Type Here to Get Search Results !

இரட்சிப்பின்போது கொடுக்கப்படும் வரங்கள்

 

இரட்சிப்பின்போது கொடுக்கப்படும் வரங்கள்

இரட்சிப்பின்போது ஒவ்வொரு விசுவாசிக்கும் கீழே பட்டியலிடப்பட்ட 34 காரியங்களை தேவன் அளிப்பரவராக உள்ளார்.

1. தேவனது நித்திய திட்டத்தில் (கிறிஸ்துவின் முடிவில் பங்குபெறுதல்)

a) முன்னறிதல் (அப்போஸ்தலர் 2:23, ரோமர் 8:29, 1 பேதுரு 1:2)

b) தேர்ந்தெடுத்தல் (ரோமர் 8:33, கொலோசெயர் 3:12, 1 தெசலோனிக்கேயர் 1:4, தீத்து 1:1).

(c) முன்குறித்தல் ( ரோமர் 8:29, 30, எபேசியர் 1:5, 11).

d) தெரிந்து கொள்ளுதல் (மத்தேயு 22:14, 1 பேதுரு 2:4).

e) அழைத்தல் (1 தெசலோனிக்கேயர் 5:24)

2. ஒப்புரவாக்குதல்.

a) தேவனால் (2 கொரிந்தியர் 5:18, 19, கொலோசெயர் 1:20).

b) தேவனுக்கு (ரோமர் 5:10, 2 கொரிந்தியர் 5:20, எபேசியர் 2:14-17),

3.மீட்கப்படுதல் ( ரோமர் 3:24, கொலோசெயர் 1:14, 1 பேதுரு1:18).

4.ஆக்கிணைத்தீர்ப்பு அகற்றப்படல் (யோவான் 3:18, 5:24, ரோமர் 8:1).

5. நியாயத்தீர்ப்புக்குப் பதிலாக கிருபையின் கீழ் கடந்து வருதல், தேவன் தமது குமாரனின் மரணத்தில் திருப்தியடைந்துள்ளார் (ரோமர் 3:24-26, 1 யோவான் 2:2).

6.எல்லாப் பாவங்களும் கிறிஸ்துவின் மரணத்தினால் நியாயந்தீர்க்கப்பட்டு விட்டன. (ரோமர் 4:25, எபேசியர் 1:7, 1பேதுரு 2:24).

7.பழைய ஜீவியத்திற்கு மரித்து தேவனுக்காக வாழ்தல்.

a) கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்படுதல் (ரோமர் 6:6, கலாத்தியர் 2:20). b) கிறிஸ்துவுடன் மரித்தல் (ரோமர் 6:8, கொலோசெயர் 3:3, 1 பேதுரு 2:24).

c) கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்படுதல் (ரோமர் 6:4, கொலோசெயர்  2:12),

d) கிறிஸ்துவுடன் எழுப்பப்படல் ( ரோமர் 6:4, கொலோசெயர் 3:1).

8 நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலைப்பெறல்

a) மரித்தல் (ரோமர் 7:4).

b) விடுதலையாக்கப்படுதல் ( ரோமர் 6:14, 7:6, 2 கொரிந்தியர் 3:11, கலாத்தியர் 3:25).

9.புதிதாக்கப்படுதல் (யோவான் 13:10, 1 கொரிந்தியர் 6:11. தீத்து 3:5). (a) மறுபடி பிறத்தல். (யோவான் 3:7, 1 பேதுரு 1:23),

b) தேவனுடைய பிள்ளைகள் (கலாத்தியர் 3:26). c) தேவனுடைய குமாரர்கள் (யோவான் 1:12, 2 கொரிந்தியர் 6:18, 1 யோவான் 3:2).

d) புது சிருஷ்டி (2 கொரிந்தியர் 5:17, கலாத்தியர் 6:15, எபேசியர் 2:10), 10. புத்திர சுவிகாரம் ( ரோமர் 8:15, 8.23 (எதிர்காலம்) எபேசியர் 1:5)

11.தேவனுக்கு அங்கீகாரமாய் இருத்தல் ( எபேசியர் 1:6, 1 பேதுரு 2:5)

a) நீதிமானாக்கப்படுதல் (ரோமர் 3:22, 1 கொரிந்தியர் 1:30, 2 கொரிந்தியர் 5:21, பிலிப்பியர் 3:9).

b) பரிசுத்தமாக்கப்படுதல் (1 கொரிந்தியர் 1:30, 6:11).

(c) நித்தியகாலமாய் பூரணராக்கப்படுதல் (எபிரெயர் 10:14)

d) பரிசுத்தவான்களின் சுதந்திரம் (தகுதியடைதல்) (கொலோசெயர் 1:12).

12.நீதிமானாக்கப்படுதல் (நீதிமானாக அறிவிக்கப்படுதல்) (ரோமர் 3:24, 5:1, 5:9, 8:30, 1 கொரிந்தியர் 6:11, தீத்து 3:7),

13.பாவமன்னிப்பாகிய மீட்பு ( எபேசியர் 1:7, 4:32, கொலோசெயர் 1:14, 2:13, 3:13).

14.உன்னத நிலை. (பரலோக பிரஜாஉரிமை, ஒப்புரவாக்கப்பட்டதன் அடிப்படையில்) (லூக்கா 10:20. எபேசியர் 2:13, 19),

15.சாத்தானின் இராஜ்ஜியத்திலிருந்து விடுதலையாக்கப்படல். (கொலோசெயர் 1:13, 2:15).

16. தேவனுதைய இராஜ்ஜியத்திற்குள் மாற்றப்படுதல் (கொலோசெயர் 1:13),

17.பாதுகாக்கப்பட்ட அஸ்திபாரத்தின் மேல். (1கொரிந்தியர் 3:11, 10:4, எபேசியர் 2:20).

18. பிதாவாகிய தேவனிடமிருந்து கிறிஸ்துவுக்கு அளிக்கப்படும் வெகுமதி. (யோவான் 10:29, 17:2, 6, 9, 11, 12, 24).

19. பாவத்தன்மையின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்படுதல். (ரோமர் 2:29, கொலோசெயர் 2:11),

20.தேவனுக்கென்று நியமிக்கப்பட்ட ஆசாரியர்கள்,

a) பரிசுத்த ஆசாரியத்துவம் (1 பேதுரு 2:5).

b) ராஜரீக ஆசாரியத்துவம், (1பேதுரு 2:9, வெளிப்படுத்தல் 1:6).

21.தேவனுடைய பராமரிப்பின் கீழ் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி மற்றும் சொந்த ஜனம். (தீத்து 2:14, 1 பேதுரு 2:9).

22.தேவனுடன் சேரும் சிலாக்கியம் ( ரோமர் 5:2, எபேசியர் 2:18, எபிரெயர் 4:14, 16, 10:19, 20).

23.தேவனது பராமரிப்பின் கீழ் "அதிக நிச்சயமானவைகள்" (ரோமர் 5:9, 10).

a) அதிக நிச்சயமான அவரது அன்பு ( எபேசியர் 2:4, 5:2),

(b) அதிக நிச்சயமான அவரது கிருபை;

(i) இரட்சிப்பிற்கான அவரது கிருபை (எபேசியர் 2:8, 9)

ii) நம்மை காப்பதற்கான அவரது கிருபை (1பேதுரு 1:5)

iii) ஊழியத்திற்கான அவரது கிருபை (யோவான் 17:18)

iv) போதனக்கான அவரது கிருபை (தீத்து 2:12) c) அதிக நிச்சயமான அவரது வல்லமை (எபேசியர் 1:19, பிலிப்பியர் 2:13)

d) அதிக நிச்சயமான அவரது உண்மை. (பிலிப்பியர் 1:6, எபிரெயர் 13:5,6)

e) அதிக நிச்சயமான அவரது சமாதானம் (யோவான் 14:27)

f) அதிக நிச்சயமான அவரது ஆறுதல் (2 தெசலோனிக்கேயர் 2:16)

g) அதிக நிச்சயமான அவரது பரிந்துபேசுதல் (ரோமர் 8:34, எபிரெயர் 7:25)

24. தேவனுடைய சுதந்திரம் (அவருடையவைகள்) (எபேசியர் 1:18)

25.தேவனுடைய வாரிசுகளாய் அவரது சுதந்தரத்தை, கிறிஸ்துவுடன் இணை வாரிசுகளாய் அநுபவித்தல். (ரோமர் 8:17 எபேசியர் 1:14 கொலோசெயர் 3:24, எபிரெயர் 9:15, 1 பேதுரு1:4)

26. புதிய ஸ்தானம் (எபேசியர் 2:6)

a) ஜீவனில் கிறிஸ்துவுடன் பங்காளிகளாதல் (கொலோசெயர் 3:4)

b) ஊழியத்தில் கிறிஸ்துவுடன் பங்காளிகளாதல் (1 கொரிந்தியர் 1:9)

c) தேவனுடன் உடன் வேலையாட்கள் (1கொரிந்தியர் 3:9, 2 கொரிந்தியர் 6:1)

d) புதிய ஏற்பாட்டின் ஊழியர்கள் (2 கொரிந்தியர் 3:6)

e) ஸ்தானபதிகள் (2 கொரிந்தியர் 5:20)

(f) ஜீவனுள்ள நிரூபங்கள் (2 கொரிந்தியர் 3:3)

g) தேவனுடைய ஊழியர்கள் (2 கொரிந்தியர் 6:4) 27. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்பவர்கள், (யோவான் 3:15, 10:28, 20:31, 1 யோவான் 5:11, 12).

28. தேவனுடைய வீட்டாரும் மற்றும் அவருடைய குடும்ப அங்கங்களுமாய் இருக்கிறர்கள். (கலாத்தியயர் 6:10, எபேசியர் 2:19).

29.உலகிற்கு ஒளியாய் இருக்கிறார்கள் (எபேசியர் 5:8, 1 தெசலோனிக்கேயர் 5:4),

30. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருடன் இணைக்கப்பட்டுள்ளோம்.

a) தேவனுக்குள் (1 தெசலோனிக்கேயர் 1:1) "நமக்குள் தேவன்" (எபேசியர் 4:6).

b) கிறிஸ்துவுக்குள். (யோவான் 14:20 "உங்களுக்குள் கிறிஸ்து" கொலோசெயர் 1:27).

i) கிரிஸ்துவின் சரீரத்தின் ஓர் அங்கம் (1 கொரிந்தியர் 12:13).

ii) திராட்சை செடியின் ஒரு கொடி (யோவான் 15:5)

iii) கட்டிடத்தின் ஒரு கல் ( எபேசியர் 2:21, 22, 1 பேதுரு 2:5)

iv) மந்தையின் ஒரு ஆடு (யோவான் 10:27-29)

v) அவரது மணவாட்டியின் ஒரு பகுதி (எபேசியர் 5:25) vi) ஆசாரிய இராஜ்ஜியத்தின் ஒரு ஆசாரியன் (1பேதுரு 2:9)

vi) புது சிருஷ்திப்பின்" ஒரு பரிசுத்தர் (2 கொரிந்தியர் 5:17)

c) பரிசுத்த ஆவிக்குள் (ரோமர் 8:9) "உங்களுக்குள் ஆவியானவர்"

31. பரிசுத்த ஆவியானவரின ஊழியத்தை பெற்றுக்கொள்பவர்கள்.

a) ஆவியானவரால் பிறத்தல் ( யோவான் 3:6)

b) ஆவியானவருடன் ஞானஸ்நானம் பெறுதல் (அப்போஸ்தலர் 1:5, 1 கொரிந்தியர் 12:13)

(c) ஆவியானவரால் வாசம் செய்யப்படுதல் (யோவான் 7:39, ரோமர் 5:5, 8:9, 1 கொரிந்தியர் 3:16, 6:19, கலாத்தியர் 4:6, 1 யோவான் 3:24).

(d) ஆவியானவரால் முத்திரையிடப்படுதல் (2 கொரிந்தியர் 1:22, எபேசியர் 4:30).

e) ஆவிக்குரிய வரங்கள் கொடுக்கப்படுதல் (ரோமர் 8:30). 32. மகிமையடைதல் ( ரோமர் 8:30)

33.கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவர்கள் ஆகுதல் (கொலோசெயர் 2:10)

34.கடந்த காலநித்தியத்தில் அளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரித்தல் (எபேசியர் 1:3).

Post a Comment

0 Comments