ஏன் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் அல்லது இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர்?

முதலாவது எல்லா அரேபியர்களும் இஸ்லாமியர்கள் அல்ல எல்லா இஸ்லாமியர்களும்
அரேபியர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அநேக அரேபியர்கள் இஸ்லாமியராக இருக்கிற போதும் அநேக இஸ்லாமியரல்லாத
அரேபியர்களும் இருக்கின்றனர். அரேபிய இஸ்லாமியர்களை பார்க்கிலும்
அரேபியரல்லாத இஸ்லாமியர்கள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில்
அதிகமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இரண்டாவது எல்லா அரேபியர்களும் யூதர்களை வெறுக்கிறதில்லை, எல்லா
இஸ்லாமியரும் யூதர்களை வெறுக்க வில்லை மற்றும் எல்லா யூதர்களும்
அரேபியர்களையும் இஸ்லாமியரையும் வெறுக்கவில்லை என்பதை நினைவு
கூறவேண்டியது முக்கியம்.

நாம் ஒரேமாதிரியான எண்ணம்கொண்ட மக்களிடமிருந்து கவனமாக
விலகியிருக்கவேண்டும். மேலும் பொதுவாக பார்த்தால் அரேபியர்களும்
இஸ்லாமியர்களும் யூதர்கள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் உள்ளவர்கள்
அது போலவே யூதர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும்
உண்டு.

ஆபிரகாமின் வரலாரே இந்த விரோதத்திற்கு வெளிப்படையான வேத விளக்கமாக
இருக்கிறது. யூதர்கள் ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கின் வம்சவழியில்
வந்தவர்கள்.

அரேபியர்கள் ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவழியில் வந்தவர்கள்.
இஸ்மவேல் அடிமையின் குமாரனாக இருக்கிறான் (ஆதியாகமம் 16:1-6) ஈசாக்கு
ஆபிரகாமுடைய சுதந்தரத்தை சுதந்தரிக்கும்
வாக்குத்தத்தத்தின் குமாரனாக இருக்கிறான்
(ஆதியாகமம் 21:1-3), எனவே இந்த இரண்டு குமாரர்களுக்கு இடையே சில
விரோதங்கள் இருப்பது சாத்தியமே.

இஸ்மவேல் ஈசாக்கை பரியாசம்பண்ணினதால் (ஆதியாகமம் 21:9), சாராள்
ஆபிரகாமிடத்தில் ஆகாரையும் இஸ்மவேலையும் புறம்பே தள்ளும் படியாக
கேட்டுக்கொண்டாள் (ஆதியாகமம் 21:11-21).

இதுவும் இஸ்மவேலுடைய இருதயத்திலே ஈசாக்குக்கு விரோதமான கசப்பை
உண்டாக்கிற்று. தேவதூதன் ஆகாரிடத்திலே தீர்க்கதரிசனமாக இஸ்மவேல் "தன்
சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான்" என்று சொன்னான்
(ஆதியாகமம் 16:11-12).

அநேக அரேபியர்கள் ஆதரவாளர்களாக இருக்கிற இஸ்லாமிய மார்க்கம் தன்னுடைய
பகையை மிக ஆழமாக்கியது. குரான் இஸ்லாமியர்களுக்காக யூதர்களுக்கு விரோதமான
சில முரண்பாடான உபதேசங்களை கொண்டுள்ளது.

யூதர்களை சகோதரர்களாக பாவிக்க வேண்டும் என்று ஒரு புறமும் யூதர்கள்
இஸ்லாமியத்திற்கு மாறாவிட்டால் அவர்களை இஸ்லாமியர்கள் தாக்கும்படியாக
மறுபுறமும் கட்டளை
கொடுக்கப்பட்டுள்ளது. யார் ஆபிரகாமின் உண்மையான வாக்குத்தத்தத்தின்
குமரன் என்பதில் முரண்பாட்டை குரான் அறிமுகப்படுத்துகிறது.

எபிரேய வேதாகமத்தில் ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன் என்றும் குரானில்
இஸ்மவேல் ஆபிரகாமின் குமாரன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இஸ்மவேலையே ஆபிரகாம் தேவனுக்கு பலியாக கொடுக்க போனார் ஈசாக்கை அல்ல என்று
குரான் போதிக்கிறது (ஆதியாகமம் 22 அதிகாரத்திற்கு முரணானது).

யார் வாக்குத்தத்தத்தின் குமாரன் என்கிற வாதமே இப்பொழுது யுத்தங்களுக்கு
வழிவகுக்கிறது.
ஈசாக்குக்கும் இஸ்மவேலுக்கும் இருந்த அந்த பழைமையான கசப்புகலே இன்று
யூதர்களுக்கும்
அரேபியர்களுக்கும் இருக்கக் கூடிய விரோதத்திற்கான காரணம் என்று விளக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கான மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்றின் படி யூதர்களும்
அரேபியர்களும் சமாதானத்தோடும் ஒருவருக்கொருவர் வித்தியாசமில்லாமலும்
வாழ்ந்தார்கள் என்பது உண்மை.

இவர்களின் பகைக்கான முதலாவது காரணம் நவீன காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளே.
இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜக்கிய நாடுகள் அரேபியர்கள் குடியிருந்த
(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரவேலின் ஒரு பகுதியை யூதர்களுக்கு கொடுத்தனர்.

யூதர்கள் அந்த நிலப்பகுதியை ஆக்கிரமிப்பதை அநேக அரேபியர்கள் கடுமையாக
எதிர்த்தனர். அரபு நாடுகள் இனைந்து யூதர்களை அப்பகுதியில் இருந்து விரட்ட
யுத்தங்களை தொடுத்தனர் ஆனால் அவர்கள் தோல்வியை தழுவினர். அது முதல் அண்டை
நாடான இஸ்ரவேரருக்கும் அரேபியர்களுக்கும் மிக பெரிய பகைமை தொடர்ந்து
நிலவிவருகிறது.

இஸ்ரவேல் ஒரு சிரிய நிலப்பரப்பில் உள்ளது அது ஜோர்டான், சிரியா, சவுதி
அரேபியா மற்றும் எகிப்து ஆகிய மிக பெரிய அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ளது.
தேவன் ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபுக்கு கொடுத்த தேசத்தில் இஸ்ரவேலர்
தேசமாக உருவாக வேண்டும் என்பது வேதாகமத்தின் அடிப்படையிலான நம்முடைய
கண்ணோட்டம்.

அதே நேரத்தில் இஸ்ரவேலர் அவர்களுடைய அயலகத்தாரான அரேபியர்களோடு
சமாதானத்தோடும் நன்மதிப்போடும் நடந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று நாம்
விசுவாசிக்கிறோம்.

சங்கீதம் 122:6 சொல்கிறது: "எருசலேமின்
சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள்
சுகித்திருப்பார்களாக."

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.