Type Here to Get Search Results !

FATHER GOD’S LOVE LETTER

நீங்கள் வாசிக்கப் போகும் இந்தக் கடிதம் முற்றிலும் உண்மையானது.

இந்த வார்த்தைகள் தேவனுடைய இருதயத்தில் இருந்து புறப்பட்டு வருகிற படியால் இவைகளுக்கு செவிகொடுங்கள்! அப்போது, ஜீவியம் நிச்சயமாக மாறிவிடும்.

அவர் உங்களை நேசிக்கிறார்! உங்கள் ஜீவகாலமெல்லாம் நீங்கள் வாஞ்சித்து தேடிய அன்புள்ள தகப்பன் இவரே!!

இந்த அன்பின் கடிதத்தை அவர்தான் உங்களுக்கு இங்கு எழுதுகிறார்..

என் பிள்ளைகளே..

என்னை நீ அறிந்திருக்கமாட்டாய், ஆனால் உன்னைப்பற்றிய சகலத்தையும் நான் அறிந்திருக்கிறேன்… சங்கீதம் 139:1

உன் உட்காருதலையும் உன் எழுந்திருக்குதலையும் நான் அறிந்திருக்கிறேன்… சங்கீதம் 139:2

உன் வழிகள் எல்லாம் எனக்குத் தெரியும்…சங்கீதம் 139:3

உன் தலையில் உள்ள மயிர்களைக் கூட நான் எண்ணியிருக்கிறேன்… மத்தேயு 10:31

ஏனெனில் நீ என்னுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய்…ஆதியாகமம் 1:27

நீ எனக்குள் பிழைக்கிறாய், அசைகிறாய், இருக்கிறாய்… அப்போஸ்தலர் 17:28

ஏனெனில் நீ என்னுடைய சந்தானம் …அப்போஸ்தலர் 17:28

நீ கர்ப்பத்தில் உருவாகும் முன்னே உன்னை அறிந்திருக்கிறேன்… எரேமியா 1:5

இந்த உலகத்தை சிருஷ்டிப்பதற்கு முன்பே உன்னைத் தெரிந்து கொண்டேன்… எபேசியர் 1:12

ஏதோ “பிழையாக” நீ உருவாகிவிடவில்லை! ஏனெனில் உன் நாட்களெல்லாம் என் புத்தகத்தில் எழுதியிருக்கிறது… சங்கிதம் 139:15-16

உன் பிறப்பின் காலத்தையும், குடியிருப்பின் எல்லைகளையும் நானே முன் குறித்திருக்கிறேன்… அப்போஸ்தலர் 19:29

பிரமிக்கத்தக்க அதிசயமாய் நீ உண்டாக்கப்பட்டாய்… சங்கீதம் 139:14

உன் தாயின் கர்ப்பத்தில் நானே உன்னை உருவாக்கினேன்… சங்கீதம் 139:13

ஒருநாளில் உன் தாயின் வயிற்றிலிருந்து நானே எடுத்தேன்… சங்கீதம் 71:6

என்னை அறியாதவர்களால் நான் தவறாய் காட்டப்பட்டு விட்டேன்… யோவான் 8:41-44

நான் தூரமானவனும் கோபமுள்ளவனும் அல்ல… மாறாக அன்பின் முழுரூபமும் நானே… 1யோவான் 4:16

உன்னிடம் முழுமையாக அன்பு பாராட்டுவதே என் விருப்பம்… 1யோவான் 3:1

ஏனெனில், நீ என் பிள்ளை! நான் உன் தகப்பன்!!… 1யோவான் 3:1

உன் உலக தகப்பன் தருவதைக் காட்டிலும் அதிநன்மையானவைகளையே நான் உனக்குத் தருகிறேன்… மத்தேயு 7:11

ஏனெனில், நானே பூரண சற்குணமான தகப்பன்… மத்தேயு 5:48

நீ பெறும் எந்த நன்மையான ஈவும் என் கரத்திலிருந்தே வருகிறது… யாக்கோபு 1:17

நானே உனக்கு கொடுப்பவன்! உன் தேவைகள் அனைத்தையும் தருவேன்!…மத்தேயு 6:31-33

உன் எதிர்காலத்திற்கு நான் வைத்திருக்கும் திட்டங்கள் முழுவதும் நம்பிக்கைக்குரியதே… எரேமியா 29:11

ஏனெனில், அநாதி சிநேகத்தால் நான் உன்னை சிநேகிக்கிறேன்… எரேமியா 31:3

உன்னைக் குறித்து நான் கொண்டிருக்கும் சிந்தைகள் கடலின் மணலைப் பார்க்கிலும் அதிகம் சங்கீதம் 139:17,18

உன் மீது கொண்ட மகிழ்ச்சியில் நான் களிகூர்ந்து பாடுகிறேன்… செப்பனியா 3:17

உனக்கு நன்மை செய்வதிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்…எரேமியா 32:40

ஏனெனில், நீயே எனது பொக்கிஷம் நிறைந்த சம்பத்தாய் இருக்கிறாய்… யாத் 19:5

உன்னை வாழ வைப்பதற்கு என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் நாடுகிறேன்… எரேமியா 32:41

பெரியதும் அதிசயமுமான காரியங்களை உனக்குக் காட்ட நான் விரும்புகிறேன்…எரேமியா 33:3

உன் முழு இருதயத்தோடும் என்னைத் தேடி விடு, அப்போது என்னைக் கண்டடைவாய்…உபா 4:29

என்னிடத்தில் மனமகிழ்ச்சியாய் இரு, நானே உன் இருதயத்தின் விருப்பங்களை அருளிச் செய்வேன்… சங்கீதம் 37:4

ஏனெனில் அந்த விருப்பங்களை நானே உனக்குத் தந்தேன்… பிலிப்பியர் 2:13

நீ நினைப்பதற்கும் மேலாய் அதிகமாய் கிரியை செய்திட நான் வல்லவராய் இருக்கிறேன்… எபேசியர் 3:20

நானே உன் இருதயத்தைத் தேற்றுபவன்…2தெசலோனி 2:16,17

உன் சகல உபத்திரவங்களிலும் ஆறுதல் செய்யும் தகப்பனாகவே இருக்கிறேன்…2கொரிந்தியர் 1:3,4

நீ நொருங்குண்ட இருதயமாய் இருக்கும் போது, உனக்கு சமீபமாயிருக்கிறேன்…சங்கீதம் 34:18

ஒரு ஆட்டுக்குட்டியை மேய்ப்பன் சுமப்பது போல, என் இருதயத்திற்கு அருகில் உன்னை அணைத்து சுமக்கிறேன்… ஏசாயா 40:11

உன் கண்ணீர் யாவையும் ஒருநாளில் நான் துடைப்பேன்… வெளி 21:4

நீ பூமியில் அடைந்த சகல துயரத்தையும் ஒழித்துப் போடு யோவா…21:4

நான் உன் தகப்பன்! என் குமாரன் இயேசுவை நேசித்ததைப் போலவே உன்னையும் நேசிக்கிறேன்… யோவான் 17:23

ஏனெனில், உன்மீது நான் கொண்ட அன்பு இயேசுவில் இருந்துதான் முதலில் வெளிப்பட்டது… யோவான் 17:26

குமாரன் இயேசு என்னுடைய தன்மையின் சொரூபமாகவே வந்தார்… எபிரேயர் 1:3

நான் உனக்கு விரோதமாய் அல்ல! உன் பட்சத்தில் தான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே குமாரன் வந்தார்… ரோமர் 8:31

உன் பாவங்களை விரல்விட்டா எண்ணிக் கொண்டிருக்கிறேன்? இல்லவே இல்லை!…2கொரிந்தியர் 5:19

நானும் நீயும் ஒப்புரவாகிவிடத் தானே இயேசு மரித்தார்…1கொரிந் 5:18,19

உன் மீது நான் கொண்ட அளவற்ற அன்பின் அடையாளமே அவரின் மரணம்…1யோவான் 4:10

உன் நேசத்தை அடையும்படியே நான் நேசித்த அனைத்தையும் (குமாரனையே) உனக்காகத் தந்துவிட்டேன்… ரோமர் 8:32
என் குமாரன் இயேசுவை நீ பரிசாய் ஏற்றுக் கொண்டதால், என்னையே ஏற்றுக் கொண்டாய்… 1யோவான் 2:23

என் நேசத்தைவிட்டு உன்னை இனி எதுவும் “மீண்டும்” பிரித்திட முடியாது… ரோமர் 8:38,39
உன் தகப்பன் வீட்டிற்கு வந்துவிடு, பரலோகம் இதுவரை காணாத விருந்தை நான் உனக்குத் தருவேன்… லூக்கா 15:7நான் எக்காலத்திலும் உன் தகப்பனாய் இருக்கிறேன், இனியும் உன் தகப்பனாய் எக்காலத்திலும் இருப்பேன்… எபேசியர் 3:14,15

என் ஏக்கமான ஒரே கேள்வியெல்லாம், நீ என் பிள்ளையாய் இருப்பாயா?… யோவான் 1:12,13

நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
…லூக்கா 15:11-32.

மிகுந்த அன்புடன்,
உன் அப்பா,

சர்வ வல்ல தேவன்.

Post a Comment

0 Comments