பொன்மொழிகள் 2


51

கடவுள் தன்னுடைய

 சொர்க்கத்தில் இருக்கிறார்.

உலகில்

உள்ள அனைத்தும்

ஒழுங்காக இருக்கின்றன.



***

52

குழந்தையின் எதிர்கால விதி

எப்போதும்

ஒரு தாயின் செயலில்தான்

இருக்கிறது.

 ***

53

 சுதந்திரமாக

 ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்

 கடலை விட,

 சர்வாதிகாரத் தன்மையில்

 நிலவும்

அமைதியைத்தான்

 பிடிவாதக்கார மனிதர்கள்

 விரும்புவார்கள்.

 ***

54

வாழ்க்கைக்கு நாம்

ஒரு புதிய விதியை

உண்டாக்குவோம்.

எந்த அளவிற்கு தேவையோ,

அதைவிட சற்று

அதிகமான அன்புடன்

எப்போதும் இருப்பதே அது.

 ***

55

எந்தச் சந்தையிலும்,

நூறு முனகல்களுக்கு

நிகரானது ஒரு சிரிப்பு.

 ***

56

சந்தோஷத்திற்கான

எல்லா வாய்ப்புகளையும்

இயற்கை உருவாக்கித் தருகின்றது.

ஆனால், அதை எப்படி

பயன்படுத்திக் கொள்வது

என்ற விஷயம்

 அவர்களுக்கு தெரிய வேண்டும்.

***

57

ஒரு மனிதன்

எந்த அளவிற்கு

காயமுற்றானோ,

அந்த அளவிற்கு எளிதில்

அவன் குணமடைந்து விட

முடியாது.

 ***

58

எங்கு உங்களின்

பொக்கிஷம் இருக்கிறதோ,

அங்குதான் உங்களின்

இதயம் இருக்கும்.

 ***

59

எங்கோ தூரத்தில்

மாமிசத்தை வறுப்பதை விட,

வீட்டில் ரொட்டியை

காய வைப்பது மேலானது.

***

60

காலை உணவிற்கு

முந்தைய ஒரு மணி நேரம்,

எஞ்சிய நாளின்

இரண்டு மடங்கிற்கு நிகரானது.

 ***

61

அறிவே இல்லாத

ஒரு மனிதன்

இறந்து போன

மனிதனுக்கு ஒப்பானவன்.

***

62

இப்போதைய இனிய

சந்தோஷங்களை

கவலைகள்

நினைத்துப் பார்க்கும்.

 ***

63

உன்னுடைய

கஞ்சியை ஆற

வைப்பதற்கு

உன் மூச்சை வைத்திரு.

 ***

64

யார்

அறிவிற்காக தாகத்துடன்

இருக்கிறார்களோ,

அவர்களுக்கு அது கிடைக்கும்.

 ***

65

ஒரு மனிதன்

இதயத்தில் என்ன

எழுதப் பட்டிருக்கிறதோ,

அதைக் கொண்ட அவனுக்கான

சட்டம் பற்றிய நூல்

எங்கே இருக்கிறது?

 ***

66

ஏமாற்றுக்காரர்கள்

பிறரின் மீது ஆதிக்கம்

செலுத்துவதில் ஆரம்பித்து,

தங்களைத் தாங்களே

ஏமாற்றிக் கொள்வதில்

முடிக்கிறார்கள்.

 ***

67

நம் வாழ்வின்

வலையே

நல்லது, கெட்டது

எல்லாம் கலந்த

நூல்களால் ஆனதுதான்.

***

68

அன்பில்

பயம் என்பதே இல்லை.

ஆனால்,

உண்மையான அன்பு

பயத்தை

விரட்டியடித்து விடும்.

 ***

69

பெரும்பாலானவர்களின்

கருத்துதான், எது சரி

என்பதற்கான இறுதி முடிவு அல்ல.

 ***

70

ஒரு மனிதன்

தன்னைத் தானே

எந்த அளவிற்கு எடை போட்டு

வைத்திருக்கிறானோ,

அதற்கேற்றபடிதான்

அவன் மதிப்பிடப் படுகிறான்.

 ***

71

ஒவ்வொரு மனிதனும்

ஒரு முதலாளியும்,

ஒரு வேலைக்காரனும்....

இரண்டுமேதான்.

***

72

ஒரு கவலையில் இருக்கும் மனிதன்

எவ்வளவு நாட்கள் வாழ்கிறானோ,

அவ்வளவு நாட்கள்

ஒரு சந்தோஷத்தில் திளைக்கும்

மனிதனும் வாழ்கிறான்.

***

73

அவசரத்தால்தான்

தவறுகள் உண்டாகின்றன.

எதையும் நிதானமாக

செய்வதன் மூலம்

எந்த சமயத்திலும்

அது உண்டாவதில்லை.

***

74

பணம் தன்னுடைய

வேலைக்காரனாக

இல்லையென்றால்.

அது உன்னுடைய

முதலாளியாக இருக்கும்.

***

75

காதால் கேட்கும் பாடல்கள்

இனியனவாக இருக்கலாம்.

ஆனால்,

இன்னும் கேட்காமல் இருப்பவை,

கேட்ட பாடல்களை விட

மிகவும் இனிமையானவை.

***

76

பிறரை வேதனைப்பட

செய்யாதீர்கள்.

அதே போல

மற்றவர்களிடமிருந்து

வேதனைகளை

வாங்கவும் செய்யாதீர்கள்.

***

77

என்ன காரணத்திற்காக என்று

உனக்கு தெரியாமல் இருக்கும் பட்சம்,

நீ ஒரு மனிதனைப் பற்றி கேவலமாக

எந்த சமயத்திலும் பேசாதே.

அது ஒரு காரணத்திற்காகத்தான் என்று

உனக்கு தெரியும் பட்சம்,

உனக்குள் நீயே கேட்டுக் கொள்:

'நான் ஏன் இதை கூற வேண்டும்?'

***

78

நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில்

மிருகத்தனமாக நடந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஒரு கெட்ட மனிதனுக்கும், ஒரு நல்ல மனிதனுக்குமிடையே

உள்ள வித்தியாசமே - அதை தேர்ந்தெடுப்பதற்கான

காரணத்தில்தான் இருக்கிறது.

***

79

இந்த வாழ்வின் பெரும்பாலான

நிழல்கள் நம்முடைய சொந்த சூரியோதயத்தில்

நிற்பதால் உண்டாகுபவைதான்.

***

80

ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட

ஒரு அழகான பெண்ணின் முனகள்

சத்தம் நீண்ட தூரம் கேட்கும்.

***

81

மேல் நாட்டு தத்துவ ஞானிகள் கூறுவார்கள்:

'நான் எதை கொடுத்தேனோ, அதை வைத்திருந்தேன்.

நான் எதை செலவழித்தேனோ, அதை வைத்திருந்தேன்.

எதை வைத்திருந்தேனோ, அதை இழந்து விட்டேன்.’

***

82

ஒரு சூரியனை நோக்கி சுடுபவன்,

ஒரு மரத்தை நோக்கி சுடுபவனை விட

உயரமாக சுடுவான்.

***

83

எது அழகாக இருக்கிறதோ,

அது நல்லது. அதே போல

எது நல்லதாக இருக்கிறதோ,

அது மிக விரைவில்

அழகானதாக ஆகி விடும்.

***

84

எந்தவொரு மனிதனும்

அவன் தன் மனதில்

நினைத்துக் கொண்டிருக்கும்

அளவிற்கு எந்த சமயத்திலும்

மிகவும் சந்தோஷமான மனிதனாகவோ,

மிகவும் கவலைகள் நிறைந்த

மனிதனாகவோ இருக்க முடியாது.

***

85

ஒரு பரந்த மனம் எப்போதும்

போவதற்கு தயாராக இருக்கும்.

அதற்கு எந்தவொரு

ஆயத்தமும் தேவையில்லை.

***

86

நல்ல நிலையில் இருக்கும்

நாய்க்கு உதவுவதைவிட,

நொண்டியாக இருக்கும் நாய்க்கு

எப்போதும் உதவுங்கள்.

***

87

மரியாதைக்குரிய இடத்தில்

இருக்கும் மனிதர்களுக்கு

ஒரு சொல் என்பது

ஒரு விலங்கைப் போன்றது.

***

88

அன்பு இல்லாத இடத்தில்

உண்மையான புனிதத்தன்மைக்கு

இடமே இல்லை.

***

89

உண்மைக்கு மிகவும் அருகில்

வரக்கூடிய ஒரு நகைச்சுவை,

ஒரு அடையாளத்தை பின்னால்

விட்டு விட்டே செல்கிறது.

***

90

நாம் எல்லோருமே

பாவச் செயல்கள்

செய்திருப்பவர்கள்தாம்.

தீர்ப்பு கூறுவதில்

அவசரப் படாதீர்கள்.

***

91

எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்

என்பதை யார் தெரிந்து

வைத்திருக்கிறார்களோ,

அவர்கள் தேவையான அளவிற்கு

தெரிந்து வைத்திருப்பவர்களே.

***

92

ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ,

அதே மாதிரியே இறப்பான்.

ஒரு மரம் எப்படி கீழே விழுகிறதோ,

அப்படித்தான் அது கிடக்கும்.

***

93

உங்களுடைய கடிதங்களையே

திரும்பத் திரும்ப படித்துக்

கொண்டிருக்காதீர்கள்.

***

94

மலை முஹம்மதுவைத் தேடி

வரவில்லையென்றால்,

முஹம்மது கட்டாயம் மலையைத்

தேடிச் செல்ல வேண்டும்.

***

95

ஒரு தியாகியை

உருவாக்குவது மரணமல்ல –

அதற்கான காரணம்தான்.

***

96

குணமாவதில்

பெரும் பங்கு வகிப்பது

குணமாக வேண்டும்

என்ற விருப்பம்தான்.

***

97

கடவுள்களின் அரவை இயந்திரங்கள்

மெதுவாகத்தான் அரைக்கும்.

ஆனால், அவை மிகவும்

சிறப்பாக அரைக்கும்.

***

98

எந்த மனிதனும் ஒரு தவறை

செய்யத்தான் செய்வான்.

ஆனால், ஒரு முட்டாளைத் தவிர

வேறு யாரும் அதிலேயே வாழ்ந்து

கொண்டிருக்க மாட்டார்கள்.

***

99

உன்னால் ஒரு மலையை அளக்க

முடியவில்லையென்றால்,

ஒரு சமவெளியை உன்னால்

பார்க்கவே முடியாது.

***

100

இயற்கை ஒன்றையும்

அறிவு இன்னொன்றையும்

எந்த சமயத்திலும் கூறுவதில்லை.

***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.