331
ஒரு காலத்தில்
நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்கள்,
அடுத்த காலத்தில் வணங்கப்படும்
துறவிகளாக ஆவார்கள்.
***
332
அமைதியானவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் பூமியை ஆட்சி
செய்வார்கள்.
***
333
அமைதியான மனதுடன் இருப்பதே
தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.
நான் எப்போதும் வாழ்வது இல்லை.
ஏனென்றால், என்னுடைய நாட்கள்
தற்பெருமையிலேயே அழிந்து விடுகின்றன.
***
334
மனிதன் ஒரு மிக உயர்ந்த மிருகம்.
சாம்பல்களில் அவன் அழகாக இருக்கிறான்.
கல்லறையில் மிடுக்கானவனாக இருக்கிறான்.
***
335
திருமணத்தின் கனியாக
பெரும்பாலும் காதல் இருக்கிறது.
ஆனால், அதற்கு அதுவே காரணம் அல்ல.
***
336
என்னுடைய
பக்கத்து வீட்டுக்காரரின்
தோட்டத்தில்
ஒரு மைல் தூரம்
நடக்காதவரையில்,
நான் அவரை
விமர்சிக்காமல்
இருக்க வேண்டும்.
***
337
தான் அன்பு செலுத்தப்படுவதை விட,
எவன் எல்லோரிடமும்
எதிர்பார்ப்புடன் இருக்கிறானோ,
அவன் தன் மீது அதிகமான
அன்பை வைத்திருக்கிறான்.
***
338
அமைதியைப் பரப்பும்
நல்ல செய்தியைக்
கொண்டு வரும்
அவனுடைய கால் பாதங்கள்
மலைகளின் மீது நடக்கும்போது
எவ்வளவு அழகாக இருக்கின்றன!
***
339
ஒரு பவுண்ட்
துக்கத்திற்கு நிகரானது
ஒரு அவுன்ஸ் சந்தோஷம்.
***
340
பாத்திரம் கல்லில் மோதினாலும்,
கல் பாத்திரத்தில் மோதினாலும் -
பாதிப்பு என்னவோ பாத்திரத்திற்குத்தான்.
***
341
தன்னுடைய சக மனிதர்களுக்கு
நல்ல செயல்களைச் செய்யாமல்,
மனிதர்கள் கடவுளை அணுகி
எதையும் பெற முடியாது.
***
342
எந்த அர்த்தமும் இல்லாத இடத்தில்,
கெட்ட பெயரை வாங்காதே.
***
343
நீண்ட காலம் வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள்
வாழ்ந்ததென்னவோ -
ஒரு சிறிய கணம்தான்.
***
344
சாதாரண மனிதர்கள்
பொருட்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
முட்டாள்கள்
மனிதர்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
உயர்ந்த மனிதர்கள்
எண்ணங்களைப் பற்றி
விவாதிப்பார்கள்.
***
345
நான்
ஏழைகளுக்கு
உணவு தரும்போது
அவர்கள் என்னை
ஒரு துறவி என்று கூறுகிறார்கள்.
ஏழைகளுக்கு
ஏன் உணவு இல்லை
என்று நான் கேட்கும்போது
அவர்கள் என்னை
ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறுகிறார்கள்.
***
346
நாம் எல்லோருமே
வாழ்க்கையில்
பல விஷயங்களையும்
தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனால் -
அவற்றுடன் வாழ்வதுதான்
மிகவும் சிரமமான ஒன்று.
ஆனால்,
அந்த காரியத்தில்
உங்களுக்கு உதவுவதற்கு
யாருமே இருக்க மாட்டார்கள்.
***
347
எந்தவொரு மனிதன்
யாரையுமே நம்பாமல்
இருக்கிறானோ,
அவனை யாருமே
நம்பமாட்டார்கள்.
***
348
வாழ்க்கை என்பது
ஒயினைப் போன்றது.
அதை கொஞ்சமாக சுவைத்தால்
அதனால்
எந்தக் கேடும் இல்லை.
ஆனால்,
புட்டியைக் காலி பண்ண வேண்டும்
என்று நினைத்தால்
ஒரு தலைவலியை நாமே
வரவழைக்கிறோம்
என்று அர்த்தம்.
***
349
தன்னுடைய
மனச்சாட்சியை
முழுமையாக இழந்து விட்டு
ஒரு மனிதன்
முழு உலகத்தையும்
ஆதாயமாக பெற்றாலும்
அதனால் என்ன பயன்?
***
350
இந்த தருணத்தை
நீ
தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம்.
ஆனால்,
இந்தத் தருணம்
உன்னைத்
தேர்ந்தெடுத்து விட்டது.
***
351
பகல் என்பது
தூங்குவதற்காக இருப்பது.
இரவு என்பது
விழித்திருப்பதற்காகவும்
பிறரை விழிக்கச் செய்வதற்காகவும்
இருப்பது.
***
352
மற்ற நாடுகளைப் பற்றி
ஒவ்வொருவரும்
எந்த அளவிற்கு
தவறான கருத்துக்களைக்
கொண்டிருக்கிறார்கள்
என்பதை
நேரடியாக கண்டு கொள்வதற்காக
இருப்பதுதான்
பயணம்.
***
353
கடந்த காலத்துடன்
எவையெல்லாம் இருந்தனவோ,
அவையெல்லாம்
போய் விட்டன.
மிகச் சிறந்த விஷயங்கள்
இனிமேல்தான்
வர வேண்டும்.
***
354
நான்
நடிப்பதை விரும்புகிறேன்.
அது
வாழ்க்கையை விட
அதிகமான
உண்மைத் தன்மையுடன்
இருக்கிறது.
***
355
பயணம்
ஒரு மனிதனை
மிகவும் அடக்கமானவனாக
ஆக்குகிறது.
அவன்
இந்த அகன்ற உலகத்தில்
எவ்வளவு சிறிய இடத்தை
வகித்துக் கொண்டிருக்கிறான்
என்பதை
அது புரிய வைக்கிறது.
***
356
அழகாக இருப்பவர்கள்
எப்போதும்
நல்லவர்களாக இருப்பார்கள்
என்று கூறுவதற்கில்லை.
ஆனால்-
நல்லவர்கள்
எப்போதும்
அழகானவர்களாகவே இருப்பார்கள்.
***
357
வாழ்க்கை என்பது
ஒரு சொர்க்கம்.
நீ
அதில் தேவதை.
***
358
நான் எந்தச் சமயத்திலும்
வயதானவனாக
இருக்க மாட்டேன்.
என்னைப் பொறுத்த வரையில்
வயதானது என்பது
என்னை விட
பதினைந்து வருடங்கள் அதிகமானது.
***
359
ஒரு மனிதனிடம்
குறிப்பிடத்தக்க அம்சம்
என்பது
அவன் எதை அடைந்திருக்கிறானோ
அதுவல்ல.
எதை அடைய வேண்டும்
என்று நினைக்கிறானோ
அதுதான்.
***
360
உன் வாழ்க்கையில்
உயர்வு, தாழ்வு
எதுவுமே
இல்லையென்றால்
நீ
இறந்து விட்டாய்
என்று அர்த்தம்.
***
361
புட்டியில் அடைக்கப்பட்டிருக்கும்
கவிதை-
அதற்குப் பெயர்தான்
ஒயின்.
***
362
ஒருவரின்
கொள்கைகளின்படி
வாழ்வதை விட
அவற்றுக்காக
சண்டை போட்டுக்
கொண்டிருப்பது
எளிதானது.
***
363
ஒரு மனிதன் தன்னைத் தானே
சுருட்டிக் கொண்டு இருக்கும்போது,
அவன் ஒரு அழகான பொட்டலத்தைப்
போல ஆகி விடுகிறான்.
***
364
ஒரு நல்ல பெயர்
தன் பிரகாசத்தை
இருளில் காட்டிக்
கொண்டிருக்கும்.
***
365
பணிவு என்பது
வெற்றியின் தாயாக இருக்கிறது,
பாதுகாப்பின் மனைவியாக இருக்கிறது.