1.
ஒரு சந்தோஷமான
வாழ்க்கை என்பது
மனதின்
அமைதித்தன்மையைப்
பொறுத்தது.
***
2
எவன் ஒருவன்
பொறுமைசாலியாக
இருக்கிறானோ, அவன்
தான் நினைத்ததை
கட்டாயம் அடைவான்.
***
3
கிரீடங்களை விட
கனிந்த இதயங்கள்
மேலானவை.
***
4
நீ உன்னுடைய
நண்பனுக்கு பணம் தந்து
உதவ முடியாமற் போகும்பட்சம்,
ஒரு ஆறுதல்
வார்த்தையைக் கூறி
அவனுக்கு உதவலாம்.
***
5
உனக்கு
நிழல் தரும்
மரத்திற்கு
மரியாதை கொடு.
***
6
கற்றுக் கொள்வதற்கு
விருப்பமில்லாமல்
இருப்பதை விட,
அறியாமை
கொண்டவனாக இருப்பது
வெட்கப் படக் கூடிய
செயல் அல்ல.
***
7
நம்மிடம் இருக்கும்
சந்தோஷத்தைப்
பிறருடன் பங்கிட்டுக்
கொள்ளும்போது,
அந்த சந்தோஷமே
இரண்டு மடங்குகளாக
பெருகுகிறது.
***
8
நாமும் வாழ்ந்து,
பிறரையும் வாழ
வைப்பதுதான்
பொதுவான சட்டத்தின்
அடிப்படை.
***
9
அறிவு என்பது
சிறகைப் போன்றது.
அந்த சிறகைக் கொண்டு
நாம் சொர்க்கத்திற்கே
பறந்து செல்லலாம்.
***
10
ஒருவன் என்றைக்கு
சிரிக்காமலே
இருக்கிறானோ,
அந்த நாள் தொலைந்து
போன நாளே.
***
11
எவன் ஏழைகளுக்கு
கடன் தருகிறானோ,
அவனுக்கு
கடவுளிடமிருந்து
வட்டி கிடைக்கும்.
***
12
வாழ்வின் ரகசியம் என்பது -
நீ என்ன நினைக்கிறாயோ,
அதை செய்யாமல்
இருப்பது அல்ல.
எதை செய்யப் போகிறாயோ,
அதை விரும்புவதுதான்.
***
13
அதிர்ஷ்டத்தின்
விளையாட்டுதான்
ஒரு மனிதனின்
வாழ்க்கை.
***
14
மனித வாழ்க்கை மீது
ஆண் கொள்ளும் விருப்பம்
ஒரு பகுதியாக இருக்கலாம்.
ஆனால், முழு இருத்தலுமே
பெண்ணுக்கு
அதில்தான் இருக்கிறது.
***
15
பழக்க, வழக்கங்களும்
சம்பிரதாயங்களும்
வேறுபடலாம்.
ஆனால், மனிதனின்
இயற்கை குணம் ஒன்றுதான்.
***
16
கடவுள்
எவற்றையெல்லாம்
ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ,
அதை மனிதன்
பிரிக்காமல் இருக்க வேண்டும்.
***
17
ஒரு மனிதன்
ஒரு பெண்ணை காதலிக்க,
ஒரு பெண் ஒரு ஆணைக் காதலிக்க -
அப்போது சொர்க்கத்திலிருந்து
தேவதைகள் புறப்பட்டு வந்து
அவர்கள் இருக்கும் வீட்டில் அமர்ந்து,
அவர்களின் சந்தோஷத்திற்காக பாடுவார்கள்.
***
18
பிறரின் வீழ்ச்சியிலிருந்து,
நீ தவிர்க்க வேண்டிய
பாவங்கள் என்ன என்பதைக்
கற்றுக் கொள்.
***
19
இது காலி பர்ஸ்தான்.
ஏனென்றால்,
இது முழுக்க
மற்ற மனிதர்களின்
பணம்தான் இருக்கிறது.
***
20
கடவுள்
எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது.
அதனால்தான் அவர்
அன்னைமார்களைப் படைத்தார்.
***
21
யார் தங்களின் கருத்துக்களை
எந்த சமயத்திலும்
திருத்திக் கொள்ளாமல்
இருக்கிறார்களோ,
அவர்கள் உண்மையின் மீது
கொள்ளும் விருப்பத்தை விட,
தங்களின் மீது
வைத்திருக்கும் விருப்பம்
அதிகமானது.
***
22
நம்முடைய மிகப் பெரிய சந்தோஷம் -
வாய்ப்பு நம்மை எப்படிப்பட்ட
வாழ்க்கையை வாழ
செய்திருக்கிறது என்பதில் இல்லை.
அதற்கு மாறாக, நல்ல
மனச்சாட்சியின் விளைவு,
நல்ல உடல் நலம், தொழில்,
ஈடுபடும் எல்லா
முயற்சிகளிலும் இருக்கக் கூடிய
முழுமையான சுதந்திரம்...
இவற்றில்தான் இருக்கிறது.
***
23
மனித இனத்திற்கு
பயனுள்ளவனாக இரு.
அதன்மூலம்
மனித உயிர்களின் மீது
அன்பு செலுத்துவதைப் பற்றி
தெரிந்து கொள்வாய்.
***
24
செயல்படாமல் இருப்பது
சிறிய ஆசைகளைக்
குறைத்து,
பெரிய ஆசைகளை
அதிகரிக்கச் செய்யும்.
***
25
சிந்திக்க தெரியாதவர்களுக்கு
கேளிக்கைதான்
சந்தோஷத்தை
அளிக்கக் கூடிய விஷயம்.
***
26
பகுத்தறிவு வாதிகளுக்கும்
மூடத்தனங்களுக்குமிடையே
சாத்தான்
உலகைப் பிரித்து
வைத்திருக்கிறது.
***
27
ஒவ்வொரு பேரத்தையும்
தெளிவாகவும் வெளிப்படையாகவும்
செய்யுங்கள்.
அப்படியென்றால்தான்,
பின்னர் யாரும் குறை கூறாமல் இருப்பார்கள்.
***
28
ஒரு மனிதனின்
செழிப்பான வாழ்வின்
இறுதியில்தான்,
நாம்
அவன் சந்தோஷமாக
இருப்பதாக கூறுவோம்.
***
29
நாம் எவற்றையெல்லாம்
வெறுக்கிறோமோ,
அதற்குக் கீழே நம்மை
பலமான வெறுப்பு நசுங்கிக்
கிடக்கும்படி செய்து விடும்.
***
30
இயற்கை, நேரம், பொறுமை -
இவை மூன்றுதான்
மிகச் சிறந்த மருத்துவர்கள்.
***
31
எல்லா விஷயங்களிலும்
அழகு என்ற ஒன்று இருக்கிறது.
ஆனால், எல்லோருமே
அதை பார்ப்பதில்லை.
***
32
ஒரு கழுகு
ஒரு புறாவை
அழிப்பது, புகழுக்குரிய
விஷயமல்ல.
***
33
எவன் தன்னைத்தானே
மிகவும் பெரிதாக
நினைத்துக் கொண்டிருக்கிறானோ,
அவன் தாழ்த்தப்படக் கூடியவன்.
எவன் தன்னைத் தானே
அடக்கமாக நினைத்துக்
கொண்டிருக்கிறானோ,
அவன் உயர்த்தப்படக் கூடியவன்.
***
34
ஒரு காயத்தை
உண்டாக்குவதை விட,
அதை பெற்றுக் கொள்வது
நல்லது.
***
35
பீப்பாயை வைத்து
ஒயினைப் பற்றி
நீ முடிவு செய்து
விட முடியாது.
***
36
ஒருவன் கற்க வேண்டிய
விஷயங்களை ஒப்பிட்டுப்
பார்க்கும்போது, எந்த மனிதனும்
புத்திசாலி இல்லை.
***
37
ஒரு பவுண்ட்
சட்டத்திற்கு நிகரானது
ஒரு பென்னி எடையைக்
கொண்ட அன்பு.
***
38
யார் சுதந்திரத்தை
விரும்புகிறார்களோ,
அவர்களுக்குத்தான்
கடவுள் சுதந்திரத்தை
அளிக்கிறார்.
***
39
ஒரு நீண்ட வாழ்க்கை
சிறந்ததாக இல்லாமல்
இருக்கலாம். ஆனால்,
ஒரு சிறந்த வாழ்க்கை
நீண்டு நிற்கக் கூடியது.
***
40
வெறுப்பு இருக்கும் இடத்தில்
ஒரு எருமையைக்
கொன்று வைக்கப்படும்
விருந்தை விட,
அன்பு இருக்கும் இடத்தில்
காய்கறிளை வைத்து
நடத்தப்படும் விருந்து
உயர்வானது.
***
41
மனித இதயத்திலேயே
புனிதமான விஷயம்
உண்மையாக இருப்பதுதான்.
***
42
ஒரு மனிதன் எப்படி நடந்து
கொள்ள வேண்டுமோ,
அப்படி நடப்பவன்தான்
மனிதன்.
***
43
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன.
***
44
ஒரு வீட்டின்
தலைவர்தான்
தன்னுடைய வீட்டிற்கு
மரியாதையைக்
கொண்டு வர வேண்டும்.
வீடு, அதன்
உரிமையாளருக்கு அல்ல.
***
45
மனம்தான்
புனிதமானதாக
இருக்க வேண்டும்.
குருதி அல்ல.
***
46
ஒரு கஞ்சனிடம்
எது இல்லாமல் இருக்கிறதோ,
அதைவிட
எது அவனிடம் இருக்கிறதோ -
அதுவே அவனுக்கு
உதவப் போவது இல்லை.
***
47
தாங்கள் பார்த்திராத
ஒன்றின் மீது யார்
இன்னும் நம்பிக்கையுடன்
இருக்கிறார்களோ,
அவர்கள்
ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.
***
48
தன்னுடைய
குழந்தை அழும்போது,
ஒரு தாய் நடனத்திற்கான
இசையைக் கேட்க மாட்டாள்.
***
49
மிகவும் கொடூரம்
நிறைந்த அரக்கனின்
மனதில் அமைதியை
உண்டாக்கக் கூடிய
வசீகர தன்மைகள்
இசைக்கு இருக்கிறது.
***
50
எவன் ஆட்சி
செய்யப் படுவானோ,
அவனைத் தவிர
வேறு யாரும்
ஆட்சி செய்ய முடியாது.
***
