<a href="http://i.imgur.com/b0q73yv.png"><img
src="http://i.imgur.com/b0q73yv.png" border=0></a>
பத்து கட்டளை பற்றிய விளக்கம்…!!!
மாற்கு 12:30
*உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு
ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும்
அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.*
இதன் பொருள் என்ன நாம் தேவனிடத்தில் எப்படி முழு இருதயத்தோடு அன்பு
கூறுவது என்பதன் விளக்கம்..!!!
1..யேகோவா தேவனை தவிர மற்ற யாரையும் வணங்கக்கூடாது…!!!
2..தேவனையோ வேறுயாரையோ சிலையாக வடித்து ஆராதனை செய்யக்கூடாது…!!!
3..தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கக்கூடாது..!!!
4.7 – ஆம் நாள் பரிசுத்த ஒய்வு நாள் ,ஒய்வுநாளை மீறாமல் சபையை கிளப்பாக
மாற்றாமல் பரிசுத்தமாய் அனுசரிக்க வேண்டும்…!!!
இந்த பிரதானமான கற்பனை நான்கை தவறாமல் கைக்கொண்டால் தான் தேவனித்தில்
முழு இருந்ததோடு அன்பு கூற முடியும்
இந்த நான்கு கற்பனை தேவனுக்கும் மனிதனுக்கும் இடையான உண்மையான உறவை
குறிக்கிறது இந்த உறவை தான் தேவன் ஒவ்வொரு மனிதனிடம் எதிர்பார்கிறார்
::::::::::::::::::::::::::::::::::::
மாற்கு 12: 31
*இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ
அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும்
பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.*
இந்த இரண்டாம் கற்பனை எப்படி கைக்கொள்வது:
5..நம்மை பெற்றெடுத்த தகப்பனையும் தாயையும் மதித்து துன்புறுத்தாமல்
விரட்டி விடாமல் கடைசி வரை அவர்களை போஷித்து கனம் பண்ண வேண்டும்…!!!
6..நம்மை போல் சக மனிதர்களுக்கும் விலைமதிக்க முடியாத ஜீவன் உண்டு என்பதை
உணர்ந்து கொலை செய்யாமல் இருக்க வேண்டும். இங்கு மரணம் வருவிப்பது
மட்டும் தான் கொலை இல்லை தன் சகோதரனை இருதயத்தில் பகைத்தாலும் கொலை
என்பதை இயேசு கிருஸ்து வலியுறுத்தி உள்ளார் ஆகவே பகையையும் விட்டு விட
வேண்டும்..!!!
7…எந்த கணவனும் தன் மனைவி வேறு ஒரு ஆணிடம் உறவு வைத்துக்கொள்வதை விரும்ப
மாட்டான் எந்த மனைவியும் தன் கணவன் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்து
கொள்வதை விரும்ப மாட்டாள், இப்படி தங்களுக்கு எவரும் செய்யக்கூடாது என
நினைப்பதை சக மனிதர்களுக்கும் செய்யாமல் இருப்பதும் விபச்சாரம் செய்யாமல்
இருக்க வேண்டும் இங்கு சரீர பிரகாரமாக செய்தால் மட்டும் விபச்சாரம் ஆனால்
கிருஸ்து இயேசு ஓரு பெண்னையோ ஆணையோ இச்சையுடன் எவராவது பார்த்தாலே
இருதயத்தில் விபச்சாரம் செய்தாகீற்று என்று சொல்கிறார் ஆண் புணர்ச்சி சுய
புணர்ச்சி
மிருக புணர்ச்சி இவைகளும் விபச்சாரமே ஆகவே விபச்சாரம் செய்யக்கூடாது.. !!!
8..நம்முடைய பொருளை எவராவது திருடினால் நமக்கு எவ்வாறு வேதனை உண்டாக்கும்
என்பதை உணர்ந்து சக மனிதர்களின் பொருட்களை திருடாமல் இருக்க
வேண்டும்..!!!
9..நாம் தவறு செய்யாமல் இருக்கும் போது நமக்கு விரோதமாக யாராவது பொய்
சாட்சி சொன்னால் நாம் எப்படி பாதிக்கபடுவோமோ அப்படியே மற்றவர்களும்
பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து பிறனுக்கு விரோதமாக பொய் சாட்சி
சொல்லாமல் இருக்க வேண்டும்…!!!
10..நம்முடைய மனைவியோ கணவனையோ பொருளையோ மிருக ஜீவன்களையோ வேறு வஸ்துகளையோ
எவராவது அபகரிக்க இச்சித்தால் நமக்கு எவ்வளவு வேதனை உண்டாக்கும் என்பதை
உணர்ந்து இச்சிக்காமல் இருக்க வேண்டும்…!!!
இந்த ஆறு கட்டளைகள் மனிதனுக்கு சக மனிதனுக்கும் உறவை
மேம்படுத்தக்கூடியவை
இதை தான் தேவன் எதிர்பார்க்கிறார்.
இந்த கடைசி நாட்களில் பல வேதப்புரட்டர்கள் எழும்பி இப்படியொரு தந்திரமான
உபதேசம் செய்கிறார்கள்
[[[[ஒருவன் உங்களிடம் வந்து என்னிடம் பணம் இல்லை எனக்கு ஓரு பீர் வாங்கி
கொடுங்க என்று கேக்கிரார் நீங்க வாங்கி குடுப்பீர்கலா மாட்டிங்கலா
பெண் உங்களை என்னை காதலி என்று சொல்கிறாள்
ஆண் உங்களை என்னை காதலி என்று சொல்கிறாள்
அடுத்தது ஓரு திருமணம் ஆன பெண்னே ஆகாத பெண்னே ஆணோ வந்து என்னோடு உறவு
கொண்டு என் ஆசையை தீர்க்க வாருங்கள் என்று அழைக்கிறால் நீங்க போவீங்கலா
மாட்டிர்களா
ஓரு இந்து சகோதரன் வந்து பழனிக்கு சென்று முருகனை வணங்கிட்டு வரலாம்
வாங்க என்று அழைக்கிறான் நீங்க போவிங்கலா மாட்டிங்கலா
அடுத்தது ஒருவர் வந்து சினிமா பார்க்க கூப்பிடுகிறான் நீங்க போவிங்கலா மாட்டிங்கலா
இவைகளை செய்தால் தான் பிறரிடம் அன்பு கூறுவதாக அர்த்தமாம் இப்படி செய்வது
அன்பில்லை சக மனிதர்களுக்கு செய்யும் தீங்கு இதை தேவன் பாவம் என்று
சொல்கிறார் .
எனதன்பு சகோதர சகோதரிகளே நாட்கள் பொல்லாதவைகள் என்பதை அறிந்து
விழிப்புடன் இருங்கள் .
நீதியின் தேவன் உங்களை காப்பாராக ஆமென் அல்லேலூயா …..!!!!