அப்போஸ்தலர் நடபடிகள் 2:1-23 வேத பாடங்கள்
5. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதல் (அப்போஸ்தலர் 2:1-13)
அப்போஸ்தலர் 2:1-4
1பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
1பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
சூரியன் பூமியின் மீது விழுந்தால் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்? வாயுக்களால் ஆன இந்த மிகப்பெரிய உருண்டை நம்முடைய பூமிக்குச் சற்று அருகில் வந்தால்கூட, பூமி அதிலுள்ள அனைத்துப் படைப்புகளோடும் அழிந்துபோய்விடும். அப்படியிருக்கும்போது பூமியின் மீது சூரியன் விழுவதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் ஆவியாகிவிடுவோம். இந்தச் சூரியன் நம்மிடத்தில் வராவிட்டாலும் அதைப் படைத்தவரே அக்கினிச் சுழல்காற்றில் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் உலகத்திலிருப்பவர்களை நியாயம் தீர்க்கும்படி வராமல், அவருக்காகக் காத்திருந்தவர்கள்மேல் இரக்கம் காண்பிக்கும்படி வந்தார். இறைவன் மனிதனிடத்திற்கு வருகிறார். இதைப் புரிந்துகொள்பவர்கள் அவரை ஆராதனை செய்கிறார்கள். மேலும் இறைவன் மனிதனில் வாழ்கிறார். இந்த உண்மை மனிதர்களாகிய நமது புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. திருச்சபையின் தோற்றத்தைக் குறித்த இந்த வரலாற்றுக் குறிப்பை கவனமாக வாசித்துப் பாருங்கள். தீமை நிறைந்த இந்த உலகத்திற்கு இறைவனுடைய அன்பும், கிருபையும், பொறுமையும் எவ்வாறு வந்தது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.
யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்காவிற்குப் பிறகு ஐம்பது நாட்கள் சென்று அவர்கள் கொண்டாடும் பழங்காலப் பண்டிகைதான் பெந்தகொஸ்தே பண்டிகையாகும். அது கோதுமை அறுவடைக்காக நன்றி செலுத்தும் ஒரு தருணமாகும். கிறிஸ்து ஒரு கோதுமை மணியைப் போல விழுந்து தம்முடைய உயிரைக் கொடுத்தார். அவருடைய உயிர்த்தெழுதல், இறைவனுக்குப் படைக்கப்படும் முதற்பலன்களைப் போல, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் அவருக்குப் பிரியமான பலியாகக் காணப்பட்டது. சீடர்களும் தங்கள் கர்த்தருக்காகக் காத்திருந்து விண்ணப்பிக்கும்போது இறைவனுடைய முழுமையான அறுப்பின் முதற்பலன்களாகவே காணப்பட்டனர். ஆவிக்குரிய அறுவடை இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் கோதுமை மணியாகிய கிறிஸ்துவினால் விளைந்த பலனாயிருக்கிறோம். நாம் இன்று அறுவடை செய்துகொண்டிருக்கும் பலன்களைத்தான் தீர்க்கதரிசிகள் காண ஆசைப்பட்டார்கள். குமாரன் மரணத்தை அனுபவித்தபடியால் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வந்தார்.
கிருபையின் ஆ
வியானவர் எல்லா மனிதர்களுக்கும் இரக்கத்தையும் வெளிச்சத்தையும் காண்பிப்பதில்லை. எருசலேம் தலைநகரத்தில் இருந்த அனைவரும் இறை அன்பைப் பெற்றுக்கொள்ளவில்லை. இறைவனுடைய அன்பின் சுழல்காற்று கிறிஸ்துவை நேசித்து அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்தவர்களையே சூழ்ந்துகொண்டது. இறைவனுடைய வல்லமை எருசலேமிலிருந்த தேவாலத்தைத் தொடவில்லை. அங்கிருந்த ரோம இராணுவமும் இறைவனுடைய நித்திய வாழ்வினால் தொடப்படவில்லை. பிதாவினுடைய வாக்குத்தத்தத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரப்பப்பட்டார்கள்.
அங்கிருந்த மக்களில் இயேசுவின் சீடர்களும் அவருடைய குடும்பத்தவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்து எழுந்தருளிச் சென்ற வானத்திலிருந்து பலத்த சத்தத்தை திடீரெனக் கேட்டபோது அவர்கள் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள். அது பயங்கரமான பெருங்காற்றின் சத்தத்தைப் போல இருந்தது. அந்த காற்றின் சத்தத்தினால் ஜன்னல்கள் அசைக்கப்படவில்லை, கதவுகள் அடிபடவில்லை, இலைகள் அசையவில்லை. ஆனால் அது அவர்கள் கூடியிருந்த வீடு முழுவதையும், அறைகள் முழுவதையும், ஏன் அந்த வீடிருந்த பகுதி முழுவதையும் சூழ்ந்துகொண்டது. அவர்கள் ஆச்சரியத்தினால் தங்கள் கண்களையும் காதுகளையும் அகல விரித்தவர்களாய் உட்கர்ந்திருந்தார்கள். அவர்கள் புயல்காற்றை உணரவில்லை. ஆனால் அதன் சத்தத்தைத் தெளிவாக தங்கள் காதுகளினால் கேட்டார்கள். அவர்கள் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கும்போதே இந்த நிகழ்வு நடந்தேறியது. அவர்கள் தங்கள் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் திறந்துகொடுத்தார்கள். அவருடைய வல்லமை அவர்களில் விளங்கியது. திடீரென அவர்கள் அக்கினி மயமான நாவுகள் அந்த புயல்காற்றிலிருந்து அவர்கள் மேல் விழுவதைப் பார்த்தார்கள். ஆனால் அந்த நெருப்பு மேலும் கீழும் அசையவோ அல்லது அங்கிருந்த வீட்டையோ வீட்டுப் பொருட்களையோ எரித்துப் போடவோ, அவர்களைச் சுட்டெரிக்கவோ இல்லை. அவை அவர்களுடைய விண்ணப்பங்களின் மேல் அமைதியாக வந்தமர்ந்தது. இந்த வித்தியாசமான அக்கினி மயமான நாவுகள் அவர்கள் மூலமாக கிறிஸ்து என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் காண்பித்தது. அசுத்தமும், பொய்யும் உலக ஞானமும் நிறைந்த அவர்களுடைய நாவுகள் எரிக்கப்பட்டு நீக்கப்படும் என்பதையும் அதற்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு புதிய வல்லமையான நாவுகளைக் கொடுப்பார் என்பதையும் அதன் மூலமாக அவர்கள் இறைவனுடைய தெய்வீக அன்பைப் பற்றிப் பேசுவார்கள் என்பதையும் அவை சித்தரித்தன.
கர்த்தருடைய ஆவியினால் நிறைந்தவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியையும் ஆழமான ஆறுதலையும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பாவத்தின் பாரம் அவர்களை விட்டு நீங்கிற்று, அவர்களுடைய இருதயம் மென்மையானது, அவர்களுடைய துக்கங்கள் கடந்துபோனது, அவர்களுடைய மங்கிய கண்கள் பிரகாசமடைந்தது, அவர்களுடைய சோர்வுற்ற நாவுகள் இறைவனைத் துதிக்க ஆரம்பித்தன. “பிதாவே, உம்முடைய குமாரனுடைய மரணத்தினாலே நீர் எங்களுடைய பிதாவானீர். அவருடைய இரத்தம் எங்களுடைய பாவங்களை மன்னித்தது. தகுதியற்ற எங்களில் உம்முடைய ஆவியானவர் வாழ்ந்து, எங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்துகிறார். உம்முடைய கிருபையின் மகிமையினால் நீர் எங்களுக்கு வாழ்வளித்திருப்பதால் நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி, உம்மைத் துதிக்கிறோம்.”
இறைவனுடைய அன்பின் புயல்காற்று, நன்றிப் பெருக்கை உண்டுபண்ணியது. அது பரிசுத்த வார்த்தைகளையும் அறியப்படாத பரலோக சிந்தனைகளையும் பல வாய்களிலிருந்து புறப்படப்பண்ணியது. பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய பேச்சை வழிநடத்தி, அவர்களுடைய சிந்தைகளை நிரப்பி, அவர்களுடைய சித்தங்களை ஆசீர்வதித்தார். அவர்கள் தங்கள் மனிதத் தன்மையில் கிளர்ச்சியடைந்தவர்களாகக் காணப்படவில்லை. மாறாக, மனதையும் ஆத்துமாவையும் கூட கட்டுப்படுத்தும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார்கள். அவருடைய வல்லமையும் நற்குணமும் வெளிப்பட்ட காரணத்தினால், அவர்கள் முழுவதும் இறைவனுடைய ஆலயமாக மாறிப்போனார்கள்.
தயவு செய்து கவனியுங்கள். பேதுருவும் யோவானும் மட்டும் பரிசுத்த ஆவியானவரினால் நிறையப்படவில்லை. அங்கிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார்கள். தெய்வீக புயல்காற்றில் இறங்கிவந்த அக்னி மயமான நாவுகளினால் அவர்கள் வருத்தப்படவில்லை, மாறாக அவர்கள் இறைவனுடைய பிரசன்னத்தினால் சூழப்பட்டார்கள். பிதாவினுடைய வாக்குத்தத்தம் அப்பொழுது நிறைவேறியது. அப்போது விண்ணப்பித்துக் கொண்டிருந்த அனைவரும் இறைவனுடைய பிள்ளைகளானார்கள். அவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டு அவருடைய சத்தியம், அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றினால் நிறையப் பெற்றார்கள். பெந்தகொஸ்தே நாளன்று மரணத்திற்கு உட்பட்ட இந்த உலகத்தில் தெய்வீகமானதும், இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டதுமான காரியம் நிகழ்ந்தது. இவ்வாறு நம்பிக்கையும் ஆன்மீக எழுப்புதலும், பரிசுத்த திரித்துவ இறைவனுக்குச் செலுத்தப்படும் துதியோடும் நன்றிகளோடும் எருசலேமிலிருந்து புறப்பட்டு வரத்தொடங்கியது.
அப்போஸ்தலர் 2:5-13
5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9 பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9 பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.
அக்னி மயமான நாவுகளுடைய வல்லமைக்குக் கீழாக இருந்த சீடர்கள் என்ன பேசினார்கள் என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? நீங்கள் 11-ம் வசனத்தைப் படித்துப் பார்ப்பீர்களானால் அவர்கள் இறைவனுடைய மகத்துவங்களைப் பற்றியே பேசினார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். இவ்வுலகத்தைப் படைத்ததற்காக இறைவனை அவர்கள் துதித்தார்கள். குற்றவாளிகளான அவருடைய பிள்ளைகளை அவர் பொறுமையோடு நடத்துவதற்காக அவருக்கு நன்றி செலுத்தினார்கள். அவருடைய நியாயப்பிரமாணத்தை மகிமைப்படுத்திப் பேசி, தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக அவர் தமது சித்தத்தை வெளிப்படுத்தியபடியால் அவருக்கு நன்றி செலுத்தினார்கள். குமாரனுடைய பிறப்பிற்காகவும், அவருடைய மனுவுருவாதலுக்காகவும், அவர்களுடைய கண்களுக்கு முன்பாகத் தோன்றியதும் அவர்கள் கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டதுமான அவருடைய அன்புக்காகவும் அவர்கள் பிதாவிற்கு நன்றி செலுத்தினார்கள். அவருடைய அற்புதங்களுக்காக அவர்கள் கர்த்தரைத் துதித்தார்கள். அவருடைய வார்த்தைகளைத் திரும்பச் சொல்லி அவருடைய சிலுவை மரணத்திற்காகவும் உயிர்த்தெழுதலுக்காவும் அவரைத் தொழுதுகொண்டார்கள். அவர்கள் உயிருள்ள கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் சந்தித்ததற்காக இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் அவருடைய பரமேறுதலை நினைத்து மகிழ்ந்து, நீண்ட காலம் காத்திருந்த வாக்குத்தத்தம் நிறைவேறியதை எண்ணி உவகையடைந்தார்கள். உலகத்திற்கு நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டிய தேவையை அவர்கள் நம்பி, அனைவரும் இரட்சிப்பைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற இறைவனுடைய சித்தத்தினால் நிறைந்தார்கள். நீங்களும் இறைவனுடைய அற்புதமான செயல்களை நினைத்து அவருக்கு துதிகளைச் செலுத்துகிறீர்களா? உங்கள் நன்றி எங்கே? நீங்கள் உங்களையே கனப்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது இறைவனை மகிமைப்படுத்துகிறீர்களா? நீங்கள் உங்களை மறந்து பரலோகத்தில் இருக்கும் இறைவனை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்.
பரிசுத்தமும், அமைதியும், துதியும் நிறைந்த அந்த இனிமையான நேரம் நீடிக்கவில்லை. கர்த்தருக்காகக் காத்திருந்த மற்றவர்களும் அந்த புயல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வேகமாகக் கூடிவந்தார்கள். அங்கு கூடியிருந்த கலிலேயர்கள் தங்கள் நாட்டின் எல்லைகளைவிட்டு வெளியே எங்கும் செல்லாதவர்களாகவும் வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ளாதவர்களுமாயிருந்தும் பல்வேறு மொழிகளைப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தவர்ளாக நின்றார்கள். இறைவன் தனது கோபத்தினால் மக்களுடைய மொழிகளைத் தாறுமாறாக்கி உலகெங்கிலும் சிதறிப்போகச் செய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் படைப்பாற்றலுள்ள பரிசுத்த ஆவியானவர் பெந்தகொஸ்தே நாளில் மேற்கொண்டார். ஆதியில் மனிதர்கள் தங்கள் பெருமையினால் பாபேல் கோபுரத்தைக் கட்டுவதன் மூலமாக இறைவனுடைய நிலையை அடைய நினைத்தார்கள். இப்பொழுது கிறிஸ்து தம்முடைய சீடர்களுடைய பெருமையாகிய பாவத்தை மன்னித்திருந்தார். இங்கு விண்ணப்பதித்துக் கொண்டிருந்தவர்களின் இருதயத்தில் கிறிஸ்துவினுடைய ஆவியின் சாந்தமும் மனத்தாழ்மையும் குடிகொண்டிருந்தது. அவர்களில் யாரும் மற்றவர்களைவிட தங்களை சிறந்தவர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ, பெரியவர்கள் என்றோ நினைக்கவில்லை. அவர்களில் பெலமுள்ளவன் பெலவீனனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தன்னை அனைவரிலும் கடையானவனாகக் கருதினான். பரிபூரணத்தின் கட்டாகிய அன்பினால் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் நடுவில் தம்மை வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமானவர்களும் சிதறப்பட்டவர்களாகவும் இருந்த பல மக்கள் கூட்டத்தை அவர் ஒன்றாக இணைத்திருந்தார். இவ்வாறு சிதறப்பட்ட இனங்களின் ஒன்று கூடுகையை பற்பல பாஷைகளின் வரம் அடையாளப்படுத்தியது. பெந்தக்கொஸ்தே நாளிலிருந்து இறைவனுடைய மக்கள் நடுவிலிருந்த மொழி மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகள் அனைத்தும் கொள்கையளவில் அகற்றப்பட்டு விட்டது. அவர்கள் நடுவில் கற்றுத் தேர்ந்த ஞானிக்கும் மனநலம் குறைந்தவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அழிவிற்குரிய மனிதனை நித்திய பிதாவின் நிலைக்கு உயர்த்தும் மாபெரும் கொடையாகிய பரிசுத்த ஆவியானவரினால் அனைவரும் இறைவனுக்குள் ஒன்றாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமற்றவர்களுமாயிருப்பதற்கு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவர்களை அவர் பரிசுத்தமாக்கினார்.
பெந்தகொஸ்தே நாளில் இறைவனுடைய இருப்பிடமாகிய எருசலேமில் பல மக்களுடைய பிரதிநிதிகள் ஒன்றாகக்கூடி அறுவடையின் இறுதியில் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். பெர்சியா, மெசப்பொத்தாமியா, சின்ன ஆசியா, வட ஆப்பிரிக்கா, இத்தாலி மற்றும் கிரேத்தா போன்ற நாடுகளிலிருந்த யூதர்கள் எருசலேமில் கூடிவந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கலிலேயர்கள் தங்கள் மொழிகளில் இறைவனுடைய மகத்துவங்களைப் பற்றிப் பேசக்கேட்டார்கள். முதலில் அவர்கள் புயல்காற்றின் சத்தத்தைக் கேட்டார்கள். இரண்டாவது அவர்கள் நெருப்பு நாவுகளின் வடிவத்தைக் கண்டார்கள். மூன்றாவது அவர்கள் கலிலேயருடைய மொழியைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் இறைவனே அந்நாளில் அனைத்து மொழிகளின் மொழிபெயர்ப்பாளராக தன்னை வெளிப்படுத்தினார்.
அங்கு கலிலேயருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் எகிப்திலும் அரேபியாவிலும் இருந்து போனவர்களும் இருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் வெளிப்பட்ட ஆரம்பத்திலேயே அரேபியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் மாபெரும் இரட்சிப்பின் செய்தி பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மொழிகளில் எதுவும் அவருக்கு அந்நியமானவைகளோ கடினமானவைகளோ அல்ல. அவர் தம்முடைய அன்பினாலே அவைகளைத் திருப்தியாக்கி, அவைகளின் பொருளைப் பரிசுத்தத்தினாலே நிரப்பினார். நீங்கள் உங்கள் சொந்த மொழியில் இந்த திரியேக இறைவனைத் தொழுகொள்கிறீர்களா? உங்கள் நாவையும், இருதயத்தையும், தீர்மானத்தையும், உங்கள் பெலன் முழுவதையும் அவரிடம் ஒப்படையுங்கள். அப்பொழுது இறைவனுடைய துதியின் மகிழ்ச்சியில் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.
இந்தப் பெருங்காற்றின் சத்தத்தைக் கேட்கும்படி ஓடிப்போனவர்கள் அதிவிரைவாக இரண்டுபட்டுப் போனது ஆச்சரியமாயுள்ளது. ஒரு பிரிவு மக்கள் நடைபெற்றவற்றை மிகவும் கவனமாகக் கவனித்தார்கள். மற்றவர்கள் நடைபெற்றதைக் கண்டு பரியாசம் செய்தார்கள். முதல் தரப்பு மக்கள் பரிசுத்த ஆவியின் இரகசியத்தை முழுவதும் அறிந்துகொள்ள விரும்பினார்கள். மற்றவர்கள் இறைவனில் மகிழ்ந்து பேசியவர்களுடைய பேச்சை குடிபோதையில் உள்ளவர்களுடைய உளறலாகக் கருதினார்கள். அவர்கள் தங்கள் அனுபவத்தில் அப்போஸ்தலர்களுடைய நிலையை ஏற்கனவே அனுபவித்திருப்பார்கள் போலும். ஆனாலும் அவர்கள் இறைவனுடைய மகிழ்ச்சியையும் நித்திய அன்பின் வல்லமையையும் அறிந்துகொள்ள முடியாதவர்களாயிருந்தார்கள். அவர்களுடைய இருதயம் பகைமையினால் மேலும் மேலும் கடினப்பட்டுப் போனது.
6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)
அப்போஸ்தலர் 2:14-21
14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். 19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். 19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
அந்நிய மொழியில் பேசுவது முக்கியமானது. ஆனாலும் தீர்க்கதரிசனம் உரைப்பது அதிலும் முக்கியமானது. அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும். அந்நிய மொழியில் பேசும் ஒருவர் இறைவனுக்கு நன்றி செலுத்தவும், துதி செலுத்தவும், விண்ணப்பிக்கவும் ஆரம்பிப்பார்கள். ஆனாலும் அதன் பொருள் அவருக்குப் புரியாது. இருப்பினும் உண்மையான தீர்க்கதரிசனம் என்பது கேட்பவர்களுடைய உள்ளத்தை உணர்த்தி அவர்களை இறைவனுடைய சமூகத்தில் நிறுத்துகிறது.
மகிழ்ச்சியும் துதியும் நிறைந்து அந்நிய மொழிகளினால் அப்போஸ்தலர்கள் துதித்துக்கொண்டிருந்ததைக் கண்ட யூதர்களுடைய இருதயத்தை பேதுருவின் வாயிலிருந்து புறப்பட்ட பரிசுத்த ஆவியின் பிரசங்கம் உணர்த்தியது. இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் தோன்றி, தம்முடைய வருகைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் என்பதற்கு அப்போஸ்தலர்கள் தெளிவாக சாட்சி பகர்ந்தார்கள்.
தன்னுடைய பேச்சுத் திறமையை வெளிப்படுத்தவும் தனக்குச் செவிகொடுத்தவர்களுக்குக் கிளர்ச்சி உண்டுபண்ணவும் பேதுரு அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை. மாறாக பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒன்றாகக் கூடி விண்ணப்ப வீரர்களாக பேச்சாளரைப் சுற்றி நின்றார்கள். ஏற்கனவே ஆயத்தம் செய்யாதபடியால் அப்போது பேசுவதற்கு பேதுரு பயப்பட்டிருக்கலாம். ஆகிலும் சத்திய ஆவியானவர் அவருடைய இருதயத்தை அமைதிப்படுத்தி, அவருடைய இருயத்தை உற்சாகப்படுத்தினார். சில நாட்களுக்கு முன்பு மற்றவர்களுக்குப் பயந்து அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளிருந்த பேதுரு இப்போது தைரியமாகப் பேசத்தொடங்கினார். இறைவனுடைய வல்லமை அவர்களை நிரப்பியபோது அவர்களுடைய நாவுகள் சரளமாகப் பேசத்தொடங்கின. பரிசுத்த ஆவியிடமிருந்து வந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தை நிரப்பியதால் அவர்கள் மூலமாக இறைவன் பேசத்தொடங்கினார். தனக்குச் செவிகொடுத்தவர்களுக்கு முன்பாக பேதுரு பரவச நிலையை அடையவில்லை. மாறாக அவர்களுக்கு முன்பாக நின்று, தைரியத்தோடும் கனத்தோடும் பேசினார்.
முதலாவது, பேதுரு இப்படிப்பட்ட ஒரு சமய நம்பிக்கை நிறைந்த நகரத்திலே காலை ஒன்பது மணிக்கெல்லாம் மக்கள் குடிபோதைக்கு உள்ளாவது சாத்தியமில்லை என்று அவர்களுடைய தவறான குற்றச்சாட்டிற்கு பதிலுரைத்தார். அப்படிப்பட்ட செய்கையை அயலகத்தார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட குடிகாரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
இரண்டாவது, மக்களைப் பிடிக்கிறவனாகிய பேதுரு, தனக்குச் செவிகொடுத்த மக்களை நோக்கித் திரும்பினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் வரும்படி அவர்கள் செவிகொடுத்து, தங்கள் இருதயத்தைத் திறக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். பேதுரு அவர்களுடன் பேசும்போது கண்ணீர்விட்டு, உணர்வுபூர்வமாக, உளவியல் ரீதியாக அவர்களிடம் பேசவில்லை. அவர்கள் சித்தத்தை அசைக்கத்தக்கதாக கடுமையான தண்டனையைப் பற்றியும் பேசவில்லை. மாறாக, அவர் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களையும் அவை வரலாற்றில் எவ்விதமாக நிறைவேறியுள்ளது என்பதையும் பற்றி பேசினார். அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகளை அவர் வேதாகமத்தின் வார்த்தைகளைக் கொண்டு அவர்களுக்கு விளக்கப்படுத்தினார். அவர்களுடைய கண்களுக்கு முன்பாக பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மீது வந்திறங்கிய அந்த நிகழ்வு இறைவன் தம்முடைய வார்த்தையில் ஏற்கனவே முன்னறவித்த நிகழ்வுதான் என்று பேருது அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
யூதர்களுடைய வேதாகமத்தில் நன்கு அறியப்பட்டிருந்த வேதபகுதியில் இருந்து அப்போஸ்தலருடைய தலைவன் மேற்கோள் காட்டினார். “இதுதான் தீர்க்கதரிசியாகிய யோவேலினால் முன்னறிவிக்கப்பட்டது” என்று அவர் எடுத்துரைத்தார். அந்தத் தீர்க்கதரிசனம் வெளிப்படையாக நிறைவேறியது. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்தில் வந்து வாசம்பண்ணுகிறார். ஆகவே நாம் மீண்டும் வரவேண்டும் என்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஒரு சிறு பிள்ளை ஒரு பரிசைப் பெற்றுக்கொள்வதைப் போல நாமும் அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் அவருக்காக இறைவனைத் துதிப்பதை மட்டுமே செய்ய வேண்டும். நற்செய்தியில் கிறிஸ்து நம்மை மனம் மாற்றி நம்முடைய இருயத்தைப் புதிதாக்குவதைப் போல, இந்த ஆவியானவர் வார்த்தையிலிருந்து நம்முடைய இருதயத்திற்குள் ஊடுருவிச் செல்வார். உபவாசமோ, துறவறமோ அல்லது எந்த கடுமையான சுயவெறுப்போ நம்முடைய சரீரத்தை நல்ல ஆவியின் பிறப்பிடமாக மாற்றாது. திரித்துவத்தின் இந்த தெய்வீக நபர் நம்முடைய இருதயத்தைத் திறந்து அவரை நாம் வரவேற்க வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கிறார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு தம்முடைய சீடர்களுக்குச் சொன்னதை நாம் மகிழ்ச்சியோடும் நன்றியோடும் நினைவுகூருகிறோம்.
ஆண்களும் பெண்களும், வாலிபரும் வயோதிபரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்கள் என்று தீர்க்கதரிசியாகிய யோவேல் முன்னறிவித்திருந்தார். கிறிஸ்துவின் வாக்குத்தத்தம் யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல. இந்தத் தீர்க்கதரிசனம் யூதர்களுக்கு மிகப் பெரிய அற்புதமாயிருந்தது. ஏனெனில் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இது ஆணுக்கும் பெண்ணுக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், அடிமைகளுக்கும் சுயாதீனருக்கும், யூதர்களுக்கும் புறவினத்து மக்களுக்கும் இடையிலுள்ள அனைத்து ஏற்றத்தாழ்வையும் நீக்குவதாயுள்ளது. இன்று இறைவனுடைய சந்தோஷத்திற்குள் யாரும் நுழையலாம். அவருடைய மகிழ்ச்சி முழு உலகத்தையும் ஆட்சி செய்கிறது. சிலுவையில் அறையப்பட்டு, கொலை செய்யப்பட்டு, உயிரோடு எழுந்தவரை விசுவாசிக்கும் மக்களுடைய நொருங்குண்ட இருதயத்தில் அந்த மகிழ்ச்சி உணரப்படுகிறது.
இறைவன் யோவேல் தீர்க்கதரிசி மூலமாகவும் அப்போஸ்தலனாகிய பேதுரு மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவது இறுதி காலத்தின் ஒரு அடையாளம் என்பதைக் கூறினார். ஆயிரக்கணக்கான வருடங்களாக இறைவன் தீயவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தார். ஆனால் இறைவனுடைய மகனாகிய கிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பாவங்களை மன்னித்தார். ஆகவே எந்தத் தடையுமின்றி பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வரக்கூடியதாயிருந்தது. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறவர்கள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள், இறைவனை அறிந்துகொள்கிறார்கள், அவரைத் துதித்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார்கள். இறைவனுடைய ஆவியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகிறார்கள். அந்த நியாயத்தீர்ப்பு இறுதி நாளில் வரப்போகும் ஒன்று மட்டுமல்ல. அது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட நாளிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அழியாத வாழ்வைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். இறைவனுடைய ஆவிக்குத் தங்களைத் திறந்துகொடுக்கிறவர்கள் அழியா வாழ்வை அனுபவிக்கிறார்கள். அவர்கள் இறைவனையும் அவரது விருப்பத்தையும் அறிந்துகொள்கிறார்கள். மேலும் யாருடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாழ்கிறாரோ அவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாகிறார்கள்.
இந்தக் கிருபையின் நற்செய்தி அறிவிக்கப்படும்போது, இந்த முழு உலகமும் இருளடைந்து, புழுதியாகி அழிந்து போவதும் அறிவிக்கப்படுகிறது. உலக யுத்தங்களில் இரத்த ஆறு ஓடும், பூமியதிர்ச்சிகள் பூமியைப் பிளந்துபோடும், கிறிஸ்துவின் ஆவியினால் முத்திரை போடப்படாத அனைவரும் பிசாசினால் சோதிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு கர்த்தருடைய நாளாகிய இறுதி நாள் வரும். அப்போது கிறிஸ்து வானத்தில் மின்னல் போல பேரொளியாக மேகங்கள் மீது பிரகாசத்துடன் தோன்றுவார். வரப்போகிறவரைக் குறித்த பயத்தினால் இவ்வுலகமே நடுங்கித் தவிக்கும் என்ற உண்மை அப்போது தெளிவாகத் தெரியும். நரகத்தின் சக்திகள் தங்கள் இறுதி அழிவிற்கு முன்பாக தங்களுடைய இறுதி யுத்தத்திற்கு ஆயத்தப்படும். நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்த அறிவும் போதனையும் அந்நாளில் நடைபெறவிருக்கின்ற அற்புதங்களும் புதிய ஏற்பாட்டின் அடிப்படைப் போதனைகளாகும்.
தன்னில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருப்பவர்கள் பரலோகத்தின் வழியாகக் கடந்து வந்தவர்கள். அவர்களுடைய அழிவிற்குரிய உடலில் இறைவனுடைய உயிர் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் விண்ணப்பத்தின் ஆவியாயிருக்கிற காரணத்தினால் அவர்கள் பதில் கிடைக்கும் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களில் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லிக்கூப்பிடும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய நாவுகளில் கிறிஸ்துவின் நாமத்தை எழுதுகிறார். நம்முடைய விண்ணப்பங்களுக்கு கிறிஸ்து நிச்சயமாக பதில் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால், கிறிஸ்துவினுடைய இரத்தம் தெளித்தலோடு விண்ணப்பம் செய்கிறவர்கள் நிச்சயமாக விடுவிக்கப்படுகிறார்கள். இதுவே நம்முடைய ஆறுதலாகவும், நிச்சயமாகவும், பரிசுத்த ஆவிக்குள்ளான அச்சாரமாகவும் இருக்கிறது. இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் இறைவனுடைய கோபம் பற்றி எரியும் போது, கிறிஸ்து தன்னுடையவர்களை நிச்சயமாகப் பாதுகாப்பார்.
அப்போஸ்தலர் 2:22-23
22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
பரிசுத்த ஆவியானவர் தம்மைப் பற்றிப் பேசாமல் கிறிஸ்துவையே மகிமைப்படுத்துகிறார். அவர் அன்பாக இருப்பதால் அவரிடத்தில் சுயநலமில்லை. பரிசுத்த திரித்துவத்திலுள்ள ஒவ்வொரு நபர்களும் ஒருவரையொருவர் நேசித்து, ஒருவர் மற்றவரிடத்தில் நம்மை நடத்துகிறார்கள். குமாரன் பிதாவை மகிமைப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் குமாரனை மகிமைப்படுத்துகிறார். இரட்சிப்பை நிறைவேற்றும்படி குமாரன் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதைப் போல, வானத்திலும் பூமியிலும் அனைத்து அதிகாரமும் உடைவராக குமாரனைப் பிதா தந்தருளினார். இறைவனை அறிய விரும்புகிறவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரிடையே உள்ள அன்பை கவனித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் இறைவன் அன்பாகவே இருக்கிறார். அவருடைய ஐக்கியம் அன்பில் தொடருகிறது.
பேதுரு அதிக நேரம் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிராமல், இயேசு கிறிஸ்துவைக் குறித்து உடனடியாகச் சாட்சிபகரத் தொடங்கிவிட்டார். தம்மையே பலியாகக் கொடுத்த கிறிஸ்துவினை ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் தனது கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்தவராக தரிசித்த காட்சி சீடர்களுடைய உள்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவர்கள் விண்ணப்பித்து, இந்தக் காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, அவற்றைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை உற்றுப் பார்த்து, ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதலுக்குள் அவர்கள் வந்திருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் ஏன் ஊற்றப்பட்டார் என்பதை அங்கிருந்த மக்கள் புரிந்துகொள்ளும்படி பேதுரு நாசரேத்தூர் இயேசுவை அவர்களுக்கு முன்பாக விளக்கிக் காண்பித்தார்.
இயேசுவைப் புறக்கணித்துக் கொலை செய்த யூதர்களுடைய பாவத்தை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கண்டித்து உணர்த்துகிறார் என்பதை பேதுரு தன்னுடைய ஆழ்மனதில் நன்கு அறிந்திருந்தார். அழகான வார்த்தைகளையும் ஆசீர்வாதமான வாக்குறுதிகளையும் கொண்டு பேதுரு அவர்களுடன் பேசவில்லை. அவர்கள் குற்றவாளிகள் என்பதையே பேதுரு முதலாவது அவர்களுக்கு அறிவிக்க வேண்டியிருந்தது. ஆகிலும் இந்த உண்மையை அவர் கடுமையாகவோ தீவிரமாகவோ எடுத்துரைக்கவில்லை. அவர் அவர்களுடைய பாவத்தை படிப்படியாக உணர்த்தினார். அன்பின் வார்த்தைகளினால் பேசி அவர்களுடைய குற்றத்தை அவர்களுக்கு முழுவதுமாக உணர்த்தினார். பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் இயேசுவைக் குறிப்பதற்கு “கிறிஸ்து” என்ற வார்த்தையையோ “இறைவனுடைய மகன்” என்ற வார்த்தையையோ பயன்படுத்தாமல், “இறைவனுடைய மனிதன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர்கள் கடைசிவரை தன்னுடைய பிரசங்கத்திற்குச் செவிகொடுக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் இடையிலேயே கோபப்பட்டு கொதித்து எழுந்துவிடக்கூடாது என்பதிலும் அவர் அதிக கவனத்துடன் பிரசங்கித்தார்.
தன்னுடைய பிரசங்கத்தின் அடுத்த பகுதிக்குப் போவதற்கு முன்பாக, பெருமூச்சு விட்டவராக, அவர்கள் அதைக் கவனமாகக் கவனிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவர், “உங்கள் அனைவருக்கும் நசரேயனாகிய இயேசுவைத் தெரியும். அவர் இதுவரை வந்த தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் அதிகமான அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் இறைவனால் ஆதரிக்கப்பட்டவராயிருந்தார். அவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். பிசாசுகளைத் துரத்தினார், பாவங்களை மன்னித்தார், ஐந்து அப்பங்களினால் ஐயாயிரம் பேருடைய பசியைத் தீர்த்தார், கடுமையான காற்றையும் புயலையும் அமைதிப்படுத்தினார். இந்த அற்புத செயல்கள் சாதாரண மனிதனுடைய செயல்கள் அல்ல, அவை இறைவனுடைய செயல்கள். மனிதனாகிய இயேசு உன்னதமான இறைவனுடைய சித்தத்தோடு இணைந்து வாழ்ந்த காரணத்தினால், சர்வ வல்லவர் இயேசுவின் மூலமாகச் செயல்பட்டார். இவ்வாறு பரலோகத்தின் வல்லமை பூமியிலே பரவத் தொடங்கியது. இவர் தம்முடைய பிதாவாகிய இறைவனுடைய விருப்பத்திற்கு அப்பாற்றபட்டவராகப் பணிபுரியவில்லை. அவர் முழுவதும் பரிசுத்த பிதாவின் சித்தத்தைச் செய்யும்படி அவருடன் முற்றிலும் ஒன்றுபட்டவராயிருந்தார். “என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து முடிப்பதே என்னுடைய உணவாயிருக்கிறது” என்று அவர் சொன்னார் என்றார்.
இறைவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் யூதர்கள் எதிர்த்து நிற்பது விந்தையாயிருக்கிறது. இயேசு யூதர்களால் புறக்கணிக்கப்பட்டதற்கு சனகதரின் சங்கத்தாரும் பிரதான ஆசாரியர்களும்தான் காரணம் என்று பேதுரு கூறவில்லை. தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே இயேசுவைப் புறக்கணித்தவர்கள் என்று பேதுரு குற்றப்படுத்துகிறார். அவர்கள் தங்கள் தலைவர்களுக்குப் பயந்திருந்தார்கள். அதனால் அவர்கள் நசரேயனாகிய இயேசுவை விட்டு விலகி அவரைக் கொலைகாரர்களுடைய கையிலிருந்து காக்கத் தவறிவிட்டார்கள். அவர்களில் சிலர் “இவனைச் சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள்” என்று கூக்குரலிட்டவர்களாகவும் இருந்தார்கள். பேதுரு பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால் நிறைந்தவராக அவர்களுடைய மனசாட்சியை குத்தும் வண்ணமாகப் பிரசங்கித்தார். “இறைவனால் ஏற்படுத்தப்பட்ட மனிதனை நீங்கள்தான் கொலை செய்தீர்கள். அதுவும் சாதாரணமாக கல்லெறிந்து நீங்கள் அவரைக் கொல்லவில்லை. அவரை புறவினத்து மக்களாகிய ரோமர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தீர்கள். அவர்கள் மூலமாக நீங்கள்தான் அவரைச் சிலுவையில் அடித்துக் கொலைசெய்தீர்கள். இது உங்கள் நிந்தையை இரட்டிப்பாக்குகிறது” என்று அவர்களைக் குற்றஞ்சாட்டினார். தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்பவர்களிடத்தில், கொள்ளை, அசுத்தம், பொய் போன்ற பாவங்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் இயேசுவை நடத்திய முறையே அவர்களுடைய அறியாமையையும், கீழ்ப்படியாமையையும், குருட்டுத் தனத்தையும், இறைவனிடமான அவர்களுடைய பகைமையையும் காண்பிக்கிறது என்று பேதுரு கூறினார். இந்தப் பிரசங்கம் பரிசுத்த ஆவியின் நியாயத்தீர்ப்பை குறிக்கவில்லை. ஆகிலும் அது மனிதனுடைய கீழ்ப்படியாமையிலும் பகைமையிலும் காணப்படுகிற அனைத்து தீய செயல்களையும் உணர்த்தி, தீய நோக்கங்களை வெளிப்படுத்துகிறதாயுள்ளது.
ஆயினும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபடியினால் இறைவன் இந்த யுத்தத்தில் தோல்வியடைந்துவிடவில்லை. அதன் மூலமாக அவர் தம்முடைய முன்னறிவின்படி வழங்கும் இரட்சிப்பை நிறைவேற்றினார். அந்த அதிர்ச்சியளிக்கும் குற்ற நடவடிக்கையின் ஊடாக அவர் தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். இறைவனுடைய திட்டத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. கீழ்ப்படியாமையுள்ள பாவிகளுடைய கரங்களில் தம்முடைய மகனைப் பலியாக ஒப்புக்கொடுப்பதன் மூலமாக மட்டுமே உலகத்தை விடுவிக்க முடியும் என்பதை அறிந்தவராகவே அந்த விடுவிப்பின் செயலை நிறைவேற்றி முடிக்கும்படி இறைவன் தம்மில் தீர்மானித்திருந்தார். சிலுவை இறைவனுடைய முன்னறிவின் வெற்றிச் சின்னமாகவும் உலகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அளவிடமுடியாத அன்பின் அடையாளமாகவும் காணப்படுகிறது. இறைவனுடைய இந்த முன்தீர்மானம் யூதர்களை பகடைக்காய்களாக மாற்றவில்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்து பேதுரு அவர்களைப் பார்த்து, “நீங்களே கொலைகாரர்களாகவும் இறைவனுடைய எதிரிகளாகவும் இருக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியது முற்றிலும் உண்மையாயிருக்கிறது.
பேதுருவின் பிரசங்கத்தின் ஆரம்பமும் முடிவும் எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது பாருங்கள். முதலில் அப்போஸ்தலர்கள் மகிழ்ச்சியினாலும் நன்றியினாலும் நிறைந்தவர்களாக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்தும்படி பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார். இறைவனுடைய அன்பு மென்மையாகவும் மேலோட்டமானதாகவும் இருக்காமல், பரிசுத்தமானதாகவும் மெய்யானதாகவும் இருக்கிறது.