*_வாலிபனே! வாலிப பெண்ணே_* உனக்கான ஆலோசனை .

1. *உன் பெற்றோருக்கு* தெரியக்கூடாது என்று செய்கிற எல்லாமே பாவம் தான்..

2. உன் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகளை முதலில் உன் *பெற்றோரிடம் கேள் அல்லது ஆவிக்குரியவர்களிடம் கேள்*

உன் பெற்றோர் உன்னை விட படிப்பில் குறைவாக இருந்தாலும் *அனுபவத்தில் அவர்கள் ஆசான்களே*

3. தனிமையில் இருக்கும் போது கூடுமானமட்டும் mobile use பண்ணாதே

4. எதிர் பாலரை எந்த சூழ்நிலையிலும் *தொட்டு* பேசாதே

5. உன் பரிசுத்த வாழ்க்கைக்கு *பாதகம் ஏற்படுத்துகிற எந்த உறவும் வேண்டாம்* ....

6. Mobile, Internet, Facebook ,Whatsapp ,Twitter இவைகள்
*உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக.* இல்லையேல் நீ அதற்கு அடிமை...

7. யாவருடனும் பழகு ஆனால் *ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்*

8. உனக்கு *_முன்மாதிரி இயேசு மட்டுமே_*. _நீ தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி_

9. மற்றவர்களின் திறமையை பார்த்து எனக்கில்லையே என்று ஏங்காதே. *உனக்குள் இருக்கும் திறமை விலையேறப்பெற்றது*

10. _தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்_. *மற்றவர்களின் சிந்தையை மாற்ற கூடியதாக இருக்க கூடாது..*

11. உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும் _நீ விட்டு வந்த பாவத்தை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான்_*கவனம்*.

12. உன் ஜெபத்திற்கு பதில் வரும்வரை காத்திரு. தேவன் பேசாவிட்டால் அந்த காரியத்தை செய்யாதே.

13. இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். *நீயும் ஆகலாம் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் கிருபை மேல் கிருபை என .....*

14. Beach, park shopping mall இந்த இடங்களுக்கு கூடுமானமட்டும் *குடும்பமாக போக பழகுங்கள்*.. உலகத்தின் கவர்ச்சி உன் வாலிபத்தை கறைப்படுத்தப்பார்க்கும்

15. உன் விருப்பங்களை தேவனிடத்தில் சொல்லலாம் தவறில்லை. *ஆனால் அவரின்  சித்ததிற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்..* அது உன் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட.

16.உலகத்தில் இருந்து வேதத்தை பார்க்காதே
*வேதத்தில் இருந்து உலகத்தை பார் ஜெயிக்கலாம்.*

உன் தாலந்துகளை யாரும் பாராட்டவில்லை என்று சோர்ந்து போகாதே ... பரலோகம் பாராட்டுகிறது

மொத்தத்தில் நீ உலகத்திற்கு உரியவனல்ல... *பரலோகத்திற்கு உரியவன்...*
ஆமென்..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.