பொன்மொழிகள் 8


331

 ஒரு காலத்தில்

நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள்,

அடுத்த காலத்தில் வணங்கப்படும்

துறவிகளாக ஆவார்கள்.



***

332

அமைதியானவர்கள்

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

அவர்கள் பூமியை ஆட்சி

செய்வார்கள்.

***

333

அமைதியான மனதுடன் இருப்பதே

தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.

நான் எப்போதும் வாழ்வது இல்லை.

ஏனென்றால், என்னுடைய நாட்கள்

தற்பெருமையிலேயே அழிந்து விடுகின்றன.

***

334

மனிதன் ஒரு மிக உயர்ந்த மிருகம்.

சாம்பல்களில் அவன் அழகாக இருக்கிறான்.

கல்லறையில் மிடுக்கானவனாக இருக்கிறான்.

***

335

திருமணத்தின் கனியாக

பெரும்பாலும் காதல் இருக்கிறது.

ஆனால், அதற்கு அதுவே காரணம் அல்ல.

***

336

என்னுடைய

பக்கத்து வீட்டுக்காரரின்

தோட்டத்தில்

ஒரு மைல் தூரம்

நடக்காதவரையில்,

நான் அவரை

விமர்சிக்காமல்

இருக்க வேண்டும்.

***

337

தான் அன்பு செலுத்தப்படுவதை விட,

எவன் எல்லோரிடமும்

எதிர்பார்ப்புடன் இருக்கிறானோ,

அவன் தன்  மீது அதிகமான

அன்பை வைத்திருக்கிறான்.

***

338

அமைதியைப் பரப்பும்

நல்ல செய்தியைக்

கொண்டு வரும்

அவனுடைய கால் பாதங்கள்

மலைகளின் மீது நடக்கும்போது

எவ்வளவு அழகாக இருக்கின்றன!

***

339

ஒரு பவுண்ட்

துக்கத்திற்கு நிகரானது

ஒரு அவுன்ஸ் சந்தோஷம்.

***

340

பாத்திரம் கல்லில் மோதினாலும்,

கல் பாத்திரத்தில் மோதினாலும் -

பாதிப்பு என்னவோ பாத்திரத்திற்குத்தான்.

***

341

தன்னுடைய சக மனிதர்களுக்கு

நல்ல செயல்களைச் செய்யாமல்,

மனிதர்கள் கடவுளை அணுகி

எதையும் பெற முடியாது.

***

342

எந்த அர்த்தமும் இல்லாத இடத்தில்,

கெட்ட பெயரை வாங்காதே.

***

343

நீண்ட காலம் வாழ்ந்து

கொண்டிருப்பவர்கள்

வாழ்ந்ததென்னவோ -

ஒரு சிறிய கணம்தான்.

***

344

சாதாரண மனிதர்கள்

பொருட்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

முட்டாள்கள்

மனிதர்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

உயர்ந்த மனிதர்கள்

எண்ணங்களைப் பற்றி

விவாதிப்பார்கள்.

***

345

நான்

ஏழைகளுக்கு

உணவு தரும்போது

அவர்கள் என்னை

ஒரு துறவி என்று கூறுகிறார்கள்.

ஏழைகளுக்கு

ஏன் உணவு இல்லை

என்று நான் கேட்கும்போது

அவர்கள் என்னை

ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறுகிறார்கள்.

***

346

நாம் எல்லோருமே

வாழ்க்கையில்

பல விஷயங்களையும்

தேர்ந்தெடுக்கிறோம்.

ஆனால் -

அவற்றுடன் வாழ்வதுதான்

மிகவும் சிரமமான ஒன்று.

ஆனால்,

அந்த காரியத்தில்

உங்களுக்கு உதவுவதற்கு

யாருமே இருக்க மாட்டார்கள்.

***

347

எந்தவொரு மனிதன்

யாரையுமே நம்பாமல்

இருக்கிறானோ,

அவனை யாருமே

நம்பமாட்டார்கள்.

***

348

வாழ்க்கை என்பது

ஒயினைப் போன்றது.

அதை கொஞ்சமாக சுவைத்தால்

அதனால்

எந்தக் கேடும் இல்லை.

ஆனால்,

புட்டியைக் காலி பண்ண வேண்டும்

என்று நினைத்தால்

ஒரு தலைவலியை நாமே

வரவழைக்கிறோம்

என்று அர்த்தம்.

***

349

தன்னுடைய

மனச்சாட்சியை

முழுமையாக இழந்து விட்டு

ஒரு மனிதன்

முழு உலகத்தையும்

ஆதாயமாக பெற்றாலும்

அதனால் என்ன பயன்?

***

350

இந்த தருணத்தை

நீ

தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம்.

ஆனால்,

இந்தத் தருணம்

உன்னைத்

தேர்ந்தெடுத்து விட்டது.

***

351

பகல் என்பது

தூங்குவதற்காக இருப்பது.

இரவு என்பது

விழித்திருப்பதற்காகவும்

பிறரை விழிக்கச் செய்வதற்காகவும்

இருப்பது.

***

352

மற்ற நாடுகளைப் பற்றி

ஒவ்வொருவரும்

எந்த அளவிற்கு

தவறான கருத்துக்களைக்

கொண்டிருக்கிறார்கள்

என்பதை

நேரடியாக கண்டு கொள்வதற்காக

இருப்பதுதான்

பயணம்.

***

353

கடந்த காலத்துடன்

எவையெல்லாம் இருந்தனவோ,

அவையெல்லாம்

போய் விட்டன.

மிகச் சிறந்த விஷயங்கள்

இனிமேல்தான்

வர வேண்டும்.

***

354

நான்

நடிப்பதை விரும்புகிறேன்.

அது

வாழ்க்கையை விட

அதிகமான

உண்மைத் தன்மையுடன்

இருக்கிறது.

***

355

பயணம்

ஒரு மனிதனை

மிகவும் அடக்கமானவனாக

ஆக்குகிறது.

அவன்

இந்த அகன்ற உலகத்தில்

எவ்வளவு சிறிய இடத்தை

வகித்துக் கொண்டிருக்கிறான்

என்பதை

அது புரிய வைக்கிறது.

***

356

அழகாக இருப்பவர்கள்

எப்போதும்

நல்லவர்களாக இருப்பார்கள்

என்று கூறுவதற்கில்லை.

ஆனால்-

நல்லவர்கள்

எப்போதும்

அழகானவர்களாகவே இருப்பார்கள்.

***

357

வாழ்க்கை என்பது

ஒரு சொர்க்கம்.

நீ

அதில் தேவதை.

***

358

நான் எந்தச் சமயத்திலும்

வயதானவனாக

இருக்க மாட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில்

வயதானது என்பது

என்னை விட

பதினைந்து வருடங்கள் அதிகமானது.

***

359

ஒரு மனிதனிடம்

குறிப்பிடத்தக்க அம்சம்

என்பது

அவன் எதை அடைந்திருக்கிறானோ

அதுவல்ல.

எதை அடைய வேண்டும்

என்று நினைக்கிறானோ

அதுதான்.

***

360

உன் வாழ்க்கையில்

உயர்வு, தாழ்வு

எதுவுமே

இல்லையென்றால்

நீ

இறந்து விட்டாய்

என்று அர்த்தம்.

***

361

புட்டியில் அடைக்கப்பட்டிருக்கும்

கவிதை-

அதற்குப் பெயர்தான்

ஒயின்.

***

362

ஒருவரின்

கொள்கைகளின்படி

வாழ்வதை விட

அவற்றுக்காக

சண்டை போட்டுக்

கொண்டிருப்பது

எளிதானது.

***

363

ஒரு மனிதன் தன்னைத் தானே

சுருட்டிக் கொண்டு இருக்கும்போது,

அவன் ஒரு அழகான பொட்டலத்தைப்

போல ஆகி விடுகிறான்.

***

364

ஒரு நல்ல பெயர்

தன் பிரகாசத்தை

இருளில் காட்டிக்

கொண்டிருக்கும்.

***

365

பணிவு என்பது

வெற்றியின் தாயாக இருக்கிறது,

பாதுகாப்பின் மனைவியாக இருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.