கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!!
கிறிஸ்தவ மக்கள் அனேக காரியத்தை மறந்து விட்டோம்.
அவைகளில் *ஒன்று தான் ஊழியனுக்கு ஊழியம் செய்வது*
எண்ணாகமம் 3:6
[6]நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, *அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப்
பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து.* சர்வ வல்லமை உள்ள தேவன் சொல்லும்
வார்த்தையை கவனியுங்க.
முழு ஆசாரிய கூட்டமும் ஆரோன் என்ற தேவ ஊழியனுக்கு பணி விடை செய்ய வேண்டுமாம்
ஒர் கேள்வி?
நீங்கள் ஆண்டவருக்கு
பணிவிடை செய்யனுமா?
ஆண்டவரின் திரு தொண்டர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டுமா?
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
*தேவ மனிதர்களுக்கு செய்யும் திரு தொண்டு தேவனுக்கு செய்யும் திரு தொண்டு என்று*
1 கொரிந்தியர் 16:15-16
[15]சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயா நாட்டிலே
முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத்
தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும்
அறிந்திருக்கிறீர்களே.
[16]இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற
யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப்
புத்திசொல்லுகிறேன்.
முதற் பலன் யார்?
இறை ஊழியனுக்கு பணி செய்பவனே முதற் பலன் மறவாதே இதை!
ஆளுகையை விரும்பும் தேவ ஜனமே ஆளுகை செய்ய வேதம் கூறுவது என்னா?
தேவ ஊழியனோடு இனைந்து பாடுபடு
*2 தீமோத்தேயு 2:12
*அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;
நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;*
உன் பெயர் ஜீவ புத்தகத்தில் இடம் பெற வேண்டுமா?
தேவ மனிதனோடு இனைந்து பிரயாசப்படு
பிலிப்பியர் 4:1-3
[1]ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும்
கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள்
நிலைத்திருங்கள்.
[2]கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும்
சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
*அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி
உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என்
உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும்
பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது*
ஒர் தேவ ஊழியனுக்கு பயப்டவேண்டும் நீ யாரானும்…….. சரி
2 கொரிந்தியர் 7:14-16
[14]இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன
யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும்
உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப்
புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.
[15]மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும்
நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம்
உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.
[16]ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை
உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன். எனது ஊழியத்தில் கண்ட உண்மையை
கூறுகிறேன்.
சில குடும்பத்தில் திருமண தடை விவாகரத்து, குறை பிரசவம் தொடர் வறுமை,
சமாதான மின்மை தொடந்து இருக்க காரணம் என்னா தெரியுமா?
ஊழியர்களை அற்பமாய் நடத்துவது / அற்பமாய் என்னுவது தான்
*இவர்கள் தான் சொந்த பணத்தில் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்ளும்
மக்கள்* தேவ ஜனமே தேவனுக்கு பயப்படுவது போல அவர் ஊழியர்களுக்குப்
பயப்படுவது அவசியம்….
எண்ணாகமம் 12:8
[8]நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும்
பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க,
*நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப்
பயமில்லாமற் போனதென்ன என்றார்*
2 கொரிந்தியர் 8:5
[5]மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே
முன்பு தங்களைத்தாமே *கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும்
ஒப்புக்கொடுத்தார்கள்.*
ஊழியன் மேல் பொறாமை படாதே…….. (உனக்கும் & உன் சந்ததிக்கும் ஆபத்து)
*உனக்கு ஆபத்து கோராகின் முடிவு உனக்கு முன்பாடமாக இருக்கு*
*தேவனுக்கு தங்களை ஒப்பு கொடுப்பது போலவே தேவ மனிதர்களுக்கு உன்னை ஒப்பு கொடு*
இந்த தேவ செய்தி தொடரும்…….
Apostle.Kirubakaran. c.k