவும் கடுமையான சட்டங்கள்
எந்த காலத்திலும்
நிறைவேற்றப்படுவதில்லை.
***
313
அவன் மிகவும் கடுமையான
இதயத்தைக் கொண்டவன்.
அது 'மே' மாதத்தில் காதலிக்காது.
***
314
வானம் நீல நிறத்தில் இல்லை
என்பதை ஞாபகத்தில்
வைத்துக் கொள்.
ஏனென்றால்,
கண் பார்வை இல்லாதவர்கள்
அதை பார்க்க முடியாது.
***
315
அளவுக்கு அதிகமான சோம்பேறித்தனம்
ஒரு மனிதனின் நேரத்தை
முற்றிலும் எடுத்துக் கொள்கிறது.
எந்தவித வேலையையும் விட,
அது அவனை அவனுடைய
முதலாளிக்கு முன்னால் கேவலமாக
நிற்க வைக்கிறது.
***
316
வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தான்.
அது புறப்பட்ட இடத்திற்கே பயணிக்கிறது.
***
317
உண்மையிலேயே
வெளிச்சம் என்பது
மிகவும் இனிமையானது.
கண்களால்
சூரியனைப் பார்ப்பது
என்பது எவ்வளவு அருமையான
ஒரு விஷயம்!
***
318
நாம் கவலையில் இருக்கும்போது,
முன்பு சந்தோஷமாக
இருந்த நாட்களை
அசைபோட்டுப் பார்ப்பதை விட
துயரங்கள் தரக் கூடிய
விஷயம் வேறொன்றில்லை.
***
319
எந்தச் சமயத்திலும்
நாம் சந்தித்திராத
மோசமான சம்பவங்கள்தான்
தாங்கிக் கொள்வதற்கு
மிகவும் கஷ்டமானவையாக
இருக்கும்.
***
320
அன்பான சொற்கள்
நாக்கைக் களைப்படையச்
செய்யாது.
***
321
கிரேக்க கடவுள்களைப் போல,
கலைஞர்கள் ஒருவரோடொருவர்
வெறுமனே வெளிப்படுத்திக்
கொள்கிறார்கள்.
***
322
நாம் யாரை காயப்படுத்தினோமோ,
அவர்களை வெறுக்கிறோம்.
***
323
நீங்கள் கேட்கப்படுவதற்கு முன்னால்,
அறிவுரை கூறவோ உப்பைப் போடவோ
செய்யாதீர்கள்.
***
324
தன்னுடைய மோகங்களை
கவனிப்பதன் மூலம்
அவன் கண்காணிப்பாளராக இருக்கிறான்.
அவற்றிற்கு சேவை செய்வதன் மூலம்,
அவன் பணியாளனாக இருக்கிறான்.
***
325
ஒரு நாள் முழுமையான
உயிர்ப்புடன் இருப்பதற்காக,
ஒரு நாள் முழுமையான
ஓய்வில் இரு.
***
326
மக்கள் எந்த அளவிற்குத்
தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்களோ,
அதைவிட அவர்கள் மீது
அன்பு செலுத்துவதற்குப்
பெயர்தான் கருணை.
***
327
நிறைய பணம் சம்பாதிப்பதை விட,
ஒரு நல்ல பெயரைப் பெறுவது மேலானது.
***
328
எந்த தடைகளும் இல்லாமல்,
அறிவாளிகளின் இதயம் எல்லாவற்றையும்
பிரதிபலிக்க வேண்டும்.
***
329
நட்சத்திரங்களையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
ஒரு மனிதன்,
சாலையில் உள்ள ஒவ்வொரு
பள்ளத்தின் கருணையையும்
நம்பியிருக்கிறான்.
***
330
சிறிது காலம் தரிசாகக்
கிடப்பது கூட நல்லதுதான்.
***