பொன்மொழிகள் 3



101

மனிதர்களின் செயல்களில்

ஒரு அலை இருக்கிறது.

அந்த அலை, வெள்ளத்தின் மூலம்

அதிர்ஷ்டத்தை நோக்கி செல்லும்.



***

102

கடவுள் அன்பின் வடிவத்தில் இருக்கிறார்.

ஒரு கணவன் மற்றும் மனைவியின் அன்பு

நம்மை உண்மைத் தன்மை

நிறைந்த இதயத்திற்கு அருகிலும்,

அறிவு கடவுளிடமும் வேறு

எந்த அனுபவத்தையும் விட,

கொண்டு செல்கிறது.

***

103

எங்கு எழுத்துக்கள் சுதந்திரமாக

இருக்கின்றனவோ,

ஒவ்வொரு மனிதனும்

எங்கு படிக்க முடிகிறதோ,

அங்கு எல்லாமே நல்ல நிலையில்

இருப்பதாகத்தான் அர்த்தம்.

***

104

மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்,

நல்ல உடல் நலம் இருக்க வேண்டும்...

மோசமான ஞாபக சக்தி இருக்க வேண்டும்.

***

105

ஒரு செயல் சிறப்பான முறையில்

நடைபெற வேண்டுமென்றால்,

ஒரு நூறு கெட்ட செயல்கள்

மறக்கப்பட வேண்டும்.

***

106

இளம் தோள்களில் வயதான

தலைகளைப் பொருத்துவது

மிகவும் சிரமமான விஷயம்.

***

107

தன்னுடைய நல்ல எதிர்காலத்தைத்

தெரிந்து வைத்திருப்பவன்,

சந்தோஷமானவனாக இருப்பான்.

***

108

எவன் சந்தோஷங்கள் நிறைந்த

இதயத்தைக் கொண்டிருக்கிறானோ,

அவன் தொடர்ந்து விருந்து உண்பதற்கு

நிகரானவனாக இருப்பான்.

***

109

ஒரு பணம் நிறைந்த பர்ஸை விட

ஒரு சந்தோஷம் நிறைந்த

இதயம் மேலானது.

***

110

விருந்தாளிகளை சந்தோஷப்படுத்துவதை

மறந்து விடாதீர்கள். அதன் மூலம்

தங்களுக்கே தெரியாமல் சிலர்,

தேவதைகளை சந்தோஷப்படுத்தி

இருக்கலாம்.

***

111

ஒரு கடனை விட,

அன்பு அதிகமாக

பிணைக்கக் கூடியது.

***

112

ஒரு நல்ல சிரிப்பு ஒரு வீட்டின்

சூரியோதயமாக இருக்கிறது.

***

113

கேள்விகளைக் கேட்பதன் மூலம்

ஒரு மனிதன் நிறைய

கற்றுக் கொள்ள முடியும்.

***

114

கூர்ந்து கவனிப்பதற்கான

அருளை எங்களுக்குத் தா.

***

115

நீ அன்பு செலுத்தப்பட

வேண்டுமென்றால்,

நீ அன்பு நிறைந்தவனாகவும்,

அன்பு செலுத்துபவனாகவும் இரு.

***

116

மேலான நிலையில் இருக்கும்

மனிதன் தேடுவது

அவனுக்குள் இருக்கிறது.

சாதாரண மனிதன் தேடுவது

மற்றவர்களிடம் இருக்கிறது.

***

117

நிமிடங்கள் விஷயத்தில்

மிகவும் கவனமாக இருங்கள்.

மணிகள் தங்களைத் தாங்களே

பார்த்துக் கொள்ளும்.

***

118

எவன் மற்றவர்களுக்கு

தீங்கு செய்ய நினைக்கின்றானோ,

அவன் தனக்குத் தானே

அழிவைத் தேடிக் கொள்கிறான்.

***

119

நினைவுச் சின்னங்கள்

மிக உயர்ந்தவைதாம்.

நம் வாழ்க்கைகள் தகுதி

உடையவையாக இருக்கும் பட்சம்,

நம் நினைவுகளில் அவை இருக்கும்.

***

120

விருந்து வைத்திருக்கும்

வீட்டிற்குச் செல்வதை விட,

துக்க வீட்டிற்குச் செல்வது சிறந்தது.

***

121

நம் நண்பர்கள் இல்லாமல்

நாம் உயிர் வாழ்ந்து விட முடியும்.

ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்கள்

இல்லாமல் நாம் வாழ முடியாது.

***

122

அமைதிக்குப் பதிலாக போரைத் தேர்ந்தெடுக்கும்

அளவிற்கு யாரும் முட்டாள் அல்ல.

அமைதித் தன்மையின்போது,

மகன்கள் தந்தைகளைப் புதைக்கிறார்கள்.

ஆனால், போரில் தந்தைகள்,

மகன்களைப் புதைக்கிறார்கள்.

***

123

எந்த மனிதன் தான் தீர்மானிப்பதற்கு

முன்பு எதுவுமே தெளிவாக

இருக்க வேண்டும் என்று

கட்டாயம் நினைக்கின்றானோ,

அவன் எந்தச் சமயத்திலும்

தீர்மானிக்கவே மாட்டான்.

வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வருத்தங்களையும் கட்டாயம்

ஏற்றுக் கொள்ள வேண்டும்.

***

124

அதிகமான அளவில்

அதிகமான சந்தோஷத்தை

அளிக்கக் கூடிய செயல் எதுவோ,

அந்த செயல் மிக சிறந்த ஒன்றே.

***

125

ஒரு குருவியின் இளமையை விட

கழுகின் முதுமை உயர்ந்தது.

***

126

பொது அறிவு,  வெளிப்படையான

செயலாற்றும் போக்கு –

இவைதான் மனிதர்களை வியப்படைய

வைக்கும் விஷயங்கள்.

***

127

ஒரு மென்மையான பதில்

கோபத்தை விரட்டியடிக்கிறது.

அதே நேரத்தில் - கடுமையான வார்த்தைகள்

கோபத்தை உண்டாக்கும்.

***

128

எதிர்ப்பார்ப்புடன் திறந்து,

ஆதாயத்துடன் எந்தப்

புத்தகத்தை மூடுகிறோமோ,

அதுதான் ஒரு நல்ல புத்தகம்.

***

129

பகிர்ந்து கொள்வதற்காக

இருப்பதே மகிழ்ச்சி.

***

130

நீ என்ன விரும்புகிறாயோ,

அது உனக்குக் கிடைக்க

வில்லையென்றால்,

எது உனக்கு கிடைத்திருக்கிறதோ,

அதை நீ விரும்ப வேண்டும்.

***

131

முட்டாளின் இதயம் அவனுடைய

வாயில் இருக்கிறது.

ஆனால், புத்திசாலியின் வாய்

அவனுடைய இதயத்தில் இருக்கிறது.

***

132

ப்ளம் மரம் எந்த அளவிற்கு

உயரமாக இருக்கின்றதோ,

அந்த அளவிற்கு ப்ளம்,

நன்கு பழுத்திருக்கும்.

***

133

புலர்காலைப் பொழுதிற்கு

சற்று முன்னால்

இருப்பதுதான் இருட்டு.

***

134

அந்நியான செயல்கள் செய்வதன் மூலம்

உண்டாகும் துன்பத்தை விட, அதை செய்வது-

மிகவும் கேவலமான விஷயமாகும்.

***

135

கடுமையாக உழைக்கும்

ஒரு மனிதனின் தூக்கம்

இனிமையானது.

***

136

பிள்ளைகள் தங்களின் பெற்றோரை

எப்போது சரி செய்கிறார்களோ,

அப்போது சட்டம் சந்தோஷப்படுகிறது.

***

137

பெரும்பாலான கடுமையான

பொய்கள் அமைதியான

சூழ்நிலையில்தான் கூறப்படுகின்றன.

***

138

கடவுளின் பக்கம் எது இருக்கிறதோ,

அதுதான் பெரும் பலம் கொண்டது.

***

139

செயல்களைக் கொண்ட

மனிதனாக இல்லாமல்

வார்த்தைகளைக் கொண்ட

மனிதனாக இருப்பவன்,

களைகளால் நிறைந்திருக்கும்

ஒரு தோட்டத்திற்கு ஒப்பானவன்.

***

140

தனக்கு எஜமானனாக

எவன் இருக்கிறானோ,

அவன் வெகு சீக்கிரமே

மற்றவர்களுக்கு எஜமானனாக

ஆகி விடுவான்.

***

141

காயம் பட்டவர்களுக்கு

மட்டுமே எப்போதும் கெட்ட நேரம்

வந்து சேரும் என்று கூறுவதற்கில்லை.

***

142

எல்லா பொருட்களும்

மண்ணிலிருந்துதான் பிறக்கின்றன.

அனைத்துப் பொருட்களையும்

திரும்பவும் மண்ணே

எடுத்துக் கொள்கிறது.

***

143

கடவுளே கூட

இரண்டு மலைகளை

அவற்றிற்கு நடுவில்

ஒரு பள்ளம் இல்லாமல்

உருவாக்க முடியாது.

***

144

எங்கு இசை இருக்கிறதோ,

அங்கு தவறான

செயல்கள் நடைபெறாது.

***

145

அதிகமான வயது அல்ல –

கூர்மையான பார்வைதான்

அறிவைக் கொண்டு வரும்.

***

146

பிறரிடம் பார்க்கும்

நல்ல விஷயங்களை

நீ விரும்ப ஆரம்பித்தால்,

அவற்றை உன்னிடம்

நீ உண்டாக்கிக் கொள்வாய்.

***

147

உன்னிடம் சில கவிதைத்

தன்மைகளை உண்டாக்காமல்,

உன்னால் எந்த இடத்திலும்

கவிதையைப் பார்க்க முடியாது.

***

148

மிகப் பெரிய மரம்

பலமான காற்றை

தன்னை நோக்கி

வரச் செய்கிறது.

***

149

மனிதர்களிடம் நம்பிக்கை வை.

அவர்கள் உனக்கு

உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.

அவர்களை உயர்வாக நடத்து.

அவர்கள் உயர்வானவர்களாக

நடந்து கொள்வார்கள்.

***

150

இடைவெளி அன்பை கூர்மைப்படுத்துகிறது.

இருத்தல் அதிக உறுதியனாதாக ஆக்குகிறது.

***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.