சாத்தானுக்கு இடம் தராத தெய்வீக இல்லம்! - சகரியா பூணன்

எபேசியர் 5:22 முதல் 6:9 வசனங்கள் வரை பரிசுத்தாவியானவர், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளோடு உள்ள போராட்டத்தையே விவரித்துப் பேசுகிறார். இந்த உண்மை நமக்கு போதிப்பது என்ன? ஆம், நம் குடும்ப வாழ்வில் காணும் உறவுகளைத் தாக்குவதையே சாத்தான் தன் பிரதான தாக்குதலாய் கொண்டிருக்கிறான் என்பதையே நமக்குப் போதிக்கிறது! இங்குதான், நாம் மிக விழிப்புடன் சாத்தானை மேற்கொண்டிட வேண்டும்!!

ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து
கொள்ளும் புருஷர்களும் மனைவிகளும், தங்களுக்கு நடுவே ‘இடைவெளி’ ஏற்படுத்துகிறபடியால்...... அந்த ‘இடைவெளி’ ஊடாய் சாத்தான் தங்கள் குடும்பத்திற்குள் பிரவேசித்துத் தங்கள் பிள்ளைகள் தாக்கப்படுவதற்கு “கதவைத் திறந்துவிடுகிறார்கள்” என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். தன் பெற்றோர்களிடம் ‘கரடுமுரடாய்’ பேசிடும் ஒரு முரட்டாட்டம் கொண்ட பிள்ளை, ஒரு தொற்றுநோயைப்போல் தன் கணவனிடம் ‘கரடுமுரடாய்’ பேசிடும் தன் தாயிடமிருந்தே பெற்றிருப்பான்! அல்லது தன் ஆண்டவருக்கு ஏதோ சில பகுதிகளில் முரட்டாட்டம் செய்திட்ட தன் தகப்பனிடமிருந்து பெற்றிருப்பான்!! இந்த பெற்றோர்களே முதலாவதாக இந்த நோயை வீட்டிற்குள் அனுமதித்திருக்க..... ஏற்பட்ட தொற்றுநோய்க்காக ‘பாவம்’ அந்தப் பிள்ளையை கடிந்துகொள்வதில் என்ன பிரயோஜனம்!! ஆகவே, இந்த பெற்றோர்களே இங்கு முதலாவதாக மனந்திரும்ப வேண்டும்!!

உங்கள் வீட்டின் விஸ்தாரத்தைவிட அல்லது அங்குள்ள விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் உபயோக சாதனங்களைவிட“உங்கள் இல்லத்தின் ஐக்கியமே”அதிகளவு முக்கியம் நிறைந்ததாகும்! நீங்கள் ஒரு ஓலை குடிசை வீட்டில் வசித்தாலும், அங்கு நீங்கள் ஆண்டவரின் சீஷர்களாய்
இருந்துவிட்டால்..... உங்கள் குடும்பத்தில் நிச்சயமாய் தேவனுடைய மகிமை இறங்கி தங்கிவிடும்!!

ஒரு உண்மையான இயேசுவின் சீஷன், ஏதேன் தோட்டத்தில் ஆதாமையும் ஏவாளையும் பாதித்த“ஒருவரையொருவர் குற்றப்படுத்தும்”கொடிய நோயிலிருந்து நிச்சயமாய் விடுதலை பெற்றிருப்பான். ஆம், ஆதாம் தன் பாவத்திற்கு ஏவாளைக் குற்றம் சாட்டினான்! ஏவாள் தன் பாவத்திற்கு சர்ப்பத்தை குற்றம் சாட்டினாள்!!

“தன் ஆவியில் ஏழ்மை கொண்டவர்களுக்கே” (மத்தேயு 5:3)பரலோக ராஜ்ஜியம் சொந்தம்! ஒருவன் தன் ஆவியில் ஏழ்மை கொண்டிருக்கையில் காணப்படும் முதல் குணாதிசயம்
என்னவென்றால், “தன்சொந்ததோல்வியிலும் தன்சொந்ததேவையிலுமே” முதலாவதாக எப்போதும் விழிப்புடன் இருப்பான். இப்போது கணவன் மனைவியாகிய இருவருமே “தங்கள் ஆவியில் ஏழ்மை கொண்டவர்களாய்” இருந்துவிட்டால், அவர்கள் தங்கள் இல்லத்தை இந்த பூமியில் பரலோகத்தின் முன் ருசியை காணும் ஸ்தலமாய் மாற்றிவிடுவார்கள்! இதுபோன்ற இல்லத்தில், இவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே நியாயம் தீர்ப்பார்களே அல்லாமல், ஒருவர் மற்றவரை குற்றம்சாட்ட மாட்டார்கள்!! இத்தனை சீர்கொண்ட ஒரு இல்லத்தில் பிசாசானவன் நெருங்கக்கூட முடியாது!! இந்த சீர்மிகுந்த இல்லத்திலுள்ள பிள்ளைகள் எத்தனை மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றிட முடியும் என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.