இராபர்ட் மாரீஸன்

பிறப்பு:5-1-1782

இறப்பு:1-8-1834

நாடு:இங்கிலாந்து

தரிசன பூமி:சீனா
19ம் நூற்றாண்டின் பாதி.

சீன தேசம் சுவிசேஷகர்களை தன் நாட்டினுள் உள்ளே அனுமதிக்காமலிருந்தது.
வியாபாரத்திற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனியாரும் சுவிசேஷத்தை
அறிவிக்கவும், அப்படி அறிவிப்போருக்குத் தடையாகவும் இருந்தனர்.

உலகிலே அதிகக் கடினமான பணிக்களத்தை எனக்குத் தாரும். அங்கு உமக்கென்று
ஊழியம் செய்வேன் என்று இராபர்ட் மாரீஸன் ஜெபித்து வந்த காலத்தில், தேவன்,
சீனாவுக்காக ஆத்மீக பாரத்தை கொடுத்தார்.

எப்படியாவது அங்குள்ள மக்களை கிறிஸ்துவின் பாதையில் நடத்த தீவிரம்
காட்டினார். கிழக்கிந்திய கம்பெனி மூலமாகவே தன் பணியைத் தொடஙினார்.

ஓர் வியாபாரியாகவும் அதே வேளையில்
மிஷனெரியாகவும் தன் பணியைத் தொடங்கினார்.

18 மாதங்களில் சீன மொழியில் அகராதியை உண்டு பண்ணினார். இதனால்
கிழக்கிந்திய கம்பெனியார் அவரைப் பாராட்டி
மொழிப்பெயர்ப்பாளார் பதவியை அவருக்குத் தந்தனர்.

குடும்ப வாழ்வில் பல சோதனைகள் அவரைத் தொடர்ந்தாலும், அவைகள்ப்
பொருட்படுத்தாமல் முழு கவனத்தையும் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில்
செலுத்தினார்.

1815ம் ஆண்டு சீன மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து வெளியிட்டார்.
இதனால் கிழக்கிந்திய கம்பெனி இவரை வேலை நீக்கம் செய்தது.

ஆயினும், இவருடைய அறிவுத்திறனால் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தார். பல
இன்னல்களும், இடையூறுகளும் வந்தபோதிலும் 1824ம் ஆண்டு முழு
வேதாகமத்தையும் சீன மொழியில்
மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.

சீனப் பெண்கள் மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை
எடுத்துக் கூறியதால் அநேகப் பெண்கள் மாரீஸனின் வீட்டிலேயே வேதபாட
வகுப்புகளில் கலந்து கொண்டு ஊழியர்களாக மாறினர்.

சீனாவில் 25 வருடங்கள் கடினமாகப் பணிசெய்த மாரீஸன், அழியாத பொக்கிஷமான
வேதாகமத்தை அம்மொழியில் தந்தது உலகம் உள்ளவரை போற்றத்தக்கது.

இதை வாசித்துக் கொண்டிருக்கிற அன்பரே, வேதாகாம மொழி பெயர்ப்பில்
உங்களுடைய பங்களிப்பு என்னவாக இருக்கிறது?

குறைந்த பட்சம் அவர்களுக்காக ஜெபிக்கிறீர்களா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.