151
தெய்வீக முரண்பாடுகளின்
ஆச்சரியச் சின்னமே பெண்.
***
152
எறும்பை விட
சிறப்பாக நீதி போதனை செய்ய
யாராலும் முடியாது.
அது எதுவுமே கூறுவதில்லை.
***
153
சோம்பேறித்தனமான மனிதனுக்கு
மிகவும் குறைந்த அளவிலேயே
ஓய்வு கிடைக்கும்.
***
154
இரவு வேளைகளில்
தொடர்ந்து கண்ணீர்
வந்து கொண்டிருக்கலாம்.
ஆனால், காலையில்
சந்தோஷம் வந்து விடும்.
***
155
ஏராளமான பேர்
தங்களின் ஞாபக சக்தியைப் பற்றி
குறைப்பட்டுக் கொள்வார்கள்.
ஆனால், மிகச் சிலரே
தங்களின் தீர்மானமெடுக்கும்
சக்தியைப்ப் பற்றி குறைப்படுவார்கள்.
***
156
நல்லது என்பது
ஒரே ஒரு விஷயம்தான்.
அது- அறிவு.
கெட்டது என்பது
ஒரே ஒரு விஷயம்தான்.
அது - அறியாமை.
***
157
தவறே செய்யாமல்
எந்த மனிதன் இருக்கிறானோ,
அவனுக்கு சட்டம் என்பதே
தேவையில்லை.
***
158
ஏமாற்றுவதை விட,
ஏமாற்றப்படுவது
எவ்வளவோ மேலானது.
***
159
பின்னோக்கி பார்த்துத்தான்
வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், அது முன்னோக்கி
வாழப்பட வேண்டும்.
***
160
திறமை வாய்ந்த சோம்பேறிகளின்
எண்ணிக்கையை
இயந்திரங்கள் பெரிய அளவில்
அதிகரித்திருக்கிறது.
***
161
தைரியம் ஒரு மனிதனை
சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்
அழைத்துக் கொண்டு செல்கிறது.
***
162
உருண்டு கொண்டிருக்கும்
ஒரு கல் தன்னுடன்
எதையுமே சேகரித்துக்
கொண்டு செல்லாது.
***
163
உன் பர்ஸ் முழுக்க
ணத்தை வைத்திருப்பதை விட,
ஏராளமான நூல்களை
படிக்க முயற்சி செய்.
***
164
தேவை என்ற ஒன்று சிறிதளவு
தைரியத்தையாவது தரும்.
***
165
புதியன என்று எதுவுமே இல்லை.
எல்லாமே மறக்கப்பட்டவைதான்.
***
166
சொர்க்கம் மழை பெய்ய வேண்டும்
என்று விரும்பினாலோ,
உன் அன்னை இன்னொரு திருமணம்
செய்து கொள்ள வேண்டும்
என்று ஆசைப் பட்டாளோ,
அதைத் தடுக்க எதனாலும் முடியாது.
***
167
அனைத்து மானிட அறிவையும்
இரண்டே சொற்களில்
அடக்கி விடலாம் :
காத்திருத்தல்,
நம்பிக்கையுடன் இருத்தல்.
***
168
பொன் ஆட்சி செய்யாத காலம்
எதுவோ, அதுதான்
பொற்கால ஆட்சி.
***
169
செய்யக் கூடாது என்று
நினைக்கும் செயலை,
செய்யாமல் இரு.
உண்மை அல்லஎன்று நினைப்பதை,
கூறாமல் இரு.
***
170
புனிதத் தன்மை இல்லாத இடத்தில்,
சந்தோஷம் இருக்காது.
***
171
எந்த மனிதன் தன்னுடைய
நேர்மைத் தன்மையை இழக்கிறானோ,
அவன் இழப்பதற்கு எதுவுமே இல்லை.
***
172
இதயம்
நெருப்பிற்குள் இருக்கும்போது,
வாய்க்குள்ளிருந்து கொஞ்சம்
நெருப்புப் பொறிகள்
வெளியே வரத்தான் செய்யும்.
***
173
வாழ்வு என்ற ஒன்று
எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ,
அவ்வளவு நாட்கள்
நம்பிக்கை என்ற ஒன்றும்
இருக்கும்.
***
174
ஒரு ஆரோக்கியமான உடல்,
ஆன்மா தங்கக் கூடிய
விருந்தினரின் மாளிகையாக இருக்கிறது.
நோய் பாதித்த உடல்,
சிறைச் சாலையாக இருக்கிறது.
***
175
ஒவ்வொரு இதயத்திற்கும்
அதற்கென்று இருக்கக் கூடிய
வேதனை இருக்கத்தான்
செய்கிறது.
***
176
மிகவும் உயரமாக
இருக்கும் மரத்திற்குத்தான்
மிகப் பெரிய வீழ்ச்சி இருக்கும்.
***
177
எல்லா திருமண கேக்குகளிலும்,
நம்பிக்கைதான்
இனிப்பு நிறைந்த கனியாக இருக்கிறது.
***
ஒரு சோம்பேறி மனிதன்
சாத்தானின் விளையாட்டு
நண்பனாக இருக்கிறான்.
***
178
அறிவாளி மனிதர்கள்
திட்டங்களுடன் இருப்பார்கள்.
நம்மில் பெரும்பாலோர்
அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்போம்.
***
179
ஒரு நண்பனை இழப்பதை விட,
ஒரு நகைச்சுவையை இழக்கலாம்.
***
180
கருணை என்ற
சூரியயோதயத்தில்தான்,
நல்ல குணங்கள் வளர்கின்றன்.
***
181
வராமல் இருப்பதை விட,
தாமதமாக வந்தது நல்லதுதான்.
ஆனால், எந்தச் சமயத்திலும்
தாமதமாக வராமல் இருப்பது நல்லது.
***
182
உழக் கூடிய கோவேறு கழுதையைப்
பற்றி தெரிந்து கொள்.
நெய்யக் கூடிய புழுவைப் பற்றி
தெரிந்து கொள்.
***
183
அரை உண்மையாக இருப்பது
பெரும்பாலும்
ஒரு பெரிய பொய்யாகத்தான்
இருக்கும்.
***
184
ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையுமே கடவுளின்
விரலால் எழுதப்பட்ட
குழந்தைகள் கதைதான்.
***
185
நெஞ்சில் அன்பு
வைத்திருப்பவன் எவனோ,
அவன் தன் இரண்டு பக்கங்களிலும்
சிறகுகளை வைத்திருக்கிறான்.
***
186
ஆண் வேலை செய்யலாம்,
சிந்திக்கலாம்.
ஆனால், பெண்ணால்தான்
உணர முடியும்.
***
187
நல்ல பெண்கள்
நிறைந்த சமுதாயம்,
நல்ல பழக்க வழக்கங்களுக்கான
அடிப்படையாக இருக்கிறது.
***
188
செயல்படும்போது கசப்பாக இருப்பது,
நினைத்துப் பார்க்கும்போது
இனிப்பானதாக இருக்கலாம்.
***
189
மனங்கள் இல்லாத சரீரங்களை
கடை வீதியில் இருக்கும்
சிலைகளுடன் ஒப்பிடலாம்.
***
190
பணத்தின் மீது
கொண்டிருக்கும் ஈடுபாடுதான்
எல்லா பாவங்களுக்கும்
மூல காரணமாக இருக்கிறது.
***
191
நான் ஏன் ஒரு சிலையை வைத்திருக்கிறேன்
என்று கேட்கும் மனிதர்களை விட,
நான் ஏன் ஒரு சிலையை வைக்காமல் இருக்கிறேன்
என்று கேட்கும் மனிதர்களைத்தான் சந்திக்கிறேன்.
***
192
அவர்களின் தாய் எப்படி உருவாக்குகிறார்களோ,
அப்படி உருவாகுபவர்கள்தான் மனிதர்கள்.
***
193
நீ உன் மீது எந்த அளவிற்கு
அன்பு வைத்திருக்கிறாயோ,
அந்த அளவிற்கு உன் பக்கத்து
வீட்டுக்காரர்களிடமும் அன்பு செலுத்து.
***
194
வாழ்வு மிகவும் சிறியது.
நம்முடன் இருண்ட பயணத்தில்
பயணம் செய்து வருபவர்களின்
இதயங்களில் சந்தோஷங்களை
உண்டாக்க நமக்கு பெரும்பாலும்
நேரமே கிடைப்பதில்லை.
வேகமாக அன்பு செலுத்த ஆரம்பியுங்கள்!
சீக்கிரம் பரிவுடன் இருங்கள்!
***
195
நமக்கு தெரிந்த எல்லா உலகங்களிலும்
எது மிகவும் சிறந்ததாக இருக்கின்றதோ,
அதைத்தான் எல்லோருமே விரும்புகிறார்கள்.
***
196
நம்மைப் பற்றி நல்ல வகையில்
மனிதர்களைப் பேசச் செய்வதற்கான
ஒரே வழி - நல்ல செயல்களைச்
செய்வதுதான்.
***
197
முதலில் உதவி என்று
வந்து நிற்கும்நிலைமை
பின்னர் ஆட்சி செய்வது என்று
மாறி விடும்.
***
198
ஒரு மனிதன் எந்த அளவிற்கு
நல்ல குணங்களுடன் இருக்கிறானோ,
அந்த அளவிற்கு மிகவும் குறைவாகவே
அவன் பிற மனிதர்களை
மோசமானவர்கள் என்று சந்தேகப் படுவான்.
***
199
ஒவ்வொரு அரசனும் அடிமைகளின்
வம்சத்திலிருந்துதான் உருவாகிறான்.
அதேபோல ஒவ்வொரு அடிமையும்
தங்களின் முன்னோர்களிடம்
அரசர்களைக் கொண்டிருக்கிறான்.
***
200
ஒரு மிகச் சிறந்த ஒவியன்
ஒரு மிகச் சிறந்த ஓவியத்தை
மிகவும் சிறிய க்யான்வாஸில்
வரைந்து விடுவான்.
***
