*பொய் தீர்க்கத்தரிசி சொன்னது நிறைவேறுமா?*

இதற்கான விடையை மோசே

*சொல்லுவதை பாருங்கள்*

உங்களுக்குள்ளே ஒரு *தீர்க்கதரிசியாகிலும்,* *சொப்பனக்கார*னாகிலும் எழும்பி:
உபாகமம்-13:1

நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று *குறிப்பாய்ச் சொன்னாலும்,* *அவன் சொன்ன* அடையாளமும் அற்புதமும் *நடந்தாலும்,*
உபாகமம்-13:2

குறிப்பாக சொன்னாலும்..
இந்த  தேதியில்  தேர்த்தல் நடக்கும் என குறிப்பாக சொன்னாலும்....

நடந்தாலும்*

மோசே அடுத்து "நடந்தாலும்" என
சொல்லுகிறார்.

எனவே *நடக்கவும் வாய்ப்பு உண்டு.*
என்று வேதம் சொல்லுகிறது.

*எப்படி நடக்கிறது?*

அவன் பொய்தீர்க்கத்தரிசிதானே ,
எப்படி அவன் சொல்லுவது நிறைவேற வாய்ப்பு இருக்கிறது?

📕*பின்வரும் காரியங்களை* எங்களுக்குத் தெரிவியுங்கள்; *அப்பொழுது நீங்கள் தேவர்கள்* என்று அறிவோம்;...
ஏசாயா -41:23

இந்த வசனத்தின் படி *பின் வரும் காரியங்களை* யாரால் சொல்ல முடியுமோ அவரை *தேவன்*  என்கிற இடத்தில் வேதம் வைக்கிறது.

எனவே நாளைக்கு நடக்க கூடிய தீர்க்கத்தரிசனத்தை இன்று ஒருவராலும் சொல்ல முடியாது. *சொன்னால் அவனும் கடவுள்தான்* என வேதம் கூறுகிறது.

எனவே நாளைக்கு நடப்பது யாருக்கும் தெரியாது...
*சாத்தானுக்கும் தெரியாது*. *தெரிந்தால் கடவுள் ஆகி விடுவான்.*

சாத்தானால் சொல்ல முடியாது என்றால் *சாத்தான் உதவியால் பொய்தீர்க்கத்தரிசி சொல்வது, மட்டும் எப்படி நிறைவேறும்?*
*நிச்சயமாக நிறைவேறவே நிறைவேறாது.*

பிறகு ஏன் மோசே "*நடந்தாலும்*" என சொல்லுகிறார்?*

பொய் தீர்க்கத்தரிசி சொல்வதும் *சில நேரங்களில் நடக்க வாய்ப்பு உண்டு.*

எப்படி என்றால்....

*சொன்னதை நிறைவேற்ற முயர்சிகளை எடுப்பான்.*

அப்படி ஏதாவது ஒன்று நடக்க வாய்ப்பு உண்டு.

நடக்கப்போவதை சொல்ல வில்லை, சொன்னதை *நிறைவேற்ற முயர்ச்சி எடுப்பான்.*

*Example...*

48 தொகுதியிலும் நீ வெற்றி பெறுவாய் என சொன்னால்...

வெற்றியை கொண்டு வர முயலுவான்.

​*பொய் தீர்க்கத்தரிசி சொல்வது நடக்கும் என்பதற்காக அவர் வார்த்தையை கேட்களாமா?*

🎗மேசே இதற்கும் பதிலை சொல்லுகிறார்..

📕அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் *கேளாதிருப்பீர்களாக;.. ..*
உபாகமம்-13:3

ஒருவன் தன்னை தீர்க்கத்தரிசி என்று சொன்னால்....
அவன் சொன்னது *அப்படியே நடக்கிறது என்பதற்காக அவனை உங்கள் தீர்க்கத்தரிசியாக ஏற்று கொள்ளலாமா?*
*"நடக்கிறது என்பதற்காக ஏற்று கொள்ள கூடாது.*"

*Lessons *

பின் நாட்களில் நடப்பதை சாத்தானால் அல்லது பொய் தீர்க்கத்தரிசியால் சொல்ல முடியுமா?

*முடியாது.*

பொய்தீர்க்கத்தரிசி சொன்னது நிறைவேற வாய்ப்பும் உண்டா? *உண்டு*

எப்படி...

*சொன்னதை நிறைவேற்ற முயர்ச்சி எடுப்பான்.*

ஒருவன் சொன்னது நிறை வேறுகிறது என்பதற்காக *அவனை தீர்க்கத்தரிசியாக அங்கிகரிக்க லாமா? கூடாது.*

📕அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே *தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?*... என்பார்கள்.
மத்தேயு -7:22

📕அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; *அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்* என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு -7:23

ஆமென்.

*ARUNODHAYA bible study group.*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.