7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்;
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற
ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
விளக்கம்:-
தேவனுடைய பரதீசு என்பது புதிய எருசலேமிலுள்ள சிறந்த தோட்டமாகும்.
இதன் நடுவில் ஜீவவிருட்சம் உள்ளது (வெளி 22:14).
வெளி
22 அதிகாரம்
14. ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய்
நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள்
பாக்கியவான்கள்.
பரதீசு என்ற சொல் தோட்டம் என்ற பொருள் கொண்டதாகும்.
பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழியாக்கத்தில் ஏதேன் தோட்டத்திற்கும் இந்த
சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு மட்டுமே ஆசீர்வாதங்கள் கூறப்பட்டுள்ளது.
ஜெயம் கொள்ளுகிறவன் யார்?
இயேசுவை விசுவாசித்து இறுதிவரை அவரை பின்பற்றி வாழ்கிறவனே ஜெயம் கொள்கிறவன் ஆவான்.
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 வசனம் 7
0
April 05, 2016
Tags