ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 15

வெளிப்படுத்தல் 11:5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால்
அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப்
பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே
கொல்லப்படவேண்டும்.

அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு எதிராய் யாராவது வந்தால், அந்த
தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு அந்த எதிரிகளைப்
பட்சிக்குமாம்.

அது மாத்திரமல்ல, ஆறாவது வசனத்திலே சொல்லப்படுகிறது,

'மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள்
தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியைச்
சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு'.

இந்த இரண்டு தேவனுடைய தீர்க்கதரிசிகளும் உலகமக்களுக்கு எச்சரிக்கை
கொடுத்து, அவர்களுக்கு மனம் திரும்ப கட்டளை கொடுப்பார்கள்.

எட்டாவது வசனத்திலே பாருங்கள்

'அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த
நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்'

இந்த வசனத்தை வாசித்தால் எந்த நகரத்திலே இந்த இரண்டு தீர்க்கதரிசிகள்
கொலை செய்யப்படுவார்கள் என்பது தெளிவாய்ச் சொல்லப்படவில்லை.

ஆனால் அடுத்த வாக்கியத்தைக் கவனியுங்கள் அதிலே நம்முடைய கர்த்தரும்
சிலுவையிலே அறையப்பட்டார் என்று யோவான் தெரிவிக்கின்றார். எந்த நகரத்திலே
நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்?

எருசலேம்
நகரத்திலே.

எனவே எருசலேம் நகரத்திலே இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் சரீரங்களும் கொலை
செய்யப்பட்டு வீதியிலே வீசி எறியப்படுமாம்.

அப்போது என்ன நடக்கும்?

ஒன்பதாவது வசனத்தைக் கவனியுங்கள்.

'ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலு முள்ளவர்கள்
அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள்'.

இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் சரீரமும் எருசலேமின் மகா வீதியிலே கொலை
செய்யப்பட்டுத் தூக்கியெறியப்பட்டுக் கிடக்கிறதை உலகத்தின் மக்களெல்லாம்
பார்ப்பார்களாம்.

வசனத்தை தொடர்ச்சியாய், அவர்களை அடக்கம் செய்வதற்கு அந்திக்கிறிஸ்து
அனுமதிக்க மாட்டானாம். 3½ நாட்களுக்கு அவர்களுடைய சரீரம் எருசலேமின் மகா
வீதியிலே கிடக்குமாம்.

அநேக வருடங்களாய் இந்தத் தீர்க்கதரிசனத்துக்கு எதிராய் ஒருகேள்வி
கேட்கப்பட்டது. எப்படி எருசலேமின் மகாவீதிகளிலே கிடக்கக்கூடிய இரண்டு
தீர்க்கதரிசிகளின் சரீரத்தை உலகமக்களெல்லாம் பார்க்கமுடியும்?

எப்படி
பார்க்கமுடியும்?

என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாய் இருந்தது.

உலகமெங்கும் இப்பொழுது வெகுவேகமாகப் பரவிவருகிற டெலிவிஷன் அதற்கு பதில்
சொல்லுகிறது. டெலிவிஷனிலே இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் சரீரங்களும்
காண்பிக்கப்படும்.

உலகமக்களெல்லாரும் அதைப் பார்ப்பார்கள். உலகமக்கள் பார்த்துக்
கொண்டிருக்கும் போது என்ன நடக்கும்.

வெளிப்படுத்தல் 11:10ல் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை
வேதனைப் படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள்
சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை
அனுப்புவார்கள்.

இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் மழை பெய்யாமல் வானத்தை அடைத்ததாலும்,
தண்ணீரை இரத்தமாக மாற்றினதாலும், உலகமக்களெல்லாம் அந்த இரண்டு
தீர்க்கதரிசிகளின் சரீரங்கள் எருசலேம் வீதிகளிலே கிடக்கிறதை டெலிவிஷன்
திரையிலே பார்த்துவிட்டு, சந்தோஷம் கொண்டாடி வெகுமதிகளைப் பரிமாறிக்
கொள்வார்களாம்.

அடுத்ததாய் என்ன நடக்கும் என்பதை யோவான் மேலும் தெரிவிக்கிறார்.

உலகமக்களெல்லாம் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளின் சரீரத்தை டெலிவிஷனிலே
கண்டு கொண்டிருக்கும்போது. (வெளி11:11ம் வசனத்திலிருந்து கவனியுங்கள்)
மூன்றரை நாளைக்குப் பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அந்த இரண்டு
தீர்க்கதரிசிகளுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி
நின்றார்கள்; அவர்களைப் பார்த்திருந்த உலகமக்கள் எல்லோருக்கும் மிகுந்த
பயம் உண்டாயிற்று.

இங்கே ஏறிவாருங்கள், என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய
சத்தத்தை அவர்கள் கேட்டு மேகத்தில் ஏறி வானத்துக்குப் போனார்கள்;
அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.

அந்தநேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில்
பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர்
பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின்
தேவனை மகிமைப் படுத்தினார்கள்.

உலகமெங்கும் வெகுவேகமாய்ப் பரவிக்கொண்டு வருகிற டெலிவிஷன் இந்த
தீர்க்கதரிசனம் நிறைவேறக் கூடியது என்பதைத் தெரிவிக்கிறது.

அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கு உலகம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது
என்பதற்கு உலகத்தின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக ளெல்லாம் சாட்சி, இது
ஆதாரபூர்வமான சம்பவமே, இது ஆதாரபூர்வமான தீர்க்கதரிசன நிறைவேறுதலாய்
இருக்கப்போகிறது என்பதைத் தெரிவிக்கிறது.

பாகம் 16 விரைவில்.....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.