சங்கீதம் 7 விளக்கவுரை
7:1-17 சுருக்கம்:-
தலைப்பு:
பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டவனின் ஜெபம்,
சிகாயோன் - பரவசம், அலைந்து திரிதல் அல்லது தவறு செய்தல் என்ற பொருள் கொண்டதெனக் கருதப்படுகிறது.
வச.1-2 - விடுவிக்கும்படி வேண்டுதல்.
வச.3-5 - நான் தவறு செய்திருந் தால்.
வச.6-9 -நியாயத்திற்காக வேண்டுதல்.
வச.7-13 - தேவனின் செயல்கள்.
வச.14-16 - தீயோரின் முடிவு,
வச.17 - நான் கர்த்தரைத் துதிப்பேன்.
7:1-6 தான் செய்யாத தவறுக்காகக் குற்றம்
சாட்டப்பட்டதால் வந்த வேதனையால் தாவீ து பாடிய பாட்டு இது (வச.3-6). வேதனையுடன் பாடியபோதிலும் தன் நம்பிக்கையை இழக்காதி ருந்ததை ஆரம்பத்திலே கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் கர்த்த ரை நம்புவீராக. -- - --
7:1 (1) என் தேவனாகிய கர்த்தாவே என்று சொல்லும் அளவு 'கர்த்தரில் நெருங்கியிருந்தார் சங்கீதக்காரன். நாம் எந்த அளவு கர்த்தருடன் வாழ்கிறோம்?
( 2) 'நான் உம்மை நம்பியிருக்கிறேன்.' கர்த்தரை நம்புவது 'எனில் அவர் நேரடியாக வந்து உதவிசெய்வார் என்று நம்புவது என்பதல்ல, நேரடியாகவோ மனிதர்கள் மூலமாகவோ அவர் தெரிந்தெடுக்கும் ஏதாவது ஒரு வழியில் உதவி செய்வார் என்று நம்புவது ஆகும். எந்த மனிதனிடமும், சூழ்நிலையிலும், மருந்திலும் உதவி கிடைக்கும் என்று நம்புவது சரியன்று. மனிதனோ, சூழ்நிலையே, மருந்தோ எதுவாயினும் தேவனுடைய வழிநடத்து தலின்றி நமக்கு உதவ முடியாது.
7:4 நன்மைக்குத் தீமை செய்வது கொடுமை, நன்மைக்கு நன்மை செய்வது மனிதப் பண்பு, தீமைக்கு நன்மை செய்வது கிறிஸ்த வனின் கடமை (மத். 5:44; ரோம். 12:20-21).
7:8 நியாயம் செய்யும்படி கர்த்தரிடம் வேண்டினார் தாவி து. மற்றவர்கள் தவறாக நம்மைக் குற்றம் சாட்டினால் நாம் என்ன செய்கிறோம்? திருப்பித் தாக்குவதைவிட, கர்த்தரிடம் விண்ணப் பிப்பது நன்றன்றோ ! ரோம.12:17-21 காண்க .
7:9 தேவன் மனிதனின் எண்ணங்களையும் அவனுடைய சுபாவங்களையும் அறிந்திருக்கிறார். பாவத்தில் வாழ்கிற வர்களுக்கு இது பயமளிப்பதாகவும், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இது மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைகிறது. நம்மில் குறை - இருந்தால் அதைச் சீராக்குவார்.
7:11-12 பாவம் செய்கிறவன் மீது தேவன் நாள்தோறும் கோபங்கொண்டபோதிலும் அவன் மனந்திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கிறார். தொடர்ந்து பாவத்தில் வாழ்ந்தால் அவன் இறுதியில் ! தண்டனை அடைகிறான்.
7:15-16 மனந்திரும்பாத மனிதனின் செயல்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.
7:17 தான் என்ன செய்வதாகத் தாவீது கூறுகிறாரோ அதை நாம் செய்யலாமே. தேவன் துதிக்கப்படவும், புகழப்படவும் தகுதியுள்ளவர். எனவே, சூழ்நிலை நன்மையாக மாறும்வரை காத்திராமல் எந்நிலையிலும் கர்த்தரைப் புகழ்ந்து துதிப்பதும் அவருக்கு நன்றி செலுத்துவதும் சிறந்தது. இதுவே தேவனுடைய 'சித்தமாயிருக்கிறது (1 தெச.5:18).
7:1-17 இச்சங்கீதத்தில் வரும் தேவனுடைய பெயர்கள்: என் 1 தேவனாகிய கர்த்தர், நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர், இருதயங் களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர், செம்மை ! யான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவன், நீதியுள்ள . நியாயாதிபதி, பாவியின் மேல் சினங்கொள்கிற தேவன், உன்னத மான கர்த்தர். இப்பெயர்களைத் தியானித்துத் துதியுங்கள்.
