உறவுகள் 1

************
எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே, நீ விலகி நின்றாலும் அது உன்னை விரும்பிவரும்.

*************
கூட பிறந்த அக்கா இல்லை என்று ஏங்காத பசங்களும் இல்லை.. கூட பிறந்த அண்ணன் இல்லை என்று ஏங்காத பொண்ணுங்களும் இல்லை.. ஏன்னா..? அண்ணன் இன்னொரு அப்பா..!! அக்கா இன்னொரு அம்மா..!!
*****************
எவ்வளவுதான் நாம கத்திய பாசமா பிடிச்சாலும் அதுக்கு வெட்ட தான் தெரியும். அது போல தான் சில உறவுகளும்.. நாம எவ்வளவு பாசமா இருந்தாலும், அவங்களுக்கு நம்ம கஷ்டப்படுத்த மட்டும்தான் தெரியும்..
********************
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் இருக்கும் வரையில்.. !!
*********************
நேசித்த ஒன்று என்னை பிரிந்தது.. என்னை நேசிக்க புதியதாய் ஒன்று பிறந்தது
**********************
சொந்தங்கள் சரியாக அமையாவிட்டாலும் வாழ்க்கைத்துணை என்னும் ஒரு சொந்தம் சரியாக அமைந்து விட்டால் ஆணும் பெண்ணும் அத்தனை உறவுகளையும் உலகையும் வெல்லலாம்.
*********************
உறவில் வரும் அன்பை விட, அன்பால் வரும் உறவு உயிர் போன்றது..
**********************
தேவையற்ற பேச்சே உறவுகளை தொலைப்பதற்கு காரணம். பேச்சை அடக்கினால் உறவு நிலைக்கும்.
**********************
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை.. நல்ல துணை இருந்தால் போதும்..
**********************
நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை, கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை..
**********************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.