அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல்
வருகிறதைக் காண்பார்கள்._ (மாற்கு 13: 26)
_இதையே தானியேல் தீர்க்கதரிசியும் காண்கிறார்,_
_இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ,
மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார். அவர் நீண்ட
ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்._
(தானியேல் 7: 13)
_இங்கே மேகங்கள் என்பது பலவிதமான உண்மையான அர்த்தங்களை கூறுகிறது. மேகங்கள்,_
1. _மனுஷகுமாரனின் மகிமையை குறிக்கிறது_
2. _திரளான சாட்சிகளை குறிக்கிறது_ ( எபி 12: 1)
3. _மேகங்கள் வல்லமையை குறிக்கிறது._ (அவரின் பாதத்தூளாயிருக்கிறது
(Dust) (நாகூம் 1: 3)
_(கர்த்தருடைய வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது.
மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது.)_
4. _மேகங்கள் அவரது வாகனம்_
( வெ. வி 11:12)
5. _பரிசுத்தவான்களின் கூட்டம் எனலாம்_
6. _இது இயேசுவின் வருகையின் ஒரு தரிசனம்_
*தரிசனம்*
_அவரின் தரிசனம் என்றும் ஒரே மாதிரியாக இருக்காது. நாம் நினைக்கிற
மாதிரியும் இருக்காது. ஓவ்வொருவரின் தரிசனத்திலும் ஒவ்வொரு விதமாக
வெவ்வோரு வழிகளில் வருவார், விவரிக்க முடியாத மகிமை உடைகளில்
தரிசனமாவார்._
_என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர், பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்._
(உன்னதப்பாட்டு 5: 10)
_நான் பார்த்துக் கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது. நீண்ட
ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். *அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும்,
அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும்
இருந்தது.* அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள்
எரிகிற நெருப்புமாயிருந்தது._ (தானியேல் 7: 9)