பொன்மொழிகள் 6



251

நல்ல குணங்கள் இல்லாத அழகு,

வாசனை இல்லாத மலரைப் போன்றது.

***


252

மிகப் பெரிய

ஆடம்பரங்களைத் தேடுவதை விட,

ஒரு நல்ல பெயரைத்

தேடுவது உயர்ந்தது.

***

253

சட்டம் என்பது

வலிமையானவர்களைக்

காப்பாற்றுவதற்கே

இருக்கிறது.

***

254

வாழ்வு என்பது

ஒரு புனிதமான ஜூ­வாலை.

நாம் நமக்குள் இருக்கும்

ஒரு கண்ணுக்குத் தெரியாத

சூரியனைக் கொண்டு

வாழ்கிறோம்.

***

255

நீதிபதிகள் சட்டத்திற்குக்

கீழ்ப்படிய வேண்டும்.

அதே நேரத்தில்

அதை செயல்படுத்தவும்

வேண்டும்.

***

256

இயற்கை சுற்றுகிறது.

அதனால், மனிதகுலம்

முன்னேறுகிறது.

***

257

பிரச்சாரம் செய்யாதே.

ஏனென்றால், நீ ஏதாவது

கூறியாக வேண்டும்.

ஆனால், கூறுவதற்கு

சில விஷயங்கள் இருக்கின்றன.

***

258

ஒரு முட்டாள் பணத்தை

உண்டாக்கலாம்.

ஆனால், அதை எப்படி

செலவு செய்வது என்பதற்கு

ஒரு புத்திசாலி மனிதன்

வேண்டும்.

***

259

உன்னுடைய நம்பிக்கையை

பணத்தின் மீது வைக்காதே.

ஆனால், உன்னுடைய பணத்தை

நம்பிக்கையின் மீது வை.

***

260

எவன் குழந்தையை

கையால் தூக்குகிறானோ,

அவன் தாயை இதயத்தால்

எடுக்கிறான்.

***

261

சாதாரணமாக தோன்றும்

மனிதர்களைத்தான் கடவுள் விரும்புகிறார்.

அவர்களை அதிகமாக

அவர் படைத்திருப்பதற்கு

அதுதான் காரணம்.

***

262

உணர்ச்சிவசப்படுவதிலிருந்து

உன்னை நீ காத்துக் கொள்.

கடவுள் உன்னை பாவத்திலிருந்து

விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.

***

263

உலகில் ஏராளமான

விமர்சகர்கள் இருக்கிறார்கள்.

ஏனென்றால், பாராட்டுவதை விட,

விமர்சனம் செய்வது என்பது

மிகவும் எளிதானது.

***

264

உண்மையான வாக்குறுதி சிறியதாக இருக்கும்.

ஆனால், செயல்படுவது பெரிதாக இருக்கும்.

பொய்யான வாக்குறுதி மிகப் பெரியதாக இருக்கும்.

செயல்படுவதோ சிறிய அளவில் கூட இருக்காது.

***

265

எங்களை சந்தோஷமானவர்களாகவும்,

நல்லவர்களாகவும் ஆக்கு!

***

266

நல்ல உடல் நலம்,

நல்ல அறிவு -

இவை இரண்டுமே

மிகப் பெரிய கொடுப்பினைகள்.

***

267

சுயநலம் கொண்ட இதயம்

வேதனைப்படுகிறது என்றால்,

அதற்கு அது தகுதியானதே.

***

268

ஒரு புனிதமான செயல்

ஒரு கெட்ட ஆன்மாவை

மறைத்து வைக்காது.

***

269

சந்தோஷத்தைப் பின்பற்றி

கவலையை பயணிக்கச் செய்வது

சொர்க்கத்தின் கட்டளை.

***

270

உலக சந்தோஷங்களில்

யார் குளிக்கிறார்களோ,

அவர்கள் கண்ணீர்

நிறைந்த உலகத்தில் நீந்தித்தான்

ஆக வேண்டும்.

***

271

எந்த இடத்தில் சட்டம் தண்டனை

அளிக்காமல் இருக்கிறதோ,

அந்த இடத்தில்

அது செயல்பட முடியாது.

***

272

யார் வாழ ஆரம்பிக்கிறானோ,

அவன் மரணமடையவும்

ஆரம்பிக்கிறான்.

***

273

நேர்மையான முறையில் வாழ்.

நேர்மையான முறையில்

இறப்பாய்.

***

274

மனிதர்கள் குள்ளநரித்தனத்துடன்

இருப்பதைப் பார்ப்பதில்

ஆச்சரியப்படுவதற்கு

எதுவுமே இல்லை.

அதே நேரத்தில் - அவர்கள் எப்படியெல்லாம்

அவமானப்பட்டு நிற்கிறார்கள்

என்பதைப் பார்க்காமல்

இருக்கிறோமே என்பது

பெரும்பாலும் ஆச்சரியப்படக்

கூடிய விஷயமே.

***

275

நூல்களை படிப்பதை விட,

மனிதர்களைப் படிப்பது

மிகவும் அவசியம்.

***

276

காயத்தை அனுப்பி வைத்த

கடவுள் மருந்தையும்

அனுப்பி வைப்பார்.

***

277

நிறைய பேசி, மனதில் இருக்கும்

எல்லா சந்தேகங்களையும்

இல்லாமற் செய்வதை விட,

அமைதியாக இருந்து கொண்டு

ஒரு முட்டாளைப் போல

நினைத்துக் கொண்டிருப்பது

எவ்வளவோ மேலானது.

***

278

பணத்தின் மீது கொண்ட ஆசையும்,

கற்க வேண்டும் என்பதின் மீது கொண்ட விருப்பமும்

எந்தச் சமயத்திலும் சந்திக்கவே சந்திக்காது.

***

279

சிறிய குழந்தைகளின் உதடுகளிலும்,

இதயத்திலும் அன்னை என்பதுதான்

கடவுளின் பெயர்.

***

280

அன்பு என்பது சிறிய சொல்லாக இருக்கலாம்.

ஆனால், அதில் அனைத்தும் இருக்கின்றன.

***

281

அமைதி இல்லாத மனதிற்கு

இசை மருந்தாக இருக்கிறது.

***

282

ஒவ்வொரு மனிதனும்

கேட்கும் விஷயத்தில்

மிகவும் வேகமாக இருக்க வேண்டும்.

பேசும் விஷயத்தில்

மிகவும் மெதுவானவனாக

இருக்க வேண்டும்.

***

283

தாவரங்கள் சூறாவளியை

எதிர்த்து தைரியத்துடன் நிற்கும்போது,

ஓக் மரங்கள் கீழே விழலாம்.

***

284

உன்னை விட

புத்திசாலித்தனமான

அறிவுரையை உனக்கு யாரும்

தர முடியாது.

***

285

ஏராளமான சொத்துக்களை

தன்னிடம் வைத்துக் கொண்டு

அதை அனுபவிக்காமல்

இருக்கும் மனிதன்,

பொன்னை ஏற்றிக் கொண்டு

செல்லும் கழுதை,

செடிகளைச் சாப்பிடுவதைப்

போன்றவன்.

***

286

ஒரு மனிதன் இறக்கும் வரையில்,

அவன் முழுமையாக பிறக்கவில்லை

என்றுதான் அர்த்தம்.

***

287

அமைதியான மனம்தான்

நோயைத் தீர்ப்பதற்கான மருந்து.

***

288

இறந்து போன துறவிகளை பாராட்டுவது,

உயிருடன் இருக்கும் துறவிகளை தூற்றுவது -

இதுதான் உலகத்தின் வழக்கமாக இருக்கிறது.

***

289

எல்லா விஷயங்களுடனும்

அனுசரித்துச் செல்வது -

இதுதான் வாழ்க்கையின்

பொன்னான சட்டம்.

***

290

கடவுள், சாதாரண மனிதர்களுக்கு சிரிப்பை,

கண்ணீர் இல்லாமல் அளிப்பதில்லை.

***

291

உன்னுடைய கடிதங்களையே

எப்போதும் திரும்பத் திரும்ப

டித்துக் கொண்டிருக்காதே.

***

292

யார் எப்போதும் வாழ

ஆரம்பித்துக் கொண்டே

இருக்கிறார்களோ,

அவர்கள் மோசமாகத்தான்

வாழ்வார்கள்.

***

293

எல்லா மாமிசங்களும்

புல்லைப் போன்றவையே.

அங்கிருக்கும் நல்லவை,

வயலில் இருக்கும் மலர்களுக்கு

நிகரானவை.

***

294

மனிதன் பெண்ணுக்குள்ளிருந்து

சில நாட்களிலேயே பிறந்திருக்கலாம்.

ஆனால், அவன் கொடுத்த

தொல்லைகள் அதிகம்.

***

295

உருண்டு கொண்டே இருக்கும்

கல் எப்படி எந்த பாசிகளையும் சேகரிக்காதோ,

அதே போல ஊசலாடும்

இதயம் பாசத்தைச் சேகரிக்காது.

***

296

இடையில் இருக்கும் ஒரு வேலி,

நட்பை பசுமையாக வைத்திருக்கும்.

***

297

பணிப்பெண்கள் கட்டாயம்

மென்மையானவர்களாகவும்,

பணிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கேட்கும் விஷயத்தில் வேகமானவர்களாகவும்,

பேசும் விஷயத்தில் மெதுவானவர்களாகவும்

அவர்கள் இருக்க வேண்டும்.

***

298

அனுசரித்துச் செல்வதில்தான்

உண்மையான சந்தோஷம் இருக்கிறது.

***

299

முதல் காதலில் இருக்கும்

மாயத் தன்மையே நம்முடைய

அறியாமைதான்.

அது எந்தச் சமயத்திலும்

முடிவடைந்து விடும்.

***

300

தங்களுடைய தலைகளை

பழைய இயற்கையின்

டியில் வைத்து தூங்குவதற்கு

நிகராக எந்தவொரு மனிதனும்

அவ்வளவு அமைதியாக

தூங்க முடியாது.

***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.