251
நல்ல குணங்கள் இல்லாத அழகு,
வாசனை இல்லாத மலரைப் போன்றது.
***
252
மிகப் பெரிய
ஆடம்பரங்களைத் தேடுவதை விட,
ஒரு நல்ல பெயரைத்
தேடுவது உயர்ந்தது.
***
253
சட்டம் என்பது
வலிமையானவர்களைக்
காப்பாற்றுவதற்கே
இருக்கிறது.
***
254
வாழ்வு என்பது
ஒரு புனிதமான ஜூவாலை.
நாம் நமக்குள் இருக்கும்
ஒரு கண்ணுக்குத் தெரியாத
சூரியனைக் கொண்டு
வாழ்கிறோம்.
***
255
நீதிபதிகள் சட்டத்திற்குக்
கீழ்ப்படிய வேண்டும்.
அதே நேரத்தில்
அதை செயல்படுத்தவும்
வேண்டும்.
***
256
இயற்கை சுற்றுகிறது.
அதனால், மனிதகுலம்
முன்னேறுகிறது.
***
257
பிரச்சாரம் செய்யாதே.
ஏனென்றால், நீ ஏதாவது
கூறியாக வேண்டும்.
ஆனால், கூறுவதற்கு
சில விஷயங்கள் இருக்கின்றன.
***
258
ஒரு முட்டாள் பணத்தை
உண்டாக்கலாம்.
ஆனால், அதை எப்படி
செலவு செய்வது என்பதற்கு
ஒரு புத்திசாலி மனிதன்
வேண்டும்.
***
259
உன்னுடைய நம்பிக்கையை
பணத்தின் மீது வைக்காதே.
ஆனால், உன்னுடைய பணத்தை
நம்பிக்கையின் மீது வை.
***
260
எவன் குழந்தையை
கையால் தூக்குகிறானோ,
அவன் தாயை இதயத்தால்
எடுக்கிறான்.
***
261
சாதாரணமாக தோன்றும்
மனிதர்களைத்தான் கடவுள் விரும்புகிறார்.
அவர்களை அதிகமாக
அவர் படைத்திருப்பதற்கு
அதுதான் காரணம்.
***
262
உணர்ச்சிவசப்படுவதிலிருந்து
உன்னை நீ காத்துக் கொள்.
கடவுள் உன்னை பாவத்திலிருந்து
விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
***
263
உலகில் ஏராளமான
விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
ஏனென்றால், பாராட்டுவதை விட,
விமர்சனம் செய்வது என்பது
மிகவும் எளிதானது.
***
264
உண்மையான வாக்குறுதி சிறியதாக இருக்கும்.
ஆனால், செயல்படுவது பெரிதாக இருக்கும்.
பொய்யான வாக்குறுதி மிகப் பெரியதாக இருக்கும்.
செயல்படுவதோ சிறிய அளவில் கூட இருக்காது.
***
265
எங்களை சந்தோஷமானவர்களாகவும்,
நல்லவர்களாகவும் ஆக்கு!
***
266
நல்ல உடல் நலம்,
நல்ல அறிவு -
இவை இரண்டுமே
மிகப் பெரிய கொடுப்பினைகள்.
***
267
சுயநலம் கொண்ட இதயம்
வேதனைப்படுகிறது என்றால்,
அதற்கு அது தகுதியானதே.
***
268
ஒரு புனிதமான செயல்
ஒரு கெட்ட ஆன்மாவை
மறைத்து வைக்காது.
***
269
சந்தோஷத்தைப் பின்பற்றி
கவலையை பயணிக்கச் செய்வது
சொர்க்கத்தின் கட்டளை.
***
270
உலக சந்தோஷங்களில்
யார் குளிக்கிறார்களோ,
அவர்கள் கண்ணீர்
நிறைந்த உலகத்தில் நீந்தித்தான்
ஆக வேண்டும்.
***
271
எந்த இடத்தில் சட்டம் தண்டனை
அளிக்காமல் இருக்கிறதோ,
அந்த இடத்தில்
அது செயல்பட முடியாது.
***
272
யார் வாழ ஆரம்பிக்கிறானோ,
அவன் மரணமடையவும்
ஆரம்பிக்கிறான்.
***
273
நேர்மையான முறையில் வாழ்.
நேர்மையான முறையில்
இறப்பாய்.
***
274
மனிதர்கள் குள்ளநரித்தனத்துடன்
இருப்பதைப் பார்ப்பதில்
ஆச்சரியப்படுவதற்கு
எதுவுமே இல்லை.
அதே நேரத்தில் - அவர்கள் எப்படியெல்லாம்
அவமானப்பட்டு நிற்கிறார்கள்
என்பதைப் பார்க்காமல்
இருக்கிறோமே என்பது
பெரும்பாலும் ஆச்சரியப்படக்
கூடிய விஷயமே.
***
275
நூல்களை படிப்பதை விட,
மனிதர்களைப் படிப்பது
மிகவும் அவசியம்.
***
276
காயத்தை அனுப்பி வைத்த
கடவுள் மருந்தையும்
அனுப்பி வைப்பார்.
***
277
நிறைய பேசி, மனதில் இருக்கும்
எல்லா சந்தேகங்களையும்
இல்லாமற் செய்வதை விட,
அமைதியாக இருந்து கொண்டு
ஒரு முட்டாளைப் போல
நினைத்துக் கொண்டிருப்பது
எவ்வளவோ மேலானது.
***
278
பணத்தின் மீது கொண்ட ஆசையும்,
கற்க வேண்டும் என்பதின் மீது கொண்ட விருப்பமும்
எந்தச் சமயத்திலும் சந்திக்கவே சந்திக்காது.
***
279
சிறிய குழந்தைகளின் உதடுகளிலும்,
இதயத்திலும் அன்னை என்பதுதான்
கடவுளின் பெயர்.
***
280
அன்பு என்பது சிறிய சொல்லாக இருக்கலாம்.
ஆனால், அதில் அனைத்தும் இருக்கின்றன.
***
281
அமைதி இல்லாத மனதிற்கு
இசை மருந்தாக இருக்கிறது.
***
282
ஒவ்வொரு மனிதனும்
கேட்கும் விஷயத்தில்
மிகவும் வேகமாக இருக்க வேண்டும்.
பேசும் விஷயத்தில்
மிகவும் மெதுவானவனாக
இருக்க வேண்டும்.
***
283
தாவரங்கள் சூறாவளியை
எதிர்த்து தைரியத்துடன் நிற்கும்போது,
ஓக் மரங்கள் கீழே விழலாம்.
***
284
உன்னை விட
புத்திசாலித்தனமான
அறிவுரையை உனக்கு யாரும்
தர முடியாது.
***
285
ஏராளமான சொத்துக்களை
தன்னிடம் வைத்துக் கொண்டு
அதை அனுபவிக்காமல்
இருக்கும் மனிதன்,
பொன்னை ஏற்றிக் கொண்டு
செல்லும் கழுதை,
செடிகளைச் சாப்பிடுவதைப்
போன்றவன்.
***
286
ஒரு மனிதன் இறக்கும் வரையில்,
அவன் முழுமையாக பிறக்கவில்லை
என்றுதான் அர்த்தம்.
***
287
அமைதியான மனம்தான்
நோயைத் தீர்ப்பதற்கான மருந்து.
***
288
இறந்து போன துறவிகளை பாராட்டுவது,
உயிருடன் இருக்கும் துறவிகளை தூற்றுவது -
இதுதான் உலகத்தின் வழக்கமாக இருக்கிறது.
***
289
எல்லா விஷயங்களுடனும்
அனுசரித்துச் செல்வது -
இதுதான் வாழ்க்கையின்
பொன்னான சட்டம்.
***
290
கடவுள், சாதாரண மனிதர்களுக்கு சிரிப்பை,
கண்ணீர் இல்லாமல் அளிப்பதில்லை.
***
291
உன்னுடைய கடிதங்களையே
எப்போதும் திரும்பத் திரும்ப
டித்துக் கொண்டிருக்காதே.
***
292
யார் எப்போதும் வாழ
ஆரம்பித்துக் கொண்டே
இருக்கிறார்களோ,
அவர்கள் மோசமாகத்தான்
வாழ்வார்கள்.
***
293
எல்லா மாமிசங்களும்
புல்லைப் போன்றவையே.
அங்கிருக்கும் நல்லவை,
வயலில் இருக்கும் மலர்களுக்கு
நிகரானவை.
***
294
மனிதன் பெண்ணுக்குள்ளிருந்து
சில நாட்களிலேயே பிறந்திருக்கலாம்.
ஆனால், அவன் கொடுத்த
தொல்லைகள் அதிகம்.
***
295
உருண்டு கொண்டே இருக்கும்
கல் எப்படி எந்த பாசிகளையும் சேகரிக்காதோ,
அதே போல ஊசலாடும்
இதயம் பாசத்தைச் சேகரிக்காது.
***
296
இடையில் இருக்கும் ஒரு வேலி,
நட்பை பசுமையாக வைத்திருக்கும்.
***
297
பணிப்பெண்கள் கட்டாயம்
மென்மையானவர்களாகவும்,
பணிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கேட்கும் விஷயத்தில் வேகமானவர்களாகவும்,
பேசும் விஷயத்தில் மெதுவானவர்களாகவும்
அவர்கள் இருக்க வேண்டும்.
***
298
அனுசரித்துச் செல்வதில்தான்
உண்மையான சந்தோஷம் இருக்கிறது.
***
299
முதல் காதலில் இருக்கும்
மாயத் தன்மையே நம்முடைய
அறியாமைதான்.
அது எந்தச் சமயத்திலும்
முடிவடைந்து விடும்.
***
300
தங்களுடைய தலைகளை
பழைய இயற்கையின்
டியில் வைத்து தூங்குவதற்கு
நிகராக எந்தவொரு மனிதனும்
அவ்வளவு அமைதியாக
தூங்க முடியாது.
***