வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 வசனம் 6 (தொடர்ச்சி....)

பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக
இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள்.

பழைய ஏற்பாட்டில் தேவனை விட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன்
வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று).

பேயோரின் ( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் எண்25:1-18) காணப்பட்ட
பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை
அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை
புசிக்கும்ப்படியும் செய்தனர்.

இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்.
இவைகளைபார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய
ஜனங்களைஅன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம்
கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise) என்று புகுத்திய
கூட்டத்தாரக காணமுடிகிறது.

வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு,
மற்ற சடங்குசம் பிரதாயங்களில் பங்குகொண்டால் தவறல்ல என்றும், தேசிய
சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும்
போதித்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம்
இயேசு சொல்லும் போது அந்த சபையின்மேல் பிரியப்படாமல் அதின்மேல்
வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து சொல்லுகிறார்.

இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே தான்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு.
இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர்.

இவர்கள் வேத புரட்டர்களாயிருந்து, இதுசெய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக் கொள்ளமாட்டார். அவைகள் நியாயத்
தீர்ப்பினை அடையும்.

இன்னும் சிலர்,

நிக்கொலா மதஸ்தர் அப் 6:5ல் கூறியிருக்கிற நிக்கொலாவின் கொள்கையின்
அடிப்படையில் இயங்கிய ஒரு குழுவினர் என்றும் எபேசுவுக்கு வடமேற்கில் 80
கி.மீ தொலைவில் இருந்த நிக்கொலாஸ் என்ற கடற்கரை பட்டணத்தை சார்ந்த ஒரு
குழுவினர் என்றும் கருதுகிறார்கள்.

நிக்கொலா மதஸ்தரின் கொள்கை:-

"கிருபைக்குள் இருக்கிறவர்கள் என்ன பாவம் செய்தாலும் கிருபையை
இழக்கமாட்டார்கள்" என்ற தவறான கொள்கை உடையவர்களாக இருந்தார்கள்.

அதாவது, ஒரு முறை நாம் மனம்திரும்பி இயேசுவின் கிருபையால் பாவ மண்ணிப்பு
பெற்று கொண்டால் அதன் பிறகு செய்யும் எந்த பாவத்தையும் அந்த கிருபை
மூடிவிடும் என்பதே.

நமக்கு கிருபை இருப்பதால் எவ்வளவு பாவம் செய்தாலும் நாம் அந்த கிருபையால்
மன்னிக்கபடுவோம் என்பதே ஆகும்.

இந்த நிக்கொலா மதஸ்தர் இன்றும் நம் தமிழ்நாட்டிலும் உலா வருகிறார்கள்
இவர்கள் கூறுவது "ஒருவன் ஒரு முறை இரட்சிக்கப்பட்டு விட்டால் அவன்
எவ்வளவு பாவம் செய்தாலும் நரகம் போவதில்லை என்பதே ஆகும்".

இதை குறித்த வீடியோ க்ளிப் ஐ நம் சகோதர்கள் நம் ஹோலி ஃபிரன்ஸ் குரூபில்
போட்டிருக்கிறார்கள் நாம் அனைவரும் பார்த்திருபோம் எனவே இந்த கடைசி
காலத்தில் விழித்திருப்போம்....
தேவன் வெறுப்பதை வெறுப்போம்.

GOD Bless you.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.