வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 வசனம் 6

6. நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்,
இது உன்னிடத்திலுண்டு.

நிக்கொலா மதஸ்தர் என்பவர்கள் யார்? வாங்க ஒரு அலசு அலசுவோம்.

வெளி2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப் பற்றி
சொல்லப்பட்டுள்ளது.

எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய்
மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம்.

யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்குள் யார் இவர்கள் என்று
நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில்இருந்தனர் என்று
யோவான் சொல்லவில்லை.

அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்?

அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை
சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப்6:5) இரத்த
சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபதுபேர்களில் ஒருவன்.

ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன் தான் இந்த
நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து
போனதையும் காண்கிறோம். இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான்
என்று குழப்பும்படி சொல்கின்றனர்.

இவர் ஸ்தேவானைப் போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர்
என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப்2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு
அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை
வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை.

Nicolaitan என்பதில் Nikan laos : இதற்கு conquer (வெற்றி பெறு)
மற்றும் people (ஜனங்கள்) என்று பொருள் என்று கிரேக்க சொல்-வரலாற்றில்
(etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில்
சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு (clergy) சாதமாக
மற்றவர்களை அமுக்கி/மட்டம்தட்டிவைத்ததாகவும் விவாதம் உள்ளது.

இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில்
இப்படிப்பட்ட ஒருசெய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து
வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன.

பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு
வசனங்களும் இல்லை.
பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர்
என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை
பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு"அப்படியே நிக்கொலாய் என்னும்
கூட்டத்தாரை" (வெளி2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம்.

யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வது போல் நிகொலா என்ற வார்த்தையானது
பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம். (எப்படி
மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும் அர்த்தம் ஒன்றுபோல)
இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும் இந்த வசனத்துக்கும்
பொருந்துகிறது என்பது ஒருபார்வை.

எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப் பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும்
ஏதோ சம்பந்தம் உள்ளது.

யோவான் வெளி2ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்.

1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளைபுசிப்பது.

2 - வேசித்தனம்.

ஆதிசபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நிய தேவர்களின் வழிபாட்டுடன்
சற்றே அநுசரித்துபோன ஜனங்களாகும். அப்15:20, 29 மற்றும் 1 கொரி8--10
ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். பவுல் மற்றும் யோவான்
ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர்.
பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரக
கோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்.

பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான் ஒன்று. இதை வெளி2:20,22-லும்
யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது.

பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால்
வெளி2:20ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள்அல்ல.

இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள்.

இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு
படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம்.

மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை1 கொரி5:1;
6:12-20 மற்றும் எபி13:4ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்.

(தொடரும்.....)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.