*மனிதனுக்கு எதிரானசாத்தானின் ஆயுதங்கள்*
2 கொரிந்தியர் 4 : 4
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரசன்னமாகும்படிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
1⃣. மனதைக் குருடாக்குவது சாத்தானின் ஒரு ஆயுதம்.
ஆதியில் பரலோகத்தில் இருந்து தள்ளப்பட்டவனே சாத்தான். பரலோக சிம்மாசனத்திற்க்கு ஆசைப்பட்டதால் வீழ்த்தப்பட்டவன்.
(ஏசய்யா 14 :12-15)
தேவனுக்கு எதிராக ஒரு கூட்டத்தை சேர்த்து அவிசுவாசிகள் மனதை குருடாக்குகிறான்.
ஆதியாகமம் 3 : 15
(சர்ப்பம்)உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் (இயேசு) உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
சாத்தான் நினைத்தது போல் இயேசு கிறிஸ்து மரித்தாலும் அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்பதை அவன் அறியவில்லை. ஆதாம் காலத்திலிருந்து ஸ்திரீயையும வித்தையும் ஆபிரகாம்,மோசே, தாவீது
முதல் தேடியும் தேவனின் ஆவிக்குரிய திட்டத்தை அறிய முடியவில்லை.
2⃣. அவன் கண்காணிக்கும் ஆயுதம்.
மத்தேயு 4 : 8, 9
மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
3⃣. பிசாசிற்க்கு தரிசனங்களை காட்டவும் முடியும். இதுவும் ஒரு ஆயுதம்.
ஏமாந்து விடக்கூடாது.
சாத்தான் இயேசுதான் வித்துவா என கண்டறிய தந்திரம் செய்தான்.இயேசு பசியோடு இருந்ததால் கல்லை அப்பம் ஆக்க முடியுமா என ஆசைக் காட்டினான். ஆனாலும் கர்த்தர் ஞானமாகப் பேசினார்.
1 பேதுரு 2 : 11 பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள்.
4⃣. மாம்ச இச்சைகளை ஈர்க்க வைப்பதும் சாத்தானின் ஆயுதம்.
எபிரெயர் 12 : 15- 16
.ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
5⃣. கசப்பான வேர்கள்களை நமக்குள் ஊடுருவச் செய்வதும் சாத்தானின் ஆயுதம்.
1 யோவான் 2 : 15- 16 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
6⃣. உலகப் பொருளின் மீது ஆசை உண்டாக்குவது, இதுவும் ஒரு ஆயுதம்.
7⃣. கீழ்கண்ட இவைகளே அவனுடைய கடைசி ஆயுதம்.
*மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன:*
*விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள்.* (கலாத்தியர் 5 : 19- 21)
தேவ ஆவியானவரின் துணையோடு பிசாசை எதிர்த்து நில்லுங்கள். யார் தருகின்ற தரிசனம் என்றும், யாருடைய கட்டளை என்றும் பகுத்து அறிந்துக் கொள்ளுங்கள். இயேசுவோடு நாம் கொண்டிருக்கும் ஐக்கியம், உறவினால் நலமானதை எளிதாக அறியலாம்.