Type Here to Get Search Results !

வெளிப்படுத்தல் 12:1 இல் வரும் ஸ்திரீ யாரைக் குறிக்கின்றது. ?

வெளிப்படுத்தல் 12:1இல் வரும் ஸ்திரீ யாரைக் குறிக்கின்றது. ?
- ஆர். சரொஜா.

வெளிப்படுத்தல் 12ஆம் அதிகாரத்தில் வரும் பெண் சூரியனை அணிந்திருந்தாள்,
அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு
நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. இப்பெண் மரியாள் என சிலர்
கூறுகின்றனர்.

கர்ப்பவதியாயிருக்கும் இப்பெண் பெற்றெடுத்த பிள்ளை இயேசுகிறிஸ்துவாக 5ம் வசனத்தில்
குறிப்பிடப்பட்டிருப்பதனால் அவள் மரியாள் என்பது இவர்களது கருத்தாக உள்ளது.

எனினும் இப்பெண்ணைப் பற்றிய விவரணம் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு அல்ல,
மாறாக இஸ்ரவேல் ராஜ்யத்திற்கே பொருத்தமானதாய் உள்ளது.

ஆதி. 37:9-10 இல் யோசேப்பு கண்ட சொப்பனத்தில், சூரியன் சந்திரன் பதினொரு
நட்சத்திரங்கள் என்பன இஸ்ரவேல் ராஜ்யத்தின் ஆரம்ப கர்த்தாக்களைக்
குறிக்கும் விவரணமாக இருப்பதை அவதானிக்கலாம்.

இதை அடிப்படையாகக் கொண்டு
வெளிப்படுத்தல் 12:1 இலுள்ள பெண் இஸ்ரவேல் இராஜ்யம் என்று கருதப்படுகின்றது.

இயேசுகிறிஸ்து இஸ்ரவேல் மக்களது வம்சத்தில் வந்தபடியால்,
இஸ்ரவேலைக்கு குறிக்கும்வெளிப்படுத்தல்
12:1 இலுள்ள பெண் பெற்றெடுத்கும் ஆண்குழந்தை இயேசுகிறிஸ்து என்பதும்
இதன்படி சரியான விள்கமாகவே இருக்கின்றது.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ராஜ்யம் கரப்பவேதனைப்படும் பெண்ணாக
உமிக்கப்பட்டிருப்பதும்
( ஏசாயா. 54:5, 66:7, எரேமியா. 3:6-10,
மீகா 4:10, 5:2-3) வெளிப்படுத்தல் 12:1-2 கர்ப்பவதியாக
சித்தரிக்கப்பட்ட்டிருக்கும் பெண் இஸ்ரவேல் ராஜ்யத்தையே குறிக்கின்றாள் என்பதை
உறுதிப்படுத்துகின்றது..

வெளிப்படுத்தல் 12:1
1. அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ
சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள்
சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.

வெளிப்படுத்தல் 12:5
5. சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை பெற்றாள்;
அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும்,
எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏசாயா. 54:5,
5. உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய
நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன்
என்னப்படுவார்.

ஏசாயா 66:7,,
7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.

எரேமியா. 3:6-10,
6. யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல்
என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல
மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.

7. அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று
நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற
துரோகி கண்டாள்.

8. சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள்
எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை
அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி
பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

9. பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று;
கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

10. இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி,
கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில்
திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மீகா 4:10,
10. சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு;
நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி பாபிலோன்
வரைக்கும் போவாய். அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன்
சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.

மீகா 5:2-3)
2. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள
ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர்
உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய
புறப்படுதல் அநாதி நாட்களாகிய
பூர்வத்தினுடையது.

3. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை
ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல்
புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள்.

Post a Comment

0 Comments