கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!!
நாம் வெளிப்படுத்திய விசேஷம் புத்தகத்தின் 1.5. ஆராய்ந்து வருகிறோம்.
இன்றும் நாம் " சாட்சி" என்ற தலைப்பின் கீழ் தியானிப்போம்.
வெளிப்படுத்தின
விசேஷம் 1:5-6
*உண்மையுள்ள சாட்சியும்,* மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின்
ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக்
கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
இதை தியானிக்கும் போது பின்பு வரும் கேள்வி எழுகிறது.?
*A*
I. மற்ற சாட்சிகள் உண்மை இல்லையா?
2. யாருக்கு சாட்சி அவர் சொல்ல வேண்டும்?
3. ஏன்? சாட்சி சொல்ல வேண்டும்,
*B. தேவன் சாட்சி சொல்லும் முறைகள்*
இவைகளை தியானிக்க வேண்டும்.
முதலில் நாம் உண்மை உள்ள சாட்சி இதை ஆராய்வோம்…
நல்ல வாய்ப்புக்கள் தேவன் சொல்லும் சாட்சி
அப்போஸ்தலர் 14:17
*அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள
காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய
இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி
விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.*
ரோமர் 8:16
*நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய
ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.*
1 யோவான் 5:7-11
[7](பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த
ஆவி என்பவர்களே, இம்மூவரும்
ஒன்றாயிருக்கிறார்கள்;
[8]பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம்
என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
[9]நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய
சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த
சாட்சி இதுவே.
[10]தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத்
தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய
குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப்
பொய்யராக்குகிறான்.
[11]தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய
குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
உயிர் தெழுந்த ஏசு யாருக்கு சாட்சி கொடுக்கிறார்?
அப்போஸ்தலர் 10:41-42
[41]ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர்
மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும்
தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே
பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
[42]அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும்
தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப்
பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக்
கட்டளையிட்டார். தேவனால் முன்
குறிக்கப்பட்ட னக்கு!!!
அப்போஸ்தலர் 1:3
[3]அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி,
தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான
திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக்
காண்பித்தார்..
ரோமர் 1:5
[5]மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள
ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே
பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
ஏன்? அவரை எனக்கு சாட்சியாக நிருபிக்க வேண்டும்?
என்னை அவருக்கn க காத்திருக்க செய்ய அப்படி சாட்சியானார்.
எபிரெயருக்கு எழுதின நிருபம் 9:28
*கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம்
பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை
அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்*
Apostle. c.k.Kirubakaran.