ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 17

ஒரு சொரூபம்
அந்திக்கிறிஸ்துவின்
வடிவத்திலே
செய்யப்படும், அது
பேசும், ஒருவன் தன்னை
வணங்காவிட்டால் அது
அவனைக் கொலைசெய்து
போடும், ஒருவன் தன்னை
வணங்குகிறானா
இல்லையா என்பதை
அறிவதற்கு அது
பார்க்கக்கூடியதாய்
இருக்கவேண்டும்.

கடந்த 82ம் வருடம்
வரைக்கும் பார்க்கக்
கூடிய
கம்பியூட்டர்களை
விஞ்ஞானிகள்
கண்டுபிடிக்கவில்லை.

ஆனால்

கடந்த 82ம்
வருடத்திலே Vision Aided
Robots என்று
சொல்லக்கூடிய, பார்க்கக்
கூடிய கம்பியூட்டரை
விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துவிட்டார்
கள். இப்பொழுது
பார்க்கக்கூடிய
கம்பியூட்டர்கள்,
பேசக்கூடிய
கம்பியூட்டர்கள்
பரவிக்கொண்டிருக்கின்
றன.

அடுத்த கேள்வி எப்படி
ஒரு கம்பியூட்டர் ஒரு
மனிதனைக் கொலை
செய்ய முடியும்?

அநேகருக்கு இந்தக்
கேள்வி எழலாம்.
இன்றைக்ய நாட்களில்
மனித இயந்திரங்களை
மனிதன் அழிக்கும்
சக்திகளாக
உருவாக்கியிருக்கின்றான்.

இவற்றை மனிதனைக்
கொலைசெய்வதற்காகப்
பயன்படுத்துகின்றார்கள்.
றிச்சாட்உம்றாண்டைக்
குறித்து உங்களில்
அனேகர்
கேள்விப்பட்டிருப்பீர்கள்

ரூமேனிய நாட்டிலே
கம்யூனிசச்
சிறைச்சாலையிலே 14
ஆண்டுகள் சித்திரவதை
யை அணுபவித்தவர்
றிச்சாட் உம்றாண்ட். இவர் '
Torture for Christ ' என்ற
பத்திரிகை
நடத்துகிறார்.

இவருடைய
பத்திரிகையின் கடந்த 80ம்
வருடத்தின் ஆனி மாத
இதழிலே இப்படியொரு
செய்தி
வெளியாகியிருக்கிறது,

"ரூமேனியா
நாட்டிலே கிறிஸ்தவ
விசுவாசிகளை
சிறைச்சாலையிலே
சித்திரவதை செய்வதற்கு
ரூமேனியா அரசாங்கம்
றோபாட் என்ற மனித
கம்பியூட்டர்களைப்
பயன்படுத்துகிறது.

மனிதனைக் கொண்டு
சித்திரவதை செய்தால்
அவர்கள் மனம்
உருகிவிடுவார்கள்
என்பதினால் மனித
எந்திரங்களைப்
பயன்படுத்தி கிறிஸ்தவ
விசுவாசிகளைச்
சித்திரவதை
செய்யப்படுகிறதாம்".

ரூமேனியா நாட்டிலே
பரிசுத்த வேதாகமத்தை
விநியோகித்த குற்றம்
சுமத்தப்பட்டு கைது
செய்யப்பட்ட தன்னுடைய
உதவியாளனாகிய
ஐவோன் கிளிப்பா
என்பவர் ரூமேனியா
சிறைச்சாலையிலே
றோபாட்டினால்
சித்திரவதை
செய்யப்பட்டபோது
இறந்து போனான் என்று
றிச்சாட் உம்றாண்ட்
தெரிவித்திருக்கிறார்.

வேதத்தின்
தீர்க்கதரிசனங்களெல்லாம்
விஞ்ஞான உலகத்திலே
வெகு வேகமாக இந்த
கடைசி நாட்களில்
நிறைவேறிக்கொண்டிருக்கின்றன.

ஒரு வேளை சிலர்
கேட்கலாம்
அந்திக்கிறிஸ்துவின்
சாயலிலே
செய்யப்படுகிற இந்த
சொரூபம் ஏதோ ஒரு
இடத்தில்தானே
வைக்கப்படும். உலகமக்கள்
எல்லாம் அதை வணங்க
வேண்டும் என்ற கட்டளை
கொடுக்கப்படும் போது
நான் அதை
வணங்குகிறேனா
இல்லையா என்பதை
அந்திக்கிறிஸ்துவின்
தலைமைப்பீடம் எப்படி
அறிந்து கொள்ளும்?
என்று அடுத்ததாய்
கேள்வி எழும்பலாம்.

அந்திக்கிறிஸ்துவின்
சாயலிலே ஒரு
சொரூபம் செய்யப்படும்,
அது கம்பியூட்டர்
வடிவத்திலே இருக்கும்,
அது றோபோவாக
இருக்கும் என்று நாம்
பார்த்தோம்.

அதை எல்லா
மக்களும் வணங்கவேண்டும்
என்ற கட்டளை
கொடுக்கப்படும் என்று
பார்த்தோம்.

உலகமக்களெல்லாரும்
வணங்குகிறார்களா
என்பதை எப்படி
அந்திக்கிறிஸ்துவினு
டைய தலைமைப்பீடம்
அறிந்து கொள்ளும்
என்பதற்குரிய பதிலை,
அடுத்ததாய்
வெளிவருகிற
விஞ்ஞான
முன்னேற்றத்தைக்
கொண்டு வேதத்தின்
தீர்க்கதரிசன
நிறைவேறுதலைச்
சொல்லி
செல்லுகிறேன்.

அடுத்ததாய் வெளிவந்து
கொண்டிருப்பது Fibre
Vision என்பதாகும்.

பைவர்விஷன் என்பது Two
way Television system என்று
அழைக்கப்படுகிறது.
இதிலே என்ன பயன்
என்றால்
தொலைக்காட்சியின்
நிலையத்திலிருந்து
படங்களை அனுப்புவது
மாத்திரமல்ல
ரெலிவிஷன்
வைக்கப்பட்டிருக்கிற
அறையிலிருந்து
படங்களைத் திரும்பவும்
தொலைக்காட்சி
நிலையத்திற்குள்
பெற்றுக்கொள்ளலாம்.

இதுதான் Two way Television
system என்று
அழைக்கப்படுகிறது,
இப்பொழுது Fibre Vision
என்று
அழைக்கப்படுகிறது.

தேசங்களில் Fibre Vision
வெகு வேகமாகப்
பரவிவந்து
கொண்டிருக்கிறது.
இந்த Fibre Vision இன்
அடிப்படையிலே
செய்யப்பட்ட Video
ரெலிபோன்கள்
இப்பொழுது எங்கும் வர
ஆரம்பித் துவிட்டன.

ரெலிபோனில் பேசும்
போது நம்மோடு
பேசுகிறவருடைய
முகத்தை நாம் அப்படியே
பார்த்துக்கொண்டு
பேசக்கூடிய Video
ரெலிபோன்கள்
வந்துவிட்டன.

தீர்க்கதரிசன
எச்சரிப்பை
சொல்லுகிறேன்,
இருதயத்தைக்
கடினப்படுத்துகிறவர்களுக்குச் சொல்லுகிறேன்,

இயேசுகிறிஸ்து
சபையை
எடுத்துக்கொண்ட பிறகு
அந்திக்கிறிஸ்துவின்
ஆட்சி இந்த உலகத்திலே
தொடரும்.

அந்திக்
கிறிஸ்துவினுடைய
சொரூபம் செய்யப்படும்.
அது பேசக்கூடியதாய்
இருக்கும் அதை
எல்லோரும் வணங்க
வேண்டும் என்கிற
கட்டளை கொடுக்கப்படும்.

அது Fibre Vision இலே
காட்டப்படும். அதை ஒரு
மனிதன்
வணங்குகிறானா
இல்லையா என்பதை அந்த
ரெலிவிஷனே
மறுபடியும்
அந்திக்கிறிஸ்துவின்
தலைமையகத்திற்குச்
சொல்லிவிடும்.

Fibre
Vision அதற்குப் பயன்படப்
போகிறது.
உலகத்திலே
நிறைவேறிக்
கொண்டிருக்கிற
தீர்க்கதரிசனங்ளெல்லாம்
வெகு சீக்கிரத்திலே
அந்திக்கிறிஸ்துவின்
ஆட்சி
சமீபமாயிருக்கிறது
என்பதைத்
தெரிவிக்கிறது.

————————————
whatsapp@8012978922
————————————

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.