வேதமெனும் விளக்கதனை

வேதமெனும் விளக்கதனை
விலக்காமல் நான் பிடித்து

ஜோதிமிகும் உம் வழியில்
சுத்தமுடன் வாழ்ந்திடவே

உமது வழி காணாமல்
உழல்கின்ற மக்களுக்கும்

உமது வழி காட்டுகிற
உகந்த பணி செய்திடவே

சாட்சியென நான் வாழச்
சார்ந்திருக்க வாருமையா

மாட்சியுள்ள ஆண்டவரே
மனவீட்டில் வாழுமையா

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.