ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 16

அந்திக்கிறிஸ்து இந்த
உலகத்தை ஆளும்போது,
அவனுக்கு உதவியாளன்
வருவானாம். அந்த
உதவியாளன் கள்ளத்
தீர்க்கதரிசி என்று
அழைக்கப்படுகிறான்.
அவன் என்ன செய்வான்
என்று
வெளிப்படுத்தினவிசே
ஷம் 13:14 லிலே யோவான்
தெரிவிக்கிறார்.
அந்திக்கிறிஸ்துவின்
உதவியாளனான கள்ளத்
தீர்க்கதரிசி,
அந்திக்கிறிஸ்துவைப்
போல ஒரு சொரூபம்
பண்ணவேன்டும் என்று
சொல்லுவானாம்,
மேலும் 15ம் வசனத்திலே
பாருங்கள்
அந்திக்கிறிஸ்துவைப்
போல செய்யப்படும்
சொரூபம் பேசுமாம்,
அதை எல்லோரும்
வணங்கவேண்டும் என்ற
கட்டளை
கொடுக்கப்படுமாம்,
அதை வணங்காதவர்களை
அந்தச் சொரூபமே
கொலை
செய்துபோடுமாம்.
இது
அந்திக்கிறிஸ்துவின்
நாட்களிலே
நடைபெறப்போகிற ஒரு
சம்பவமாகும். இந்தத்
தீர்க்கதரிசனத்துக்கு
எதிராகவும் ஒரு
கேள்வி கேட்கப்பட்டது.
எப்படி ஒரு சொரூபம்
பேசமுடியும்? நாம்
அறிந்ததெல்லாம்
சொரூபங்கள்
கண்ணிருந்தும்
காணாது,
காதிருந்தும் கேளாது,
மூக்கிருந்தும்
முகராது,
வாயிருந்தும் பேசாது
என்பதையே. இதை 2000
வருடங்களுக்கு
முன்னதாய் யோவான்
தெரிவித்திருக்கிறார்.
அந்திக்கிறிஸ்துவின்
சாயலிலே ஒரு
சொரூபம் செய்யப்படும்,
அது பேசும், அந்த
சொரூபத்தை
வணங்கவேண்டுமென்ற
கட்டளை கொடுக்கப்படும்
அதை வணங்காதவர்களை
அந்த சொரூபமே
கொலைசெய்து
போடும். எப்படி ஐயா,
பேசுகிற சொரூபம் இந்த
நாட்களிலே வருமா?
எப்படி ஒரு சொரூபம்
பேசும் என்பது இந்த
தீர்க்கதரிசனத்துக்கு
எதிரான ஒரு பெரிய
மற்றுமொரு
கேள்விக்குறியாய்
இருந்தது. உலகமெங்கும்
பரவிவருகிற
கம்பியூட்டர்
இப்பொழுது அதற்குப்
பதில் சொல்லுகிறது.
இப்பொழுது
கம்யூட்டரின்
அடிப்படையிலே
றோபோக்கள் வர
ஆரம்பித்திருக்கின்றன
மனித இயந்திரங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்
றன. மனிதனைப் போலவே
அவை வடிவம்
அமைக்கப்படுகின்றன.
ஜப்பானிலிருந்து
வெளிவந்துகொண்டிர
ுக்கின்ற இந்த
ரோபோக்களை
உருவாக்கக்கூடிய
துறைக்கு Bionics என்று
பெயர். கம்பியூட்ரின்
அடிப்படையிலே இந்த
மனித யந்திரங்கள்
உருவாக்கப்படுகின்றன.
சமீபத்திலே வந்த செய்தி
சொல்லுகிறது. மனித
தசை போன்று
பிளாஸ்ரிக்கிலான
தோலை
இயந்திரங்களுக்கு
வைத்து, கம்பியூட்டர்
அடிப்படையிலான
கண்களையும்,
உதடுகளையும் வைத்து
மனித வடிவத்திலே
இப்பொழுது
றோபோக்களை உருவாக்க
ஆரம்பித்திருக்கிறார்கள்.
யோவான்
தெரிவித்திருக்கின்றா
ர், ஒரு சொரூபம்
செய்யப்படுமாம், அது
பேசுமாம். அது
மாத்திரமல்ல, அந்த
சொரூபம் ஒருவன்
தன்னை வணங்குகிறானா
இல்லையா என்பதை
பார்க்கக்கூடியதாக
இருக்குமாம். தன்னை
வணங்காதவனை அந்தச்
சொரூபம் கொன்று
போடுமாம்.
எப்படி ஐயா ஒரு
கம்பியூட்டர், அல்லது
மனித இன
மேற்பாட்டிற்காகக்
கண்டுபிடிக்கப்பட்ட
றோபோ, மனிதனைக்
கொன்று போடும் என்ற
கேள்வி அனேகருக்கு
எழலாம். அதற்கான
சான்றுகளைச்
சொல்லுகிறேன்.
கடைசிக் காலமாய்
இருக்கிறதினாலே
வேதத்தின் தீர்க்கதரிசனங்கள்
விஞ்ஞான உலகத்தில்
நிறைவேறுகிறதை
திட்டவட்டமாய் நீங்கள்
அறிந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளுகிறே
ன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.