பொன்மொழிகள் 5



201

நீ நண்பனாக ஆக்கப்படும்போது,

அதைப் பற்றி ஞாபகத்தில் வைத்திரு.

நீ நண்பர்களைச் சேர்க்கும்போது,

அதை மறந்து விடு.


***

202

மிகவும் சிறியதற்கும்

மிகவும் பெரியதற்கும்

இடையில் இருக்கும்

ஸ்டேஷனுக்குப் பெயர்தான் -

சந்தோஷம்!

***

203

ஒரு தடவை

பேசுவதற்கு முன்னால்

இரண்டு தடவைகள் கேள்.

***

204

ஒரு வீடு இல்லாத

ஒரு மனிதன்

ஒரு கூடு இல்லாத

பறவையைப் போன்றவன்.

***

205

ஒரு செயல் நம்பிக்கையுடன்

செய்யப்படவில்லையென்றால்,

இதயம் நொறுங்கி விடும்.

***

206

சந்தோஷமற்று இருப்பவர்களிடம்,

நேரம் எவ்வளவு மெதுவாக

நகர்ந்து கொண்டிருக்கிறது!

***

207

தன்னால் அவன்

காயம்பட்டுக் கொள்ளலாமே தவிர,

அவனால் காயம்பட்டவர்கள்

யாரும் இல்லை.

***

208

எந்த இதயம்

பெருந்தன்மை கொண்டதாகவும்

அன்பு மயமானதாகவும் இருக்கிறதோ,

அது பெரும்பாலும் கடவுளை ஒத்தது.

***

209

தாவி குதிப்பதற்கு முன்னால்,

கூர்ந்து பார்.

***

210

ஏதாவது பயனுள்ள

ஒன்றைச் செய்வதற்காக

கிடைக்கும் நேரத்திற்குப்

பெயர்தான் ஓய்வு.

***

211

இன்று என்னை

நன்றாக வாழ விடுங்கள்.

நாளை என்ன என்று

யாருக்குமே தெரியாது.

***

212

மனிதனின்

மிகப் பெரிய எதிரியே

மனிதன்தான்.

***

213

பிறருக்கு எதிராக இருக்கும்

நம் மனங்களைத் துடைத்து,

பிரகாசமாக வைத்துக் கொள்வது

நல்லது.

***

214

தனக்கு நினைவுச் சின்னம் என்ற

ஒன்று தேவையே இல்லை

என்று யார் நினைக்கிறார்களோ,

அவர்கள்தான் அதற்குத் தகுதியானவர்கள்.

***

215

அதிர்ஷ்டமற்ற தன்மையைத்

தாங்கிக் கொள்ளும் சக்தி

யாருக்கு இல்லாமலிருக்கிறதோ,

அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை

ஏற்றுக் கொள்வதற்கும்

தகுதி இல்லாதவர்களே.

***

216

எல்லா மனிதர்களிடமும்

மிகவும் சுதந்திரத் தன்மையுடன்

இருக்கக் கூடிய மனம் எதுவோ,

அதுதான் புனிதத் தன்மை

கொண்ட மனம்.

***

217

குழந்தைகள்

இருப்பதால் மட்டுமே,

நல்ல அன்னைமார்கள்

உண்டாகி விட முடியாது.

***

218

ஒரு நோய்வாய்ப்பட்ட

மனிதனுக்கு பொறுமைதான்

மிகச் சிறந்த மருந்து.

***

219

எவன் தன்னுடைய நாட்டை

மிகச் சிறந்த நாடாக

ஆக்க வேண்டும்

என்று முயற்சிக்கின்றானோ,

அவன்தான் தன் நாட்டின் மீது

அதிகமான அன்பு வைத்திருப்பவன்.

***

220

தன்னுடைய கருத்தை

எந்தச் சமயத்திலும்

மாற்றிக் கொள்ளாமல் இருப்பவன்,

தேங்கிக் கிடக்கும் நீருக்கு ஒப்பானவன்.

மனதின் தவளைகள்

அதில் பெருகிக் கொண்டிருக்கும்.

***

221

 எந்தவொரு மனிதன்

வீட்டில் விருந்தாளிகளை

வரவேற்காமல் இருக்கிறானோ,

அவன் வெளியே

மிகவும் குறைந்த அளவிலேயே

உபசரிக்கப்பவர்களைச் சந்திப்பான்.

***

222

ஒரு ஆசிரியர்

எல்லையைத் தாண்டி

பாதிப்பை உண்டாக்கிக்

கொண்டிருப்பார்.

தன்னுடைய ஆதிக்கம்

எங்கு நிற்கும் என்று

அவர் எந்தச் சமயத்திலும்

கூற மாட்டார்.

***

223

ஒரு பாதுகாப்பான

இடத்தில் இருந்து கொண்டு

ஒரு மனிதன்

மிகவும் எளிதாக அறிவுரை

கூற முடியும்.

***

224

என் தாத்தா யார்

என்று எனக்குத் தெரியாது.

ஆனால், அவருடைய பேரனாக

வரப் போவது யார்

என்பதைத் தெரிந்து கொள்வதில்

நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

***

225

ஒவ்வொரு வருடமும்

அறுவடை என்ற ஒன்று வந்தாலும்,

அது ஒவ்வொரு நாளும் வராது.

***

226

தானியம் எப்போது

முழு விளைச்சலுக்கு

வந்து விட்டதோ,

அப்போது அறுப்பதற்கான

நேரம் வந்து விட்டது.

***

227

உண்மையான அப்பாவித்தனம்

எதைப் பற்றியும் வெட்கப் படாது.

***

228

தங்களுடைய விஷயங்களை விட

மற்றவர்களின் விஷயங்களில்

மனிதர்கள் மிகச் சிறப்பாக

தீர்ப்பு கூறுகிறார்கள்.

***

229

சிந்தனையே இல்லாமல் கற்பது,

உழைப்பை வீண் செய்வதைப் போன்றது.

கற்காமலே சிந்தித்துக் கொண்டிருப்பது

மிகவும் ஆபத்தானது.

***

230

கடவுள் சொர்க்கத்திலிருந்து

சூரியனை நீக்கி விட்டாலும்,

அப்போதும் நாம் கட்டாயம்

பொறுமையுடன் இருக்க வேண்டும்.

***

231

மனிதர்கள் உறங்கிக்

கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இறக்கும்போது,

கண் விழிக்கிறார்கள்.

***

232

மூடப்பட்டிருக்கும் ஒரு நூல்,

ஒரு மரக் கட்டையைப் போன்றது.

***

233

புரிந்து கொள்ளாமலே

படிப்பதில் என்ன

பிரயோஜனம் இருக்கிறது?

***

234

நீ கடவுளுக்கும்

சாத்தானுக்கும்

சேவை செய்ய முடியாது.

***

235

திருமண வாழ்க்கையை

ஆழமானதாக ஆக்குவதே

அன்புதான்.

***

236

காலை வேளையில் மலைக்கு.

மாலைப் பொழுதில் நீர் ஊற்றுக்கு.

***

237

ஒரு அன்னையை

வாழ்வுடன் பிணைக்கச்

செய்து கொண்டிருப்பவர்களே

பிள்ளைகள்தான்.

***

238

ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

ஒரு ரோஜாவை

என்ன பெயர் கூறி அழைத்தாலும்,

அது இனிய நறுமணத்தைக்

கொண்டதாகவே இருக்கும்.

***

239

யார் அன்பு செலுத்துகிறார்களோ,

அவர்கள் சொர்க்கத்திலிருந்து

ஒரு எட்டு வைக்கும்

தூரத்தில் இருக்கிறார்கள்.

***

240

நீங்கள் நேராக

நின்று கொண்டிருக்கும் பட்சம்,

உங்களுடைய நிழல்

குறைபாடுகளுடன் இருந்தால்,

நீங்கள் அதற்காக கவலைப்படாதீர்கள்.

***

241

எல்லோரும்

எந்த மனிதனை

இரண்டாவது இடத்திற்குப்

போகும்படி செய்கிறார்களோ,

அவன் சந்தேகமே இல்லாமல்

முதல் இடத்திற்கு

செல்லக் கூடிய தகுதி உடையவனாக

இருக்கிறான்.

***

242

பொன், நெருப்பால்

முயற்சி செய்யப்படுகிறது.

தைரியமான

மனிதர்கள் சண்டையால்

தீர்மானிக்கப்படுகிறார்கள்.

***

243

நீங்கள் ஏழையாக இருந்தால்,

உங்களின் நல்ல குணங்களைக்

கொண்டு நீங்கள் யார் என்பதை

காட்டுங்கள்.

பணக்காரனாக இருந்தால்,

உங்களுடைய நல்ல செயல்களின்

மூலம் யார் என்பதை காட்டுங்கள்.

***

244

ஒரு மென்மையான பதில்,

கோபத்தை இருக்கும்

இடமே தெரியாமல் விரட்டி விடும்.

***

245

உயரமான கட்டிடங்களில்

இருக்கும் மேல் மாடி

பெரும்பாலும் காலியாகத்தான்

இருக்கும்.

***

246

என்னுடைய

கவுரவத்திற்கு

காவலனாக

இருப்பவன் நானே.

***

247

உங்களுடைய வீட்டை

என்றைக்கு நீங்கள் சுத்தம்

செய்யாமல் இருக்கிறீர்களோ,

அன்று எதிர்பாராத விருந்தாளிகள்

வருவார்கள்.

***

248

உண்மையான பிரச்னைகளை

சீர் செய்து விட முடியும்.

கற்பனையான

பிரச்னைகளைத் தான் வெற்றி

கொள்ள முடியாது.

***

249

இரண்டு நண்பர்களுக்கு இடையே

நீதிபதியாக இருப்பவன்,

அவர்களில் ஒருவனை

இழந்து விடுவான்.

***

250

இளமையில் அறிவாக இருப்பது,

வயதான காலத்தில்

அனுபவமாக ஆகிறது.

***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.